Dharmapuri Pillars

Dharmapuri Pillars Everything about
Latest updates about Dharmapuri District - News, Jobs, Events

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காமல் போனால்..இதை அரசியல் சட்ட ரீதியாக "தொங்கு சட்டமன்றம்" என...
05/05/2026

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காமல் போனால்..

இதை அரசியல் சட்ட ரீதியாக "தொங்கு சட்டமன்றம்" என்று அழைப்பார்கள்...

​யாரும் யாருக்கும் ஆதரவு அளிக்காத பட்சத்தில், சட்டம் மற்றும் மரபுகளின்படி பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்...

ஆளுநரின் அழைப்பு
​மாநிலத்தின் அரசியல் சட்டத் தலைவர் என்ற முறையில் ஆளுநர் முடிவெடுப்பார்...

வழக்கமாக ஆளுநர் பின்வரும் வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..

முதலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை (இங்கே தவெக - 105) ஆட்சி அமைக்க அழைப்பார்...

​அவர்கள் ஆட்சி அமைக்கத் தயார் என்றால், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (வழக்கமாக 15 நாட்கள்) சட்டமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டும்...

ஒருவேளை ​எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், தவெக அரசு அமைக்க முன்வந்தால் அது 'சிறுபான்மை அரசு' ஆகச் செயல்படும்...

​வாக்கெடுப்பின் போது மற்ற கட்சிகள் (திமுக, அதிமுக) வெளிநடப்பு செய்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தாலோ அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சி தப்பிக்கும்...
​ஆனால், முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும்...

அவர்கள் எதிர்த்து வாக்களித்தால் ஆட்சி கவிழும்...

​ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் இல்லாதபோது, மற்ற கட்சி உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கலாம்..

ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 2/3 பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்கள் பதவி தப்பும்...

ஒருவர் இருவராகச் சென்றால் அவர்களின் பதவி பறிபோகும்...

​யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை, எந்தக் கட்சியும் ஆதரவு தர முன்வரவில்லை, ஆளுநரின் அழைப்பையும் யாரும் ஏற்கவில்லை என்றால், அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவார்...

​மாநிலத்தில் சட்ட ரீதியான ஆட்சி அமைய வாய்ப்பில்லை எனத் தெரிந்தால், சட்டமன்றம் முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்...

​குடியரசுத் தலைவர் ஆட்சியின் போதும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்றால், வேறு வழியின்றி சட்டமன்றம் கலைக்கப்பட்டு, 6 மாத காலத்திற்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்படும்...

சுருங்க சொன்னால், யாரும் ஆதரவு தராத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு தருவார்...

அவர்களாலும் சபை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது மறுதேர்தல் என்பதே சட்டப்பூர்வமான இறுதிக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்...

நாடு உடனே இன்னொரு தேர்தலை தாங்காது...
என் கனிப்பு சரியாக இருந்தால்...
இப்போது தமிழ்நாட்டில் அப்படி நடக்க வாய்ப்பில்லை, காங்கிரஸ், பமக, அமமுக ஆதரவோடு தவெக ஆட்சியை தக்க வைக்கும்...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு பகிரப்படும்..
copy paste.

தருமபுரி பில்லர்ஸ் whatsapp சேனல் குழு - தருமபுரி மாவட்ட தகவல்கள் பெற வாட்சாபின் புதிய வசதி.தருமபுரி மாவட்டம் சார்ந்த செ...
03/05/2026

தருமபுரி பில்லர்ஸ் whatsapp சேனல் குழு - தருமபுரி மாவட்ட தகவல்கள் பெற வாட்சாபின் புதிய வசதி.

தருமபுரி மாவட்டம் சார்ந்த செய்திகள், உழவர் சந்தை காய்கறி விலை நிலவரங்கள், முக்கிய (மாநில மற்றும் தேசிய) இங்கு பகிரப்படும்.

விளம்பரங்களை பகிர குழுவின் அட்மினை தொடர்புகொள்ளவும்.

இணைய: https://whatsapp.com/channel/0029VabmMpq2ZjCtmax9ql15

நன்றி

அட்மின்
தருமபுரி பில்லர்ஸ்

03/05/2026
தருமபுரி தேர்தல் களத்தில்எதிரொலிக்கப்போகும்அதிருப்தி அலைகள்.!✔️💯தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்தச் சட்டமன்றத் தேர்...
03/05/2026

தருமபுரி தேர்தல்
களத்தில்
எதிரொலிக்கப்போகும்
அதிருப்தி அலைகள்.!✔️💯

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்தச் சட்டமன்றத் தேர்தல் வெறும் வாக்குப் பதிவு மட்டுமல்ல; அது கட்சித் தொண்டர்களின் மனக்குமுறல்களுக்கும், கட்சித்தலைமைகள் எடுத்த முடிவுகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.

