Kowsalya Tamizhachi

Kowsalya Tamizhachi அரசியல்,சினிமா,விளையாட்டு மற்றும் ஆன்மீக தகவல்கள்

சகோதர பாசத்தின் சின்ன-பெரிய வரலாறு: சின்ன தம்பி பெரிய தம்பி படப்பயணம்!தமிழ் சினிமாவில் சகோதர பாசத்தையும், குடும்ப பிணைப்...
27/04/2025

சகோதர பாசத்தின் சின்ன-பெரிய வரலாறு: சின்ன தம்பி பெரிய தம்பி படப்பயணம்!

தமிழ் சினிமாவில் சகோதர பாசத்தையும், குடும்ப பிணைப்புகளையும் அழகாகச் சொல்லிய படங்களில் "சின்ன தம்பி பெரிய தம்பி" (1987) ஒரு முக்கியமான இடத்தை பிடித்தது. இயக்குநர் மணிவண்ணன் இத்திரைப்படத்தை இயக்கி, பெரும் வரவேற்பைப் பெற்றார்.

படம் உருவான விதம்:

"சின்ன தம்பி பெரிய தம்பி" திரைப்படம், குடும்ப பாசத்தின் மீதான நம்பிக்கையையும், இரு சகோதரர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி மோதல்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் பிரபு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

கிராமத்து பின்னணியில் அவர்கள் வாழும் சூழல், குடும்ப உறவுகள், சண்டைகள் மற்றும் பாசம் ஆகியவை இயல்பாகக் காட்டப்பட்டது. மணிவண்ணன் தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலவையுடன் இப்படத்தை உருவாக்கினார்.

சுவாரசிய சம்பவம்:

இத்திரைப்படத்திற்கு மணிவண்ணன் இசை அமைப்பதற்காக சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்தார். குறிப்பிடத்தக்கது, "இளமை காலங்களில்" என்ற பாடலை முன்பே எழுதப்பட்ட ஒரு மெலடியை சிறு மாறுபாடுகளுடன் மாற்றி பயன்படுத்தியிருக்கிறார் என்ற ஒரு சுவாரசிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. ஒரு காதல் என்பது என்ற அந்த பாடலை மட்டும் இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சத்யராஜ் மற்றும் பிரபு இருவரும் தங்களது நடிப்பாற்றலை கொண்டு இப்படத்தை சிறப்பித்தனர். இருவரின் நட்பு, பாசம், சண்டை ஆகிய அனைத்தும் நன்கு வெளிப்பட்டது. இவர்கள் இருவரும் உள்ளந்தோன்றலாக நடித்ததாலும், படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தொழில்நுட்பம் மற்றும் சிறப்புகள்:

இசை அமைப்பு: சங்கர் கணேஷ்.

திரைக்கதை மற்றும் இயக்கம்: மணிவண்ணன்.

நடிப்பு: சத்யராஜ் மற்றும் பிரபுவின் கலந்த நடிப்பு பாராட்டப்பட்டது.

உணர்ச்சி மற்றும் நகைச்சுவை கலவையில் சிறந்த படம்.

"சின்ன தம்பி பெரிய தம்பி" திரைப்படம் இன்று வரை சகோதர பாசத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. தம்பி தம்பி இடையே நிலவும் பாசத்தை உணர்த்தும் அழகிய முயற்சியாக இத்திரைப்படம் என்றும் நினைவுகூரப்படும்.

உயிரிலே கலந்தது – காதலையும், தாய்மையையும் வாழ்த்தும் திரைப்படம்!சூர்யா - ஜோதிகா ஜோடியின் உணர்ச்சி கனிந்த படைப்பு"உயிரிலே...
26/04/2025

உயிரிலே கலந்தது – காதலையும், தாய்மையையும் வாழ்த்தும் திரைப்படம்!

சூர்யா - ஜோதிகா ஜோடியின் உணர்ச்சி கனிந்த படைப்பு

"உயிரிலே கலந்தது" 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் கே.ஆர். ஜெயா மற்றும் தயாரிப்பாளர் எம்.ஏ. சிவகுமார். இத்திரைப்படம் காதல், தாய் மகன் பாச உறவு மற்றும் சகோதர அன்பு ஆகியவற்றின் நுட்பமான உணர்வுகளை அழகாக சித்தரிக்கிறது.

கதைக்குறிப்பு:

திரைப்படத்தில், சூர்யா "சுரேஷ்" என்ற கதாபாத்திரத்தில் தன் தாயுடன் கொண்ட பாசத்தின் முக்கியத்துவத்தையும், தனது காதலான ஜோதிகாவைத் (ப்ரியா) எதிர்த்து தன் குடும்ப பாசத்திற்கும் இடையில் ஏற்பட்ட மனஅழுத்தங்களையும் வெளிப்படுத்துகிறார். ரகுவரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்க, அவரது சிறந்த நடிப்பும் பாராட்டுப் பெற்றது.

கதை சுருக்கமாக:

தாயின் ஆசைகள்,

மகனின் காதல் வாழ்க்கை,

குடும்பத்தில் உருவாகும் நுணுக்கமான மோதல்கள் இவை அனைத்தையும் உணர்ச்சி பூர்வமாக காட்சிப்படுத்துகிறது.

முக்கிய நடிகர்கள்:

சூர்யா – சுரேஷ்

ஜோதிகா – ப்ரியா

சின்னி ஜெயந்த், ரகுவரன், ராம்ஜி, சிவகுமார், வையாபுரி ஆகியோரும் சிறப்பான விருந்தினராக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பாடல்கள்:

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா. பாடல்களின் வரிகளை வைரமுத்து, கலைக்குமார் மற்றும் கே. சுபாஷ் எழுதினர். ஒவ்வொரு பாடலும் கதையின் நகர்வுடன் அமைந்துள்ளன.

