Live Tamil News - தமிழ் செய்திகள்

  • Home
  • India
  • Guindy
  • Live Tamil News - தமிழ் செய்திகள்

Live Tamil News - தமிழ் செய்திகள் காலத்தால் மறையாத பழைய மற்றும் இடைக்கால சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

படப்பிடிப்பு முடியும் வரை ஏ.வி. மெய்யப்பன் செட்டுக்கு வரக்கூடாது.. கண்டிஷன் போட்ட பானுமதி.. அதே பானுமதி வெற்றி விழாவில் ...
27/07/2025

படப்பிடிப்பு முடியும் வரை ஏ.வி. மெய்யப்பன் செட்டுக்கு வரக்கூடாது.. கண்டிஷன் போட்ட பானுமதி.. அதே பானுமதி வெற்றி விழாவில் கேட்ட மன்னிப்பு..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ், தனது பட தயாரிப்பில் சந்தித்த சவால்களும், கலைஞர்களுடனான அதன் உறவும் சுவாரஸ்யமானவை. அந்த வரிசையில், ஏவி.எம். தயாரிப்பில் வெளியான ‘அன்னை’ திரைப்படம் உருவான விதம், நடிகை பானுமதி விதித்த அசாதாரண நிபந்தனை, மற்றும் பின்னர் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நிகழ்வு ஆகியவை திரையுலக வரலாற்றில் தனிச்சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளன.

ஏவி.எம் – பானுமதி கருத்து வேறுபாடு: “நான் கால் வைக்க மாட்டேன்!”

ஒரு வங்காள படத்தைத் தமிழில் ‘அன்னை’ என்ற பெயரில் எடுக்க ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் முடிவு செய்தார். இந்த கதைக்கு நடிகை பானுமதிதான் மிகவும் பொருத்தமானவர் என்பதில் செட்டியார் உறுதியாக இருந்தார். ஆனால், அந்த நேரத்தில் பானுமதிக்கும் ஏவி.எம். நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதன் காரணமாக, “என் வாழ்நாளில் நான் ஏவி.எம். வளாகத்திற்குள் கால் வைக்க மாட்டேன்” என்று பானுமதி சபதம் எடுத்திருந்தார்.

பானுமதியின் நிபந்தனை: “படப்பிடிப்பு முடியும் வரை செட்டியார் வரக்கூடாது!”

‘அன்னை’ படத்திற்காக ஏவி.எம். புதல்வர்கள் பானுமதியை அணுகினார்கள். வங்காள படத்தை பார்த்த பானுமதிக்கு அந்த கதையில் நடிக்க மிகவும் ஆசை. ஆனால், தான் எடுத்திருந்த சபதம் அவரை தடுத்தது. இறுதியாக, அவர் ஒரு நிபந்தனையுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்: “நான் நடிக்கிறேன். ஆனால் படம் முடியும் வரை ஏவி.எம். செட்டியார் ஏவி.எம். ஸ்டுடியோவில் கால் வைக்கக் கூடாது!”

பானுமதியின் இந்த நிபந்தனையை கேட்ட ஏவி.எம். மெய்யப்ப செட்டியார், சிறிதும் யோசிக்காமல் அதற்கு ஒப்புக்கொண்டார். தனக்கு சொந்தமான ஸ்டுடியோவிற்குள் ‘அன்னை’ படம் முடியும் வரை அவர் காலடி எடுத்து வைக்கவில்லை. அவருக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம். கலைஞர்களின் திறமைக்கு அவர் கொடுத்த மதிப்பையும், படத்தின் தரத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.

வெற்றி விழா மேடையில் மன்னிப்பு கேட்ட பானுமதி:

‘அன்னை’ திரைப்படம் 1962ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் நூறாவது நாள் விழா நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றபோது, மேடையில் பகிரங்கமாக ஏவி.எம். மெய்யப்ப செட்டியாரிடம் மன்னிப்பு கேட்டார் பானுமதி. இது, அவரது பெருந்தன்மையையும், கலையின் மீதான அவரது மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது. ஒரு கலைஞரின் ஈகோவை காட்டிலும், வெற்றிக்கு காரணமாக இருந்த ஒரு தயாரிப்பாளரின் தியாகத்தை அவர் மதித்த இந்த நிகழ்வு திரையுலகில் இன்றும் பேசப்படுகிறது.

