KDNL TV

KDNL TV KDNL TV is an Online Media Organization Based in Kadayanallur,Tamilnadu.

5 மாவட்டங்களுக்கு விடுமுறை!கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.வ...
28/11/2025

5 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் ம...
28/11/2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் RBI மூலம் வங்கியின் முயற்சியில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாத வைப்புத் தொகையினை (Claim) ஆகாத தொகையினை வாரிசுதாரர்களுக்கு திருப்பி வழங்கினார்கள்.

இந்திய அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக முகாம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இந்த முகாம் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும். ஆகவே வங்கிகள் மற்றும் நிதி சார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்புத் தொகையாளர்கள் அல்லது இறந்த வைப்புத் தொகையாளர்களின் பரிந்துரைக்கப்பட்டவர்களின் சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத சுமார் 2,54,276 கணக்குகளில் 44.08 கோடி உள்ளது. இதில் தற்போது வரை 72 கணக்குகளில் ரூ.18.07 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருப்பின் அதை கே.ஒய்.சி(KYC) ஆவணங்களுடன் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

'டிட்வா' புயல் காரணமாக நாளை (நவ.,29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அர...
28/11/2025

'டிட்வா' புயல் காரணமாக நாளை (நவ.,29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடையநல்லூர் பஜார் ரோட்டில் புதிய சாலை போடுவதற்காக சாலை  தோண்டப்பட்டு 6  நாட்களாகிவிட்டது. பஜார் முழுவதும் புழுதி பறக்கிற...
27/11/2025

கடையநல்லூர் பஜார் ரோட்டில் புதிய சாலை போடுவதற்காக சாலை தோண்டப்பட்டு 6 நாட்களாகிவிட்டது.
பஜார் முழுவதும் புழுதி பறக்கிறது வணிக நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது.

கடையநல்லூர் நகராட்சி பணிகளை விரைந்து நிறைவு செய்து கொடுக்க வேண்டும் என பஜார் பகுதி வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட்!  |   |
27/11/2025

தமிழ்நாட்டிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட்!
| |

27/11/2025

Thanks to all the followers for their support.

102 - கர்ப்பிணி & பச்சிளம் குழந்தை உதவிக்கு1073 - சாலை விபத்துகள்104 - இலவச மருத்துவ உதவிக்கு108 - பொதுவான பிரச்சனை உதவி...
27/11/2025

102 - கர்ப்பிணி & பச்சிளம் குழந்தை உதவிக்கு
1073 - சாலை விபத்துகள்
104 - இலவச மருத்துவ உதவிக்கு
108 - பொதுவான பிரச்சனை உதவிக்கு

நடிகர் சதீஷின் X தள பதிவு!  |   |   |   |
27/11/2025

நடிகர் சதீஷின் X தள பதிவு!

| | | |

விலங்குகளிடையே கண்மணியின் வடிவம் ஏன் மாறுபடுகிறது? சில விலங்குகளின் கண்மணிகள் செங்குத்தாகவும், மற்றவை கிடைமட்டமாகவும் இர...
27/11/2025

விலங்குகளிடையே கண்மணியின் வடிவம் ஏன் மாறுபடுகிறது? சில விலங்குகளின் கண்மணிகள் செங்குத்தாகவும், மற்றவை கிடைமட்டமாகவும் இருக்கும். அதேவேளை மனிதர்களுக்கோ கண்மணிகள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
'சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளது.
கண்மணியின் வடிவம் அந்த விலங்கு வாழும் சூழலுடனும், அது வேட்டையாடக்கூடியதா அல்லது இரை தேடக்கூடியதா என்பதுடனும் நெருங்கிய தொடர்புடையது.
வேட்டையாடுபவற்றின் (பூனைகள் போன்றவை) கண்மணி செங்குத்தாக இருக்கும். அதனால் அவை மிகத் துல்லியமாக கவனம் செலுத்தவும், இரையைத் தாக்கும் போது தூரங்களைத் துல்லியமாக தீர்மானிக்கவும் உதவுகின்றன.
இரை தேடும் விலங்குகளின் (குதிரைகள், செம்மறி ஆடுகள் போன்றவை) கண்மணி கிடைமட்டமாக இருக்கும். அதனால் அவை சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கவும், தூரத்திலிருந்து ஆபத்தைக் கண்டறியவும் உதவும் பரந்த பார்வையை வழங்குகின்றன, இதனால் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
மனிதர்களில் கண்மணி வட்டமானது. கண்களின் நிலை, தரையிலிருந்து மேலே உள்ள தலையின் உயரம் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய வடிவத்தில் அவை இருக்கும்.
இந்த வட்ட வடிவம் நமக்கு இரண்டு திறன்களை அளிக்கிறது:
1. செங்குத்து கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற பரந்த பார்வை.
2. கிடைமட்ட கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற துல்லியமான தூரப் பார்வை.
உயிரினங்களின் மிகச்சிறிய விவரங்களை கூட, அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு எவ்வளவு துல்லியமாக அல்லாஹ் வடிவமைத்துள்ளான் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.
"படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன் அல்லாஹ்!” (23:14)
✍️ *நூஹ் மஹ்ழரி*

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்து மோதி விபத்துகள்ளானதில் 7 பேர் ...
26/11/2025

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்து மோதி விபத்துகள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஒருவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த மல்லிகாவும் ஒருவர்.

சாலை விபத்தில் உயிரிழந்த மல்லிகா என்பவரின் மாற்றுத்திறனாளி மகளான கிருத்திகா-வுக்கு முதலமைச்சர் உத்தரவின் பெயரில் அரசு பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வீடு தேடி சென்று நேரில் வழங்கினார்.

கம்பீர் கோச்சிங்கில் டெஸ்ட் தொடரில் மரண அடி வாங்கும் இந்திய அணி! இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பி...
26/11/2025

கம்பீர் கோச்சிங்கில் டெஸ்ட் தொடரில் மரண அடி வாங்கும் இந்திய அணி!

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா!

26/11/2025

குற்றாலம் தற்போதைய நிலை!!!

Address

Kadayanallur
Kadayanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KDNL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KDNL TV:

Share