பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பாட்டி வைத்தியம், Digital creator, Coimbatore.

#குறிப்பு:- இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 #பெற்றோர்களின்  #கனிவான  #கவனத்திற்கு...1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு...
24/09/2025

#பெற்றோர்களின் #கனிவான #கவனத்திற்கு...

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்...

2.மேலாடையின்றியோ... ஆடை இன்றியோ... குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்..

3.ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்..

4. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்..

5. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்.

6. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக் காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்..

7. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்..

8. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகி விடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

9. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

10 .உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்..

11. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

12. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.

13. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

14. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டையிடாதீர்கள்..

15. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல..

[படித்ததை பகிர்ந்தது ]

Shout out to my newest followers! Excited to have you onboard! Louis Musicpoint, வினோத், Mohamed Fasrin, Sakthi Vel, Tha...
24/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Louis Musicpoint, வினோத், Mohamed Fasrin, Sakthi Vel, Thaniga M, Sajn, Vijayan, Yohes Cj, Chandrasekar R, HRavi, Arumugam Balasubramanian Mariappan, Rimzana Munas, Mohan Raj, Fatima Rukhsana Rukhsana, Aaysha Aayshu, Mohamed Mohammed, Partha Sarathi, Archchana Sivakumar, Jothi Lakshmi

🚨🥥💧 ஒரே ஒரு டம்ளர்– 10 நிமிடங்களில்  #குடலை  #சுத்தம்  #செய்யும்  #இயற்கை  #பானம்! 💧🥥🚨காலை எழுந்தவுடன் உடல் பருமனாக, வீக...
24/09/2025

🚨🥥💧 ஒரே ஒரு டம்ளர்– 10 நிமிடங்களில் #குடலை #சுத்தம் #செய்யும் #இயற்கை #பானம்! 💧🥥🚨

காலை எழுந்தவுடன் உடல் பருமனாக, வீக்கம் (bloating) கொண்டதாக, சோர்வாக உணர்ந்ததுண்டா? 🤔
👉 அதற்கான எளிய இயற்கை மருந்து உங்களுக்குத் தெரியுமா?
அது தான் – எலுமிச்சை + இஞ்சி + கற்றாழை பானம் 🌿

📌 இதன் பயன்கள்:
🔹 10 நிமிடங்களில் மலச்சிக்கல் நீங்கும்.
🔹 வயிற்று வீக்கம், வாயுக் குமட்டல் குறையும்.
🔹 குடல் சுத்தமாகி, நச்சுகள் வெளியேறும்.
🔹 நல்ல பாக்டீரியாவை வளர்த்து குடல் ஆரோக்கியம் மேம்படும்.
🔹 மிகக் குறைந்த செலவில் (₹150-க்கும் குறைவாக வாரம் முழுவதும்) ஆரோக்கியம் கிடைக்கும்.
🔹 உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
🔹 ஜீரண சுதந்திரம் → வயிறு லேசாக, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

🌿 #செய்முறை:
1 கப் வெந்நீரில்,
✅ அரை எலுமிச்சைச் சாறு
✅ 1 அங்குலம் இஞ்சி துருவல்
✅ 1 டீஸ்பூன் தூய கற்றாழை (Aloe Vera) ஜெல்
👉 காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
💡 இனிப்பு விரும்பினால் சிறிது தேன் சேர்க்கலாம் 🍯

⚠️ #கவனிக்க #வேண்டியவை:
➡️ கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் – மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே பயன்படுத்தவும்.
➡️ எப்போதும் புதியதும், இயற்கையானதும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

💡 வழக்கமான மருந்துகள் (laxatives) Vs இந்த பானம்:
✔️ முழுக்க இயற்கை
✔️ பக்கவிளைவுகள் குறைவு
✔️ செலவு மிகக் குறைவு
✔️ குடலை மென்மையாக சுத்தம் செய்யும்

❤️ மலச்சிக்கல் மற்றும் bloating பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் – இந்த பானம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!
👉 இன்று முதல் காலை பழக்கமாக ஆரம்பியுங்கள்.
👉 இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களும் ஆரோக்கியமாக வாழ உதவுங்கள்.

