TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்

TNTV Tamil Oodagam  TNTV தமிழ் ஊடகம் Welcome to TNTV Tamil Oodagam on Facebook. We share news from around the world. Thanks for joining
(2)

TNTV News Dot Com is an official page of TNTV International News Network and Media Studies organisation. TNTV News Network provides News Contents with relevant visuals and photographs, Media Consultancy and News Media Training from Chennai, Tamil Nadu, India. TNTV News Network is run by a group of experienced Journalists.

ஆணவப் படுகொ*லை !தமிழரின் வாழ்வியல் அல்ல தமிழர்களை சாதி ரீதியாகப் பிரித்தாளும் பிற மொழியாளர்கள் தமிழரின் திருமண முறையின் ...
03/08/2025

ஆணவப் படுகொ*லை !

தமிழரின் வாழ்வியல் அல்ல

தமிழர்களை சாதி ரீதியாகப் பிரித்தாளும் பிற மொழியாளர்கள்

தமிழரின் திருமண முறையின் உண்மைப் பின்னணி

ிழ்ஊடகம்
#வளர்மெய்யறிவான்
#விசுவாவிசுவநாத்

டின்டிவி தமிழ் ஊடகம் தமிழ் மொழி, தமிழர் தொன்மம், தமிழர் பல்துறை அறிவியல் ஆய்வு அமைப்பான தமிழியல் நடுவத்துடன் இ.....

நாளை நேரில் விசாரணை  #செய்தித்துணுக்கு  #தமிழ்ஊடகம்
02/08/2025

நாளை நேரில் விசாரணை

#செய்தித்துணுக்கு #தமிழ்ஊடகம்

 #தமிழ்ஊடகம்  #செய்தித்துணுக்கு
02/08/2025

#தமிழ்ஊடகம் #செய்தித்துணுக்கு

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிகஅறம் பாடிய வள்ளலார் காணாமல் போன அரசாங்கம்  #வளர்மெய்யறிவான்  #தமிழ்ஊடகம்https://youtu.be/h3jz9...
02/08/2025

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக

அறம் பாடிய வள்ளலார்

காணாமல் போன அரசாங்கம்

#வளர்மெய்யறிவான்
#தமிழ்ஊடகம்

https://youtu.be/h3jz9GdvbZk

இராமலிங்க  #வள்ளலார் மெய்சிலிர்க்க வைக்கும் பெரும்  #புரட்சியாளர் !கலப்படமில்லாத உண்மையான சமூக நீதிப் பெருங்காவலர், உண்ம...
02/08/2025

இராமலிங்க #வள்ளலார்

மெய்சிலிர்க்க வைக்கும் பெரும் #புரட்சியாளர் !

கலப்படமில்லாத உண்மையான சமூக நீதிப் பெருங்காவலர், உண்மையான பெண்ணுரிமைவாதி, உண்மையான சாதி சமய மத ஏற்றத் தாழ்வு ஒழிப்புப் போ*ராளி !

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

இராமலிங்க வள்ளலார் சமூக, பொருளாதார, பத்தி, ஆன்மிக, மெய்யியல் உலகில் பெரும் புரட்சியாளர்.

தமிழர்களின் நெறிகளான சைவ வைணவத்தில் வடவேத ஸ்மார்த்த பிராமணிய வருணாசிரமச் செயல்பாடுகளின் ஊடுருவல் ஏற்பட்ட பிறகு திருக்குறள் கூட ஏழைகளுக்கு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட குடிமக்களுக்குச் சென்று சேரவில்லை.

சைவ பத்திப் பாடல்களைக் கூட ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெருங்குடி மக்கள் பாடும் உரிமை இல்லாது பறிக்கப்பட்டு விட்டது.

கோவில்களிலும் சம உரிமை இல்லாது போய்விட்டது.

