KDNL TV

KDNL TV KDNL TV is an Online Media Organization Based in Kadayanallur,Tamilnadu.

கிரீன்லாந்து 🇬🇱 🇬🇱 🇬🇱 கிரீன்லாந்து பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கிரீன்லாந்தை இன்று யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திரு...
17/01/2026

கிரீன்லாந்து 🇬🇱 🇬🇱 🇬🇱 கிரீன்லாந்து பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
கிரீன்லாந்தை இன்று யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ அவர்
நாளை எதிர்கால உலகை ஆள்வார்கள்.
அதனால்தான் உலக சண்டியன் டிரம்ப் அதன் மீது ஒரு கண் வைத்துள்ளான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கிரீன்லாந்து என்பது, எட்டுத்திக்காலும் பனியால் மூடப்பட்ட ஒரு தீவாகும். அதை நாம் பனிப் பாலைவனமாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் டிரம்ப் போன்ற ஆதிக்க வெறியர்கள் அதனை கனவு தேசமாக வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இராணுவ கோட்டையாக பார்க்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய தீவாகக் கருதப்படும் கிரீன்லாந்து 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தற்போது டென்மார்க் அரச ஆளுகையின் கீழ் அது சுயாட்சியை பெற்றுக்கொண்ட நாடாகும்.
அத்தோடு கிரீன்லாந்து கணிசமான அளவு அரிய வகை தாதுக்களையும் கனிம வளங்களையும் கொண்ட தீவாகும். (நியோடைமியம் மற்றும் டெர்பியம்)
போன்ற தாதுக்கள் 400 மில்லியன் டன்கள் வரை காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இத்தகைய தாதுக்கள்தான் நவீன
தொழில்நுட்பங்களான ஸ்மார்ட்போன்கள், மின்சார கார்கள், நவீன இயந்திரங்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் பல தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதலால் அமெரிக்கா கிரீன்லாந்தை தன்னகப்படுத்திக் கொண்டால் சீனாவுடன் தொழில்நுட்ப ரீதியாக போட்டியிட ஒரு வலுவான மாற்றீட்டாகப் பார்க்கிறது.
மாத்திரமன்றி 300,000 டன் மதிப்புள்ள யுரேனியம் சுரங்கங்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் குறிப்பிடத்தக்க தங்க இருப்புக்களையும் அது கொண்டுள்ளதால் கண்காணாத ஒரு புதையல் நிலமாகவே வாஷிங்டன் அதனை பார்க்கிறது.
ராணுவரீதியாக கிரீன்லாந்து நிலமானது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தலமாகும். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரின் போது இது தெளிவாகியது. ஏற்கனவே அங்கே சீன மற்றும் ரஷ்ய கடற்படை மற்றும் விமானப் படை ரோந்துகளை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்துள்ள வாஷிங்டன், இதனை தனது தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
மேலும் சீனா"அறிவியல் ஆராய்ச்சி" மற்றும் "துறைமுக முதலீடு" என்ற போர்வையில் ஒரு இராணுவ இருப்பை அங்கே நிறுவ முயற்சிக்கிறது, ஆதனால் அவை சீன இராணுவ தளங்களாக மாற்றப்படும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஏற்கனவே சீனா அங்கே சர்வதேச விமான நிலையம் ஒன்று
கட்டுவதைத் தடுக்க அமெரிக்கா டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுத்தது வந்தது.
சுருக்கமாக, சொல்வதென்றால், கிரீன்லாந்திலிருந்து, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவின் நகர்வுகளை அமெரிக்க இலகுவாக அவதானிக்கலாம். அங்கிருந்து வரும் ஏவுகளைகளை தடுக்கலாம். மேலும் கிரீன்லாந்திலிருந்து ஆசியா அல்லது ஐரோப்பாவை நோக்கி ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை மிக எளிதாக ஏவ முடியும். அதாவது அடுத்து வரும் உலகப் போருக்கு கிரீன்லாந்து மிக முக்கிய
மூலோபாய தலமாகும்.
இதனால் தான் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற அல்லது காசு கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற பிடிவாத முடிவில் இருக்கிறான்.
அதன் மூலம் அங்கே தற்காப்பு, ஏவுகணை தளங்களை மட்டுமல்ல, தாக்குதல்களை
மேற்கொள்ளும் ராணுவ தளங்களாகவும் பயன்படுத்த முடியும் என்பதாலாகும்.
மேலும் ரஷ்ய கடற்படைகள் ஆர்க்டிக் பெருங்கடல் பக்கம் நெருங்காமல் கதவை முழுமையாக அடைத்து விட முடியும் என்பது வாஷிங்கடனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு சார்ந்த இன்னுமொரு வரப்பிரசாதமாகும்.
✍ தமிழாக்கம் / imran farook

17/01/2026

வீட்டின் எதிர்புறத்தில் நிறுத்தி இருந்த காரின் கவர் மிகவும் கோரமாக கிழிக்கப்பட்டு , காரின் முன்புற பேனட் பல்வேறு முறையற்ற கோடுகளாக கீறப்பட்டு இருந்தது .. மிகவும் அதிர்ச்சியாகவும் , மன வேதனையாகவும் இருந்த்தது .. வீட்டுக்கு வந்து CCTV காட்சியை கண்ட பொழுது நான்கு நாய்களின் செயல் என புரிந்தது .. கடைய நல்லூரில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் கோர தாண்டவத்தால் பல குழந்தைகளும் , வயதானவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .. பல்வேறு நபர்களுக்கு இதை போன்ற பொருள் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது .. நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் எவ்வளவோ முறை புகார் அளித்தும் எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .. இதே இடத்தில் யாரேனும் ஒரு பள்ளி செல்லும் மானவரோ , நடைபயனம் செய்யும் பெரியவரோ இந்த கோர மிருகத்திடம் அகப்பட்டு இருந்தால் , நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது ..இனி எந்த ஒரு நபருக்கும் அல்லது பொருளுக்கும் இது போன்ற சேதம் ஏற்படாமல் தகுந்த நடவடிக்கையை நகராட்சியும் , உள்ளாட்சி நிர்வாகமும் எடுக்கும் என நம்புகிறேன் .. உள்ளாட்சி நிர்வாகம் சிறுபான்மை மக்களை ஓட்டுக்கு மட்டும் தேடி வராமல் , எஙகளுடைய அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளையும் சரி செய்ய தேடி வரும் என நம்புகிறோம் ..

