TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்

TNTV Tamil Oodagam  TNTV தமிழ் ஊடகம் Welcome to TNTV Tamil Oodagam on Facebook. We share news from around the world. Thanks for joining

TNTV News Dot Com is an official page of TNTV International News Network and Media Studies organisation. TNTV News Network provides News Contents with relevant visuals and photographs, Media Consultancy and News Media Training from Chennai, Tamil Nadu, India. TNTV News Network is run by a group of experienced Journalists.

திராவிடத்தின் பித்தலாட்ட வரலாறு !-கரிகாலன் Founded by Periyar, the roots of the Dravidar Kazhagam lie in the Self-Respec...
24/10/2025

திராவிடத்தின் பித்தலாட்ட வரலாறு !

-கரிகாலன்

Founded by Periyar, the roots of the Dravidar Kazhagam lie in the Self-Respect Movement and Justice Party. Periyar formed the Self-Respect Movement in 1925, breaking in the process from the Indian National Congress party, of which he had been a member until then. The Justice Party, formed in 1916,[2] also claimed to promote similar interests. The two entities merged in 1938 under Periyar's leadership. The name was changed to Dravidar Kazhagam in 1944.

திராவிடக் கூட்டத்தின் பொய் எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள இது ஒரு சான்று.

இது விக்கிபீடியா-வில் உள்ள சான்றுதான்.

இதில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால்....

திராவிடர் கழகத்தை நிறுவியவர் பெரியார். அதன் வேர் நீதிக்கட்சி மற்றும் சுய மரியாதை இயக்கங்களில் உள்ளது.

பாய்ன்ட் நம்பர் 1...அடுத்து,

அதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய ஆண்டு 1925.

பாய்ன்ட் நம்பர் 2...அடுத்து,

1916 ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியும் அதே போன்ற விருப்பங்களுடன் இருந்தது.

பாய்ன்ட் நம்பர் 3...அடுத்து,

இந்த இரு அமைப்புகளும் 1938 ம் ஆண்டு பெரியார் தலைமையில் ஒன்றிணைந்தன

பாய்ன்ட் நம்பர் 4...அடுத்து,

1944 ம் ஆண்டு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது

ஆக......

மீண்டும் ஒருமுறை மேலிருந்து வாசியுங்கள்.

இப்போ வாங்க உண்மையைப் பார்ப்போம்.

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 1916. அப்போது பெரியார் ராமசாமி ஈரோட்டில் அவரது அப்பாவின் மண்டியில் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார். அப்போதும் நீதிக்கட்சி அதே விருப்பங்களுக்காகத்தான் செயல்பட்டது. அதாவது "பிராமணர் அல்லாதோருக்கான பிரதிநிதித்துவம் அல்லது நலன்".

ஆனால், 1919 ம் ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பெரியார் ராமசாமி. 1925 ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி விடுகிறார். அவர் வெளியேறுவதற்கு அவரே சொன்ன காரணம் என்ன தெரியுமா....?!

"சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்" என்கிற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்...

ஆக...ஆ. ராசாக்கள், திருமாவளவன்கள்....தேடித் தேடி ரிசர்வ் தொகுதிக்குத் தள்ளப்படுவதற்கு மூல காரணமே இந்த "சாதி ஒழிப்புப் போராளி" ராமசாமிதான்.

சரி இது கிடக்கட்டும்.

மொத்தமே ஆறு ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் இருந்த ராமசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் செய்த மொத்த போராட்டமே இரண்டுதான். ஒன்று கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டம் அடுத்து வைக்கம் போராட்டம்.

கவனியுங்க... இரண்டுமே காங்கிரஸ் கட்சி காசில் நடைபெற்ற போராட்டங்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் ராமசாமி இறக்கும் வரை அடுத்து செய்த ஒரு களப்போராட்டத்தை கூறுங்கள் பார்ப்போம்.
..........

1925 ம் ஆண்டு மே மாதம் 2 ம் தேதி அதாவது ராமசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய காலத்தில் தொடங்கப்பட்டதுதான் "குடியரசு" வார இதழ்.

1928 ம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி Revolt எனும் ஆங்கில இதழைத் தொடங்குகிறார்.

சரி.....