இத்தகைய நிலையில் ராமலிங்க வள்ளற் பெருமானார் இயற்றிய விநாயகர் தொடங்கி துலுக்காணத்தம்மன் வரை அவர் பாடிய எளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்து மக்களாலும் பாடப்பட்டது.

சாதி மத சமய ஏற்றத் தாழ்வற்று அனைவரும் அவரது பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள்.

கோவில்களில் வள்ளற் பெருமானாரின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.

திருக்குறளை ஏழை எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட பெருங்குடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க திருக்குறள் வகுப்புகளை தொடங்கினார் வள்ளற் பெருமானார்.

இது வடவேத பிராமணர்களுக்கு மட்டுமல்ல சைவ அடிப்படைவாதிகளுக்கே பேரிடியாக இறங்கியது.

சிதம்பரம் தீட்சிதர்களின் எதேச்சதிகாரப் போக்குக்கும் பேரிடியாக விழுந்தது.

தீட்சிசதர்கள் கைவசம் உள்ள சிதம்பரம் நடராசர் கோவில் பூர்வ ஞான சிதம்பரம் என்றும் அதாவது பழைய சிதம்பரம் என்றும், புதிய சிதம்பரமாக உத்தரஞான சிதம்பரம் எனும் பெயரில் வடலூரில் நூற்று ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் உத்தரஞான சிதம்பரம், உத்தரஞான சித்திபுரம், திருவருட்பெருவெளித் தலம் எனும் பெயர்களில் வெட்டவெளித் திருவருள் பெருவெளித்தலத்தை உருவாக்கினார் இராமலிங்கப் பெருமானார்.

இதற்காக 106 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தார்கள் பார்வதிபுரம் கிராம மக்கள் .

(இந்த 106 ஏக்கரிலும் 25 ஏக்கர் நிலத்தை கடந்த 1975 ஆம் ஆண்டு தனியாருக்குப் பட்டா போட்டு கொடுத்து விட்டது அன்றைய அரசு, ஆறரை ஏக்கர் நிலத்தை ஒரு சிவாச்சாரியார் ஆக்கிரமித்துக் கொள்ள. தற்போது எஞ்சியிருப்பது 72 ஏக்கர் மட்டுமே. அதையும் அடைத்து 100 கோடி ரூபாய் செலவில் சர்வதேச மையம் கட்டுவோம் என்று இன்றைய திமுக அரசு முனைந்ததுதான் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது)

இந்த 106 ஏக்கர் வெட்டவெளித் தலத்தில் எப்போதும் உணவு சமைத்து உணவு தரக்கூடிய தருமச்சாலை ஒன்றையும் நிறுவினார்.

இருக்கும் மக்கள் அரிசி பருப்பு, காய்கறிகளை அங்கே கொண்டு வந்து தரலாம். அதை சமைத்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

இதுதான் அந்த தருமச்சாலையின் நோக்கம்.

150 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசிப்பிணி போக்கி வருகிறது அந்த தருமச்சாலை.

மேலும் சிதம்பர இரகசியம் என்று இன்று வரை சிலர் உருட்டிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தின் உண்மையான இரகசியத்தை வடலூர் பெருவெளித் தலத்தில் உடைத்து மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்துவிட்டார் இராமலிங்க வள்ளலார்.

இதை உணர்த்தும் விதமாக மனிதத் தலை போன்ற எட்டு வாசல்கள் கொண்ட ஞான சபை ஒன்றை அமைத்தார்.

இந்த 106 ஏக்கர் வெட்டவெளிப் பெருவெளித் தலத்திற்குள் சாதி, மத, சமய, ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வின்றி ஆண் பெண் பாலின பேதமற்று எவரும் வரலாம்.

இதுதான் இராமலிங்க வள்ளற் பெருமானார் 1867 முதல் 1872 ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைத்த உலக மகாப் பெரும் புரட்சி.

புலால் (Non veg) உண்பவர்கள்கூட பெருவெளித் தலத்தினுள் வரலாம், தருமச்சாலையில் உணவு உண்ணலாம், எந்தத் தடையும் இல்லை.

