26/07/2025
கிட்டத்தட்ட 10 வருஷ நண்பர் ஒருத்தர், family friend, ஆனா அவர் wife சரியான ஏழைரை, நண்பரின் மனைவி குணம் தெரிஞ்சி நான் அவ்ளோவா அவங்க family கூட பழக மாட்டேன்.
ஆனா எனக்கும் என் நண்பருக்கும் நல்லா நட்பு இருந்திச்சி, அவர் குடி இருக்கும் வீடு ஏதோ பிரச்சனைனு, காலி பண்ணிக்கிட்டு, எங்க வீட்டுக்கு பக்கத்து தெருல குடி வந்தார், அது வரைக்கும் என்னனா என்னனு இருந்த எங்க ரெண்டு பேரு மனைவிமார்களும், வீடு பக்கத்து தெருல அவங்க குடி வந்த பிறகு ரொம்ப close ஆகிட்டாங்க.
என் பொண்டாட்டி அவங்களை ஆக்கா, ஆக்கானு கூப்பிடுறதும், நண்பர் மனைவி என் பொண்டாட்டிய வாடி போடினு உரிமையா கூப்பிடுறதும் அலப்பறை தாங்கல.
என் வீட்டம்மா கிட்ட சொல்லி வெச்சேன் நண்பரின் மனைவி சரியான சிலாவலி case, அவங்க கிட்ட உஷாரா பழகு, ரொம்ப நெருங்கி பழகாதேனு.
அப்போவே நண்பர் கிட்ட சொல்லி வெச்சேன், இந்த ரெண்டு பெண்களையும் ரொம்ப நெருக்கமா பழக விட்டா, கடைசில நாம ரெண்டும் பேரும் சண்டை போட்டுக்கிட்டு பேச முடியாம போயிடும், ரெண்டு பேரையும் கொஞ்சம் இழுத்து புடிக்கணும், நீங்க உங்க வீட்டம்மாவை control பண்ணுங்க, நான் என் வீட்டம்மாவை கொஞ்சம் control பண்றேன்னு சொல்லி வெச்சேன்.
நான் நினைச்சா மாதிரியே 6 மாசம் கூட தாங்கல அதுக்குள்ள ரெண்டு பெண்களுக்கும் முட்டிக்குச்சி.
ரெண்டு பெண்களுக்கும் சுத்தமா பேச்சி வார்த்தை இல்லை, ஆண்கள் நாங்க மட்டும் அப்போ அப்போ பேசிப்போம், எங்களுக்குள்ள எந்த மன கசப்பும் இல்ல.
இந்த சூழ்நிலைல என் நண்பர் land வாங்க ஒரு பார்ட்டியை கூட்டிகிட்டு வரார், அந்த வியாபாரத்தை முடிச்சா ஒரு 4 லட்சம் கிடைக்கும், நானும் நண்பரும் ஆளுக்கு வர காசை share பண்ணிப்போம்.
என் வீட்டம்மா என்ன சொல்றானா? ஒரு கோடி ரூபாய் வந்தா கூட அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி மூலமா வர காசு வேணாம், இந்த டீல் முடியலைன்னா கூட பரவாயில்லை, நீங்களே வேற பார்ட்டி பாத்து முடிங்க, அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி வேணாம்னு சொல்றா. ஏன் டி இப்படி சொல்றே? இதுல என்ன இருக்கு வியாபாரம் தானேனு கேட்டேன், அதுக்கு வீட்டம்மா என்ன சொல்றாங்கனா, என் புருஷன் தான் இந்த டீல் முடிச்சார், அதலான தான் அவங்களுக்கு காசு கிடைசிச்சினு ஊரு fulla சொல்லிக்கிட்டு திரியும் அந்த பொம்பள, அதனால இந்துஜா டீல் நமக்கு வேணாம்னு சொல்லுறாங்க.
நண்பர் மனைவி ஏழைறையா இருந்தா கூட காசு விஷயத்துல கில்லாடி, அவங்க கணவர் கிட்ட சொல்லி எப்படியாவது இந்த டீலை முடிங்கனு சொல்லி இருக்காங்க.
ஒழுங்கா நாங்க ஆண்கள் நண்பர்களா இருக்குற வரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்ல, இந்த ரெண்டு பெண்கள் பழகி சண்டை போட்டுக்கிட்டு, கடைசியா ஆண்கள் செய்யும் தொழிலில மூக்கை நுழைச்சி, இதை பண்ணு, இதை பண்ணாதேனுசொல்ற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.
இந்த விஷயத்துல புத்திசாலி யார்? எப்படியாவது இந்த டீலை முடின்னு சொல்ற நண்பரின் மனைவியா? கோடி ரூபாய் வந்தாலும் அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி வேணாம்னு சொல்ற என் வீட்டம்மாவா?