ராமசாமிக்கு அன்றே எப்படி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பத்திரிகை அச்சு எந்திரம் Printing Machine கிடைத்தது ?!

எல்லாம்...அந்த ஆங்கிலேய பிரிட்டிஷ் அரசின் ஆசிதான். நீதிக்கட்சி எனும் பெயரே.. Justisce எனும் பத்திரிகையின் பெயர்தான்.

ஆக..அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரண்டு பேருக்கு அச்சு எந்திரம் Printing Machine கொடுத்தார்கள்...இலவசமாக.

ஒன்று The Hindu நாளிதழ் உண்மையான ஐயருக்கும் (இப்போதுதான் அது ஐயங்கார் எனும் வைணவர் வசம் இருக்கிறது. முதலில் தமிழ் அந்தணர் எனும் பார்ப்பனர் வசம்தான் கொடுக்கப்பட்டது). அடுத்து...நீதிக்கட்சிக்கு.

ஆக....அச்சு எந்திரம் Printing Machine பெரியார் ராமசாமி தமது சொந்தக் காசில் வாங்கியது அல்ல.

இதனால்தான் அவர் பிரிட்டிஷ் ஆட்சியில் அவதூறு வழக்குகள் மட்டுமே பெற்று அதில் எதிலும் கைதாகாமல், சிறை செல்லாமல் மன்னிப்பு மட்டுமே கேட்டு விடுதலை உணர்வோடு வாழ்ந்தார்.

1934 ல் பகுத்தறிவு எனும் இதழ் தொடங்கினார். 1935 ல் விடுதலை இதழை தொடங்கினார்.

ஆக...1925 ம் ஆண்டுக்குப் பிறகு...ஈ.வெ. ராமசாமி ஒரு பத்திரிகை உரிமையாளர் மட்டுமே. களப்போராட்டம் எங்குமில்லை.

(சுப.வீ போன்ற ஒட்டுத்திண்ணைகள், ஓசிச்சோறுகளின் பேச்சினைக் கூர்ந்து கவனியுங்கள்..."பெரியார் அன்றே எழுதினார்...அன்றே பேசினார்" என்றுதான் இருக்கும்)

உண்மை என்னவெனில் பெரியார் ராமசாமிக்குத் தமிழே ஒழுங்காக எழுத வராது, பேச வராது. இலக்கணமே இல்லாமல் தப்பும் தவறுமாக தமிழ் எழுதுவார், கொச்சையாக மேடைகளில் பேசுவார்.

1937 / 38 ம் ஆண்டில் ஈழத்து சிவானந்தம் அடிகள் தொடங்கிய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திலும் இவர் களம் கண்டு போராடி சிறைக்கு செல்லவில்லை.

அரசுக்கு எதிராக எழுதிய...அவதூறு வழக்கில் சிறை சென்றார். அதுவும் பெல்லாரி சிறைக்கு.

அங்குதான் இவருக்கு இரண்டாக பிளந்த நீதிக்கட்சியின் ஒரு பிரிவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படுகிறது.

அன்று ..இவரைத் தலைவராக்கியவர்கள் ....தமிழ் மற்றும் தெலுங்கில் "பெரியார் வாழ்க" என்று முழக்கமிட்டனர்.

ஆக....பெரியார் ராமசாமியின் ஒட்டுமொத்த வாழ்வும்....தமிழர் நாட்டை களவாடத்தான். !

அதைத்தான் திராவிட மாடல் என்று இன்றும் தொடர்கிறார்கள் பிற மொழியாளர்கள்.

அவர்களிடம் சோற்றுப் பிச்சை வாங்கி வாழ்கிறார்கள் "சில" துரோகிகள்.

-கரிகாலன் 24/10/25

23/10/2025

திராவிடத்தின் 60 ஆண்டு சாதனை

98 விழுக்காடு பட்டியல் மக்களைப் பின் தங்கிய நிலையிலேயே வைத்திருப்பது

#தமிழ்ஊடகம்
#நந்தன்மாசிலாமணி
#விசுவாவிசுவநாத்
#வளர்மெய்யறிவான்

சீமான் செய்து வரும் செயல் பொருளாதார ரீதியில் இந்தியாவிலேயே சாத்தியமில்லாத சாதனை அடிப்படைப் புள்ளி விவரங்களுடன் பொருளாதார...
22/10/2025

சீமான் செய்து வரும் செயல் பொருளாதார ரீதியில் இந்தியாவிலேயே சாத்தியமில்லாத சாதனை

அடிப்படைப் புள்ளி விவரங்களுடன் பொருளாதார வல்லுநர் நந்தன் மாசிலாமணி

#தமிழ்ஊடகம்

#வளர்மெய்யறிவான்
#விசுவாவிசுவநாத்

Account Details Account Name : Tamil Oodagam Account number : 1200 36 75 79 25Bank Name : Canara Bank Branch: Edayarpalayam, Coimbatore IFSC Code : CNRB0005...