#இயற்கைமருந்து #குடல்சுத்தம் #மலச்சிக்கல்தீர்வு #எலுமிச்சைஇஞ்ஞிகற்றாழை #ஆரோக்கியஉதவிக்குறிப்புகள் #ஆரோக்கியமேசெல்வம் #இயற்கைசுகாதாரம்
#பாட்டி #வைத்தியம்

 #உங்கள்_குழந்தைகள்_மரியாதை_காட்டாமல்_நடந்தால்_என்ன_செய்ய_வேண்டும் 7  #முக்கிய  #வழிகள்! 👨‍👩‍👧‍👦💔 #பாட்டி_வைத்தியம்ஒரு ப...
24/09/2025

#உங்கள்_குழந்தைகள்_மரியாதை_காட்டாமல்_நடந்தால்_என்ன_செய்ய_வேண்டும் 7 #முக்கிய #வழிகள்! 👨‍👩‍👧‍👦💔
#பாட்டி_வைத்தியம்
ஒரு பெற்றோராக, உங்கள் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், பொறுப்பையும் தருகின்ற குழந்தைகள், உங்களுடைய ஆலோசனைகளை புறக்கணிப்பதும், மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதும், மனத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 😔

ஆனால் கவலைப்பட வேண்டாம். உணர்ச்சிகளை புரிந்து, அமைதியான முறையில் நடந்து, தெளிவாக செயல்பட்டால், அவர்களின் நடத்தையில் மாற்றம் வந்து உறவுகள் மீண்டும் வலுப்படலாம்.

1. #மனதைக் #குளிரவைக்கும்

முதலில், உங்கள் கோபத்தை உடனே வெளிப்படுத்த வேண்டாம்.

குழந்தைகளின் தவறான நடத்தை உடனே எடுத்துக் கொள்ளாமல், சிறிது நேரம் தாமதம் செய்க

சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் கழித்து சாந்தியான மனநிலையில் பதிலளிக்கவும்

கோபத்தில் முடிவெடுக்காமல் நடப்பது, உறவுகளை மேலும் கெடுக்காமல் பாதுகாக்கும்

2️⃣ #உணர்வுகளை #நேர்மையாக #பகிருங்கள்

உங்கள் உணர்வுகளை அமைதியான முறையில், குற்றம்சாட்டாமல் வெளிப்படுத்துங்கள்:

உதாரணம்: “நான் இதை உணர்கிறேன்…”, “இந்த நடத்தை எனக்கு வலி தருகிறது…”

குற்றம்சாட்டுவது, மாற்றத்தை ஏற்க அவர்களை தடுக்கும்

உணர்வுகளை பகிர்வது, உறவுகளில் புரிதல் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தும்

3️⃣ #குழந்தைகளைச் #சிறப்பாக #கேளுங்கள்

மாறாமல் பேசுவதற்குப் பதிலாக, அவர்களின் கருத்தை கேளுங்கள்:

அவர்கள் ஏன் அந்த நடத்தை செய்தார்கள் என்று கேட்டறியுங்கள்

அவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டால், உரையாடல் மெல்ல மெல்ல கட்டுப்பாட்டுடன் நடக்கும்

இது உங்கள் குழந்தைகளுடன் நெருக்கத்தை மீட்டுக் கொள்ள உதவும்

4️⃣ #தெளிவான #எல்லைகளை #வரையுங்கள்

மீண்டும் மரியாதையில்லா நடத்தை எதிர்நோக்காதீர்கள்:

“நீங்கள் இதுபோல் நடந்தால், நான் வருந்துவேன்” அல்லது “நம்ம உறவு இதனால் பாதிக்கப்படும்” என்று தெளிவாக சொல்லுங்கள்

எல்லைகளை கூறும்போது, அமைதியான மற்றும் அன்பான மொழியை பயன்படுத்துங்கள்

5️⃣ #நேர்மையான #ஆலோசனைகள் #வழங்குங்கள்

உங்கள் கருத்துகளை விரோதமின்றி, அன்புடன் பகிருங்கள்:

