Vanakkam Kadayanallur 360

Vanakkam Kadayanallur 360 கடையநல்லூர் செய்திகள்

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்...
15/09/2025

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது…
இதனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை…
சில இருசக்கர வாகனங்கள் மட்டும் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது…
அருகிலிருந்த பொதுமக்கள் ஓட்டுநர் அப்துல் அஜீஸ் ஐ விரைந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்… காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களிடம் பாதிப்பை கேட்டறிந்து வருகின்றனர்…

இடம்: கடையநல்லூர் Hdfc bank அருகே

புளியங்குடி  அருகேபெண் தற்கொலையில்  கொடுத்த கடனுக்கு வீட்டை எழுதி கிரயம்  கேட்டு மிரட்டியவர் கைது         புளியங்குடி  அ...
06/09/2025

புளியங்குடி அருகே
பெண் தற்கொலையில் கொடுத்த கடனுக்கு வீட்டை எழுதி கிரயம் கேட்டு மிரட்டியவர் கைது
புளியங்குடி அருகே மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கொடுத்த கடனுக்கு பல லட்சம் மதிப்புள்ள வீட்டை கிரையம் எழுதி கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டி வளையர்குடியிருப்பு முருகன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி (50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி லெட்சுமி ஆகியோர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கடந்த 1-ந் தேதி மாலை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குதித்து லெட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் தென்காசி அருகே பாட்டா குறிச்சி பகுதியை சேர்ந்த சுடலை மகன் மாணிக்கராஜ் என்பவரிடம் வட்டிக்கு ரூ.7 லட்சம் கடன் வாங்கி லெட்சுமி வீடு கட்டி உள்ளார். இதையடுத்து அசலையும் வட்டியையும் கேட்டு 7லட்சம் ரூபாய் கடனுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை மாணிக்கராஜ் அடமானமாக எழுதி வாங்கியுள்ளார். மேலும் பணம் கேட்டு கேரளாவுக்கு சென்று கணவன், மனைவி இருவரையும் அழைத்து வந்து வீட்டைக் கிரையம் எழுதி கேட்டு மிரட்டியதால் மனம் உடைந்த லட்சுமி ஊருக்கு வந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டை கிரயம் எழுதி கேட்டு மிரட்டிய மாணிக்கராஜை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட  #7வது_வார்டில்_ரூபாய்_25இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டியுள்ள  #நூலக_கட்டிடத்தினை 7...
05/09/2025

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட #7வது_வார்டில்_ரூபாய்_25இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டியுள்ள #நூலக_கட்டிடத்தினை 7வது வார்டு நகரமன்ற உறுப்பினர் #வளர்மதி முன்னிலையில் #கடையநல்லூர்நகரமன்றதலைவர் #மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது உடன் நகரக் கழக துணைச் செயலாளர் காசி மற்றும் 7வது வார்டு கழகச் செயலாளர் கணேசன் மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் முருகானந்தம் மற்றும் ஊர் நாட்டாமைகள் மற்றும் நிர்வாகிகள் வார்டு பொதுமக்கள் மற்றும் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

கடையநல்லூர் மங்களபுரம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மஸ்தான் பள்ளிவாசல் அருகே காரும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் சிற...
27/08/2025

கடையநல்லூர் மங்களபுரம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மஸ்தான் பள்ளிவாசல் அருகே காரும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உட்பட 6பேர் படுகாயம் மஸ்தான் பள்ளிவாசல் அபாய வளைவில் தொடரும் விபத்துக்கள்

26/08/2025

காலை உணவு திட்டம்

சேர்மன் #மூப்பன்ஹபீபுர்ரஹ்மான்

மாண்புமிகு

கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூரில்50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (மகப்...
24/08/2025

கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூரில்50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (மகப்பேறு பிரிவு) திறப்பு

கடையநல்லூர் ஆகஸ்ட் 25

கடையநல்லூர் அருகே
மேலக்கடையநல்லூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (மகப்பேறு பிரிவு) சேர்ந்தமரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதே வேளையில் இங்கு நடந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், சுகாதார அலுவலர் பிச்சையாபாஸ்கர், ஆய்வாளர் மாதவராஜ், உதவி பொறியாளர் அன்னம், சுரேஷ், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் தவமணி மற்றும் பொறுப்பு மருத்துவர் வேல்ராஜன் மற்றும் கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாதவன்ராஜ் மற்றும் 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் இன்ஜினியர் பிரிவு சுரேஷ் மற்றும் மாவட்ட திமுக பிரதிநிதி ராமச்சந்திரன் ,திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார், பைசல் மற்றும் மதன் மற்றும் 26 வது வார்டு செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வார்டு பிரதிநிதி பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
ஆகியோர் கலந்து கொண்டனர் .

