Tamil Boomer

Tamil Boomer Tamil Boomer is your go-to page for fun and engaging videos in Tamil. Our videos are designed to make you laugh, think.

We're all about creating a bridge between boomers and millennials through entertaining and valuable content.

27/05/2026

Things You Should Never Do While Addressing People

மறக்க முடியாமல் பேசுவது எப்படி?

நாம் பேசுகிறோம். வார்த்தைகள் மறைந்துபோகலாம். ஆனால், அது ஏற்படுத்திய தாக்கம், செல்வாக்கு நினைவில் இருக்கும்

நல்ல விஷயங்களையே கூட பலவீனமான தொனியில் கூறினால் சரியாக சென்று சேராது.

பேசும்போது அழுத்தமாக பேசுங்கள்; தயங்கவே கூடாது.

எளிமையாக பேசுங்கள்.

புரிந்துகொள்ள கடினமான வார்த்தைகளை தவிருங்கள்; தெளிவு, சிக்கலை போக்கும்.

பதங்களை நண்பருக்குக் கற்றுக்கொடுப்பதுபோல விளக்குங்கள்.

ஆர்வமான கேள்வியுடன் ஆரம்பியுங்கள்.

'இப்படி இருந்தால்' என்று தைரியமாக தொடங்குங்கள்.

கேள்விக்கு 8 நொடிகளோ அதற்குக் குறைவாகவோ கவனத்தை ஈர்க்கும் திறன் உண்டு

சொல்கிறவற்றுக்கு ஆதாரங்களை சேர்க்கவும்

தரவுகள் நம்பிக்கையை அளிக்கும். சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தும்

ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் தரவுகளோடு பேசுங்கள்.

மௌனத்தை சரியாக பயன்படுத்துங்கள்

மௌனம் நீங்கள் கூறும் குறிப்புக்கு வலு சேர்க்கட்டும்.

மூச்சு விட்டு பின் 'உம்' என்று சொல்லுங்கள்.

நம்பத்தக்கவராய் இருங்கள்

வெற்றிகளைப்போலவே தோல்வியின் அனுபவங்களையும் கூறுங்கள்.

தொனியில் கவனம் செலுத்துங்கள்

உங்களைக் கேட்கிறவர்களின் வலிக்கு ஏற்ப உங்கள் குரல் இருக்கட்டும்

கவனத்தை ஈர்க்கும்வண்ணம் பேசுங்கள்

கண்களை நேராக பாருங்கள்

3 நொடி நேரம் பாருங்கள்.

உங்கள் பாதத்தை பார்க்காதீர்கள்

உங்கள் உரையை உரியவிதத்தில் வடிவமைத்திடுங்கள்

பிரச்னை - தீர்வு - செயல் என்ற அமைப்பு பெரும்பாலும் வெற்றி பெறும்

திடநம்பிக்கையான பேச்சு, நடைமுறை கலை; வரம் அல்ல.

உங்கள் குரலே மாபெரும் சொத்து

எப்படி பேசவேண்டும் என்பது குறித்து Nathan Hirsch இப்படி கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

26/05/2026

Emotional Relationships in the Office: Safe or Risky?

அலுவலகத்தில் இவற்றைக் கவனியுங்கள்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.

உங்களைப் பார்த்து புன்னகைக்கிற எல்லோருமே உங்களுக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள்.

சிலர், கதைகளை சேகரிக்கவோ, பிறரைப் பற்றிய உரையாடல்களை உருவாக்கவோ, பிறரிடம் உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை பற்றி பேசுவதற்காகவோதான் நெருக்கமாக பழகுவார்கள்.

செரிக்க கடினமான உண்மை என்னவெனில் அநேக இடங்களில், நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்களைப் பற்றி விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு ஆபத்து அதிகமாகும்.

வேலை செய்கிற இடத்தில் சிநேகமாக இருப்பது நல்லதுதான்

ஆனால், உடன் பணிபுரிகிறவர்கள் அனைவரிடமும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பது சிலவேளைகளில் ஏமாற்றத்தை, தேவையற்ற மன உளைச்சலை தந்துவிடும். அலுவலக அரசியலுக்குள் நீங்கள் விழுந்துவிடுவீர்கள்.

