
22/07/2025
ஐ.ஐ.டி. சென்னையில் இரட்டை பட்டம் பெற்ற காயலர்!
காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவை சார்ந்த 24 வயது மாணவர் B.S.முஹம்மத் அஃப்தாப்.
இவரின் பெற்றோர் M.S.புகாரி சுலைமான் / M.S. பாத்திமா ஃபர்ஹானா ஆகியோர் ஆவர். இவர் கேரளாவில் RANI PUBLIC SCHOOL என்று பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டவர்.
உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை INDIAN INSTITUTE OF TECHNOLOGY - IIT கல்லூரியில் இரட்டை பட்டப்படிப்பு (DUAL DEGREE) பயின்று தேர்வு பெற்றுள்ளார்.
அவர் பெற்ற பட்டங்கள் விவரம் வருமாறு:-
(1) B.Tech.(Naval Architecture and Ocean Engineering)
(2) M.Tech.(Cyber Physical Systems)
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
அம்மாணவர் மென்மேலும் சாதனைகள் புரிந்து, தன்னை ஈன்ற பெற்றோருக்கும், ஆசிரியர்கள், உற்றார் - உறவினர், தனது பூர்விக ஊருக்கும் நற்பெயர் பெற்றுத் தர வல்ல இறைவன் துணை புரிவானாக!