Garuda Pictures

Garuda Pictures History in filmy touch Here we help you to making short films . join our hands we make a difference in short films

the pupils who have real interest in film making and now trying to make short films , here we are for u ..

Book no:03/ year 2025இன்று பி.சி.கணேசன் அவர்கள் எழுதிய சிவ தாண்டவம் என்ற நாவலை வாசித்து முடித்தேன். இது 1995இல் கங்கை பு...
01/02/2025

Book no:03/ year 2025

இன்று பி.சி.கணேசன் அவர்கள் எழுதிய சிவ தாண்டவம் என்ற நாவலை வாசித்து முடித்தேன்.

இது 1995இல் கங்கை புத்தக நிலையம் மூலம் வெளிவந்த நாவல். இப்பொழுது நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான புத்தகமாக கருதுகிறேன். ஏனெனில் 1995இல் முதல் பதிப்பில் வந்த புத்தகம் இது. இன்று நாமோ 2025-ல் இருக்கிறோம். ஏறக்குறைய 30 ஆண்டுகள் பழைய புத்தகம்.

என்னடா புத்தகத்தை பத்தி பேசிட்டு இருக்க புத்தகத்தில் இருக்கிற கதைய பற்றி சொல்லு அப்படித்தானே கேக்குறீங்க. புத்தகம் வேண்டுமானால் 30 வருடம் பழைய புத்தகமாக இருக்கலாம். ஆனால் இதில் இருக்கக்கூடிய கதை இன்றும் என்றும் புதிதாகவும் சுவாரசியமாகவும் இளமையாகவும் இன்பமாகவும் இருக்கும்.

ஆனந்த தாண்டவ புறத்தின் ரயிலடியில் ஆரம்பிக்கும் கதை. ஒவ்வொரு ஊராக பயணித்து வெவ்வேறு மக்களை காட்டி இந்தியாவின் கடல் எல்லைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அதே ஆனந்த தாண்டவபுரத்தின் ரயிலடியில் நம்மை அழைத்து வந்து திருவேள்விக்குடியில் இருக்கக்கூடிய சிவன் கோயிலுக்குள் நம்மை ஐக்கியம் செய்துவிடும்.

அனைவருக்கும் பரீட்ச்சைய பட்ட ஒரு வரி கதை தான் இந்த 243 பக்க நாவல். ஆனால் 30 வருடம் கழித்து படிக்கக்கூடிய நமக்கு எந்த வகையிலும் கதையில் தொய்வோ அல்லது சுவாரஸ்யம் இன்மையோ இல்லாமல் அழகாக கதையை எடுத்துச் சென்றிருக்கிறார் எழுத்தாளர். தஞ்சாவூர் கும்பகோணம் மாயவரம் பம்பாய் லண்டன் கோவா என இதைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் கதையில் வரக்கூடிய அனைத்து கதாபாத்திரமும் நம் மனதில் உலகளாவி உலாவி வரும்.

இக்கதையில் ஏறக்குறைய 20 கதாபாத்திரங்கள் இருக்கிறது. கதை முழுக்க இந்த 20 கதாபாத்திரமும் செய்யக்கூடிய வேலைகளும் அதை பின் தொடர்ந்து நடக்கக்கூடிய நிகழ்வுகளும் அற்புதம். ஒரு திருட்டு, அந்த திருட்டை ஒட்டி நடக்கக்கூடிய சம்பவம் என அனைத்தையும் மாலையாக கோர்த்து நம் கரங்களுக்கு விலங்காக பூட்டி விடுகிறார் இந்த எழுத்தாளர். கதையைப் படித்து முடிக்கும் போது தான் கையில் பூட்டப்பட்ட விலங்கின் சாவி கிடைக்கும். அப்போதுதான் அந்தப் புத்தகத்தை நீங்கள் கீழே வைக்க இயலும்.