ஆரோக்கியமான எல்லைகளை தாண்டாதீர்கள்.
எல்லோருக்கும் மரியாதை கொடுங்கள்; குழுவாக செயல்படுவதை ஆதரியுங்கள்.
ஆனால், பலர் அலுவலக பழக்கங்களை தொழில்ரீதியான தொடர்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்துவார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் மன அமைதியை, நற்பெயரை, கவனத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

சிலவேளைகளில்,

நன்றாக வேலை செய்; மரியாதையாய் இரு; தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் கொடுக்காதே; ஞானமாய் நடந்துகொள்

என்பதே பெருநிறுவன வாழ்க்கையில் புத்திசாலிகள் செய்வதாக இருக்கிறது.

பாதுகாப்பாக பணி செய்வது எப்படி என்பது குறித்து Joshua Lesly இப்படி கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

25/05/2026

When Resources Are Missing, What Comes Next?

கம்ப்யூட்டர் இல்லாமல் கம்ப்யூட்டரை பற்றி பாடம் நடத்த முடியுமா?

2018ம் ஆண்டு, கானாவை சேர்ந்த Richard Appiah Akoto என்ற ஆசிரியர், கம்ப்யூட்டர் இல்லாமல் Microsoft Word ஐ கற்றுக் கொடுத்தார்.

Microsoft Word interface முழுவதையும் ஒரு ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் வரைந்துவிட்டார். தன்னுடைய மாணவர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி வரைந்து கற்றுக்கொடுத்தார்.

உலகம், இது இல்லை அது இல்லை என்றது
அவர், தன் பொறுப்பைப் பார்த்தார்.

இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னை, வேண்டியவை குறைவால் ஏற்படுவதல்ல

சீக்கிரமே மனந்தளர்ந்து விடுவதுதான் மிகப்பெரிய பிரச்னை

உண்மையான தலைவர்கள் அனைத்தும் சாதகமான நிலைக்காக காத்திருப்பதில்லை

தங்களிடம் இருப்பதைக் கொண்டு அவர்கள் தீர்வுகளை உருவாக்குகிறார்கள்.

வகுப்பில் கம்யூட்டரே இல்லாவிட்டாலும், அவர் பாடம் நடத்தினார்; அதை உலகம் மறக்கவில்லை.

கண்டுபிடிப்புகள் எப்போதும் தொழில்நுட்பத்திலிருந்து மாத்திரம் வராது என்பதை இது காட்டுகிறது.

சிலவேளைகளில் அது அர்ப்பணிப்பு, மனப்பாங்கு இவற்றிலிருந்தும் வரும்

உங்கள் நோக்கங்கள் நல்லவையாக இருந்தால், உலகம் உங்கள் முயற்சியைக் காணும்

பிறகு Microsoft அந்தப் பள்ளிக்கு கம்ப்யூட்டர்களும் மென்பொருள்களும் கொடுத்தது.

ஆகவே, தொழில்முனைவோர், படைப்பாளர்கள், நிறுவனர்கள், தலைவர்கள்

சாதகமான ஆதாரங்களுக்காக perfect resources காத்திருக்காதீர்கள்

உங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு தொடங்குங்கள்

திறமையை தாண்டி தொடர்ச்சியே வாய்ப்புகளை உருவாக்கும்.

வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்பது குறித்து Arti Yadav இப்படி கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

24/05/2026

The Secret Rajiv Kept Hidden

யாருக்கும் சொல்லாமல்...

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.

ஒரு மூத்த செய்தியாளர், அப்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான வாஜ்பாயை அணுகினார். ராஜீவின் அரசியல் பரம எதிரியான அவரது கருத்தைக் கேட்டார்.

வாஜ்பாய் கூறியதைக் கேட்ட செய்தியாளர், என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தார்.

ராஜீவைப்பற்றி கேட்டது வாஜ்பாயின் குரல் உடைந்தது. "இன்னைக்கு நான் உயிரோடிருக்கிறதற்கு ராஜீவ்தான் காரணம்," என்று கூறினார்.

இந்தப் பதிலை செய்தியாளர் எதிர்பார்க்காததால் திகைத்துப்போனார்.