‘அன்னை’ படத்தின் மற்ற சுவாரசியங்கள்:

‘மாயா மிருக’ என்ற வங்காள படத்தின் ரீமேக்கான ‘அன்னை’ படத்திற்கு கே.எஸ். கோபாலகிருஷ்ணன் திரைக்கதை எழுத, கிருஷ்ணன் – பஞ்சு இணைந்து இயக்கினர். இந்தப் படத்தில் பானுமதியும் சௌகார் ஜானகியும் போட்டி போட்டு நடித்திருந்தனர்.

பாடல்களைப் பொறுத்தவரை, கண்ணதாசனுக்கும் ஏவி.எம். மெய்யப்ப செட்டியாருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், இந்த படத்தின் ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசனையே எழுத வைப்பதில் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் உறுதியாக இருந்தார். ‘அழகிய மிதிலை. பூவாகி காயாகி கனிந்த மரம்’, ‘அன்னை என்பவள்’ உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இத்தகைய சுவாரஸ்யமான நிகழ்வுகள்தான், தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மேலும் அழகாக்கி, அதன் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன.

அட்வான்ஸ் கூட வாங்காமல்... சிவாஜி உதவியால் ரிலீசான படம்; தப்பிப் பிழைத்த பெரிய இயக்குனர்தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர...
26/07/2025

அட்வான்ஸ் கூட வாங்காமல்... சிவாஜி உதவியால் ரிலீசான படம்; தப்பிப் பிழைத்த பெரிய இயக்குனர்

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்டவர் ஸ்ரீதர். முன்னணி நடிகர்களுடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், முதன் முதலில் படத்தை தயாரிக்கும்போது நடிகர் சிவாஜி கணேசன், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

1954-ம் ஆண்டு வெளியான ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியராக சினிமாவில் நுழைந்தவர் தான் சி.வி.ஸ்ரீதர். அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு, சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான எதிர்பாராதது என்ற படத்திற்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தின் மூலம் சிவாஜி மற்றும் பத்மினி இருவருடனும் ஸ்ரீதருக்கு நெருக்கிய நட்பு கிடைத்தது,

எதிர்பாராதது படத்திற்கு பிறகு, மகேஷ்வரி, லட்சாதிபதி, மாமன் மகள் ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஸ்ரீதர் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன் ஆகிய மூவரும் சேர்ந்து சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக, ஸ்ரீதர் கற்பனை செய்து வைத்திருந்த அமரதீபம் கதையை தனது நண்பர்களுக்கு சொல்ல அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது.

இந்த படத்திற்கு ஹீரோ சிவாஜிதான் என்று சொன்ன ஸ்ரீதர், ஹீரோயின்களாக பத்மினி, சாவித்ரி பெயரை கூறியுள்ளார். படத்திற்கு இயக்குனர் டி பிரகாஷ்ராவ், இசைக்கு சலபதிராம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் முடிவு செய்யப்பட்டாலும், பணத்திற்கு என்ன செய்வது என்ற பேச்சு வரும்போது, என்னால 5000 ரூபாய் ரெடி பண்ண முடியும் ஸ்ரீதர் கூறியுள்ளார். அப்போத ஸ்ரீதருக்கு ஒரு யோசனை தோன்றியது.

எதிர்பாராதது படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சிவாஜியை சந்தித்து அமரதீபம் கதையைச் சொன்னார். கதை பிரமாதம் என்று சிவாஜி தட்டிக்கொடுக்க, நாயகிகளாக பத்மினி, சாவித்ரி, இயக்குனர் பிரகாஷ் ராவ், இசையமைப்பாளரர் சலபதி ராவ் ஆயியோரை முடிவு செய்துள்ளதாகவும், படம் தயாரிக்க போதிய பணம் இல்லை என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். மேலும், அண்ணா உங்களுக்கே அட்வான்ஸ் கொடுக்கறதுக்குனும் இப்ப எங்கிட்ட பணம் இல்ல. உங்களோட பேர போட்டு விளம்பரம் செய்ய அனுமதி கொடுங்க. அந்த விளம்பரத்தைப் பாத்தா வினியோகவஸ்தர்களும், ஃபைனான்சியர்களும், பணம் கொடுப்பாங்க. அந்த டைம்ல உங்களுக்கே அட்வான்ஸ் கொடுக்கிறோம் என்று ஸ்ரீதர் கூறியுள்ளர்.

ஸ்ரீதரின் பேச்சுக்கு சிவாஜியும் சம்மதம் சொல்ல, பத்மினி, சாவித்ரி இருவரும் சிவாஜி வழியிலேயே சம்மதம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாளிதழ்களில் அமரதீபம் விளம்பரம் முழுப்பக்கங்களாக வெளியானது. அதையடுத்து பைனான்சியர்கள் முதலீடு செய்ய போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்தார்கள். படவேலைகள் துரிதமாக நடக்க ஆரம்பித்தன. அமரதீபம் திரைப்படம் செப்டம்பர் 29, 1956 என்று வெளியவந்து மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,

பாஜகவில் இருந்து முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கப்போகும் தவெக? அரசியல் களத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்!விஜயதரணி...
25/07/2025

பாஜகவில் இருந்து முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கப்போகும் தவெக? அரசியல் களத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்!

விஜயதரணி

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விளவங்​கோடு சட்​டப்​பேரவை தொகு​தி​யில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றவர். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். ஆனால், விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆகையால், எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி எப்படியாவது சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், ராகுல்காந்தி நெருக்கம் மற்றும் அனுதாபம் ஓட்டு கிடைக்கும் என்ற அடிப்படையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விஜயதரணி பாஜகவில் ஐக்கியம்

அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதரணி தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். மேலும் மாநில காங்​கிரஸ் தலை​வர் பதவி கிடைக்​கும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் டெல்லி காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பதவி கிடைக்காத விரக்தியில் விஜயதரணி

இதனையடுத்து மக்​கள​வைத் தேர்​தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜரதரணி விருப்​பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்க வாய்ப்பு வழங்காமல் பொன்​.​ரா​தாகிருஷ்ணனுக்கே கன்​னி​யாகுமரி தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்​பளித்​தது பாஜக தலை​மை. அதுமட்டுமல்ல விளவங்​கோடு இடைத்தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாஜக கட்சியில் சேர்ந்த எனக்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை என தனது ஆதங்கத்தை விஜயதரணி வெளிப்படுத்தினார்.

தவெக விஜய்

இந்நிலையில் பதவி கிடைக்காத நிலையில் அதிருப்தியில் இருந்து வரும் விஜயதரணி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை விஜயதரணி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஜயதரணி மறுப்பு

இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி விஜயதரணியை தொடர்பு கொண்டு கேட்ட போது:- தேசிய கட்சியான பாஜகவை நம்பி வந்துள்ளேன். விரைவில் எனக்கு பதவி வழங்​கு​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. யூகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளில் உண்மை இல்லை. நம்பிக்கையோடுபாஜகவின் அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். என் நம்பிக்கை வீண் போகாது என நம்பு கிறேன் என தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் இதுவரை நிதானமாக ஆடி வந்த தவெக தலைவர் விஜய் இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளே நிலையில் ஆளும் திமுகவுக்கு எதிராக அடித்து ஆடி வருகிறார்.

அம்மா பசிக்குது... இருடா கணேசன் வரட்டும்; எம்.ஜி.ஆர் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்த சிவாஜி: அவரே சொன்னது!தமிழ் திரைத்...
24/07/2025

அம்மா பசிக்குது... இருடா கணேசன் வரட்டும்; எம்.ஜி.ஆர் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்த சிவாஜி: அவரே சொன்னது!

