Live Tamil News - தமிழ் செய்திகள்

  • Home
  • India
  • Guindy
  • Live Tamil News - தமிழ் செய்திகள்

Live Tamil News - தமிழ் செய்திகள் காலத்தால் மறையாத பழைய மற்றும் இடைக்கால சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார்! யார்?மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவ...
03/12/2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார்! யார்?

மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம். இந்த வழக்கை தொடர்ந்து உத்தரவு பெற்றவர் ராம.ரவிக்குமார். யார் இவர்? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம் .

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. இங்கு மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கிறார் முருகப்பெருமான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இங்கு தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. டிசம்பர் நான்காம் தேதி வரை இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு எட்டாம் நாளில் பட்டாபிஷேகமும் ஒன்பதாவது நாளில் தீபத் திருவிழாவும் நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் கோவில் உச்சியில் உள்ள தீப தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலையில் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற காவல்துறை மறுப்பு தெரிவித்ததோடு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜகவினர் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் ராம ரவிக்குமார். அவர்தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர். யார் இந்த ரவிக்குமார்? என்பது குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தவர் தான் மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார்.

அர்ச்சகர்களுக்கு தட்டில் காணிக்கை இடும் விவகாரம், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சொத்து மீட்பு, ஆகம விதிகள் மீறப்பட்டதாக வழக்கு, சிலைகள் மாயமான வழக்கு என பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார். இந்து தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர்தான் ராம ரவிக்குமார்.

தமிழக முழுவதும் ஆலயங்கள் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சியிலிருந்து பிரிந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்து தமிழர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மட்டுமல்லாது, திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கெடு விதித்த பன்னீருடன் சமரசம் பேசும் பாஜக..? டெல்லியில் மகனுடன் ஓபிஎஸ் முகாம்டிசம்பர் 15ம் தேதிக்குள் தங்களை அதிமுகவில்...
03/12/2025

கெடு விதித்த பன்னீருடன் சமரசம் பேசும் பாஜக..? டெல்லியில் மகனுடன் ஓபிஎஸ் முகாம்

டிசம்பர் 15ம் தேதிக்குள் தங்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லியில் முகாமிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வருகின்ற டிசம்பர் 15ம் தேதிக்குள் எங்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றப்பட்டு 15ம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும், எங்கள் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கோவை சென்றிருந்த பன்னீர்செல்வத்தை நேரில் சந்திக்க பாஜக மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கொச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி பயணித்துள்ளார்.

நேற்று டெல்லி சென்ற பன்னீர்செல்வம் அங்கு சில பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இன்றும் அவர் அங்கு முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். பாஜக மேலிடம் அழைத்ததன் அடிப்படையிலேயே பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதாக அவரது ஆதரவாளர் தெளிவு படுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை மட்டும் நம்பி தேர்தலை சந்திப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.

இதனை உணர்ந்தே பன்னீர்செல்வம் முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாக அவரை அழைத்து பேச முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது சந்திப்பு நடைபெறுகிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

இது அந்த கால ‘மாப்பிள்ளை’!தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக...
03/12/2025

இது அந்த கால ‘மாப்பிள்ளை’!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி இவர்.

வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941), தமிழறியும் பெருமாள் (1942), மகா மாயா (1944), பிரபாவதி (1944) உட்பட பல படங்களை இயக்கியுள்ளார், டி.ஆர்.ரகுநாத். அவர் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, ‘மாப்பிள்ளை’.

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பி.கே.சரஸ்வதி நாயகி. இவர், வேலைக்காரி, இன்பவல்லி, அந்தமான் கைதி என பல படங்களில் நாயகியாக நடித்தவர். டி.கே.ராமச்சந்திரன், பி.வி.நரசிம்ம பாரதி, பி.எஸ்.வீரப்பா, எம்.என். ராஜம், எம்.லட்சுமி
பிரபா, வி.கே. ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம். சரோஜா, எம்.எஸ்.எஸ். பாக்யம், கே.லட்சுமிகாந்தம், காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ். பாண்டியன், ஆர்.பாலசுப்ரமணியம் என பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

