Tamizhveli

Tamizhveli Tamizh Books Online Promotion, Distribution, Selling, Publishing & Megazine Publication

21/09/2025
வணக்கம் மதுரை . . .
04/09/2025

வணக்கம் மதுரை . . .

31/08/2025

கனவுப் படிக்கட்டுகள் பற்றி ஓவியர் சந்தோஷ் நாராயணன் கருத்து
#கனவுப்_படிக்கட்டுகள் Santhosh Narayanan Chenthilkumar

ரா. கிருஷ்ணையா(26.2.1923 - 23.03.1996)புதுச்சேரியின் காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமத்தில் பிறந்தவர். இவர் பிறந்த...
29/07/2025

ரா. கிருஷ்ணையா

(26.2.1923 - 23.03.1996)

புதுச்சேரியின் காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமத்தில் பிறந்தவர். இவர் பிறந்தபோதே தாயார் ராஜாமணி இறந்துவிட, தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். தந்தையார் ராமதாஸ் திருவாரூரில் வழக்கறிஞர்.

கிருஷ்ணையாவின் பள்ளிப் படிப்பு நாகப்பட்டினம், திருவாரூரில் கழிந்தது. கல்லூரிப் படிப்பு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முதுகலை பொருளாதாரம் பச்சையப்பன் கல்லூரியிலும் தொடர்ந்தது. பின்னர் மேலும் சட்டம் படித்தார்.

1951 – 52 ல் ‘விடிவெள்ளி’ வார இதழை நடத்தினார். 1953 – 54 ல் ‘ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டார். அப்போது அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் மற்றும் சென்னை மாகாணக் குழுவில் உறுப்பினர் ஆவார்.

1954 ல் ‘சோவியத் நாடு’ இதழில் கிருஷ்ணையா 9 ஆண்டுகள் டெல்லியில் பணிபுரிந்தார். அப்போது ஏராளமான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1963 க்குப் பின் சென்னையில் இயங்கிய சோவியத் நாடு அலுவலகத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

1968 முதல் 1978 வரை முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிய மாஸ்கோ சென்றார். அந்தப் பத்தாண்டுகள் ரா. கிருஷ்ணையாவுக்கு ருஷ்ய இலக்கியங்களை நேரடியாக மொழிபெயர்ப்பதில் பொற்காலமாக அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய மொழிபெயர்ப்பு மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்தது.

சென்னை திரும்பிய பின் ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் இறங்கினார். பின்னர் தியாகுவின் மொழிபெயர்ப்பில் மார்க்ஸின் ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு பதிப்புப் பணியில் ஐந்தாண்டுகள் ஈடுபட்டார்.

தீவிரமான காசநோயின் பாதிப்பால், மாரடைப்பு ஏற்பட்டு 23.03.1996 அன்று பகத்சிங் நினைவு நாளில் கிருஷ்ணையாவின் உயிர் பிரிந்தது.

தன் வாழ்நாள் முழுவதையும் அவர் தான் நம்பிய மார்க்சியம் சார்ந்தே வாழ்ந்தார்; மறைந்தார். அவரது மொழியாக்கப் பணிகள் வழியாக நினைவுகூரப்படுகிறார்..
தமிழ்வெளி

தமிழ்வெளி 19 - ஜூலை 2025 காலாண்டிதழ் அச்சிலிருந்து வந்துவிட்டது. அனைவருக்கும் இன்றுமுதல் அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.தவிர்...
23/07/2025

தமிழ்வெளி 19 - ஜூலை 2025 காலாண்டிதழ் அச்சிலிருந்து வந்துவிட்டது.
அனைவருக்கும் இன்றுமுதல் அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.

தவிர்க்கவியலாத காரணங்களால் இதழ் வெளியீடு இம்முறை கொஞ்சம் தாமதமாகியிருக்கிறது, படைப்பாளர்களும் சந்தாதாரர்களும் பொறுத்தருள்க...

வழமையான தரத்தில் படைப்புகள் இம்முறையும் பக்கங்களை நிறைத்திருக்கின்றன. வாசகர்கள், படைப்பாளர்களின் தயக்கமில்லாத தொடர் ஆதரவினால் அடுத்த இதழுடன் ஐந்தாம் ஆண்டை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறோம். சிற்றிதழ் தொடர்ச்சியில் இதுவொரு குறிப்பிடத்தக்க பெரும் முயற்சியே...

