Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(2)

14/11/2025

முருகருக்கு நன்றி சொல்வோம்..

ஓர்  இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்.... ''செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்ஏ.சி, வாஷிங் மெஷின்,கேஸ் கனெக்‌ஷ...
14/11/2025

ஓர் இளைஞன்
தன் தந்தையை பார்த்து கேட்டான்....

''செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்
ஏ.சி, வாஷிங் மெஷின்,
கேஸ் கனெக்‌ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?''.

தந்தை பதில் கூறினார்,
"மரியாதை, மானம், மதிப்பு,
வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை அனைத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ, அப்படித் தான் நாங்களும் வாழ்ந்தோம்...

1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

நாங்கள் சைக்கிள் ஒட்டினோம், ஹெல்மெட் அணியவில்லை,
பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை விளையாடினோம்...

டி.வியின் முன் உட்கார்ந்ததில்லை..
உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம். இண்டெர்நெட்டில் அல்ல..

தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம், மினரல் வாட்டர் அல்ல..
ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம்.
எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை.

எங்கு போனாலும் வெறுங்காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

நாங்கள் லீவு நாட்களில் கோண புளியங்காய் பறிக்க செல்வோம்,
புளியங்காய் பறிக்க செல்வோம்

இலந்தைப்பழம் பறிக்க செல்வோம்..
பனங்காய் பொறுக்கி சுட்டு சாப்பிடுவோம்..
வேப்பம்பழம் சாப்பிடுவோம்..

எங்காவது கரும்பு வெட்டினால் கொதப்பை பொறுக்க செல்வோம்..
சாலையோரம் உள்ள பூக்களை எல்லாம் பறித்து தேன் குடிப்போம்..

நுங்கு வண்டிசெய்து விளையாடுவோம்..
சுத்திர முட்டாய் வாங்கி சுற்றிக்கொண்டு விளையாடுவோம்..

வாய்க்கால் தண்ணீர், கிணற்றில்
குதித்து விளையாடுவோம்..
ஒரு பழமொழி சொல்வார்கள்...
" நாய்க்கு வேலையும் இருக்காது நிற்க நேரமும் இருக்காது" என்று அது போலதான் எங்கள் வாழ்க்கையும் இருந்தது...

குழந்தை பருவத்தில், எங்களுக்கு அந்த காலத்தில்
எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை.

ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,
எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,
பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று
தனிக்குடித்தனம் அல்ல,

எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,
சுருக்கமாக சொன்னால்,
WE ARE THE LIMITED EDITIONS..
ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
அன்பாக இருங்கள்....
Aththanoortex.

14/11/2025

DSP GOLD TRUNK INNERWEARS..
Whatsapp order only..
9976261024..

75,80SIZE.....Rs.1350,(10pcs),
85,90 Size.....Rs.1400,
95,100 Size....Rs.1450,
105,110Size.....Rs.1550,
Freeshiping in 10pcs only
இந்தியாவிலேயே எங்கும் கிடைக்காத விலை யில்.. நமது அத்தனையும் டெக்ஸ்டைல் மட்டுமே..
Aththanoortex Sathiyavarman Erode

13/11/2025

அசைவுசுழி இருக்கிற மாடு வீட்டுக்கு ஆகவே ஆகாதா?

சுவாரஸ்யம் நிறைந்த கதைஒரு இளைஞன் தினமும் ஒரு பஸ்ஸில் வேலைக்கு செல்வான்.. அதே பஸ்ஸில் ஒரு பெண் தினமும் பயணிப்பாள்... அவளு...
13/11/2025

சுவாரஸ்யம் நிறைந்த கதை

ஒரு இளைஞன் தினமும் ஒரு பஸ்ஸில் வேலைக்கு செல்வான்..

அதே பஸ்ஸில் ஒரு பெண் தினமும் பயணிப்பாள்...

அவளுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்று விடுவாள்..

அந்த பெண்
ஒரு நாள் அந்தப் பெண் இருக்கையில் அமர்ந்திருக்க ஒரு கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தாள்.

உடனே அந்தப் பெண் சைகையில் இங்கே உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று எழுந்து விட்டாள்.