நேஷனல் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு டி.ஆர்.பாப்பா, என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசை அமைத்தனர். தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள் எழுதினார். ஏ.ஜி.ரத்னமாலா பாடிய ‘நானொரு ரகசியம் சொல்லவா…’, ‘ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி’ திருச்சி லோகநாதன், ஏ.ஜி.ரத்னமாலா பாடிய ‘டோசு கொடுக்க வேணும்’, பி.லீலா குரலில் ‘கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

நடிகரும் எழுத்தாளருமான வி.என்.சம்பந்தம் திரைக்கதை, வசனத்தை எழுதினார். இந்தப் படத்தின் நாயகி பி.கே.சரஸ்வதியின் கணவர் இவர். தொழிலதிபர் ஆர்.பாலசுப்ரமணியத்தின் அச்சகத்தில் ஆபிஸ் பாயாக வேலை பார்க்கும் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க திடீர் பணக்காரர் ஆகிறார்.

தொழிலதிபரின் மகன் டி.கே.ராமச்சந்திரன், புதுப்பணக்காரரை அழித்து அவர் சொத்துகளை அபகரிப்பதாகச் சபதம் செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்று கதை செல்லும். அப்போது பிரபலமாகாத எம்.என்.ராஜம், செவிலியராக சிறிய வேடத்தில் நடித்தார். அவரும் காக்கா ராதாகிருஷ்ணனும் பாடுவதாக ‘டோசு கொடுக்க வேணும்’ பாடல் இடம்பெற்றது.

1952-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தின் தலைப்பில் ரஜினி (1989), தனுஷ் (2011) நடித்த படங்கள் வெளிவந்துள்ளன. அதன் கதைகளுக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கிட்ட செங்கோட்டையன் வைத்த டிமேண்ட் ! முதல் டார்கெட் எடப்பாடி தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த...
03/12/2025

விஜய் கிட்ட செங்கோட்டையன் வைத்த டிமேண்ட் ! முதல் டார்கெட் எடப்பாடி தான்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். முன்னதாக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவர் தவெகவில் இணைந்தார். அப்போது முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விஜயிடம் செங்கோட்டையன் முன் வைத்ததாகவும், விஜய் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு கட்சியில் சேர்ந்ததாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். கொங்கு மண்டலத்தில் அதிகாரம், எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க நானே வேட்பாளரை தேர்வு செய்வேன் உள்ளிட்ட கோரிக்கைகளை செங்கோட்டையன் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைய முன்பாக நடிகர் விஜயை நேரில் சந்தித்து முக்கியமான நிபந்தனைகளை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நேரங்களிலேயே, தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையனை பலமுறை தொடர்பு கொண்டு கட்சியில் இணைய அழைத்துள்ளார். அதற்கு செங்கோட்டையன், "விஜயை நேரில் சந்தித்து பேச வேண்டும், என் சில நிபந்தனைகளை அவர் ஏற்றால் மட்டுமே தவெகவில் சேர முடியும்" என்று கூறியதாக தெரிகிறது.

அதன்படி, ஆதவ் அர்ஜுனா இருவருக்கும் சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து, தனது எம்எல்ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். பின்னர் சென்னையில் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து பேசியுள்ளார். அதன் பிறகு தான், தவெகவில் இணையத் தேவையான தன் கோரிக்கைகளை விஜயிடம் வெளிப்படையாக முன்வைத்ததாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் முன்வைத்த முக்கிய கோரிக்கை, கொங்கு மண்டலத்தை முழுமையாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.

கொங்கு மண்டலத்தில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு தற்போது அ.தி.மு.க., தான் அதிக தாக்கத்துடன் உள்ளது. அதனை உடைத்து தவெகவை எழுச்சி பெறச் செய்யும் திறன் தன்னிடம் இருப்பதாகவும், அந்தப் பகுதிக்கான முழு ஒருங்கிணைப்புப் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். அதோடு, கொங்கு மண்டலத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தனது கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் சொன்னதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையிலும் தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் அவரது நிபந்தனைகளில் ஒன்று. இது திமுக - அதிமுக. இரண்டுக்கும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என அவர் உறுதிய்ளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2026 ஜனவரியில் ஈரோடு அல்லது கோபியில் விஜய் பங்கேற்கும் ஒரு மிகப்பெரிய பொது மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளுகு விஜய் 'அனுமதி' வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அந்த மாநாடு, தவெகவின் கொங்கு மண்டல வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அதேபோல், சேலம் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தானே தேர்வுசெய்ய வேண்டும் என்றும், பழனிசாமியை அடுத்த தேர்தலில் தோற்கடிப்பது தான் முக்கிய இலக்கு என்றும் செங்கோட்டையன் கூறியதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயை நேரில் சந்தித்தபின் இந்த நிபந்தனைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டதை த.வெ.க., வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் தான் த.வெ.க.,வில் இணைந்துள்ளர் என்கின்றனர் கொங்கு மண்டல தமிழக வெற்றிக் கழகத்தினர்.

கூண்டுக்கிளி கற்றுத் தந்த பாடம்... சிவாஜியுடன் இணைந்து நடிக்காதது ஏன்? எம்.ஜி.ஆர் சொன்ன பதில்!இருவரும் போட்டி போட்டு நடி...
03/12/2025

கூண்டுக்கிளி கற்றுத் தந்த பாடம்... சிவாஜியுடன் இணைந்து நடிக்காதது ஏன்? எம்.ஜி.ஆர் சொன்ன பதில்!

இருவரும் போட்டி போட்டு நடித்திருந்த கூண்டுக்கிளி படம், தனக்கு பெரிய லாபத்தை கொடுக்கும் என்று நினைத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ராமண்ணாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி. இருவரும் இணைந்து கூண்டுக்கிளி என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள நிலையில், அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து எம்.ஜி.ஆர் ஒரு பழைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னாளில் நாயகனாக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 11 வருடங்களுக்கு பிறகு 1947-ம் ஆண்டு தான் நாயகனாக நடித்திருந்தார். மறுபக்கம் நாடக நடிகராக இருந்த சிவாஜி கணேசன் 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு இருவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.ராமண்ணா எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரையும் இணைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது சகோதரி டி.ஆர்.ராஜகுமாரி. எம்.ஜி.ஆர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அடுத்த நாளே சிவாஜியும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இருவரும் போட்டி போட்டு நடித்திருந்த இந்த படம், தனக்கு பெரிய லாபத்தை கொடுக்கும் என்று நினைத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ராமண்ணாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் நாளில் தியேட்டருக்கு வந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டதால் இந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கூண்டுக்கிளி திரைப்படம் திரையிடப்படாத நிலையில், எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருமை் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தனர்.

இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாக தொடங்கியது. அப்போது ஒரு செய்தியாளர் எம்.ஜி.ஆரிடம் சென்று உங்களுக்கு சிவாஜிக்கும் இடையே மோதல் இருப்பதாக சொல்கிறார்கள். அது இல்லை என்று நிரூபிக்கவாது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாமே என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர் எங்கள் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இப்போ இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் படப்பிடிப்பு முடிந்து ஒழுங்காக வெளியாகும் என்று நினைக்கிறீர்களா? படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு இடத்தில் கேமரா வைத்தால், அந்த காட்சியில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கும் தெரியும் சிவாஜிக்கும் தெரியும். அதனால் படப்பிடிப்பு நடுவிலே பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக படம் வெளியானாலும், தியேட்டரில் எனது ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் இடையே கலவரம் தான் வெடிக்கும் அதனால் இப்போ நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது சாத்தியமாக என்று நீங்களே சொல்லுங்கள் என்று அந்த செய்தியாளரிடம் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

விஜய், சீமான் கையில் உள்ள GEN Z வாக்குகள்.. உதயநிதியின் புது வியூகம்.. திமுகவுக்கு பலன் கிடைக்குமா?சட்டசபைத் தேர்தலில் வ...
03/12/2025

விஜய், சீமான் கையில் உள்ள GEN Z வாக்குகள்.. உதயநிதியின் புது வியூகம்.. திமுகவுக்கு பலன் கிடைக்குமா?

சட்டசபைத் தேர்தலில் விஜய் மற்றும் சீமான் பெரும்பாலான வாக்குகளை கவர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், திமுக உடனடியாக புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை திறக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறார். இதனால் Gen Z வாக்காளர்களை அரசியல்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணியை இணக்கமாக வைத்திருக்கும் சூழலில், கூடுதலாக சில கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டு வரவும் காய்களை நகர்த்தி வருகிறது. இருப்பினும் திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக விஜய் மற்றும் சீமான் உருவாகி இருக்கின்றனர்.

ஏனென்றால் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் சீமான் மற்றும் விஜய் இருவரும் பிரிக்கும் வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் சீமானின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து கொண்டே போகிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் 6.2 சதவிகிதமாக இருந்த நாதகவின் வாக்குகள், லோக்சபா தேர்தலில் 8.2 சதவிகிதமாக உயர்ந்தது.

அதேபோல் விஜய்க்கு கூடும் இளைஞர்கள் கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதிலும் பெருவாரியாக இளைஞர்கள் தவெகவுக்கு ஆதரவாக இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதனிடையே திமுக தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சீமான் வாக்கு சதவிகிதத்தை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

இதனால் திமுக தலைமை உடனடியாக GEN Z வாக்காளர்களை கவர புதிய வியூகம் அமைத்திருக்கிறது. அதனடிப்படையில் தான் திமுக இளைஞரணி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட அறிவுத் திருவிழாவாகும். அதனை தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்ல உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்கள் திமுக சார்பாக தொடங்கப்பட்டு வருகின்றன.

இது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கையில் வைத்துள்ள ஃபார்முலா.. அதாவது இளைஞர்கள் அரசியல்படுத்த வேண்டிய அவசியத்தை திமுக உணர்ந்துள்ளது. ஏற்கனவே சென்னையின் பல்வேறு கல்லூரிகள் திமுக சார்பாக மாணவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான பணிகளை இளைஞரணி நிர்வாகிகளும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மாணவர் மன்றங்கள் மூலமாக சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம், திராவிட அரசியல் வரலாறு ஆகியவற்றை பிரச்சாரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களை அரசியல்படுத்தி திமுகவிலும் இணைக்க திட்டமிட்டிருக்கிறது.

இதனால் GEN Z வாக்காளர்களின் முக்கியத்துவத்தை திமுக தலைமை உணர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. விஜய் தனது பேச்சிலேயே GEN Z வாக்காளர்கள் என்று பேச தொடங்கிவிட்டதால், உதயநிதி ஸ்டாலின் இன்னும் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். திமுகவின் இந்த செயல்பாடுகளுக்கு உடனடி பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி. சுசிலாவின் 'லவ்'வராக மாறிய எஸ். ஜானகி: மேடையில் அரங்கேறிய அபூர்வ காட்சி- வீடியோதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாட...
03/12/2025

பி. சுசிலாவின் 'லவ்'வராக மாறிய எஸ். ஜானகி: மேடையில் அரங்கேறிய அபூர்வ காட்சி- வீடியோ

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகிகளாக வலம் வரும் எஸ்.ஜானகி – பி.சுசீலா இருவரும் மேடையில் காதலன் காதலியாக தோன்றி பாடிய ஒரு பாடல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி பாடகிகளாக இருக்கும் பி.சுசீலா – எஸ். ஜானகி இருவரும் காதலன் காதலியாக மாறி பாடிய ஒரு பாடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்த எஸ்.ஜானகி கடந்த 1957-ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, முன்னணி இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பலருடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.ஜானனி, கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திருநாள் என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார்.

எஸ்.ஜானகி போலவே முன்னணி பாடகியா இந்திய சினிமாவில் வலம் வருபவர் தான் பி.சுசீலா. 1953-ம் ஆண்டு வெளியான பெற்ற தாய் என்ற படத்தின் மூலம் பாடகியக அறிமுகமான இவர், கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் முன்னணி நடிகைகள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகிகளாக வலம் வரும் எஸ்.ஜானகி – பி.சுசீலா இருவரும் மேடையில் காதலன் காதலியாக தோன்றி பாடிய ஒரு பாடல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சுசீலாம்மா கொஞ்ச நேரத்திற்கு என் காதலியாக மாறுவார் என்று எஸ்.ஜானகி சொல்ல, உடனடியாக ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலை பி.சுசீலா பாடுகிறார். பெண் குரலுக்கு அவர் பாடி முடித்தவுடன் ஆண் குரலுக்கு எஸ்.ஜானகி பாடுகிறார்.

