19/05/2026
கடையநல்லூர் அம்மா உணவகத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் நியாஸ் ஆய்வு
கடையநல்லூர் மே 19
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் இத்திட்டம் அதே பெயரில் தொடர்ந்தது.
இந்நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக, இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் தொகுதியில் உள்ள கடையநல்லூர் அம்மா உணவகத்தை தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நியாஸ் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அங்கு வழங்கப்படும் உணவு, வடை ஆகியவற்றை சாப்பிட்டார் மேலும் அம்மா உணவகத்திற்கு தேவையான உட் கட்டமைப்புகள், தரமான உணவுபொருள்கள் ஆகியவற்றை கொண்டு உணவு தயார் செய்யப்பட வேண்டும் பழுதாக இருக்கக்கூடிய தயார் செய்யும் பொருட்கள்,பிரிட்ஜ், மிக்ஸி, மற்றும் மின் சாதன பொருட்கள் எவை என்பதையும் அங்கு பணி செய்யக்கூடிய பணியார்களுக்கு தேவையான பொருள்கள் என்ன என்பதையும் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதையும் கேட்டு அறிந்தார் தரமான குழு நீர்களை வழங்க வேண்டும் குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக் கொண்டார் அதன் பின்னர் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து கடையநல்லூரில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார் மேலும் அம்மா உணவகத்தில் கமிஷன் மற்றும் கரப்ஷன் இல்லாத தரமான பொருட்களை வழங்க வேண்டும் நல்ல சுவையான ருசியான உணவுகளை வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர் லட்சுமியை கேட்டுக்கொண்டார் அப்பொழுது தமிழக வெற்றிக்கழக சேர்ந்த
மாரிமுத்து ,தவமணி ,
,பாலமுருகன் ,இஸ்மாயில்,
ராஜா, பாஸ்கர்
அழகிய மணவாளன்,
நல்லய்யா,ஜோதி,
யாத்ரா பழனி ,ஆறுமுகம்
மதன் குமார்,மாவட்ட, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் இருந்தனர்