வாதம் செய்யாமல், உறவின் நலனை முன்னிலைப்படுத்தி பேசுங்கள்

உதாரணம்: “நான் உங்கள் வாழ்க்கையை நலமாக விரும்புகிறேன், அதற்காக இந்த ஆலோசனையை பகிர்கிறேன்”

இதனால் அவர்கள் எதிர்மறையாக நினைக்க மாட்டார்கள்

6️⃣ #மாற்றத்திற்கு #பொறுமை #காத்திருங்கள்

மாற்றம் உடனடியாக வரும் என்று எதிர்பாராதீர்கள்:

பழக்கங்கள் உடனே மாறாது

பொறுமை மற்றும் அன்புடன் காத்திருங்கள்

சிறிய முன்னேற்றங்களையும் பாராட்டுங்கள்

மனச்சாந்தியும் உறவுகளின் நலமும் வெகு விரைவில் மேம்படும்

7️⃣ #ஆதரவு #தேடுங்கள்

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது மனோதத்துவ ஆலோசகர் உதவிகரமாக இருக்கும்

உங்கள் மனநலத்தை பாதுகாக்கும் வழியாக, உறவுகளின் உறுதி கூட பாதுகாக்கப்படும்

நீங்கள் அமைதியாகவும், மனச்சாந்தியுடன் இருக்கும்போது, உறவுகளிலும் பிரச்சனைகள் குறையும்

🌟 #முக்கிய #கருத்து:
உறவுகள் புரிதல், ஒற்றுமை மற்றும் நேர்மை ஆகிய மூல அடிப்படையில் வளரும்.
நீங்கள் அமைதியாக நடந்து, மனதில் கோபத்தை நீக்கம் செய்தால், உங்கள் பெரியவர்கள் மரியாதை காட்டத் தொடங்குவார்கள். 💖

#நீங்கள் #செய்ய #வேண்டியது:

7 நெறிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்

உங்கள் குடும்ப உறவுகளில் சாந்தி மற்றும் மரியாதை நிலைத்திருக்கும்

மனநலம், உறவுகள், மனச்சாந்தி அனைத்தும் மேம்படும.

👉 இந்த அறிவுறுத்தல்களை படித்து ரசித்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களும் உறவுகளில் நல்ல மாற்றம் காண உதவுங்கள்! 🙏
#பாட்டி_வைத்தியம்

 #சுகர்  #நோயாளிகளுக்கு  #இன்சுலின்  #ஊசி💉  #போடும்  #நிலை  #ஏன்  #வருகிறது??? இன்சுலின் ஊசி நல்லதா👍??? கெட்டதா👎??? Dr.ஃ...
24/09/2025

#சுகர் #நோயாளிகளுக்கு #இன்சுலின் #ஊசி💉 #போடும் #நிலை #ஏன் #வருகிறது???

இன்சுலின் ஊசி நல்லதா👍???
கெட்டதா👎???

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.

நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.

it's a deficiency .

அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக "நீரிழிவு" என்று அழைக்கிறோம்

Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.

ஒரு நார்மல் மனிதன்
அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும்

ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும்.

உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில்
"இன்சுலினை" ரத்தத்தில் கலக்கும்.

இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.

மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும் தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும்.
இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும்.

அப்போதும் இன்சுலின் சுரக்கும்.
ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை "கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்" என்று அழைக்கிறோம். Anabolic harmone.

மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது.

இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது.

இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும்
"இன்சுலின்" என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.

இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது போதுமான அளவு சுரக்காது .
இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I) உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்

இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது.

அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும்.
மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள் ஏறிவிடும்.
நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை.
புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம்.

பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும் .எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.

இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.

டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?

பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன.

எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை "இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்"
நமது உடல் ஒரு இயந்திரம் என்றால்

அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.

மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக
"ஜீன்கள்" எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது.

அடுத்த காரணங்களாக
அதிக கலோரி உணவு
அதிக உடல் எடை
குறைந்த உடல் பயிற்சி
அதீத மன அழுத்தம்/உளைச்சல்

போன்றவற்றை கூறுகிறது.

நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor

ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில்
முதன்மையாக நான் கருதுவது

"உணவு"

டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?

1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது.

இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.

2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம்.

எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்

இப்போது இன்சுலின் ஊசி 💉ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்

ஒரு சராசரி தமிழருக்கு
40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது

அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.

ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார்.
டீயில் சீனியை நிறுத்தவில்லை.
ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன.

இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன.

கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.

ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை.

காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன.
பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு.

இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.

அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் .

இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது.
ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.

இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன.

இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?

இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும் ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.

ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால்

இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை என்று அர்த்தம்.

நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்வோம்

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட பல வீடுகளில் கிணறுகள் இருந்தன

அதில் சில அடிகளில் தண்ணீர் கிடைத்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் அதிகமாகவே தண்ணீர் தேவையும் அதிகமாக அதிகமாக ஆள்துளை கிணறுகள் போட்டு உறிஞ்சி எடுத்தோம்

இப்போது ஆள்துளை கிணறுகளிலேயே காற்று தான் வருகிறது.

உடனே நாம் தண்ணீரை கேன்களிலும் வண்டிகளிலும் வாங்குகிறோம் .

இதே நிலை தான் இன்சுலினுக்கும்..

மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது.

உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை.
மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம்.

நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம்

இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.அவை

1. கடும் நோய் தொற்று
2. விபத்தில் மோசமான காயம்
3. அறுவை சிகிச்சை
4. ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
5. கர்ப்பிணிகள்

மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரி வர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது

இப்போது இந்த கட்டுரையின் கடைசி மற்றும் முக்கிய பகுதிக்கு வருவோம்.

ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???

இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.

எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன்.

பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.

தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும்

அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள்

இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில்

நிச்சயம் அது நன்மை செய்வது தான்.
அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும் , பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் நிச்சயம் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.

இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
#இன்சுலின்எனும்அமிர்தம்
#அளவுக்குமிஞ்சினால்அமிழ்தும்நஞ்சே.

🍎🌿 உங்கள் உடலை  #ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்  #அற்புத  #உணவுகள்! 🌿🍎நாம் தினசரி சாப்பிடும் உணவுகள், உடல் உறுப்புகளின் ஆ...
24/09/2025

🍎🌿 உங்கள் உடலை #ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் #அற்புத #உணவுகள்! 🌿🍎

நாம் தினசரி சாப்பிடும் உணவுகள், உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி ஊட்டச்சத்து தேவை. இந்தப் பதிவில், உடலின் ஒவ்வொரு பகுதியையும் உற்சாகமாக வளர்க்கும் உணவுகளை அழகாகவும் விரிவாகவும் தொகுத்துள்ளோம். 😍

🧠 மூளை – புத்திசாலித்தனத்திற்கு ஊட்டச்சத்து

சால்மன், டூனா, சார்டின்ஸ்: ஒமேகா-3 கசேரிகள் மூலம் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்

வால்நட் பாசறைகள்: நினைவாற்றல், மனநிலை, மற்றும் நரம்பு செயல்பாடுக்கு உதவும்

🌬️ மூச்சுப்பை – சுவாச சக்திக்கு

ப்ராக்கோலி, பிரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ், கட்கேஜ் காய்கறிகள்: தசைகள் மற்றும் சுவாச உறுப்பு நலத்தை பாதுகாக்கும்

இதனால் இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறும், சுவாசம் தெளிவாக இருக்கும்

💪 முனைத் தசைகள் – சக்தி மற்றும் வலிமை

வாழைப்பழம், செம்மீன், முட்டை: தசை வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும்

தினசரி உடற்பயிற்சியுடன் சேர்த்து சாப்பிடினால், தசை வலிமை உயரும்

💇 முடி – பலம் மற்றும் வளர்ச்சி

ஆட்டுக்கறி, பீன்ஸ், பச்சைக் காய்கறிகள்: முடி நலத்திற்கு தேவையான புரதம் மற்றும் வைட்டமின்கள்