ஆனால் ஞான சபைக்குள் நுழையும்போது மட்டும் கொலை புலால் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ராமலிங்க வள்ளற் பெருமானார் அதற்கு விளக்கமாக, காரணமாக முன் வைத்தது, "எந்த உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக" "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" எனும் தமிழர் உயிர்ம நேய, ஆன்ம நேய மானுடப் பெருங்கோட்பாட்டை வலியுறுத்துவதற்காக.

கொல்லானைப் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் எனும் திருவள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாக அமைகிறது வள்ளலாரின் இந்த சமரச சுத்த சத்திய சன்மார்க்க நெறிமுறை ஞான சபை.

எந்தவித ஏற்றத் தாழ்வில்லாத சமரசம், கலப்படமில்லாத சுத்தமான, உண்மையான சன்மார்க்க நெறிமுறையே வள்ளலாரின் நெறிமுறை, வள்ளலாரின் சன்மார்க்கம்.

இந்த நெறிமுறைகளுக்கு ஏற்ப 150 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று மட்டும் 20 லட்சம் பேர் இங்கே வந்து கூடுகிறார்கள். மாதப் பூசத்தன்று 50,000 பேர் வரை வருகிறார்கள்.

அது இனிவரும் காலங்களில் 40 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான 34 ஏக்கர் நிலத்தை மீட்டு 106 ஏக்கர் வெட்டவெளித் தலத்தை வள்ளலாரிடம் ஒப்படைப்பதை விட்டுவிட்டு, இருக்கிற 72 ஏக்கர் நிலத்திலும் சர்வதேச மையம் எனும் பெயரில் விலை உயர்ந்த உணவு விடுதி, விவிஐபிகள் தங்கும் விடுதி, கழிவறைகள் என பெருவெளித்தலம் எனும் கோயிலுக்குள் கட்டத் துடிக்கும் 100 கோடி ரூபாய் சர்வதேச மையம் எனும் திட்டத்தை பெருவெளித் தலத்தை விட்டுவிட்டு வேறு எங்காவது வெளியில் கட்டிக் கொள்ளுங்கள் என்பதுதான் வள்ளற் பெருமானாரின் சன்மார்க்க நெறிமுறை, உத்தரஞான சிதம்பரத்தின் அருமை பெருமை அறிந்தவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஆனால், தொடர்ந்து பிடிவாதமாக பெருவெளித் தலத்தை சிதைத்துதான் கட்டுவோம் என்று அடம் பிடிக்கிறது இன்றைய அரசு.

இதுதான் ஒட்டுமொத்த வள்ளலாரினுடைய விவரம் அறிந்த பத்தர்கள், பின்பற்றாளர்கள், சன்மார்க்கிகள், சன்மார்க்க சங்கத்தவர்கள் மனதில் வேல் கொண்டு கிழித்தது போல உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது கூறுங்கள்.......வட வேத ஸ்மார்த்த பிராமணிய வருணாசிரமத்தை எதிர்த்து தனிக்கோவிலே கட்டிய வள்ளலாரை. ஏழை எளிய மக்களும் ஆன்மீகத்தை, இறைவனை வணங்க உரிமை கொண்டவர்கள் என்று நிலைநாட்டிய வள்ளலாரை, பெண்களும் பத்தி. ஆன்மிக, மெய்யியலில் உயர வேண்டும் என்ற வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியை , 106 ஏக்கர் வெட்ட வெளித்தலத்தை சமூக நீதி பேசும், பெண்ணுரிமை பேசும், சாதி ஒழிப்பு பேசும் திமுக சிதைக்கலாமா ? இது நியாயமா ? இதுதான் திராவிட சமூக நீதியா எனும் கேள்வி எழுகிறதா இல்லையா ?!

எனவே 106 ஏக்கர் திரு அருட்பெருவெளித் தலத்தைக் காக்கும் பணியையே தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும், இல்லையா ?!

