07/08/2026
நடுத்தர மக்களின் மெளனக் குரல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு காலத்தில்
"உழைத்தால் உயரலாம்" என்பது
ஒரு வார்த்தை அல்ல...
அது வாழ்க்கையின் நம்பிக்கை....
சிறிய முதலீடு...
நேர்மையான உழைப்பு...
நல்ல தரமான பொருள்...
இந்த மூன்றும் இருந்தால்
ஒரு குடும்பம் உயர முடிந்தது...
இன்று...
கோடிகளில் கட்டிடங்கள் எழுகின்றன...
பிரம்மாண்டமான கடைகள் திறக்கப்படுகின்றன...
ஆனால்...
நேர்மையாக தொழில் செய்ய நினைக்கும் சாதாரண மனிதன் மட்டும் தினமும் போராடிக் கொண்டிருக்கிறான்....
ஒரு லட்சம் முதலீட்டில் வெற்றி
கண்ட தொழிலுக்கு, இன்று பத்து லட்சம் முதலீடு செய்தாலும் நிம்மதி இல்லை...
வாடகை காத்திருக்கிறது...
வங்கி தவணை காத்திருக்கிறது...
மின்கட்டணம் காத்திருக்கிறது...
வரி காத்திருக்கிறது...
ஆனால்...
வாடிக்கையாளர் மட்டும் விலை
குறைக்கச் சொல்கிறார்...
ஒருவர் புதிய தொழில் தொடங்கினால், அவரை வாழ்த்துபவர்கள் குறைவு...
அதே தொழிலை பக்கத்திலேயே தொடங்குபவர்கள் அதிகம்...
இறுதியில்...
யாரும் வெல்வதில்லை...
அனைவரும் சோர்ந்து விடுகிறார்கள்...
இன்று இளைஞர்களிடம்
திறமை இல்லையா?
இருக்கிறது...
உழைக்கும் சக்தி இல்லையா?
இருக்கிறது...
ஆனால்...
சரியான வழிகாட்டுதல் இல்லை...
தன்னம்பிக்கை குறைகிறது...
தோல்வியை தாங்கும் மனப்பக்குவம் குறைகிறது.
அதனால்...
வேலை தேடுபவர்கள் அதிகரிக்கிறார்கள்...
வேலை கொடுப்பவர்கள் குறைகிறார்கள்...
ஒரு நாட்டின் உண்மையான செல்வம்
பெரிய கட்டிடங்கள் அல்ல...
நேர்மையாக உழைக்கும் சிறு தொழில்முனைவோர்கள்தான்...
அவர்களை நாம் இழந்தால்...
நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே இழந்துவிடுவோம்...
எந்த இருளும் நிரந்தரமில்லை.
காலம் மாறும்...
சந்தையும் மாறும்...
வாய்ப்புகளும் மீண்டும் வரும்...
ஆனால்...
நேர்மையை இழந்துவிட்டால்,
அதை மீட்டெடுப்பது மிகவும் கடினம்...
எனவே...
நம் பிள்ளைகளுக்கு சொத்து மட்டும்
சேர்த்து வைக்க வேண்டாம்...
உழைப்பின் மதிப்பையும்,
நேர்மையின் அருமையையும், தொழில்முனைவு என்ற துணிச்சலையும் கற்றுக் கொடுப்போம்...
அப்போது...
அவர்கள் வேலை கேட்கும்
தலைமுறையாக அல்ல...
வேலை உருவாக்கும் தலைமுறையாக உருவெடுப்பார்கள்...
இது ஒருவரின் பதிவு அல்ல...
இது...
ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் இதயத்தில் ஒலிக்கும் மெளனக் குரல்...
இன்று படித்துவிட்டு கடந்து செல்லாதீர்கள்...
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்...
நாளை நம் பிள்ளைகள் எந்த சமூகத்தில் வாழப் போகிறார்கள்?
சிந்தித்தால் மாற்றம் தொடங்கும்.
மாற்றம் தொடங்கினால் எதிர்காலம் மலரும்....