Sathuragiri iyarkai angadi

Sathuragiri iyarkai angadi இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப்பொருள்கள்,தேன் வகைகள்

சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்

குளியல் பொடிஇன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டத...
18/09/2025

குளியல் பொடி
இன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டது ,
உடல் ஆரோக்கியம் காத்து , உடல் வெம்மை தணித்து மனதிற்குபுத்துணர்வுஅளிக்கக்கூடியஎண்ணைக்குளியல் அத்துடன் உடலுக்கு குளுமை மற்றும் தோல் நோய பிரச்னை தீர்த்து , தலைமுடி உதிராமல்கருக்கச்செய்து உடலுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது இன்று அருகிவிட்டது.
நம்முடைய முன்னோர் கடைசிவரை உடல் ஆரோக்கியத்துடன்இருந்ததற்கு, வாரம் தவறாமல் எடுத்துக்கொண்டஎண்ணைக்குளியலும் ஒரு காரணம்.
எண்ணைக்குளியல் எடுக்க முயற்சி செய்யுங்கள்! .உடல் நலம் பேணுங்கள்.

எண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் குளியல் பொடி, நலம் பல பயக்கும்மூலிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில்விளைந்த சீயக்காய், குமிழம்பழம்,செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான்ஸ்நானப்பொடி.
உடலில் தேய்த்தஎண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்ல

இந்த குளியல் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்குகுளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும்புத்துணர்வையும் ஊட்ட வல்லது.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

மூலிகை பல்பொடி.பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து ...
17/09/2025

மூலிகை பல்பொடி.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது இந்த அற்புத மூலிகை கலவை ஆகும்.
மேலும் பல் துலக்கமுக வசீகரம் பெறும். ஒருமுறை உபயோகித்தாலே ஈறுகலில் ரத்தம் வருவது குறைந்து நின்று விடும்,மஞ்சள் கரை போன்ற அனைத்தும் போக்கிவிடும்,வாய் நாற்றம் போக்கும் ,அதிகப்படியான ஈறு வளர்ச்சியை குணமாக்கும்.
நன்றாக நுரை வரும் ,எளிமையாக இருக்கும் பல்பொடி உபயோகிப்பதினால் வாய் எரிச்சல் இருக்காது.
இந்த மூலிகை பல்பொடியில் கலந்துள்ள மூலிகைகள்: நாயுருவி
கடுக்காய்
கருவேலம்பட்டை
ஆலம்விழுது
கிராம்பு
காய்ச்சுக்கட்டி மற்றும் சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் விளையக்கூடிய 18 வகையான மூலிகைகள் கலந்து செய்யப்பட்ட பல்பொடி.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

17/09/2025

ஆயம் சத்துமாவு
இரத்தசாலி அரிசி,விளாம்பழ பொடி,ஆயப்பட்டை, ஏலக்காய், சுக்கு , பூண்டு, மிளகு,திப்பிலி,
தனி்தனியாக லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும் ஒரு கிலோ அரிசிக்கு மற்ற பொருள்கள் சம அளவில் சேர்த்து 100 கிராம் என்ற அளவு இருந்தால் போதுமானது.
இவற்றை மிக்சியில் அல்லது அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக சத்துமாவு பததிற்க்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

75 முதல் 100 கிராம் எடுத்து சத்துமாவு காய்ச்சுவது போல் காய்ச்சி நமக்கு தேவைக்கு ஏற்றவாறு உப்பு,நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் இவற்றில் எதாவது ஒன்று கலந்து தினமும் ஒரு வேளை அல்லது இரண்டுமுறை குடிக்கலாம்.

குடித்தால் என்ன ஆகும்?
உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.உடல் தேறும்.எடை குறையும்.குறைவான எடை உள்ளவர்களுக்கு எடை கூடும்.செரிமானத்திற்கு எளியது
உணவு எடுக்க இயலாதவர்களுக்கு சர்வ சத்துக்களும் அடங்கி உள்ள பொருள் இந்த கலவை.இரத்ததை சுத்தம் செய்யும். வாதம் ,பித்தம் கப தோசத்தை நிவர்த்தி செய்யும்.கால்சியம் மற்றும் புரத சத்து மிகுந்து உள்ளது ,பாலுக்குமேல் உணவாக இதை எடுக்கலாம்,செரிமானத்திற்கு எளியது.

