Kaaritv - காரிடிவி

Kaaritv - காரிடிவி மக்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் இல்லை ?
(1)

Permanently closed.
வா, சண்டை செய்வெளியே வா, சண்டை செய்இனிமேலாவது சண்டை செய்இதுதான் அரசியல் தெரிஞ்சுக்கோஉன்ன நம்பி செத்தவங்களுக்குநீதி வாங்க...
30/09/2025

வா, சண்டை செய்

வெளியே வா, சண்டை செய்

இனிமேலாவது சண்டை செய்

இதுதான் அரசியல் தெரிஞ்சுக்கோ

உன்ன நம்பி செத்தவங்களுக்கு

நீதி வாங்கித் தருவதற்காவது வெளியே வா

41 உயிர்களுக்கு நீதி கிடைத்த பிறகு

அடுத்த வேலை செய்

அதுவரை சண்டை செய்

சனிக்கிழமைகளுக்கு காத்திருக்காதே

குற்றவாளி யார் என்பதை உலகுக்கு காட்டு

வழக்குகளுக்கு அஞ்சித் தஞ்சம் செல்லாதே

நீதிக்காக ஓடு

உன் தொண்டர்களுக்காவது

நீ உண்மையாய் இரு

உன் மௌனம் வேண்டுமென்றால் உடைந்து இருக்கலாம் ஓலங்கள் அல்ல

உன் அரசியல் வாழ்க்கை இனி தான் தொடங்குகிறது

இதில் டூப்பு கிடையாது

நீயேதான் குதிக்க வேண்டும்

எங்கள் வாக்கு உனக்கல்ல அந்த அளவுக்கெல்லாம் உன் காணொளி இல்லை.

வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியலல்ல

அதையும் நம்பி உனக்கு வாக்கு போடத் துடிப்பவர்களுக்காகக் களத்தில் இறங்கு

டிரான்ஸ்பார்மர் திரையரங்க பால்கனி அல்ல

இரசிக குஞ்சுகளை முதலில் மனிதனாக்கு

இன்னும் குரங்குகளாகவே இருக்கிறார்கள்

கூடும் கூட்டம் வாக்கு அல்ல

நீ மனிதனாக வா வா, சண்டை செய்
இங்கர்சால் நார்வே

குழந்தைகளுக்கு யாரை முன்னுதாரணமாக காட்ட வேண்டும் எங்கு அழைத்து செல்ல வேண்டும் சூழல் பார்த்து பாதுகாப்பை பேணவாவது சிந்திக...
28/09/2025

குழந்தைகளுக்கு யாரை முன்னுதாரணமாக காட்ட வேண்டும்
எங்கு அழைத்து செல்ல வேண்டும்
சூழல் பார்த்து பாதுகாப்பை
பேணவாவது சிந்திக்க வேண்டும்

என பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும்

வைப் வைப்னு
பல லைஃப் போச்சு
காரணம் இனி பலவாறு வெளிவரும்

தூக்கம் வரமறுக்கிறது...எங்கே போகிறோம் நாம்?ஒவ்வொரு உயிரையும் வளர்த்தெடுப்பது எவ்வளோ கடினமாக உள்ளது....?பெற்றவர்கள் உற்றவ...
28/09/2025

தூக்கம் வரமறுக்கிறது...
எங்கே போகிறோம் நாம்?
ஒவ்வொரு உயிரையும் வளர்த்தெடுப்பது எவ்வளோ கடினமாக உள்ளது....?
பெற்றவர்கள் உற்றவர்கள் உடன்பிறந்தோர் உடன்பிறவா நண்பர்கள் என எத்துணையோப்பேர் கதறுவார்கள்...
இயற்கையே இது என்ன கோரம்?
விதியே இது என்னக்கோலம்?
அந்த உயிர் சாகும் தருவாயில் என்னனென்ன நினைத்ததோ?
எத்துணை மிதிபட்டு வதைப்பட்டு போனதோ?
யாரையெல்லாம் தேடியதோ?
என்னென்ன சொல்லி அழுதத்தோ?
மாளவில்லையம்மா... இதயம் குமைகிறது வயிறு எரிகிறது கண்கள் சிவக்கிறது இதயம் படபடக்கிறது!
யாரைக்குறைச்சொல்லி என்ன பயன் போன உயிர் போனது தானே?
கடவுளே மூச்சு திணறி மூச்சை விட்டவர்கள் உன் அருகே நிம்மதியய் உறங்கட்ட்டும் கடைசிநேரத்தில் ஓட முயற்சித்த கால்கள் ஓய்வெடுக்கட்டும்..
களைப்பாறட்டும் சற்றே உன் திருவடியில் இளைப்பாறட்டும்
அவர்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்யத சகல தவறுகளையும் பொருத்து காத்து பிறவிப்பெருங்கடல் கடந்து உன்நிழலில் ஒய்வெடுக்கட்டும்...
கண்ணீர் அஞ்சலி!
கண்ணீர் அஞ்சலி!
கண்ணீர் அஞ்சலி!

