14/08/2026
புளியங்குடி சிந்தாமணியில் இரு பிரிவுகளுக்கு மத்தியில் மோதல். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியல். 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
ஏராளமான போலீஸ் குவிப்பு...
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரத வீதி பகுதியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவர் தனது குடும்பத்தினர் காமநாயக்கன்பட்டியில் உள்ள தேவால திருவிழாவிற்கு தனது குடும்பத்தினருடன் சிந்தாமணி பகுதியில் இருந்து வேன் ஒன்றில் கிழம்பிய நிலையில் மேல ரதவீதி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் செல்லும் பொழுது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டு வேனை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அப்பகுதியில் மற்றொரு பிரிவு சேர்ந்த மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமான சென்ற நிலையில் இந்த பகுதியில் வேனை எப்படி ரோட்டில் நிறுத்தலாம் என இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் இன்னாசிமுத்து என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் இதனை அந்தப் பகுதியில் இருந்த சகாயராஜ் என்பவரின் மகன் அலிஷ்ட்டர் ஜேக்கப் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது 4 இளைஞர்கள் அலிஷ்ட்டர் ஜேக்கப் மற்றும் இவரது தந்தை சகாயராஜ் ஆகிய இருவரை அவதூறாக பேசியதோடு அந்தப் பகுதியில் கிடந்த கட்டையை எடுத்து அலிஷ்ட்டர் ஜேக்கப் மற்றும் இவரது தந்தை சகாயராஜ் ஆகிய இருவரையும் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இளைஞர் அலிஷ்ட்டர் ஜேக்கப்பை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட தப்பி சென்ற 4 இளைஞர்களை கைது செய்ய வலியுரித்தி உறவினர்கள், பகுதி பொதுமக்கள் சிந்தாமணி பகுதியில் உள்ள திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றதோடு தனியார் மருத்துவமனை முன்பு கருப்புக் கொடி கட்டி அமைதி வழியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த பகுதியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மதியழகன், டி எஸ் பி நமச்சிவாயம் ,செங்குட்டு வேலன், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
இரவில் தகராறில் ஈடுபட்ட
மகாராஜா கைது செய்த நிலையில் மகேஷ், முனியாண்டி, விஷால் ஆகிய மூன்று நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது..
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் பத்து நிமிடம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..