என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் கதை எழுதக்கூடிய அனைவரும் இந்த நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். கதை எழுதுபவர்கள் மட்டும் படித்தால் போதுமா என்று கேட்டீர்கள் எனில் இல்லை இல்லை இல்லை.... அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு கதையில் எப்பொழுதும் 2S இருக்க வேண்டும் ஒன்று Suspense மற்றொன்று Surprise. இது இரண்டுமே இந்தக் கதையில் இருக்கிறது. நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

-சிரா.

புத்தகத்தின் பெயர்: சிவதாண்டவம்
எழுத்தாளர்: பி.சி.கணேசன்
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 37/- ரூபாய்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #சிவதாண்டவம் #பி_சி_கணேசன் #கங்கைபுத்தகநிலையம்

Book no:02/ year 2025யானை இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு பேருயிர். யானையை பார்த்தாலே நாம் அனைவருக்கும் ஒரு ஆனந்தம் உள்ள எ...
15/01/2025

Book no:02/ year 2025

யானை இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு பேருயிர். யானையை பார்த்தாலே நாம் அனைவருக்கும் ஒரு ஆனந்தம் உள்ள எழத்தான் செய்யும்! முகம் மலரும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை "அங்க பார் யானை என்று நம்மை மீறி சொல்லி சந்தோஷப்படுவோம்".

அப்படிப்பட்ட அந்த பேருயிர், மனிதர்கள் மனிதர்களாக மாறிய பின் என்னென்ன துன்பங்கள் படுகிறது என்பதை பற்றி மிகத் தெளிவாக எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு.

சங்க இலக்கியத்தில் இருந்து சமகால தினசரி நாளிதழ் செய்தி வரை சேகரித்து அதில் யானைகளைப் பற்றி இருக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை நம் கையில் கொடுத்திருக்கிறார் இந்த எழுத்தாளர் "கோவை சதாசிவம்".

"எல்லா உயிர்களும் இன்பம் எய்துக" என்று பாரதி கூறியது போல், மனிதர்களால் இந்த உலகில் வாழ முடியவில்லை என்பது வருத்தம் தான். ஏனெனில் மனிதன் சக மனிதன் வாழ்ந்தாலே வசை பாடிக் கொண்டிருக்கக் கூடியவன். அவனா யானைகளைப் பற்றியும், சக உயிர்களைப் பற்றியும் சிந்திப்பான் என்று இந்த நூல் ஆசிரியர் ஒரு பத்தியில் மனம் நொந்து எழுதி இருக்கிறார்.

மனிதர்களிலும் அனைத்து உயிரையும் நேசிக்க கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் ஏதோ இயற்கை அடுத்த தலைமுறைக்காக மீதம் இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பணத்தை மட்டும் நேசிக்க கூடிய மனிதர்கள் அதிகம் இருப்பதால் யானைகளை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாக மாறி விடுவோமோ என்று எனக்கு பல நாள் பயம் எழும். அதே பயத்துடன் தான் இந்த கோவை சதாசிவம் அவர்களும் இந்த நூலை முடித்திருக்கிறார்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. நீங்கள் படிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று யோசிக்கச் சொல்லுங்கள். படித்த நீங்களும் யோசியுங்கள். "யானை யானையாக இருப்பதால்தான் நாம் மனிதத்தை மீறி வாழ முடிகிறது".

-சிரா.

புத்தகத்தின் பெயர்: ஆதியில் யானைகள் இருந்தன
எழுத்தாளர்: கோவை சதாசிவம்
பதிப்பாளர்: குறிஞ்சி பதிப்பகம்
விலை: 60/- ரூபாய்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #ஆதியில்யானைகள்இருந்தன #கோவைசதாசிவம் #குறிஞ்சிபதிப்பகம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.Happy pongal to all   #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம்        #சிரா      #மித்ரன்  ...
14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Happy pongal to all

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3

யாருமே யோசிக்காத அளவிற்க்கு ஆகச்சிறந்த மன வலிமையும், ஆட்சித்திரணும்  கொண்டவர்களே "பெண்கள்". அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் ஆள...
10/01/2025

யாருமே யோசிக்காத அளவிற்க்கு ஆகச்சிறந்த மன வலிமையும், ஆட்சித்திரணும் கொண்டவர்களே "பெண்கள்". அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் ஆளுமை பற்றி பேசுகிறாள் மகாராணி "செம்பியன் கிழாலடிகள்". இது என் சோழ சூரியனின் பாகம் 3. ஒரு பெண்ணின் எழுச்சியை பற்றி உரக்க பேசுகிறாள் "செம்பியன் கிழாலடிகள்".

