Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(3)

உண்மையான பக்தி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,​ராகவ் ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர...
24/12/2025

உண்மையான பக்தி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
​ராகவ் ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர்....

சமூக வலைதளங்களில்
அவர் ஒரு 'Influencer'...

அவர் செய்யும் ஒவ்வொரு தானமும் அனாதை இல்லங்களுக்குச் செல்வது, விலையுயர்ந்த உடைகளை வழங்குவது
அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டு லட்சக்கணக்கான 'Likes' பெறும்....

"கடவுளுக்கு நான் செய்யும்
சேவை இது" என்று அவர் பெருமையாக நினைத்துக்கொண்டார்....

​ஒருநாள் அவர் தனது சொகுசு காரில் ஒரு முக்கிய மீட்டிங்கிற்குச் சென்று கொண்டிருந்தார்....

வழியில் ஒரு பழைய சிதலமடைந்த கோயிலைக் கண்டார்...
அங்கே ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்....

ராகவ் அவரிடம் சென்று, "ஐயா,
நான் இந்தக் கோயிலைப் புதுப்பிக்க கோடி ரூபாய் தருகிறேன்....

என் பெயர் கல்வெட்டில் பெரியதாகப் பொறிக்கப்பட வேண்டும்...

இதுதான் நான் இறைவனுக்குச் செய்யும் பக்தி" என்றார்...

​அந்த முதியவர் சிரித்துக்கொண்டே, "தம்பி, நீ தருவது பணமல்ல,
உனது அகந்தை...

உண்மையான பக்தியைப் பார்க்க வேண்டுமானால்
அந்த சிக்னலில் நில்" என்றார்...

​ராகவ் காரை ஓட்டிச் சென்று
ஒரு டிராபிக் சிக்னலில் நின்றார்...

அங்கே ஒரு டெலிவரி பாய்
தனது பைக்கில் மழையில் நனைந்தபடி காத்துக்கொண்டிருந்தார்...

நேரம் கடந்து கொண்டிருந்தது, அவருக்கு 'Delivery Delay' ஆனால் அபராதம் விதிக்கப்படும் சூழல்....

​அப்போது சாலையோரம் ஒரு முதியவர் மயங்கி விழுந்தார்...

சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்,
சிலர் கண்டு கொள்ளாமல்
கடந்து சென்றனர்...

ராகவ் கூட தனது மீட்டிங்
நேரமாகிவிட்டதே என்று
கடிகாரத்தைப் பார்த்தார்...

​ஆனால், அந்த டெலிவரி பாய் யோசிக்கவில்லை...

தனது வேலையை விட, அந்த உயிரே முக்கியம் என நினைத்து பைக்கை
ஓரம் கட்டினார்...

அந்த முதியவரைத் தூக்கி தண்ணீர் கொடுத்து, தனது போனில் ஆம்புலன்ஸ் அழைத்து, அவர் சுயநினைவு திரும்பும் வரை கூடவே இருந்தார்...

அவருக்கு ஆர்டர் லேட் ஆனதால் ஆப்பில் ரேட்டிங் குறைந்தது, அன்றைய
ஊதியமும் போனது....

​அவர் எந்த வீடியோவும் எடுக்கவில்லை, யாரிடமும் சொல்லவில்லை...

அந்த முதியவர் கண் விழித்து
அவர் கையைப் பிடித்து "நல்லா இருப்பா" என்று சொன்னபோது,
அந்த இளைஞரின் முகத்தில்
ஒரு நிம்மதி தெரிந்தது...

​இதைப் பார்த்த ராகவ்
அதிர்ந்து போனார்...

தான் கேமராவிற்கு முன்னால்
செய்த 'தர்மம்' எவ்வளவு சிறியது
என்று அவருக்குப் புரிந்தது....

​பக்தி என்பது கோயிலில் மட்டும் இல்லை அது ஒரு சக மனிதனின் துயரத்தைப் பார்த்துத் துடிக்கும் இதயத்தில் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தார்....

​தர்மம் என்பது
விளம்பரத்திற்காகச் செய்வது அல்ல யாரும் பார்க்காதபோது
நாம் செய்யும் நற்செயலே
உண்மையான தர்மம்...

கடவுள் சிலைகளுக்கோ
அல்லது பணக்காரர்களுக்கோ
உங்கள் உதவி தேவையில்லை....

அவர் படைத்த எளிய உயிர்களின் வடிவில் அவர் உங்களிடம் வருகிறார்....