அறிவார்ந்த சான்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

இது தொடர்பாக, "வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட்பெருவெளித்தலம் : திரிப்புகளும் பேருண்மைகளும்" எனும் விரிவான சான்றாய்வு நூல் ஒன்றை வள்ளலாரின் வழிகாட்டுதலோடு நாம் எழுதி வெளியிட்டிருக்கிறோம். தேவைப்படுவோர் 9080568865 என்னும் வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பலாம்

சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி .

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம். நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை மற்றும் தமிழியல் நடுவம்.

02/8/2025

தமிழ் ஊடகம் வார இதழ் | பதிவு எண் : PRGI Registration number TNTAM/25/A1239

#வள்ளலார் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #விசுவாவிசுவநாத்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்பட்டாங்க...
01/08/2025

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

-ஒளவையார்

பொருள் :

நீதிநெறி நூல்களின்படி இந்த உலகில் இரண்டே இரண்டு சாதிகள்தான்.

ஒன்று, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர்.

வசதி இருந்தும் பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்ய மனம் இன்றி வாழ்வோர் இழிந்த சாதியினர் என்கிறார் ஒளவையார்.

- தமிழ் ஊடகம் வார இதழ். பதிவு எண் : (RNI) PRGI Registration number : TNTAM/25/A1239

சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி...- இராமலிங்க வள்ளலார்பொருள் :சாதி, மதம், சமயம் ஆகி...
01/08/2025

சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி...

- இராமலிங்க வள்ளலார்

பொருள் :

சாதி, மதம், சமயம் ஆகியவை உண்மையில் பொய்" என்பதாகும்.

சமயங்கள், மதங்கள், சாதி ஆகியவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்றும், அவை ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கும், உலக அமைதிக்கும் தடையாக இருப்பதாகவும் வள்ளலார் கூறுகிறாரர்.

எனவே, இவற்றைக் கடந்து, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே உண்மையான வழி என்று அவர் கூறுகிறார்.

- தமிழ் ஊடகம் வார இதழ். பதிவு எண் : (RNI) PRGI Registration number : TNTAM/25/A1239

01/08/2025

#தமிழ்ஊடகம் #வள்ளலார்

ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக் கோள் உயிரினங்கள் குறித்து ஏராளமான எழுத்துகள் காணொளிகள் இணையம் முழுவதும் நிரம்பிக்...
01/08/2025

ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக் கோள் உயிரினங்கள் குறித்து ஏராளமான எழுத்துகள் காணொளிகள் இணையம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

இதுபோன்ற பல்வேறு தரவுகள், ராணுவத் தகவல்கள் உள்ளிட்ட கருதுகோள்களை அடிப்படையாக வைத்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்.

அதில் அவர், "ஏற்கனவே வேற்றுக் கோள் உயிரினங்கள் / மனிதர்கள் இங்கே வந்துவிட்டார்கள். அவர்கள் மறைந்திருக்கலாம் அல்லது மக்களுக்கு இடையே அவர்கள் இருக்கலாம்" என்று குறிப்பிட்டு இருக்கிறாராம்.

இது உண்மை என்கிற அடிப்படையில் அல்ல. ஆராயப்பட வேண்டிய கருதுகோள்களின் (Hypothesis) அடிப்படையில் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

-தமிழ் ஊடகம் வார இதழ். பதிவு எண் : (RNI) PRGI Registration number : TNTAM/25/A1239

01/8/2025

கடல்சார் தமிழியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள் தேடியது லெமூரியாவையா ? குமரிக் கண்டத்தையா ? தென் நாட்டையா ? - வளர்மெய்யறி...
01/08/2025

கடல்சார் தமிழியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள் தேடியது லெமூரியாவையா ? குமரிக் கண்டத்தையா ? தென் நாட்டையா ?

