TN 43-Usip Live News Nilgiris

TN 43-Usip Live News Nilgiris 24*7 NILGIRI LIVE UPDATES

15/08/2021
தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட சித்தா மருத்துவ அலுவலரின் அறிவுறுத்தலின...
04/08/2021

தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட சித்தா மருத்துவ அலுவலரின் அறிவுறுத்தலின் படி கூடலூர் அரசு மருத்துவ மனை(சித்தா பிரிவு) சார்பாக மேல்கூடலூர் பஜார் பகுதியில் நோய் தடுப்பு சித்தா மருந்துகள் மற்றும் கபசுர குடிநீர் பொடிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அரசு மருத்துவ மனை சித்தா பிரிவு மருந்தாளுநர் உமா பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மருந்துகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பல்லாகுழி சாலையால் மக்கள் அவதி.புதியதாக அமைத்த சாலையின் அவல நிலைநீலகிரி மாவட்டம் கூடலூர், மேல்கூடலூரிலிருந்து கோக்கால் ச...
26/07/2021

பல்லாகுழி சாலையால் மக்கள் அவதி.புதியதாக அமைத்த சாலையின் அவல நிலை

நீலகிரி மாவட்டம் கூடலூர், மேல்கூடலூரிலிருந்து கோக்கால் செல்லும் சாலை கடந்த வருடம் அப்பகுதி மக்களின் பல போராட்டங்கள் மற்றும் புகார் மனுக்களுக்கு பிறகு நகராட்சியின் சார்பில் சாலை செப்பனிடப்பட்டது.தற்போது அச்சாலையானது சில மாதங்களிலேயே மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது மக்களிடையே மிகவும் அதிர்ப்தியினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சாலை வழியாக தான் அப்பகுதியில் அமைந்துள்ள கல்வி கூடத்திற்கும், அரசின் சார்பில் அமைக்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் மக்கள் செல்ல வேண்டியுள்ளது. தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.தற்போது பருவ மழையும் பெய்து வருவதாலும்,மோசமடைந்த இச்சாலையில் செல்வது கஷ்டமாக உள்ளதாகவும் தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையினை சீரமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22/07/2021

தேவர் சோலை தேவன்எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி இரண்டு மாடு உயிரிழப்பு

13/06/2021

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கை

வடக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி. இது அதேபகுதியில் நீடிக்கிறது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும்.

இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல மவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அடுத்த 4 நாட்களுக்கு அதாவது நாளை முதல் 17-ந் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்க கடலில் இன்று முத 3 நாட்களுக்கு பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். இதேபோல் அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

06/06/2021
05/06/2021

எதற்கெல்லாம் அனுமதி!

முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு !

➤வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும்.

➤மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

➤மின் பொருட்கள் (electrical goods), பல்புகள். கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பனை செய்யும்
கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

➤சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

➤அனைத்து அரசு அலுவலகங்களும். 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

➤தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

➤மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

Address

Gudalur

Alerts

Be the first to know and let us send you an email when TN 43-Usip Live News Nilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share