பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பாட்டி வைத்தியம், Digital creator, Coimbatore.

#குறிப்பு:- இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

20/10/2025
அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும்போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை , மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரக...
09/10/2025

அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும்போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை , மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வுகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்.. சமீபத்தில் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களில் ஜெனோடாக்சிக் என்னும் கெமிக்கல் கசிவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளில் பயன்படுத்தும் பாத்திரங்களில் புற்றுநோய் உண்டாகும் என்கிற நிரூபனமான ஆய்வுகள் இல்லை.

ஆய்வில் அதிகமாக அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது அதிலிருந்து அலுமினியம் கசிவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அசிடிக் உணவுகள், நீண்ட நேரம் சமைத்தல் , தரமற்ற அலுமினிய பாத்திரங்கள். நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவற்றில் இந்த அலுமினிய கசிவு அதிகமாக உள்ளது. இந்த கசிவு உணவில் கலந்து வயிற்றில் பலவகையான பிரச்சனைகளை உருவாக்குகிறது. நீண்ட வருட நுகர்வு புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதாவது அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும்போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை , மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பழைய அலுமினிய பாத்திரங்களில் சுடு தண்ணீர் கொதிக்க வைத்தாலும் அதில் சைடோடக்சிக் மற்றும் ஜினோடாக்சிக் என்னும் நச்சுகள் தண்ணீரில் கலக்கும். அதை தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் வர வாய்பு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக கூறப்படுகிறது.

எனவே அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து அதிக எடை கொண்ட ஸ்டீல் பாத்தங்கள், இரும்பு , மண் பாத்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது.

இந்த அலுமினிய கசிவு என்பது பாத்திரங்களுக்கு மட்டுமல்ல பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயில் மூலமாகவும் அலுமினியம் கசியும்.

வீட்டில் கைக்குழந்தை, வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தால் அலுமினிய பாத்திரம் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் அவர்களுக்கு எளிதாக கிட்னி செயலிழப்பு உண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இன்றே நீங்கள் செய்யும் சிறு மாற்றம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

 #உற்சாகம்  #தரும்  #உடலுறவு :உறவின் உச்சக்கட்டம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்...
08/10/2025

#உற்சாகம் #தரும் #உடலுறவு :

உறவின் உச்சக்கட்டம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம். இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆர்கஸம் மூலம் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

ரத்த ஓட்டம் சீராகும்

செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் வெடித்துக் கிளம்பும் உணர்வுகளினால் பெண்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

இதயநோய்கள் குணமடையும்

உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார் இந்த பாலியல் நிபுணர்.

உற்சாகம் அதிகரிக்கும்

ஆர்கஸத்தின் போது எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இந்த ஹார்மோன்கள் கோகெயின் எனப்படும் போதை மருந்துக்கு ஒப்பானது என்றும் அதை உட்கொள்வதால் ஏற்படும் பறத்தல் போன்ற உணர்வு ஆர்கஸம் மூலம் ஏற்படும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

தெய்வீக அனுபவம்

இறை அனுபவ நிலை என்பது தியானத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். அது போன்ற ஒரு நிலை உச்சக்கட்டத்தினால் வருமாம். இதனால் உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

புத்திக்கூர்மை அதிகமாகும்

தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார். ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடு, அவர்களின் முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை போன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.

மூளையின் ஆரோக்கியம்

ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வலி நிவாரணி

உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ். ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்..

 #சளி,  #இருமல்,  #காய்ச்சல்  #குணமாக  #ஆயுர்வேத  #கசாயம்பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவில் உள்ள ஒரு மருத்...
02/10/2025

#சளி, #இருமல், #காய்ச்சல் #குணமாக #ஆயுர்வேத #கசாயம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். இந்த ஆயுர்வேத மருத்துவ முறையில் இயற்கை மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆயுர்வேத மருத்துவமானது ஒரு நோய்க்கு சிகிச்சை மட்டும் அளிக்க உதவுவதில்லை. ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளையும் அளிக்கிறது.

இப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்தின் இந்து கடவுளான தன்வந்திரியின் பிறந்தநாளின் போது ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயுர்வேத தினமானது செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தற்போது அவ்வப்போது மழை கடுமையாக பெய்து, காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இந்த சளி, இருமல் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.