இன்னும் இரண்டு நாட்கள் தான் சென்னை புத்தகக் கண்காட்சியில் மகாராணி "செம்பியன் கிழாலடிகள்" இருப்பார்கள். அதன் பின் அவருடன் பேசி பழக கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழையுங்கள் (to order book over phone: 8148066645). மகாராணி "செம்பியன் கிழாலடிகள்" உங்கள் இல்லம் தேடி வருவாள்.

தற்சமயம் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் பதிப்பகத்தில் அரங்கம் என் 165,166 மற்றும் 395, 396 - உங்களைக் காண மகாராணி "செம்பியன் கிழாலடிகள்", மித்ரனுடனும் மகாரதனுடனும் சேர்ந்து சோழன் தலை கொண்ட வீரபாண்டியனுக்காக சோழ எல்லையில் காத்திருக்கும் போது நம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து உங்களுடன் பழக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்கள் இங்கு இருப்பாள். அனைவரும் வந்து "செம்பியன் கிழாலடிகள்" பார்த்து உணர்ந்து உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3

09/01/2025

"சோழ எல்லை" இது சோழ சூரியனி இரண்டாம் பாகம். இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம்.

நான் எழுதிய அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் அரங்கத்தில் கிடைக்கும்.

சுவாசம் அரங்கத்தின் எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்

08/01/2025

சோழ சூரியன் பாகம் ஒன்று "சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்" பற்றி ஒரு முன்னோட்டம்.

நான் எழுதிய அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் அரங்கத்தில் கிடைக்கும்.

சுவாசம் அரங்கத்தின் எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்

07/01/2025

என்னுடைய அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் அரங்கத்தில் கிடைக்கும்.

சுவாசம் அரங்கத்தின் எண்கள்
395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

என்னுடைய "மகாராதன்" நாவலை பற்றி ஒரு சிறிய முன்னோட்டம். உங்களுக்காக...

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்

Book no:01/ year 2025எழுத்தாளர் வில்லரசன் எழுதிய "பொற்கயல்" என்ற நாவலின் முதல் பாகமான "மீன்கொடி வெல்க" என்ற புத்தகத்தை ப...
06/01/2025

Book no:01/ year 2025

எழுத்தாளர் வில்லரசன் எழுதிய "பொற்கயல்" என்ற நாவலின் முதல் பாகமான "மீன்கொடி வெல்க" என்ற புத்தகத்தை படித்து முடித்தேன்.

மிக எளிமையான எழுத்து நடை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுத்தாளர் அணுகியது அழகு. காதலனுக்காக காத்திருக்கக்கூடிய காதலியாகட்டும், வீரர்களுக்காக காத்திருக்கும் மன்னர்களை காட்டும் போதும் கூட ஒரு லயமுடன் சென்றது கதை.

கதை என்னவோ குலசேகர பாண்டியனின் காலகட்டத்தில் நடக்கக்கூடியது. ஆனால் கதாநாயகனோ - ஒன்றல்ல... அனைத்து கதாபாத்திரங்களுமே!!!

தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய கடிகாரம் போல் இந்த கதையில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கால வெள்ளத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த கதாபாத்திரங்களின் ஓட்டம் தான் கதையில் நம்மை இணைத்து வாசகன் என்பதை மறக்கச் செய்து இந்தக் கதையுடன் சேர்த்து நம்மையும் ஓட வைக்கிறது.