அந்த கர்ப்பிணி பெண் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

இந்த காட்சியை அந்த இளைஞன் பார்த்துக் கொண்டே இருந்தான்..

அதேபோல மறுநாளும் பஸ் நிறைய கூட்டங்கள்.

அந்த பெண் இருக்கையில் அமர்ந்திருந்தாள்...

ஒரு வயதான பாட்டி ஒன்று வருகிறது அதற்கு உட்கார இடம் இல்லை யாரும் கொடுக்க தயாராகவும் இல்லை..

உடனே இந்த பெண் சைகையில் வாருங்கள் என்று கூப்பிட்டு அந்த பாட்டியை தன் இருக்கையில் அமர வைத்து விட்டு அவள் நின்று கொண்டாள்..

இந்த நிகழ்வையும் அந்த இளைஞன் பார்த்துக் கொண்டே இருந்தான் மனதுக்குள் ஒரு புன்னகையுடன்..

இப்படியே வழக்கமாக இரண்டு பேரும் பயணித்தார்கள் அந்தப் பெண்ணின் நிறுத்தம் வந்ததும் இறங்கி போய்விடுவாள்...

இவன் அந்தப் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டே இருப்பான்..

காலையில் ஏறியதும் அந்த பெண் இருக்கிறாளா? என்று பார்ப்பான்
அந்த பெண் இருப்பாள்.

லேசாக பார்க்க ஆரம்பித்தான்.
ஆனால் அந்த பெண் இவனை பார்ப்பதாக தெரியவில்லை...

ஒரு நாள் அந்தப் பெண்ணும் இவனை பார்த்து லேசாக புன்னகை செய்தது...

இவனுக்குள் ஒரு ஆனந்தம் வந்துவிட்டது ஆனால் ஒரு முறை கூட அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை.

இருவரும் பஸ்ஸில் சந்தித்துக் கொள்வார்கள்.. அவ்வுளவு தான்...

ஒரு நாள் அந்தப் பெண் ஒரு துண்டு சீட்டை இவன் கையில் கொடுத்தது..

இவன் அதை சந்தோஷமா வாங்கிக்கொண்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி தன் அலுவலகத்தில் சென்று படிக்க ஆரம்பித்தான்.

அப்போது அந்த துண்டு சீட்டில்
நான் ஒரு வாய் பேச முடியாத ஊமை .

நீங்க என்ன பாக்குறீங்க நான் உங்களை பார்க்கிறேன் நீங்க சிரிச்சீங்க நானும் சிரிச்சேன் வேற எந்த நோக்கமும் எனக்கு வேண்டாம்

நீங்களும் உங்கள் மனதில் எதையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று இருந்தது..

இதைப் படித்ததும் அவன் இத்தனை
நாள் வரை அவளை பார்த்து ரசித்தான் அதுக்கப்புறம் அவளை விரும்ப ஆரம்பித்தான்...

இவனும் அதற்கு பதில் அளித்தான் இதுவரை நான் உன்னை ரசித்தேன் உன்னுடைய செயலை கண்டு நான் வியப்படைந்தேன். அதையும் ரசித்தேன்

ஆனால் இன்று முதல் நான் உன்னை விரும்புகிறேன்.. நானும் வாய் பேச முடியாத ஊமை தான் என்று எழுதி அந்த லெட்டரை மறுநாள் அவளிடம் கொடுத்தான் .

அந்த லெட்டரை அவள் பார்த்ததும் அவளுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.

மறுநாள் பஸ்ஸில்
ஏறினான் அவளின் கண்களைப் பார்த்தான்...

அவள் கோபம் தணிந்து லேசாக புன்னகைத்தாள்.

அதற்கு பிறகு இருவருமே கண்களால் பேசிக் கொள்வார்கள். நீ சாப்டியா நான் சாப்பிட்டேன் என்று கண்களால் மட்டுமே பேசுவார்கள்..

இவன் காதலை இவன் பெற்றவரிடம் தெரிவித்தான் இவன் பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள்..

மறுநாள் பஸ்ஸில் ஏறியதும் அவளை பார்த்தான் அவள் இருந்ததால் கண்களால் பேசிக் கொண்டார்கள்

இவன் ஒரு கடிதாசியில் நான் இன்று உன்னுடைய பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தான்..
அவள் கண்களால் ஓகே என்று சொன்னால்..