இதற்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். இந்த நோயெதிர்ப்பு சக்தியை மழைக்காலங்களில் அதிகரித்தாலே, சளி, இருமலைத் தடுக்கலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மூலிகைகள் பெரிதும் உதவி புரிகின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டு கசாயத்தை தயாரித்து குடித்து வந்தால், மழைக்காலத்தில் சந்திக்கும் சளி, இருமலில் இருந்து விடுபடலாம்.

இந்த மழைக்கால சளி, இருமல், காய்ச்சல் குணமாக ஆயுர்வேத ஒரு அருமையான மூலிகை கசாயம். அதுவும் இது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கக்கூடியது என்றும் டாக்டர் கூறினார். இப்போது இந்த கசாயத்தை எப்படி செய்வதென்று காண்போம்.

கசாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* வெற்றிலை - 1
* கற்பூரவள்ளி இலை - 3
* துளசி இலை - 5-6
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மிளகு - 2
* கிராம்பு - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
* முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிட்டு, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கற்பூரவள்ளி இலை மற்றும் துளசி இலைகளை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரல் அல்லது மிக்சர் ஜாரில், இந்த இலைகளைப் போட்டு, ஒருமுறை இடித்து அல்லது அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி, அத்துடன் இடித்த இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 3/4 டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

எப்போது குடிக்க வேண்டும்?
* இந்த மூலிகை கசாயத்தை காலை உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும் குடிக்க வேண்டும்.
* இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வர வேண்டும் என்று டாக்டர் கூறினார்.

கசாயம் குடிப்பதால் பெறும் நன்மைகள்
* மழை நேரத்தில் இந்த மூலிகை கசாயத்தை குடித்தால், அது நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை முறித்து வெளியேற்றுவதோடு, நுரையீரலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.

* ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை, நிமோனியா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு மழைக்காலத்தில் அந்த நிலைமை தீவிரமாகும் வாய்ப்புள்ளது. இதை இயற்கையாகவே சரிசெய்ய இந்த மூலிகை கசாயம் பெரிதும் உதவி புரியும்.

* காய்ச்சல் உள்ளவர்களும் இந்த கசாயத்தைக் குடிக்கலாம். அதுவும் இந்த கசாயத்தை ஆன்டி-பயாடிக் எடுத்தாலும், குடிக்கலாம். இப்படி குடிக்கும் போது, அது காய்ச்சலைக் குறைக்கும்.

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?நீங்கள் 10அடிக்கு 10 அ...
27/09/2025

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறையின் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி, முழங்கால் மூட்டு வலி, கணுக்கால் எலும்பில் வலி, குதிகால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன். அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள். நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது, இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது). எனவே தான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பளுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பளுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

100 வயது ஆனாலும் இந்த 10 நோய்கள் கிட்டக்கூட வராதுமூட்டு வலி, வாயு கோளாறு, இடுப்பு வலி, தைராய்டு, உடல் சோர்வு, பாத எரிச்ச...
27/09/2025

100 வயது ஆனாலும் இந்த 10 நோய்கள் கிட்டக்கூட வராது

மூட்டு வலி, வாயு கோளாறு, இடுப்பு வலி, தைராய்டு, உடல் சோர்வு, பாத எரிச்சல், சர்க்கரை நோய், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு பிரச்சினைகளுக்கு... இந்த கசாயம்: சீரகம்... கொத்த மல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, துளசி சிறிதளவு கலந்து எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து மூடிவைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வந்தால்' மேலே சொன்ன 10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது.

உங்கள்  #மனைவியிடம்  #இல்லாதது  #மற்ற  #பெண்களிடம்  #எதுவும்  #இல்லை…!👉 ஏனெனில், அவளின் சிரிப்பு, அன்பு, பாசம் – எல்லாம்...
26/09/2025

உங்கள் #மனைவியிடம் #இல்லாதது #மற்ற #பெண்களிடம் #எதுவும் #இல்லை…!

👉 ஏனெனில், அவளின் சிரிப்பு, அன்பு, பாசம் – எல்லாம் உங்களுக்கே உரியது.

🌹 உண்மையான ஆண் –
மற்றவரின் அழகைக் காண்பதில்லை,
தன் மனைவியையே அழகாக்கி ரசிப்பான்..!

