Coimbatore Times

Coimbatore Times tell about coimbatore to the world time to time you can see whats happening

கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வீட்டில் முட...
10/04/2020

கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வீட்டில் முடங்கி கிடக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தி வந்த டூ-வீலர், ஃபோர் வீலர் போன்ற வாகனங்கள் செட்டில் முடங்கிக் கிடக்கின்றன. பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரினை,அவசர தேவைக்காக ஸ்டார்ட் செய்தால் அது ஆகாது. புதிய காராக இருந்தாலும் சில நாட்கள் தொடர்ச்சியாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், பேட்டரியின் சார்ஜ் அதில் இறங்கியிருக்கும். வாகனத்தின் திறனை பொருத்து பிரச்சினைகள் மாறுபடலாம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை,நான்கு சக்கர வாகனங்களை ஸ்டார்ட் செய்து பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வீ...

08/09/2016

கோவை 04.09.16
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதியளித்த மத்திய அரசை கண்டிக்கும் வகையில், கோவைக்கு வருகை தந்த மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தபெதிக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அருகேயுள்ள அகழி பகுதியில் கேரள அரசு அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் நடைபெறும் ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் ரஜ்யவர்தன் ரதோர் வருகை தந்தார். கேரள அரசு அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசை கண்டிக்கும் வகையில், கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணாசிலை பகுதியில் மத்திய இணையமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள அரசு அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒரு தலைபட்சமாக ஆதரவு அளித்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், அணை கட்டப்பட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் தபெதிக அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார். மேலும் மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வரை கோவை வரும் அனைத்து அமைச்சர்களுக்கும் கருப்பு கொடி காட்டப்படும் என கூறிய அவர், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து ஊர்வலமாக சென்று மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 40 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்
www.coimbatoretimes.com Team

08/09/2016

கோவை 03.09.16
சுயலாபத்திற்காக நீதிமன்றங்களில் தடையாணை பெறும் முதல்வர் ஜெயலலிதா சிறுவாணி பிரச்சினையில் கேரளஅரசின் நடவடிக்கைக்கு எதிராக ஏன் தடையாணை பெற முயற்சிக்கவில்லை என கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும், அணை கட்டும்கேரள அரசை கண்டித்தும், மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் திமுக சார்பில் கோவை கொடிசியாமைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமைதாங்கினார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கோவை,திருப்பூர் ,ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கிடைக்கும்தண்ணீர் சிறுவாணியில் அணைகட்டப்பட்டல் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார். சிறுவாணியின் குறுக்கே கேரளஅரசு அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கைகளை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கல் வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதாகவும், அதிமுக எம்.பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் பாடல்கள் பாடுவது மட்டுமேவேலையாக இருப்பதாகவும் தெரிவித்தார். சிறுவாணி பிரச்சினைக்காக தமிழக அரசு அனைத்து கட்சிதலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும் எனவும், முதல்வர் அழைத்தால்திமுக வரத்தயார் எனவும் அவர் தெரிவித்தார். முதல்வர் வராவிட்டாலும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும்பொருப்பாளர்கள் தலைமையில் டெல்லி செல்ல தயார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் சட்டமன்றத்தில்தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு மெத்தனமாக தமிழக அரசு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும்கொங்கு மண்டலத்தின் முக்கிய கோரிக்கையான அத்திகடவு அவினாசி திட்டத்தினை மாநில அரசிடம் உள்ள நிதியைகொண்டே செயல்படுத்த முடியும் என தெரிவித்த அவர், ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் அரசு காலம்தாழ்த்தி வருகின்றது எனவும் குற்றம்சாட்டினார். காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பாலாறு போன்றபிரச்சினைகளில் அந்த மாநில முதல்வர்களுடம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் பேசுவதில்லை என தெரிவித்தஅவர், அண்டை மாநில அரசுகளுடன் ஜெயலலிதா நல்லுறவை வளர்க்கவில்லை எனவும் தெரிவித்தார். அண்டைமாநில முதல்வர்களும் நல்லுறவு வைத்துக்கொள்ளாமல் இருக்கும் ஜெயலலிதா ஆட்சி செய்வது சுயநலத்திற்காகவும்,அவருடன் இருக்கும் குடும்பத்தினரின் நலனுக்காகவுமே என தெரிவித்தார். சொத்துகுவிப்பு வழக்கு, மக்கள்நலப்பணியாளர்கள் வழக்கு ,சமச்சீர் திட்டத்திற்கு எதிரான வழக்கு போன்ற சுயலாபத்திற்கான விசயங்களில் நீதிமன்றம்சென்று தடையாணை வாங்கும் ஜெயலலிதா , சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்குதடையாணை வாங்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கேள்வி எழுப்பினார். அணை கட்ட வழங்கியஅனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும்ஸ்டாலின் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கனோர்கலந்து கொண்டனர்.
www.coimbatoretimes.com Team