கட்சிகளில்
தகுதியானவர்களுக்கு "சீட்" கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் தொகுதி முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில்..
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நற்பெயர் பெற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அல்லது முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில்
ஆகியோரில் ஒருவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அக்கட்சியில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளால்..
அனைத்தும் தலைகீழானது.

அதேபோல், திமுக கூட்டணியில் இத்தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவின் மூத்த முகங்களான தடங்கம் சுப்ரமணி மற்றும் டி.பி. தங்கராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த உள்ளூர் முகங்களை விடுத்து, கூட்டணி கணக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தது திமுக தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் தொகுதியில்..
அதிமுக சார்பில் வலுவான பிம்பமாகத் திகழ்ந்த டிஆர். அன்பழகனுக்கு
சீட் கிடைக்கவில்லை. இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.

மறுபுறம், திமுகவில் 2016-ல் வெற்றி பெற்ற பிஎன்பி. இன்பசேகரன் அல்லது தர்மசெல்வன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொகுதி காங்கிரசுக்கு கைமாறியது. இதனால், தங்களின் கோட்டையாகக் கருதிய தொகுதியைத் தாரைவார்த்த அதிருப்தியில் திமுகவினர் தேர்தல் பணியாற்றினர்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்..
சிட்டிங் எம்எல்ஏ
ஏ. கோவிந்தசாமி
மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தும், அவருக்கு அதிமுக சீட் வழங்காதது பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை, இருமுறை தோல்வியடைந்தும் தளராது பணியாற்றிய டாக்டர் பிரபு ராஜசேகர் அல்லது பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மெடிக்கல் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு பலமாக உள்ளது. இவர்களைத் தவிர்த்துவிட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் களப்பணியில் தொய்வை ஏற்படுத்தியது.

பாப்பிரெட்டிப்பட்டித் தொகுதி பாமகவின்
நம்பர் ஒன் தொகுதியாக பார்க்கப்பட்டது.
தொகுதி கூட்டணி கட்சிக்கு போனதில்...
பாமகவினருக்கு பெருத்த ஏமாற்றமே.!

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில்..
சீனியாரிட்டியில் இருந்த பலரை முந்திக்கொண்டு, புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இது..திமுகவில் மூத்த நிர்வாகிகளை முணுமுணுக்க வைத்தது.

அதிமுகவில் கேபி அன்பழகன் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் நிலையில், அவரை எதிர்க்க திமுக சார்பில் பிகே.முரளி அல்லது வழக்கறிஞர் முருகன் போன்றவர்கள் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார் வேட்பாளரானதை சொந்தக் கட்சியினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர்.

அரூர் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை..
திமுகவில்
வேட்பாளர் சீனியாரிட்டியில்
பலர் இருந்தனர்.
அனைவரையும் முந்திக்கொண்டு..
ஒருவர் வேட்பாளரானதை
அக்கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தத் தேர்தலில் தருமபுரி மாவட்ட முடிவுகளை நிர்ணயிக்கப் போகும் முக்கிய அம்சங்களாக..

உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட மண்ணின் மைந்தர்களுக்குப் பதில், மேலிட சிபாரிசில் வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தப் போதிய கால அவகாசம் இல்லை.

சொந்தக் கட்சி வேட்பாளர் இல்லாத அதிருப்தியில் உள்ள தொண்டர்கள், கூட்டணி கட்சியினருக்கு முழு மனதுடன் வேலை செய்யவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சி தலைமைகள் காட்டிய அதீத "அரசியல் கணக்குகள்", கள எதார்த்தத்திற்குப் புறம்பாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த மனக்குமுறல்கள் மற்றும் உள்ளடி வேலைகளின் தாக்கம்
மே 4 தேர்தல் முடிவுகளில்
ஒரு பெரிய அதிர்வலையை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.!✔️💯

-பொம்மிடி முருகேசன்.

📢 CSR நிதி பெறுவது எப்படி? – முழுமையான வழிகாட்டிCSR fund உடனே கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மை என்னவென்...
28/04/2026

