News4 Tamil

News4 Tamil Welcome to Official page of News4 Tamil. Our page provides true facts for Online Tamil News
(1)

Welcome to Official page of News4 Tamil.We are providing latest updates from State and National level Current Events,Cinema,Sports and Business with true facts

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் -நடந்தது என்ன?இந்தியா கூட்டணி கூட்டத்தி...
08/06/2026

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் -நடந்தது என்ன?

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த திருமாவளவன்.
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
விசிக தலைவர் திருமாவளவன்

நடந்து முடிந்த தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டணி அமைய முக்கிய பங்காற்றிய திமுக இல்லாமல் முதல் முறையாக கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னார் தலைவர் கார்கே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கொல்கத்தா முன்னார் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திருமாவளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எதிர்க்கட்சி கூட்டணிகளில் வலிமையாக இருந்த திரிணாமூல், இடதுசாரிகள், திமுகவின் வெற்றியை பாதித்துள்ளதாகவும் இதனால் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பாட்டுள்ளதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்தார். கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் மேற்கொண்ட அணுகுமுறையால் திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை பலவீனம் அடையச் செய்ததாகவும் காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்து ஒற்றுமையை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாளவன் வலியுறுத்தியுள்ளார். திருமாவளவனின் இந்தப் பேச்சால் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலேயே திருமாளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியலில் பேசும்பொருளாகிவிட்டதால் காங்கிரஸ் இதற்கு விரைவில் பதில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, காங்கிரஸில் துரோகச் செயலால் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று காலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்புசட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் க...
08/06/2026

என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியே வீ தி லிடர்ஸ் (We the Leaders) என்கிற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இயக்கத்தில் பதவி நியமனம் குறித்தும் தனது பெயரை பயன்படுத்துவது குறித்தும் அண்ணாமலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பொறுப்புகள் வழங்கவில்லை
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும்.

நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும். இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

பெயரை பயன்படுத்த கூடாது
இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும். ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம்.

ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! தமிழக சட்டப்பேரவைத்...
08/06/2026

செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், தனது "ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்" வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வார காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளன. முன்னாள் திமுக அமைச்சர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி
கடந்த வாரத்தின் மிக முக்கிய அரசியல் நகர்வாக, முன்னாள் திமுக அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு முதல்வர் விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் நடைபெற்ற "வேலைக்கு பணம்" முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறை (ED) செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரியிருந்தது.

முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் கோப்பு தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி இழுத்தடிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் தற்போது அந்த முக்கியக் கோப்பில் கையெழுத்திட்டு ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அரசாணை வெளியாகி, செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.என். நேரு விவகாரம்: உண்மை என்ன?
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாகக் கூறப்படும் புகாரில், முந்தைய தி.மு.க அரசு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்யாமல் தடுத்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மறுஆய்வு மனுக்கள் மூலம் காலம் கடத்தப்பட்டது.

ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனே இந்த விவகாரத்தில் சட்டத்தின் வேகத்தை அனுமதித்தார். நீதிமன்றத்தில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கே.என்.நேரு மீது அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், கடந்த காலங்களில் புகார்களை மூடி மறைக்க முயன்ற பாதுகாப்பு உடைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ரேடாரில் அடுத்த 6 விக்கெட்டுகள்
கே. என் நேரு, செந்தில் பாலாஜி விவகாரத்தைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்கள் பலருக்கு எதிரான கோப்புகளை முதல்வர் அலுவலகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ள முக்கிய புள்ளிகள்:

பொன்முடி: சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் உயர்கல்வித் துறை முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் தூசு தட்டப்படுகின்றன.

துரைமுருகன்: நீர்வளத் துறை மற்றும் கனிம வளக் குவாரி முறைகேடுகள் குறித்து ரகசிய விசாரணை.
சேகர் பாபு: அறநிலையத் துறை டெண்டர்கள் மற்றும் CMDA திட்டங்களில் நிதி ஒதுக்கீடு தணிக்கை.
ஜெகத்ரட்சகன்: கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் தொடர்பான வருமான வரி மற்றும் ED சோதனை தரவுகள் மறுஆய்வு.

எ.வ. வேலு: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடு புகார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன்: தூத்துக்குடி உள்ளாட்சித் திட்டங்கள் மற்றும் கடற்கரை மணல் குவாரி விவகாரங்கள்.

தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே "வெற்றித் தமிழகம்" என்ற புதிய நிர்வாகப் பாதையை அறிவித்த முதல்வர் விஜய், லஞ்ச ஊழலுக்கு எதிராக சமரசமின்றி செயல்படுவதாக உறுதி காட்டியுள்ளார்.
இந்த அரசியல் அதிரடி நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மக்களாட்சியில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய் அரசு, தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி வேகமாக நகர்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தொடருமா அல்லது அரசியல் சூழல் மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வித்திடும் இந்த நிகழ்வுகள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும்! காங்கிரஸ் கூட்டணியில் நாங்க இல்லை": TKS இளங்கோவன்பாஜகவுக்கு எதிராக மே...
08/06/2026

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும்! காங்கிரஸ் கூட்டணியில் நாங்க இல்லை": TKS இளங்கோவன்

பாஜகவுக்கு எதிராக மேலும் ஒரு மதச்சார்பற்ற கூட்டணி உருவாகும் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையில் பாஜகவுக்கு எதிராக மீண்டும் வலுவான கூட்டணி உருவாகும். காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திமுக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெறவில்லை. எதிர்கால அரசியல் சூழலில் கூட்டணிகளின் நிலைமைகள் மாறக்கூடும். தேசிய அளவில் புதிய அரசியல் சமநிலையும், ஒரு வலுவான அரசியல் கூட்டணியும் இனி உருவாகும் என திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 23 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தி.மு.க இந்த டெல்லி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இல்லைன்னு பெ.சண்முகம் சொல்றது பரவலா பல கட்சிகள், எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கின்றன. ஒருவேளை அதை வைத்து சொல்கிறாரோ என்னவோ தெரியவில்லை. மறுபடியும் மதச்சார்பற்ற, பாஜக-வுக்கு எதிரான ஒரு கூட்டணி கட்டாயம் உருவாகும், வலிமையான கூட்டணியாக உருவாகும்.

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியே வந்திருக்கிறார்கள், இரண்டு கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை மற்றவர்கள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள், ஒரு சில கருத்துக்களில் நாங்களும் ஒத்துப்போவோம். எங்களுடைய கொள்கையும் அதுதான், அந்த கூட்டணி கூட்டத்திலே கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்றால் எங்கள் கொள்கைக்கு ஏற்ப, எங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஏற்ப முடிவை ஏற்றால் நாங்கள் அதை வரவேற்போம்.

"திமுக என்பது ஒரு கொள்கை இயக்கம், தேர்தல் வெற்றி தோல்விகள் திமுக-வை அசைத்துக் கூட பார்த்ததில்லை. 75 ஆண்டு காலமாக பல வெற்றிகளையும் சந்தித்திருக்கிறோம், பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம். 1991ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் மட்டுமே வெற்றி பெற்றார். திமுக-வில் மற்ற அனைவரும் தோற்றோம், அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவையே தோற்கடித்தோம்.

எனவே, ஒரு வெற்றியோ ஒரு தோல்வியோ திமுக கழகத்தை பாதிக்காது. இது ஒரு கொள்கைக்காக உருவான இயக்கம், அந்த கொள்கையிலே தொடர்ந்து பயணிப்போம். வெற்றி வரும் பொழுது அந்த கொள்கைகளை செயல்படுத்துவோம், வெற்றி பெறாத நேரத்தில் அந்த கொள்கைகளை ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துப் போராடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு!தமிழக அரசியல் வட்டாரத்தில்...
08/06/2026

உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் ஒரு முக்கிய திட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள அவர், தன் வசம் உள்ள 'உள்துறை' (Home Portfolio) பதவியை மற்றொரு மூத்த அமைச்சரிடம் ஒப்படைக்க தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் புதிய அரசை அமைத்த முதல்வர் விஜய், பொது நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை மாநிலம் முழுவதும் துரிதமாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்காக உள்துறைப் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி ஆலோசனை குறித்த தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசுச் செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் மரபின்படி, சட்டம்-ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உள்துறை எப்போதும் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதே வழக்கம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்துறையை தனி அமைச்சரிடம் ஒப்படைப்பது எதிர்காலத்தில் முக்கிய முடிவுகளில் நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என அவர்கள் முதல்வருக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகளின் இந்த அறிவுரையை மீறி முதலமைச்சர் விஜய் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தேர்தல் வாக்குறுதியான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 436 திட்டங்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும், ஒவ்வொரு துறையின் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்காணிக்கவும் தனக்கு கூடுதல் நேரம் தேவை என அவர் உணர்கிறார்.

