Tamilnadu Press And Media Reporters Union State vice president

  • Home
  • India
  • Chennai
  • Tamilnadu Press And Media Reporters Union State vice president

Tamilnadu Press And Media Reporters Union State vice president நீ வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்..

நவம்பர் மாதம் 2ம் தேதி கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.. இரவு 08.06 மணி வரை பிரதமை திதியும் உள்ளது. அதனால் கந்த சஷ்டி விரத...
02/11/2024

நவம்பர் மாதம் 2ம் தேதி கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.. இரவு 08.06 மணி வரை பிரதமை திதியும் உள்ளது. அதனால் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், விடிகாலையிலேயே குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து உங்களின் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
வழிபாடு முறை: முருகன் படங்களை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.. வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியமாக காய்ச்சிய பால், தேன் கலந்து வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.

குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம்... கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக மிக விசேஷம் என்பார்கள்.. இந்த நேரத்தில், தம்பதி இருவருமே விரதம் கடைப்பிடித்தால், குழந்தை பலன் கிடைக்கும் என்பார்கள்.. பக்தர்கள் விரதத்தின்போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, திருப்புகழ் உள்ளிட்டவைகளை படிப்பது போன்றவற்றை செய்யலாம்.

பால் பழங்கள்: விரதம் இருப்பவர்கள் வீட்டிலும் இருக்கலாம்.. முருகர் கோயிலும் இருக்கலாம்.. வேலைக்கும் சென்று அலுவலகத்தில் இருக்கலாம்.. சிலர் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள், சிலர் பால்பழம் மட்டும் சாப்பிடுவார்கள்.
இந்த 6 நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடிக்கலாம், அப்படி முடியாதபட்சத்தில், ஒருமுறை வீதம் 6 மிளகையும் 6 கை நீரையும் குடிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், உப்பு நீர், எலுமிச்சம் சாறு, நார்த்தம்பழச்சாறு, இளநீர் போன்றவற்றை சஷ்டி விரதம் இருப்பவர்கள் குடிக்கக்கூடாது.

மஞ்சள் கயிறு: காப்பு கட்டுபவர்களும், சூரிய உதயத்திற்கு முன்பாகவே காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பித்துவிட வேண்டும். காப்பு கட்டி விரதம் இருப்பவர்கள் மஞ்சள் தடவிய நூலில், விரலி மஞ்சள் வைத்து கைகளில் கட்டிக்கொள்ளலாம். அல்லது வெறும் மஞ்சள் கயிறும் மட்டும் கட்டிக்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். பெரியவர்களிடம் இந்த கயிறு கொடுத்து கைகளில் கட்டிக் கொண்டால், ஆசீர்வாதம் பெருகும். காலை, மாலை என 2 வேளையும் குளித்து விட்டு முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும்..

மருந்து மாத்திரைகளை எடுப்பவர்களாக இருந்தால், விரதம் மேற்கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.. பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இந்த விரதத்தை தவிர்க்கலாம்.. மாதவிடாய் இருப்பவர்கள், பூஜையறைக்குள் செல்லாமல், விரதம் இருக்கலாம்..
அதேபோல, விரதம் மேற்கொள்பவர்கள், பகல் நேரத்தில் தூங்கக் கூடாது... முடிந்தவரை பேச்சை குறைத்து, அமைதியுடன் முருக சிந்தனையில் இருப்பது நல்லது. அல்லது ஓம் சரவண பவா என்று ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதி கொண்டே இருக்கலாம். 7 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பது மிகமிக சிறப்பு.

பலன்கள்: குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்கவில்லை, எதிரிகள் தொல்லையால் இன்னலுக்கு ஆளாகுபவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம்.

15/10/2024
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோட...
25/01/2024

கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள், தமது திரைப்பட வாழ்வில் பெரும்புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக விளங்கியவர். மக்கள் நலனை மையமாகக் கொண்ட தமது அணுகுமுறையால், தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்திய நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டது போல, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சமூக நெறிகளின் மொத்த உருவமாக, அனைவருக்கும் ஒரு உண்மையான கேப்டனாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருது, மிகப் பொருத்தமானது.

தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியன் அன்பு அண்ணன் தலைவர் திரு.திவான் மைதீன் தலமையில் மாநில துணை தலைவர் வளசை விஜ...
17/12/2023

தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியன் அன்பு அண்ணன் தலைவர் திரு.திவான் மைதீன் தலமையில் மாநில துணை தலைவர் வளசை விஜய் அவர்களின் முன்னிலையில் தலைமையில் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு இனிதே நடைபெற்ற நமது யூனியனின்
வெள்ளி விழா 25 வது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து மலர் வெளியிட்டு

உயர்திரு நீதியரசர்
பெ.ர. சிவக்குமார் அவர்கள்.
சென்னை உயர்நிதிமன்ற மேனாள் நீதிபதி.
தலைவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்.

உயர்திரு. நீதியரசர் S.F.அக்பர் அவர்கள்.
மேனாள் மாநில தகவல் ஆணையர் சென்னை

உயர்திரு.நீதியரசர் துரை ஜெயசந்திரன் அவர்கள்.
மேனாள் மாநில மனித உரிமைகள் ஆணையம்

மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Address

Valasaravakkam
Chennai
600087

Telephone

+919884870004

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Press And Media Reporters Union State vice president posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Press And Media Reporters Union State vice president:

Share