அந்தச் சமயம் நீங்கள் காட்டும் கருணையே நீங்கள் அவருக்குச் செய்யும் ஆகச்சிறந்த பூசை....

அன்புடன்
கருணாம்பிகை
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..

21/12/2025

எல்லோர் வீட்டிலும் இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும்..

என் மனசாட்சியைத் தட்டிய பத்து ரூபாய்!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
21/12/2025

என் மனசாட்சியைத் தட்டிய பத்து ரூபாய்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ராஜாவுக்கு​ காலை அலுவலகம்
செல்லும் அவசரம்....

சிக்னலில் கார் நின்றபோது,
ஒரு சிறுமி கையில் சில
ரோஜாப் பூக்களை வைத்துக்கொண்டு, "ஐயா... ஒரு பூ அஞ்சு ரூபாய் தான், பசிக்குது... வாங்கிக்கோங்க" என்று கண்ணாடியைத் தட்டினாள்....

ராஜாவுக்கு எரிச்சலாக வந்தது... "இங்கெல்லாம் பிச்சை எடுக்காதே, போ..." என்று விரட்டினான்...
​ஆனாலும் அவள் விடவில்லை....

ஏதோ ஒரு உந்துதலில்
பர்ஸைத் திறந்தான்....

உள்ளே நீண்ட நாட்களாகச் செல்லாமல் இருந்த, ஓரத்தில் மோசமாகக் கிழிந்த ஒரு பத்து ரூபாய் நோட்டு இருந்தது....

"யாரிடமாவது தள்ளிவிட வேண்டும்" என்று நினைத்து வைத்திருந்த
நோட்டு அது....
அதை அவளிடம் நீட்டினான்...

​அதை வாங்கிய அந்தச் சிறுமி, "ஐயா... இது கிழிஞ்சிருக்கு, கடையில
வாங்க மாட்டாங்க. வேற நோட்டு கொடுங்க" என்று கெஞ்சினாள்....

​ராஜாவோ சற்றும் இறக்கமின்றி,
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிக்னல் விழுந்ததும் காரை வேகமாக எடுத்துச் சென்றான்....

அந்தச் சிறுமியின் ஏமாற்றமான முகம் அவன் பின்னால் மறைந்தது...

ஒரு செல்லாத நோட்டைத் தள்ளிவிட்டதில் ஒரு அற்பமான 'புத்திசாலித்தனமான' வெற்றி அவனுக்குள்!

​ஆனால், மாலையில் மனிதாபிமானம் அவன் முகத்தில் அறைந்தது....

​அலுவலகம் முடிந்து வரும்போது, ஒரு தள்ளுவண்டியில் பெரியவர் ஒருவர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார்...

அவரிடம் பழம் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே அவனிடம் இருந்த அதே போன்ற மற்றொரு கிழிந்த நோட்டைத் தந்திரமாக
மடித்துக் கொடுத்தான்...

​அந்தப் பெரியவர் அந்த நோட்டைப் பார்த்தார். அது செல்லாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.... ஆனால், அவர் அதை மறுக்காமல், மிகச் சாதாரணமாகத் தன் பழைய பைக்குள் போட்டுக்கொண்டு அவனுக்கு மீதி சில்லறையைத் கொடுத்தார்....

​அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "பெரியவரே... அந்த நோட்டு கிழிஞ்சிருக்கு, அது எங்கும் செல்லாதுன்னு தெரிஞ்சும் ஏன் வாங்கிக்கிட்டீங்க?" என்று கேட்டான்....

​அவர் ராஜாவை நிமிர்ந்து பார்த்தார்.... அந்தப் பார்வையில் இருந்த கனிவு அவன் இதயத்தைத் தைத்தது....

அவர் சொன்னார்
​"தெரியும் தம்பி... நான் வேணாம்னு சொன்னா, இதை நீங்க கொண்டு போய் வேற ஒரு ஏழைக் குழந்தை கிட்டயோ, இல்ல தட்டு ஏந்துற பிச்சைக்காரன் கிட்டயோ தான் கொடுப்பீங்க....

அவங்க அந்தப் பணத்தை வச்சு கடையில போய் ஒரு பிரட் வாங்கும்போது, கடைக்காரன் 'இது செல்லாது'ன்னு சொல்லி அவங்க கையில இருக்கிறதை பிடுங்கி எறிவான் பாருங்க...
அப்போ அவங்க வயிறு எரியும் பாருங்க... அந்தப் பாவம் உங்களுக்கு
வேணாம் தம்பி....

எனக்கு இது நஷ்டமானாலும் பரவாயில்லை, ஒரு ஏழையோட பசி ஏமாறக்கூடாது!"

​அவர் பேசிய அந்த ஒரு நிமிடம்... பூமிக்கு அடியில் புதைந்துவிட மாட்டோமா என்று
அவனுக்கு தோன்றியது!

​அவன் எவ்வளவு பெரிய கோழை! படித்தவன், கார் வைத்திருப்பவன் என்று மார்தட்டிக் கொள்ளும் அவன், ஒரு ஏழையின் பசியை
ஏமாற்றத் துணிந்தான்...

ஆனால், அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே போராடும் அந்தப் பெரியவர், அடுத்தவன் மனசு வலிக்கக் கூடாது என்று நினைக்கிறார்....

​நண்பர்களே... நாம் கொடுக்கும் உதவி அடுத்தவருக்கு உபயோகமாக இருக்க வேண்டுமே தவிர, நம்மிடம் இருக்கும் குப்பைகளைத் தள்ளும் இடமாக ஏழைகளின் வறுமையை நினைக்காதீர்கள்....

​பணம் இல்லாதவன் ஏழை அல்ல... பகிர்ந்து கொள்ளும் மனமும், அடுத்தவன் வலியைத் தன் வலியாக நினைக்கும் குணமும் இல்லாதவன் தான் இந்த உலகிலேயே மிகப்பெரிய ஏழை!

அன்று நடந்த இந்த சம்பவத்தால் அவன் தவறை அவன் உணர்ந்துவிட்டான்...

நீங்கள் எப்போது உணர்வீர்கள்?

கருணாம்பிகை
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி

உறவுகளுக்கான ஓர் எச்சரிக்கை!​ஒரு வீட்டில் தீப்பிடித்த பிறகு அணைக்க ஓடுவதை விட, தீப்பிடிக்காமல் தடுப்பதே ஆகச்சிறந்த பாதுக...
20/12/2025

உறவுகளுக்கான ஓர் எச்சரிக்கை!

​ஒரு வீட்டில் தீப்பிடித்த பிறகு
அணைக்க ஓடுவதை விட,
தீப்பிடிக்காமல் தடுப்பதே
ஆகச்சிறந்த பாதுகாப்பு....
உறவுகளும் அப்படித்தான்...

ஒரு பெண்ணுக்குத் தன் கணவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும், அங்கீகாரமும், மென்மையான வார்த்தைகளும் மறுக்கப்படும்போது அவளது உணர்வுகள் அங்கே புதைக்கப்படுகின்றன....

அன்புக்காகத் தாகத்தோடு இருக்கும் அவள், வெளியிலிருந்து வரும் போலியான வார்த்தைகளை 'நிஜமான காதல்' என்று நம்பி ஏமாறுகிறாள்....

கலங்கிய நீரில் மீன் பிடிப்பவர்களுக்கு அவள் எளிதான இரையாகிறாள்...

அதேபோல், ஒரு ஆண்
தன் மனைவியிடம் தேடும்
மரியாதையும் கவனிப்பும் கிடைக்காதபோது,
தனது ஆண்மை
அவமதிக்கப்படுவதாக உணர்கிறான்...

அந்த வெறுமை, வெளியிலிருந்து வரும் சாதாரணக் கவனிப்பைக்கூடத் தவறான ஈர்ப்பாக மாற்றத் தூண்டுகிறது....

வீட்டில் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் இளம்பெண், காட்டில் விடப்பட்ட
மானைப் போன்றவள்...

பசித்த ஓநாய்களாகக் காத்திருக்கும் சமூகத் தீமைகளுக்கு அவள் எளிதில் தீனியாகிவிடுகிறாள்...

பாதிக்கப்படுவதைச் சாட்டாக வைத்து பாவம் செய்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது....

ஆனால், அன்பு மறுக்கப்படும்போது பாவம் செய்வதற்கான கதவுகள் எளிதாகத் திறக்கப்படுகின்றன....

சிதறிய பிறகு சேர்ப்பதை விட,
சிதறாமல் காப்பதே புத்திசாலித்தனம்...

நம் குடும்ப உறுப்பினர்களுக்கு
நாம் கொடுக்கும் நேரம், அன்பு
மற்றும் முழுமையான கவனிப்பு
மட்டுமே அவர்களைச் சுற்றியுள்ள
பாதுகாப்புக் கோட்டையாக இருக்கும்..