இவர்களின் பாடலை கேட்டு அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவவருமே பலத்த கரகோஷம் எழுப்பி இருவரையும் பாராட்டுகின்றனர். ஜெனர்லிஸ்ட் மனோ என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் திருப்பரங்குன்றம்.. போலீஸ் குவிப்பு.. மதுரையில் பரபரப்புதிருப்பரங்குன்றம் மலையில் கார்த...
03/12/2025

தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் திருப்பரங்குன்றம்.. போலீஸ் குவிப்பு.. மதுரையில் பரபரப்பு

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு.. மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்ரமணியசாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருக்கார்த்திகை தினமான இன்று காலை 7 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி வைர தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் இன்று மாலை ஆறு மணி அளவில் கோவிலில் பாலா தீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்க பட்டியலிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தவெகவுடன் தான் கூட்டணி.. டெல்லியில் அடித்து சொல்லும் காங்கிரஸ் பிரபலங்கள்.. ராகுல் காந்தியிடம் கம்ப்ளெயிண்ட் செய்தாரா கன...
03/12/2025

தவெகவுடன் தான் கூட்டணி.. டெல்லியில் அடித்து சொல்லும் காங்கிரஸ் பிரபலங்கள்.. ராகுல் காந்தியிடம் கம்ப்ளெயிண்ட் செய்தாரா கனிமொழி? ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன? திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.. ராகுல் காந்தி மனதை மாற்றும் தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.. டெல்லி ராஜகோபாலன் தரும் பரபரப்பு தகவல்கள்..!

மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டியின்படி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் நிலவும் பரபரப்பான சூழல் மற்றும் குறிப்பாக தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களை டெல்லி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

தற்போதுள்ள திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிருப்தி நிலவுவதாக டெல்லி ராஜகோபாலன் குறிப்பிடுகிறார். டெல்லியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்ற தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், இருவேறு குழுக்களாக பிரிந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. ஒரு குழு திமுக கூட்டணிக்கு ஆதரவாக லாபி செய்கிறது என்றால், மற்றொரு குழுவோ தவெக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறது. பல காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிப்படையாகவே, “காங்கிரஸ் திமுகவுடன் இருக்காது; தவெகவுடன் தான் போகும்” என்று அடித்து கூறுவதாகவும் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் தொடர்பில் இருக்கிறது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்று டெல்லி ராஜகோபாலன் குறிப்பிடுகிறார். காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களில் சிலர் திமுகவின் தலைமைக்கு எதிராக தங்கள் அதிருப்தியை காட்டியுள்ளனர். உதாரணமாக, ஒருமுறை கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியிடம் சென்று காங்கிரஸ் தலைவர்கள் விஜய் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக புகார் தெரிவித்ததாகவும், அதற்கு ராகுல் காந்தி “விசாரிக்கிறேன்” என்று கூறி கே.சி. வேணுகோபாலை அழைத்ததாகவும் ஒரு நிகழ்வை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் உள்ள மொத்த காங்கிரஸ் எம்.பி.க்களின் பெரும்பான்மையினர், தவெகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் தரப்பிலிருந்து டெல்லியிலிருந்து கே.சி. வேணுகோபால் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு அவர்களும் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் தவெகவை நாட முக்கிய காரணம், திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி அலையை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதுதான். தேசிய அளவில் நடத்தப்படும் சர்வேக்கள், தமிழகத்தில் திமுகவுக்கு எதிராகவே முடிவுகளை காண்பிப்பதாகவும், விஜய்க்கு அதிகமான வாக்கு சதவீதத்தை பெற வாய்ப்பு இருப்பதாகவும் காட்டுவதால், காங்கிரஸ் கட்சி தவெகவின் பக்கம் ஈர்க்கப்படுகிறது.

