19/08/2026
சிவகிரி வனத்துறை ரேஞ்சர் கதிரவன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் குறி வைத்து தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் வயது என்பவர் தனது பெயரில் அரசு ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்காமலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருப்பதற்காக வனப்பகுதியை ஒட்டி 8 கி.மீட்டர் துரத்திற்கு யானை தடுப்பு அகழி (Creation of Elephant Proof Trench) அமைப்பதற்கு டெண்டர் மூலம் பணி ஆணையை 07.02.2026 ஆம் தேதியில் பெற்று அப்பணியை தொடர்ந்து செய்துவந்துள்ளார். இந்நிலையில் சிவகிரி வனச்சரக அலுவலர் (Ranger) கதிரவன் என்பவர் தனக்கு பில் தொகையில 30% தரவேண்டும் என்று புகார்தாரரான திரு.சுரேஷ்குமாரிடம் தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார், நேற்று 18.08.2026 ஆம் தேதி புகார்தாரரான திரு.சுரேஷ்குமார் சிவகிரி சென்று (Ranger) திரு.கதிரவனை நேரில் சந்தித்து குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் எடுத்துள்ளேன் பார்த்து சொல்லுங்க சார் என கேட்டதற்கு 20% வது தரவேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன் இனிமேல் பில் போடவும் மாட்டேன் ஏற்கனவே ரூ.18,45,000/-ற்கான பில் தொகையை பெற்றுள்ளீர்கள் அதற்கான 20% கமிஷன் தொகை ரூ.3,69,000/-ஐ தந்துவிட்டு மீத வேலையை முடியுங்கள் என கூறியுள்ளார். அதற்கு புகார்தாரரான திரு.சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியவுடன் சரி முதல் தவணையாக ரூ.1,00,000/- நாளைக்கு 19.06.2026 ஆம் தேதி தரவேண்டும் மீதி பணத்தை இறுதி பில் போடும்போது தரவேண்டும் என கறாராக சொல்லிவிட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் சிவகிரி வனச்சரக அலுவலர் (Ranger) திரு.கதிரவன் என்பவர் மீது 18.08.2026-ம் தேதி வழக்கு பதிவு செய்து, புகார்தாரர் திரு.சுரேஷ்குமாரிடம் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.1,00,000/-த்தை கொடுத்தனுப்ப அதை இன்று 19.08.2026-ம் தேதி (Ranger) திரு.கதிரவன் தன்னுடைய வீட்டில் வைத்து பெற்றுக்கொண்டபோது, அப்பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வனத்துறை ரேஞ்சர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது