Aththanoor Tex

Aththanoor Tex எதையும் அடைய முயற்சி செய்.. ஆனால், அதன் மீது ஆசைப்படாதே..
(2)

10/06/2026

ஒருவரின் வலி உணர்வுகள் தெரியாமல்... அவர்களை வார்த்தை அம்புகளால் எய்து விடாதீர்கள் இன்றைய இளைய தலைமுறைகளே..

Watsup098656 66554  Size 2XLPrice 820+$Min 3pcs 820 per piece free shipping Min 5 pcs 790 per piece free shipping Pure c...
10/06/2026

Watsup
098656 66554
Size 2XL
Price 820+$
Min 3pcs 820 per piece free shipping
Min 5 pcs 790 per piece free shipping
Pure cotton with linning
Premium quality
Readymade pattyala suits

Watsup098656 66554 Size XLPrice 820+$Min 3pcs 820 per piece free shipping Min 5 pcs 790 per piece free shipping Pure cot...
10/06/2026

Watsup
098656 66554
Size XL
Price 820+$
Min 3pcs 820 per piece free shipping
Min 5 pcs 790 per piece free shipping
Pure cotton with linning
Premium quality
Readymade pattyala suits

10/06/2026

நாம ஒரு Secret Bookka இருந்தால் மட்டுமே இந்த சமுதாயத்தில் ஜொலிக்க முடியும்.. public Book இருந்தால் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை பயனற்றதாகவே ஆகிவிடும்..

09/06/2026

இதுபோல் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.. இதற்கு தீர்வு தான் என்ன?? முடிவில் பாருங்கள்.. இதுதான் சரியான தீர்வு..

09/06/2026

Watsup
098656 66554
Readymade chudithar with lining
Single pcs 820+$
Min 3 pic 820 per pic free shipping
Min 5 pic 790 per pic free shipping

கருத்துக்கு கருத்து சொல்லுங்கள்ஆபாசத்திற்கு இடமில்லை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
08/06/2026

கருத்துக்கு கருத்து சொல்லுங்கள்
ஆபாசத்திற்கு இடமில்லை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு காலத்தில் அரசியல் குறித்து
ஒரு பதிவு போடுவதற்கே
பலர் தயங்கிய சூழல் இருந்தது....

இன்று சமூக வலைதளங்களை
திறந்தாலே அரசியல் கருத்துக்களே அதிகமாக காணப்படுகின்றன....

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறும் தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது....

இன்று சமூக வலைதளங்களில் சிலர் அரசியல் கருத்துக்களை முன்வைப்பதை விட, ஆபாச வார்த்தைகளையும் தரக்குறைவான விமர்சனங்களையும் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்....

கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. ஆனால் கருத்து வேறுபாடு
என்ற பெயரில் நாகரிகத்தை இழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது...

முதல்வராக இருப்பவர் யாராக இருந்தாலும், அவர் உங்கள் அரசியல் எதிரியாக இருக்கலாம்...
உங்கள் விருப்பமான தலைவராக இல்லாமலும் இருக்கலாம்....
அதற்காக பொதுவெளியில் மரியாதை இல்லாமல் பேசுவது நாகரிக அரசியலல்ல...

ஒரு பதவிக்கு உரிய மரியாதையை வழங்குவது நமது பண்பாட்டின் அடையாளம்..

நாங்கள் எந்த ஆட்சி வந்தாலும்
அதில் உள்ள நல்லவற்றை பாராட்டியும், தவறுகளை சுட்டிக்காட்டியும், மக்களின் குரலாகவே இருந்து வருகிறோம்...
அதற்காக மிரட்டல்களையும், அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்...

ஆனால் உண்மையை பேசுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை...

ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பது தவறல்ல. ஒரு தலைவரை நேசிப்பதும் தவறல்ல. ஆனால் அந்த ஆதரவு கண்மூடித்தனமாக மாறும்போது, தவறுகளைக் கூட நியாயப்படுத்தும் நிலை உருவாகிறது...

அதுவே ஜனநாயகத்திற்கு ஆபத்து.

இன்று சிலர் பணத்திற்காக, பதவிக்காக அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக சமூக வலைதளங்களில் போலி போராளிகளாக நடிக்கிறார்கள்....
அவர்களுக்கு உண்மை முக்கியமல்ல...
யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக குரல் கொடுப்பதுதான் முக்கியம்....

ஆனால் வரலாறு ஒன்று சொல்லுகிறது பொய்யின் ஆயுள் குறைவு, உண்மையின் ஆயுள் நிரந்தரம்...

ஒரு உண்மையான தொண்டன் தனது தலைவரின் மரியாதையை காப்பான்...

தலைவரின் பெயரில் அநாகரிகமாக பேச மாட்டான். தலைவரின் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வான்... எதிர்ப்பவர்களை இழிவுபடுத்த மாட்டான்...