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

தென்புலம், தென்னாடுடைய சிவனே போற்றி, தென்பாண்டி நாட்டான், தென்னாடு என்பதெல்லாம் தமிழர் இலக்கிய ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருக்கும் நாட்டின் பெயர்கள் .

நாடு என்றாலே இன்றைய இளையோர் கூட்டம் இந்தியா போல. சீனா போல 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் இருக்கும் நாடுகளை மட்டும் தான் நாடு என்று கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையில், சேர நாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை மண்டல நாடு, கொங்கு நாடு, ஈ*ழ நாடு என்று தன்னாட்சி அரசு ஆளும் நிலப்பரப்பிற்கு பெயர்தான் நாடு.

இன்றும்கூட, மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்களிடம், கோயமுத்தூரில் இருந்து நாம் சென்றால்கூட எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்கும் வழக்கம் உண்டு.

இன்று உலகில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற இறையாண்மை கொண்ட நாடுகள் ஏராளமாக உள்ளன.

வாடிகனும் ஒரு தனி நாடுதான், மாலத்தீவும் ஒரு தனி நாடுதான், இலங்கையும் ஒரு தனி நாடுதான்.

இலங்கையின் மக்கள் தொகை ரெண்டு கோடியே 20 லட்சம் பேர்தான்... எனவே நாடு என்றால் ஒரே நிலப்பரப்பாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

தனித்தனி தீவுகளும் தனித்தனி நாடுகள் தான்.

அந்த வகையில் தற்போதுள்ள கன்னியாகுமரியில் இருந்து ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தள்ளி இருக்கக்கூடிய மடகாஸ்கர் வரையிலும் உள்ள கடல் பரப்பில் மூழ்கி இருக்கக்கூடிய நாடுகளைத்தான் தென்னாடு, தென்குமரி என்று தமிழர் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

லெமூரியாக் கண்டம் என்று மேலைநாட்டாரும், குமரிக் கண்டம் என்று தமிழர் நாட்டாரும் கூறி வந்த நிலையில், ஒரிசா பாலு ஐயா அவர்களுடைய ஆய்வு மட்டுமே தென்னாடு என்று குறிப்பிட்ட ஆய்வாகும்.

காரணம் அதற்கான இலக்கியச் சான்றுகள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.

இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் தமிழர் இலக்கியங்களில் அப்படியே இருக்கின்றன என்பது ஒரிசா பாலு ஐயா அவர்களுடைய தென்னாட்டு ஆய்வுக்கு வலு சேர்க்கிறது.

சிந்துவெளி பகுதியில் உள்ள அடையாளங்களும் தமிழர் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன என்பது ஒரிசா பாலு அவர்களுடைய தென்னாடு தென்குமரி நாடுகள் என்கிற ஆய்வுகளுக்கு பெரும் வலு சேர்க்கின்றன.

தென்னாடு, குமரி நாடு என்று எதுவும் இல்லை என்று சொல்பவர்கள் ஒருமுறை கடலுக்குள் இறங்கி ஆய்வு செய்துவிட்டுக் கூறுங்களேன் என்பதுதான் ஒரிசா பாலு ஐயா இறுதிவரை முன்வைத்த வாதம்.

ஆனால் கடற்கரையைக் கூட தொட்டிராதவர்கள் தான் குமரிக்கண்டம், லெமூரியா கண்டம் இல்லை என்று திண்ணையில் அமர்ந்து கொண்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் தென்னாட்டைத் தேடுவதற்கான, கண்டுபிடிப்பதற்கான முழுநேர முயற்சியில் ஈடுபட்ட ஒரிசா பாலு அவர்களுக்கு வெற்றிதான் கிடைத்திருக்கிறது.

அதன் முதல் கட்டம்தான் சங்க இலக்கியங்கள் என்பவை வரலாற்றுத் தொன்ம தொல்லியல் சான்றுகள் என்று கீழடியில் நிரூபணம் ஆகி இருக்கின்றன.