அனுபம் வாய்ந்த பழுத்த பழம் துரைமுருகன் அவர்கள் . இதுதான் தலைமைத்துவத்திற்கான இலக்கணம்  ! ❤️🔥👌
21/10/2025

அனுபம் வாய்ந்த பழுத்த பழம் துரைமுருகன் அவர்கள் .

இதுதான் தலைமைத்துவத்திற்கான இலக்கணம் ! ❤️🔥👌

தமிழ்நாடு டிஜிபி நியமனம் உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது அவமதிப்பு வழக்கு  இந்தியப் பணியாளர் தேர்வாணையம்  பட்டியல் அனுப்பிய...
21/10/2025

தமிழ்நாடு டிஜிபி நியமனம்

உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது அவமதிப்பு வழக்கு

இந்தியப் பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பியும் நிரந்தர டிஜிபி நியமிக்கப் படாததை எதிர்த்து வழக்கு.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனராக - டிஜிபியாக பதவியில் இருந்த சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி நாளோடு நிறைவு பெற்றது.

முன்னதாக தகுதி வாய்ந்த டிஜிபி அதிகாரிகள் பட்டியலை 3 மாதத்திற்கு முன்னதாகவே யு பி எஸ் சி என்று அழைக்கப்படும் இந்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பி இருக்க வேண்டும்.

அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரை செய்திருக்கும்.

இதுதான் விதிமுறை.

ஆனால் ஆகஸ்ட் மாதம் இறுதியில்தான் இந்தப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு இந்தியப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியது.

முன்னதாக தற்காலிக டிஜிபி நியமிக்கப்பட்ட கூடாது, தகுதி வாய்ந்த டிஜிபிக்கள் யூபிஎஸ்சி மூலமாகத் தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் யுபிஎஸ்சி மூலமாக முறையாக டிஜிபி நியமிக்கப் பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில் தற்காலிக டிஜிபியாக திரு வெங்கட்ராமன் அவர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்தது.

இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி மூத்த வழக்கறிஞரும் மக்கள் கண்காணிப்பகத் தலைவருமான ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்துக் கூடிய யுபிஎஸ்சியின் தேர்வுக் குழு மூன்று பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது.

ஆனால் அந்தப் பட்டியல் அடிப்படையில் இன்று வரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. மாறாக தற்காலிக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் அவர்களே பதவியில் நீடித்து வருகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, உச்ச நீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும், உத்தரவின் பேரில் யுபிஎஸ்சி 3 பேரை தேர்வு செய்து அனுப்பியும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை.

இதுவும் நீதிமன்ற அவமதிப்புதான் என்று சுட்டிக்காட்டி இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார் ஹென்றி டிபேன்.

இதுகுறித்து ஹென்றி டிபேன் எமது செய்தியாளரிடம் கூறியது, " டிஜிபி தேர்ந்தெடுப்பதில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிமுறைக் காட்டியுள்ள நிலையில் அதைத் தமிழ்நாடு அரசு பின்பற்றாமல் இருக்கிறது. மேலும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கின் போது உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூடப் பின்பற்ற மறுக்கிறது. இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்புதான்." என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது

தற்போது டிஜிபி நியமன வழக்கில் இரண்டாவது அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசும் காவல் துறையும் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ் ஊடகம் செய்திக்குழு 21/10/25

#தமிழ்ஊடகம் #டிஜிபி #தமிழ்நாடு #உச்சநீதிமன்றம்

கீழடிக்கு மட்டும் கத்தும் தமிழரல்லாத பல்லிகள்பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சுனா வெங்கடேசன்அமர்நாத் ராமகிருஷ்ணன்ஆதிச்ச நல்லூர் உள்ளிட...
20/10/2025

கீழடிக்கு மட்டும் கத்தும் தமிழரல்லாத பல்லிகள்

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்
சுனா வெங்கடேசன்
அமர்நாத் ராமகிருஷ்ணன்

ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட சுமார் 170 தொல்லியல் இடங்கள் குறித்து என்றால்....தங்களின் எல்லா சாளரங்களையும் அடைத்துக் கொண்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டு குப்புறப் படுத்துக் கொள்வார்கள்.