📢 CSR நிதி பெறுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி
CSR fund உடனே கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் — நம்பிக்கை, compliance, track record இருந்தால்தான் CSR நிதி தொடர்ந்து கிடைக்கும்.
🏛️ எந்த அமைப்பு சிறந்தது?
➡️ Section 8 Company (Best for CSR)
➡️ 12A + 80G + CSR-1 Registration அவசியம்
⏳ எத்தனை வருடத்தில் CSR கிடைக்கும்?
🔸 0–1 வருடம் – கடினம்
🔸 1–2 வருடம் – சிறிய projects
🔸 3+ வருடம் – பெரிய CSR funding
📄 முக்கியமான பதிவு & ஆவணங்கள்:
✔️ CSR-1 Registration (Must)
✔️ 12A & 80G
✔️ Audit & IT Returns
📌 CSR Fund பெறுவது எப்படி?
✔️ Strong NGO Profile
✔️ Proper Project Proposal
✔️ Companies approach (Email / LinkedIn)
✔️ Ground-level work + Proof
⚠️ Reality Check:
CSR என்பது application மட்டும் போடுவதால் கிடைக்காது!
👉 அது Trust + Relationship + Compliance அடிப்படையில் தான் கிடைக்கும்.
🎯 Success Formula:
👉 Start Small → Build Credibility → Scale CSR Funding
📞 S Muthu Kumar Raja
Corporate Lawyer, Thoothukudi
📱 9095575300
📧 [email protected]
💬 CSR proposal / Section 8 registration பற்றி guidance வேண்டுமா?
👉 Message / Call anytime!
கட்டெறும்பு Instagram Facebook

TASMAC BAR Contract – Eligibility (தகுதி) முழு விளக்கம்TASMAC BAR contract எடுக்க நினைப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வ...
27/04/2026

TASMAC BAR Contract – Eligibility (தகுதி) முழு விளக்கம்

TASMAC BAR contract எடுக்க நினைப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது — தகுதி (Eligibility). சரியான தகுதி இருந்தால் தான் tender processல் participate செய்ய முடியும்.

✅ Basic Qualification:
• Indian Citizen
• வயது 21+
• Legal capacity (sound mind)

📄 Required Documents:
• Aadhaar
• PAN
• Address proof
• Bank details
• Photo

💰 Financial Capacity:
• EMD (₹50,000 – ₹5,00,000+) செலுத்தும் திறன்
• Advance + Monthly செலவுகளை handle செய்யும் நிலை

⚖️ Legal Requirement:
• Criminal case இல்லாமல் இருக்க வேண்டும்
• Police verification clear ஆக வேண்டும்
• Excise rules follow செய்ய வேண்டும்

📑 Affidavit:
• “No criminal background” declaration
• Tender rules accept செய்ததாக உறுதி

🚫 Disqualification:
❌ Criminal background
❌ Fake documents
❌ Previous violation
❌ Blacklisted

🏢 Individual / Company:
• Individualஆகவும் apply செய்யலாம்
• Company / Firm மூலம் apply செய்தால் advantage இருக்கும்

✔️ சுருக்கமாக:
👉 Age + Documents + Money + Clean Record = Eligible

⚠️ “Direct contract” என்று யாரையும் நம்ப வேண்டாம் — Official tender மட்டும் safe!


S Muthu Kumar Raja
Corporate Lawyer, Thoothukudi
📞 9095575300
📧 [email protected]
தூத்துக்குடி தாமரை தளபதி Instagram Facebook கட்டெறும்பு Thanthi TV Galatta Media Polimer News Sun News Tamil

100% உண்மையான கருத்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற 40 கோடி வேணும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற 200 கோடி
24/04/2026

100% உண்மையான கருத்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற 40 கோடி வேணும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற 200 கோடி

இன்று பிறந்தநாள் காணும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு அன்பு தம்பியின் இனிய பிறந்தந...
23/04/2026

இன்று பிறந்தநாள் காணும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு அன்பு தம்பியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

காசு கொடுக்கனம்னு முடிவு பண்ணிட்டீங்க...கொடுக்கறீங்க..அள்ளி இறைக்கறீங்க...!!அதென்னய்யா..பக்கத்து வீட்டு வரை வர்றீங்க …தற...
21/04/2026

காசு கொடுக்கனம்னு
முடிவு பண்ணிட்டீங்க...
கொடுக்கறீங்க..
அள்ளி இறைக்கறீங்க...!!

அதென்னய்யா..
பக்கத்து வீட்டு வரை
வர்றீங்க …தற்றீங்க...
அப்புடியே போறீங்க...!

தெருவுல ,ஏரியாவுல
திருவிழா மாதிரி வாரி
இறைக்கறீங்க..

ஒண்ணு , ரெண்டு
வீட்டை மட்டும் ஒதுக்கிட்டு
போறீங்க...
கண்டுக்கவே மாட்டேங்கறீங்க...

இதுல என்னய்யா
பாரபட்சம்..,
சின்னப்புள்ளத் தனமா
இருக்கு,..,

வாட்....நான்சென்ஸ்
இஸ்....திஸ்....

என்னாய்யா பாவம்
பண்ணாங்க..
சமூக ஆர்வலருங்க...!!!
சமூக ஆர்வலரா இருக்குறது
குத்தமாய்யா....!!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்......

21/04/2026

பாப்பிரெட்டிப்பட்டி ₹1500

Address

Dharmapuri
636705

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri Pillars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharmapuri Pillars:

Share