💑 அவள் தான் உங்கள் வாழ்க்கைத் துணை,
உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி,
உங்கள் உலகத்தின் ராணி..! 👑

👉 மற்றவரை பார்த்து ஆசை கொள்ளாமல்,
தன் மனைவியை மதித்து நேசிப்பதே
உண்மையான காதல்! ❤️

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு...
26/09/2025

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தை
களுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமான
மாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்தி
லிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11.குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரை
யுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14.பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்
கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவு
களுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.

 #கணவன்  #மனைவி  #பிரச்சனைக்கு  #முற்றுப்புள்ளி  #வைக்கலாம் ..!!!------------------------------------------------கணவன் ம...
25/09/2025

#கணவன் #மனைவி #பிரச்சனைக்கு
#முற்றுப்புள்ளி #வைக்கலாம் ..!!!
------------------------------------------------

கணவன் மனைவி இருவருக்குமிடையில் திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. நமது பெரியவர்கள் கூட "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இதற்கு காரணம், சரியான பரஸ்பர புரிதல் இல்லாமையே. புரிதல் இல்லாத நிலை தொடர்ந்தால் விவாகரத்து வரைக்கும் கூட செல்ல நேரிடும் . குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை வரும். அப்படி ஒரு நிலை வராமல் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி பார்ப்போம். ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள் சில ...

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்லலாம்.

3. இருவரில் ஒருவர் தவறு செய்திருப்பின் அடுத்தவர் முன்னிலையில் அதனை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தாமல் தனிமையில் சுட்டிக்காட்டி விளக்கலாம்.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5. எப்போது பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டோ இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசுங்கள்.

6. சமையல் முதல் EB பில் கட்டுவது என அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

7. சாப்பிடும் தருணங்களில் டிவி யில் கவனம் திருப்பாமல், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

8. தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

9. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள்.

10. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது SMS. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி SMS அனுப்புங்கள்.

11. ஒருவரின் தேவைகள் என்னவென்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

12. வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் கூர்ந்து கவனிக்க வேண்டும் சரியானதாக இருப்பின் ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

13. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டுதல் அன்பை மேலும் வலுப்படுத்தும்.

14. ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையில் இருந்தும் பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

15. வெளியூரில் இருந்தால், அலைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

16. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

17. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

18. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளுதல் கூடவேகூடாது.

19. பிறந்த நாள், திருமணநாள் போன்ற நாட்களை மறந்துவிடாமல் பரிசுப்பொருட்கள் தந்து ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

20. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

21. கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

22. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். முத்தம் என்பது காமம் சார்ந்த விஷயமல்ல, அது காதலை வெளிப்படுத்தும் நிலைப்பாடு.

23. வீட்டில், குழந்தைகளுக்கு எதிரில் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக்கொள்ளாதீர்கள். குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

24. குழந்தைகளின் படிப்பு, எதிர்காலதிட்டம் ஆகியவற்றை இருவருமே கலந்து ஆலோசனை செய்யுங்கள்.

25. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

26. உங்கள் இருவருக்குள் நடந்த சுவாரஸ்யமான கடந்தகால காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். இது அன்பு குறையாமல் இருக்க உதவும்.

27. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் பிரதானமாக இருக்க வேண்டும்..

28. சாதாரணமாக கை பிடித்து நடக்கும்போது கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை அந்த பிடி ஏற்படுத்த வேண்டும்.

29. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

30. கணவனோ/மனைவியோ அடுத்தவரின் குடும்பத்தாரை குறைக்கூறாதீர்கள். அது உங்களது குடும்பத்தினர் மீது அவருக்கு துவேஷத்தை ஏற்படுத்தும்.

31. ஒருவருக்கொருவர் அனாவசியமாக சந்தேகப் படாதீர்கள்.

32. ஒருவருக்கொருவர் காதலை வெளிக்காட்ட தயங்காதீர்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் எதற்கும் பிரயோஜனப்படாது.

33. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படியோ/ குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படியோ உங்கள் துணையை வற்புறுத்தாதீர்கள்

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அன்னியோன்னியத்தை வலுப்படுத்தும் ஆயுதங்கள். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும். விட்டுக்கொடுப்பதால் உங்களின் உறவு கெட்டுவிடாது ..!!!
அது மேலும் இறுகி கெட்டிப்படும்..!!!
~மகிழா. 💃
- மீள் பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Nalayiram Tsi
25/09/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Nalayiram Tsi

Address

Coimbatore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when பாட்டி வைத்தியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share