முடி உறிஞ்சல், பளிங்கு, வலிமை பெற உதவும்

👀 கண்கள் – தெளிவும் கண் ஆரோக்கியமும்

கோன், முட்டை, காரட்: இரவு பார்வை மேம்படுத்தும் மற்றும் கண் பாதிப்புகளை தடுக்கும்

ஒட்டுமொத்த பார்வை திறனை வலுப்படுத்தும்

🌸 உதிரி மற்றும் சருமம் – அழகு மற்றும் ஆரோக்கியம்

புளூபெரி, சால்மன், கிரீன் டீ: சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

முகத்தில் பிரகாசம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும்

❤️ இதயம் – வலிமை மற்றும் பாதுகாப்பு

தக்காளி, உருளைக்கிழங்கு, பிரூன் ஜூஸ்: இதயத்தை ரத்தசிந்தனையிலிருந்து பாதுகாக்கும்

ஹார்மோன் சமநிலையும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடில் இருக்கும்

🦴 எலும்புகள் – வலிமை மற்றும் உறுதி

ஆரஞ்சு, செல்லரி, பால்: கால்சியம் மற்றும் வைட்டமின் D மூலம் எலும்புகளை வலுப்படுத்தும்

முதுகு மற்றும் மூட்டு பிரச்சனைகளை குறைக்கும்

💡 முக்கியக் கருத்து:
உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி உணவுகள் உண்டு. உங்கள் அன்றாட உணவில் இவற்றைச் சேர்த்தால், உடல் முழுவதும் ஆரோக்கியமாகும்.

✨💪 “ஆரோக்கியமான உடல்... ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முதல் படி!” 💪✨

இந்த அறிவுறுத்தல்களை படித்து ரசித்தால், #உங்கள் #நண்பர்களுக்கும் #பகிர்ந்து, அனைவரும் ஆரோக்கியமாக வாழ உதவுங்கள்! ❤️

 #அல்சர்  #ஏற்படுவதற்கு  #முக்கிய  #காரணங்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) பாக்டீரியா தொற்று மற்றும் ஸ்டெராய்டல் அல்...
23/09/2025

#அல்சர் #ஏற்படுவதற்கு #முக்கிய #காரணங்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) பாக்டீரியா தொற்று மற்றும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDs) நீண்டகாலமாக உட்கொள்வது ஆகும். மேலும், புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், மன அழுத்தம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, அத்துடன் செரிமானத்தின்போது சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அதிகப்படியான உற்பத்தி மற்றும் வயிற்றின் பாதுகாப்பற்ற சளி படலமும் அல்சர் உண்டாவதற்கு வழிவகுக்கும்.

முக்கிய காரணங்கள்:

H. பைலோரி தொற்றுகள்:
இது பெப்டிக் அல்சர் நோய்க்கான மிக பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
NSAID மருந்துகளின் பயன்பாடு:
அஸ்பிரின் மற்றும் இபுப்ரோஃபென் போன்ற சில அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வயிற்றுப் புறணியை சேதப்படுத்தி அல்சரை உண்டாக்கும்.
பிற காரணிகள்:

புகைபிடித்தல்:

புகைப்பிடிப்பவர்களுக்கு அல்சர் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் சிகிச்சையின் செயல்திறனைக் குறைக்கிறது.

மது அருந்துதல்:

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளல் வயிற்று அமில உற்பத்தியை அதிகரிக்கிறது, இது புண்களை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம்:

நவீன வாழ்க்கையின் மன அழுத்தம் அல்சர் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
அதிகப்படியான அமில உற்பத்தி:
வயிற்றின் பாதுகாப்பு சளிப் படலம் சிதைவடையும் போது, அமிலம் வயிற்றுத் திசுக்களை அழித்து புண்களை உண்டாக்கும்.

அல்சரின் வகைகள்:

இரைப்பை புண் (Gastric Ulcer):
வயிற்றின் உள் புறத்தில் ஏற்படும் புண்கள்.
சிறுகுடல் புண் (Duodenal Ulcer):
சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படும் புண்கள்.

இன்றைய காலகட்டத்தில் இரவில் சரியான நேரத்தில் உறங்குபவர்கள் எத்தனை பேர்...?    பலபேர் இன்று தொலைபேசியில் இரவு உறக்கம் தொல...
20/09/2025

இன்றைய காலகட்டத்தில் இரவில் சரியான நேரத்தில் உறங்குபவர்கள் எத்தனை பேர்...?

பலபேர் இன்று தொலைபேசியில் இரவு உறக்கம் தொலைத்து எதை தேடுகிறார்கள் என்று தெரியவில்லை.. 😣😓 இது எனக்கு சற்று வேதனையாகவும் கோபமாகவும் இருக்கிறது.

❣️சிகிச்சைக்காக வருபவர்களிடம் மட்டுமே கேட்டு பழகிய வார்த்தை இன்று நட்பு, உறவு, ஏன் சின்ன பிள்ளைகள் கூட சொல்வதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது... 🤔🤔
என்ன வார்த்தை என்று தெரிகிறதா...?
#இரவில் #தூக்கம் #வரமாட்டேங்குது

ஆனால் இது ஏன்...?
இரவில் ஏன் உறங்க வேண்டும்...?
இதனால் என்ன உடலில் நடக்கிறது...?
இரவில் உறங்குவது அவ்வளவு முக்கியமா...?
பகல் உறக்கம் இரவு உறக்கத்தை ஈடு செய்யாதா...?

இப்படி பல கேள்விகள் உங்களுக்கு வரலாம். இதற்கு எல்லாம் ஒரே பதில்
" #இரவு #உறக்கம் #மிக #மிக #அவசியம்"👍
ஆம்...
வாருங்கள் சற்று விளக்கமாக பார்க்கலாம். ஆனால் #முழுமையாக #படித்து பதில் சொல்ல வேண்டும்.

💙மனித உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் பொதிந்து உள்ளன!!. அதை அறிவதற்கு நமக்கு #நேரமும் இல்லை , #பொறுமையும் இல்லை.. என்பது தான் உண்மை.
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் #உயிரியல் #நேர #முறைமை (Biological Clock System)!!!

💙இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் மூன்றாவது கண் என்று எல்லோரலும் அழைக்கப்படும் #பினியல் சுரப்பி!

💜நிலக்கடலை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!…
இது செய்யும் வேலைகளை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் முதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த பினியல் சுரப்பி _ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது என்பது தான்.!!

💜அதுதான் மெலடோனின் (melatonin)!!*
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மட்டுமல்லாது நம்மை நமக்கு புரியவைத்து தன்னம்பிக்கை எனும் தைரியத்தை அளிக்கிறது.

💜மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை.
இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

💙இரவின் #இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!*
இப்பொழுது புரிகிறதா? நம் முன்னோர்கள் பலர் ஏன் முன்னே உறங்கி முன்னே எழும் பழக்கம் வைத்திருந்தார்கள் என …
அவர்களின் வாழ்க்கைத் தரம், ஆரோக்கியம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
மேலும் அவர்கள் அரிக்கேன் லைட்டை வைத்து வாழ்ந்து இரவு படுக்கும் போது இருளில் தான் தூங்குவார்கள்.
இருளில் தூங்கும் போது பீனியல் சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

💙ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் “ #மெலடோனின் “, நமது இரத்த நாளங்களில் ஆசுவாசமாக பாய்ந்தோடும்.!!

💜ஆனால் இன்று இரவு முழுவதும் *நமது கண்கள் #மொபைல் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!*
💜பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆரம்பித்து காலை 5 மணிக்கு குறைந்து விடும்!!.

💜இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!.
எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்றும், மற்றும் பல நல்ல செயல்கள் செய்யும் எனவும் இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது!!

💙அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

💙ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

💜இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

💜இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!
நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

💜*அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!*

*💙அதிகாலையில் எழும் போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!*

💙அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

💜*எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.*

💜முன் படுத்து முன் எழுவோம். பீனியலை பாதுகாப்போம். மெலடோனினை முழுமையாக பெறுவோம்..
நன்றி..🌹🌹
🤔🤔இப்போ சொல்லுங்க இரவு நீங்க எத்தனை மணிக்கு தூங்குறீங்க... ?நமக்கு எது முக்கியம்... ?என்று.... 😎😎
நலமுடன் வாழ வாழ்த்துக்கள்👌👍

இந்த பதிவை அவசியம் பகிருங்கள். 👍

 #சூரியகாந்தி  #விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது இதய ஆரோக்கியத்தை மேம...
16/09/2025

#சூரியகாந்தி #விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது, மற்றும் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம் மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு
சூரியகாந்தி விதைகளில் உள்ள லினோலிக் அமிலம் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

#எலும்புகள் மற்றும் #பற்கள்

இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை.

#புற்றுநோய் மற்றும் #இரத்த #சர்க்கரை #கட்டுப்பாடு

வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், இது புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.
மேலும், இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

#சருமம் மற்றும் #முடி #ஆரோக்கியம்

வைட்டமின் ஈ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

#பிற #பயன்கள்
சூரியகாந்தி விதைகளை பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம், இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.
அவற்றில் பி வைட்டமின்கள், தாமிரம் போன்ற தாதுக்களும் உள்ளன.

 #அவுரி  #இலை
13/09/2025

#அவுரி #இலை

 #துளசியை_அதிகமாக #சாப்பிட்டால் #ஏற்படும் #தீமைகள் #துளசியை_அதிகமாக_சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள், இரத்தப் போக்கு, ம...
13/09/2025

#துளசியை_அதிகமாக
#சாப்பிட்டால்
#ஏற்படும்
#தீமைகள்

#துளசியை_அதிகமாக_சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள், இரத்தப் போக்கு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆபத்து ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக துளசி சாப்பிடுவது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். மேலும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறையலாம். எனவே, துளசியை மிதமான அளவில் சாப்பிடுவது அவசியம்.

துளசி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

செரிமானப் பிரச்சனைகள்:

அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்வதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இரத்தப் போக்கு:

துளசி இரத்தப் போக்கை அதிகரிக்கக்கூடும்.

இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம்:

துளசியை அதிக அளவில் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
கல்லீரல் புற்றுநோய் ஆபத்து:
அளவுக்கு மீறி துளசி உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.

கருக்கலைப்பு ஆபத்து:

கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக அளவில் துளசி சாப்பிட்டால், அது கருக்கலைப்புக்கு வழிவகுக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வாமை எதிர்வினைகள்:

சில சமயங்களில், துளசி ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்.
யாரெல்லாம் துளசி சாப்பிடக்கூடாது?
கருவுற்றிருக்கும் பெண்கள்
இரத்தப்போக்கு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள்
கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள்

பரிந்துரை

துளசியை மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.
எந்தவொரு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. துளசியை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள், இரத்தப் போக்கு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆபத்து ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக துளசி சாப்பிடுவது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். மேலும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறையலாம். எனவே, துளசியை மிதமான அளவில் சாப்பிடுவது அவசியம்.
துளசி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்
செரிமானப் பிரச்சனைகள்:
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்வதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இரத்தப் போக்கு:

துளசி இரத்தப் போக்கை அதிகரிக்கக்கூடும்.
இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம்:
துளசியை அதிக அளவில் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
கல்லீரல் புற்றுநோய் ஆபத்து:
அளவுக்கு மீறி துளசி உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.
கருக்கலைப்பு ஆபத்து:
கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக அளவில் துளசி சாப்பிட்டால், அது கருக்கலைப்புக்கு வழிவகுக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வாமை எதிர்வினைகள்:
சில சமயங்களில், துளசி ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்.
யாரெல்லாம் துளசி சாப்பிடக்கூடாது?
கருவுற்றிருக்கும் பெண்கள்
இரத்தப்போக்கு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள்
கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள்
பரிந்துரை
துளசியை மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.
எந்தவொரு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Address

Coimbatore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when பாட்டி வைத்தியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share