TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்

TNTV Tamil Oodagam  TNTV தமிழ் ஊடகம் Welcome to TNTV Tamil Oodagam on Facebook. We share news from around the world. Thanks for joining

TNTV News Dot Com is an official page of TNTV International News Network and Media Studies organisation. TNTV News Network provides News Contents with relevant visuals and photographs, Media Consultancy and News Media Training from Chennai, Tamil Nadu, India. TNTV News Network is run by a group of experienced Journalists.

26/09/2025

அடித்தாடும் அதிமுக !
களை கட்டும் தேர்தல் களம் !

#தலைகவிழ்ந்ததமிழகம்

வைரல் ஆகும் ஹேஷ் டேக் !

24/09/2025

தமிழர்களின் தலைசிறந்த நாகரிகத்
தொல்லியற் சான்று சிந்து வெளி !

சிந்துவெளி உலகிற்கு உணர்த்தப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.

அதன் சிறப்பாக சிந்து வெளி குறியிடுகள் தமிழே என்று நிறுவிய பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்களின் எழுத்துக்களில் ஒரு பகுதி

தமிழ் ஊடகம் வாசகர்களுக்காக ....

"உலகத் தொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமாக விளங்குவது சிந்து வெளி நாகரிகம்.

இது சிந்து வெளிக்கு மட்டும் உரியதன்று. கடல் கொண்ட பழந்தமிழரின் குமரி நாட்டிலிருந்து இமயமலை ஆப்கானிஸ்தானம் வரை விரிந்து பரந்து வாழ்ந்திருந்த பழந்தமிழர்களுக்கே உரிய செந்தமிழர் நாகரிகம் இது என்பதற்கு பன்னூறூக் காணக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

உலகத் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்றில் இருபகுதி நாகரிகங்கள் பழந்தமிழர் நாகரிகத் தொடர்புடையதனவாய் இருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பதைச் சோவியத்து நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் அலெக்சாந்தர் கொந்தரதோவ் எடுத்துக் காட்டியுள்ளார்.

சிந்துவெளி தமிழர் நாகரிகத்துக்கு கி.மு.3000 - 1750 எனும் கால வரையறை செய்தனர், ஆப்கானிஸ்தானத்தில் மெகர்கார் என்னும் இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் விளைவாக இதன் காலம் கி.மு.6000 என்றனர்.

அண்மைக் காலங்களில் NIOT எனும் இந்தியத் தேசிய கடலாராய்ச்சி நிறுவனமும் இங்கிலாந்து அடிக்கடல் ஆராய்ச்சி வல்லுநர் கிரகாம் ஆன்காக் என்பவரும் செய்த ஆய்வுகளின் விளைவாகப் பூம்புகார் உலக முதல் துறைமுகம் என்று அறியப்பட்டது.

அது கிமு. 9500 ம் ஆண்டு பழமையுடையது என்பதும் காம்பே வளைகுடா அரபுக்கடல் நகரம் கிமு.7500 ம் ஆண்டு தொன்மையுடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பழந்தமிழர் நாகரிகம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பரவியிருப்பது உறுதிப்படுகிறது.

சென்ற ஆண்டு மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரியில் "கோகங்கன்" எனும் தமிழ்ப் பெயர் சிந்துவெளி எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை நான் படித்துக் காட்டினேன்.

இதுவரை சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிந்துவெளி எழுத்து முத்திரைகள் அனைத்தும் தமிழாக இருப்பதை என் நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

சிந்துவெளி எழுத்துகளை இதுவரை சற்றொற்ப 100 பேர் படிக்க முயன்றுள்ளார். அவர்களுள் இவை தமிழ் எழுத்துக்களே என்பதற்கு தக்க காரணங்கள் காட்டி எழுத்துக்களை படிக்க நான் என்னென்ன அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளேன் என்னும் விளக்கமும் தந்தேன். நூறு பக்க அளவிலான ஆய்வுக் கட்டுரை ஒன்றினை 1994 ம் ஆண்டு புது தில்லியில் நடந்த உலகத் தொல்பொருளாய்வு மாநாட்டில் படித்தேன். உலகில் 154 நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடு அது.

சிந்து வெளி முத்திரைகள் இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் தமிழாக்கப் படித்துக் காட்டியுள்ளேன்.

சிந்து வெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது எனும் உலக அரிஞர்களின் கருத்துகளை மறுத்து அவை இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதை மெய்ப்பித்துள்ளேன்.