தமிழ் திரைத்துறையின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆகியோருக்கு இடையே இருந்த நட்பு குறித்து நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் விவரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதில், "எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவருடனும் நான் பழகி இருக்கிறேன். இது குறித்து பல பொதுக்கூட்டங்களில் கூட நான் பேசி இருக்கிறேன். எம்.ஜி.ஆருடனான தனது உறவு குறித்து சிவாஜி கணேசன் சில தருணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதன்படி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆரை, சிவாஜி நேரில் சென்று பார்த்து வந்த பின்னர், என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார்.

அப்போது, 'நாங்கள் இருவரும் சந்தித்த பின்னர், ஏறத்தாழ 15 நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. அதன் பின்னர், இருவரும் பேசத் தொடங்கினோம். நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது' என்று சிவாஜி கூறினார். இதைத் தொடர்ந்து, எதற்காக உங்கள் இருவருக்கும் இடையே வெறுப்பு மற்றும் சண்டை இருப்பதாக மக்கள் பேசுகிறார்கள் என சிவாஜியிடம் நான் கேள்வி எழுப்பினேன்.

இதைக் கேட்ட சிவாஜி, 'சிறு வயதில் சென்னைக்கு வந்து நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் சாப்பிட்ட இடமே எம்.ஜி.ஆர் வீடு தான். நாடகம் முடிந்த பின்னர், எம்.ஜி.ஆர் வீட்டில் தான் இரவு சாப்பிடுவேன். அந்த நேரத்தில் நான் நாடகத்தை முடித்து திரும்புவதற்கு தாமதம் ஆகும். அப்போது, எம்.ஜி.ஆர் பசிக்கிறது என்று கூறினாலும், நான் வரும் வரை காத்திருக்குமாறு எம்.ஜி.ஆரின் தாயார் கூறுவார். மேலும், நான் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு வந்த பின்னர், எனக்கு சாப்பாடு பரிமாறிய பின்னர் தான், எம்.ஜி.ஆருக்கு சாப்பாடு கொடுப்பார்கள்' என சிவாஜி கணேசன் கூறினார்" என்று பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரங்களாக சினிமாவில் விளங்கிய இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்திருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது என்றும், அதனை இறுதிவரை இருவரும் எவ்வாறு சரியாக பார்த்துக் கொண்டார்கள் என்றும் இந்த சம்பவங்கள் மூலம் ரசிகர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

அன்வர் ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அன்பகம் கலை..! எதிரி கட்சி திமுகவில் இணைந்த பின்னணிஅதிமுகவும் அன்வர் ராஜாவும்அதிமுகவில்...
22/07/2025

அன்வர் ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அன்பகம் கலை..! எதிரி கட்சி திமுகவில் இணைந்த பின்னணி

அதிமுகவும் அன்வர் ராஜாவும்

அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை அதிமுகவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தேர்தல்களில் இஸ்லாமியர்கள் மக்களிடம் அதிமுகவின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை கவர்ந்து வந்தார்.

2001-2006 தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 2014-2019 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து 16-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராகவும் பணியாற்றினார்.

அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்தது. இதனால் வாக்குகள் சிதறி அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாஜக தான் முக்கிய காரணம் என அன்வர் ராஜா பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். மேலும் இரட்டைத் தலைமைக்கு எதிராகவும் பேசியதால், கட்சி விதிகளை மீறியதாகக் கூறி 2021 நவம்பர் 30-ல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் 2023 ஆகஸ்ட் மாதம் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார் அன்வர் ராஜா, மீண்டும் பாஜகவுடன் கூட்டணியே இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்த நிலையில்,