எனவே, கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் அளியுங்கள். ஆதாரங்களால் விவாதியுங்கள். தர்க்கத்தால் வெல்லுங்கள். ஆபாச வார்த்தைகளால் அல்ல...

தமிழரின் பெருமை அவரது மொழியில் உள்ளது... அந்த மொழியை அநாகரிக வார்த்தைகளால் களங்கப்படுத்த வேண்டாம்.
நினைவில் கொள்ளுங்கள்...

பணம் கொடுத்து வாங்கப்படும் குரல்கள் சில நாட்கள் மட்டுமே ஒலிக்கும்.
உண்மைக்காக எழும் குரல்கள் தலைமுறைகள் தாண்டியும் ஒலித்துக்கொண்டே இருக்கும்...

கடைசியாக ஒன்றை
சொல்லிக் கொள்கிறேன்...
இதுவரை காமராஜருக்குப் பின் ஆட்சி செய்தவர்களும் சரி...
இப்போது வரை அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைத்து தலைவர்களும் சரி... மக்களுக்கான உண்மையானவர்
எவரும் இல்லை...
படித்தவர்கள் திருடர்கள், நடித்தவர்கள் நடிகர்கள், இது இரண்டும் இல்லாதவர்கள் நடித்துத் திருடுபவர்கள்... மக்களுக்கு புரிந்தால் சரி நன்றி...

08/06/2026

நம்பி கெட்டவர்கள் இங்கு யாரும் இல்லை.. நம்பாமல் கெட்டவர்கள்தான் இங்கு அதிகம்.. நம்பிக்கையோடு சென்று வென்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்..

சில நொடிகள் கிடைக்கும் காம இச்சைக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் ஆறறிவு படைத்த மனித இன தாய்களுக்கு மத்தியில்.. தன்...
07/06/2026

சில நொடிகள் கிடைக்கும் காம இச்சைக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் ஆறறிவு படைத்த மனித இன தாய்களுக்கு மத்தியில்.. தன் குழந்தைகளுக்காக தன் உடலையே உணவாகக் கொடுக்கும் நான்கு அறிவு படைத்த சிலந்திகளைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்??
ஆம்..

குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்த பிறகு தாய் சிலந்தி தன் குட்டிகளுக்கு தன்னையே உயிருடன் உணவாக உண்ண அனுமதிக்கிறது.. இதனை விஞ்ஞானிகள் "மாட்ரிபேஜி" (Matriphagy) என்று அழைக்கின்றார்கள்.. மனிதர்களாகிய நம் பார்வையில் இது பயங்கரமாக தோன்றினாலும் இயற்கையில் இது ஒரு மிகச்சிறந்த உயிர் வாழ்தெய்வமாகும்.

முதலில் தாய் சிலந்தி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவங்களை தன் உடலில் உற்பத்தி செய்து தனது குட்டிகளுக்கு வழங்குகிறது. பிறகு குட்டிகள் ஓரளவு வளர்ந்த உடன் தனது உடலையே உணவாக அர்ப்பணிக்கிறது.. புதிதாகப் பிறந்த சிறிய சிலந்தி குட்டிகளுக்கு இந்த உணவு புரதம் மற்றும் ஆற்றலின் மிகப்பெரிய ஆதாரமாக அமைகிறது.. ஆறறிவு படைத்த மனிதர்களாகிய பல தாய்கள் தாய்ப்பால் குடித்தால் தன் அழகு குறைந்துவிடும் என்று அதையே தவிர்க்கும் இந்த காலத்தில் நான்கு அறிவு படைத்த இப்படிப்பட்ட ஜீவன்களும் வாழ்கிறது..

ஆய்வாளர்களின் கருத்துப்படி இனப்பெருக்கத்திற்குப் பிறகு தாய் சிலந்தியின் எதிர்கால உயிர் வாழும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.. இது ஆய்வாளர்களின் கருத்து மட்டுமே, இயற்கையின் கருத்து வேறு.. தன் உடலில் உள்ள சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை தனக்காக சேமிக்காமல் தனது சந்ததியினருக்கே முழுமையாக மாற்றி விடுகிறது இந்த சிலந்தி இனங்கள்.. மற்ற உயிரினங்களின் ஒழுக்கமும் தியாகங்களும் நமக்கு தெரியாமலேயே போய் விடுகிறது.. இதை படிக்கும் போது சிலந்தி இனத்தின் மீது எனக்கு ஏதோ ஒரு மரியாதை தோன்றுகிறது.. உங்களுக்கும் இது நடந்தால் நிச்சயம் கருத்தில் பதிவாக சொல்லுங்கள்.. பள்ளிப் பாடங்கள் படித்தும் கிடைக்காத அறிவு இது போன்ற உயிரினங்களில் தாய்மை தியாகத்தால் நமக்கு கிடைக்கிறது.. இயற்கை மிகவும் சக்தி வாய்ந்தது அதன் முன்னாள் மனிதசக்தி ஒரு தூசு போன்றதுதான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. மற்ற உயிரினங்களை விட மிகவும் மோசமானவர்கள், கீழ்த்தரமானவர்கள் மனிதர்கள் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறோம்.. இந்த சுயநல வாழ்க்கையில்.. நம்மை மாற்றிக்கொள்ள இனியேனும் முயற்சிப்போமே..