தமிழரின் புதுமைப் படைப்பு! 🔥👏சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக், 20 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு, தண்ணீரில் ...
22/09/2025

தமிழரின் புதுமைப் படைப்பு! 🔥👏
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக், 20 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு, தண்ணீரில் எரியும் அடுப்பைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சுத்தமான தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்து, அதைக் கொண்டு இந்த அடுப்பு எரிகிறது. இவரின் இந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்! 🫡

தமிழ்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுமே தனது வாழ்நாள் பணி என்று வாழ்ந்தவர் ஐயா த.வெ...
10/09/2025

தமிழ்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுமே தனது வாழ்நாள் பணி என்று வாழ்ந்தவர் ஐயா த.வெள்ளையன் அவர்கள்.

காந்தியவாதியின் மகனாக பிறந்து, இந்திய தேசியவாதியான காமராஜரின் தொண்டனாக வளர்ந்து, சுதேசி நாயகர் வ.உ.சிதம்பரனாரின் கொள்கை வழியில் வாழ்ந்து, தமிழீழத்தேசியத் தலைவரின் அதிதீவிர பற்றாளராக - தமிழ்நாட்டு உரிமைகளுக்காக களத்தில் நின்று போராடி மறைந்தவராக வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திய தூய மாமனிதர் அவர்.

எளிய பாமர மக்களுக்கு புரியும் வகையில் உலக முதலாளிகளின் ஏவலாளியாக செயல்பட்டுவரும் WTO அமைப்பை அம்பலப்படுத்தியவர். மண்ணை, மக்களை, வளத்தை காக்க கோக் - பெப்சி போன்ற அந்நிய நாடுகளின் சுரண்டல் நிறுவனங்களை எதிர்த்து தாமிரபரணி போன்ற களங்களில் சமரசமின்றி போராடிய கொள்கைவாதி. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற GATT சதிகளை எதிர்த்தவர். சாதி மறுப்பாளர். சுதேசி முழக்கம் என்ற விழிப்புணர்வு இதழை இடைவிடாது நடத்திய பத்திரிகையாளர்.

மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், சாயப்பட்டறைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள், ஆசிரியர்கள், மருத்துவ செவிலியர்கள் என சமூகத்தின் அத்தனை பிரிவினர்களுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

'கெடல் எங்கே தமிழர் நலன் ஆங்கே தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை தம் வாழ்வாக வாழ்ந்த அப்பழுக்கற்ற தமிழ்ப் பெருந்தலைவர் ஐயா வெள்ளையன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று. அவருக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கம்!

பதிவர் - SivaPriyan Sempiyan

காணவில்லை(நண்பர்கள் இச்செய்தியை காபி-பேஸ்ட் செய்து பகிரவும். வெறுமனே பதிவைப் பகிர வேண்டாம்)கிருஷ்ணன் என்னும் ஆட்டிசநிலை ...
02/09/2025

காணவில்லை

(நண்பர்கள் இச்செய்தியை காபி-பேஸ்ட் செய்து பகிரவும். வெறுமனே பதிவைப் பகிர வேண்டாம்)

கிருஷ்ணன் என்னும் ஆட்டிசநிலை இளைஞரைக் காணவில்லை. கேள்வி கேட்டால் பதில் சொல்லும் அளவுக்கு சுமாராகப் பேசக்கூடியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டுமொழிகளிலும் பேசுவார்.

காணாமல் போன பகுதி- கணபதி தெரு, மேற்கு மாம்பலம். சென்னை.

அவரைப் பற்றிய விவரங்கள்:
பெயர் : எஸ்.கிருஷ்ணன் (வயது 22)
உயரம் : சுமார் 6 அடி
உடையின் நிறம் : நீல நிற டி-ஷர்ட்
& சாம்பல் நிற ஷார்ட்ஸ்
நேற்று மாலை 5 மணி முதல் (1 செப்டம்பர் 2025)

பையனைப் பற்றிய தகவல் கிடைத்தால் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
சுனிதா, சுந்தரராஜன் - 9840923607, 9600165722

சென்னை நண்பர்களுக்கு அதிகம் பகிருங்கள் இரண்டு நோயாளிகளும் தீவிர அவசர நிலையில் உள்ளனர்கண்டிப்பாக வெள்ளை இரத்தஅணுக்கள் ஏற்...
01/09/2025

சென்னை நண்பர்களுக்கு அதிகம் பகிருங்கள்

இரண்டு நோயாளிகளும் தீவிர அவசர நிலையில் உள்ளனர்
கண்டிப்பாக வெள்ளை இரத்தஅணுக்கள் ஏற்றி ஆக வேண்டும் என்ற நிலைக்கு போயிட்டாங்க

அசாம் மாநிலத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட Chikan kalita என்பவருக்கு மிக அவசரமாக 🅰️➕ வெள்ளை இரத்தஅணுக்களும்

Dharsini subramanian என்ற புற்றுநோயால்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு🅾️- வெள்ளை இரத்த அணுக்களும்

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் தேவைப்படுகிறது

Any Available Donor's 9489167631

Vîgnesh Freebird

காணவில்லை பெயர் கலைச்செழியன்  வயது 15 தந்தை பெயர் அதியமான் 26.8.2025  இரவு 9.15 அளவில் சிறிய வருத்தத்தில் சென்னை முகப்பே...
27/08/2025

காணவில்லை

பெயர் கலைச்செழியன் வயது 15

தந்தை பெயர் அதியமான்

26.8.2025 இரவு 9.15 அளவில் சிறிய வருத்தத்தில் சென்னை முகப்பேர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்

பச்சை மஞ்சள் கலந்த நிறத்தில் ஒரு முழுக்கை t சர்ட். கருப்பு நிற ட்ராக் பேன்ட் பேன்ட் அணிந்திருந்தார் கையில் ammy. பிரவுன் நிற பை எடுத்து சென்றுள்ளார்

என் மகனை எங்காவது கண்டால் உடனே தகவல் கொடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

தொடர்புக்கு
9962560760

9444017233

உடல்நிலை சரியில்லாத நிலையில் காணவில்லை. யாரேனும் நமது தன்னார்வலர்கள் அல்லது ஆதரவற்ற இல்லங்களில் கண்டால் உடனே தெரிவிக்கவு...
27/08/2025

உடல்நிலை சரியில்லாத நிலையில் காணவில்லை. யாரேனும் நமது தன்னார்வலர்கள் அல்லது ஆதரவற்ற இல்லங்களில் கண்டால் உடனே தெரிவிக்கவும்

நன்றி

பூண்டு தோல் தலையனையின் முக்கிய நன்மைகள் 🛏️🌿1. தலைபாரம் குறைப்பு – தலையில் சுகப்பிரதமான சூடு, குளிர்ச்சி சமநிலை ஏற்படுத்த...
24/08/2025

பூண்டு தோல் தலையனையின் முக்கிய நன்மைகள் 🛏️🌿

1. தலைபாரம் குறைப்பு – தலையில் சுகப்பிரதமான சூடு, குளிர்ச்சி சமநிலை ஏற்படுத்தி தலைபாரத்தை குறைக்க உதவும்.

2. மனஅழுத்தம் தணிவு – இயற்கையான வாசனையும், சீரான தலையணை ஆதரவும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும்.

3. மூளை செயல்திறன் மேம்பாடு – இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, கவனம் மற்றும் நினைவாற்றலை உயர்த்த உதவும்.

4. மன உளைச்சல் குறைப்பு – ஓய்வான தூக்கத்தை ஏற்படுத்தி, மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.

5. தலையில் நீர்கோர்த்தல் சரி செய்தல் – வெப்பநிலை சமநிலையால் நீர்கோர்த்தல் பிரச்சனையை தணிக்கும்.

6. உடல் வெப்பநிலை கட்டுப்பாடு – குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.

7. தொடர் இருமல், சளி தணிவு – காற்றோட்டம் மற்றும் இயற்கை வெப்பம் சுவாச பாதையை சீராக்க உதவும்.

9578016230

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி  கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி...
23/08/2025

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி

கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.

கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர்.

அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.

சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும் M. K. Stalin Udhayanidhi Stalin Tangedco S. S. Sivasankar

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Kaaritv - காரிடிவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaaritv - காரிடிவி:

Share

“உண்மை உடனுக்குடன்”

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும்