30/04/2026
கோவையில் சாமியார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது பேத்திகள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை நவக்கரையை சேர்ந்தவர் ராமானந்தமூர்த்தி. சாமியாரான இவர் அதே பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ‘ஸ்ரீ மலையாள தேவி துர்கா பகவதி பிராட்டியம்மன்’ என்ற கோவிலைக் கட்டி பராமரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2024ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் கோவில் வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது.ஆனால், சாமியார் உயிரிழந்த தகவலை அவரது முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், இரண்டாவது மனைவியின் மகன் ஆனந்தகுமார் தன்னிச்சையாக புதைத்ததாக கூறப்படுகிறது.