விஜய்க்கு ஒரு கரிஸ்மா இருக்கிறது; அவருக்கு ஒரு பெரிய சதவிகித ஓட்டு வங்கி வந்துவிடும் என்ற அரசியல் கணக்கு, காங்கிரஸை தவெக பக்கம் சாய வைத்துள்ளது. இந்த லாபி மற்றும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் மீது சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது என்றும், பல முக்கிய தலைவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக எதிர்ப்பலையை நன்றாக புரிந்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அடித்து கூறுவதாகவும் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்தார்.

ஒரே பாடலில் பல உணர்வுகள்... சிவாஜிக்காக கண்ணதாசன் செய்த மேஜிக் : இசையில் உணர வைத்த இளையராஜாசிவாஜி நடிப்பில் வெளியான ரிஷி...
03/12/2025

ஒரே பாடலில் பல உணர்வுகள்... சிவாஜிக்காக கண்ணதாசன் செய்த மேஜிக் : இசையில் உணர வைத்த இளையராஜா

சிவாஜி நடிப்பில் வெளியான ரிஷிமூலம் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கண்ணதாசன் எழுத, அதற்கு அற்புதமாக இளையராஜா இசைமைத்திருப்பார்.

வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.

அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டி, நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சிவாஜி நடிப்பில் வெளியான ரிஷிமூலம் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கண்ணதாசன் எழுத, அதற்கு அற்புதமாக இளையராஜா இசைமைத்திருப்பார். 1980-ம் ஆண்டு வெளியான படம் ரிஷிமூலம். எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் கதை எழுதியிருந்தார். கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மனைவியை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வரும் சிவாஜி, தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார். எதேர்ச்சையாக அவரிடம் வந்து சேரும் ஒரு பெண்ணை தனது மகனை பார்த்துக்கொள்ள சொல்கிறார். அந்த பெண் மகனை பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், சிவாஜியையும் காதலிக்கிறார். அப்போது தனது காதலை வெளிப்படுத்தவும், அந்த மகனின் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு பாடல் வரும். இளையராஜா இசையமைத்த இந்த பாடலில் பல உணவுகள் அடங்கியிருக்கும்.

இந்த பாடலின் முதல் இடை இசையில் அந்த பெண்ணின் காதல் உணர்வையும், 2-வது இடை இசையில், பாடல் படமாக்கப்பட்ட மலைபிரதேச பகுதிகளின் உணர்வையும், அதேபோல் பாடலின் மெட்டு முழுவதும் அந்த குழந்தையின் மீதுள்ள பாசம், அதற்கான தாலாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கண்ணதாசன் பாடல் வரிகளை அமைத்திருப்பார். இந்த பாடல் தான் வாடா என் கண்ணா என்று தொடங்கும் அந்த பாடல். எஸ்.பி.சைலஜா பாடிய இந்த பாடல் பல உணவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருப்பது இதன் சிறப்பம்சம்.

வாலி எழுதிய பாடலுக்கு உதவியாளராக வைரமுத்து : தவறாக நினைத்த எஸ்.பி.பி : பாடல் ஹிட் ஆனதா?கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலை எப்ப...
03/12/2025

வாலி எழுதிய பாடலுக்கு உதவியாளராக வைரமுத்து : தவறாக நினைத்த எஸ்.பி.பி : பாடல் ஹிட் ஆனதா?

கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலை எப்படி பாட வேண்டும் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியனுக்கு கவிஞர் வைரமுத்து சொல்லிக்கொடுத்துள்ளார்,

தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து யாரிடமும் உதவியாளராக இருக்கவில்லை என்றாலும், கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலுக்கு மட்டும் உதவியாளராக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராக கொடிகட்டி பறந்தவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இன்றைக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுக்கும் ஒரு கவிஞராக வலம் வரும் இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் – கணேஷ், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ளார்.

1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘’இது ஒரு பொன்மாலை பொழுது’’ பாடல் தான் வைரமுத்து திரைப்பத்தில் எழுதிய முதல் பாடல். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்த படத்திற்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து கடைசியாக கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்ட என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் பாடலை எழுதியிருந்தார்.