உள்துறையைக் கவனிப்பதற்கு அதிக நேரம் செலவாகும் நிலையில், மற்ற மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர் தெளிவாக உள்ளார்.

"நிர்வாகப் பரவலாக்கத்தின் மூலமே சிறந்த ஆட்சியை வழங்க முடியும்" என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரபுகளை முன்வைத்து தாமதிக்காமல், தகுதியான மூத்த அமைச்சரிடம் உள்துறையை நம்பி ஒப்படைக்க அவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவு உறுதியான பிறகு, அடுத்த உள்துறை அமைச்சர் யார் என்பதில் அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் இந்த அமைச்சரவை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை போன்ற முக்கியத் துறையின் பொறுப்பு மாற்றம் சட்டம்-ஒழுங்கு நிலையை எவ்வாறு பாதிக்கும், புதிய அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் ஏற்கெனவே அரசியல் அரங்கில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் இந்த முடிவு, அவரது நிர்வாகப் பாணியை பிரதிபலிப்பதாகவும், மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அவரது அர்ப்பணிப்பை காட்டுவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றனர். மறுபுறம், பாரம்பரிய நிர்வாக முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்கள் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இந்த மாற்றம் தமிழகத்தின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான்தமிழக அரசியலில் சட்டமன்றத...
08/06/2026

கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான்

தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய களம் புதிய உத்திகளோடு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் தங்களது வாக்கு வங்கியை பலப்படுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளைத் தன்வசம் ஈர்க்க தவெக தலைமை தற்போது ஒரு புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது. இந்த உத்தி 'ஆபரேஷன் நார்த்' என்று அழைக்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி தன் பலத்தை நிரூபித்தது. இருப்பினும், வட மாவட்டங்களில் கட்சி சந்தித்த தோல்வி தவெக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, வன்னியர் சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் அரியலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தவெகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தை மட்டுமே தவெகவால் பிடிக்க முடிந்தது.

அதே நேரத்தில், பாமக-அதிமுக கூட்டணி இந்த மாவட்டங்களில் 32 இடங்களைக் கைப்பற்றி தங்களது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தத் தோல்வி குறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "கடந்த தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தத்துவத் தலைவராக முன்னிறுத்தி, பட்டியல் இன மக்களின் வாக்குகளை மட்டுமே குறிவைத்து கட்சி செயல்பட்டதுதான் இந்த விளைவுக்குக் காரணம்" என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். இந்த சுயபரிசோதனை தவெகவுக்கு புதிய பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் காலங்களில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய வாக்குகளைப் பெறுவதில் தவெகவுக்குப் பெரும் சவால் எழலாம் எனத் தெரிகிறது. இதனை முறியடிக்கவே தவெக தலைமை 'ஆபரேஷன் நார்த்' என்ற புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது முக்கியப் பணியே வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை அடையாளம் கண்டு, அவர்களை தவெகவில் இணைப்பதுதான் என்று கூறப்படுகிறது.

வட மாவட்டங்களில் தவெக கால்பதிக்க வேண்டுமானால், அங்கு பலமாக இருக்கும் பாமகவை பலவீனப்படுத்துவது அவசியம் என்பதை தவெக உணர்ந்துள்ளது. அதற்கான வேலைகளும் தற்போது திரைமறைவிலும் வெளியிலும் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தவெக தலைமை தன் பக்கம் இழுத்துள்ளது. பாமகவின் அடிமட்டக் கட்டமைப்பைச் சிதைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

பொதுவாக அரசியல் கட்சிகள் மாற்றுத் திறனாளிகளையோ அல்லது எதிர்த்தரப்புத் தலைவர்களையோ கடுமையாக விமர்சிப்பது வழக்கம். ஆனால், தவெக தலைவர் விஜய் இதுவரை பாமக தலைவர் அன்புமணியை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகிறார். இதற்குப் பின்னால் ஒரு தந்திரோபாய அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்புமணியை நேரடியாக விமர்சித்தால், அது அந்த சமுதாய மக்களிடையே ஒருவித அனுதாப அலையை உருவாக்கி, அவரது வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தக்கூடும் என தவெக நினைக்கிறது. எனவே, அன்புமணி ராமதாஸின் பெயரை எங்கும் குறிப்பிடாமல், பாமகவின் வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் மெல்ல மெல்லக் கரைப்பதுதான் தவெகவின் தற்போதைய திட்டமாக உள்ளது.

