Chidambaram 608001

Chidambaram 608001 Devotional Place.Annamalai University.Pichavaram
(3)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத...
11/09/2025

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.09.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது தீட்சிதர்கள் தரப்பில் வாதிடுகையில், “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்யத் தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் , அரசியல் சாசன பதவி வகிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து சமய அறநிலையத் துறை வழக்கறிஞர், “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது அதனை பொது தீட்சிதர்கள் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள். எனவே கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அளித்த உத்தரவைத் தீட்சிதர்கள் உத்தரவை மாற்ற முடியாது” என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது தொடர்பாக ஒரு எழுத்துப்பூர்வமான மனுவாகத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை மீண்டும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், ஒரு பக்தர் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வை...
10/09/2025

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், ஒரு பக்தர் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் பதித்த தங்க குஞ்சிதபாதத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். ஆனந்த பிரபஞ்ச நடன கோலத்தில் இடது காலை தூக்கியபடி வீற்றிருக்கும் நடராஜப் பெருமானின்
திருவடிக்கு இந்த விலைமதிப்பற்ற அன்பளிப்பு மகாபிஷேகத்தன்று பொருத்தப்பட்டது.

சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தளம் உள்ளிட்ட ஆன்மீக தலங...
09/09/2025

சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தளம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும், சுற்றுலா மையங்களும் நிறைந்த ஒரு நகரமாக திகழ்ந்து வருகிறது.

இதனால் சிதம்பரம் பகுதிக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோயில் நகரமான சிதம்பரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தனியார் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிக அளவில் பணம் கொடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.

அதேபோல குறிப்பிட்ட திருவிழா நாட்களி ன் போதும் நகர் பகுதியில் வெளி மாநில பொதுமக்கள் போதிய தங்கு இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிதம்பரம் ரயில்வே பீடர் சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த சுற்றுலா இல்லத்தில் 24 தங்கும் அறைகள், கலையரங்கம், உணவருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பளிங்கு கற்கள் பதிப்பது, சுற்றுச்சுவர் கட்டுமான பணி, பெயிண்டிங் வேலை மற்றும் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை மழை காலம் வருவதற்குள் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


08/09/2025

கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த கிரிம்சன் ஆர்கானிக் ரசாயன தொழிற்சாலையில் இரண்டு நாட்களுக்கு முன் கேஸ்கட் வெடி...
07/09/2025

கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த கிரிம்சன் ஆர்கானிக் ரசாயன தொழிற்சாலையில் இரண்டு நாட்களுக்கு முன் கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டது.
அதில் இருந்து ரசாயனப் பொருள் வெளியேறியதால் மொத்தம் 93 பேர் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரசாயன தொழிற்சாலையை மூட அரசுத் துறைகள் உத்தரவிட்டுள்ளன.

சிதம்பரம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் காரில் இருந்த 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் (Ambergris) பறிமுதல் செய்துள்ளனர். இத...
06/09/2025

சிதம்பரம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் காரில் இருந்த 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் (Ambergris) பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ₹7.5 கோடி.

இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ 3,5 லட்சத்திற்கு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  அந்த காருக்கு ரூ 2,5 லட்சம் கொடுத்துள்ளார்.  மீதி ஒரு லட்சம் கேட்கும் போது ராஜசேகர் விலை உயர்ந்த திமிங்கலம் எச்சம் அவரிடம் இருப்பதாகவும் அதற்கு பதில் இதனை தருகிறேன்.  இது பல கோடி மதிப்பிலானது என கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மொத்தம் 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் கைபற்றப்பட்டுள்ளது.  இது ரூ 7.5 மதிப்புள்ளது என கூறப்படுகிறது.
மேலும் இந்த திமிங்கலம் எச்சம் உண்மையானதா? என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தான் தெரிய வரும்.  கடலூர் மாவட்டத்தில் கஞ்சா லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சம்பவத்தில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார். இவருடன் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் உடன் இருந்தனர்.

06/09/2025

Car Festival 2025Credis 🐘studio
01/07/2025

Car Festival 2025
Credis 🐘studio

Theruvadachan
27/06/2025

Theruvadachan

ஆனித் திருமஞ்சனம்கொடியேற்றம் 23.06.2025🚩01.07.25 தேர் திருவிழா 🛕02.07.25 தரிசனம்🕎🎏       💙
23/06/2025

ஆனித் திருமஞ்சனம்
கொடியேற்றம் 23.06.2025🚩
01.07.25 தேர் திருவிழா 🛕
02.07.25 தரிசனம்🕎🎏
💙

20/05/2024

                 💙
28/01/2024

💙

Address

Chidambaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chidambaram 608001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chidambaram 608001:

Share