அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் Arts & Entertainment தமிழ் செய்தி, விசேட செய்தி,இந்திய,இலங்கை செய்தி, உலகச் செய்தி...

தர்மம் செய்தால் மகிழ்ச்சி கிடைக்குமா?இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத...
25/01/2025

தர்மம் செய்தால் மகிழ்ச்சி கிடைக்குமா?
இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர்மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான்.

இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,

கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:

" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;

நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.

'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;

"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு

கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,

"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;

" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;

ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;

செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு

தினம் தினம் உளறிட்டுப் போறானே'

என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.

'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்!

நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,

கொலை வெறியாக மாறியது!

ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என

மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;

கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், ச்சே...நாம் ஏன் இப்படியாகணும்னு

அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு

வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;

இட்லியை எடுத்துக் கொண்டு,

வழக்கம்போல,

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;

நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "

என்று சொல்லிக் கொண்டே சென்றான்!

அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;

வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது

என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;

தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;

மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;

நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;

மயங்கி விழுந்துட்டேன்;

கண் முழிச்சு பாத்தப்போ...

யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்

என்னை தூக்கி உட்கார வச்சு

ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!

இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...

அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'

என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்

நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
..கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!

உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம்கோணாத தர்மமே.

18/01/2025
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவைகள்...1. 🌴ஆண் பனை2. 🌴பெண் பனை3. 🌴கூந்தப்பனை4. 🌴தாளிப்பனை5. 🌴குமுதிப்பனை6.🌴சா...
01/01/2025

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
அவைகள்...

1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவுப் பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்

கட்டிடப்பொருட்கள் :

🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள் √

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க...
28/12/2024

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*

*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*

*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*

*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*

*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி,பால் பண்னை பாக்கி,மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கி என எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*

படித்தேன் ரசித்தேன் 👍

2007                      2012                    2025Years May Change But Aura Of Thala Never Change !!🔥🔥🔥🔥
18/12/2024

2007 2012 2025

Years May Change But Aura Of Thala Never Change !!🔥🔥🔥🔥

வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி விரக்தி-சரவணன் (ஜீவி)ஆனா பிடிச்ச படிப்பு படிக்க முடியல, பிடிச்ச வேலை கிடைக்கல, பணக...
01/12/2024

வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி விரக்தி

-சரவணன் (ஜீவி)

ஆனா பிடிச்ச படிப்பு படிக்க முடியல, பிடிச்ச வேலை கிடைக்கல, பணக்கஷ்டம், பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமையல அப்டி இப்படின்ட்டு ஒவ்வொருத்தரும் நம்ம எல்லாருக்கும் வாழ்க்கை மீது ஒரு தீராத விரக்தி இருக்கு..

யாராச்சும் வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு..? ன்னு கேட்டா,
Simply Waste..
ஏதோ பொறந்துட்டேன் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்..
Tired but alive ன்ற சொல்ல முடியாத பதிலோட தான் இங்க பாதி பேரு வாழ்ந்துட்டு இருக்கோம்..

Life la எதுக்கும் ஆசப்படாத..
Just with the flow அப்படி இருந்தா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் ன்னு சொல்லுவாங்க..

அதையும் நம்மால முழுசா ஏத்துக்க முடியாது..
ஆசைப்படாத வாழ்க்கை
என்ன வாழ்க்கை..?!

செத்த மீனு தான் ஆத்தோட நீரோட்டத்துல அடிச்சிட்டு போகும்..உயிரோடு இருக்க மீனெல்லாம் ஆத்து நீரோட்டத்திற்கு எதிராத் தான் துள்ளி குதிக்கும்..

ஆசைப்பட்டது ஆசைப்பட்ட நேரத்தில் கிடைத்தால் மட்டுமே
நாம் அந்த மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியும்..

