Chinnasalem

Chinnasalem This page is details about Chinnasalem.

26/03/2025

இப்படியும் Out பண்ணலாம் போல 🤔

*சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு**_விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு வெளி ...
19/03/2025

*சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு*

*_விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது_*

கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஆண்டுதோறும் 2500 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்ப டுகிறது. குறிப்பாக சின்ன சேலம் தாலுகா பகுதியில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்ப டும் கிழங்கு மஞ்சள், விரலி மஞ்சள்களை விவசாயிகள் ஈரோடு, சேலம், நாமக் கல் மாவட்டங்களுக்கும், அருகில் உள்ள ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போக்குவ ரத்து செலவு, காலவிரயம்போன்றவை ஏற்படுகிறது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மஞ்சள் ஏலம் நடை பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இங்கு நடை பெறும் மஞ்சள் ஏலத்தில் ஈரோடு, சேலம் பகுதியை சேர்ந்த மஞ்சள் கொள்மு தல் செய்யும் வியாபாரிகள் கலந்துகொள்ளவும் ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 24.03.2025 அன்று திங்கள்முதல் வாரந் தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்த விவசா யிகள் அறுவடை செய்து பதப்படுத்தப்பட்ட மஞ்சள் களை சின்னசேலம் மார்க்
கெட் கமிட்டிக்கு வாரத்தோறும் திங்கட்கிழமை கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு அதிகபட்ச விலைக்கு விற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் விப ரங்களுக்கு வட்டார உதவி தோட்டக்கலை இயக்குநர், வேளாண் வணிக அலுவ லர், சின்னசேலம் மார்க் கெட் கமிட்டி கண்காணிப் பாளரை (8925902926 செல் எண்) தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் மஞ்சள் கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டத்தினை கள்ளக்கு றிச்சி மற்றும் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் விரிவுபடுத் தப்படும் என்று மாவட்ட விற்பனை குழு செயலர் சந்துரு தெரிவித்துள்ளார்...

24/02/2025
ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலைதமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செய...
03/02/2025

ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை
தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி அரசு துறையில் இணைய விரும்புபவர்களுக்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் அரசு பணியை தவிர தனியார் துறையில் இணைபவர்களுக்காகவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த நிலையில் 20ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு
அதன் படி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 14.12.2024 அன்று நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மழையின் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வேலைவாய்ப்பு முகாமானது 08.02.2025 சனிக்கிழமை அன்று மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (St.Anne's Arts and Science College) காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு.! இன்டர்வியூக்கு வந்தாலே கை மேலே வேலை - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 20,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் 20ஆயிரம் பேருக்கு வேலை
தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி அரசு துறையில் இணைய விரும்புபவர்களுக்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் அரசு பணியை தவிர தனியார் துறையில் இணைபவர்களுக்காகவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த நிலையில் 20ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு
அதன் படி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 14.12.2024 அன்று நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மழையின் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வேலைவாய்ப்பு முகாமானது 08.02.2025 சனிக்கிழமை அன்று மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (St.Anne's Arts and Science College) காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

கல்வி தகுதி என்ன.?
இம்முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள். ஐடிஐ தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

மேலும், இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
எனவே, இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அனுகியோ அல்லது https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற Google Link-யை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே. இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

District Employment and Career Guidance Centre, Guindy, Chennai - 32.

கள்ளக்குறிச்சி மாவட்ட இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு
23/12/2024

கள்ளக்குறிச்சி மாவட்ட இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
29/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! P Balamurugan, சுகன்யா ராஜ்குமார் விருமாண்டி தேவர், Vimal Sri, M Chennakumar M Chennakumar, M Dhaneshwar, Senthilrani Vivekanandan

14/11/2024

நாம் நலமுடன் வாழ

14/11/2024

#தெரிந்துகொள்வோம்

Address

Chinna Salem

Alerts

Be the first to know and let us send you an email when Chinnasalem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chinnasalem:

Share