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 52 பாறை ஓவியங்களில் சிந்து வெளி எழுத்தமைந்த சொற்களை என் நூலில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

தமிழ் நாட்டிலிருந்தே சிந்து வெளி எழுத்துகள் வடநாட்டுக்குச் சென்றுள்ளன என்பதை நிறுவும் வகையில் அரப்பா மொகஞ்சதோரா முத்திரைகளில் உள்ள எழுத்துச் சேர்ப்புகள் தமிழ்நாட்டுப் பாறை ஓவியங்களிலும் இடம் பெற்றிருப்பதைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.

மேற்கண்ட உண்மைகள் சிந்துவெளி எழுத்துகள் என இன்றுவரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருப்பவை அனைத்தும் தமிழர்களுக்கே உரியவை என்பதை நிலைநாட்டுகின்றன.

-பேராசிரியர் இரா. மதிவாணன்."

#தமிழ்ஊடகம்
#வளர்மெய்யறிவான்
#விசுவாவிசுவநாத்

23/09/2025

இலங்கையில் அரசியல் கைதிகளை
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் !

தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஸ்திரேலியா மனித உரிமைச் செயற்பாட்டாளர் சாரதா வலியுறுத்தல்.

அவர் ஆற்றிய உரை ;

"இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான காலமாகியும், நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

People’s Dispatch மற்றும் Counter-Currents வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, நாட்டின் பல்வேறு சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் பல தசாப்தங்களாக சிறைகளிலேயே உள்ளனர். சிலர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை; சிலர் வழக்குத் தீர்ப்பின்றி அல்லது தண்டனையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களுக்குத் துன்புறுத்தல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதிப்பிற்குரிய புகைப்படப் பத்திரிகையாளர் மற்றும் முல்லைத்தீவு ப்ரெஸ் க்ளப் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன், தீவிரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவால் (CTID) விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

இது, வடமாகாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்த அவரது செய்தி வெளியீடுகளை அச்சுறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

சுமார் 240-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடு எச்சங்களின் மீட்பு தொடர்பான அவரது ஆவணப்பணி, உண்மை மற்றும் பொறுப்புணர்விற்கான முக்கிய ஆதாரமாக இருந்தாலும், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுவதற்குப் பதிலாக இலக்காகக் குறிவைக்கப் படுகிறார்.

இந்தச் சம்பவங்கள், நினைவுநாள் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியதற்காக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அடிக்கடி அச்சுறுத்தல், விசாரணை, கண்காணிப்பு, மற்றும் சில நேரங்களில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் பரந்துபட்ட நிலையில் நடைபெறுகின்றன.

நாங்கள் இந்தக் கவுன்சிலிடம் வலியுறுத்துவது இவைதான் :

* குற்றச்சாட்டின்றி பல ஆண்டுகளாகக் கைதிலிருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
* தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
* மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

சுதந்திரமும் கருத்துரிமையும் பாதுகாக்கப்படாமல் இருந்தால், நல்லிணக்கம் மற்றும் நீதி எப்போதும் சாத்தியமாகாது."

இவ்வாறு சாரதா உரையாற்றினார்.

-தமிழ் ஊடகம் வார இதழ், 23/09/2025
==================================
தமிழ் ஊடகம் இதழ் ஒரு தனித்துவமான இதழ். இந்திய அரசின் பத்திரிகைப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட வார இதழ். தொடர்புக்கு : [email protected] , [email protected]

23/09/2025

+ Swiss Embassies Deny Visas to Tamils
Wishing to Approach the UN Human Rights Commission!
+ Has Switzerland become an instrument of the Sri Lankan government?!
+ Have Tamil human rights organizations lost their value?!
+ Is the UN denying justice to Eelam Tamils?!

* Valarmeyyarivaan (alias Vishwaa Viswanath), Editor, Tamil Oodagam

The reason United Nations institutions are based in Switzerland is that it is generally considered a country that respects human rights. However, over the past few years, the UN Human Rights Commission has increasingly behaved in a biased manner regarding human rights activities related to Eelam Tamils, raising concerns every day.

In Sri Lanka, the years 1956, 1958, 1977, 1983, and 2009 witnessed mass killings and brutal attacks on Tamils by Sinhalese Buddhist extremists, resulting in the deaths of hundreds of thousands of Tamils.

According to reports by human rights organizations, including Amnesty International, the number of Enforced disappearances were nearly 146,000 people during these attacks.

