Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(3)

09/08/2026

எத்தனை பேருக்கு இதுபோல் நடக்குது.. உண்மைய சொல்லுங்க கருத்துக்களாக..

08/08/2026

துரோகிக்குகூட இந்த நிலை வரக்கூடாது.. மருத்துவமனையில் நடந்த நெகிழ வைக்கும், உங்களின் கண்களை ஈரமாக்கும் உண்மை சம்பவம்.. மனிதராக வாழ்வோம்.. அதுவும் மனிதத்தோடு வாழ்வோம்..

நடுத்தர மக்களின் மெளனக் குரல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஒரு க...
07/08/2026

நடுத்தர மக்களின் மெளனக் குரல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு காலத்தில்
"உழைத்தால் உயரலாம்" என்பது
ஒரு வார்த்தை அல்ல...
அது வாழ்க்கையின் நம்பிக்கை....

சிறிய முதலீடு...
நேர்மையான உழைப்பு...
நல்ல தரமான பொருள்...
இந்த மூன்றும் இருந்தால்
ஒரு குடும்பம் உயர முடிந்தது...

இன்று...
கோடிகளில் கட்டிடங்கள் எழுகின்றன...
பிரம்மாண்டமான கடைகள் திறக்கப்படுகின்றன...

ஆனால்...
நேர்மையாக தொழில் செய்ய நினைக்கும் சாதாரண மனிதன் மட்டும் தினமும் போராடிக் கொண்டிருக்கிறான்....

ஒரு லட்சம் முதலீட்டில் வெற்றி
கண்ட தொழிலுக்கு, இன்று பத்து லட்சம் முதலீடு செய்தாலும் நிம்மதி இல்லை...

வாடகை காத்திருக்கிறது...
வங்கி தவணை காத்திருக்கிறது...
மின்கட்டணம் காத்திருக்கிறது...
வரி காத்திருக்கிறது...

ஆனால்...
வாடிக்கையாளர் மட்டும் விலை
குறைக்கச் சொல்கிறார்...

ஒருவர் புதிய தொழில் தொடங்கினால், அவரை வாழ்த்துபவர்கள் குறைவு...

அதே தொழிலை பக்கத்திலேயே தொடங்குபவர்கள் அதிகம்...

இறுதியில்...
யாரும் வெல்வதில்லை...
அனைவரும் சோர்ந்து விடுகிறார்கள்...

இன்று இளைஞர்களிடம்
திறமை இல்லையா?
இருக்கிறது...
உழைக்கும் சக்தி இல்லையா?
இருக்கிறது...

ஆனால்...
சரியான வழிகாட்டுதல் இல்லை...

தன்னம்பிக்கை குறைகிறது...

தோல்வியை தாங்கும் மனப்பக்குவம் குறைகிறது.

அதனால்...
வேலை தேடுபவர்கள் அதிகரிக்கிறார்கள்...

வேலை கொடுப்பவர்கள் குறைகிறார்கள்...

ஒரு நாட்டின் உண்மையான செல்வம்
பெரிய கட்டிடங்கள் அல்ல...

நேர்மையாக உழைக்கும் சிறு தொழில்முனைவோர்கள்தான்...

அவர்களை நாம் இழந்தால்...
நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே இழந்துவிடுவோம்...

எந்த இருளும் நிரந்தரமில்லை.
காலம் மாறும்...
சந்தையும் மாறும்...
வாய்ப்புகளும் மீண்டும் வரும்...

ஆனால்...
நேர்மையை இழந்துவிட்டால்,
அதை மீட்டெடுப்பது மிகவும் கடினம்...

எனவே...
நம் பிள்ளைகளுக்கு சொத்து மட்டும்
சேர்த்து வைக்க வேண்டாம்...

உழைப்பின் மதிப்பையும்,
நேர்மையின் அருமையையும், தொழில்முனைவு என்ற துணிச்சலையும் கற்றுக் கொடுப்போம்...

அப்போது...
அவர்கள் வேலை கேட்கும்
தலைமுறையாக அல்ல...
வேலை உருவாக்கும் தலைமுறையாக உருவெடுப்பார்கள்...

இது ஒருவரின் பதிவு அல்ல...

இது...
ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் இதயத்தில் ஒலிக்கும் மெளனக் குரல்...

இன்று படித்துவிட்டு கடந்து செல்லாதீர்கள்...
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்...

நாளை நம் பிள்ளைகள் எந்த சமூகத்தில் வாழப் போகிறார்கள்?

சிந்தித்தால் மாற்றம் தொடங்கும்.
மாற்றம் தொடங்கினால் எதிர்காலம் மலரும்....

05/08/2026

2016ல் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த ஒரு தொழிலதிபரின் வாழ்க்கையில் 2025ல் நடந்த உண்மைச் சம்பவம்.. நீங்கள் எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும்.. உங்களுக்கும் இந்த நிலை வரலாம்.. வாழ்க்கையை அனுசரித்து வாழுங்கள்..

04/08/2026

உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களும் எங்களின் வெற்றி படிக்கட்டுகளாகவே நாங்கள் நினைக்கிறோம்..

