Anudhina Agni

Anudhina Agni Tamil Christian Message. Spiritual growth..

29/01/2023

💡 *என் மனதில் பட்டவை* 🌿

*ஆதியாகமம் 26:18 ல்* தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், *ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான* துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

ஆபிரகாம் உயிரோடு இருக்கும் வரை அவன் தோண்டின துரவுகளை *ஒருவனாலும் மூடமுடியவில்லை.* இதனால் அவன் மரித்தப்பின் அவன் தோண்டின துரவுகளை பெலிஸ்தியர்கள் மூடிப்போட்டனர்.

ஆபிரகாம் என்றால் விசுவாசம். *நமக்கு விசுவாசம் இருக்கும்வரை பிசாசானவனால் நம்முடைய ஆசீர்வாதங்களை மூடிப்போடமுடியாது.*

இதை புதியஏற்பாட்டு வெளிச்சத்தில் சொன்னால்... நமக்குள் விசுவாசம் இருக்கும்வரை.. அப்போ விசுவாசம் குறையும் போது இல்லாதிருக்கும் போது பிசாசால் கிரியை செய்யமுடியுமா ?முடியாது.

*ஏனெனில் நமக்குள் விசுவாசத்தை துவங்கினவரே அதை முடிக்கிறவராய் இருக்கிறார்.*
எபிரெயர் 12:1

*நமது விசுவாசம் ஒழிந்து போகாதபடி நமக்காய் வேண்டுதல் செய்கிறவரும் அவரே.*
லூக்கா 22:32

*மங்கியெரிகிற திரியை அணையாமல் காக்கிறவர்* நமது விசுவாசத்தையும் அணையவிடமாட்டார். ஏசாயா 42:3

*பிசாசானவன்(பெலீஸ்தியர்கள்) நமது ஆசீர்வாதங்களை மூடிப்போடமுடியாது. ஏனெனில் நாம் விசுவாசத்தை வைத்திருக்கிற தேவன் உயிருள்ளவர்.*

💁🏻‍♂ *அனுதின🔥அக்கினி மிஷெனரி ஊழியம் / மத்தியபிரதேஷ்* - Google Pay : *8109944146*

25/01/2023
21/01/2023

*"அனுதின🔥தீ "(338)*

வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை *அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும்* போட்டு,
ஆதியாகமம் 27:16

தலைப்பு : *ரெபேக்காளும் கிருபையும். (பாகம் -7)*

ரெபேக்காளின் தீவிரம். தன் குமாரனுக்கு ரோமம் இல்லா இடங்களில் வெள்ளாட்டு தோலை போட்டு மூடுகிறாள் ரெபேக்காள்.

ஏனெனில் ஈசாக்கு சும்மா ஆசீர்வதித்திடமாட்டார். தடவி பார்த்து தீர விசாரித்து எல்லாம் சரியாய் இருந்தால் மட்டுமே ஆசீர்வாதம், இல்லையேல் சாபம்.

*இதை கிருபையின் வெளிச்சத்தில் சொன்னால்..* ஆசீர்வதிக்க ஈசாக்கு எதிர்ப்பார்க்கும் தகுதி யாக்கோபிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ரெபேக்காள் அவனை ரோமம் இல்லாத இடங்களில் வெள்ளாட்டு தோலை போட்டு தகுதிப்படுத்தினது போல..

*தகுதியில்லாத நம்மையும் ஆசீர்வதிக்க பிதா எதிர்ப்பார்க்கும் தகுதியை, கிறிஸ்து(கிருபை) தனது நீதியினால் நம்மை மூடி நாம் ஆசீர்வதிக்கப்பட நம்மை தகுதிப்படுத்தினார்.*

அன்று.. தான் ஆசீர்வதிக்கப்பட்டது தன் திறமையினால் அல்ல என்று யாக்கோபு உணர்ந்திருப்பான்.

*இன்று... நாம் ஆசீர்வதிக்கப்பட்டதும் படுவதும் கிருபையின் தயவினால் தான் என்று நாம் உணர்கிறோமா ?*

💁🏻‍♂சாம்டேவிட் / *அனுதின🔥அக்கினி* -9907927990

19/01/2023

💡 *என் மனதில் பட்டவை* 🌿

லூக்கா 18:11 ல் பரிசேயன் நின்று: *தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.*

தேவனுக்கு முன் தன்நீதியை காட்டும் எந்த ஜெபமும் பெருமையுள்ள ஜெபமே. அது ஒருநாளும் கேட்கப்படமாட்டாது.

*என்னை பொறுத்தவரை...* பாவிகளை விட பெருமையுள்ளவர்களே மிக மோசமானவர்கள். ஏனெனில் பாவிகளுக்குக்கூட தேவன் மனமிரங்கிடுவார். ஆனால் பெருமையுள்ளவர்களுக்கு இரங்குவதில்லை எதிர்த்தே நிற்கிறார்.
*யாக் 4:6*

பாவத்தை விட பெருமை கொடூரமானது. அது சுயநீதி என்னும் போர்வையில் தான் வெளிப்படுகிறது.

*யார் பெருமையுள்ளவர்கள் ?* யார் தங்கள் சுயநீதிகளை நம்பி தேவனிடம் நிற்கிறார்களோ (பரிசேயனை போல).. அல்லது தங்கள் சுயநீதியினால் ஒன்றை தேவனிடம் பெறநினைக்கிறவர்களுமே பெருமையுள்ளவர்கள்.

இயேசு நமக்காக நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்து ஜெயித்துவிட்டார். *ஆனால் நாம் தான் நம்முடைய சுயத்தை ஜெயிக்கவேண்டும்.*

💁🏻‍♂ *அனுதின🔥அக்கினி மிஷெனரி ஊழியம் / மத்தியபிரதேஷ்* - Google Pay : *8109944146*

Address

Indore

Telephone

+919907927990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anudhina Agni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category