These violent campaigns did not only target Eelam Tamils but also Hill Country Tamils who came from India and lived in Sri Lanka.

During these attacks, hundreds of thousands of people lost their lives, homes, and were displaced—many fled north, while some returned to Tamil Nadu.

Similarly, in July 1983, Tamils again faced mass killings. For nearly 70 years, unending suffering has been inflicted on Tamils in Sri Lanka by Sinhalese Buddhist extremists. The number of Tamil women subjected to sexual violence cannot be counted.

Sinhalese Buddhist extremists burned and destroyed around 90,000 Tamil books, palm-leaf manuscripts, and documents, eradicating Tamil libraries. This represents cultural destruction, language destruction, and the annihilation of a speaking people —all hallmarks of genocide.

Because of this brutal campaign of ethnic hatred, around 700,000 Eelam Tamils were forced to migrate, living as refugees around the world. Even small children can understand that this was a planned genocide of Tamils.

The UN Human Rights organizations failed to prevent the killings of Eelam Tamils in Sri Lanka, which even the UN itself acknowledged. Particularly during the final stages of the war, UN human rights observers left the battlefield instead of bearing witness to the military's final attacks, signaling their failure to fulfill their duties.

Since 2012, the UN Human Rights Commission in Geneva has been criticized for avoiding the term "genocide" and appearing to align with Sri Lanka’s political agenda.

Nevertheless, the struggle of Tamils for justice continues within the UN Human Rights Commission. The Sri Lankan government has tried to suppress this struggle and these voices in subtle and strategic ways.

One part of this suppression involves denying visas to Tamil activists, journalists, and human rights workers who wish to enter the UN Human Rights Commission.

The reasons given for these visa denials are arbitrary, often presented as uniform excuses for everyone. Applications sent to the Swiss Embassy in Delhi are sometimes rejected within minutes.

Many applicants are denied, while a few are granted permission. Those who are allowed to attend tend to hold moderate views rather than strong criticisms against the Sri Lankan government.

This indicates a filtering system in place at the UN Human Rights Commission, deciding who may or may not participate. This system operates in coordination not just with the Sri Lankan government but also with some individuals in Tamil Nadu under the name of “Dravidian” interests, certain Indian officials, and some Tamil human rights organizations collaborating with the UN.

The goal is gradual suppression : avoiding words like “genocide” or “war crimes,” postponing discussions until 2025, and quietly limiting the participation of stronger voices while giving access only to moderate ones—meticulously planned and executed.

To strengthen this article, it is worth noting that the preparatory meeting for a discussion on the “Enoforced disappearences” was held on 22nd September 2025 at the UN Human Rights Commission in Geneva. Only one Tamil woman, Saradha from Canada, participated. No other Tamils, particularly from Sri Lanka, attended.

If a meeting on 146,000 disappeared people had only a single Tamil woman representing the community, it raises the question: Where were the Tamil human rights organizations operating at the UN in Geneva?

This confirms that a deliberate plan is being executed to silence Tamil voices regarding human rights violations, and some Tamil human rights organizations have lost their credibility in the process.

Tamil Oodagam Weekly, 23/09/2025
==============================
Tamil Oodagam* is a unique weekly publication, registered with the Press Registrar of the Government of India.
Contact: [[email protected]][[email protected]]

தென்குமரி தொடங்கி வடக்கே சிந்துவெளி வரை தமிழர் அடையாளங்களும் வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளும் தமிழ் மொழியும்தான் எஞ்சி ந...
23/09/2025

தென்குமரி தொடங்கி வடக்கே சிந்துவெளி வரை தமிழர் அடையாளங்களும் வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளும் தமிழ் மொழியும்தான் எஞ்சி நிற்கின்றன.

இதில் முந்து திராவிடம் எங்கே வந்தது ?

பொய்க்கதைகளைப் பேசி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்.

சிந்துவெளித் தமிழ் எழுத்துக் குறியீடு ஆய்வாளர் திருமதி தாமரைச்செல்வி அவர்களுடன் நேர்காணல்.


#தமிழ்ஊடகம்
#வளர்மெய்யறிவான்
#விசுவாவிசுவநாத்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தீர்வு கிட்டும் வரையிலும் ஐநாவில்  ஈ*ழத் தமிழர்கள் தொடர்ந்து போராடுவோம் விட்டுவிட மாட்டோம் !ஜ...
22/09/2025

பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தீர்வு கிட்டும் வரையிலும் ஐநாவில் ஈ*ழத் தமிழர்கள் தொடர்ந்து போராடுவோம்

விட்டுவிட மாட்டோம் !