மாலையில் இவனை அழைத்துக் கொண்டு தன் பெற்றவரிடம் அழைத்து சென்று சைகைகளால் சொன்னாள்..

ஒரு கடிதம் எழுதி கொடுத்தான்
நானும் வாய் பேச முடியாத ஊமை தான்
உங்கள் மகளை மணந்து கொள்ள ஆசை படுகிறேன்

என் பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று இருந்தது..
சரி எங்களுக்கு சம்மதம் என்று சொன்னார்கள்.

இரண்டு வீட்டார் சம்மதத்துடன் ஒரு பதிவு அலுவலகத்தில் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது.. வாழ்க்கை நன்றாக போகின்றது...

அவள் கர்ப்பம் அடைகிறாள்.. ஒரு சந்தோசம் தான் தாய்மை அடையப் போகிறாள் என்று...

அவனும் அப்பாவாக போகிறோம் என்று சந்தோஷப்பட்டான்..

ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

அந்தக் குழந்தை நல்லா பேசும் குழந்தையாக இருந்தது..

முதல் முதலில் தான் பெற்ற பிள்ளை மழலை குரலில் பேசும் போது அவர்களுக்கு சந்தோசமாக இருந்தது....

தன் குழந்தை வளர ஆரம்பித்தது தன் தாய் தந்தை பேச முடியாததை உணர்ந்தது...

அவர்களிடம் சைகையில் பேச ஆரம்பித்தது அந்த குழந்தை..

அந்தக் குழந்தை வாயாடி குழந்தையாக எல்லோரிடமும் நல்லா பேசும்
பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்

பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடந்தது ஆண்டு விழாவில் பேச்சுப் போட்டி வைத்தார்கள். பேச்சுப் போட்டியில் இந்த குழந்தை தான் முதல் பரிசு பெற்றது..

அந்த பரிசை வாங்கி தன் பெற்றோரிடம் காண்பித்தது எழுத்து மூலமாக காட்டியது அவர்களுக்கு ஆனந்தம்..

நாங்கள் இருவரும் ஊமை எங்க குழந்தை பேச்சு போட்டியில் முதல் பரிசு
வென்றதே என்று ஆனந்த கண்ணீருடன் அந்த குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டார்கள்...

படித்ததில் மிகவும் பிடித்த கதை

வாக்கு கொடுத்தால் அதைக் காப்பாற்றி விடுங்கள்.. பெயரளவில் யாரும் வாக்கு கொடுக்காதீர்கள்..ஒரு குளிர்கால இரவு.ஒரு பெரும் பண...
13/11/2025

வாக்கு கொடுத்தால் அதைக் காப்பாற்றி விடுங்கள்.. பெயரளவில் யாரும் வாக்கு கொடுக்காதீர்கள்..

ஒரு குளிர்கால இரவு.
ஒரு பெரும் பணக்காரர், தன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு , தன் பங்களா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர் தன் பங்களாவை நெருங்கும் சமயத்தில், ஒரு சுவரோரமாக அந்த கடும் குளிரில் ஒரு முதியவர் மேற்போர்வை எதுவும் இல்லாமல் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

அம்முதியவரின் அருகே தன் வண்டியை நிறுத்தி, "கடும் குளிராக இருக்கிறதே.. இருங்கள், உங்களுக்கு என் வீட்டிலிருந்து போர்வை கொண்டு வந்து தருகிறேன்" என்று சொல்லிவிட்டு போனார்.

வீட்டுக்குச் சென்ற அந்த பணக்காரர், தன் மற்ற வேலைகளில் மூழ்கிப்போனார்.

அடுத்த நாள் காலையில் தான், அந்த ' போர்வை ' சமாச்சாரம் அவருக்கு நினைவு வந்தது.

"அடடா..,மறந்து விட்டோமே... என போர்வை ஒன்றை எடுத்துகொண்டு, அந்த முதியவரைக்காண கிளம்பினார்.

அம்முதியவர் இருந்த இடத்தை அடைந்த போது, அவர் இறந்து கிடப்பதைக்கண்டார்.