திமுகவில் இணைந்த அன்வர் ராஜா

மீண்டும் தற்போது கூட்டணி உருவாகியுள்ளது. இதற்கு அதிமுகவில் உள்ள சிறுபான்மையின தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அன்வர் ராஜா நீண்ட நாட்களாகவே அதிமுக தலைமையோடு பாஜக இணைந்ததால் மன உளைச்சலோடும் இருந்து வந்தார். எனவே வேறு கட்சிக்கு செல்லலாமா என ஆலோசித்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் அன்வர் ராஜாவுடன் இருந்த ராமநாதபுரம் மாவட்ட முக்கிய நபர்களும் அவருடைய உதவியாளராக இருக்கும் அனீஸ் என்பவரும் திமுகவில் இணைய தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

குடிகாரனுக்கு ஒரு பாட்டு; பாராட்டி பரிசு கொடுக்க வந்து ஏமாற்றிய கண்ணதாசன்: எம்.எஸ்.வி ஷாக்!தமிழ் சினிமாவில் லெஜண்ட் காம்...
10/07/2025

குடிகாரனுக்கு ஒரு பாட்டு; பாராட்டி பரிசு கொடுக்க வந்து ஏமாற்றிய கண்ணதாசன்: எம்.எஸ்.வி ஷாக்!

தமிழ் சினிமாவில் லெஜண்ட் காம்போவாக இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் உருவான ஒரு பாடல் கம்போசிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து ஒரு நிகழ்ச்சியின் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால் அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் உருவான பல பாடல்களை சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு இடையேயான உறவு தமிழ் சினிமாவில் இன்றும் பெருமையாக பேசப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.

மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்த காதல் மன்னன் படத்தில் கூட அவர் கவியரசு கண்ணதாசன் குறித்து புகழ்ந்து பேசி நடித்திருப்பார். படத்தில் அவர் வைத்திருக்கும் மெஸ்க்கு கூட கண்ணதாசன் மெஸ் என்றே பெயரிட்டிருப்பார். இவர்களுக்கு இப்படி ஒரு நட்பு இருந்தாலும் எம்.எஸ்.வி கண்ணதாசன் இடையே சில சுவாரஸ்யமாக சம்பவங்களும் நடந்துள்ளது.அந்த வகையில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியான நீதி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கான மெட்டை எம்.எஸ்.வி போட்டு கொடுத்துள்ளார்.

இதை கேட்ட கண்ணதாசன் என்னடா இப்படி போட்டா நா எப்படி வார்த்தைகளை போடுவது, நீதான் மெட்டு போட்டு விட்டு அதற்கு டம்மி வார்த்தைகளை கொடுப்பல, இதற்கு அப்படி ஏதாவது வார்த்தை வச்சிருக்கியா என்று கேட்டுள்ளார். அப்போது எம்.எஸ்.வி ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ என்று பாடியுள்ளார்.இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் சூப்பர் என்று கூறி தனது பாக்கெட்டில் கையை விட்டு பணம் எடுத்தால் அதில் ரூ10 இருந்துள்ளது.

அதை எம்.எஸ்.வியிடம் கொடுக்க வந்த கண்ணதாசன், ஒரு சின்ன திருத்தம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அதனால் அதை நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். கண்ணதாசனின் பேச்சை கேட்ட எம்.எஸ்.வி நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியடி தங்கம். இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று பாடியுள்ளார். இதை கேட்டு அனைவரும் பாராட்டியுள்ளனர்.

அப்போது எம்.எஸ்.வி கண்ணதாசனிடம் அந்த பரிசு ரூ10 கேட்டபோது, கண்ணதாசன் பாடலில் முக்கியமான வார்த்தையை நான் தான் மாற்றினேன் உனக்கு பரிசு தர முடியாது போடா என்று சொல்லிவிட்டதாக எம்.எஸ்.வி நகைச்சுவையுடன் கூறியுள்ளார் .

ரஜினி படத்தால் இடம்; கமல் படத்தால் கிடைத்த வீடு: பிரபல இயக்குனர் வாழ்க்கை மாற்றம்!தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்ட க...
09/07/2025

ரஜினி படத்தால் இடம்; கமல் படத்தால் கிடைத்த வீடு: பிரபல இயக்குனர் வாழ்க்கை மாற்றம்!

தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்ட கே.எஸ்.ரவிக்குமார், நடிப்பது படங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகிய இருவரும் இரு துருவங்களாக இருந்தாலும், இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து படம் இயக்குனம் வல்லமை இருக்கக்கூடிய இயக்குனர் என்று பெயரெடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் தான் வீட்டுக்கு மனை வாங்கியது ரஜினி படம் என்றால் அதில் வீடு கட்ட உதவியது கமல் படம் என்று கூறியள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அந்த படத்தில் சரத்குமார், ரகுமான், ரகுவரன், ஆனந்த்பாபு, ரேகா என அப்போதைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து சிறப்பாக இயக்கி முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தார்

அதனைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் சேரன் பாண்டியன் படத்தை இயக்கினார். விஜயகுமார், ஆனந்த் பாபு, நாகேஷ் ஆகியோருடன், முக்கியமான வில்லன் கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமாரே நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு, ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், புருஷ லட்சனம், சக்திவேல், நாட்டாமை, நட்புக்காரக என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்,

இவர் இயக்கிய பல படங்களில் நடிகர் சரத்குமார் தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்ட கே.எஸ்.ரவிக்குமார், நடிப்பது படங்கள் தயாரிப்பது என சினிமாவில் இருந்து வருகிறார். குறிப்பாக இவர் நடிக்கும் கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பேட்டி நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வரும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் 3 பி.எச்.கே படக்குழுவை பேட்டி எடுத்தார்.

சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில. பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் வைத்து படையப்பா படம் இயக்கும்போது, நான் எனது வீட்டுக்கான நிலத்தை வாங்கிகேன். மொத்தம் அப்போது அந்த இடம் ரூ65 லட்சம். 3 லட்சம் பத்திரபதிவு. படையப்பா படத்தில் எனக்கு 65 லட்சம் சம்பளமாக கிடைத்தது. அதை வைத்து அந்த இடத்தை வாங்கினேன். இந்த இடம் படையப்பா. அதில் வீடு கட்டியது தெனாலி. தெனாலி படத்தை நானே தயாரிக்க வேண்டும் என்று கமல் சார் என்னை தயாரிப்பாளர் ஆக்கினார்.

அந்த படத்தை எடுத்தபோது எனக்கு 3 கோடி லாபம் கிடைத்தது. அந்த 3 கோடி ரூபாய் பணத்தில் மேலும் ஒரு 30 லட்சத்தை சேர்த்து, படையப்பா படத்தின்போது வாங்கிய நிலத்தில் வீடு கட்டினேன். இடம் படையப்பா வீடு தெனாலி. அதனால் இந்த பக்கம் ஒரு வேல் வைத்து கே.எஸ்.ரவிக்குமார் அந்த பக்கம் ஒரு வேல் வைத்து கற்பகம் என்று பெயர் எழுதி வைத்திருக்கிறேன். படையப்பா தெனாலி 2 படங்களிலும் வேல் முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகமா?- அமித்ஷா கொடுத்த பதில்'தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்...
28/06/2025

என்.டி.ஏ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகமா?- அமித்ஷா கொடுத்த பதில்

'தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது அதிமுக. கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் கூட்டணி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், 'அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்' என தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் கூட்டணி அமையுமா? தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற கேள்விக்கு 'சில காலம் காத்திருங்கள் அனைத்தும் தெளிவாகும்' என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர்பாமக: ராமதாஸ் எதனால் பாமகவை தொடங்கி...
28/06/2025

பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர்

பாமக: ராமதாஸ் எதனால் பாமகவை தொடங்கினார்; இப்போது எந்தக் கட்சிக்குள் இருக்கும் மோதலுக்கு என்ன காரணம்? - ஓர் அலசல்!

மக்கள், கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி இருப்பதைக்கண்ட அவர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் 'வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்று கேட்டு, 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார்.

1984-ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம், 1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.