ஜெனிவாவிலிருந்து நிஷாந்தி


#தமிழ்ஊடகம்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

22/09/2025

பாலஸ்தீனத்தைத்
தனி நாடாக அங்கீகரித்தது
ஆஸ்திரேலியா !

அதிகாரபூர்வ அறிவிப்பு

#தமிழ்ஊடகம்

20/09/2025

முள்ளிவாய்க்காலும் காசாவும் வேறு வேறா என்ன ?!

காசாவுக்கு கண்ணீர் விடும் பெரியாரிய திராவிட அமைப்பினர்
முள்ளிவாய்க்காலை மூடி மறைப்பது ஏனோ ?

செம்மணி குறித்து மூச்சு விடாமல் இருப்பது ஏனோ ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர்

இப்படி ஒரு தலைப்பைப் பார்த்தவுடன் "ஈ*ழ மக்களுக்காக எங்களை விடப் பாடுபட்டது யார், எங்களைவிடத் தியாகம் செய்தது யார் ? அப்போதெல்லாம் தமிழ்த் தேசிய வாதிகள் எங்கே இருந்தனர் ? என்று ஒரு வழக்கமான வாழைப்பழ அல்வா வசனத்தை எடுத்துக்கொண்டு ஓடிவரக்கூடாது.

2009 வரை கம்பு சுத்திய பெரியரியர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் 2009 தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறி முக்காடு போட்டுக்கொண்டது ஏனோ ?!

+உங்களின் கடமை முடிந்துவிட்டதா ?!
+தமிழர்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத் தந்து விட்டீர்களா ?
+ஏதிலிகளாக உலக நாடுகளில் வாழும் சுமார் 7 லட்சம் தமிழர்களைத் தாய் நாடு திரும்ப வைத்து அவர்களின் நிலம், வீடு, உறவுகள், வாழ்க்கையைத் திரும்பப் பெற்றுக் கொடுத்துவிட்டீர்களா ?!

பிறகு அப்படி என்ன முடிந்துவிட்டது ?! தமிழர்களின் கனவுகள் முடிந்துவிட்டன, தமிழர்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது, தமிழர்களின் விடுதலை உணர்வு முடிந்துவிட்டது, லட்சக்கணக்கில் உயிர்கள் பலியாகின, 1,40,000 பேர் வலுக்கட்டாயமாக காணாமல் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.... இதுதான் அந்தப் பெரியாரியர்களின் "எல்லாம் முடிந்துவிட்டது, அப்பாடாவா ?!"

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, 1980 ம் ஆண்டு வரையிலும் 60,000 முதல் 1,00,000 பேர் வரை வலுக்கட்டடயமாக காணாமல் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகிலேயே அதிக அளவில் அப்பாவி மக்கள் காணாமல் அடிக்கப்பட்டது இலங்கையில்தான் என்கிறது அந்த அமைப்பு.

முழுக்க முழுக்க இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணியில் தோண்டத் தோண்ட உடல்கள். ஆயுததாரிகளின் உடல்கள் அல்ல...பள்ளிக்குழந்தைகள், தாய்மார்கள், முதியோர், குடும்பத்தினர்...இப்படி.

ஆக...இப்படி "முடித்து வைக்கும் வரை" கம்பு சுத்திட்டு "முடிந்தவுடன்" கருப்பு முக்காடு போட்டுக்கொள்வதுதான் தமிழர்களுக்கான பெரியாரிய திராவிடத்தின் தியாகங்களா ?! சேவைகளா ?! போராட்டங்களா ?!

அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று கூறவில்லை. அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நியாயமான அறக் கோரிக்கை வலியுறுத்தல்களைக் கூட 2009க்குப் பிறகு தமிழ்நாட்டில் நீர்த்துப்போக வைத்தது திராவிடமன்றி வேறு யார் ?!

ஆயுதம் தங்கியவர்களைக்கூட விட்டுவிடுங்கள்...ஐம்பது ஆண்டுகளில் ஆயுதமற்று அமைதி வாழ்வு வாழ்ந்த சுமார் மூன்று லட்சம் காணாமல் அடிக்கப்பட்டவர்களுக்காக, சொந்த வீடு, நிலம், வாழ்க்கை இழந்து உலக நாடுகளில் ஏதிலிகளாக வாழும் சுமார் 7 லட்சம் மக்களுக்காக...அவர்களின் இயல்பு வாழ்க்கை சிதைக்கப்பட்தற்காக அவர்களின் எஞ்சியிருக்கிற வாழ்க்கையையாவது திரும்பப் பெற்றுக்கொடுக்கக் கோரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துவதில் என்ன தயக்கம் ?!