03/09/2016

கோவை 02.09.16
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள கேரள அரசு, அணை கட்டப்படவுள்ள பகுதியில் கட்டுமான பொருட்களை குவித்து வருகிறது.
தமிழகத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் வாழ்வதாரமாகவும், குடிநீர் ஆதரமாகவும் விளங்கும் பவானி ஆற்றின் கிளை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள அகழி பகுதியில் அணை கட்ட 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கேரள அரசிற்கு, அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்துள்ள கேரள அரசு ஆய்வு பணிகளை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அணை கட்டப்பட உள்ள பகுதியில் சிறுவாணி ஆற்றங்கரை ஒரத்தில் கேரள அரசு கட்டுமான பொருட்களை குவித்து வருகிறது. மேலும் அணை கட்டப்படவுள்ள பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத நிலையில், சாலைகளை சீரமைக்கும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அணை கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் முழுமையாக கோவை மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது
www.coimbatoretimes.com Team

31/08/2016

என் பெற்றோரை தூண்டிவிட்டு என் மீது வீண் பழி சுமத்தியதுடன், ஈஷா மீது குற்றச்சாட்டுவதற்கு தன் குடும்பத்தை பகடைக்காயாய் பயன்படுத்திக்கொண்டதாக பேராசிரியர் காமராஜ், சிவா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கோவை சாய்பாபா காலனி அடுத்த கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் வசந்தா, தண்டபாணி. கடந்த 22 ஆம் தேதி ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த தம்பதியினர், தங்களுடைய 2வது மகள் அபர்ணா கோவையில் செயல்படும் ஈஷா யோகா மையத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவும், எங்களின் அனுமதியின்றி வரும் செப்டம்பர் மாதம் முதல் ஈஷா மையத்தில் தங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஈஷாவில் தங்கி துறவறம் மேற்கொண்டுள்ள சகோதரிகளின் தந்தை ஓய்வுப்பெற்ற பேராசிரியர் காமராஜ், சிவா ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரிலேயே சொல்லப்பட்டதாகவும், அந்த இருவருடன், சில மகளீர் அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த செயலால் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வயதான தம்பதியினர் மகள் அபர்ணா கடந்த வாரம் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பேராசிரியர் காமராஜ், சிவா ஆகியோரிடமிருந்து மிரட்டல் வருவதாகவும், ஈஷாவில் தான் ஒரு பக்தர் மட்டுமே என்ற நிலையில் இதுபோன்ற அவதூறுகள் பரப்பும் அவர்கள் இருவரிடமும் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் அபர்ணா புகார் மனு அளித்தார். மேலும், பேராசிரியர் காமராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
www.coimbatretimes.com

31/08/2016

கோவை

வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்கியும் அதனை உரிய முறையில் பயன்படுத்தாமல் வீணடிக்கும் பலரின் மத்தியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாலையில் சைக்கிளில் சாதனை படைத்து வரும் பட்டதாரி வாலிபர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்…….