1984க்கும் 89க்கும் இடைப்பட்ட காலத்தில் வாஜ்பாய், உடல்நலம் சீர்கெட்டது. ஏற்கனவே 1985ம் ஆண்டில் ஒரு சிறுநீரகம் கெட்டுப்போனது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு, அந்தக் காலத்தில் அமெரிக்காவில் மட்டுமே சிகிச்சை கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், அமெரிக்காவுக்கு பயணிப்பது அப்போது அவருக்கு இயலாத நிலை.

இது எப்படியோ ராஜீவுக்கு தெரிந்துவிட்டது. அவர் பொதுவெளியில் ஒன்றும் கூறவில்லை. நியூ யார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு UN செல்லும் நாடாளுமன்ற குழுவில் வாஜ்பாயை சேர்த்துவிட்டார். இப்போது எல்லா செலவும் அரசாங்கத்தை சார்ந்ததாகிவிட்டது.

அவ்வளவுதான். எப்போதும் தனக்கு எதிர்நிலையில் நிற்கிற ஒருவருக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவினார் ராஜீவ்.

நியூ யார்க் சென்ற வாஜ்பாய் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

பொதுவெளியில் அவர்கள் அரசியல் எதிரிகள். அவர்கள் விவாதித்தனர்; முரண்பட்டனர்; இந்தியாவைக் குறித்த தங்கள் தரிசனத்திற்காக சண்டையிட்டுக்கொண்டனர்.

ஆனால், ராஜீவ் தான் இருந்தவரைக்கும் இதை யாரிடமும் சொல்லவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் எதிரியிடமும் மனிதாபிமானம் கொள்ளவேண்டும்.

ராஜீவ் காந்தி நினைவு நாளான மே 21 அன்று Srijan Singh இந்தப் பதிவை எழுதியுள்ளார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

23/05/2026

Good Debt vs Bad Debt: Which One Did You Take?

கடன் நல்லதா, கெட்டதா?

லோன் வாங்கியிருக்கீங்களா? என்று ஒருபோதும் கேட்காதீர்கள்.

அந்தக் கடன் உங்களுக்கு என்ன செய்திருக்கிறது? என்றே கேட்கவேண்டும்.

கெட்ட கடன்:

மதிப்பை இழந்துபோகும் ஒரு பொருளுக்காக, ஒன்றையும் உருவாக்காத ஒன்றுக்காக பணம் கடன் வாங்குவது கெட்ட கடனாகும்.

சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்
கிரடிட் கார்டு கடன்

ஒரு மொபைல்போனை 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். முழுப்பணத்தையும் செலுத்தவில்லை.

கடனுக்கு வட்டி வருடத்துக்கு 36 முதல் 42 சதவீதமாகும்.
80 ஆயிரம் மொபைல் போனின் விலை இப்போது 1 லட்சத்து 12 ஆயிரமாகிவிட்டது.

ஆனால், இன்றைக்கு போனின் மதிப்பே 50 ஆயிரம் ரூபாய்தான்.

மதிப்பு குறையும் ஒரு சொத்துக்கு உயர்வான தவணை கட்டுகிறீர்கள்

கடன் வாங்கி பயணம் செல்லுதல்

பயணம் முடிந்துவிட்டது. நினைவுகளே நிஜம். ஆனால், கடனுக்கான மாதாந்திர தவணை இன்னும் இரண்டு வருடத்துக்கு அதாவது 24 மாதத்திற்கு கட்டவேண்டும்.

நீங்கள் வாங்கும் பொருள் கடனை திரும்ப கட்டாது. நீங்கள்தான் மாதாமாதம் கட்டவேண்டும்.

நல்ல கடன்

மதிப்பு கூட கூடிய அல்லது வருமானத்தை ஈட்டக்கூடிய பொருளை வாங்குவதற்கு பணம் வாங்குவது நல்ல கடனாகும்.

சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்

சிஏ அல்லது எம்பிஏ படிப்பதற்கான கல்வி கடன்
9 சதவீத வட்டியில் 15 லட்ச ரூபாய் கடன் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பட்டம் பெற்ற பிறகு முதல் ஆண்டில் ஊதியம்

எட்டு முதல் பன்னிரண்டு லட்சம்.

