09/10/2025
கம்பம் நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் வனிதா நெப்போலியன் நகர் மன்ற தலைவராகவும் சுனோதா நகர்மன்ற துணைத்தலைவராகம் இருந்து வரும் சூழலில் இவர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக கவுன்சிலர் ஆறு பேரும் திமுக கவுன்சிலர்கள் 16 பேரும் நம்பிக்கை உள்ள தீர்மானம் கொண்டு வந்தனர் அதற்கான வாக்கெடுப்பு தற்பொழுது 11 மணியளவில் நடைபெற உள்ளது
தற்பொழுது நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக 15 பேர், அதிமுக 3 பேர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருவர் என மொத்தம் 19 நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர் கம்பம் நகராட்சி கூப்பிட்டா அரங்கில் இந்த வாக்கெடுப்பானது தற்பொழுது நடைபெறுகின்றது. நகர் மன்ற ஆணையாளர் உமா சங்கர் தலைமையில இந்த வாக்கெடுப்பானது நடைபெறுகின்றது.
கம்பம் மன்றத்தில் மொத்தம் 33 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அரசு விதியின்படி ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதன்படி 27 நகர் உறுப்பினர்கள் நம்பிக்கை திருமணம் கொண்டு வர தேவை.
கம்ப நகராட்சியில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நகர் மன்ற உறுப்பினர்கள் கொண்டு வருவதால் நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் கம்பம் நகராட்சி பரபரப்பாக காணப்பட்டுகிறது