கதையில் நிறைய இடங்களில் தந்தைக்கும் மகனுக்கும் இருக்கக்கூடிய உறவு, இறந்த தந்தையை மகன் உணரும் இடம், காதலன் காதலியை நினைத்து நிலவை பார்க்கும் நேரம், வயது முதிர்ந்த ஜோடிகளின் அன்பின் வெளிப்பாடு, நான்கு சகோதரர்களும் சேர்ந்து போர்க்களத்தில் வீறு கொண்டு எழும் இடம், சதி ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நேரம், ஒற்றர்களின் ஒற்று செய்தி என எழுத்தாளரின் கற்பனை அருமை. ஒரு கட்டத்தில் இந்த எழுத்தாளர் கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக அணுகி இருப்பார் அதுவும் அருமையாக இருந்தது.

இவ்வளவுதான் இந்த புத்தகத்தில் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டீர்கள் எனில், "இல்லை" என்றுதான் என்னிடத்திலிருந்து பதில் வரும். ஏனெனில் அனைத்தையும் இந்த ஒரு கருத்துரைப் பகுதியில் நான் சொல்லி விட்டேன் என்றால், வாசகர்களாகிய உங்களின் எண்ண ஓட்டத்தில் இந்த புத்தகம் உதிக்காது. அதனால் நீங்களே உங்கள் விரல் கொண்டு இந்த புத்தகத்தின் தாள்களை நகர்த்தி பொற்காயலுடன் பயணித்து மீன் கொடியை வெற்றி பெற செய்யுங்கள். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

-சிரா.

புத்தகத்தின் பெயர்: பொற்காயல் (பாகம் 1- மீன்கொடி வெல்க)
எழுத்தாளர்: வில்லரசன்
பதிப்பாளர்: அன்னை புத்தகாலயம்
விலை: 750/- ரூபாய்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #பொற்கயல் #மீன்கொடிவெல்க #அன்னைபுத்தகாலயம்

06/01/2025

சென்னை புத்தகக் கண்காட்சி 2025 தொடங்கி கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் என்னுடைய அனைத்து புத்தகங்களும் சுவாசம் அரங்கு எண்கள்

395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

என்னுடைய முதல் நாவலான "மித்ரன்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம். உங்களுக்காக...

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்

Get my all books as combo with attractive offers and discounts in chennai book fair 2025.Stall : swasamStall no: 165,166...
02/01/2025

Get my all books as combo with attractive offers and discounts in chennai book fair 2025.

Stall : swasam
Stall no: 165,166 and 395,396

My dear readers make use of it and grab your combo pack.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3

சென்னை புத்தகக் கண்காட்சி 2025 தொடங்கி கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் என்னுடைய அனைத்து புத்தகங்களும் 1) மித்ரன்...
29/12/2024

சென்னை புத்தகக் கண்காட்சி 2025 தொடங்கி கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் என்னுடைய அனைத்து புத்தகங்களும்

1) மித்ரன்
2) மகாரதன்
3) சோழ சூரியன் - பாகம்-1 சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்
4) சோழ சூரியன் - பாகம்- 2 சோழ எல்லை
5) சோழ சூரியன் - பாகம்-3 செம்பியன் கிழாலடிகள்

என அனைத்தும் சுவாசம் அரங்கு எண்கள்

395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

இன்று மாலை 4 மணி அளவில் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் வாங்க.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #நாவல் #சுவாசம்

24/12/2024

சோழ சூரியனின் பாகம் 3 "செம்பியன் கிழாலடிகள்" இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2025ல் வெளியாகிறது.

சுவாசம் அரங்கு எண்கள்

395, 396 மற்றும் 165, 166 கிடைக்கும்.

#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #தமிழ் #தமிழ்ப்புத்தகம் #புத்தகஅறிமுகம் #நாவல் #சுவாசம்

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Garuda Pictures posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Garuda Pictures:

Share

Category

Our Story

Here I am trying to give short cut to history and heritage. By means of this channel viewers can get more information on the #heritage #history #purana and great emperors like #chola #chera #pallava #pandya. The presentation may be in candid but for sure you will get more and experts details on the history.