Vanakkam Kadayanallur 360

Vanakkam Kadayanallur 360 கடையநல்லூர் செய்திகள்

கடையநல்லூர்   பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் 20க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்ம  காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட ...
02/07/2025

கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் 20க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்ம
காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் விவசாயிகளின் கோரிக்கை

கடையநல்லூர் ஜூலை

தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் மேல கடையநல்லூர் கருங்குளம் மேலகால் பரவா பகுதியில்
ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன இந்த நிலங்களில் மா, வாழை, தென்னை, நெல், உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இப் பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் கருங்குளம் பகுதியில் மேலகால் பரவு பகுதியில் முபாரக் அம்ஜத், மாரியப்பன் என்பவருக்கும் சொந்தமான தோட்டத்திலும் மேலும்
குத்தக அடிப்படையில் கண்ணன், கணபதி பயிற்சி செய்தும் பயிர் செய்யும் தோட்டத்திற்குள்ளும் கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்திற்குள் புகுந்த குட்டிகளுடன் கூடிய யானைகள் கூட்டம் ஏழு ஆண்டுகள் ஆன
தென்னை மரங்களை தூரோட சாய்த்து நாசம் செய்து விட்டது

மேலும் நீர்ப்பாசன வசதிக்கு போடப்பட்டுள்ள பைப்புகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களையும் சேதம் விளைவித்து விட்டு சென்றுள்ளது
காட்டு யானைகள் அனைத்தும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் முகாம் இட்டு உள்ளது எனவே
இந்த யானைகளை அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வனத்துக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் இரவு நேரங்களில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்து பிள்ளைப் போல் வளர்த்த தென்னைகளை பிடுங்கி சேதப்படுத்துகிறது

எனவே வனத்துறையினர் இரவு நேரத்தில் சைரன் ஒழித்து வெடி வெடித்து விவசாயிகளுடன் இணைந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர் தொடர்ந்து இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வன ரேஞ்சர் கனகராஜ் தெரிவித்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழ்
25/06/2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழ்

NEW  Bus  சர்வீஸ் ..... .  கடையநல்லூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, தென்காசி பஸ்ஸ்டாண்டு வரை: .....  புதிய வழி தடங்கள்..... ...
24/06/2025

NEW Bus சர்வீஸ் ..... . கடையநல்லூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, தென்காசி பஸ்ஸ்டாண்டு வரை: ..... புதிய வழி தடங்கள்..... கடையநல்லூர், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கிருஷ்ணாபுர பஸ் ஸ்டாண்டு , வழியாக, ஆஸ்பத்திரி ஸ்டாப் கடையநல்லூர் புதிய பஸ் ஸ்டாப், தாலுகா ஆபீஸ், EB, மங்களாபுரம், எவரஸ்ட், அச்சம்பட்டி, துரைச்சாமியாபுரம், இடை கால், மார்த்தாண்ட புசம், கிளாங்காடு, ஆயக்குடி, JP காலேஜ், செந்தில் ஆண்டவர் காலேஜ், தென்காசி பஸ் ஸ்டான்ட், இப்படி புதிய வழித்தடத்தில் தென்காசியிலிருந்து மினிபஸ் இயக்கம். பொதுமக்கள் அனைவரும் பயனடையுங்கள். ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு பஸ் ரூட்,

வழி : ஆஞ்சனேயர் கோவில், இரயில்வே ஸ்டேசன்,ஆய்க்குடி, ஜே.பி.காலேஜ், செந்திலாண்டவர் காலேஜ், தென்காசி புதிய பஸ்டாண்டு.

மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும். கடையநல்லூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, இந்த டவுன் பஸ் மூலம், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு வழியாக வந்து. போகலாம்....

திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாக வசதிக்காக கடையநல்லூர் ஒன்றியம் மூன்றாக பிரிப்பு அதில் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்...
19/06/2025

திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாக வசதிக்காக கடையநல்லூர் ஒன்றியம் மூன்றாக பிரிப்பு

அதில் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் ஒன்றியம் ஒரு பகுதிக்கு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ள ஜெயா ஐயப்பன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

08/06/2025

கடையநல்லூர் அருகே மாவடிக்கால் ரயில்வே கேட் கீழ் வரும் சேந்தமரம் சாலையில் நாணல் மரங்களால் ஏற்படும் தொடர் விபத்து கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை நாணல் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டுகோள் இன்று நடைபெற்ற பயங்கர விபத்தில் பைக்கில் வந்தவர் படுகாயம் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் தொடர்ந்து விபத்து நடப்பதால் நாணல் செடியை அப்புறப்படுத்த கோரிக்கை