இன்று படிக்க ஆசை இருக்கிறது பணம் இல்லை.. ஆனால் பத்து வருடம் கழித்து பணம் இருக்கும் பொழுது படிக்க ஆர்வ நேரமும் இருப்பதில்லை.. அப்போது கனவை முழுமையாக கொண்டாட முடிவதில்லை வாழ்வின் மீதான விரக்தியே மேலோங்கி நிற்கும்..

ஒரு சில நேரம் ஆசைப்பட்டது கிடைக்காம போகலாம் அப்போதெல்லாம் ஒரு வெறுப்புணர்வு தான் உண்டாகும்..
ஆனா ஆசைப்பட்டது எதுவுமே நடக்காத போது தான் வாழ்க்கையின் மீதான வெறுப்பு அதிகமாகி விரக்தியாக மாறுது..

எல்லா ஆசையும் பெருசாவே இருக்க வேணாமே..!!
வீடு வாங்கினா தான் சந்தோஷமா இருப்பேன்..Ok அது ஆச தான்.. ஆனா வீடு வாங்குற வரைக்கும் சோகமா இருக்க கூடாது..

சின்ன சின்னதாவும் கொஞ்சம் ஆசப்படுவோம்..
நாளைக்கு College friends a Meet பண்ண போறோம்..
Saturday தியேட்டருக்கு போக போறோம்..
Sunday நமக்கு புடிச்ச ஹோட்டல்ல சாப்பிட போறேன்..
அடுத்த மாசம் பசங்களோட Trip போறோம்..
இப்படி சின்ன சின்னதா அப்பப்ப நடக்கிற Happiness a சேர்த்து வச்சசு விரக்திய கொஞ்சம் குறைச்சுக்கலாம்.

அடுத்த சில நாட்களில் நிச்சயமாக நிகழும் விஷயங்களை நமக்கு நாமே பரிசாக அளித்துக்கொண்டால் விரக்தியின் மீதான வலி கொஞ்சம் குறையும்..

அன்பை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாறும் பொழுது வாழ்வின் மீது விரக்தி ஏற்படுகிறது..
அன்பை விதைத்துக் கொண்டே இருப்போம்.. என்றோ ஒரு நாள் பேரன்பின் பூமரமாக உலகம் நம் மீது பூச்சொறியும்..

அடுத்த நொடி நிகழும் ஆச்சரியங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளாத வரை வாழ்க்கை அவ்வளவு எளிதாக சலித்து விடுவதில்லை..✨

28/11/2024
🔥🔥🔥
27/11/2024

🔥🔥🔥

27/11/2024

ஒருமுறை இந்த பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள் கண்கள் கலங்கும்😰

🙏🙏🙏
30/10/2024

🙏🙏🙏

Sree Kandha Sashti Kavasam Jukeboxகந்த சஷ்டி கவசம் | Kanda Sashti KavachamKanda sasti kavasam is a song composed by Devaraya Swamigal. It is a rare and valua...

ஒரு பனை ஓலைக் குடிசை... உள்ளே நான்கைந்து சட்டி பானை...வெளியே ஒரு விசுவாசமான நாய்...பால் கறக்கும் ஒரு பசுமாடு.... இரண்டு ...
30/10/2024

ஒரு பனை ஓலைக் குடிசை... உள்ளே நான்கைந்து சட்டி பானை...

வெளியே ஒரு விசுவாசமான நாய்...

பால் கறக்கும் ஒரு பசுமாடு....

இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...

இரண்டு மண்வெட்டி...

பத்து ஆடுகள்....

ஒரு சேவல்...

ஐந்து கோழி... 30 குஞ்சுகள்.

இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....

சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்...

தென்னை மரத்தடியில்
ஒரு முருங்கை மரத்தோடு,
ஒரு கருவேப்பிலை மரமும்...

பக்கத்தில் பத்து வாழைமரம்...

அடுத்து ஒரு புளியமரம்...

பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்...

விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்...

மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்...

மீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும் சோளமும் கேழ்வரகும்... தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும். இவை மட்டுமே போதும்...

எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.....

உலகின் ஆகச்சிறந்த
தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்....

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அழகிய தமிழ் மகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share