உடல் வலி மூட்டுவலி,தேய்மானம் உள்ளவர்களுக்கு நல்ல சத்து பொருள்.வாதத்தை நன்றாக கண்டிக்கும்.
புதுரத்ததை உருவாக்கும்.உடலின் இரத்த சுழற்சியை சிறப்பாக வைக்க உதவும்.
குழந்தை பேறுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல் உணவு.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்.
பலன்கள் அனைத்தும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறியது.

பக்கவிளைவு உண்டா?
நம் தாத்தா,பாட்டி உபயோகம் செய்த முறை,பழங்காலத்தில் இருந்து கேரளா ஆயுர்வேத வைத்தியர்கள் செய்து கொண்டு இருக்கும் முறை,
இரத்தசாலி அரிசி மற்றும் விளாம்பழ பொடியேதான் போட வேண்டுமா?
கிடைத்தால் சிறப்பு அல்லது இதற்கு பதிலாக பாரம்பரிய அரிசி அல்லது வீட்டில் உபயோகம் செய்யும் அரிசி மற்றும் விளாம்பழ பிசின் உபயோகம் செய்யலாம்.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)

பிரண்டை தொக்கு  4.75 கிலோ இருப்பு உள்ளதுதற்போது நமது அங்காடியில் முற்றிலும் வீடு முறைப்படி செக்கில் ஆடிய நல்லெண்ணெய்யில்...
17/09/2025

பிரண்டை தொக்கு

4.75 கிலோ இருப்பு உள்ளது

தற்போது நமது அங்காடியில் முற்றிலும் வீடு முறைப்படி செக்கில் ஆடிய நல்லெண்ணெய்யில் இயற்கையான மூலப்பொருள்கள் மூலம் விளைந்த பொருள்களை கொண்டு தயாரானது.

பிரண்டை தொக்கு செய்முறை:

இயற்கையாக விளைந்த பிரண்டை உடைய கொழுந்து, மரசெக்குநல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,நாட்டு மிளகாய் கொண்டு இரும்பு சட்டியில் செய்த பிரண்டை தொக்கு மற்றும் ஊறுகாய் ஆடரின் பெயரில் குறைந்த அளவோ அல்லது மொத்தாகவோ கிடைக்கும்.

ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் வரை அதிக அளவு அல்லது கிடைக்கும், அதன் பிறகு பிரண்டை தளிர் விடாது அதனால் செய்வது கடினம் .
இதுபோல் வல்லாரை தொக்கு மற்றும் நார்தை ஊறுகாய்யும் கிடைக்கும்.

நன்மைகள்:
சுவையின்மையை போக்கி பசியை தூண்டும்.
பிரண்டை வயிற்றுவலி ,வாயு தொல்லை போன்றவற்றை குறைய செய்யும் .
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்,இதயம் பலப்படும்.
இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.
வயிற்று பெருமல்,சிறுகுடல் மற்றும் பெருங்குடல் புண்களை நீக்கி,நல்ல பசி உண்டாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்ப்படும் முதுகு வலி ,இடுப்பு வலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
பிரண்டை உடம்பில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்,
பிரன்டையில்கல்சியம் அதிகமாக உள்ளது ,இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது ,எனவே கால்சியம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் உணவில் அதிகமாக சேர்து கொள்ளலாம் ,கால்சியம் மாத்திரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை

மற்ற பயன்கள்
மெலிந்த உடல் குண்டாக
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

7S health mix powderமுருங்கை சப்த தாது சத்து மாவுமுருங்கை இலை,விதை,பிசின்,சுக்கு,மிளகு,திப்பிலி,கிராம்பு,ஏலக்காய்,கொத்தம...
17/09/2025

7S health mix powder
முருங்கை சப்த தாது சத்து மாவு
முருங்கை இலை,விதை,பிசின்,சுக்கு,மிளகு,திப்பிலி,கிராம்பு,ஏலக்காய்,கொத்தமல்லி,கற்கண்டு, ராகி பால்,இரத்தசாலி அரிசி சம அளவு கொண்டு தயார் செய்யலாம் முருங்கை சத்துமாவு

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும். இந்த சப்த அமைப்புகளுக்கு தேவையான ஊட்ட சத்து சரியான அளவு உணவில் இருந்து கிடைத்தால் உடல் செயல்பாடு இயல்பாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
நமது உடலும் ,மனமும் மகிழ்ச்சியாக இயங்க முருங்கை மரத்தில் கிடைக்கும் மூல பொருள்களை கொண்டு தயாரனது தான் இந்த சத்து மாவு.
காலை,மாலை 5 கிராம் ஒரு கிளாசு (75 ml நீர் +75 ml பால்) சூடான பாலில் கலந்து வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு ஒருமணி நேரம் முன்பு சாப்பிடலாம்.

