News South India

News South India News South India

09/10/2025

கம்பம் நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் வனிதா நெப்போலியன் நகர் மன்ற தலைவராகவும் சுனோதா நகர்மன்ற துணைத்தலைவராகம் இருந்து வரும் சூழலில் இவர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக கவுன்சிலர் ஆறு பேரும் திமுக கவுன்சிலர்கள் 16 பேரும் நம்பிக்கை உள்ள தீர்மானம் கொண்டு வந்தனர் அதற்கான வாக்கெடுப்பு தற்பொழுது 11 மணியளவில் நடைபெற உள்ளது

தற்பொழுது நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக 15 பேர், அதிமுக 3 பேர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருவர் என மொத்தம் 19 நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர் கம்பம் நகராட்சி கூப்பிட்டா அரங்கில் இந்த வாக்கெடுப்பானது தற்பொழுது நடைபெறுகின்றது. நகர் மன்ற ஆணையாளர் உமா சங்கர் தலைமையில இந்த வாக்கெடுப்பானது நடைபெறுகின்றது.

கம்பம் மன்றத்தில் மொத்தம் 33 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அரசு விதியின்படி ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதன்படி 27 நகர் உறுப்பினர்கள் நம்பிக்கை திருமணம் கொண்டு வர தேவை.

கம்ப நகராட்சியில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நகர் மன்ற உறுப்பினர்கள் கொண்டு வருவதால் நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் கம்பம் நகராட்சி பரபரப்பாக காணப்பட்டுகிறது

09/10/2025
09/10/2025

தேசிய ஊட்டசத்து விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

வேலூர் நகர அரங்கிலிருந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் தேசிய ஊட்டசத்து விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது.

இதனை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதில் வேலூர் மேயர் சுஜாதா மாவட்ட திட்ட அலுவலர் குழந்தைகள் வளர்ச்சி சாந்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.
உப்பு, சர்க்கரை எண்ணெய், உபயோகத்தை குறைப்போம் ஊட்டச்சத்தை அளிப்போம், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்போம் உள்ளிட்ட பல கோஷங்களை அடங்கிய பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

09/10/2025

.இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பாரதி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ஸ்வேதாவின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார் .இதில் பலத்த காயமடைந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை அடுத்து நடு ரோட்டில் கொலை சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள், பாரதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பொள்ளாச்சியில் நடுரோட்டில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09/10/2025

திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு இலவசமாக சேலை வழங்குவதை அறிந்த நகர் பொதுமக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் ஒன்று திரண்டு கூடியதால், செய்வதறியாது ஆர்பி உதயகுமார் இடம் பெயர்ந்து இடம் தேடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்கள் சேலைக்காக கூடுகின்றனர்.

09/10/2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும் நான்கு விசைப்படகையும், காரைக்கால் மீனவர்கள் ஒரு படகு 17 பேர் மொத்தம் ஐந்து படகு 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை ; கவலையில் மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் மோதி ஒரு விசைப்படகு சேதம்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்து கற்களை கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து நான்கு விசைப்படகையும் அதிலிருந்து 30 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் காரைக்கால் மீனவர்கள் ஒரு படகு 17 பேரையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மொத்தம் ஐந்து படகு 47 மீனவர்களை ஒரே நாளில் இலங்கை கடற்பை சிறை பிடித்துள்ளது.
மேலும் ராமேஸ்வரத் தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பலை வைத்து மோதி சேதப்படுத்தி உள்ளது. இதனால் உயிருக்கு பயந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இரவோடு இரவாக படகு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் வரை நஷ்டத்துடன் கரைத்திருமி உள்ளனர்.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

09/10/2025

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவிகள் சிறுதானியங்கள் கொண்டு வித விதமாக சமைத்து கொண்டு வந்த உணவு திருவிழா.