பிரபலமான பாடல்கள்:

"சாய்ந்தாடு கண்ணே" – எஸ்.பி.பி

"உயிரே உயிரே அழைத்ததென்ன" – ஹரிஹரன், சுஜாதா

"தேவ தேவ தேவதையே" – ஹரிஹரன், ஹரினி

"Husaine Husaine" – சுக்விந்தர் சிங்

இந்த பாடல்கள் காதல் உணர்வை வலுப்படுத்தி, கதையின் ஓட்டத்தை முன்னேற்றுகின்றன.

விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு:

திரைப்படம் வெளிவந்த போது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தேவாவின் இசை மிகுந்த பாராட்டை பெற்றது. குடும்பப் பாங்கான மற்றும் காதல் கதைகள் விரும்பும் மக்களுக்கு இது மிகவும் பிடித்த படமாக அமைந்தது.

சிறப்பு அம்சங்கள்:

தாய்-மகன் பாசத்தின் உணர்ச்சி மூடிய காட்சி அமைப்புகள்

காதலின் அன்பும் குடும்பத்தின் பாசமும் இடையே நிகழும் குழப்பங்கள்

தேவாவின் மனம் கொள்ளை கொள்ளும் இசை

சூர்யா - ஜோதிகா ஜோடியின் ஆரம்ப கால இணைவு

மெல்ல பேசும் காதல்…! – ‘சின்ன பூவே மெல்ல பேசு’ தமிழ் சினிமாவின் மென்மையான காதல் கவிதைகளில் ஒன்று “சின்ன பூவே மெல்ல பேசு”...
25/04/2025

மெல்ல பேசும் காதல்…! – ‘சின்ன பூவே மெல்ல பேசு’

தமிழ் சினிமாவின் மென்மையான காதல் கவிதைகளில் ஒன்று “சின்ன பூவே மெல்ல பேசு”. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் உருவானது.

இத்திரைப்படத்தில் பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் இசையமைப்பாளராக எஸ் ஏ ராஜ்குமார் மற்றும் கதாநாயகன் ராம்கி அறிமுகமானவர்கள். நடிகை நர்மதாவும் இப்படத்தில் அறிமுகம்.

இளமையின் இரு பக்கங்கள் – கதைசுருக்கம்:

இந்த திரைப்படம், இரண்டு இளைய காதலர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காதலில் ஏற்படும் மாறுபாடுகள், குறைபாடுகள் மற்றும் சமூகக் கோணங்களை அழுத்தமாக சித்தரிக்கிறது.

பிரபு ஒரு மென்மையான காதலன். அவனது நட்பு, கண்ணியம், உணர்ச்சி என்பவை ரசிகர்களின் மனதில் உறைந்துபோனவை. மற்றொரு புறம், ராம்கி ஒரு எழுச்சியான இளைஞர். இரண்டு காதல் கோணங்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழப்பமான சூழ்நிலை – இதுதான் இந்தக் கதையின் களம். காதலின் உண்மை அர்த்தம் என்ன? வெறும் ஆசையா? அல்லது உறுதியா? என்பதை திரைப்படம் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

இசை

எஸ்.ஏ ராஜ்குமார் இசை இந்த திரைப்படத்திற்கே ஒரு தனி உயிர் கொடுத்தது. "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற தலைப்பு பாடல் மட்டுமல்ல, “காதல் ஒரு பூவா…?”, “வானம்பாடி பாடுது...” போன்ற பாடல்கள், இன்றும் காதலர்களின் பிளேலிஸ்ட்களில் இடம்பிடித்திருக்கின்றன.

பிரபுவின் நிஜமான காதலன் முகம்:

இப்படத்தில் பிரபு மிக அழகாக ஒரு காதலனாக நடித்துள்ளார். அவரது பார்வை, மென்மையான நடிப்பு, உணர்ச்சி நிறைந்த உரையாடல்கள், அவரை அந்தக் காலத்தில் ரொமான்ஸ் ஹீரோக்களுள் முக்கிய இடத்திற்கு எடுத்துச் சென்றது.

ராம்கியின் நவீன காதலனான கவர்ச்சி:

இப்படத்தில் ராம்கி கொஞ்சம் அட்டகாசமாகவும், கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகவும் நடித்தார். புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், காதலின் வேறுபட்ட பார்வையை அவர் நன்றாகப் பதிவு செய்தார்.

முடிவில்...

“சின்ன பூவே மெல்ல பேசு” என்பது, காதலைச் சொல்லுவதற்கான ஒரு மென்மையான உரை. சண்டை சத்தம் இல்லாத, உணர்வும் இசையும் கலந்த ஒரு இயற்கை கலை. தமிழில் காதல் படம் என்றாலே, இது முதலில் சொல்லப்பட வேண்டிய பெயர்தான்.

சிம்பு ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஏனென்றால் சிம்புவை, சிறுவயதில் இருந்து பார்த்து ...
24/04/2025

சிம்பு ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஏனென்றால் சிம்புவை, சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்த மக்கள், அவர் ஹீரோவாக வந்த பிறகு பேசும் அதிகப்படியான பஞ்ச் டயலாக்குகள் இது போன்றவற்றை வயதுக்கு மீறிய தன்மையாக பார்த்தனர். அவரின் ஒரே மாதிரியான குத்துப்பாட்டு கொண்ட படங்கள், கவர்ச்சி அதிகம் கொண்ட படங்கள் இந்த ஃபார்முலா எல்லாம் சிம்பு படத்தில் தொடர்ந்து இருந்தது, இதெல்லாம் அவர் ரசிகர்களை மட்டும் தான் கவர்ந்திருந்தது மக்களை கவரவில்லை.

சிம்புவை அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் நடிகராக மாற்றியது இயக்குனர் ஹரிதான் அவர் இயக்கிய கோவில் திரைப்படத்தில் தான் சிம்புவை எல்லோருக்கும் பிடித்த ஒரு நாயகராக அவர் மாற்றினார் அதன் பிறகு தான் சிம்பு எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகரானார்.

கடந்த 1967 வெளியான திரைப்படம் பட்டணத்தில் பூதம். என். வி ராமன் என்பவர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், ஒரு பழமையான விளக...
22/04/2025

கடந்த 1967 வெளியான திரைப்படம் பட்டணத்தில் பூதம். என். வி ராமன் என்பவர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், ஒரு பழமையான விளக்கை தேய்த்தவுடன் பூதம் வந்து, இரண்டு இளைஞர்களுக்கு உதவி செய்யும் கதை தான் இது.

திருப்பதி லட்டு நேரில் வருவது, தியேட்டரில் ஓடும் திருவிளையாடல் படத்தை படத்தை பேப்பர் விளம்பரத்தில் பார்ப்பது, என வித்தியாசமான மேஜிக் காட்சிகள் இப்படத்தில் இருந்தன இதுபோல காட்சிகளை அந்த காலத்தில் வடிவமைத்து இருந்தார் ரவிகாந்த் நிகாய்ச்.

மாயாஜாலம் கலந்த ஒரு திரைப்படம் இந்த திரைப்படம். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் அனைவருக்குமே பிடித்திருந்தது.

ஆர் கோவர்த்தனம் இசையமைப்பில் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, உலகத்தில் சிறந்தது எது, போன்ற பாடல்கள் புகழ்பெற்றது.

ஜெய்சங்கர் கே ஆர் விஜயா,நாகேஷ் ஜாவர் சீதாராமன் ,ஆகியோர் நடித்து இருந்தனர். ஜாவர் சீதாராமன் பூதம் வேடத்தில் அழகாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியான நாளில் எம்ஜிஆர், எம் ஆர் ராதாவால், சுடப்பட்டிருந்தார். அதனால் சில கலவர சூழல்கள் தமிழ்நாட்டில் இருந்தது அதையும் மீறி இப்படம் நன்றாக ஓடியது.

அர்ஜுன் நடிப்பில் செல்வா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணா. 1995 ஏப்ரல் 14 தமிழ் வருட பிறப்பிற்கு இப்படம் வெளிவந்தது...
22/04/2025

அர்ஜுன் நடிப்பில் செல்வா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணா. 1995 ஏப்ரல் 14 தமிழ் வருட பிறப்பிற்கு இப்படம் வெளிவந்தது.

கதாநாயகன் அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒருவர் சின்ன மாற்றுத்திறனாளி போல் நடித்திருந்தார். ஒருவருக்கு ஜோடி வினிதா ஒருவருக்கு ஜோடி ரஞ்சிதா.

இப்படத்தில் இடம்பெற்ற ஹலோ மிஸ் செல்லம்மா மலரே மௌனமா, கண்ணிலே கண்ணிலே சன் டிவி, ஹே சபா ஏசப்பா போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்கள் படத்தின் பாடல்கள் வித்யாசாகர் இசையமைத்திருந்தார் அர்ஜுனின் கதை இது.

ஸ்டன்ட் காட்சிகளில் பிரமாதமாக அர்ஜுன் நடித்த ஒரு பைக் சண்டை காட்சியில்

இப்படத்தின் ஸ்டண்ட் கலைஞரை சாகுல்,ஜாக்கிஜான் படத்தின் சண்டைக்காட்சி போல ஒரு பைக் சண்டைக்காட்சி உருவாக்க விரும்பினார்.தயாரிப்பாளர் அதற்கு தயங்கினார். ஆனால் அர்ஜுன் அதை ஏற்றுக்கொண்டு அந்த காட்சியில் சிறப்பாக நடித்தார். இந்த காட்சியை ஒரே டேக்கில் சண்டை பயிற்சியாளர் சாகுல் முடித்தார்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து 100 நாட்கள் ஓடிய திரைப்படமாகும்.

விஜயகாந்த் படத்துக்கு வந்த சோதனை… சூப்பர்ஹிட்டாக்க இளையராஜா செய்த மேஜிக்!கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு அருமைய...
16/04/2025

விஜயகாந்த் படத்துக்கு வந்த சோதனை… சூப்பர்ஹிட்டாக்க இளையராஜா செய்த மேஜிக்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு அருமையான படம் பூந்தோட்ட காவல்காரன். படத்துக்குப் புது இயக்குனர் செந்தில்நாதன். படம் தயார். ஆனால் புது இயக்குனர் என்பதால் விநியோகஸ்தர் யாரும் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அன்று திருச்சி விநியோகஸ்தராக இருந்தவர் அடைக்கலராஜ் எம்பி. அவர் மட்டுமே ராவுத்தரிடம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.

படத்தின் முதல் காப்பி ரீரெக்கார்டிங்குக்காக இளையராஜாவிடம் போகிறது. படத்தை அவரோடு சேர்ந்து இயக்குனர் கோகுலகிருஷ்ணாவும் பார்த்துள்ளார். படம் சோலி முடிஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. கோகுலகிருஷ்ணாவோ சும்மா இருக்காமல் அடைக்கலராஜூக்குப் போன் போட்டு படம் சரியில்லன்னு சொல்லிவிட்டார்.

அவரும் ராவுத்தரிடம் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பி வாங்கிவிட்டார். விஜயகாந்துக்கோ கடும் கோபம். அவர் இளையராஜாவிடம் ஏன் கண்ட ஆள்களை எல்லாம் வச்சிக்கிட்டுப் படம் பார்க்கிறீங்கன்னு கேட்டுள்ளார். அப்புறம் ரீரெக்கார்டிங்கும் வேண்டாம்னு படத்தை ஓரம்கட்டுறாங்க.

செந்தில்நாதனும் மனம் உடைந்து விஜயகாந்தை சந்திக்காமலே வீட்டிலேயே இருந்துவிட்டார். திரும்பவும் அவர் தன் குருநாதர் எஸ்ஏசியிடம் போய் அசிஸ்டண்டாக சேர்ந்து விட்டார்.

இளையராஜா இதை எல்லாம் அறிந்து கொண்டார். பின்னர் ஒருநாள் ராவுத்தரிடம் பிரிண்டைக் கொண்டு வரச் சொல்கிறார். அப்போது படம் இளையராஜாவின் இன்னிசையோடு தயாரானது. படம் பட்டையைக் கிளப்புகிறது. செந்தில் நாதன் மட்டும் விநியோகஸ்தர் ஷோவைப் பார்க்கிறார். விஜயகாந்த், ராவுத்தர் ஆப்சண்ட். ஆனாலும் அடைக்கலராஜ் ஆள்களும் பார்க்கிறார்கள்.

செந்தில்நாதனை அழைத்துப் பாராட்டுகிறார்கள். செம படம்யான்னு சொல்றாங்க. அதுக்குப் பிறகு ராவுத்தர், விஜயகாந்த் இருவரும் நம்பவே இல்லை. அப்புறம் அவர்களுக்கும் போட்டுக் காட்டுறாங்க. விஜயகாந்த் செந்தில்நாதனை அழைத்துப் பாராட்டி அவருக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்து மனைவியுடன் தமிழ்நாடு முழுக்கப் போய் படத்தை மக்கள் ரசிக்கிறதைப் பாருங்கன்னு சொல்கிறார்.

செலவுக்கான பணத்தையும் கொடுக்கிறார். படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இசையும், பாடல்களும்தான். ஒரு படத்தை வெற்றிக்குக் கொண்டு போகணும்னா அதுக்கு முக்கிய காரணம் இசை தான். ராமராஜன், ஆர்.சுந்தரராஜன், மோகன், ராஜ்கிரண் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றன என்றால் அதுக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் இசைதான்.

பாடகர் மலேசியா வாசுதேவன் எண்ணற்ற பாடல்களை தமிழ் சினிமாவில் பாடி, என்றும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிற...
13/04/2025

பாடகர் மலேசியா வாசுதேவன் எண்ணற்ற பாடல்களை தமிழ் சினிமாவில் பாடி, என்றும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். மெலடி பாடல்கள் குத்து பாடல்கள் என எந்த பாடல்கள் இவர் பாடினாலும் அது கலக்கல் ரகம் தான்.

16 வயதினிலே படத்தின் மூலம்தான் இவர் பாடகராக ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு ரஜினிகாந்துக்காக எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். அதில் முதன்முதலில் தர்மயுத்தம் படத்தில் வரும் ஆகாய கங்கை என்ற பாடல் தான் முதன் முதலில் ரஜினிக்காக இவர் பாடினாராம். பாடல்கள் என்பது நீண்ட நாள் நிலைத்திருக்க வேண்டும் அதற்கேற்ற வகையில் அந்த மெட்டு இருக்க வேண்டும் அதுதான் மெலடி என இவர் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இவரை பாடகராகத்தான் பலருக்கு தெரியும்.ஒரு கட்டத்தில் இவர் நடிகராகவும் வர ஆரம்பித்தார். கொலுசு என்ற படத்தில் இவர் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இசையமைத்துக் கொண்டிருந்தபோது அப்பட இயக்குனர் கே எஸ் மாதங்கள் என்பவர் படத்தின் வில்லன் கேரக்டருக்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீர்கள் நீங்கள் நடியுங்கள் என மலேசியா வாசுதேவனை நடிக்க வைத்திருக்கிறார். அதைப் பார்த்து இயக்குனர் பாரதிராஜா என்னையா நீ நடிக்கலாம் செய்ற போல, எனக் கேட்டாராம்.

ஆமா நடிக்க தான் செய்கிறேன் நீ எதுவும் சான்ஸ் தரப் போறியா என்ன? என பாரதிராஜாவிடம் மலேசியா வாசுதேவன் கேட்டாராம், ஆமாய்யா என்று சொல்லி தான் ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தாராம் பாரதிராஜா.

அதன் பிறகு ஊரை தெரிஞ்சுகிட்டேன் கதாநாயகன், என எண்ணற்ற படங்களில் மலேசியா வாசுதேவன் வில்லனாக நடித்துள்ளார்.மற்றும் குணச்சித்திர வே டங்களிலும் நடித்துள்ளார்.

இந்த மன்சூர் அலிகானும் சும்மா இருக்க மாட்டார். இயக்குனர் வேலு பிரபாகரனும் என்றும் சும்மா இருக்க மாட்டார், வேலு பிரபாகரன்...
12/04/2025

இந்த மன்சூர் அலிகானும் சும்மா இருக்க மாட்டார். இயக்குனர் வேலு பிரபாகரனும் என்றும் சும்மா இருக்க மாட்டார்,

வேலு பிரபாகரன் 90களில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆனால் 2000 க்கு பிறகு அவர் எடுத்த படங்கள் எல்லாம் ஒரு மாதிரியான பாலியல் ரீதியான படங்களாக மட்டுமே அதிகம் இருந்திருக்கிறது.

தன்னை சினிமா ஃபீல்டில் இன்னும் ஸ்ட்ராங் ஆக இருப்பதாக அதிகம் நிரூபித்துக் கொள்ள இது போல படங்களை தொடர்ந்து அவர் எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இதுபோல மன்சூர் அலிகான் ஏதாவது ஒரு படத்தை இயக்கிக் கொண்டு வெளியிட்டுக் கொண்டே இருப்பார், இந்த இருவரும் இப்போது ஒன்று சேர்ந்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது இருவரும் இணைந்து உள்ளனர். மன்சூர் அலிகான், வேலு பிரபாகரன் இயக்கும் யார் அந்த சார் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை என்று தனது கேரியரி...
12/04/2025

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை என்று தனது கேரியரில் அடுத்தடுத்த படிகளை அடைந்துவந்த நடிகர் விஜய்க்கு மீண்டும் ஒரு ‘குடும்பப்பாங்கான’ படமாக அமைந்தது ‘நினைத்தேன் வந்தாய்’.

1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

விஜய்க்கு அப்போதிருந்த மார்க்கெட்டை மேலும் ஒரு படி முன்னகர்த்தியதில் இதற்கும் ஒரு பங்குண்டு.

தெலுங்கு ரீமேக்!

‘காதலுக்கு மரியாதை’ படத்திற்குப் பிறகு, விஜய் நடித்த ரீமேக் படமிது. தெலுங்கில் கே. ராகவேந்திரராவ் இயக்கிய ‘பெல்லி சந்ததி’, 1996இல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

‘வாரிசு’வில் விஜய்யின் அண்ணனாக நடித்த ஸ்ரீகாந்த் இதில் நாயகன். ரவளி, தீப்தி பட்நாகர் அவரது ஜோடியாக நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்தார்.

மூத்த இயக்குநரான ராகவேந்திரராவ் பெரிய நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படங்களை இயக்கிவந்த நேரத்தில், ‘சின்னதாக ஒரு படம் பண்ணலாமே’ என்ற முடிவுடன் தந்த படம் இது.

இப்படத்தின் வெற்றி தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘ரீமேக்’ ஆனது.

தெலுங்கில் இப்படத்தை நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தன.

தமிழில் இயக்குநர் ராகவேந்திரராவ் பேனரில் இதனைத் தயாரித்தார் அல்லு அரவிந்த். இவர் தமிழில் மாப்பிள்ளை, டார்லிங் உட்பட 4 படங்களைத் தந்திருக்கிறார்.

தமிழில் இப்படத்தை ஆக்குவதென்று முடிவு செய்தபோது, இதனை இயக்கும் பொறுப்பு கே.செல்வபாரதிக்கு வழங்கப்பட்டது. அப்போது இயக்குநர் சுந்தர்.சியிடம் அவர் இணை இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அறிமுகமாக இப்படம் வழி வகுத்தது.

இளம்பெண் ஒருவரைக் காதலிக்கும் ஒரு இளைஞர், அவரது மூத்த சகோதரியைப் பெண் பார்க்கச் செல்வதுதான் இப்படத்தின் மையக்கரு.

பெண் பார்க்கப் போன இடத்தில் மூத்தவர் தான் மணப்பெண் என்று தெரியாமல் அந்த இளைஞர் ‘ஓகே’ சொல்ல, அதன்பிறகு தனது சகோதரி மனதில் காதலன் இருப்பதை அறிந்து அந்த இளம்பெண் என்ன செய்தார் என்று திரைக்கதை நகரும்.

முழுக்க ‘ட்ராமா’ வகைமையில் அமைந்த இந்தக் கதையை காமெடி, பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று பொழுதுபோக்காக நகர்த்தியிருந்தது ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

சிறப்பான உள்ளடக்கம்!

விஜய்க்கு ஜோடியாக ரம்பாவும் தேவயானியும் நடித்திருந்தது வித்தியாசமான ‘காம்போ’வாக அப்போது பார்க்கப்பட்டது.

பின்னாட்களில் ‘மின்சார கண்ணா’, ‘என்றென்றும் காதல்’ படங்களில் ரம்பாவும், ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் தேவயானியும் விஜய்யின் ஜோடியாக நடித்தனர்.

‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் வெற்றிக்கு அதன் காட்சியாக்கமும் ஒரு காரணம். ’வண்ண நிலவே’ பாடலை இப்போது பார்த்தாலும் ‘அழகு’ கொஞ்சும். இத்தனைக்கும் ரம்பாவின் கால்ஷீட் கிடைக்காமல் ‘டூப்’பாக இன்னொருவரை வைத்து படம்பிடிக்கப்பட்ட பாடல் அது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இளவரசு. அனைத்து வண்ணங்களையும் தொடர்ந்து பிரேம்களில் பார்க்கிற உணர்வை உருவாக்குவது அவரது பாணி.

அதற்காக, பிலிம் புராசஸிங்கில் சில பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

அவர் பணியாற்றிய பாஞ்சாலங்குறிச்சி, பெரியதம்பி, இனியவளே, மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட படங்களிலும் இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் மிகப்பெரிய ‘ப்ளஸ்’ ஆக அதன் பாடல்கள் அமைந்தன.

‘உனை நினைத்து நான் எனை மறப்பது’, ‘பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா’, ‘உன் மார்பில் விழி மூடி’ பாடல்கள் ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் இருந்தது அப்படியே இதில் பயன்படுத்தப்பட்டன.

அவற்றில் கீரவாணியின் ‘டச்’ தெரியும். இதில் ‘உனை நினைத்து’ பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

அதேநேரத்தில் ‘என்னவளே என்னவளே’, ‘மல்லிகையே மல்லிகையே’, ‘வண்ண நிலவே வண்ண நிலவே’ பாடல்களை ‘மெலடி’யாக குழைத்திருந்தார் தேனிசைத் தென்றல் தேவா.

அந்தப் பாடல்களின் முதல் வரியில் ‘அடுக்குத் தொடர்’ வரும்படியாக சொற்களைக் கோர்த்து ரசிகர்கள் திரும்பத் திரும்ப முனுமுனுக்கும்படி செய்திருந்தார் பாடலாசிரியர் பழனிபாரதி.

‘மனிஷா மனிஷா போல் சிரிப்பாளா’ பாடலை இயக்குநர் செல்வபாரதியே எழுதியிருந்தார்.

’தேவ’ கானங்கள் என்று வரிசைப்படுத்தும் படங்களில் ஒன்றாக, ‘நினைத்தேன் வந்தாய்’ இசையமைப்பாளர் தேவாவுக்கு அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெறுவது சாதாரணம். அவை ரசிகர்களை குஷிப்படுத்துகிற வகையில் அமைந்துவிட்டால், அதுவே படத்தின் வெற்றிக்கு வித்திட்டுவிடும்.

அந்த வகையில் கல்லூரி இளைஞர், இளைஞிகள் கொண்டாடுகிற பாடல்களைக் கொண்டிருந்தது இப்படம். அதுவே ‘ரிப்பீட்’ ஆடியன்ஸ் வர வழி வகுத்தது.

இந்தப் படத்தில் ஆரம்பக் கட்டத்தில் கவுண்டமணி நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால், அவர் இதில் இடம்பெறவில்லை. மணிவண்ணன் நடித்த பாத்திரம் கிட்டத்தட்ட அவருக்காக வார்த்தது போல் தென்படுகிறது.

செந்தில், ஆர்.சுந்தர்ராஜன் வரும் காட்சிகளும் கொஞ்சமாய் சிரிப்பூட்டும். இதில் அல்வா வாசு, சார்லி இருவரும் நாயகன் விஜய்யின் மச்சான்களாக நடித்திருந்தனர்.

பசி நாராயணன், ஜோக்கர் துளசி சேர்ந்து வந்து ‘காபி சாப்பிட்டீங்களாண்ணா.. டிபன் சாப்பிட்டீங்களாண்ணா..’ என்ற வசனம் பின்னாட்களில் இப்படத்தின் அடையாளங்களில் ஒன்றானது.

இன்றும் கூட, விசேஷ வீடுகளில் சம்பந்தமில்லாமல் யாராவது சிலர் சாப்பாட்டுக்கூடம் பக்கம் நடமாடினால் இந்த வசனத்தை வைத்துக் கிண்டலடிக்கிற வழக்கம் இருக்கிறது.

அடுத்தடுத்து பாடல்கள், நகைச்சுவை, வசனக் காட்சிகள் என்று படம் நகர்ந்து சட்டென்று ‘கிளைமேக்ஸ்’ நோக்கி பாய்வது இப்படத்தின் சிறப்பாக இருந்தது.

இப்படி பொழுதுபோக்கு அம்சங்களை நிறைத்திருந்ததால் வெற்றிப்படமாக மாறிய ‘நினைத்தேன் வந்தாய்’, இருபத்தேழு ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் சில ரசிகர்கள் மனதில் ‘பசுமையான நினைவுகளை’ எழுப்பக்கூடியதாக உள்ளது.

80களில் வில்லனாக நடித்து அறிமுகமான சத்யராஜ், பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். அடுத்தட...
11/04/2025

80களில் வில்லனாக நடித்து அறிமுகமான சத்யராஜ், பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு, பூவிழி வாசலிலே, பாலைவன ரோஜாக்கள் என சத்யராஜ் ஜெயித்த பிறகு, அவரை இன்னும் மெருகேற்றியவர் யார் என்றால் ராமநாதன் தான்.

ராமநாதன் சத்யராஜிடம் நீண்ட வருடங்கள் மேனேஜராக பணியாற்றியவர். 90களில் வந்த சத்யராஜின் படங்கள் பெரும்பாலும் இவர் தயாரித்தவைதான். ராமநாதனின் வாத்தியார் வீட்டு பிள்ளை, ராமநாதனின் உடன் பிறப்பு, இப்படித்தான் படத்தின் டைட்டிலே வரும். ராஜ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் என்ற பெயரில் எண்ணற்ற சத்யராஜ் படங்களை தயாரித்த இவர் சத்யராஜின் மேனேஜராகவும் இருந்து புகழ்பெற்றவர்.

புகழ்பெற்ற ராமநாதன் இவ்வளவு படங்கள் எடுத்தும் புகழ்பெற்ற ஒரு நடிகருக்கு மேனேஜராக இருந்தும், இவரின் அனுபவ பேட்டிகளோ, செய்திகளோ இவ்வளவு நாள் வரை பெரும்பாலும் எந்த ஊடகங்களும் வெளியிட்டதாக தெரியவில்லை. மிக பெரிய தயாரிப்பாளரான இவர் நேற்று காலமான பிறகுதான் லைம் லைட்டில் வருகிறார்.

தமிழில் வந்த சிறந்த ஹிந்தி பாடலில்   நண்டு திரைப்படத்தில் இடம்பெற்ற கே  ச கு கூன் என்ற பாடல் மிகச் சிறப்பு வாய்ந்தது. என...
07/04/2025

தமிழில் வந்த சிறந்த ஹிந்தி பாடலில் நண்டு திரைப்படத்தில் இடம்பெற்ற கே ச கு கூன் என்ற பாடல் மிகச் சிறப்பு வாய்ந்தது.

என்னடா இது தமிழில் வந்த ஹிந்தி பாடல் என்று குழப்புகிறானே என்று புலம்ப வேண்டாம், இது மகேந்திரன் இயக்கத்தில் வந்த நண்டு திரைப்படத்தில் இடம் பெற்ற ஹிந்தி பாடல்.

இப்பாடலை எழுதியவர் மறைந்த பாடகர் இசையமைப்பாளர் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்கள்.

இப்பாடலை ஹிந்தி பாடகர் புபிந்தர் சிங் மற்றும் தமிழ் பாடகி ஜானகி அம்மா இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

இப்பாடல் கேட்பதற்கே அவ்வளவு பிரமாதமாக இருந்தது. பாடலை இசைஞானி இளையராஜா அழகாக கம்போஸ் செய்திருந்தார்.

மேலும் அந்தக் கால அழகான நடிகையான அஸ்வினியும், படத்தின் நாயகன் சுரேஷும் இணைந்து இப்பாடலில் கலக்கியிருந்தனர் இப்பாடல் நம்மைக் கவரும் வகையில் இப்பாடலில் மிக அழகாக ஒளிப்பதிவு செய்திருந்தார் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார் அவர்கள். மொத்தத்தில் மகேந்திரன், இளையராஜா,புபிந்தர் சிங், பிபி ஸ்ரீனிவாஸ், ஜானகி,அசோக்குமார், மற்றும் பலரும் சேர்ந்து கலந்து கட்டிய அழகான கலவை தான் இந்த பாடல்.

காயத்ரி - 1977     சற்றும் எதிர்பார்க்கவில்லை அந்த காலத்தில் இப்படி‌ ஒரு படம் எடுத்து வைத்து இருப்பார்கள் என்று. எழுத்தா...
07/04/2025

காயத்ரி - 1977

சற்றும் எதிர்பார்க்கவில்லை அந்த காலத்தில் இப்படி‌ ஒரு படம் எடுத்து வைத்து இருப்பார்கள் என்று. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை முதன் முதலில் திரைப்படமாக எடுத்த சம்பவம். ஹீரோ ஜெய்சங்கர், இடைவேளைக்கு பின் தான் வருகிறார். வில்லன் ரஜினிகாந்த் படம் முழுவதும் இருக்கிறார். வாட்ச்மேனை அறைந்து விட்டு, பின்பு அவருக்கு cigratte கொடுக்கும் அந்த ஒரு காட்சியே போதும் அவர்‌ எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதற்கு..

கதை என்ன தெரியுமா... பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வந்து , அவர்களை ஜலாபுலா ஜங் செய்து , அவர்களுக்கு தெரியாமல் blue film எடுத்து , அதை விற்பது தான் ரஜினியின் வேலை . அப்படி ரஜினியிடம் மாட்டியவர் தான் காயதிரி( sridevi). அந்த வீட்டில் ஏதோ மர்மமாக நடக்கின்றது‌ என்று ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார். ஆனால் வெளியே சொல்ல முடியவில்லை..‌காரணம் house arrest. பின்பு‌ தென்னகத்து jamesbond எங்கள் அண்ணன் jaishankar வந்து என்ன செய்கிறார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

அந்த காலத்துல சும்மா இல்லாமா..‌என்ன‌ என்னமோ subject எல்லாம் கையில் எடுத்து இருக்காங்க.. இப்போ கதை இல்லாமா .. அகத்தியானு ஒரு உப்புமா வேறு...

இசைஞானி இளையராஜா காதலிச்சு இருக்கிறாரா இப்படி ஒரு கேள்வி, ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவரிடம் கேட்கப்பட்டது, என்னுடைய க...
06/04/2025

இசைஞானி இளையராஜா காதலிச்சு இருக்கிறாரா இப்படி ஒரு கேள்வி, ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவரிடம் கேட்கப்பட்டது, என்னுடைய காதல் லைலா தான் என்று இசைஞானி குறிப்பிட்டார் அதாவது அமர காதல் காவிய நாயகர்களான லைலா மஜ்னுவை தான் அவர் அப்படி குறிப்பிடுகிறார்.

அந்தக் காலத்தில் சி.ஆர் சுப்பராமன் அவர்களின் இசையில் வந்த,லைலா மஜ்னு படத்தை பார்க்க வேண்டும் என அவரும் அவரது அண்ணன் ஆர் டி பாஸ்கரும் சென்றார்களாம் , அந்தப் படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள்.அதில் மஜ்னு பள்ளியில் சிலேட்டில் லைலா லைலா லைலா என்று எழுதுவாராம், அந்தப் படத்தின் மீது இருந்த தாக்கத்திலும் அந்த படத்தில் வந்த பாடல்களின் மீது இருந்த தாக்கத்திலும் அந்த காட்சி இசை ஞானி மனதில் இருந்து கொண்டே இருந்ததாம் , அடுத்த நாள் ஸ்கூலில் வந்து டிக்டேஷன் போடும்போது ஸ்லேட்டில் லைலா லைலா லைலா என்ற எழுதினாராம், இதை பார்த்து அவருக்கு ஆசிரியரிடம் அடி விழுந்ததாம் இதை நகைச்சுவையாக அதை சொல்லி இருக்கிறார். லைலா மீது தான் எனக்கு காதல் என இளையராஜா சொல்லி இருக்கிறார்.

1988ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து சுமாராக போன படம் பூவிழி ராஜா. பிரபு நாயகனாக நடிக்க உடன் ராம்கியும் நடித்திருந்தார்....
05/04/2025

1988ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து சுமாராக போன படம் பூவிழி ராஜா. பிரபு நாயகனாக நடிக்க உடன் ராம்கியும் நடித்திருந்தார். நிஷாந்தி நாயகியாக நடித்திருந்தார்.

யுவராஜ் என்பவர் இசையமைத்து இருந்தார். பாடல்கள் ஓரளவு கேட்கும் ரகத்தில் இருந்தன.