சமீபத்தில் கரூர் மற்றும் டெல்லிக்குச் சென்று திரும்பிய முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நேரில் சென்று புதிய திட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொடர் நடவடிக்கைகள் மற்றும் புதிய வியூகங்கள் மூலம், வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வட மாவட்டங்களை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் களமிறங்கியுள்ளனர்.

தவெகவின் இந்த 'ஆபரேஷன் நார்த்' பாமகவின் கோட்டையைத் தகர்க்குமா அல்லது வட மாவட்ட அரசியல் களம் வேறு திருப்பத்தைக் காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வன்னியர் சமுதாயத்தின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தவெக தனது தேசிய அளவிலான லட்சியத்தை நோக்கி முன்னேற முடியுமா என்பதே இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல்டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய...
08/06/2026

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல்

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 23 கட்சிகள் பங்கேற்றன. ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

விஜய்யின் தவெக பங்கேற்கவில்லை
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியைத் தழுவியது. 59 இடங்கள் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதோடு இனி வரும் தேர்தல்களில் விஜய்யின் தவெகவோடு கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறியது.

இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்த நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தையும் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூட்டத்தை புறக்கணித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்வது என்ன?
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. தவெகவிற்கு இந்தியா கூட்டணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் கூட்டம் வரும் நாட்களில் நடைபெறும் போது தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் கடந்த மாதம் பதவியேற்ற பிறகு முதல் பயணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் யாரையும் சந்திக்காமல் தமிழ்நாடு திரும்பினார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வரும் 11-ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆலோசித்தது என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் முறியடித்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மூலம் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையை பெற முடியும் என பாஜக கருதுவதால் மீண்டும் மசோதாவை தாக்கல் செய்வது பற்றி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "இதுவரை நாம் வெளிப்படுத்தியுள்ள ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி, முன்னேற வேண்டும். மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பல்வேறு சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர் காரணமாக கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது" என்றார்.

வாத்தி கம்மிங் ஒத்து! விஜய்- பிரக்ஞானந்தா ஒன் டூ ஒன் செஸ்! முதல்வருக்கே செக் வைத்த கிராண்ட் மாஸ்டர் நார்வே செஸ் தொடரில் ...
08/06/2026

வாத்தி கம்மிங் ஒத்து! விஜய்- பிரக்ஞானந்தா ஒன் டூ ஒன் செஸ்! முதல்வருக்கே செக் வைத்த கிராண்ட் மாஸ்டர்

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடினார். அப்போது அங்கிருந்த ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் மூவ்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தார்.

நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆவார். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா , நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பதக்கங்களை வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞாநந்தா அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (ELITE) கீழ் ஆண்டுதோறும் 30 இலட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அரசு, விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.

அதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் "ஹோம் ஆஃப் செஸ்" என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது.

இந்த அகாடமியின் மூலம் முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அளவிலான அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல் போன்றவை வழங்கப்படுகிறது.

அத்துடன், மனவளப் பயிற்சி, முறையான திட்டமிடல் மற்றும் வீரர்களின் முழுமையான அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி அனைத்து வயதினரையும், குறிப்பாக இளம் வீரர்களை ஊக்குவித்து, சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் போன்ற உயரிய சதுரங்கப் பட்டங்களைப் பெற வழிவகை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது முதல்வர் விஜய், பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார். இதுகுறித்து பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. நார்வேயில் சாம்பியன் பெற்றதற்காக எனக்கு, தமிழக அரசு சார்பில் ரூ 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் என்னுடன் செஸ் விளையாடினார். அவரிடமும் நான் வெற்றி பெற்றேன் என தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர் விஜய்.. ரூ.50 லட்சம் பரிசு புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் செஸ் வ...
08/06/2026

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர் விஜய்.. ரூ.50 லட்சம் பரிசு

புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்த இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன், வின்சென்ட் கெய்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்து கவனம் ஈர்த்தார்.

இந்த மகத்தான சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று சந்தித்த இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது வாழ்த்துகளைப் பெற்றார். முதல்வர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இணைந்து செஸ் விளையாடினர். வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 50 லட்சத்தை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.

இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?நடந்து முடிந்த 2026 ச...
08/06/2026

இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத பெரும் தோல்வி, கட்சியின் அடித்தளத்தையே குலைத்துப் போட்டுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பின்னடைவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அசுர வேக எழுச்சியும் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியின் உள் நிர்வாகச் சீர்கேடுகள், உள்ளடி வேலைகள் குறித்த பல்வேறு 'கள ஆய்வறிக்கைகள்' ஸ்டாலினின் மேசைக்கு வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், தற்போதைய சூழலில் மு.க.ஸ்டாலின் எந்தவொரு மாவட்டச் செயலாளர் அல்லது மூத்த நிர்வாகியின் அறிக்கையையும் குருட்டுத்தனமாக நம்பத் தயாராக இல்லை என்பதே அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் ஹாட் நியூஸ். தேர்தலுக்கு முன்பாக உளவுத்துறை கொடுத்த அறிக்கைகளும், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனுப்பிய "அனைத்தும் சுபம்" என்ற வெற்று உறுதிமொழிகளுமே இந்தப் பெரும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பதை ஸ்டாலின் தாமதமாக உணர்ந்துள்ளார்.

இதனால், தற்போது லோக்கல் தலைவர்கள் தரும் தோல்விக்கான காரணங்களை அவர் அப்படியே ஏற்பதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வரும் அறிக்கைகளை தனது தனிப்பட்ட டீம் மற்றும் விங் மூலமாக இரண்டு முதல் மூன்று முறை தீர விசாரித்து 'கிராஸ் செக்' செய்கிறார். அடிமட்டத் தொண்டர்களிடம் நேரடியாக போன் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் உண்மை நிலவரங்கள் மூலமாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மேல் தலைவர்கள் கொடுத்த அறிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன.

இந்த மறுஆய்வின் போது பல மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தோல்வியை மறைக்க பொய் கணக்குகள் எழுதியிருப்பதும், கூட்டணிக் கட்சிகள் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சித்ததும் அம்பலமாகியுள்ளது. இதனால் கடுப்பான ஸ்டாலின், சமீபத்திய ஆலோசனைக் கூட்டங்களில் கட்சி கேடர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இனிமேல் முகம் பார்த்துப் பல்லிளிக்கும் அரசியல் செல்லாது. களத்தில் வேலை செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் பதவிகள் பறிக்கப்படும்" என மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார் முன்னாள் முதல்வர். இந்தக் கோபம் அறிவாலயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமைக்கு கீழ்மட்ட நிர்வாகிகள் அனுப்பிய அறிக்கைகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தாலும், ஸ்டாலினின் தனிப்பட்ட விசாரணையில் பல முக்கியக் காரணங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதிமுக மற்றும் தவெகவிற்கு -இடையிலான வாக்கு மாற்றம், திமுகவிற்கு எதிரான அலை, TVK-வின் டிஜிட்டல் பிரச்சார உத்திகளை உள்ளூர் திமுகவினர் சரியாக மதிப்பிடத் தவறியது ஆகியவை முக்கியப் பின்னடைவுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலரது தொகுதிப் பக்கம் தலைகாட்டாத போக்கும், மக்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதும், பூத் கமிட்டி நிர்வாகிகளின் மெத்தனப்போக்கும் தோல்விக்கு வழிவகுத்தன. இவை அனைத்தும் முன்பு 'ஆல் இஸ் வெல்' என தவறாக அறிக்கையிடப்பட்டிருந்தன.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, தவெக அரசுக்கு எதிரான அரசியல் நகர்வுகளைத் திட்டமிடும் வேளையில், கட்சியின் உள் கட்டமைப்பைச் சீரமைப்பதே முதல் வேலை என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

பொய் அறிக்கை கொடுத்தவர்கள், தேர்தல் நிதியைச் சரியாகப் பயன்படுத்தாதவர்கள் என பட்டியல் தயாராகி வருகிறது. இனி யாரையும் நம்பப் போவதில்லை; நேரடியாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் என்ற ஸ்டாலினின் இந்தப் புதிய 'அக்ரசிவ்' முகம், அறிவாலயத்தில் உள்ள பல "பெரிய தலைகளை" தற்போதே நடுங்க வைத்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் திமுகவில் அதிரடியான மாற்றங்கள், பொறுப்புகள் பறிக்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் பின்னடைவு திமுகவுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட ஏற்பட்ட தோல்வி, கட்சியின் தலைமைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினின் இந்த உறுதியான நடவடிக்கைகள், திமுகவை மீண்டும் பலப்படுத்துமா அல்லது உள் பூசல்களை அதிகரிக்குமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Address

Anna Nagar West
Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil:

Share