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்.சாதாரண கொரியர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் மணி என்பவரது மகனான இவர்,ஒரு பொறியியல் பட்டதாரி.தனது இளம் வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் மிகுந்தவரான அருண்குமாருக்கு சைக்கிள் பந்தையத்தில் இணைந்து சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியும் இருந்து வந்துள்ளது.இதற்காக பல வகைகளில் பயிற்சி மேற்கொண்ட அவர் ஒரு சக்கரத்தில் சைக்கிள் ஓட்டும் திறனை பெற்றுள்ளார்.மேலும் அதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என எண்ணிய அவர் கோவையின் முக்கிய சாலையும் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையுமான அவினாசி சாலையில் தனது சாகச பயணத்தை துவக்கியுள்ளார்.ஆரம்பத்தில் இதற்காக கடுமையாக உழைத்த அந்த வாலிபருக்கு ஒரு சக்கர சைக்கிள் பயணம் என்பது எளிதாகியுள்ளது.தனது குடும்ப ஏழ்மை நிலையிலும் சாதனை என்ற ஒற்றை குறிக்கோளை மட்டுமே மனதில் எண்ணி தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளார்.இதுவரை ஒற்றை சக்கரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் தூரத்தை கடந்ததே கின்னஸ் சாதனையாக இருந்து வரும் நிலையில் இந்த இளைஞரோ அரை மணி நேரத்தில் கோவை சிட்ரா பகுதியிலிருந்து உப்பிலிபாளையம் இடையேயான 10 கிலோமீட்டர் தூரத்தை தினசரி கடந்து வருகிறார்.அவரது இந்த சாகசத்தை சாலையில் பயணிக்கும் சக வாகன ஓட்டிகளும் பொது மக்களும் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தாலும் சிலர் அவரை வசை பாடி செல்லும் நிலையும் நேர்ந்துள்ளது.இருப்பினும் சாதிக்க வேண்டும் என்ற நெஞ்சுரத்தில் சைக்கிள் ஓடி வரும் அருண்குமார் பல முறை காவல்துறையினராலும் போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக செயல்படுவதாக கூறி தண்டிக்கப்பட்டுள்ளார்.இது போன்ற பல இன்னல்களை தாங்கி கின்னஸ் சாதனையை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கையில் உள்ள அவருக்கு உதவ யாரும் இதுவரை முன்வரவில்லை எனபது வேதனைக்குரிய செய்தி.சைக்கிள் மீது இருந்த மோகத்தால் தனது தந்தையால் சிறுக சிறுக சேமித்த தொகையை கோண்டு ஒரு சைக்கிள் வாங்கி உபயோகித்து அவரை கடந்த 2012ம் ஆண்டு தமிழ் திரைப்பட்த்துறை அனுகியுள்ளது.அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பாகன் திரைப்படத்தில் இளம் வயது நாயகனாக அவர் நடித்த போது ஆசை ஆசையாய் பராமரித்து வந்த சைக்கிள் படப்பிடிப்பின் போது வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் அருண்குமார்,அன்று முதல் தனது சாதனை முயற்சிக்காக ஸ்பான்சர் கேட்டு பலரை அனுகியதாகவும் ஆனால் தனது முயற்சி பலனளிக்கவில்லை எனவும் கூறினார்.மேலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தனது திறமையை நிரூபிப்பேன் எனவும் அதற்காக ஏங்கி காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.நாட்டில் எத்தனையோ திறமைசாலிகள் முழு திறமையுடன் சாதிக்கும்வெறியுடன் காத்து கிடக்கும் சமயத்தில் வாய்ப்புகள் ஏனோ பண பலம் மிக்கவரை சார்ந்தே அமைகிறது என்பதற்கு இந்த வாலிபரே சாட்சி.இது போன்ற இளைஞர்களுக்கு அரசும் விளையாட்டு ஆர்வலர்களும் ஆதரவு கரம் நீட்டினால் மட்டுமே இந்தியாவும் சர்வதேச அளவில் பதக்கங்களை பெற்று சாதனை பெற முடியும் என்பது மட்டும் உண்மை.
www.coimbatoretimes.com

31/08/2016

கோவை 28.08.16

கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறிய வகை கார் பந்தய போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கோ-கார்ட் ரேசிங் சேம்பியன்சிப் 2016என்ற பெயரிலான கார் பந்தய போட்டிகள் நடைபெற்றது, இந்த போட்டிகளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய ரக பந்தய கார்கள் பங்கேற்றன, இந்த போட்டிக்காக 54 கார்கள் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுஅதில் 35 கார்கள் மட்டுமே போட்டிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து நான்கு நாட்களாக நடந்த போட்டிகளின் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. அதில் பங்கேற்ற கார்கள் சீறி பாய்ந்து பார்வையாளர்களை கவர்ந்தது, இந்த கார் பந்தய போட்டிகளில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி முதல் இடத்தையும், குமரகுரு கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தினர். போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த கார் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
www.coimbatoretimes.com

