
02/07/2025
கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் 20க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்ம
காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் விவசாயிகளின் கோரிக்கை
கடையநல்லூர் ஜூலை
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் மேல கடையநல்லூர் கருங்குளம் மேலகால் பரவா பகுதியில்
ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன இந்த நிலங்களில் மா, வாழை, தென்னை, நெல், உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இப் பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் கருங்குளம் பகுதியில் மேலகால் பரவு பகுதியில் முபாரக் அம்ஜத், மாரியப்பன் என்பவருக்கும் சொந்தமான தோட்டத்திலும் மேலும்
குத்தக அடிப்படையில் கண்ணன், கணபதி பயிற்சி செய்தும் பயிர் செய்யும் தோட்டத்திற்குள்ளும் கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்திற்குள் புகுந்த குட்டிகளுடன் கூடிய யானைகள் கூட்டம் ஏழு ஆண்டுகள் ஆன
தென்னை மரங்களை தூரோட சாய்த்து நாசம் செய்து விட்டது
மேலும் நீர்ப்பாசன வசதிக்கு போடப்பட்டுள்ள பைப்புகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களையும் சேதம் விளைவித்து விட்டு சென்றுள்ளது
காட்டு யானைகள் அனைத்தும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் முகாம் இட்டு உள்ளது எனவே
இந்த யானைகளை அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வனத்துக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் இரவு நேரங்களில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்து பிள்ளைப் போல் வளர்த்த தென்னைகளை பிடுங்கி சேதப்படுத்துகிறது
எனவே வனத்துறையினர் இரவு நேரத்தில் சைரன் ஒழித்து வெடி வெடித்து விவசாயிகளுடன் இணைந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர் தொடர்ந்து இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வன ரேஞ்சர் கனகராஜ் தெரிவித்தார்