அந்தக் கடன் ஓர் உடைமையை அதாவது உங்களுக்கு பொருளீட்டும் தகுதியை வாங்கியுள்ளது.

வட்டி விகிதத்தைவிட அதிகமாக பொருளீட்டுகிறது. ஆகவே அது நல்ல கடன்

வீட்டுக் கடன்
வளருகின்ற ஒரு பகுதியில் வீடு வாங்குவதற்கு 8.5 சதவீதம் வட்டியில் 60 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்.

சொத்து மதிப்பு உயருகிறது. மாதாந்திர தவணை, பங்கு உரிமையை equity உருவாக்குகிறது.

ஆண்டுக்கு 2 லட்சம் வரைக்கும் பிரிவு 24ன் படி வட்டி கழிக்கப்படலாம்
Interest deductible under Section 24 — up to ₹2 lakh/year.

கையில் கிடைக்கும் பணத்தில் 40 சதவீதத்தை விட அதிகமாக மாதாந்திர தவணை போகக்கூடாது. அதற்கு மேல் சென்றால் அது உதவுவதற்குப் பதிலாக சுமையாக மாறிவிடும்.

கடன்பெறுவதற்கு முன்பு, இந்தக் கடன் இன்னும் அதிகமாக சம்பாதிக்க அதாவது கட்டும் வட்டிக்கு மேலாக பொருளீட்ட எனக்கு உதவுமா என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள்.

அந்த ஒரு கேள்வி தவறான கடன்களை 80 சதவீதம் தடுத்துவிடும்.

நிதி மேலாண்மை குறித்து Mayank Saraf இப்படி விளக்குகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க..

22/05/2026

One Smart Move Can Change Everything

இந்த ஐடியா ஏன் வொர்க் அவுட் ஆனது?

ஒரு Maggi எவ்வளவு?

இது என்ன கேள்வி?

பதினைந்து ரூபாய் என்கிறீர்களா?

நூறு ரூபாய் என்றால் வாங்குவீர்களா? சாதாரண Maggi நூறு ரூபாய். Butter Maagi என்றால் 120 ரூபாய்.

ஒரே நாளில் இந்த விலைக்கு விற்று 24,000 ரூபாய் சம்பாதித்துள்ளார் டெல்லியை சேர்ந்த தேவ்னேஷ் தியாகி என்பவர்.

மலையில் மக்கள் சுற்றுலா வரும் இடத்தில் சாலையோரம் ஒரு கடையை அமைத்தார். இடம், Location ஒரு பொருளின் விலைக்கு எவ்வகையில் உதவுகிறது என்று பார்க்க விரும்பினார்.

கண்ணுக்கினிய இயற்கைக் காட்சிகள், குளிரான நிலை, பசியுடன் இருக்கும் சுற்றுலா பயணிகள், உட்கார இருக்கைகள், அங்கேயே சமையல்.

ஒரே நாளில் மாலைக்குள்ளாகவே மொத்தமும் விற்றுப்போனது.

அதாவது மக்கள் வெறுமனே ஒரு பொருளுக்கு மட்டும் பணம் கொடுப்பதில்லை.

அவர்கள், அனுபவம், வசதி இவற்றையும் கருதியே விலை கொடுக்கிறார்கள்
They pay for the EXPERIENCE, CONTEXT, and CONVENIENCE.

மளிகைக் கடையில் 15 ரூபாய்க்குக் கிடைக்கும் Maggi மலையின்மேல் நீண்டதூரம் பயணித்த பிறகு 120 ரூபாய்க்குக் கிடைக்கும்போது, 'கொடுக்கலாம்ப்பா' என்று தோன்றுகிறது.

இடத்தின் சிரமம் மற்றும் தொலைவு

கூடுதலை விலைக்கான மனோநிலை
Premium pricing psychology

தேவையினால் நடக்கும் வியாபாரம்

அனுபவம் சார்ந்த விற்பனை

சமூக ஊடகம் உருவாக்கிய ஆர்வ சந்தை

இவை அனைத்தும் இதை சாத்தியமாக்கியுள்ளன.

இதிலிருந்து புரட்சிகரமான எண்ணம் idea எப்போதும் அவசியமல்ல; ஏற்ற மக்கள், ஏற்ற நேரம், ஏற்ற பொறுப்பு right positioning.