பாலஸ்தீனம் பிரச்சனை பைபிள் காலத்தில் இருந்து புகைந்து கொண்டும் எரிந்து கொண்டும் இருக்கும் பிரச்சனை. அதை அவர்கள் அணையாமல் வைத்திருக்கிறார்கள்.

ஈ*ழப் போராட்டம் சுமார் 70 ஆண்டுகாலப் போராட்டம், அதை 2009க்குப் பிறகு 12 ஆண்டுகளில் நீர்த்துப் போகச் செய்து, மறக்கடிக்கச் செய்து மடைமாற்ற வைக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளும் இலங்கை சிங்கள பவுத்தப் பேரினவாதத்திற்குத் துணை நிற்கும் பெரியாரிய திராவிடம் தமிழர்களின் விரோதியா ? துரோகியா ?!

இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா கருப்பு சட்டை அறிவு சீவிகளே !

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த (செப்டம்பர்) 8ம் தேதி தொடங்கிய 60 வது மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாலஸ்தீனம் மற்றும் ஈ*ழத் தமிழர்கள் ஆகிய இரு தரப்புக்காகவும்தான் போராடி வருகின்றன, குரல் கொடுத்து வருகின்றன மனித உரிமை அமைப்புகள்.

ஆனால், இங்கே தாய்த் தமிழ்நாட்டில் அம்மணமாகத் திரிந்த தமிழர்களுக்கு கோவணம் கட்டிவிட்ட பெரியாரியமும், திராவிடமும், தமிழர்களின் வளம், வசதி, வாக்கு, பணத்தில் வாழும் பெரியாரியத் திராவிட அமைப்பினர்களும் மிக வசதியாக ஈ*ழத் தமிழ் மக்களை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு காசாவுக்காக மட்டும் முதலைக் கண்ணீர் வடிப்பது எவ்வளவு பெரிய துரோகம் !

இந்தப் பெரியாரிய இடதுசாரிய திராவிட அமைப்புகள் தமிழர்களுக்கு நேர் எதிரானவர்களோடு கரம் கோர்த்து செயல்படுகின்றன என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன ?!

20/09/2025

16/09/2025

+ தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கான 3 பேர் பட்டியல் : 26 ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படுகிறது

+ ஒரு மாத காலத்தில் முடிவுக்கு வருகிறதா பொறுப்பு டிஜிபி பதவி ?!

+ 3 பேரைத் தேர்ந்தெடுக்கும் யூபிஎஸ்சி உயர் மட்டக் குழுவில் தமிழ்நாடு டிஜிபி இடம்பெறவில்லை

+ தமிழ்நாடு அரசுக்குப் பின்னடைவு ?!

- தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரை

தமிழ்நாட்டின் புதிய காவல்துறை இயக்குநரைத் (டிஜிபி) தேர்ந்தெடுப்பதற்கான ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.

இந்தத் தகவலைக் காவல்துறை தரப்புத் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் காவல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களின் பணிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுக்க பணி மூப்பு அடிப்படையிலான அதிகாரிகளின் பட்டியலை இந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு முன்பே அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் ஆகஸ்ட் மாத இறுதி வாக்கில்தான் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் வெங்கட்ராமன் ஐபிஎஸ் அவர்களைப் பெறுப்பு டிஜிபியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

முன்னதாக, காவல் துறை இயக்குநரின் நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படக் கூடாது என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் யாசர் அராபத் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான் நியமனம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடக்கவில்லையெனில், மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இதையும் கடந்து, பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதால் இந்த நியமனத்தை எதிர்த்து மக்கள் கண்காணிப்பக அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேன் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை யூபிஎஸ்சி மிக விரைவாகப் பரிசீலித்து 3 பேர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, யூபிஎஸ்சியின் உயர் மட்டத் தேர்வுக் குழு வரும் 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது.