-IMRAN GANI

அமேரிக்காவால் விசா ரத்து செய்யப்பட்ட 75 நாடுகளின் பட்டியல்!!
17/01/2026

அமேரிக்காவால் விசா ரத்து செய்யப்பட்ட 75 நாடுகளின் பட்டியல்!!

17/01/2026

இது நம்ம ஆட்டம்!!

இந்தியாவில் அரசு அதிகாரிகளின் சம்பளம்!
16/01/2026

இந்தியாவில் அரசு அதிகாரிகளின் சம்பளம்!

14/01/2026

நெல்லை - மேலப்பாளையம் : விளையாட்டுப் போக்கில் வெண்கல பானைக்குள் சிக்கிக் கொண்ட சிறுகுழந்தை!

தீயணைப்புத் துறையினர்
விரைந்து வந்து பானையை வெட்டி குழந்தை மீட்டனர்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌾
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌾

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து ரயில்வே  ஸ்டேஷன் செல்லும் வழியில் உள்ள ரேஷன் கடை அரு...
13/01/2026

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் உள்ள ரேஷன் கடை அருகில் பராசக்தி மரம் இழைப்பகம் நியாயவிலை கடை இதன் எதிரில் நகராட்சியின் மூலமாக அனைத்து தெருக்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டி வந்தனர்..

கடையநல்லூரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அங்கு கொட்ட கூடாது என்றும் அதனால் இங்கு மிகப் பெரிய சுகாதாரக் கேடு உருவாகிறது என்றும் பலமுறை புகார் அளித்துள்ளனர். இதுவரை நகராட்சி எந்.த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ரோடு தான் பள்ளி செல்லும் குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் உச்சகட்டமாக கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரில் ஒட்டுமொத்தமாக சேரும் குப்பைகளை எல்லாம் கொட்டி வைத்து சென்று விட்டனர். அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இன்றும் அதே போல் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் அனைவரும் அவர்களிடம் இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று கூறினார்கள். ஆனால் அங்கு குப்பைக் கொண்டு வந்து கொட்டிய துப்புரவு பணியாளர்கள் அதை செவிமடுக்கவில்லை. ஆதலால் ஊர் பொதுமக்கள் அனைவரும் அங்கு திரண்டு துப்புரவு தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால்
சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
நகராட்சியில் இருந்து அதிகாரி வந்து இதற்கு பதில் கூறினால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் கூறி போராடுவதற்கு எத்தனித்தனர்.
பின்னர் நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து இனிமேல் இங்கு நாங்கள் குப்பை கொட்ட மாட்டோம் இந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நகராட்சி முழு ஒத்துழைப்பு தரும் என்றும்
நகராட்சி சார்பில் இனி இந்த இடத்தில் குப்பை கொட்ட கூடாது என்று ப்ளக்ஸ் வைத்து விடுவோம் என்றும் உறுதி கூறியதால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தற்போது நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டு கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..

அனைத்து சமுதாய மக்கள் இணைந்து போராடியதால் வெற்றி கிடைத்தது.
கடையநல்லூர் மக்கள் நலச் சங்கம் சார்பாக போராடிய அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.01.2026)  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு   மாவட்ட நி...
13/01/2026

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.01.2026) தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா 2026 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே. கமல்கிஷோர்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சென்னையில் இருந்து தென்காசிக்கு இன்றிரவு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது!!   |
13/01/2026

சென்னையில் இருந்து தென்காசிக்கு இன்றிரவு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது!!

|

கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செல்லும் போது கவனமாக செல்லவும்..இங்கே இருக்கும் தொடர் பள்ளங்கள் எப்போது சரி செ...
13/01/2026

கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செல்லும் போது கவனமாக செல்லவும்..
இங்கே இருக்கும் தொடர் பள்ளங்கள் எப்போது சரி செய்யப்படும் என்று தெரியவில்லை…
இன்று காலை குடும்பத்துடன் சென்ற நபர் ஒருவர் தடுமாறி கீழே விழாமல் சமாளித்துச் சென்றார்…
பண்டிகை காலங்களில் ஊருக்கு வருபவர்கள், பொருட்கள் வாங்க செல்பவர்கள் மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் வருபவர்கள் கூடும் இடம் என்பதால் நிதானமாக இந்த இடத்தை கடக்கவும்… ஏற்கனவே உயிர்பலி வாங்கிய இடம் என்பதால் அரசும் இதை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…

போகி பண்டிகைக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!!வரும் 15, 16ம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், தற்போது புதன்கிழம...
13/01/2026

போகி பண்டிகைக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!!
வரும் 15, 16ம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், தற்போது புதன்கிழமை 14ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு!!
பொங்கலுக்காக ஒரு நாள் முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை!!!

Address

Kadayanallur
Kadayanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KDNL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KDNL TV:

Share