​அன்பால் கதவுகளை அடைப்போம் உறவுகளைப் பாதுகாப்போம்!

20/12/2025

தன்மானத்திற்காக எதை வேண்டுமானாலும் விற்கலாம்.. ஆனால் ஒருபோதும் தன்மானத்தை மட்டும் விற்று விடக்கூடாது..

கௌரவப் பிச்சை!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,​"ஊரே பேசணும்" - இந்த ஒரு வரிதான் இன்று பல குடும்பங்களைச் சு...
20/12/2025

கௌரவப் பிச்சை!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
​"ஊரே பேசணும்" - இந்த ஒரு வரிதான் இன்று பல குடும்பங்களைச் சுடுகாடு வரை துரத்துகிறது....

​கொரோனாவை விடக் கொடிய நோய் இன்று தமிழகத்தைப் பிடித்து ஆட்டுகிறது.... அதன் பெயர் ஆடம்பரம்!

"நான் செய்த மொய் பணத்தை
எப்படித் திரும்ப வாங்குவது?"
என்ற கவலையில், கடன்
வாங்கித் திருமணத்தை
ஆடம்பரமாக நடத்துகிறோம்....

3 மணி நேரப் புகழுக்காக,
30 வருட உழைப்பை மண்டப வாடகையாகக் கொடுக்கிறோம்....

​10 வயதுப் பெண் குழந்தை பூப்படைவதை ஊருக்கே விளம்பரம் செய்கிறோம்....

தாய்மாமன் கடனாளியாக இருந்தாலும் சீர்வரிசை செய்தே தீர வேண்டும் என அன்பு என்ற பெயரில் மிரட்டுகிறோம்...

​அடுத்தவன் 30 லட்சத்தில் வீடு கட்டினால், நாம் 50 லட்சத்தில் கட்ட வேண்டும்
என்ற போட்டி....

வாசலில் கார் நிற்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுக்க ரத்தத்தை வட்டியாகக் கட்டுகிறோம்...

​உண்மை என்ன தெரியுமா?
நாம் நமக்காக வாழ மறந்துவிட்டோம்....

நம்மைப் பிடிக்காத நாலு பேர் மெச்ச வேண்டும் என்பதற்காக, நமக்குள்ளே தற்கொலை செய்து கொள்கிறோம்...

​சாப்பிட்டு விட்டுப் போகும் கூட்டம்
"உப்பு குறைவு" என்று
சொல்லிவிட்டுப் போய்விடும்....

ஆனால், வாங்கிய கடனோ உங்கள் தூக்கத்தை நிரந்தரமாகத் திருடிவிடும்...

பகட்டுக்காகக் கடனாளியாகாதீர்கள். எளிமைதான் என்றும் இனிமை....

மற்றவர்களுக்காக வாழ்வதை நிறுத்திவிட்டு, உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்காக வாழுங்கள்!

19/12/2025

பவளத்தின் முத்தாக கவர்ந்து இழுத்து..சபலம் கொடுத்து அவலம் கொடுக்குமே.. கடன் ..தினம் தினம் எத்தனை உயிர்களைத்தான் கேட்டுக் கொண்டே இருப்பாய்..ஓர் உண்மை சம்பவம்..

19/12/2025

பக்தி மட்டுமே உண்மை.. பரிகாரம் என்பது வியாபாரமே.. ஜோதிடத்தில்..Jothidar Nallasivam..
நீங்களும் இதுபோல் ஜோதிடரிடம் கேள்வி கேட்க விரும்பினால் கீழே கமெண்டில் கேட்கவும்.. உங்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்க அவர் தயாராக உள்ளார்..

என் அப்பாவின் மௌனப் போர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,​அப்பா... ஸ்டெதாஸ...
19/12/2025

என் அப்பாவின் மௌனப் போர்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
​அப்பா...
ஸ்டெதாஸ்கோப்ல
இதயத் துடிப்பைக் கேக்கலாம், ஆனால் உங்க மனசுக்குள்ள இருக்குற பாரத்தை என்கிட்ட எப்போ சொல்லப் போறீங்க?" -

நான் கேட்டபோது அப்பா அப்படியே உடைந்து போனார்....

​நான்காம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த எனக்கு, படிப்புச் செலவு அதிகம் என்பது தெரியும்....