அவர் அருகில் ஒரு குறிப்பு கிடந்தது.
அதில் எழுதப்பட்டிருந்தது... " எனக்கு மேற்போர்வை இல்லாத போது, என் உடம்பில் குளிரை எதிர்த்துப் போராடும் வலிமை இருந்தது.

ஆனால், நீங்கள் போர்வை கொண்டுவந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றதில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு, நம்பிக்கை என்னை குளிரைத் தாங்கும் சக்தியற்றவனாக ஆக்கிவிட்டது."

இந்த கதையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவர் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் வார்த்தை, இன்னொருவருக்கு வாழ்க்கையாக இருக்கலாம்......

நீங்க இல்லாம இருந்தா கூட அவங்க நல்லா இருப்பாங்க....

நீங்க கூடவே இருப்பேன்னு நம்பிக்கை கொடுத்துட்டுமட்டும் விட்டு போயிடாதிங்க....

அதை தாங்கிக்க அவங்களுக்கு வலிமை இருக்காது..

அதனால், கூடுமானவரை, வாக்கு கொடுப்பதில் கவனமும் அதனை காப்பாற்றுவதில்
உறுதியும் கொள்ள வேண்டும்..

கோடீஸ்வரன் ஒருவன் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான்.. அவனுக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டது.பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய...
12/11/2025

கோடீஸ்வரன் ஒருவன் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான்..

அவனுக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.

அவர் அந்தக் கோடீஸ்வரனை வந்து பார்த்தார்.

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

சிறிது நாட்களிலேயே
தலைவலி குணமாகி விட்டது.

சன்னியாசி கூறியது சரிதான்.

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.
காரணம் கேட்டார்.

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.

ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.

உன் பணமும் வீணாகி இராது.

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

அது சாத்தியமல்ல.

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

படித்ததில் பிடித்தது..

12/11/2025

திருமணம் தடை என்று பரிகாரமாக பல லட்சங்களை செலவு செய்யாதீர்கள்.. உங்களால் அது ஒரு வியாபாரம் மட்டுமே..

வாகனத்தை பழுது பார்க்கும் ஒருவர் தன் குடும்பத்திற்கு அரிசி வாங்க வைத்திருந்த பணத்தை தொலைத்து விட்டு... தன் பணத்தை எங்கே ...
12/11/2025

வாகனத்தை பழுது பார்க்கும்
ஒருவர் தன் குடும்பத்திற்கு
அரிசி வாங்க வைத்திருந்த
பணத்தை தொலைத்து விட்டு...

தன் பணத்தை எங்கே தொலைத்தோம்
எப்படி தொலைத்தோம்
என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே கவலையுடன் இருந்தார்...

அப்போது அவரின் நண்பர் ஒருவர்
பழுது பார்க்க விட்டிருந்த வாகனத்தை சீக்கிரமாக சரி செய்து தருமாறு
அவரிடம் சொல்லிவிட்டு
கோவிலுக்கு செல்வதற்காக தன் மனைவியுடன் அங்கு வந்தார்...

போகும் பாதையில் பணம் கிடைத்தால் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு
தன் நண்பர் பணத்தை தொலைத்த கவலையுடன் அங்கு இருப்பதை கண்டு
தான் கோவிலுக்கு செல்ல வைத்திருந்த 200 ரூபாயைத் தவிர
தன்னிடமும் எந்த பணமும் இல்லை
உதவி செய்ய என்று வருத்தத்துடன்
தன் மனைவியோடு கிளம்பினார்...

சிறிது தூரம் சென்ற உடனே
அவர் நண்பர் தொலைத்த அந்த 300 ரூபாய் அவரின் மனைவிக்கு கிடைத்தது...

உடனே அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மனைவி

பணம் கிடைத்து விட்டதாக உங்கள் நண்பரிடம் சொல்ல வேண்டாம் அப்படி சொல்லி விட்டால் நமக்குள் சண்டை வந்துவிடும் என்றார்...

வீண் சண்டை எதற்கு என்று
அவள் கணவரும் அவளின் செயலுக்கு அதட்டி எதுவும் சொல்லாமல் இருவரும் கோவிலுக்கு சென்றனர்...

கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வரும் போது கூட்ட நெரிசலில்
அவள் கணவரின் கடிகாரம்
தொலைந்து விட்டது...

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு
அந்த கடிகாரத்தை
உங்களுக்கு வாங்கி கொடுத்தேன்

அதை இப்படி தொலைத்து விட்டீர்களே...
என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்..

அவள் கணவர் என் நண்பன் 300 ரூபாயை தொலைத்து விட்டு உன்னை போலே தானே அவதிப்பட்டு இருப்பார்...

இன்று அவர்களின் குடும்ப உணவே இந்த 300 ஆல் மட்டுமே...

நீ இப்படி செய்ததால் தான் நமக்கும் இப்படி நடந்து விட்டது...

விலைமதிக்க முடியாத உன் அன்பால் நீ எனக்கு பரிசளித்த இந்த கடிகாரம் என்னை விட்டு போய்விட்டது..

நீ எவ்வளவு வருத்தப்படுவாய் என்று எனக்கு தெரியும்...

அவரின் மனைவி... என்னை மன்னித்து விடுங்கள் இந்த பணத்தை நான் அவரிடம் கொடுத்து விடுகிறேன்...

வீட்டிற்குச் சென்றவுடன் அங்கே நான் சேமிப்பு செய்த பணத்தில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அவருக்கு உதவுவோம்...

ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அவருக்கு வாங்கி கொடுப்போம்

அவர் 300 ரூபாயில் வாங்கும் அரிசி அவருக்கு எத்தனை நாட்கள் வரப்போகிறது...

நான் செய்த தவறுக்கு இந்த உதவியை அவருக்கு செய்தால்தான் என் மனம் திருப்தி அடையும் என்று
தன் கணவரிடம் கூறினால்

இப்போதாவது புரிந்து கொண்டாயே அடுத்தவரின் பொருளுக்கும் பணத்திற்கும் நாம் ஆசைப்பட்டால்...

நம்மிடமிருந்து இரண்டு முதல் மூன்று மடங்காக அந்தப் பணமோ, பொருளோ நம்மை விட்டுப் போய்விடும் என்று...

இதுவே கர்ம வினை...

இதை அறிந்தவர் யாரும் தவறு செய்ய மாட்டார்கள்...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும்
உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்வது போல்
உங்கள் புண்ணியத்தை செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள்...

புண்ணியம் தீரும் போது பாவ கணக்கு அதிகரித்துக் கொண்டே வரும்...

இதை உணராதவர்களே... இன்று தவறு மேல் தவறை செய்து கொண்டிருக்கிறார்கள்...

இந்தப் பதிவை பார்க்கும் உங்களுக்கு கடவுள் கொடுக்கும் ஒரு வாய்ப்பு...

முடிந்தால் உங்கள் பாவ கணக்கில் இருந்து புண்ணிய கணக்கையே அதிகப்படுத்துங்கள்...

உங்கள் கர்ம வினை அழியும்...

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நாம் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தப்படவே படைக்கப்பட்டிருக்கிறது..  ...
12/11/2025

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நாம் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தப்படவே படைக்கப்பட்டிருக்கிறது..

நாம் அடிக்கடி பார்க்கும் ஐந்தறிவு மிருகங்களை பாருங்கள்..
அது தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்கிறது.

எந்த சிங்கமும் தனக்கு வயதாகி விட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை, எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவு கேட்பதில்லை.

எந்த பூனையும் நாயும் படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மனிதர்கள் போல் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை,

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகளை அனைத்தையும்
அவைகள் செய்கின்றது..

ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் வயதானால் நோய் வரும் இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறோம்.

ஒன்றை மட்டும் நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...

முதுமை என்று எதுவும் இல்லை நோய் என்று எதுவும் இல்லை..
இயலாமை என்று எதுவும் இல்லை

எல்லாம் உங்கள் மனதிலும் அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது..

முதலில் உங்கள் சிந்தனையை மாற்றுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்..

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்..
சிலர் சொல்வார்கள்..

நான் சம்பாதித்தேன் நான் காப்பாற்றினேன் நான்தான் வீடு கட்டினேன். நான் தான் உதவி செய்தேன்.

