
07/05/2025
கோடை வெப்பத்தை தணிக்கும் பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் எதிரே காரியாபட்டி பேரூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் , மோர் பந்தலை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.P.செல்வம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர், மோரினை வழங்கினார். உடன் காரியாபட்டி பேரூர் நிர்வாகிகள் மாலிக், கார்த்திக்,பகத், பவானி, சரவணன், சுரேஷ், நாகராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மாமன்னர் மருது பாண்டியர்கள் திருவுருவ படத்திற்கும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்