இது போன்ற தியாகங்களை ஒவ்வொரு வருங்கால இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களும் மனம் மாற வேண்டும்.. இயற்கையின் சக்திகளுக்கு உட்பட்டே நாம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. இது போன்ற தாயின் தியாகங்களை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் இது கூட நாம் செய்யும் ஒரு நல்ல செயல்தான்.. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்..
Aththanoortex
Aththanoortex Sathiyavarman Erode

டிஜிட்டல் இந்தியாவிலும் கொஞ்சம் வாழப்பழகிக்கொள்ளுங்கள்.....இங்கு வீரமும்தேவை.. விவேகமும் தேவை..பணமும் தேவை..   இன்று ஈரோ...
06/06/2026

டிஜிட்டல் இந்தியாவிலும் கொஞ்சம் வாழப்பழகிக்கொள்ளுங்கள்.....
இங்கு வீரமும்தேவை.. விவேகமும் தேவை..பணமும் தேவை..

இன்று ஈரோட்டில் இருந்து எங்கள் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் என் வாகனத்தையும்.... எனக்கு முன்னால் சென்ற வாகனத்தையும் மடக்கினார்....
முன்னாள் நின்ற வாகன ஓட்டுநர் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு சென்றார்....

அனைத்து ஆவணங்களையும் காட்டியும் சரமாரியான கேள்விகள் முன்னால் வாகன ஓட்டுனரிடம்.... அவர் எவ்வளவோ போராடியும் பயனில்லை.... அவரது ஓட்டுனர் உரிமம் பறித்து கொண்டார்கள்.. எல்லா ஆவணங்களையும் காட்டிய அவர் முக்கியமான ஆவணத்தை காட்ட தவறிவிட்டார்..

அடுத்து என்னைக் கேட்டார்கள்......
நான் கேட்ட கேள்வி....
"சார் எவ்வளவு வேணும்"
அதற்கு அவர் சொன்ன பதில்தான் நெத்தியடி.....
"இப்படி சரியான Document காட்டுனா நாங்க ஏ உங்கள தொந்தரவு செய்யறோம்" என்றார் சிரித்தபடி.....

200ரூபாயில் முடிந்தது.....

நான் செய்தது சரியானது அல்லதான்....
ஆனால்.. அங்கு
அதுதான் சரியானதாக பார்க்கப்பட்டது..
அந்த வாகனத்தினருக்கு Onlineல் ₹1200ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது..

நான் இந்த இடத்தில் புத்திசாலித்தனமான நடந்து கொண்டேன்..என்று பெருமைப்பட்டுக்கொள்ள இந்தப்பதிவை பதியவில்லை..
உண்மையில் வேதனையோடு பதிவிக்கிறேன்...
நேர்மையோடு நடந்தவருக்கு 1200,அபராதம்.. குறுக்கு வழியில் சென்றதால் 200ரோடு முடிந்தது.. அந்த இடத்தில் நாம் என்னதான் நேர்மையாக நடந்துகொண்டாலும்
நம்மீது குற்றம் சொல்லும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்....
நாம் அதை தவறு என்று நிரூபிக்கும் இடத்தில் இல்லை..
அவர்கள் அந்தவேலைக்கு வர பல இலட்சங்களை முதலீடு செய்துதான் வந்துள்ளார்களாம்.. அப்படி என்றால் இதன்வேர் எங்கு தொடங்குகிறது?

ஒரு இடத்தில் சுற்றியும் சாக்கடை நீர் ஓடும்போது.... நடுவில் மட்டும் நாம் நல்ல நீராக நிற்கமுடியாது....
என்பதை மட்டும் புரிந்தது கொண்டால் இந்த டிஜிட்டல் இந்தியாவில் சுலபமாக பயணிக்கலாம்...
இந்த அனுபவம் எத்தனைபேர்களுக்கு உள்ளது..
இதுபோன்ற சூழ்நிலையில் யாராவது துணிச்சலுடன் போராடி இருந்தால்
பதிவிடுங்கள்.. இதற்கான சட்ட வழிமுறைகள் என்ன என்று தெரிந்துகொள்கிறோம்.

நாணல்போல் வளைந்து கொடுக்கவேண்டும்.....
இங்கு
நேராக நிற்கும் மரங்கள் தான் முதலில் வெட்டப்படும்..
Aththanoortex Sathiyavarman Erode

Address

தமிழ்நாடு
Erode

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoor Tex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoor Tex:

Share