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உணவு திருவிழா இன்று நடத்தப்பட்டது. பாரம்பரிய மற்றும் சத்தான உணவுகளை மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்கவிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கம்பு லட்டு , கம்பு கொழுக்கட்டை , திணை அல்வா, வாழைப்பூ வடை , ராகி கூழ் , ராகி சேமியா , பச்சை பயிறு , தட்டைப்பயிறு , திணை லட்டு , பழக்கலவை , ராகி அடை , தயிர்சாதம் , மசால் சுண்டல் உள்ளிட்ட சிறுதானிய உணவு, இயற்கை உணவு வகைகள், பாரம்பரிய உணவுப் பண்டகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து தயாரித்துக் கொண்டு வரப்பட்ட உணவுப் பொருட்களை சக மாணவிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதோடு ஒவ்வொரு உணவு வகைகளின் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

09/10/2025

முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சேகரமாகும் 700 டன் குப்பைகளை அகற்ற எஸ் டபிள்யூ எம் எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களில் பலருக்கு முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து திருப்பூர் நான்காவது மண்டலம் மாட்டு கொட்டகை வளாகத்தில் 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி தூய்மை பணி மேற்கொள்ளும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்ட போதும் உரிய முறையில் பதில் தெரிவிக்கப்படவில்லை எனவும் எனவே இன்று முதல் பணி புறக்கணிப்பு செய்துள்ளதாகவும் ஊதியம் வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சியில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

09/10/2025

கோவையில் அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம், ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிடப்பட்டு அக்டோபர் 9, 2025 அன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாகும்.
முக்கிய தகவல்கள்:
திறப்பு: தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பெயர்க்காரணம்: 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்ட கோவை விஞ்ஞானியும், தொழில்முனைவோருமான ஜி.டி. நாயுடுவின் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
அமைப்பு:
இது 10.10 கி.மீ நீளம் கொண்டது.
ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இது கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சை: ஒருசில அரசியல் கட்சிகள், முந்தைய நாள் பிறப்பிக்கப்பட்ட சாதிப் பெயர் தொடர்பான அரசாணையை சுட்டிக்காட்டி, இந்த பெயரிடுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜி.டி. நாயுடு: கோபால்சாமி துரைசாமி நாயுடு (மார்ச் 23, 1893 - ஜனவரி 4, 1974) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழில்முனைவோர். கோவையில் ஜி. டி. கார் அருங்காட்சியகம் இவருடைய நினைவாக உள்ளது.
அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம்: விக்கிபீடியா பக்கத்தின்படி, இது 10.10 கி.மீ நீளமுள்ள நான்கு வழிப்பாதை மேம்பாலம் ஆகும். இது உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் சந்திப்பு வரை செல்கிறது.

08/10/2025

பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக தொண்டர்கள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் ஒரு கார் ஓட்டுநரை மோதியதாகக் கேள்வி கேட்டதற்காக. குறிப்பாக, காரில் விசிக தலைவர் திரு. தொல். திருமாவளவன் இருந்தார்.

முரண்பாடாக, திரு. தொல். திருமாவளவன் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது சொந்தப் பரிவாரங்கள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கினர்.

08/10/2025

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் வினோத் என்பவருக்கு சொந்தமான கோ ஃபேஷன் என்ற நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை, ஈரோடு ,சேலம் மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கேரிபாளையத்தில் உள்ள கோ ஃபேஷன் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களான மெரிடியன் இன்டர்நேஷனல், ஜே பி கிளாத்திங்ஸ் என அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம் புதூர், தில்லைநகர், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் மதியம் 2 மணி முதல் துவங்கிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் இரவு முழுவதும் சோதனை நடைபெறும் என கூறப்படுகிறது சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ‍தெரியவரும்.அதேபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

08/10/2025

திருப்பூர் - திருமுருகன்பூண்டி, தனியார் மகளிர் கல்லூரியில், திருப்பூர் மாவட்ட வடக்கு தீயணைப்புத்துறை சார்பில், கவனமாக பட்டாசுகளை வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் - திருமுருகன்பூண்டி,
ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சுற்றுச்சூழல் மையம் சார்பில்,
"அக்னி இல்லா தீபாவளி" என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை விளக்கப் பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பங்கேற்று தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படதாவாறு பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதை செயல்முறை வாயிலாக விளக்கினர். அதனை தொடர்ந்து மாணவிகள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். மேலும் பருவமழை வரவுள்ள காரணத்தால் பேரிடர்கள் ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பாக என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

Address

Saravanampatty
Coimbatore
641035

Alerts

Be the first to know and let us send you an email when News South India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share