மேலும் பல சின்னத்திரை சீரியல்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து, ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராக இருந்து வரும் வைரமுத்து யாரிடமும் உதவியாளராக இல்லை என்றாலும், வாலி எழுதிய ஒரு பாடல் பதிவின்போது அவருக்கு உதவியாளராக செயல்பட்டுள்ளார். 1983-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியாக படம் தூங்காதே தம்பி தூங்காதே.

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராதா சுலோக்ஜனா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார். இதனிடையே இந்த படத்தின் ஒரு பாடல் பதிவின்போது, இரவு 10 மணிக்கு ஏ.வி.எம் சரவணன், கவிஞர் வைரமுத்துவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடைபெறுகிறது. பாடலை பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் வந்துவிட்டார். ஆனால் கவிஞரும் இசையமைப்பாளரும் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, அங்கு பாடல் பதிவில் சில சந்தேகங்கள் வருகின்றன. நீங்கள் அங்கு சென்று அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வைரமுத்து உடனடியாக அங்கு சென்றுள்ளார்.

வைரமுத்துவை பார்த்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், வாங்க வாங்க, பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்ல, இந்த பாராட்டுக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி தான். இந்த பாடலை எழுதியவர் அவர் தான் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பாடல் எப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார். அப்போது பதிவான அந்த பாடல் தான் நானாக நானில்லை தாயே என்ற பாடல். தாயை போற்றும் வகையில் அமைந்த இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜி.கே.மணி இருக்கும்வரை நான் இணைய மாட்டேன்..! அடித்துச் சொல்லும் அன்புமணி..!ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்த...
03/12/2025

ஜி.கே.மணி இருக்கும்வரை நான் இணைய மாட்டேன்..! அடித்துச் சொல்லும் அன்புமணி..!

ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று ஐயாவை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கே சேரமாட்டேன்.

பாமக தமிழ்நாட்டின் வன்னியர் சமூகத்தின் முக்கிய அரசியல் அமைப்பாக இருந்தாலும், சமீபகாலமாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே உருவான குடும்ப மோதல் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. இந்த மோதலில் ஜி.கே. மணி ராமதாஸ் அணியின் முக்கியமானவராக இருக்கிறார்.

அன்புமணி ராமதாஸின் தலைமை கட்சியின் சின்னம், கொடி, தலைமை உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது என ராமதாஸ் தரப்பு யை மோசடி என்று குற்றம் சாட்டி வருகிறது. இது கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னதாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தன்னை கட்சி தலைவராக அறிவித்தார். இதை ஜி.கே. மணி உறுதிப்படுத்தினார். இதன்பின் கட்சியில் இரு அணிகளும் தனித்தனி கூட்டங்கள் நடத்தின. பாமகவில் பிரிவினை ஏற்படுத்தியதாகவும், தன்னிச்சையாக பாமகவை நடத்தியதாகவும் ஜி.கே. மணி அறிக்கையை வெளியிட்டு, அன்புமணியை கட்சியை அழிக்கும் சக்தி என்று விமர்சித்தார்.

இந்நிலையில், தர்மபுரியில் பேசிய அன்புமணி. ‘‘ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று ஐயாவை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கே சேரமாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன். ஐயா ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகாலம் இந்த மக்களுக்காக, தமிழ் சமூகத்திற்காக, தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.

ஆனால், ஐயாவை இன்று திசை திருப்பி, ஐயா மனதை மாற்றி நான் சேரமாட்டேன், இணைய மாட்டேன் என்று உங்களுக்கு நான் இன்று தெரியப்படுத்துகின்றேன். எவ்வளவு வலியோடு, இதை நான் பேசுகின்றேன். எவ்வளவு மன அழுத்தம், மன உளைச்சல் இந்த மாவட்டம் அப்படிப்பட்ட மாவட்டம், தர்மபுரியில் உள்ள சொந்தங்கள் அப்படிப்பட்ட சொந்தங்கள். பாட்டாளி மக்கள் கட்சி உடைய கோட்டை. தர்மபுரி பாமகவின் கோட்டை. இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள்’’ எனத் தெரிவித்தார்.

ஜி.கே. மணி 25 ஆண்டுகள் பாமக தலைவராக இருந்தவர் ராமதாஸின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார்.

Address

Guindy

Alerts

Be the first to know and let us send you an email when Live Tamil News - தமிழ் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share