புதுப்புது படைப்புகளும் புதிய சந்தாதாரர்களுமே என்றும் சிற்றிதழ்களின் ஆகப்பெரிய பலம்.
தொடருங்கள்... தொடர்வோம்...

தமிழ்வெளி

நவீனக் கலை இலக்கியக் காலாண்டிதழ்

ஆசிரியர்: சமயவேல்

தொடர்புக்கு: 090940 05600

நேயர் விருப்பம் ஜூலை - 2025 வெளியீடு• | ஆலாபனை | •- சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிதை நூல் -கவிக்கோ அப்துல் ரகுமான்விலை ...
28/06/2025

நேயர் விருப்பம்

ஜூலை - 2025 வெளியீடு

• | ஆலாபனை | •

- சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிதை நூல் -

கவிக்கோ அப்துல் ரகுமான்

விலை ரூ. 99

ISBN: 978-93-92543-52-4

••

“ஒருத்தர் தன் வாழ்நாளில் ஒரு நல்ல படிமம் (image) உருவாக்குவது, கனத்த நூல்களை எழுதித் துள்ளுவதைவிட மேலான காரியம்” என்பார் புதுக்கவிதைக்கான படிமவியல் இயக்கத்தை முன்னெடுத்த எஸ்ரா பவுண்ட். புதுக்கவிதை புதியவற்றை, புதிய மொழியில், புதியவிதத்தில் சொற்சிக்கனத்தோடு அமைவதற்குப் பெரிதும் துணை செய்வது இந்தப் படிமங்கள்தான். அப்துல் ரகுமானின் கவிதைக் காடு முழுவதும் படிமங்களும் குறியீடுகளும் பூத்துக் குலுங்குகின்றன. வாசகர்கள், படிமம் மற்றும் குறியீடுகளின் ஊர்வலத்தில் கலந்து, காணாமல் போகும் அனுபவத்தை ஒவ்வொரு கவிதையிலும் அடையலாம்.

- க. பஞ்சாங்கம்

••

அட்டை வடிவமைப்பு: ஆர்.சி. மதிராஜ்

நேயர் விருப்பம்

தமிழ்வெளிஜூலை - 2025 வெளியீடு• | இலையுதிர்கால மஞ்சள் | •அல்டஸ் ஹக்ஸ்லிதமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி••துணிச்சலான புத...
27/06/2025

தமிழ்வெளி

ஜூலை - 2025 வெளியீடு

• | இலையுதிர்கால மஞ்சள் | •

அல்டஸ் ஹக்ஸ்லி

தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி
••

துணிச்சலான புதிய உலகம் - Brave New World என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியரான அல்டஸ் ஹக்ஸ்லியின் முதல் நாவல் இது. ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் “Crome Yellow - இலையுதிர்கால மஞ்சள்”, இங்கிலாந்தில் ஒரு நாட்டுப்புற பண்ணை வீட்டின் கூடுகை வழியே, இருபதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அறிவுஜீவிக் குழுவினரைக் கேலிக்குள்ளாக்குகிறது.

‘க்ரோம்’ என்ற பண்ணை வீட்டிற்கு விடுமுறைக்காக வரும் இளம் கவிஞன் டெனிஸ் ஸ்டோனின் பார்வையில் கதை விரிகிறது. அங்கே கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் - ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் - தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் பேச்சுகளின் வழியே, ஹக்ஸ்லி அந்த காலகட்டத்தின் நாகரிகப் பாசாங்குகளையும், போலியான தத்துவங்களையும், காதல் பற்றிய குழப்பங்களையும் கூர்மையான நையாண்டியுடன் வெளிப்படுத்துகிறார்.

கலகலப்பான உரையாடல்கள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை என அனைத்தும் கலந்த இந்த நாவல், ஹக்ஸ்லியின் எழுத்தாளுமைக்கு ஒரு மிகச்சிறந்த அறிமுகம். அறிவுலகின் அபத்தங்களை ரசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதமான படைப்பு.
••

அட்டை வடிவமைப்பு: ஆர்.சி. மதிராஜ்

தமிழ்வெளி

Address

Chennai
600122

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamizhveli:

Share

Category