Nizhal Yugam

Nizhal Yugam Fact News & Information

BY
Easwaar Ram

திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்று பதவி சுகங்களை அனுபவித்து பின்பு கட்சியிலிருந்த...
07/04/2022

திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்று பதவி சுகங்களை அனுபவித்து பின்பு கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், அங்கும் ஒரு சிலர வருடங்களில் விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். பதவி ஏதும் தராத விரக்தியில் மீண்டும் திமுகவில் இருந்து விலகி சிறிது மாதங்கள் மௌனமாக இருந்தார் பிறகு 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்பு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது அவர் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை ஒருமையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்....

complain-against-ex-minister-mullivandan தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி இ...
05/04/2022

தமிழகத்தில் பரவலாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி இப்போதே வெயில் பதிவாகி கொண்டிருக்கிறது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் வெளியில் வரவே மிகவும் சிரமப்படுகின்றனர், வெளியே வருபவர்களுக்கு வெயிலினால் மயக்கம் சில உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. இதனால் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள்"தமிழக மக்களை கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் திமுக சார்பில் தமிழகமெங்கும் தண்ணீர்ப் பந்தல் அமைக்க வேண்டும்!"என்று தொண்டர்களுக்கு கூறியுள்ளார். இதை அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்கள் வரை செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளார் நமது முதல்வர்....

important-request-to-cm-stalin-for-dmk-members தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை துவக்கி வைத்தார், அதில் முக்கியமான ஒன...
04/04/2022

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை துவக்கி வைத்தார், அதில் முக்கியமான ஒன்று காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "காவல் உதவி"செயலி. இதில் சாதாரண மக்களுக்குப் பயன்படக்கூடிய 60 செயல்பாடுகள் உள்ளடக்கி உள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் காவலன் sos செயலி நடைமுறையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்த செயலியும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றால் அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இதைப் பதிவிறக்கம் செய்ய கியூ ஆர் கோடு தந்துள்ளனர், அதை ஸ்கேன் செய்தால் ஆட்டோமேட்டிக்காக கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் ஆகும்....

kaval-udavi-app-launch-in-tamilnadu-by-cm தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை கலைப்பது ஆக பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். ...
03/04/2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை கலைப்பது ஆக பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது, இதற்கு முக்கிய காரணம் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முக்கிய கூட்டணி கட்சி விலகியதே. சில நாள் வாக்கெடுப்புக்கு முன்பே பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் அரசு கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் எதிர்க்கட்சிகள் பின்பு ஆட்சி அமைக்கும் ஒன்றிணைந்து என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்த இம்ரான்கான் அரசு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அதிபருக்கு பரிந்துரைத்தார், அப் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது....

pakistan-assembly-disolved தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 5-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள...
03/04/2022

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 5-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, அதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது, அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேட்டி அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கண்டிப்பாக 1 முதல் 5ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கூறியுள்ளார்....

1std-to-5-standard-school-exams-news தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

இலங்கை வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டு இருக்கிறது, அண்டை நாடுகள் உலக நாடுகள...
03/04/2022

இலங்கை வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டு இருக்கிறது, அண்டை நாடுகள் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து கடனுதவி பெற்று வருகிறது. அத்தியாவசிய சேவைகளை பெறவே மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் விலைவாசி பல மடங்கு உயர்ந்து அதற்கும் கூட அங்கு கிடைப்பதற்கு பொருள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வன்முறை ஆகியது. இது ஆளும் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன இதை அரசியல் ஆக்காமல் சற்று பொறுமை காக்கவும் அரசாங்கத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தும், எதிர்க்கட்சிகள் இது மக்கள் போராட்டம் தவறான உங்கள் அணுகு முறையே இந்த நிலைமைக்கு காரணம் உடனடியாக பதவி விலகுங்கள் என்று அவர்கள் பங்குக்கு கூறி வருகின்றனர்....

social-media-banned-in-sri-lanka தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

