24/10/2025
திராவிடத்தின் பித்தலாட்ட வரலாறு !
-கரிகாலன்
Founded by Periyar, the roots of the Dravidar Kazhagam lie in the Self-Respect Movement and Justice Party. Periyar formed the Self-Respect Movement in 1925, breaking in the process from the Indian National Congress party, of which he had been a member until then. The Justice Party, formed in 1916,[2] also claimed to promote similar interests. The two entities merged in 1938 under Periyar's leadership. The name was changed to Dravidar Kazhagam in 1944.
திராவிடக் கூட்டத்தின் பொய் எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள இது ஒரு சான்று.
இது விக்கிபீடியா-வில் உள்ள சான்றுதான்.
இதில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால்....
திராவிடர் கழகத்தை நிறுவியவர் பெரியார். அதன் வேர் நீதிக்கட்சி மற்றும் சுய மரியாதை இயக்கங்களில் உள்ளது.
பாய்ன்ட் நம்பர் 1...அடுத்து,
அதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய ஆண்டு 1925.
பாய்ன்ட் நம்பர் 2...அடுத்து,
1916 ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியும் அதே போன்ற விருப்பங்களுடன் இருந்தது.
பாய்ன்ட் நம்பர் 3...அடுத்து,
இந்த இரு அமைப்புகளும் 1938 ம் ஆண்டு பெரியார் தலைமையில் ஒன்றிணைந்தன
பாய்ன்ட் நம்பர் 4...அடுத்து,
1944 ம் ஆண்டு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது
ஆக......
மீண்டும் ஒருமுறை மேலிருந்து வாசியுங்கள்.
இப்போ வாங்க உண்மையைப் பார்ப்போம்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 1916. அப்போது பெரியார் ராமசாமி ஈரோட்டில் அவரது அப்பாவின் மண்டியில் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார். அப்போதும் நீதிக்கட்சி அதே விருப்பங்களுக்காகத்தான் செயல்பட்டது. அதாவது "பிராமணர் அல்லாதோருக்கான பிரதிநிதித்துவம் அல்லது நலன்".
ஆனால், 1919 ம் ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பெரியார் ராமசாமி. 1925 ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி விடுகிறார். அவர் வெளியேறுவதற்கு அவரே சொன்ன காரணம் என்ன தெரியுமா....?!
"சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்" என்கிற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்...
ஆக...ஆ. ராசாக்கள், திருமாவளவன்கள்....தேடித் தேடி ரிசர்வ் தொகுதிக்குத் தள்ளப்படுவதற்கு மூல காரணமே இந்த "சாதி ஒழிப்புப் போராளி" ராமசாமிதான்.
சரி இது கிடக்கட்டும்.
மொத்தமே ஆறு ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருந்த ராமசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் செய்த மொத்த போராட்டமே இரண்டுதான். ஒன்று கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டம் அடுத்து வைக்கம் போராட்டம்.
கவனியுங்க... இரண்டுமே காங்கிரஸ் கட்சி காசில் நடைபெற்ற போராட்டங்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் ராமசாமி இறக்கும் வரை அடுத்து செய்த ஒரு களப்போராட்டத்தை கூறுங்கள் பார்ப்போம்.
..........
1925 ம் ஆண்டு மே மாதம் 2 ம் தேதி அதாவது ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய காலத்தில் தொடங்கப்பட்டதுதான் "குடியரசு" வார இதழ்.
1928 ம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி Revolt எனும் ஆங்கில இதழைத் தொடங்குகிறார்.
சரி.....
ராமசாமிக்கு அன்றே எப்படி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பத்திரிகை அச்சு எந்திரம் Printing Machine கிடைத்தது ?!
எல்லாம்...அந்த ஆங்கிலேய பிரிட்டிஷ் அரசின் ஆசிதான். நீதிக்கட்சி எனும் பெயரே.. Justisce எனும் பத்திரிகையின் பெயர்தான்.
ஆக..அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரண்டு பேருக்கு அச்சு எந்திரம் Printing Machine கொடுத்தார்கள்...இலவசமாக.
ஒன்று The Hindu நாளிதழ் உண்மையான ஐயருக்கும் (இப்போதுதான் அது ஐயங்கார் எனும் வைணவர் வசம் இருக்கிறது. முதலில் தமிழ் அந்தணர் எனும் பார்ப்பனர் வசம்தான் கொடுக்கப்பட்டது). அடுத்து...நீதிக்கட்சிக்கு.
ஆக....அச்சு எந்திரம் Printing Machine பெரியார் ராமசாமி தமது சொந்தக் காசில் வாங்கியது அல்ல.
இதனால்தான் அவர் பிரிட்டிஷ் ஆட்சியில் அவதூறு வழக்குகள் மட்டுமே பெற்று அதில் எதிலும் கைதாகாமல், சிறை செல்லாமல் மன்னிப்பு மட்டுமே கேட்டு விடுதலை உணர்வோடு வாழ்ந்தார்.
1934 ல் பகுத்தறிவு எனும் இதழ் தொடங்கினார். 1935 ல் விடுதலை இதழை தொடங்கினார்.
ஆக...1925 ம் ஆண்டுக்குப் பிறகு...ஈ.வெ. ராமசாமி ஒரு பத்திரிகை உரிமையாளர் மட்டுமே. களப்போராட்டம் எங்குமில்லை.
(சுப.வீ போன்ற ஒட்டுத்திண்ணைகள், ஓசிச்சோறுகளின் பேச்சினைக் கூர்ந்து கவனியுங்கள்..."பெரியார் அன்றே எழுதினார்...அன்றே பேசினார்" என்றுதான் இருக்கும்)
உண்மை என்னவெனில் பெரியார் ராமசாமிக்குத் தமிழே ஒழுங்காக எழுத வராது, பேச வராது. இலக்கணமே இல்லாமல் தப்பும் தவறுமாக தமிழ் எழுதுவார், கொச்சையாக மேடைகளில் பேசுவார்.
1937 / 38 ம் ஆண்டில் ஈழத்து சிவானந்தம் அடிகள் தொடங்கிய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திலும் இவர் களம் கண்டு போராடி சிறைக்கு செல்லவில்லை.
அரசுக்கு எதிராக எழுதிய...அவதூறு வழக்கில் சிறை சென்றார். அதுவும் பெல்லாரி சிறைக்கு.
அங்குதான் இவருக்கு இரண்டாக பிளந்த நீதிக்கட்சியின் ஒரு பிரிவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படுகிறது.
அன்று ..இவரைத் தலைவராக்கியவர்கள் ....தமிழ் மற்றும் தெலுங்கில் "பெரியார் வாழ்க" என்று முழக்கமிட்டனர்.
ஆக....பெரியார் ராமசாமியின் ஒட்டுமொத்த வாழ்வும்....தமிழர் நாட்டை களவாடத்தான். !
அதைத்தான் திராவிட மாடல் என்று இன்றும் தொடர்கிறார்கள் பிற மொழியாளர்கள்.
அவர்களிடம் சோற்றுப் பிச்சை வாங்கி வாழ்கிறார்கள் "சில" துரோகிகள்.
-கரிகாலன் 24/10/25