08/06/2026
கருத்துக்கு கருத்து சொல்லுங்கள்
ஆபாசத்திற்கு இடமில்லை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு காலத்தில் அரசியல் குறித்து
ஒரு பதிவு போடுவதற்கே
பலர் தயங்கிய சூழல் இருந்தது....
இன்று சமூக வலைதளங்களை
திறந்தாலே அரசியல் கருத்துக்களே அதிகமாக காணப்படுகின்றன....
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறும் தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது....
இன்று சமூக வலைதளங்களில் சிலர் அரசியல் கருத்துக்களை முன்வைப்பதை விட, ஆபாச வார்த்தைகளையும் தரக்குறைவான விமர்சனங்களையும் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்....
கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. ஆனால் கருத்து வேறுபாடு
என்ற பெயரில் நாகரிகத்தை இழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது...
முதல்வராக இருப்பவர் யாராக இருந்தாலும், அவர் உங்கள் அரசியல் எதிரியாக இருக்கலாம்...
உங்கள் விருப்பமான தலைவராக இல்லாமலும் இருக்கலாம்....
அதற்காக பொதுவெளியில் மரியாதை இல்லாமல் பேசுவது நாகரிக அரசியலல்ல...
ஒரு பதவிக்கு உரிய மரியாதையை வழங்குவது நமது பண்பாட்டின் அடையாளம்..
நாங்கள் எந்த ஆட்சி வந்தாலும்
அதில் உள்ள நல்லவற்றை பாராட்டியும், தவறுகளை சுட்டிக்காட்டியும், மக்களின் குரலாகவே இருந்து வருகிறோம்...
அதற்காக மிரட்டல்களையும், அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்...
ஆனால் உண்மையை பேசுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை...
ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது தவறல்ல. ஒரு தலைவரை நேசிப்பதும் தவறல்ல. ஆனால் அந்த ஆதரவு கண்மூடித்தனமாக மாறும்போது, தவறுகளைக் கூட நியாயப்படுத்தும் நிலை உருவாகிறது...
அதுவே ஜனநாயகத்திற்கு ஆபத்து.
இன்று சிலர் பணத்திற்காக, பதவிக்காக அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக சமூக வலைதளங்களில் போலி போராளிகளாக நடிக்கிறார்கள்....
அவர்களுக்கு உண்மை முக்கியமல்ல...
யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக குரல் கொடுப்பதுதான் முக்கியம்....
ஆனால் வரலாறு ஒன்று சொல்லுகிறது பொய்யின் ஆயுள் குறைவு, உண்மையின் ஆயுள் நிரந்தரம்...
ஒரு உண்மையான தொண்டன் தனது தலைவரின் மரியாதையை காப்பான்...
தலைவரின் பெயரில் அநாகரிகமாக பேச மாட்டான். தலைவரின் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வான்... எதிர்ப்பவர்களை இழிவுபடுத்த மாட்டான்...
எனவே, கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் அளியுங்கள். ஆதாரங்களால் விவாதியுங்கள். தர்க்கத்தால் வெல்லுங்கள். ஆபாச வார்த்தைகளால் அல்ல...
தமிழரின் பெருமை அவரது மொழியில் உள்ளது... அந்த மொழியை அநாகரிக வார்த்தைகளால் களங்கப்படுத்த வேண்டாம்.
நினைவில் கொள்ளுங்கள்...
பணம் கொடுத்து வாங்கப்படும் குரல்கள் சில நாட்கள் மட்டுமே ஒலிக்கும்.
உண்மைக்காக எழும் குரல்கள் தலைமுறைகள் தாண்டியும் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
கடைசியாக ஒன்றை
சொல்லிக் கொள்கிறேன்...
இதுவரை காமராஜருக்குப் பின் ஆட்சி செய்தவர்களும் சரி...
இப்போது வரை அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைத்து தலைவர்களும் சரி... மக்களுக்கான உண்மையானவர்
எவரும் இல்லை...
படித்தவர்கள் திருடர்கள், நடித்தவர்கள் நடிகர்கள், இது இரண்டும் இல்லாதவர்கள் நடித்துத் திருடுபவர்கள்... மக்களுக்கு புரிந்தால் சரி நன்றி...