இந்தக் குழுவில், யூபிஎஸ்சி தலைவர், இந்திய ஒன்றிய உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படவுள்ள தமிழ்நாடு பணி நிலைப் பிரிவைச் சேராத, ஒன்றிய ஆயுதப்படை தலைமை அதிகாரி தரத்தில் உள்ள ஒரு அதிகாரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

வழக்கமாக இந்த உள்துறை அமைச்சக நியமன அதிகாரிக்குப் பதிலாக தமிழ்நாடு டிஜிபி இடம் பெறுவார்.

ஆனால், தற்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் ஐபிஎஸ் அவர்களின் பெயரும் யூபிஎஸ்சிக்கு அனுப்பிய அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவர் தேர்வாணைய உயர்மட்டக் குழுவில் சேர்க்கப்படவில்லை.

ஆக, இந்தக் குழுவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக இருப்பார்.

இதே பட்டியலை மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தால் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் இக்குழுவில் இடம் பெற்றிருப்பார்.

எனவே, இதுவும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது.

பணி மூப்பு அடிப்படையில் தற்போது 1990 முதல் 94 ம் ஆண்டு வரையிலான தகுதி படைத்தவர்கள் பட்டியலில் சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், ஆகிய மூன்று அதிகாரிகள்தான் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

அடுத்ததாக, கே. வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே மற்றும் சஞ்சய் மாத்துர் உள்ளனர்.

பிரமோத் குமார், அபய்குமார் சிங் ஆகியோர் ஓய்வு பெற ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால் அவர்கள் போட்டியில் இடம் பெற இயலாத நிலை.

இப்படிப்பட்ட நிலையில் யூபிஎஸ்சி குழுவினர் முதல் மூன்று பேரைத் தேர்வு செய்தால் ஆறாவதாக உள்ளவரும், தற்போதைய பொறுப்பு டிஜிபியுமான வெங்கட்ராமன் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

காவல் துறை இயக்குநரின் நியமனத்தில் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் சில உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டல்தான் என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

- தமிழ் ஊடகம் செய்தியாளர்கள் குழு 16/9/25

15/09/2025

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம்

|

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக் காலத்தில் திமுக அரசிற்கு எதிராகக் கருத்துகளைப் பகிரும் எதிர்க்கட்சியினரைப் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய ஒன்றியத்தில் மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோர் மீது எத்தகைய கொடூரமான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் காவல்துறை, சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும் அடக்குமுறை கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன.

திமுக ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம்-ஒழுங்கு சீரழிவினையும் ஊடகம் வாயிலாகத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்த புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, தாக்குதலுக்கு உள்ளான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. அக்கொடுமையின் நீட்சியாகத் தற்போது திமுக அரசு குண்டர் சட்டத்தினைத் தொடுத்துள்ளது கொடுங்கைகோன்மையின் உச்சமாகும்.

பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றி பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

பொய்ப்புகாரை வழக்காகப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்து ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் மிரட்டுவது என்பது, தமது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற திமுகவின் நடவடிக்கைகள் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

அதிமுகவையும் காப்பியடித்த விஜய் ! திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகள்குறித்து அதிமுகhttps://uruttugalumthiruttugalum.com...
15/09/2025

அதிமுகவையும் காப்பியடித்த
விஜய் !

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகள்
குறித்து அதிமுக
https://uruttugalumthiruttugalum.com/
தனி இணைய தளமே தொடங்கியுள்ளது.
தலைவர்கள், கொள்கைகளைக்
காப்பி அடித்ததைப் போல
விஜய் இதையும் காப்பி அடித்திருக்கிறார்.

- அதிமுக

வறியவன் வயிற்றில் அடித்த வாய்ப்பேச்சு வாக்குறுதிகள்

சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்களே.பேசு மொழியும், எழுதும் மொழியும் தமிழே.அத்தனை குறியீடுகளையும் வாசித்து விட்டேன்.இ...
15/09/2025

சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்களே.

பேசு மொழியும், எழுதும் மொழியும் தமிழே.

அத்தனை குறியீடுகளையும் வாசித்து விட்டேன்.

இந்தியா முழுதும் மட்டுமல்ல வணிகத்திற்காக உலக நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் சிந்து வெளித் தமிழை எடுத்துச் சென்றுள்ளனர்.

கந்தன் எனும் பெயர் சிந்து வெளிக் குறியீட்டு வடிவத்தில் எகிப்து பிரமிட்டில் உள்ளது.

சிந்து சமவெளிக் குறியீடு ஆய்வாளர் பேராசிரியர் இரா. மதிவாணனுடன் ஒரு நேர்காணல்


#தமிழ்ஊடகம்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்:

Share