Marketing சந்தைப்படுத்தல் குறித்து Riya Singh இப்படி கூறுகிறார்

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

21/05/2026

Civic Sense Begins With Us, Mysuru

இப்படியும் சரி பண்ணலாம்...!

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் பழக்கம்.

நாய்கள் சிறுநீர் கழிக்கும் இடம் என்று எழுதிவைத்தோ,

அனைத்து சமயங்களின் தெய்வங்களின் படங்களை மாட்டியோ அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

2026 மே மாதத்தில் மைசூரு மாநகராட்சிக்கு ஒரு சிந்தனை ஐடியா வந்தது. எதிரே இருப்பதை கண்ணாடி போன்று பிரதிபலிக்கக்கூடிய எஃகு stainless steal தகடுகளை பொருத்தினால் என்ன என்று யோசித்தார்கள்.

அதன்படி ஏறக்குறைய ஒன்பதரை லட்ச ரூபாய் செலவில் எஃகு தகடுகளை பொருத்தினர். பொதுவாக, பெரும்பாலும் எந்தெந்த இடங்களில் சிறுநீர் கழிக்கிறார்களோ அந்தந்த இடங்களில் அவற்றை பொருத்தினர்.

அப்படி பொருத்தப்பட்ட இடங்களில் ஒன்று மைசூரு புறநகர் பேருந்து நிலையம். அங்குள்ள 80 அடி நீளமுள்ள சுவற்றில் இது பொருத்தப்பட்டது. இதன் முன்னே நிற்கிறவர்கள் பிரதிபலிக்கப்படுவர். தங்கள் உருவத்தை பார்க்கிறவர்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பார்கள்.

மாலை மற்றும் இரவு வேளைகளில் LED விளக்குகளும் இவற்றில் ஒளிர்கின்றன. அதாவது தெரு விளக்கு எரியும்போது இவையும் ஏற்றப்படுகின்றன.

பொது சுகாதார கேட்டை சீர்ப்படுத்த இது நல்லதொரு திட்டம் என்றும், பொது கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என்றும் வெவ்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.

இந்த ஏற்பாடு செய்யப்பட்டதும் ஒரே நாளில் பழக்கத்தில் 90% குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

பிரச்னை எதுவானாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கும். மாற்றி யோசிக்கவேண்டியதுதான் தேவை.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

20/05/2026

Extra Connectivity: Tambaram–Bodinayakkanur Special Train Arrives

தாம்பரம் போடிநாயக்கனூர் சிறப்பு ரயில்

2026 மே மாதம் 23ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை சனிக்கிழமைதோறும் இரவு 10:30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் வாராந்தர சிறப்பு ரயில் ரயில் எண் 06059 மறுநாள் பகல் 11:15 மணிக்கு போடிநாயக்கனூரை அடையும்.

மறுமார்க்கத்தில் 2026 மே 24ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை ஞாயிறுதோறும் மாலை 4:45 மணிக்கு போடிநாயக்கனூரில் புறப்படும் வாராந்தர சிறப்பு ரயில் ரயில் எண் 06060 மறுநாள் காலை 6:30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 2026 மே 21ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுபோன்ற ரயில்சேவை செய்திகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

20/05/2026

Working Like a Bull — But At What Cost?

வீட்டுக்கே போகாமல் வேலை பார்க்கிறீர்களா?

நான் பணிபுரிய ஆரம்பித்த நாள்களில், அலுவலகத்திலிருந்து தாமதமாக புறப்படுவது நல்ல குணமாக கருதப்பட்டது.

நாளுக்கு 12 முதல் 14 மணி நேரம் ஒருவர் வேலை பார்த்தால்,

மனுஷன் மாடா உழைக்கிறாருப்பா என்று பேசுவார்கள்.

மேலாளர்கள் அப்படிப்பட்டவர்களை விரும்புவார்கள்

குழுக்கள் teams அப்படிப்பட்டவர்களை சிலாகித்து பேசும்

எப்போதும் லேப்டாப்பை திறந்துவைத்திருப்பதினாலேயே அலுவலகத்தில் ஜாம்பவான்களானவர்களும் உண்டு.