31/08/2016

கோவை 29.8.2016
முல்லை பெரியாறு அணை விவகாரத்தை திசைதிருப்பும் நோக்கில் சிறுவானி அணை
விவகாரத்தை கேரள அரசு கையில் எடுத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர்
சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அக்கட்சியின் புதிய உள் அமைப்பான கையூட்டு ஒழிப்பு
பாசறையின் துவக்க நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான
நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். தொழில்னுட்ப வளர்ச்சி
அதிகரித்துள்ள நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கடிதப்போக்குவரத்து
நடத்துவது நகைப்பிற்குரியது என தெரிவித்த அவர் இது தொடர்பாக இரு மாநில
அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அரசு அமைச்சர்களுடன் அமர்ந்து பேசி சுமூக
முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் அப்போது கூறினார். இதற்காக
நாம்தமிழர் கட்சி ஏற்கனவே போராட்டம் நட்த்தியுள்ளதாகவும் அணை கட்டுவது
நிறுத்தப்படும் வரை தொடர் போராட்டங்கள் நட்த்தப்படும் எனவும்
தெரிவித்தார். காவிரி நதிநீரை தமிழகத்திற்கு கொடுக்க்கூடாது என
கர்னாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதான்ந்த கவுடா கூறியுள்ளதற்கு
கண்டனம் தெரிவித்த அவர் அமைச்சரின் இந்த பேச்சு அவர் ஒட்டுமொத்த
இந்தியாவிற்கான மத்திய அமைச்சரா என்ற கேள்வியை எழுப்புவதாக தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இரு கட்சிகளும் தங்கள் சொந்த விவகாரங்களுக்காக விவாதம்
நட்த்திக்கொள்வதாக கூறிய அவர் மக்கள் பிரச்சனைகளை பேசுவது இல்லை எனவும்
குற்றம்சாட்டினார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்கார்ரும் செவாலியே
விருதுபெற்ற நடிகருமான கமலஹாசனுக்கு தமிழக அரசு வாழ்த்து தெரிவிக்காத்து
முதலமைச்சரின் அகந்தையை காட்டுவதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார்.
நடிகர் சங்கத்தில் நல்லவர்கள் பதவியில் உள்ளதாக கூறிய அவர் ஆதாரமில்லாத
குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கூற முடியாது எனவும் சீமான் அப்போது
தெரிவித்தார்.

31/08/2016

கோவை
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது....
கோவை மாநகராட்சி மற்றும் காருன்யா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்த வண்ணம் பேரணியாக சென்றனர். கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகே துவங்கிய பேரணி வஉசி மைதானத்தில் நிறைவடைந்து. இதில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, பல்கலைக்கழக துணைவேந்தர் சேவியர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
www.coimbatoretimes.com

31/08/2016

கோவை கேஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில், பணத்தை திருப்பி கேட்ட முன்னாள் மாணவனை அடித்த கல்லூரி தளாளர் கீதா மன்னிப்புக்கேட்க கோரி மாணவர்கள் போராட்டம்

கோவை வரதராஜபுரத்தில் இயங்கி வரும் கேஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றது. பட்டம் வாங்குவதற்கு சிறப்பு கவுன் அணிய ரூ 250 வீதம் 1000 பேரிடம் வசூல் செய்துள்ள கல்லூரி நிர்வாகம், ரூபாய் 50 ஐ வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீதி 200 ரூபாயாய் கொடுப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், பணம் கொடுக்காமல் ஏமாற்றிய கல்லூரி நிர்வாகம், 200 ரூபாயை முன்னாள் மாணவர் சங்கத்திற்கு எடுத்துக்கொள்வதாக கூறாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து, பெற்றோர்களையும், மாணவர்களையும் மரியாதைக்குறைவான வார்த்தைகளில் கல்லூரி தாளாளர் கீதா பேசியதை அடுத்து பெற்றோர்கள் தளாளரிடம் பணத்தை திருப்பிக்கொடுக்க கேட்டுள்ளனர்.அதற்கு 200ரூபாய் பிச்சைப்பணத்தை தருகிறோம் வாங்கிக்கொள் என அதட்டலாக கூறியதை அடுத்து தட்டிக்கேட்ட மாணவன் ஜெனித்தை கன்னத்தில் அறைந்து , மிரட்டிய தளாளரை, மாணவர்கள் ஓன்று திரண்டு கல்லூரி வளாகத்திற்க்குள்ளே கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரியில் தரமான பேராசிரியர்கள் இல்லாததும், மாணவ்ர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை பணத்தை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகம் திருப்பி தருவதாக கூறியிருந்த பணத்தை கேட்டதற்கு தன்னை தளாளர் கீதா கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் , பிச்சைக்காசை வாங்கிவிட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளதாகவும், அதிகமாக பணத்தை மாணவர்களிடம் வாங்கிக்கொண்டு கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி வருவதாகவும், மீறிக் கேட்டால் மிரட்டப்படுவதாகவும் கூறினார். தவறு செய்த தாளாளர் கீதா மன்னிப்புக்கேட்டால் மட்டுமே மாணவர்கள் கலைந்து செல்வோம் என கூறினர்.
www.coimbatoretimes.com

Address

Ghandhipuram
Coimbatore
641012

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coimbatore Times:

Share