பள்ளி திறந்த முதல் நாளே இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வுகடையநல்லூர் நகர் பகுதியில்பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பாட ப...
02/06/2025

பள்ளி திறந்த முதல் நாளே இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு

கடையநல்லூர் நகர் பகுதியில்
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்களை கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நகராட்சி துவக்கப்பள்ளி, தாருஸலாம் மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை அரசு வழங்கிய விலையில்லா பாடநூலை வழங்கிய போது எடுத்த படம்

கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டு கபடியை போன்று இலங்கை தமிழர்களின்...
31/05/2025

கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டு கபடியை போன்று இலங்கை தமிழர்களின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி கங்கைகொண்டான் விருதுநகர் வெம்பக்கோட்டை பழனி புளியம்பட்டி என பல்வேறு முகாம்களில் இருந்து வருகை தந்த 24 அணிகள் கடையநல்லூரில் உள்ள மூன்று அணிகள் மோதும் பெண்கள் கிளித்தட்டு விளையாட்டு போட்டியாகும் இதில் 14 பாக்ஸ் கட்டங்கள் உள்ளது இதில் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு தாவவிடாமல் தடுக்கும் விளையாட்டாகும் இந்த விளையாட்டு போட்டியை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் செல்லத்துரை, போட்டியினை தொடங்கி வைத்தனர் இதில் ஒன்றிய துணைச் சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், நல்லையா , அரக்காவல் குழு குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கிய பிரபல நடிகர் மோகன்லால். தென் தமிழகத்தில் உள்ள...
29/05/2025

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கிய பிரபல நடிகர் மோகன்லால்.



தென் தமிழகத்தில் உள்ள பிரபலமான திருக்கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால் இன்றைய தினம் சாமி தரிசனம் செய்த நிலையில், தனது வேண்டுதலுக்கு இணங்க பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்கினார்.

அவருடன் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் மலையாள சினிமாவை சேர்ந்த சிலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த திருமலைக் குமாரசுவாமி கோவிலின் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரசித்தி பெற்ற இந்த முருகன் திருத்தலத்திற்கு இனி வரும் காலங்களில் அடிக்கடி வருவேன் என அங்கு இருந்தவர்களிடம் கூறியதாக தெரிகிறது .

மேலக்கடைய நல்லூர் கருமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 2025
12/05/2025

மேலக்கடைய நல்லூர் கருமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 2025

with CameraFi Live

09.05.2025.மேலக்கடைய நல்லூர்அருள்மிகு  கரிய மாணிக்க பெருமாள் திருக்கோவில்  தேரோட்டம்
09/05/2025

09.05.2025.மேலக்கடைய நல்லூர்அருள்மிகு கரிய மாணிக்க பெருமாள் திருக்கோவில் தேரோட்டம்

கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுலா மினி பஸ் விபத்து  4 பேர் படுகாயம் கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுல...
08/05/2025

கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுலா மினி பஸ் விபத்து 4 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுலா மினி பஸ் விபத்து 4 பேர்
படுகாயம் அடைந்தனர்.

கடந்த 5 தேதி நாகை மாவட்டம் பொறையாரில் இருந்து சுற்றுலா மினி பஸ் 30 பயணிகளுடன் திருவனந்தபுரம் பகுதிக்கு சுற்றுலா சென்றது பஸ்சை காரைக்காலைச் சேர்ந்த சந்திரசேகர் (48)என்பவர் ஒட்டி வந்துள்ளார் நேற்று இரவு சுற்றுலாவை முடித்துவிட்டு தென்காசி வழியாக பொறையாருக்கு திரும்பும் வழியில் கடையநல்லூர் அருகே நயினாரகரம் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் முன்பு காலை 5:30 மணி அளவில் சுற்றுலா பஸ் வந்த பொழுது எதிர்பாராத விதமாக மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது இதில் சுற்றுலா மினிபஸ்ஸில் பயணம் செய்த நாகை மாவட்டம் பொறையார் பகுதியைச் சேர்ந்த
நூர்ஜஹான்(42), பரிதா பானு(50), செய்யது ரகுமான்(50) செய்யதுஹிஷாம் (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அச்சன்புதூர் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்ற பயணிகளை பாதுகாப்பாக மீட்டு இடைகால் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் உதவியுடன் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர் பின்னர் சிகிச்சைக்குப் பின்பு அனைவரையும் வேறொரு வேன் மூலம் பொரையாருக்கு ஜமாத்தார்கள் அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அச்சன்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Address

Kadayanallur

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kadayanallur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share