KDNL TV

KDNL TV KDNL TV is an Online Media Organization Based in Kadayanallur,Tamilnadu.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னாள் இந்திய அணி கேப்டன்  M S தோன...
09/10/2025

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னாள் இந்திய அணி கேப்டன் M S தோனி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

எதிர்காலத்தில் இங்கு TNPL, IPL மற்றும் ராஞ்சி போட்டிகள் நடைபெற வாய்ப்பு.

09/10/2025

மீண்டும் நாய்க்கடி!

நேற்றைய தினம் கடையநல்லூரில் 27 பேர்களை கடித்த நாயை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று விட்ட நிலையில் தற்போது செவல கலரில் உள்ள நாய் போகநல்லூர் மாவடிக்கால் பகுதியில் எட்டு நபர்களை கடித்து தற்போது அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் கடையநல்லூரில் 27 நபர்களைக் கடித்த நாயை இன்று அதிகாலை 5 மணி அளவில் நியூ பஜார் அருகே சென்ற பொழுது நகராட்சி ஊ...
09/10/2025

நேற்றைய தினம் கடையநல்லூரில் 27 நபர்களைக் கடித்த நாயை இன்று அதிகாலை 5 மணி அளவில் நியூ பஜார் அருகே சென்ற பொழுது நகராட்சி ஊழியர்கள் பத்திரமாக பிடித்து வெரி நைஸ் தடுப்பூசி போடப்பட்டு தென்காசியில் உள்ள நாய்கள் பராமரிப்பு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதற்கு முன்பாக நெல்லையில் இருந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல பொறியாளர் சனோ குமார்,கால்நடை மருத்துவர் சிவரஞ்சனி,நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பத்திரிக்கைச்செய்தி!தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருத்து வரும் 144 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறி...
08/10/2025

பத்திரிக்கைச்செய்தி!

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருத்து வரும் 144 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 144 இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 16.10.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணிவரை சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் சேர்ந்தமரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 13.10.2025 ஆம் தேதி முதல் 15.10.2025 ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரில் பார்வையிடலாம். மேலும், தங்களின் பெயர் முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் . டோக்கன் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தொகையுடன் GST தொகையினையும் மொத்தமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தென்காசி  மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில்  நேற்று (08.10.2025 ) நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்...
08/10/2025

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் நேற்று (08.10.2025 ) நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

08/10/2025

மாவடிக்கல் பகுதியில் தற்போது ஒரு சிறுமியை வெறிநாய் கடித்ததாக தகவல்!
தற்போது வரை இன்று மட்டும் 23 நபர்களுக்கு வெறிநாய் கடி!

08/10/2025

கடையநல்லூரில் தொடரும் நாய்கடி!!!

இன்று மட்டுமே ஒரே நாளில் 20 நபர்களுக்கு மேல் வெறிநாய்கடி.

விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் - கடையநல்லூர் முஹம்மது பாசித். செய்தியாளர் சந்திப்பு.

உடன் மமக மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது மற்றும் ஹக்கீம் ஆகியோர்.

08/10/2025

கடையநல்லூரில் இன்று ஒரே நாளில் 20 நபர்களுக்கு மேல் வெறிநாய்கடி.


விடியோ இடம் கடையநல்லூர் மக்கா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் அருகில்!

08/10/2025

கடையநல்லூரில் தொடரும் வெறிநாய் கடி!

இன்று 08.10.25 காலை ஹிதாயதுல் இஸ்லாம் பள்ளி அருகில் ஒரு சிறுமியை வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று மதியம் காயிதே மில்லத் திடல் நுழைவாயிலில் பேசிகொண்டுருந்த ஒருவரை வெறி நாய் கடித்ததில் கைலி கிழிந்தது.

இது கடையநல்லூரரில் தொடர் கதையாகி வருகிறது. அரசும் கண்டுகொள்வதில்லை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

வெறிநாய் தொல்லையில் இருந்து எப்போது தீர்வு வருமோ என தெரியவில்லை?

பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் உபயதுல்லா கின்னஸ் சாதனை. சிலம்பம் (ஒற்றை கம்பு சுத்துதல்) போட்டிய...
08/10/2025

பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் உபயதுல்லா கின்னஸ் சாதனை. சிலம்பம் (ஒற்றை கம்பு சுத்துதல்) போட்டியில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் கம்பு சுற்றி, கின்னஸ் உலக சாதனை படைத்து, நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகிழ்வுடன்,

நிர்வாகி,நிர்வாக- கல்வி கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,
பேட்டை முஸ்லிம் நர்சரி, துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், கடையநல்லூர்.

நோயாளிகள்  ❌ பயனாளர்கள் ✅மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களை இனி ‘நோயாளிகள்' என கூறத் தடை!
07/10/2025

நோயாளிகள் ❌ பயனாளர்கள் ✅

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களை இனி ‘நோயாளிகள்' என கூறத் தடை!

Cough Syrup 🚨
04/10/2025

Cough Syrup 🚨

Address

Kadayanallur
Kadayanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KDNL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KDNL TV:

Share