நான் உதவி செய்யவில்லை என்றால் அவர் என்ன ஆகிறார் என்று தெரியாது

நான் பெரியவன் நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்

நான் நான் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் மனிதர்களே..

இதை உங்களால் சொல்ல முடியுமா நான்தான் என் இதயத்தை இயக்குகிறேன் நான்தான் என் மூளையை இயக்குகிறேன் நான்தான் என் இரண்டு சிறுநீரகங்களை இயக்குகிறேன்...

இதையெல்லாம் யார் ஒருவர் செய்கிறார்களோ இயக்குகிறார்களோ அவர் ஒருவருக்கே நான் என்று சொல்லும் அதிகாரமும் உரிமையும் உண்டு...

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டுவிட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்..

உலகைப் பற்றி கவலைப்படாதீர்கள் ஏனென்றால் அது இயற்கையுடையது இறைவனுடையது..

எதிர்காலம் குறித்து கவலைப்படாதீர்கள் அதுவும் காலத்தின் கையில் உள்ளது

எல்லாவற்றையும் வழங்கிய காலத்திற்கும், இறைவனுக்கும்.. இணையாக எதையும் வைக்காதீர்கள்..

உங்களுக்கு மேலே உள்ளவர்களை பார்த்து ஏங்காதீர்கள் தாழ்வு மனப்பான்மை வரும்

உங்களுக்கு கீழே உள்ளவர்களை பார்த்து ஏளனமாய் பார்க்காதீர்கள் தலைகனம் வரும்

உங்களை யாரிடமும் ஒப்பிடாதீர்கள் நீங்கள் நீங்களாக இருங்கள் தன்னம்பிக்கை வரும்..

11/11/2025

உங்கள் குடும்ப இரகசியம் உங்களோடு இருந்தால் மட்டும் தான் அது இரகசியம்.. ᩣシ

இது நடக்காவிட்டால் இன்றேஎழுதி வைத்துக் கொள்ளுங்கள்..     "சுவை என்னும் இனிப்பு விஷம்"    நாடு முழுவதும் சுற்றிப் பார்த்த...
11/11/2025

இது நடக்காவிட்டால் இன்றே
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

"சுவை என்னும் இனிப்பு விஷம்"

நாடு முழுவதும் சுற்றிப் பார்த்த
முகநூல் நண்பர் ஒருவர்
அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..

அது வேறொன்றுமில்லை எங்கு பார்த்தாலும் உணவு உணவு உணவு..

உதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொள்வோம்.. தற்போது உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது..

எல்லோரும் எதையாவது தின்றுகொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கட்டமைக்கப்படுகிறது..

முக்கியமாக அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.. உதாரணமாக, சோறு (கிராமத்து மொழியில்),இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, போன்றவை ஏளன உணவாக பார்க்கப்படுகிறது..

பல உணவகங்களில் இவைகள் எல்லாம் இல்லவே இல்லை தற்போது..

ரொட்டி வகைகளும் கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது..

மதிய வேளையில் கூட சோற்றை விட பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள்தான் அதிகம் காணப்படுகிறது.

இந்த வரிசையில் காலை உணவு மட்டும் தற்போது பெரிதாக எதுவும் பாதிக்கப்படவில்லை..

விரைவில் அதுவும் மாறக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம். அதாவது, ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ்,பாஸ்தா, போன்ற உணவு வகைகள் காலைகென கொண்டு வரலாம்..

தொலைக்காட்சி விளம்பரங்களும், இணையதள விளம்பரங்களும், இதைத்தான் இப்பொழுது புகுத்திக் கொண்டிருக்கிறது..

ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்கும் என்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்..

தற்போது ஐஸ்கிரீமை கூட பொரித்து உண்கிறார்கள்.

சிஸ்லர் என்னும் நெருப்புக்களில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது ஏன் இப்படி??

உலகில் உள்ள அனைத்து உணவு வகைகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இப்பொழுது கிடைக்கிறது.. பாரம்பரிய உணவுகளை தவிர,

பீசா என்னும் பிசாசு,
மனிதனை விரைவில் சவமாக மாற்றும் சவர்மா, இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆக இப்பொழுது கிடைக்கிறது...