அதைச் சமாளிக்க என் அப்பா,
பகல் நேர வேலையோடு இரவு நேரத்திலும் ஏதோ ஒரு 'ஆன்லைன் வேலை' என்று
போனைப்
பார்த்துக் கொண்டே இருந்தார்....

​"ஒரு நாளைக்கு 5,000 ரூபாய்" என்ற விளம்பரத்தை நம்பி அவர் உள்ளே நுழைந்திருக்கிறார்....

முதலில் 1,000 ரூபாய்க்கு 1,500 கிடைத்தது...

அந்தச் சிறு லாபம் அவரைப் பெரும் குழியில் தள்ளியது...

"உங்க பொண்ணு டாக்டராகி ஹாஸ்பிடல் கட்டணும்னா 5 லட்சம்
இன்வெஸ்ட் பண்ணுங்க" என்று யாரோ சொன்ன பொய் வார்த்தையை நம்பி, அவர் தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்துவிட்டார்...

​ஒருநாள் இரவு அவர் மாடியில் தனியாக அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்...

அவர் கையில் சில
மாத்திரைகள் இருந்தன...

ஒரு மகளாகவும், வருங்கால மருத்துவராகவும் என் ரத்தம் உறைந்தது...

​"அப்பா!" என்று கத்தியபடி அவர் கைகளைப் பற்றினேன்...

​"நிலா... உன்னை டாக்டர் ஆக்க சேர்த்து வச்சிருந்த காசு போயிருச்சுமா...

இனி உன்னால படிக்க முடியாது...

ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் ஏமாந்த கோமாளியா நிக்கிறேன்.... எனக்கு வாழத் தகுதியில்லை..." என்று அவர் கதறினார்....

​நான் அவர் கண்ணீரைத்
துடைத்துச் சொன்னேன்...

​"அப்பா, நான் படிக்கிறதுக்கு
லட்சங்களை விட, உங்க 'ஆயுள்'
தான் முக்கியம்....

பணம் போனா என்னப்பா? நான் 'எஜுகேஷன் லோன்' எடுத்துப் படிப்பேன்,
இல்லன்னா பார்ட்-டைம்
வேலை செஞ்சு படிப்பேன்....

ஆனால் எனக்கு நீங்க வேணும்...

ஒரு டாக்டர் பொண்ணுக்கு தன் அப்பாவையே காப்பாத்த முடியலன்னா, நான் ஊருக்கு வைத்தியம்
செஞ்சு என்ன பிரயோஜனம்?"

​அவர் கண்களில் தெரிந்த அந்தத் தற்கொலை பயம் மறைந்து,
ஒரு நிம்மதி தெரிந்தது...

​மக்களுக்கான விழிப்புணர்வு (ஒரு மருத்துவ மாணவியின் வேண்டுகோள்)

என் அப்பா இப்போது மீண்டு வந்துவிட்டார்....
இழந்த பணம் மீண்டும் வருமா
என்று தெரியாது, ஆனால்
என் அப்பாவின் சிரிப்பு மீண்டும் கிடைத்துவிட்டது....
உங்கள் குடும்பத்தில்
உள்ளவர்களிடம் பேசுங்கள்...

மௌனம் உயிரைக் கொல்லும், பேச்சு உயிரைக் காக்கும்!

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வேலையில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பாதீர்கள்...

இது போன்ற சம்பவங்கள் நிறைய இடங்களில் இன்று நடந்து வருகிறது..
இந்தக் கதை ஒரு எச்சரிக்கை பதிவு

N. S. கருணாம்பிகை

18/12/2025

எந்தப்பிரச்சனைக்கும் தீர்வுக்கு மட்டும் யோசித்துக் கொண்டே இருங்கள் கடைசி நிமிடத்தில் கூட பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது..

நான் இழைத்த ஒரு சிறு தவறு!​வெளியே பெய்த பெருமழைக்கும், உள்ளே நான் அனுபவித்த நரக வேதனைக்கும் ஒரு தொடர்பு இருந்தது....என் ...
18/12/2025

நான் இழைத்த ஒரு சிறு தவறு!
​வெளியே பெய்த பெருமழைக்கும், உள்ளே நான் அனுபவித்த நரக வேதனைக்கும் ஒரு தொடர்பு இருந்தது....

என் கைப்பேசி ஒருமுறை சிணுங்கியது....

என் மகளின் சிரித்த முகத்தோடு நான் பதிவிட்டிருந்த புகைப்படத்திற்கு யாரோ ஒருவன் 'இதயம்' அனுப்பியிருந்தான்....