சங்க இலக்கியக் குறிப்புகளும் கீழடியினுடைய தொல்லியல் சான்றுகளும் அப்படியே ஒத்துப் போகின்றன என்று இந்திய தொல்லியல் துறையினுடைய ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களே தற்பொழுது ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சங்க இலக்கியங்கள் கூறும் தென்னாடுகளையும் கடலுக்குள் இறங்கி முழுமையாக ஆய்வு செய்தால் ஒரிசா பாலு அவர்களுடைய அந்த ஆய்வு முழுமையான வெற்றியைப் பெறும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஆக ஒரிசா பாலு ஐயா அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொடங்கி வைத்திருக்கக்கூடிய தென்னாடு குறித்த ஆய்வுகளை அடுத்தடுத்து வரும் தமிழர் இளையோர் முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான முயற்சிகளை நமது தமிழியல் நடுவம், தமிழ் ஊடகம் குழுமம் ஒருங்கிணைக்கிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்பது, தென்னாடுடைய சிவன் (சீவன் - உயிர்) என்கிற சாதி மதம் சமயமற்ற மெய்யியல் நிலைதான் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய இறைநெறி என்று பொருள்.

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத். ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம், நிறுவனர் : தமிழியல் நடுவம். 1/8/2025

உலகத் தமிழ் அன்பு உறவுகளே !புரிதலற்று ஒரு பிழை நடக்கிறது. கவனம் !- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : TNTV...
29/07/2025

உலகத் தமிழ் அன்பு உறவுகளே !

புரிதலற்று ஒரு பிழை நடக்கிறது. கவனம் !

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : TNTV தமிழ் ஊடகம் குழுமம்.

வருகிற ஆகஸ்ட் 2 ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஒரு நிகழ்வில் மே 18 ம் தேதியை தலைவரின் வீரச்சா*வு நாள் என்று அறிவிக்கவிருப்பதாக ஒரு தகவல்.

இதைத்தான் புரிதலற்ற பிழை அதுவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்திலேயே செய்யப்படுகிறது என்கிறோம்.

காரணம், அதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு நேரில் சென்று செய்தி வெளியிட்டவன் அடியேன் .

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கதவைத் தமிழ் உறவுகள் தட்டிய காரணமே இலங்கையில் 1983 ம் ஆண்டு தொடங்கி நடத்தப்பட்டு வரும் தமிழர் இனவழி*ப்புக்கு (Genocide) நீதி கேட்டுத்தான்.

அங்கு நடைபெற்ற போர்க் கு*ற்றம் கூட இரண்டாவது கு*ற்றம்தான்.

இதன் காரணமாகத்தான் மே 18 ம் நாளை ஆண்டுதோறும் இனப் படுகொ*லை நாள் என்று அனுசரிக்கிறோம். ஐநா மற்றும் உலக நாடுகளுக்கு அதை உணர்த்தி வருகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில் மே 18 நாளை தலைவரின் வீரச்சா*வு நாள் என்று பெயர் மாற்றம் செய்தால் இனவ*ழிப்பு என்பது மறைக்கடிக்கப்படும், மறக்கடிக்கப்படும்.

இதற்குதான் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறதே.

மேலும், தலைவர் இல்லை என்பதை அறிவிக்க ஏன் இத்தனை காலம் ? அதுவும் இப்போது ஏன் எனும் கேள்விகள் தனித்து விடை காணப்பட வேண்டியவை.

இவை ஒருபுறமிருக்க, இனவழி*ப்பை மறக்கடிப்பதன் வாயிலாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் என்ன தீர்வை கோரப் போகிறோம் ?

போர்க் கு*ற்றம் என்பதற்கா ?

அந்தக் குற்றச் சாட்டை இயக்கத்தின் மீதும் சுமத்தினார்களே.

அதற்கும் இதற்கும் சரி என்று பஞ்சாயத்தை முடித்து விடுவார்களே.

