Kariapatti360-காரியாபட்டி360

Kariapatti360-காரியாபட்டி360 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kariapatti360-காரியாபட்டி360, Media/News Company, Kariapatti.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சுவாரசியங்கள் அனைத்தும் Kariapatti360 என்ற முகநூல், இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்படும்.

முக்கிய அறிவிப்புஅறிவிப்பு எண் 01/2025 , நாள்:21.07.2025-இன் படி கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள...
29/09/2025

முக்கிய அறிவிப்பு

அறிவிப்பு எண் 01/2025 , நாள்:21.07.2025-இன் படி கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள், வயதை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் 19.09.2025 அன்று தேர்வு எழுதியவர்கள் தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை.

வயதை மட்டும் காரணமாக காட்டி விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட நபர்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் விண்ணப்பம் செய்யாத நபர்கள் தற்போது மீண்டும் 12.10.2025- மாலை 5.45 மணி வரை கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஒர் அரிய வாய்ப்பு காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர் மாரீஸ்வரன் தகவல்.

காரியாபட்டியில் கிராம உதவியாளர் பணி நியமனத்தின் நேர்காணல் 03.10.2025 அன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக...
29/09/2025

காரியாபட்டியில் கிராம உதவியாளர் பணி நியமனத்தின் நேர்காணல் 03.10.2025 அன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர் அறிவிப்பு....

மல்லாங்கிணர் அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தார் சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோவில் நவராத்திரி ஆறாம்  நாள் அலங்காரத்தில்...
28/09/2025

மல்லாங்கிணர் அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தார் சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோவில் நவராத்திரி ஆறாம் நாள் அலங்காரத்தில் தாயார் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்..

காரியாபட்டி பாண்டியன்நகர், முக்குரோடு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18-ம் ஆண்டு நவராத்திரி உற்சவ திருவிழாவை முன்னிட...
28/09/2025

காரியாபட்டி பாண்டியன்நகர், முக்குரோடு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18-ம் ஆண்டு நவராத்திரி உற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அம்மன் ஸ்ரீ மகாலட்சுமி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆழ்ந்த இரங்கல்....
27/09/2025

ஆழ்ந்த இரங்கல்....

ஓம் நமச்சிவாயா .....     ⛰️      🕉️
26/09/2025

ஓம் நமச்சிவாயா .....

⛰️ 🕉️

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வைய...
26/09/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.....

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சிகளில் இன்று(25.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.

அதன்படி, காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

25/09/2025

காரியாபட்டியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

Address

Kariapatti

Website

https://www.instagram.com/kariapatti360?igsh=MTUyY2xvamt3aXp

Alerts

Be the first to know and let us send you an email when Kariapatti360-காரியாபட்டி360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share