குழந்தைகளும் மிக அதிகமாக இதைத்தான் விரும்புகிறது..

கல் தடுக்கி கீழே விழுந்தாலும் ஒரு பேக்கரிக்குல்தான் விழவேண்டி இருக்கு.. அத்தனை பேக்கரிகள்..

ஆனால் அந்த பேக்கரியில் விற்கப்படும் பொருட்கள் அங்கு செய்வதில்லை என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

எதோ ஒருநிறுவனம் உற்பத்திசெய்து அனைத்திற்கும் வழங்குகிறது. இதில் சுவை என்பது கூட பழைய சுவை இல்லை
அதிகப்படியான டால்டா, அஜனமோட்டோஸ்,கலப்பு போன்றவை இருக்கிறது..

நாக்கில் வைத்தவுடன் கரைவது போல் இருக்க வேண்டும் இன்றைய மனிதர்களுக்கு..
ஏன் என்றால் அனைவருக்கும் பல் இல்லை அல்லவா?

தற்போது கடினமாக கடிக்கக் கூடிய பொருட்களை விற்பனையில் இல்லை..

இனிப்பு வகைகளும் கேக்கு வகைகளும் கடல் போல் பெருகிவிட்டது.

இனிப்பு பெருகியதால் பல் மருத்துவமனைகளும் இங்கு அதிகம் பெருகிக்கொண்டே வருகிறது..

இப்போது அண்ணாச்சி கடைகளிலும் கூட தமிழ் பொருட்கள் கிடைப்பதில்லை பெரும்பாலும் வட இந்திய பொருட்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது..

(கடுக்காய் மிட்டாய் ,இலந்தை வடை, சுத்துற முட்டாய்)
ஏன் தின்பண்டங்கள் கூட தற்போது ஹல்டிராம்ஸ் பாக்கெட்டுகளில் தான் இருக்கிறது..

ஒரு காலத்தில் 'தூ' என்று துப்பிய சுவைதான் இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு பழக்கப்படுத்தி விட்டனர்..

இதற்கு அடிப்படை காரணம் பெருகிவரும்
டீ -மார்ட் போன்ற கடைகள்தான், அவர்கள் பெரும் அளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்கு கொடுக்க முடியும்.

அதனால்தான் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களை தான் விற்கிறார்கள்..

அதன் நாகரீகத் தோற்றத்தை பார்த்து அங்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்ல தொடங்குகிறார்கள்..

உணவிற்காக செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனமே.

உணவை மக்கள் முதலில் விழிவழி உண்கிறார்கள் அதாவது கண்களால் தின்கிறார்கள், பிறகு கண்டதை எல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிந்து விடுகிறார்கள்..

முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரமில்லாத காரணத்தினால் எப்போதாவது ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம்..

ஆனால் இப்போது வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து வீட்டிலேயே வைத்து வெளி உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்..

(Swiggy, zomato), இது நாகரீகத்தின் குப்பை என்று தெரியாமல்..

இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது..

ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம், ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது மனிதர்களின் மரபணுவை சிதைக்கும் பெரும் போர்..

தமிழ் மொழி எப்படி தற்போது அழிந்து கொண்டு வருகிறதோ, அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்..

சுவை என்னும் நஞ்சிலிருந்து வெளியேறி பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்கு திரும்பவேண்டும்..

அந்நிய உணவில் இருந்து தங்களை ஒவ்வொருவரும் விடுவித்துக் கொள்ள வேண்டும்..

இது நடக்காவிட்டால் இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனைகள் பெருகிவிடும்,

குழந்தைகள் முதல் இளம் வயதில் மரணம் அதிகம் வரும்,

உடல் பருமன் தவிர்க்க முடியாது,
மாரடைப்புக்கு பலியாக பல பேர் காத்திருக்க வேண்டும்..

சுருக்கமாக சொன்னால் நோயில்லாத மனிதனை பார்ப்பது அரிதிலும் அரிதாக மாறிவிடும்..

Address

ARACHALUR. (Chennimalai Main Road)
Erode
638101

Telephone

+919976261024

Website

https://x.com/ATHTHANOORTEX

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share