Vanakkam Kadayanallur 360

Vanakkam Kadayanallur 360 கடையநல்லூர் செய்திகள்

கடையநல்லூரில் சொத்தை பங்கு வைத்து கேட்டுதந்தையை கம்பால் அடித்து கொலை செய்த மகன் கைதுதென்காசி மாவட்டம்கடையநல்லூர் முத்துக...
22/05/2026

கடையநல்லூரில் சொத்தை பங்கு வைத்து கேட்டு
தந்தையை கம்பால் அடித்து கொலை செய்த மகன் கைது

தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு ரயில்வே பீடர் சாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா வயது 70 விவசாயக் கூலித் தொழிலாளி இவருடைய மகன் சேகர் வயது 35 தந்தை மகனுக்கு மத்தியில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக தொடர்ந்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் தந்தை சுப்பையா கடையநல்லூர் காவல் நிலையத்தில் எனது மகன் மது போதையில் தினந்தோறும் என்னிடத்தில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆத்திரம் அடைந்த மகன் சேகர் வீட்டில் தனியாக இருந்த தந்தை சுப்பையா அருகில் கிடந்த கட்ட கம்பை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் சுப்பையா துடிதுடித்து சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் பின்னர் அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த மகன் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடையநல்லூர் அம்மா உணவகத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் நியாஸ் ஆய்வு கடையநல்லூர் மே 19  தமிழகம் முழுவதும் உள்ள அம்...
19/05/2026

கடையநல்லூர் அம்மா உணவகத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் நியாஸ் ஆய்வு

கடையநல்லூர் மே 19

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் இத்திட்டம் அதே பெயரில் தொடர்ந்தது.

இந்நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக, இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் தொகுதியில் உள்ள கடையநல்லூர் அம்மா உணவகத்தை தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நியாஸ் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அங்கு வழங்கப்படும் உணவு, வடை ஆகியவற்றை சாப்பிட்டார் மேலும் அம்மா உணவகத்திற்கு தேவையான உட் கட்டமைப்புகள், தரமான உணவுபொருள்கள் ஆகியவற்றை கொண்டு உணவு தயார் செய்யப்பட வேண்டும் பழுதாக இருக்கக்கூடிய தயார் செய்யும் பொருட்கள்,பிரிட்ஜ், மிக்ஸி, மற்றும் மின் சாதன பொருட்கள் எவை என்பதையும் அங்கு பணி செய்யக்கூடிய பணியார்களுக்கு தேவையான பொருள்கள் என்ன என்பதையும் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதையும் கேட்டு அறிந்தார் தரமான குழு நீர்களை வழங்க வேண்டும் குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக் கொண்டார் அதன் பின்னர் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து கடையநல்லூரில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார் மேலும் அம்மா உணவகத்தில் கமிஷன் மற்றும் கரப்ஷன் இல்லாத தரமான பொருட்களை வழங்க வேண்டும் நல்ல சுவையான ருசியான உணவுகளை வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர் லட்சுமியை கேட்டுக்கொண்டார் அப்பொழுது தமிழக வெற்றிக்கழக சேர்ந்த
மாரிமுத்து ,தவமணி ,
,பாலமுருகன் ,இஸ்மாயில்,
ராஜா, பாஸ்கர்
அழகிய மணவாளன்,
நல்லய்யா,ஜோதி,
யாத்ரா பழனி ,ஆறுமுகம்
மதன் குமார்,மாவட்ட, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் இருந்தனர்

04/05/2026

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 15வது சுற்று கிருஷ்ணாபுரம் பகுதியில் என்னும் பொழுது

200 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை முடிவில்

காசிதர்மத்தி்ல் தாய் ,மகனுக்கு அரிவாள் வெட்டு :8 பேர் கைதுதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசி தர்மம் கிராமத்தில் நே...
01/05/2026

காசிதர்மத்தி்ல் தாய் ,மகனுக்கு அரிவாள் வெட்டு :8 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசி தர்மம் கிராமத்தில் நேற்று முன்தினம் தாய் மகன் அறிவாளன் வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் உள்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


