Dindigul Podhujanam

Dindigul Podhujanam We created this page for describe the beauty and greatness of the beautiful city Dindigul

14/11/2025

பல ஆண்டுகளை கடந்து பல தடைகளை தாண்டி மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறது #திண்டுக்கல்பொதுஜனம்.

திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியர் கூட்டணி சாணார்பட்டி வட்டார கிளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.   இதில் பணி நிறைவு ப...
05/11/2022

திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியர் கூட்டணி சாணார்பட்டி வட்டார கிளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றி வெள்ளி விழா காணும் ஆசிரியர்களுக்கு பாராட்டு, என முப்பெரும் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
மகளிர் அணி செயலாளர் ரீத்தா மேரி முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் கோபால் வரவேற்புரையும், வட்டாரப் பொருளாளர் ஜெயச்சந்திரன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
இதில் மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற 8 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 1 ஆசிரியருக்கு கேடயம் வழங்கியும், ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 64 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து தங்கம் நாணயம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பீட்டர் திண்டுக்கல் முருகேசன், சாணார்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், ஜான்சன், வட்டாரத் துணைச் செயலாளர் ஆர்டர் ஜீவராஜி நன்றியுரை வழங்கினார். முப்பெரும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா-1707 மாணவர்களுக்கு பட்டங்களை கலெக்டர் விசாகன் வழங்...
05/11/2022

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா-1707 மாணவர்களுக்கு பட்டங்களை கலெக்டர் விசாகன் வழங்கினார்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி குழுமத்தின் தலைவர் விஜயஸ்ரீ டாக்டர். கே.வி.குப்புசாமி தலைமை வகித்தார்.

1707 மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் என்.வேணுகோபால், கல்லூரி இயக்குனர் டாக்டர்.கிருஷ்ணகுமார், கல்லூரி ஆலோசகர் டாக்டர்.பத்ரி, கல்லூரி

எம்பிஏ இயக்குநர் ரஞ்சித், சிஓஇ முதல்வர் ஜெகதீசன், எஸ்ஓஇ முதல்வர் ராஜ்குமார்

மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகம் ரேங் கோல்டர்ஸ் பி டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி 2-வது ரேங் குருசித்ரா, 5-வது ரேங் ரம்யா, பி இ அக்ரிகல்சர் இன்ஜினியரிங் 6-வது ரேங் பிரியதர்ஷினி, 7-வது ரேங் சுருதி ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

28/05/2022
திண்டுக்கலில் சித்திரை திருவிழா ஆரம்பம் கொடியேற்றத்துடன்.....
05/04/2022

திண்டுக்கலில் சித்திரை திருவிழா ஆரம்பம் கொடியேற்றத்துடன்.....

திண்டுக்கல் மலைக்கோட்டையில் பெண்களுக்கு அனுமதி இலவசம்சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திண்டுக்கல் மலைக்கோட்டையை இன்று மட்டும...
08/03/2022

திண்டுக்கல் மலைக்கோட்டையில் பெண்களுக்கு அனுமதி இலவசம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திண்டுக்கல் மலைக்கோட்டையை இன்று மட்டும் பெண்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்.

04/03/2022

திண்டுக்கல் மாவட்ட செய்திகள் விரைவாக தெளிவாக வழங்குவதற்கு முயற்சிகள் செய்துவருகிறோம் - செய்தியாளர்கள் குழு

திண்டுக்கல் மாநகராட்சியில்  துணை மேயராக ராஜப்பா ஒரு மனதாக தேர்வு
04/03/2022

திண்டுக்கல் மாநகராட்சியில் துணை மேயராக ராஜப்பா ஒரு மனதாக தேர்வு

திண்டுக்கல் மாவட்டம் G.T.N கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய மாணவர் படை (NCC) வீரர்களின் பயிற்சி வக...
04/03/2022

திண்டுக்கல் மாவட்டம் G.T.N கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய மாணவர் படை (NCC) வீரர்களின் பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக இன்று (04.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்கள். மேலும் மாணவர்களிடம் பயிற்சி குறித்தும், நாட்டுப்பற்று குறித்தும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயராக திமுகவை  23வது வார்டு இளமதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாநகராட்...
04/03/2022

திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயராக திமுகவை 23வது வார்டு இளமதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாநகராட்சி மேயருக்கு செங்கோல் வழங்கி மேயருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

Address

Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul Podhujanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dindigul Podhujanam:

Share