அந்த நொடி அது என் தாயுள்ளத்திற்குப் பெருமையாக இருந்தது...

ஆனால் அடுத்த நொடி வந்த வீடியோ, என் உலகத்தையே சுக்குநூறாக உடைத்தது....

​வீடியோவில் என் உயிர் நிலா... ஒரு பாழடைந்த அறையில், கண்கள் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தாள்.

அவளுக்கு முன்னால் இருந்த லேப்டாப் திரையில், நான் காலையில் பெருமையாகப் பகிர்ந்த அவளது 'முதல் நாள் பள்ளி' புகைப்படம் மின்னிக் கொண்டிருந்தது....

​பின்னணியில் ஒரு குரூரமான குரல் ஒலித்தது...

"மதி... உன் பொண்ணு நிலாக்கு இந்த நீல கலர் டைரின்னா ரொம்ப உசுரு போல? அதுல அவ எழுதுற குட்டி குட்டி ரகசியங்களை நீயே தான் படம் பிடிச்சு போட்டிருந்த..."

​என் இதயம் துடிப்பதை நிறுத்தியது...

அந்த டைரி ரகசியம் எனக்குத் தெரியும், என் கணவருக்குத் தெரியும்... இப்போது ஒரு கடத்தல்காரனுக்கும் தெரிகிறது...
காரணம், அதை என்ற ஹேஷ்டேக் போட்டு ஊருக்கே காட்டியவள் நான்தான்!

​"யார் நீ? என் மகளை விட்டுவிடு!" என்று நான் கதறினேன்...

​மறுமுனையில் அவன் ஏளனமாகச் சிரித்தான்...

"நான் உன் போனுக்குள்ளேயே இருக்கிறவன் மதி! நிலா எப்ப தூங்குவா, அவளுக்குப் பிடிச்ச சாக்லேட் எது, அவ போற ஸ்கூல் வேன் எதுன்னு எல்லாத்தையும் 'அப்டேட்' என்ற பேர்ல நீயே தான் எனக்குச் சொன்ன..."

​அவன் ஒரு ஆடியோவை ஒலிக்கச் செய்தான்...

என் கணவரின் குரல்! "நிலா குட்டி, அப்பா அனுப்பி வச்ச மாமா கூட கிளம்பி வா.." என்று அது சொன்னது...
நான் நிலைகுலைந்தேன்...

என் கணவர் என் அருகில்தான் இருக்கிறார், பின் எப்படி இது சாத்தியம்?
​"இது AI தொழில்நுட்பம் மதி! உன் கணவர் பேசின பழைய வீடியோக்களை வச்சு, அவர் குரலை அப்படியே திருடிட்டேன்...

உன் மகள் அவங்க அப்பாவோட குரலை நம்பி தான் என் கையை பிடிச்சா!"
​கடைசியில் போலீஸ் உதவியோடு என் மகளை மீட்டபோது, அவள் உடலில் உயிர் இருந்தது, ஆனால் அவள் கண்களில் இருந்த அந்தப் பழைய ஒளி மறைந்து போயிருந்தது...

அந்த கிரிமினல் பிடிபட்டபோது சொன்ன ஒரு வார்த்தை என் வாழ்நாள் முழுமைக்குமான தண்டனை...

​"சார், அவங்க அம்மா போட்ட 'Status' தான் எனக்கு 'Route Map'. நான் அவளைக் கடத்தவே இல்லை...

அவங்க தான் என் கையைப் பிடிச்சு வழிநடத்தி வந்து அவங்க வீட்டு வாசலைத் தேடிக் கொடுத்தாங்க!"

​"இந்தக் கதையில் வரும் நிலா ஒரு கற்பனையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் பகிரும் தகவல்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நிஜமான ஆபத்தாக மாறலாம்."

​"சமூக வலைதளங்களில் நாம் தேடும் தற்காலிக 'லைக்'கள், நம் பிள்ளைகளின் நிரந்தரப் பாதுகாப்பைச் சிதைக்கக் கூடாது."

​"டிஜிட்டல் உலகில் விழிப்புணர்வுடன் இருப்போம்...
நம் குழந்தைகளைக் காப்போம்!"

17/12/2025

சில எதார்த்தங்கள் தான் பலரது வாழ்க்கையே மாற்றி விடுகிறது இன்று..

Address

ARACHALUR. (Chennimalai Main Road)
Erode
638101

Telephone

+919976261024

Website

https://x.com/ATHTHANOORTEX

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share