உடல் சுறுசுறுப்பு ,நல் சத்துகள் உடனடியாக கிடைக்கும்.வாத,பித்த கப தோசத்தை கலைக்கும்.15 வயதுக்கு மேல்ப்பட்ட அனைவரும் தினமும் அருந்தலாம்.தேறாத உடல் தேற்றவும் இந்த சத்துமாவு சாப்பிடலாம்..
நல்ல தரமுள்ள உணவில் பயன்படும் மூலப்பொருள் கொண்டு சுத்தியாக செய்யப்பட்டது
300 கிராம் அளவில் கிடைக்கும்

தேவைப்படுவோர் அணுகவும்.
சதுரகிரி அழகேசன்
9486072414(whatsup)

முருங்கை  கடலை மிட்டாய்.மூலப்பொருள்கள்:நிலக்கடலை,வெல்லம்,சுக்கு,அதிமதுரம்,அஸ்வகந்தா, முருங்கை பூ,முருங்கை விதை,முருங்கை ...
16/09/2025

முருங்கை கடலை மிட்டாய்.

மூலப்பொருள்கள்:
நிலக்கடலை,வெல்லம்,சுக்கு,அதிமதுரம்,அஸ்வகந்தா, முருங்கை பூ,முருங்கை விதை,முருங்கை இலை ஆகியவற்றை கலந்து செய்த கடலை மிட்டாய்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. 20 கிராம் கடலை மிட்டாயில் 347 கலோரி சத்திகள் உள்ளது..

நல்ல சத்துகள் மற்றும் சுவை உள்ள பொருள் உடலுக்கும் மனதுக்கும் இதமானது.

கடலை மிட்டாயின் பலன்கள் சொல்லி தெரிவதில்லை,நல்ல பொருள்களை மட்டுமே கொண்டு தயார் செய்யப்படுள்ளது,நம்பிக்கையோடு சாப்பிடலாம்.முருங்கையின் சத்துக்களும் உங்களுக்கு சேர்த்தே கிடைக்கும்.

பள்ளி குழந்தைகள்,உடல் பயிற்சி செய்பவர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு

முற்றிலும் விறகு அடுப்பில் செய்வதால் சற்று சுவை கூடுதலாகவும்.சத்து இழப்பு அதிகமில்லாமலும் இருக்கும்.

சிறிய அளவு முதல் பெரிய அளவுகள் வரை செய்து தர இயலும்.(விருந்து மற்றும் விழாக்களுக்கும் செய்து தரலாம்)

20 கிராம்/16₹

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

தற்போது கப் வடிவில் எந்தவித செயற்கை வாசனை,நிறம்,ரசாயணம் இன்றி மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)...
16/09/2025

தற்போது கப் வடிவில் எந்தவித செயற்கை வாசனை,நிறம்,ரசாயணம் இன்றி மூலிகை தூப பொடி

(கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)
சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை4.தேவதாறு5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை8.நொச்சிஇலை 9.வில்வ இலை10.வெண்கடுகு11.கருங்காலி
12.நன்னாரி 13.வெட்டிவேர்14.நாய்க்கடுகு15.ஆலங்குச்சி16.அரசங்குச்சி 17.நாவல் குச்சி18.மருதாணி விதை
போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து,நீங்களும் உபயோகித்து பலன்களை தெரியப்படுத்தவும்.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup)

நாட்டு முருங்கை விதைஇயற்கை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முருங்கை விதை கிடைக்கும்.நன்றாக முற்றி மரத்திலேயே...
16/09/2025

நாட்டு முருங்கை விதை
இயற்கை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முருங்கை விதை கிடைக்கும்.நன்றாக முற்றி மரத்திலேயே காய்ந்த முருங்கைகாயில் இருந்து,வெள்ளை விதை மற்றும் கூடான விதை போன்றவற்றை கழித்து நல்ல தரமான மரமாக முளைக்கும் தன்மை கொண்ட விதைகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றது.வீடுகளில் உள்ள தனி மரத்தில் இருந்து சேகரிக்கப்படுகிறது.(கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள கிராமத்தில் இருந்து பெறப்படுகிறது).