ஆக... அதற்குத்தானா 1977 களில் இருந்து 2009 வரை அத்தனை லட்சம் நம் உறவுகள் இன்னுயிரை இழந்தனர் ? வன்கொடுமைக்கு ஆளானார்கள் ? நம் பெண்பிள்ளைகள் வன்பு*ணர்வுக்கு ஆளாக்கப் பட்டார்கள் ? பால் புட்டியுடன் எமது குழந்தைகள் செம்மணியில் புதைக்கப் பட்டார்கள் ?! 10 லட்சம் பேர் உலக நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள் ?!

ஒரு நாளின் பெயர் மாற்றத்தின் மூலம் ஒரு இனவழி*ப்புப் பெரும் கு*ற்றத்தை எளிதில் மறக்கடிப்பது பெருங் கொடுமை அல்லவா ?!

ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி இனவ*ழிப்பு என்றால்...

"According to the United Nations, genocide is the intent to destroy, in whole or in part, a national, ethnic, racial, or religious group as such, according to the UN Convention on the Prevention and Punishment of the Crime of Genocide."

என்பது பொதுவான பொருள்.

இதன் தமிழாக்கம்,

"ஐக்கிய நாடுகள் சபையின் இனவ*ழிப்புத் தடுப்பு மற்றும் தண்டனைத் தீர்மான உடன்படிக்கையின்படி, இனவ*ழிப்பு என்றால் ""ஒரு தேசியத்தை, இனத்தை அல்லது மதக் குழுவினரை பகுதி பகுதியாகவோ, முழுவதுமாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது"".

மேலும்,

Genocide is defined in the UN Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and includes acts like killing members of the group, causing serious bodily or mental harm, deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction, imposing measures intended to prevent births, or forcibly transferring children of the group to another group. The key element is the intent to destroy a protected group.

"ஒரு இன அல்லது மத மனிதக் குழுவினரைச் சேர்ந்தவர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது, ஒரு மனிதக் குழுவினரை உடல் ரீதியாக அழிப்பது, ஒரு மனிதக் குழுவினரைக் குழந்தை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பது, ஒரு குழுவினரைச் சேர்ந்த குழந்தைகளை இன்னொரு குழுவினருக்கு உள்நோக்கத்தோடு மாற்றுவது... மொத்தத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட ஒரு இனக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது"

என்பதே இனவ*ழிப்பு என்பது.

போர்க் குற்றம் என்பது,

War crimes, on the other hand, are violations of the laws and customs of war, including grave breaches of the Geneva Conventions and other serious violations of the laws and customs applicable in international armed conflict.

அதாவது...

"உலக அளவிலான போர் விதிமுறைகளை மீறுதல் என்பது"

இந்தப் போர் விதிமுறைகள் என்பதற்கு அதைச் செய்த ஒன்றிரண்டு தளபதிகளுக்கு பன்னாட்டு நீதி மன்றம் சிறைத் தண்டனை கொடுத்து விட்டால் அத்தோடு இது முடிந்து விடும்.

என்றால் பல லட்சம் பேர் உயிரிழந்ததற்குப் பொருள் ?

தாய் மண்ணையும் உறவுகளையும் இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான உறவுகளுக்குத் தீர்வு ?!

இனவ*ழிப்புக்குத் தீர்வு ?!

இனவ*ழிப்பை மறைக்க, மறக்கடிக்கச் செய்வது என்பதும் இனவழிப்பின் இறுதிப் பணிதான்.

இப்படி நடக்க விட்டுவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கை உள்ளது.

நீங்கள் மே 18 நாளுக்குப் பெயர் மாற்றி விடுவீர்கள், அவர்கள் (சிங்களப் பேரினவாதிகள்) அதை வெற்றி நாளாகத் தொடர்ந்து கொண்டாடுவார்கள்.

சிந்தியுங்கள் அன்புறவுகளே.

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : TNTV தமிழ் ஊடகம் குழுமம். 29/7/2025

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்:

Share