ராமதாஸ்

தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று, மக்கள் சந்திப்பை நடத்தினார். `கனல்’ என்ற இதழைத் தொடங்கி எழுதியும் வந்தார். இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், வர்க்கம் என திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்களில் பெரும்பாலானவர்களை ஒன்று திரட்டினார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க அப்போதிருந்த அதிமுக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. பின்னர், 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

அரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக! வைகோ குற்றச்சாட்டுஇந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அரசியல் ...
28/06/2025

அரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக! வைகோ குற்றச்சாட்டு

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அரசியல் சாசனத்தை மாற்றத் துடித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, "அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள் அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை.

மதச்சார்பின்மை வார்த்தையை நீக்க வேண்டும்

'மதச்சார்பின்மை' என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம். அவை ஆட்சி மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? அவை நீக்கப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய அரசியலமைப்பில், 1976-ம் ஆண்டு. 42-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2-ன் கீழ் 'சோசலிச, மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக சுப்பிரமணியசாமி, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரித்து 2024, நவம்பர் 25-ம் தேதி தீர்ப்பை வழங்கியது.

அரசியலமைப்பிற்கு அந்நியமானது அல்ல

அதில், 42-வது திருத்தம் மூலம். அரசியலமைப்பு சட்ட முகப்புரையில், 'சோசலிச, மதச்சார்பற்ற' என்ற சொற்களை இணைத்தது செல்லும் என்று கூறி, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "முகப்புரை என்பது, அரசியலமைப்பிற்கு அந்நியமானது அல்ல. அதன் ஒருங்கிணைந்த பகுதிதான். எனவே, 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்பை திருத்துவதற்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பின் முகப்புரைக்கும் பொருந்தும்.

சோசலிசம் என்ற வார்த்தை

'சோசலிசம்' என்ற வார்த்தையைப் பொறுத்தவரை, அது அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் 'பொது நல அரசு' என்பதையே குறிக்கிறது. முகப்புரையில் இணைக்கப்பட்ட சோசலிசம் என்ற வார்த்தை. தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு பொருளாதாரக் கோட்பாட்டையும் பின்பற்றுவதைத் தடுக்கவில்லை. இந்தியாவில் சோசலிசம் என்ற கருத்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையோ அல்லது தனித்துவத்தை நிராகரிக்கவோ இல்லை. அதேபோல மதச்சார்பின்மை எப்போதும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது.

அடிப்படைக் கட்டமைப்பின் அங்கம்

அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பகுதி III-ன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் உற்றுநோக்கினால், அவற்றில் மதச்சார்பற்ற நிலை முக்கிய அம்சமாக இருப்பதை தெளிவாக காண முடியும். எனவே, சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் அங்கமாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் சாசனத்தை மாற்றி எழுத வேண்டும்

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே கூப்பாடு போட்டு வருகின்றன. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம். ஒரே பண்பாடு என்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பா.ஜ.க. அரசு மூலம் அதனை செயல்படுத்திட மூர்க்கத்தனமாக இறங்கி உள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சனாதனச் சிக்திகளின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடியாக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன. எனவே, அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சிக்திகளின் முயற்சிகளை முறியடிக்க ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் உறுதி ஏற்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மாம்பழத்தை நெருங்கும் திமுக.. NDA கூட்டணியை உடைக்க மாஸ்டர் ப்ளான்.. என்ன நடக்கிறது?மாம்பழத்தை ருசிக்க காத்திருக்கும் திம...
28/06/2025

மாம்பழத்தை நெருங்கும் திமுக.. NDA கூட்டணியை உடைக்க மாஸ்டர் ப்ளான்.. என்ன நடக்கிறது?