அப்போது, களைத்துச் சோர்ந்துபோவது அர்ப்பணிப்பாக பார்க்கப்பட்டது

காலப்போக்கில், நாம் எதற்கான பலனை கொடுக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

வார இறுதி நாள்களில் வேலை செய்ததற்காக உங்களைப் புகழும் அதே நிறுவனம் இரண்டே வாரங்களில் உங்களுக்கு மாற்றாக ஒருவரை கண்டுபிடித்துவிடும். இக்காலத்தில், சிலவேளைகளில் இன்னொரு பணியாளரைக் கொண்டு இல்லையெனில் செய்யறிவை (A) கொண்டு நிரப்பி விடுகிறார்கள்.

ஆனாலும் இன்னும் சிலர் தங்களுக்கு இயன்றதைக் காட்டிலும் அதிகமாக சிரமப்பட்டு உழைக்கிறார்கள்

நெருக்கடியே அதை சிரமமாக்கிவிடுகிறது. சந்தையில் போட்டி அதிகம். நிலையில்லாத வேலை, சிலருக்கு கல்லூரி முடித்ததுமே சோர்வு பாதிக்க தொடங்கிவிடுகிறது.

ஆண்டுக்கணக்கில் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு உழைத்து வேலையை உருவாக்கி, நன்றாக சம்பாதிக்க தொடங்கும்போது, திடீரென தூக்கம், உடல்நலம், உறவுகள், பொழுதுபோக்குகள் எல்லாவற்றுக்கும் மேலாக மன அமைதி கெட்டுப்போகிறது.

பிழைப்பு, சமநிலையைக்காட்டிலும் முக்கியம் என்பதால் பல இளைஞர்கள் இதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
A lot of us millennials accepted this because survival felt more important than balance.

ஆனால், எங்கோ ஓரிடத்தில் வளர்ச்சியையும் அதிக உழைப்பையும் நாம் குழப்பிக்கொள்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

And maybe success was never supposed to cost your entire personality.
உங்கள் முழு ஆளுமையை விற்று வெற்றியை வாங்குவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

ஆபீஸே கதி என்று கிடப்பவர்கள் குறித்து Sagnik Das இப்படி கூறுகிறார்.

இதுபோன்ற சிந்தனைகளை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க

18/05/2026

What If Your Kindness Is Not Returned?

நல்லவனாக இருப்பது பைத்தியக்காரத்தனமா?

நல்ல மனதுடன் இருப்பது சிலவேளைகளில் உங்களுக்குப் பாதகமாகி விட்டதுபோல் தோன்றலாம்

மற்றவர்கள் சுயநலமாய் சென்றுவிட்டபோது நீங்கள் விசுவாசமாய் இருந்திருக்கலாம்

தகுதியே இல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருக்கலாம்

உங்களுக்குத் தேவைப்படும்போது வராதவர்களுக்காக போய் நின்றிருக்கலாம்

ஆனால், உண்மை என்ன?

அன்பு, பெலவீனமல்ல
கரிசனை, முட்டாள்தனமல்ல

முழுவதும் போலி மக்கள் நிறைந்திருக்கும் உலகத்தில் உத்தமராய் இருப்பது அரிதான ஒன்று

வாழ்க்கையில், காலப்போக்கில் ஆற்றல் திரும்பி வரும் வழி ஒன்று உள்ளது

நீங்கள் கொடுத்த மரியாதை

நீங்கள் அளித்த ஆதரவு

நீங்கள் பகிர்ந்துகொண்ட ஊக்கம்

எப்படியாவது இவை திரும்ப கிடைக்கும்

ஒருவேளை உடனடியாக கிடைக்காதிருக்கலாம்.

யாருக்குச் செய்தீர்களோ, அதே மக்களிடமிருந்து வராதிருக்கலாம்

ஆனால், எப்படியாவது திரும்ப வரும்

ஆகவே, யாரோ ஒருவர் மதிக்கவில்லை என்பதற்காக நல்லவராக இருப்பதிலிருந்து மாறிவிடாதீர்கள்.

நல்லவராகவே தொடர்வது குறித்து Rob Dance இப்படி கூறுகிறார்

இதுபோன்ற தகவல்களை தவறவிடாதிருக்க Tamil Boomer பக்கத்தை follow பண்ணுங்க...

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Boomer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share