முருங்கை விதையின் நன்மைகள்
உடலில் படிந்துள்ள கார்பனை வெளியேற்ற விட்டமின் B12 தேவைப் படுகிறது. முருங்கை விதை எந்த மாதிரி கார்பனாக இருந்தாலும் உடம்பில் இருந்து அரித்து வெளியேற்றுவது தான் முருங்கை விதையின் வேலையாகும். உடலில் தேங்கியுள்ள கார்பனை அரித்து வெளியேற்றும் அற்றல் முருங்கைக்கு உண்டு. இரண்டு முருங்கை விதைகளை வாயில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் எப்படிப்பட்ட விடாப்பிடியானகார்பனையும் கரைத்து வெளியேற்றும்
எதிர்மறையாக கூறப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும். எதையும் முறித்து வெளியேற்றும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு. எந்த ஒரு எதிர்மறையான சக்தியையும் வயிற்றில் தங்க விடாது. உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிராண சக்தி சார்ந்த எதையும் வயிற்றிலிருந்து நீக்கி விடும்
ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஊட்டச்சத்து உண்டு. முருங்கையில் மட்டும் தான் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் (விட்டமின்கள், மினரல்) அடங்கியுள்ளது. இந்த முருங்கை விதையில் மூன்று வித சுவைகள் அடங்கியுள்ளன.

1. துவர்ப்பு
2. கசப்பு
3. இனிப்பு.
நாம் முற்றிய முருங்கை விதையை வாயில் சுவைக்கும் போது
கசப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. வயிற்றில் பூச்சி
துவர்ப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. இரத்த ஓட்டம் குறைவு
இனிப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. தசைகள் பலவீனம்
யாருக்கு இந்த மூன்று சீவைகளும் சமமாக இருக்கின்றதோ உடல் சமநிலையில் உள்ளதாக அர்த்தம்.
முருங்கை விதையை சாப்பிட்ட உடனே குடலில் தேங்கியிருக்கும் எந்தவிதமான வாயுவாக இருந்தாலும் வெளியேறி விடும்.
தேவையற்ற உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கீழ் சுவாசம் பாதிப்பினால் குடலில் பூச்சிகள் தோன்றும். இந்த முருங்கை விதையை உடைத்து தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் போது குடல் சுத்தமாகும்.
மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலிக்கு நல்ல பலன் உண்டு
உட்கார்ந்து கொண்டே தூங்குதல், அதிகமாக கொட்டாவி விடுதலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கண்ணாடியில்லாமல் படிக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.
கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடலில் அரிப்பு வராது. உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் அரிப்பு ஏற்படும். அந்த நுண்ணுயிர்களை உடலில் இருந்து நீக்குவதற்கு முருங்கை விதை உதவுகின்றது.
இந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் காதுகளில் அரிப்பு ஏற்படும்.
மூக்கிலும் அரிப்பு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மலவாயினை சொரிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள்.
வாய் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் சரி செய்யும்.
ஆஸ்த்மா, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை விதை நல்லது. குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்கு கொத்தவரங்காயுடன் முருங்கை விதையும் சேர்த்து எடுப்பது நல்லது.
முருங்கை விதை குடலை சுத்தம் செய்வதால் கீழ் சுவாசம் நன்றாக நடைபெறும்.
முருங்கை விதையை அளவிற்கு மீறி அதிகமாக எடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
முருங்கை விதையை தினசரி எடுத்தால் குடல் சுத்தமாகும். பேதி மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.
சாப்பிட்டால் மயக்கம் ஏற்படும் நிலைக்கு நல்லது.
உடலில் ஆக்சிஜன் ஒரு அழுத்த உணர்வினை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் குறைந்து விட்டால் சிறுநீர் விட்டு விட்டு வெளியேறும்.இதற்கு நல்ல பலன் உண்டு. சிறுநீரக செயல் இழப்பிற்கு சிறந்த பலனைக் கொடுக்கும். சிறுநீரில் உள்ள CREATININE அளவினை கட்டுப்படுத்தும். சிறுநீரின் அளவினை அதிகபடுத்தும். (GFR – GLOMERULUS FILTER RATIO )

உடலில் கார்பன் கழிவை வெளியேற்றும் “மலமிளக்கி”யாக செயற்படும்

நன்றி :காய்கறி மருத்துவமனை (கருத்துகள்)
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

வான் மெழுகு .கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்.. பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு ...
15/09/2025

வான் மெழுகு .

கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்..

பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு சூடு பறக்க தேய்த்து காலை சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இது உபயோகிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிட கூடாது.

