Omsakthimagazine

Omsakthimagazine Heritage & Spiritual Based Monthly Magazine

இந்த நாள் இனிய நாள்...
13/09/2025

இந்த நாள் இனிய நாள்...

https://youtu.be/edVwVWRzb1s
10/09/2025

https://youtu.be/edVwVWRzb1s

This video is perfect for:✔️ Tamil language learners✔️ Students improving word power✔️ Quiz and puzzle lovers✔️ Anyone who enjoys testing their knowledge in ...

கடவுள் நம்மைத் தேடி வருவாரா?தன்னிடம் சீடனாக வந்து சேர விரும்பியவரிடம், குரு கேட்டார், "ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று ச...
10/09/2025

கடவுள் நம்மைத் தேடி வருவாரா?
தன்னிடம் சீடனாக வந்து சேர விரும்பியவரிடம், குரு கேட்டார், "ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?"
புதிய சீடன், "இறைவனை அறிவதும், அடைவதும்தான் ஆன்மிகத்தின் நோக்கம்..."
"அப்படியா?"
"என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?"
"சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?"
"இல்லை... ஆனால் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்."
"நல்லது. உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?"
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான். "நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது."
"எதனால் இந்தச் சந்தேகம் வருகிறது?"
"பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது."
"நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்... நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...?"
"ஆமாம் குருவே."
"உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?"
"ஆமாம் குருவே."
"அன்புள்ள சீடனே! நீ இறைவனை அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்..."
"மிகவும் மகிழ்ச்சி குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்."
"ஆனால், இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால், இறைவன் தானே உன்னை வந்து அடைவான்."
"இது குழப்பமாக இருக்கிறதே"
"ஒரு குழப்பமும் இல்லை... ஓர் அரசன் இருக்கிறான்... பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ, பேசுவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது."
"ஆம்."
"ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்... அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல் களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. உடனே, ராஜா தன் பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார்... பாராட்டுகிறார்.... பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?"
"நிச்சயமாக நடக்கும் குருவே."
"இப்போது ராஜாதான் இறைவன், நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவை நெருங்குவது கஷ்டம். ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்... அந்த ராஜாவே (இறைவனே) உள்னைப் பார்க்க வருவார். எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு, இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?"
"மிகவும் சரிதான் குருவே..."
"நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உன் வசப்படும். போய் வா..."

மாதவனின் மனத் தூய்மை!பரீட்சித்து உயிர் மூச்சில்லாத குழந்தையாகப் பிறந்த போது, பெண்கள் கதறி அழுது, கிருஷ்ண பகவானின் ஆசிகளை...
10/09/2025

மாதவனின் மனத் தூய்மை!
பரீட்சித்து உயிர் மூச்சில்லாத குழந்தையாகப் பிறந்த போது, பெண்கள் கதறி அழுது, கிருஷ்ண பகவானின் ஆசிகளை வேண்டினார்கள். அசுவத்தாமாவின் அம்புகளினால் பாதிக்கப்பட்டு அந்த நிலையை அடைந்து விட்ட அந்தக் குழந்தையை, கண்ணன் எப்படிக் காப்பாற்றப் போகிறான் என்று சுற்றிலும் சூழ்ந்து நின்ற முனிவர்கள் வியந்தார்கள். “இந்தக் குழந்தையை மனத்தாலும் இச்சைகளைக் கருதாத ஒரு நித்திய பிரம்மசாரி தொட்டால், குழந்தை உயிர் பெற்று விடும்” என்று கிருஷ்ண பகவான் சொன்னார். அவ்வளவு துறவிகள் இருந்தும் யாருக்கும் அப்படித் தொட்டுத் தம்மைச் சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளும் மனத்துணிவு வரவில்லை.
பகவான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “யாருமே தொட முன்வராததால் நானாவது தொட்டுப் பார்க்கிறேன். எப்படியாவது குழந்தைக்கு உயிர் கிடைத்தால் சரி!” என்று சொல்லி குழந்தையைத் தொட்டார். குழந்தை உயிர் பெற்று விட்டது!
கிருஷ்ண பகவான் பதினாயிரம் கோபிகைகளால் சூழப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மனத்தளவிலும் கூட அவருடைய தூய்மை கெடவில்லை என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம். ஜீவன்முக்தர்களுடைய மனப்பண்பை அவர்களுடைய வெளித் தோற்றத்தில் இருந்து நாம் மதிப்பிட முடியாது. ஞானிகளுடைய மதிப்பை அவர்களுடைய தோற்றத்தில் இருந்து கணிக்க முயற்சிப்பது பெரிய தவறாகும்.
#சிறுகதை #நீதிக்கதை #நீதிநெறிகள்

Address

180, Race Course Road, Race Course
Coimbatore
641018

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+914224322222

Alerts

Be the first to know and let us send you an email when Omsakthimagazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omsakthimagazine:

Share

Category