நூல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,பின்னலாடை உற்பத்தியில் இந...
02/04/2022

நூல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக திருப்பூரில்தான் தயாராகின்றன. நூலின் விலை தொடர்ந்து அதிகம் ஆனால் அந்தத் தொழில் மிகவும் பாதிக்கும். கடந்தாண்டு ரூ.230-க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.160-ஐ வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தற்போது அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது....

vijaykanth-rise-voice-against-price-hike தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

மாநாடு பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் மன்மத லீலை. படத்தைப் பற்றி நாம் கூறுவதற்கு முன் ...
02/04/2022

மாநாடு பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் மன்மத லீலை. படத்தைப் பற்றி நாம் கூறுவதற்கு முன் இப்படம் அடல்ட் படம் என்று இயக்குனரை கூறிவிட்டார் படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்து உள்ளது. படத்தின் டிரைலர் பார்த்தவர்கள் கண்டிப்பாக படம் முழுக்க அடல்ட் காட்சிகள் இருக்கும் நினைப்பவர்களுக்கு twist வைத்திருக்கிறார் இயக்குனர், என்னப்பா கேக்குறீங்களா? படத்தில் இருக்கும் மொத்த அடல்ட் காட்சிகளும் ட்ரெய்லரில் வைத்துள்ளார்கள் மீதி எந்தக் காட்சிகளும் படம் முழுக்க இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் வெங்கட்பிரபுவை பாராட்டலாம்....

manmadha-leelai-movie-review தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார், மார்ச் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தி...
01/04/2022

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார், மார்ச் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்தார். பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவுவது ஜிஎஸ்டி இழப்பீடு, நிதிப் பங்கீடு குறித்த முக்கிய விஷயங்கள் அங்கு பேசப்பட்டது அந்த வகையில் தர்மபுரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கை ஒன்றையும் பிரதமருடன் எடுத்துரைத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு அளித்த மனுவில் தர்மபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான...

tncm-request-dharmapuri-morapur-railway-project-start-to-prime-minister தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 3, 1/2லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படு...
01/04/2022

தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 3, 1/2லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பதுக்கியவர் கைது மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல்தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரங்கசாமி அவர்கள் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் இருந்து அதியமான் கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபரைநிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் காரிமங்கலம் அடுத்த காளப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர்(41) என்பதும் அவர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது உடனடியாக போலீசார் ராஜசேகர்(42) வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 மூட்டைகளில் இருந்த 600 கிலோ குட்கா வை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் 3,1/2 லட்சம் ஆகும் மேலும் குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.

tamilnadu-police-arrest தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித...
01/04/2022

முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து மாநில உரிமைகளுக்காக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில்,தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவைத் தொகை ₨13,504.74 கோடி உட்பட ₨20,860.4 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் 2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ ₨20,000 கோடி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற முக்கிய கோரிக்கையை நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார்....

mk-stalin-and-nirmala-sitaraman-meet-in-delhi .தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் நிர்வாக ரீதியாக செய்து வருகின்றது, கலை மற்றும் கலாச்சாரத்திற்...
01/04/2022

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் நிர்வாக ரீதியாக செய்து வருகின்றது, கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருவதை நாம் பல விஷயங்களில் பார்த்து வருகிறோம் அந்த வகையில், கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டுகள் வரும் திருக் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு இசை கல்லூரி இசை பள்ளிகளில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று பாரம்பரிய கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அனைத்து கோயில் திருவிழாக்களிலும் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்றும் இவ்வாறு நடைபெறுவதை இந்து சமய அறநிலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது....

hindu-samaya-araniliya-turai-important-notice தமிழகத்தின் முன்னணி செய்தி இணையதளம்.NizhalYugam is Leading News sites in Tamil Nadu

Address

5/133, Murugabavan Complex
Dharmapuri
636352

Alerts

Be the first to know and let us send you an email when Nizhal Yugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizhal Yugam:

Share