காசிதர்மத்தைச் சேர்ந்த விக்னேஷூக்கும் , அதே ஊரைச் சேர்ந்த முத்துபாண்டிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.இப் பிரச்னை தொடர்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அச்சன்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விக்னேஷை கைது செய்தன.ர் பின்னர் விக்னேஷ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், விக்னேஷ் நேற்று காசிதர்மம் மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்ற பொழுது, அங்கு நின்ற முத்துப்பாண்டி அரிவாளால் விக்னேஷை வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாட
த்திக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் அருகேயிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் பண்பொழி-கடையநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இரு தரப்பை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டு கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விக்னேஷை வெட்டிய புதுமனை தெருவை சேர்ந்த மூக்கையா மகன் முத்துப்பாண்டி(63), மற்றும் சாலை மறியல் கல்வீச்சில் ஈடுபட்டதாக இரண்டு தரப்பையும் சேர்ந்த

பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் சத்யராஜ்(35) ,பெருமாள் மகன் சுப்புராஜ்(45), ராஜபாளையம் செட்டியார்பட்டி வேத கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் காசி பாண்டியன்(48), காசி தர்மம் புதுமனை தெருவை சேர்ந்த முருகையா மகன்கள் குட்டிமாரி(33), ஆறுமுகம்(45), ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முப்புடாதி மகன் முனீஸ்வரன்(27), காசி தர்மம் புதுமனை தேர்வை சேர்ந்த தங்கையா மகன் துரை(47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது கிராமத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடையநல்லூர் குமாந்தாபுரம் சேர்ந்த பெண் ஒருவர் விஷம் அறிந்து உயிர் இழந்தார்
22/04/2026

கடையநல்லூர் குமாந்தாபுரம் சேர்ந்த பெண் ஒருவர் விஷம் அறிந்து உயிர் இழந்தார்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 44 லட்சம...
21/04/2026

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 44 லட்சம் 37,000 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி பகுதியில் அரசியல் கட்சிகள் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தீவிர படுத்திய நிலையில் இரண்டு கட்சிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த நிலையில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் செல்லத்துரை கடையநல்லூர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்காக மூட்ட மூட்டையாக பணம் இருப்பதாக மாவட்ட தேர்தல் கண்ட்ரோல் நிலையத்துக்கு தொலைபேசியின் மூலம் புகார் வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர் திமுக அலுவலகத்திற்கு சென்று தீவிர சோதனைகள் ஈடுபட்ட பொழுது மூட்டையில் கட்டு கட்டாக 44 லட்சம் 37,000 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர் பத்து லட்சத்திற்கு அதிகமான பணம் இருந்ததால் இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் .வருமான வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த வருமான வரிந்துரை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட 44 லட்ச ரூபாய் பணத்தை வருமான வரி அதிகாரிகளிடம் தேர்தல் நடத்தும் உதவிஅலுவலர் ராஜேந்திரன் வழங்கினார் . கட்சி அலுவலகத்தில் 44 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புளியங்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருச்செந்தூர் புறப்பட்டார்
19/04/2026

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புளியங்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருச்செந்தூர் புறப்பட்டார்

11/04/2026

புளியங்குடியில் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

கடையநல்லூர் மதினா நகர் பகுதியில் கிருஷ்ணாபுரம் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த பணத்தை கேட்டு வீட்டை முற்றுகையிட்டு...
07/04/2026

கடையநல்லூர் மதினா நகர் பகுதியில் கிருஷ்ணாபுரம் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த பணத்தை கேட்டு வீட்டை முற்றுகையிட்டு உள்ளார் பணம் கிடைக்காத விரக்தியில் தனக்குத்தானே மன்னனை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார் உடல் கருகி உயிரிழப்பு சம்பவ இடத்திற்கு போலீஸ் வருகை தந்து தீவிர விசாரணை

கடையநல்லூரில் பல ஆண்டுகளாக அதிக பணம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடிகளை மோசடி மன்னர்களிடம் பணத்தை வழங்கி வட்டியும் கிடைக்காமல் அசலும் கிடைக்காமல் பல கோடி ரூபாய் கடையநல்லூர் மக்கள் ஏமாந்து நிற்கின்றனர் அப்படி ஏமாந்த ஒருவர் பணத்தைக் கேட்டு வீட்டு வாசலிலே உட்கார்ந்து தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுத்த பணமும் போயி தன்னுடைய உயிரும் பறிபோனது

கடையநல்லூர் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
06/04/2026

கடையநல்லூர் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Address

New Bus Stand
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kadayanallur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share