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில்
ரூ.63 இலட்சம் செலவில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

24.08.2025அன்று தென்காசி மாவட்டம் புதிய மருத்துவ கட்டிடங்கள் 18 இடங்களில் #மாண்புமிகுவருவாய் மற்றும் #பேரிடர்மேலாண்மைதுறைஅமைச்சர் #கேகேஎஸ்எஸ்ஆர் #ராமச்சந்திரன் மற்றும் #மாண்புமிகுமருத்துவம் மற்றும் #மக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா . #சுப்பிரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது இதில் #கடையநல்லூர்நகராட்சிக்குட்பட்ட #26வதுவார்டில் புதிதாக கட்டியுள்ள #மகப்பேறுவளாகத்தினை #கடையநல்லூர்நகரமன்றதலைவர் #மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது இதில் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி செயற்பொறியாளர் அண்ணன்

புளியங்குடி அருகே சிங்கிலிபட்டி  திருப்பூரில் இருந்து  செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து சென்றது பஸ்ஸை செங்கோட்டை பக...
24/08/2025

புளியங்குடி அருகே சிங்கிலிபட்டி திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து சென்றது பஸ்ஸை செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாரி 55 என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிங்கிலி பட்டி பாலம் அருகே பஸ் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியது இதில் காரின் மீது பஸ் மோதாமல் இருக்க அரசு பேருந்து அருகிலுள்ள புளியமரத்தின் மீது மோதி நின்றது அப்போது பஸ்ஸில் 45 பயணிகள் பயணம் செய்துள்ளனர் இதில் பஸ்ஸில் இருந்த 23 பயன்களும் எதிரே பைக்கில் வந்த ஒருவரும் என 25 நபர்கள் படுகாயம் அடைந்தனர் இதில் பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கை தலை குறுக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது இவர்கள் அனைவரையும் இவர்கள் அனைவரையும் சொக்கம்பட்டி போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர் அங்கு சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிறிய அளவில் காயம் அடைந்தவர்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து
சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவி இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தார் புளியங்குடி அரசு மருத்துவமனையில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லாததுதான் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

*கடையநல்லூரில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிறைவு*தென்காசி மாவட்டம் கடையநல்ல...
20/08/2025

*கடையநல்லூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிறைவு*

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்
பேட்டை சேர்ந்தவர் முகமதுஅலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சோதனை நிறைவு பெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றியதாக எந்த தகவலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இந்த சோதனையின் காரணமாக ஆயுதம் ஏந்தி காவல்துறையினர்அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் போது
முகமதுஅலி என்பவர் தற்போது வெளிநாட்டில் இருந்து வருதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புலனாய்வு முகமை சோதனை என்று காரணமாக இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

08/08/2025

SDbi 8.8.2025 kadayanallur

கடையநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் திரு ராசையா அவர்கள் இன்று உடல் நலக் குறைவினால் இயற்கை எய்தினார்…
08/08/2025

கடையநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் திரு ராசையா அவர்கள் இன்று உடல் நலக் குறைவினால் இயற்கை எய்தினார்…

கடையநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோ*தி விபத்து… போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி ஒர...
07/08/2025

கடையநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோ*தி விபத்து…
போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி ஒரே இடத்தில் விப*த்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்…

இன்று (06-08-2025) எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தமது ஆட்சியில் கடையநல்லூரில் நிறைவேற்ற...
06/08/2025

இன்று (06-08-2025) எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தமது ஆட்சியில் கடையநல்லூரில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் , திமுக ஆட்சியில் கடையநல்லூரில் நிறவேற்றப்படும் என்று உறுதியளித்து பின்பு நிறைவற்றப்படாத திட்டங்களை வரிசைப்படுத்தியும், அதிமுக ஆட்சி வந்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பதை பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தார்…

இன்றைய சிறப்புப் புகைப்படங்கள்..

Address

New Bus Stand
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kadayanallur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share