பிரபுவின் குடும்ப நண்பரும் இயக்குனருமான சந்தானபாரதி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரபு கண் தெரியாதவர் போன்ற தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஜுனியர் மார்க்கண்டேயன் ராம்கியின் நடிப்பில் பார்க்க வேண்டிய 5 படங்கள்.. காசுக்காக கணவனையே வித்த 'இரட்டை ரோஜா' எவ்வளவு வய...
04/04/2025

ஜுனியர் மார்க்கண்டேயன் ராம்கியின் நடிப்பில் பார்க்க வேண்டிய 5 படங்கள்.. காசுக்காக கணவனையே வித்த 'இரட்டை ரோஜா'

எவ்வளவு வயதானாலும் இளமையுடன் இருப்பவர்களை தான் மார்க்கண்டேயன் என்று சொல்வார்கள். தமிழ் சினிமாவின் இதற்கு முன் அந்த பெயரை வாங்கியவர் நடிகர் சிவகுமார்.

தற்போது அந்தப் பெயருக்கு அர்த்தம் நடிகர் ராம்கி இருக்கிறார். 62 வயதிலும் 30 வயது இளைஞன் போல் தோற்றம் அவருக்கு இருக்கிறது.

ராம்கி ஹீரோவாக கலக்கிய இந்த ஐந்து படங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

ராம்கியின் நடிப்பில் பார்க்க வேண்டிய 5 படங்கள்

செந்தூர பூவே: 1988 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே படத்தின் மூலம் தான் ராம்கிக்கு பெண் ரசிகைகள் அதிகமானார்கள்.

விஜயகாந்த் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இந்த படம் அந்த காலத்திலேயே ரெண்டரை கோடி வசூலித்தது. மேலும் ராம்கி- நிரோஷா ஜோடி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

மருது பாண்டி: ஹீரோக்கள் ஊர்க்காவலன் கேரக்டரில் நடிக்கும் படங்கள் ஒரு காலகட்டத்தில் அதிகமாக ரிலீஸ் ஆகியது.

அப்படி ஒரு கதை களத்தில் ராம்கி ஜெயித்த படம் தான் மருது பாண்டி. இந்த படத்தில் அவருக்கு நிரோஷா மற்றும் சீதா ஜோடியாக நடித்திருப்பார்கள்.

இரட்டை ரோஜா: இரட்டை ரோஜா படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு எந்த நடிகருக்குமே ஒரு துணிச்சல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

குஷ்பூ மற்றும் ஊர்வசியை படத்தின் ஹீரோ என்று கூட சொல்லலாம். இவர்களது அசாத்திய நடிப்பிற்கு இடையே ராம்கி தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மாயா பஜார்: ராம்கி மற்றும் ஊர்வசியின் அடிப்படையில் வெளியான ஃபேண்டஸி திரைப்படம் தான் மாயாபஜார். இந்த படத்தில் ராம்கி ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு கேரக்டரிலுமே நடித்து அசத்தியிருப்பார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி: விஸ்வநாதன் ராமமூர்த்தி படம் நல்ல ஒரு பீல் குட் மூவி. இந்த படத்தில் விவேக் மற்றும் கோவை சரளாவுக்கு இணையாக காமெடியில் கலக்கி இருப்பார் ராம்கி. நான் பெற்ற மகனே படத்திற்குப் பிறகு ராம்கி மற்றும் விவேக் கெமிஸ்ட்ரியில் இந்த படம் பட்டையை கிளப்பியது.

இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்தவர் மோகன். நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் மோகனுக்கு ஒரு பிரேக் க...
04/04/2025

இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்தவர் மோகன். நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் மோகனுக்கு ஒரு பிரேக் கொடுத்த ஒரு அழகான திரைப்படம்.

சமீபத்தில் இயக்குனர் மகேந்திரன் பற்றிய ஒரு விழாவில் இயக்குனர் மகேந்திரனை பற்றி மோகன் பேசுகிறார். அதில் மகேந்திரன் சார் போல ஒரு இயக்குனரை பார்ப்பது கடினம். ஹீரோவுக்காகவே அவர் ஸ்பெஷலாக கதை எழுதுவார் உதாரணமாக உதிரிப்பூக்கள் படத்தில் விஜயன் அவர்களின் கதாபாத்திரம், ஜானி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம்,இப்படி ஒவ்வொரு படத்திலும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை மிக அழகாக எழுதி இருப்பார். அவரைப் போல இயக்குனர் படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.

அவர் ஒரு மாஸ்டர் செஃப் மாதிரி, ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சுவையான சமையலை சமைக்கும் ஒரு மாஸ்டர் செஃப் போல அவர் மிக அழகாக படங்களை இயக்கினார் என மகேந்திரன் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார் மோகன்.

1990ம் ஆண்டு வெளிவந்த எதிர்காற்று திரைப்படத்தை முக்தா ரவி இயக்கி இருந்தார். அதர்மமே தொடர்ந்து வெல்லும் நிலையில் அதர்மத்த...
04/04/2025

1990ம் ஆண்டு வெளிவந்த எதிர்காற்று திரைப்படத்தை முக்தா ரவி இயக்கி இருந்தார். அதர்மமே தொடர்ந்து வெல்லும் நிலையில் அதர்மத்தை அழிக்க ஒரு இளைஞன் என்ன என்ன முயற்சிகள் எடுத்து இன்னல்களுக்கு உள்ளாகிறான் என்பதை இப்படம் விவரித்திருந்தது.

இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும், படத்தில் இடம்பெறாத அருண்மொழி, உமாரமணன் பாடி இருந்த ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான் என்ற பாடலை எத்தனை பேர்க்கு பிடிக்கும்?

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowsalya Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share