#மேட்_இன்_திராவிடம்

ஐநா மனித உரிமைச் சபையில்தான் ஈ*ழத் தமிழர்களுக்கான தீர்வு இருக்கிறது.வதந்திகளை நம்பி முயற்சிகளை விட்டு விடக் கூடாது.ஏன் எ...
19/10/2025

ஐநா மனித உரிமைச் சபையில்தான் ஈ*ழத் தமிழர்களுக்கான தீர்வு இருக்கிறது.

வதந்திகளை நம்பி முயற்சிகளை விட்டு விடக் கூடாது.

ஏன் எதற்கு எப்படி ?!

#தமிழ்ஊடகம்
#வளர்மெய்யறிவான்
#விசுவாவிசுவநாத்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

தீப ஒளி திருநாளுக்குக் கூட விடுமுறை இல்லாமல் தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறோம்.அதனால் நேரில் பார்க்க முடிகிறது.இன்று ...
18/10/2025

தீப ஒளி திருநாளுக்குக் கூட விடுமுறை இல்லாமல் தொடர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறோம்.

அதனால் நேரில் பார்க்க முடிகிறது.

இன்று மட்டுமே சாலைகளில் குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற இருசக்கர வாகனங்கள் தோராயமாக தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 கோடி வாகனங்கள் நகர்கின்றன.

நான்கு சக்கர வாகனங்கள் குறைந்தது ஒன்றரை கோடி அளவுக்கு நகர்கின்றன, தீப ஒளி திருநாளுக்கு அவரவர்கள் வீட்டுக்குப் போக.

அதே வேளையில் அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் பாதி காலியாகவும் அல்லது நிற்பவர்கள் இல்லாத அளவுக்கும்தான் சொல்கிறது.

அரசை நம்பிப் பலன் இல்லை, ஆம்னிப் பேருந்துக்காரர்களுக்கு 3000 ஓவா 4000 ஓவா அழுக முடியாது என்றும் முடிவெடுத்து சாலைகளில் களமிறங்கி விட்டார்கள் மக்கள் !

- வளர்மெய்யறிவான்

#தமிழ்ஊடகம்

 #தமிழ்ஊடகம்  #சீமான்
17/10/2025

#தமிழ்ஊடகம் #சீமான்

அடித்தாடுகிறது அதிமுக  !சட்டமன்ற கூட்ட முதல் நாளில் ...கரூர் பெருந்துயர நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு பட்டை.இரண...
17/10/2025

அடித்தாடுகிறது அதிமுக !

சட்டமன்ற கூட்ட முதல் நாளில் ...

கரூர் பெருந்துயர நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு பட்டை.

இரண்டாவது நாளில் ...

கிட்னிகள் ஜாக்கிரதை எனும் அறிவிப்புடன் சட்டமன்றத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் .

மூன்றாம் நாள் .......

திமுக கொடுத்த வாக்குறுதிகளை அல்வா பெட்டியில் அச்சடித்து விநியோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் .

களை கட்டுகிறது 2026 தேர்தல் ! 👌

கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் தமிழ் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட காவல் துறை அதிகாரிகளை நியமித்தல் கூடாது என்ற ...
16/10/2025

கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் தமிழ் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட காவல் துறை அதிகாரிகளை நியமித்தல் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையின் மீது ஐயம் கொள்வதாக இல்லையா ?"

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டாமா ?

- சீமான் கேள்வி

#தமிழ்ஊடகம்

கச்சத் தீவை மீட்டுக் கொடுங்க.பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்  #தமிழ்ஊடகம்
16/10/2025

கச்சத் தீவை மீட்டுக் கொடுங்க.

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

#தமிழ்ஊடகம்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்:

Share