04/04/2024
தேவகோட்டை அருகே வேன் மீது லாரி மோதி விபத்து.
வேன் டிரைவர் மற்றும் 5 பெண்கள் படுகாயம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டன் மில் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களை கிராமப்புறங்களில் இருந்து வேனில் அழைத்து வருவது வழக்கம். விளாங்காட்டூர் புளியால் மற்றும் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இருந்து 23 பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் தேவகோட்டை நோக்கி வந்தது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிரே வந்தது. தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மானாம்புவயல் என்ற இடத்தில் லாரி வேன் மீது உரசியது. வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த டிரைவர் கைகாட்டியைச் சேர்ந்த கருப்பையா (40), விரிசூரைச் சேர்ந்த மாலா(45), மேக்காரைக்குடியைச் சேர்ந்த பிரியா(25), வித்யா(32), விளாங்காட்டூரைச் சேர்ந்த மணிமேகலை (40), சத்யா(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக தேவகோட்டை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.