இரத்தகட்டு வீக்கம் இதற்கு உடனடி பலன்கிடைக்கிறது.

இதில் கலந்துள்ள மூலிகைகள்.இஞ்சி,
கடுகு,ஆயபட்டை, வேப்பம்எண்ணெய்,
பூண்டு,மாவிலங்கம் பட்டை,பெருங்காயம்,
ஓமம்,சதகுப்பை,
மஞ்சிட்டி, நாபி.

விலை:150₹/30 ml.
தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

மார்கண்டேய பல் பொடி.கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அ...
15/09/2025

மார்கண்டேய பல் பொடி.

கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அரிசி,அதிவிடயம்,
மூக்கரணை சாரணை வேர்,மேலும் சில என 16 மூலிகைகள் கலந்த கலவைதான் இந்த பல் பொடி.

உபயோகிக்கும் முறை:இரவு பிரஷ் மூலமாகவும்,காலையில் கை விரல் மூலமாகவும் பல் துலக்கலாம்.அல்லது விருப்படி..

(பல் துலக்கிய உமிழ்நீரை 10 -15 நிமிடம் வாயில் வைத்தபின் துப்பிவிட நல்ல பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம்)

பல்சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும்,வந்தபின் சரி செய்யவும்,வாய் மூலம் நம் உடலுக்குள் செல்லும் கிருமிகளை அழிக்கவும் இது செயல்புரியும்..

பல் ஈடுக்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பல் ஆண்டில்,ஈறு அரிப்பு,பற்கூச்சம்,,கெட்ட வாசனை, ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பாதுகாப்பு அரண் போல செயல்படும்.இதுபோல பல்சார்ந்த பிரச்சினைகளுக்க நல்ல பலன் தரும்.
30 கிராம் பல் பொடி விலை-160₹
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது....
15/09/2025

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்

ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது.
நீண்ட நேரம் கணிணி உபயோகம் செய்பவர்கள் மற்றும் ஒரே பொருளை நெடுநேரம் பார்த்து வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் தருகிறது.இந்த தைலம் உபயோகித்த 10-15 நாளில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
முடி நன்றாக வரும் நரை வருவது குறையும்,முடி அடர்த்தியாக வளரும்.உடல் ,தலை குளிர்ச்சி உண்டுபண்ணும்..
மேலும் கண் பார்வை தெளிவடையும்.மன அழுத்ததை குறைக்ககூடியது..

உடலில் வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமாக வரும் 36 பிரச்சினைகளுக்கும், ஒரு எண்ணெய் தைலம் செய்து தலையில் தேய்தால் குணமாகும் என்ற குறிப்பு இந்த எண்ணெயை தேய்த்தால் முதலில் குணமாவது தலைவலி, கண் பார்வை தெளிவு, முடி உதிர்வை தடுக்க, தலையில் புற்று நோய் வராமல் தடுக்க , புதிதாக வெள்ளை முடி வராமல் இருக்க , உடல் சூடு குறைய இது போல் 36 வகையான நோய்களையும் போக்கும் ஒரு அற்புதமான தைலம்.

செய்முறை:
மரச்செக்கு நல்லஎண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
பெரிய நெல்லிக்காய் சாறு – 1 லிட்டர்
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
அயபானி செடி காய வைத்த இலை – 300 கிராம்
சிறு சஞ்சீவி செடி காய வைத்த இலை – 100 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து சரக்குகளையும் நன்றாக அடுப்பில் கலந்து மிதமான தீயில் வைத்து சரியாக மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் எரித்து தைலைத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்

தைல எண்ணெய் தேய்க்க ஆரம்பித்த முதல் மூன்று நாள் சிலருக்கு மண்டைக்குள் இருக்கும் அழுக்குகள் நீங்கி இரத்த ஒட்டத்தை சீர் செய்யும் 5 நாட்களுக்கு பின் தலையில் வேலை செய்யும். மண்டைக்குள் வரும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்கும். தொடர்ச்சியாக 5 நாட்கள் தேய்க்க வேண்டும்,பிறகு தினமும் தேய்க்கலாம்

100 ml/292₹

தேவைப்படுவோர் அணுகவும்.
சதுரகிரி அழகேசன்
9486072414(whatsup)

Address

Opp To MRF Tyres, Near Laxmi Mills, Avinashi Road, Bharathipuram, P. N. Palayam
Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when Sathuragiri iyarkai angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sathuragiri iyarkai angadi:

Share