காவல்துறை அண்ணா களுக்கும் சகோதரிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.. தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று அதை கொண்டாடும் வ...
03/08/2026

காவல்துறை அண்ணா களுக்கும் சகோதரிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.. தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று அதை கொண்டாடும் வகையில் ஒரு சிலர் பாதுகாப்பு இல்லாமல் வாகனங்களை இயக்கிக்கொண்டு செல்கிறார்கள்.. சாலையோரங்களில் பாதுகாப்பிற்காக நிற்கும் நீங்கள் கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. அரசியல் கட்சியைச் சார்ந்த உறவுகள் தயவுசெய்து பொறுப்புடன் வாகனங்களை இயக்கிச்செல்லவும்.. ஏனென்றால் உங்களின் இன்றைய கொண்டாட்டம் நாளைய திண்டாட்டமாக மாறிவிடக்கூடாது..

03/08/2026

ஒவ்வொருவரின் மனைவிக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம். இது ஒரு உண்மை கதை.. குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த வீடியோவை பகிரலாம்..

01/08/2026

உங்க பிரச்சனைகளை மத்தவங்களோட பிரச்சினைகளோடு ஒப்பிட்டு பாருங்க உங்க பிரச்சனை சின்னதாக இருக்கும்..இன்றைய இருள் நிரந்தரமல்ல, நாளை ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது.
உன் வலியைப் பகிர்ந்து கொள்; தனியாக சுமக்க வேண்டியதில்லை.
வாழ்ந்து காட்டு; உன் வாழ்க்கைக்கு இன்னும் பல அழகான அத்தியாயங்கள் இருக்கின்றன.

உறவுகள் அனைவருக்கும் எங்களது இனிய வணக்கம்...நாங்கள் பலமுறை இங்கு பதிவிட்டு சொல்லிவிட்டோம்... கேமரா முன் அந்தந்த கதாபாத்த...
31/07/2026

உறவுகள் அனைவருக்கும்
எங்களது இனிய வணக்கம்...

நாங்கள் பலமுறை இங்கு பதிவிட்டு சொல்லிவிட்டோம்...
கேமரா முன் அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நாங்கள் நடிக்கிறோம்...
அதில் உள்ள விழிப்புணர்வை
மட்டும் பாருங்கள்...
எங்கள் உறவு முறையை
ஆராய வேண்டாம் என்று...

நாங்கள் இருவரும் கணவன் மனைவி... கேமராவின் முன் சில கதாபாத்திரங்களாக உங்கள் முன் வருகிறோம்...
இங்கு நல்ல வீடியோக்களை மட்டும் தான் பதிவு செய்கிறோம்...

என் கணவருக்கு கடவுள்
கொடுத்த வரம் எழுத்து...
அந்த எழுத்தை நல்ல விஷயங்களுக்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களாக மக்கள் மனதில் கருத்துக்கள் நீங்காத இடம் பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறோம்..

எங்கள் வீடியோக்களால் திருந்தியவர்
பலர் உள்ளனர்..
மேலும் மேலும் தங்களை திருத்தி கொள்பவர்களும் நிச்சயமாக இருப்பார்கள்...

அதுவே எங்களின் வெற்றி...

கணவன் மனைவி என்ற இரு கதாபாத்திரங்களை வைத்து மட்டுமே அனைத்து கருத்துகளையும்
சொல்லிவிட முடியாது...

எங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஒரு சேவை மனப்பான்மையோடு
இங்கு வீடியோ பதிவிடுகிறோம்...

பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கம் என்றால் எத்தனையோ விளம்பரங்களுக்கு நாங்கள் விலை போய் இருப்போம்...

நாங்கள் கணவன் மனைவி என்ற உறவு தெரிந்தவர்கள் சிலர் அண்ணன் தங்கையாக, அக்கா தம்பியாக கதாபாத்திரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை... அப்பா மகளாகவோ,
தாத்தா பேத்தியாகவோ, அம்மா மகனாகவோ நடிக்கும் போது ஏற்றுக் கொள்ளும் அவர்களின் மனம் அண்ணன் தங்கையாகவும், அக்கா தம்பியாகவும்,ஏற்றுக் கொள்ள மறுக்கிறது...அதற்குக் காரணம்
நாங்கள் ரீல்ஸ்க்காக, பணம் சம்பாதிக்க இப்படி செய்கிறோம் என்ற எண்ணம்...

உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை...
அதில் உள்ள கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறோம்...

லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் எங்கள் கருத்துக்கள் ஆழமாக பதிந்துள்ளன அதுவே எங்களின் மிகப்பெரிய வெற்றி...

இதற்கு வேறு நபர்கள் நியமித்து நீங்கள் எடுக்க வேண்டியதுதானே என்று சிலரின் கேள்வி...

நாங்கள் இருப்பது கிராமம்...
எங்களுக்கும் தொழில், தோட்டம் அனைத்தும் உள்ளது...
எங்களுக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் தான் இந்த வீடியோக்களை நாங்கள் எடுக்கிறோம்... பதிவிடுகிறோம்..

நாங்கள் எடுக்கும் நேரத்திற்கு மற்றவர்களுக்கு வருவதற்கு நேரம் இருக்காது...
இது போன்ற பல காரணங்கள் உள்ளன...

கதாபாத்திரங்களை கதாபாத்திரங்களாக மட்டும் பாருங்கள்...
கருத்துக்களையும் அப்படியே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
நாங்கள் கூறவில்லை...
உங்கள் சிந்தனையோடு
அலசி ஆராயுங்கள்...

தொடர்ந்து ஆதரளியுங்கள் நன்றி

மற்றொருவரின் கணவருடன் தொடர்பு கொள்வதை நிறுத்துங்கள்…கேளுங்கள் சகோதரிகளே…ஒரு பெண் எப்போதும் தாண்டக்கூடாத எல்லைகள் உண்டு.ந...
31/07/2026

மற்றொருவரின் கணவருடன் தொடர்பு கொள்வதை நிறுத்துங்கள்…

கேளுங்கள் சகோதரிகளே…

ஒரு பெண் எப்போதும் தாண்டக்கூடாத எல்லைகள் உண்டு.
நீங்கள் திறக்கக்கூடாத கதவுகள் உண்டு.
உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுக்கக்கூடாத ஆண்கள் உண்டு.

மற்றொருவரின் கணவர்?
நிச்சயமாக அது தடைசெய்யப்பட்ட எல்லை.

இது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல.
உங்களை நீங்களே மதிப்பதற்காக.
உங்கள் கௌரவத்தை பாதுகாப்பதற்காக.
உங்கள் குடும்பத்தின் மரியாதையை காப்பதற்காக.

தன் மனைவிக்கு துரோகம் செய்யும் ஒரு ஆண், உங்களுக்கும் துரோகம் செய்யலாம்.

ஒரு குடும்பத்தை அமைத்து, மனைவியுடன் வாழ்வதாக உறுதியளித்த ஒருவரால் அந்த உறவை மதிக்க முடியவில்லையென்றால், நாளை உங்களையும் மதிப்பார் என்று எப்படி நம்ப முடியும்?

நீங்கள் ஒரு தற்காலிக ஈர்ப்பாக மட்டுமே மாறிவிடக் கூடும். அந்த ஈர்ப்பு மறைந்த பிறகு, உங்களின் மன அமைதியும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம்.

தவறான உறவுகள் மனஅமைதியையும் நிம்மதியையும் குலைக்கும்.

மற்றொருவரின் குடும்ப வாழ்க்கையில் தலையிடுவது பலருக்கும் மனவேதனை, குற்ற உணர்வு, நம்பிக்கை இழப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஒரு கணநேர ஆசைக்காக நீண்டகால அமைதியை இழக்காதீர்கள்.

கர்மா நமது ஒவ்வொரு நொடியையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதையும் மறந்து விடவேண்டாம்.. இந்த மகா பாவத்தை செய்தால் இறைவனால் கூட மன்னிக்க முடியாத அளவுக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்..

முதலில் பாதிக்கப்படுவது உங்கள் சொந்த கௌரவமே.

உண்மையான வலிமை என்பது மற்றவரின் வாழ்க்கையில் இடம் பிடிப்பதில் இல்லை. உங்கள் மதிப்பையும், ஒழுக்கத்தையும் காப்பதில்தான் இருக்கிறது.

தன்னம்பிக்கையுள்ள பெண்கள், பிறர் குடும்பத்தை உடைக்க முயலமாட்டார்கள்; தங்கள் வாழ்க்கையை நேர்மையுடனும் அன்புடனும் கட்டியெழுப்புவார்கள்.

விசுவாசமில்லாத உறவு நிலைத்து நிற்காது.

ஒருவரின் நம்பிக்கையை உடைத்து தொடங்கும் உறவு, நம்பிக்கையிலேயே தொடரும் என்று உறுதி இல்லை.

நம்பிக்கையும் நேர்மையும் இல்லாத உறவுகள் பெரும்பாலும் நீண்ட கால மகிழ்ச்சியை தருவதில்லை.

ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை பாதிக்கலாம்.

உங்கள் ஒரு முடிவு, உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல; மற்றொரு குடும்பத்தின் அமைதியையும் பாதிக்கக்கூடும்.

எனவே, ஒரு கணநேர உணர்ச்சிக்காக நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மற்றொருவரின் கணவர் என்பது மரியாதையுடன் விலகி இருக்க வேண்டியவர்.

பயத்தால் அல்ல;
சுயமரியாதைக்காக.
குடும்ப மதிப்பிற்காக.
நல்ல எதிர்காலத்திற்காக.

ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு ஆகியவை ஒரு பெண்ணின் உண்மையான அழகு.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது. வாழ்த்துகள்.

(இந்தப் பதிவு ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.. ஒரு சார்பாக எழுதப்பட்டது என்று நினைக்க வேண்டாம்...).
Aththanoortex.

Address

தமிழ்நாடு
Erode

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Shortcuts

Share