18/05/2026
#அகஸ்த்தியரின் #ஆயில்யம் நட்சத்திரத்தின் புனித நாளில் நடைபெறும்
#காவேரி ஆரத்தி மகா விழா, 22/05/2026 வைகாசி 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.00–7.00 மணி வரை ஈரோட்டில் ஆனந்தமிகு பக்தி சூழலில் நடைபெறுகிறது.
📍 இடம்: ஈரோடு–கரூர் சாலை, ஆர்.டி. கல்லூரி பின்புறம், ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயில் வளாகம்
🌊 “அம்மை காவேரியின் அருள் பொழியும் தருணம்”
நதியாக மட்டுமல்ல, தெய்வமாக போற்றப்படும் காவேரி தாயாரின் திருவருளைப் பெறும் அபூர்வ வாய்ப்பு இது.
🕉️ நிகழ்ச்சி நிரல்:
• 4:30 மாலை – கோமாதா & அஸ்வ பூஜை
• 5:25 மாலை – காவேரி ஆரத்தி
• 6:15 மாலை – அன்னபிரசாதம்
இந்த புனித ஆரத்தியில் கலந்து கொள்வதன் மூலம் பாவ விமோசனம், மன அமைதி, செழிப்பு மற்றும் தெய்வீக அருள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே சமயம், “நதிகளை தெய்வமாகக் காப்போம்” என்ற புனிதப் பொறுப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.
இயற்கையை போற்றும் இந்த ஆன்மிக அனுபவத்தில் கலந்து கொண்டு,
காவேரி தாயாரின் அருளை பெற அனைவரும் வருக! 🙏🌿
குத்துவிளக்கு பூஜை கோவில் திருபணி பின் செய்யபடும்.