மாம்பழத்தை ருசிக்க காத்திருக்கும் திமுக.. NDA கூட்டணியை உடைக்க மாஸ்டர் ப்ளான்.. என்ன நடக்கிறது?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மாம்பழம் கட்சியை வெளியே கொண்டுவர திமுக திட்டம் தீட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆழமான 3 காரணங்களும் இருக்கின்றன. நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசி இருக்கிறார். அவரோடு அக்கட்சியின் மாநில துணை தலைவர் விஜயனும் ராமதாஸை சந்தித்து பேசி இருக்கிறார். அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, பொதுவாழ்க்கையில் 40 வருடமாக உள்ள ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், அரசியலுக்காக சந்திக்கவில்லை.. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு என்று கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆம், சமீப நாட்களாக பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், நிறுவனர் ராமதாஸின் கூட்டணி தேர்வு திமுகவை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலின்போதே அதிமுகவோடு கூட்டணி செல்ல ஆசைப்பட்டதாக தெரிவித்திருந்தார் ராமதாஸ். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சமீப நாட்களாக ஆளும் திமுக அரசு எந்தவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைக்காத ராமதாஸ், ஒருவித மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார்.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த அன்புமணி, பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்த ஸ்டாலினின் கண் பட்டுதான் இப்படி நடப்பதாகவும், மோதலுக்கு காரணமே திமுகதான் என்று கூறி இருந்தார் அன்புமணி. ஆனால், கடந்த 19ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு தி.மு.க காரணம் இல்லை என்றவர், அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய், கடைந்தெடுத்த பொய்.. எல்லாம் போக போக தெரியும் என்று கூறி இருந்தார்.

அன்புமணி ராமதாஸ்

அடுத்தகட்டமாக, சாகும் வரை கலைஞர் அரசியலில் ஈடுபட்டதுபோல தானும் அரசியலில் இருப்பேன் என்றும் கூறியிருந்தார் ராமதாஸ். தொடர்ந்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கலைஞர் கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான் செயல்படுவேன்.. ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும்.. கலைஞர் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை.. என்று கூறியிருந்தார்.

அன்புமணி - ராமதாஸ்.png

இதன் தொடர் நிகழ்வாகவே, ராமதாஸ் உடனான செல்வப்பெருந்தகையின் சந்திப்பு பேசுபொருளாக மாறி இருக்கிறது. அரசியல் எதுவும் பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை மறுத்தாலும், கூட்டணி கட்சியான காங்கிரஸை வைத்து பாமகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க திமுக முயற்சி செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வலிமையாக இருக்கும் கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த பாமகவையும் உள்ளே கொண்டுவர திமுக நினைக்கிறதா என்ற கேள்விக்கு, மேற்கூறிய காரணங்கள் எல்லாம் வலு சேர்க்கும் நிலையில், நடப்பவை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா? வெயிட் அண்ட் சி! ட்விஸ்ட் வைத்து பேசிய டிடிவி.தினகரன்!தேசிய ஜனநாயக கூட்டணியில் எ...
27/06/2025

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா? வெயிட் அண்ட் சி! ட்விஸ்ட் வைத்து பேசிய டிடிவி.தினகரன்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கு கொள்வதற்காக வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ராஜ கண்ணப்பன் நீண்ட நாள் அரசியல் அனுபவம் உள்ளவர். அவர் நிலை தடுமாறி இருக்கிறார்களா என தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாக கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என நான் நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து திமுக கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள். எங்கள் கூட்டணி தினம் தினம் வலுப்பெற்று வருகிறது திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் உறுதியாக எங்கள் அணிக்கு வரும்.

ராமதாஸ் செல்வப் பெருந்தகை சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக மட்டுமே உள்ளதாக கூறுவது அச்சத்தின் காரணமாகத்தான் கூறுகிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால் 2036ல் அல்ல 2026லேயே திமுக ஆட்சிக்கு வராது. பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார். திமுகவை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார் 2021லும் அவர் முயற்சி செய்தார் 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது. உரிய தொகுதிகளை தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பாமக, தேமுதிக தேஜக கூட்டணியில் இணையுமா?

பாமக, தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவது தான். போதை பொருள் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு போதை பொருள் சந்தையாக மாறி உள்ளது. இதை சரி செய்யாமல் மூன்று தேர்தல் குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவி கேட்பீர்களா என்கிற செய்தியாளர் கேள்விக்கு தற்பொழுது தான் கூட்டணி பலப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

Address

Guindy

Alerts

Be the first to know and let us send you an email when Live Tamil News - தமிழ் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share