Kayal News

Kayal News காயல்பட்டிணம் நகரின் செய்திகளை உடனு?

காயல்பட்டினம் குடிநீர் திட்டம் - குடிநீர் சுத்திகரிப்பு படுகை அடிக்கல் நாட்டு விழா 16.6.2025
16/06/2025

காயல்பட்டினம் குடிநீர் திட்டம் - குடிநீர் சுத்திகரிப்பு படுகை அடிக்கல் நாட்டு விழா 16.6.2025

16/06/2025

ஜூன் 17 ஆம் தேதி காயல்பட்டினத்தில் அறிவிக்கப்பட்ட மாதாந்திர மின் தடை தள்ளிவைப்பு.

அன்புடையீர் வணக்கம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,
திருச்செந்தூர் கோட்டம்,

*மின் நிறுத்த அறிவிப்பு தள்ளிவைப்பு*

*110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் 17.06.2025 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் தள்ளி வைக்கப்படுகிறது*

அடுத்த மின் நிறுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பது அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

-----
உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / ஆறுமுகநேரி உப மின் நிலையம்

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவ...
12/06/2025

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவு செய்யது அப்துர் ரஹ்மான்.

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று 11.6.2025 பகல் 12.00 மணி அளவில் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டணம் நகராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

தொடராக இன்று 11.6.2025 மாலை சுமார் 5.30 மணியளவில் நிலம் தானமாக வழங்குவதற்கான பத்திரப் பதிவும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லால்!

இந்த நிகழ்வை காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பு செய்தது.

செய்தி வெளியீடு:

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை
நாள்: 11.6.2025
நேரம்: மாலை 5.35 மணி

30/05/2025

காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டணக் கொள்ளை - கண்டு கொள்ளுமா காயல்பட்டிணம் நகராட்சி

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும்...
16/02/2025

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் முகில் டிரஸ்ட்

ஆகிய அமைப்புகள் இணைந்து,

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை 👁️‍, காவேரி மருத்துவமனை 🏥, சென்னை பிஸியோ கேர் 🏋️‍♀️ , மற்றும் Dr.குப்தாஸ் பல் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் நடத்தும்

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

🗓️ தேதி: 23 பிப்ரவரி 2025 (ஞாயிற்றுக் கிழமை)

🕘 நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

📍 இடம்: யூனிட்டி பப்ளிக் ஸ்கூல், லேக் வியூ ரோடு (ரயில் நிலையம் அருகில்) கோட்டூர்புரம், சென்னை - 85.

முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்:

🩺 பொது மருத்துவ பரிசோதனை.

👁️ கண் பரிசோதனை.

📈 E.C.G.

🏥 கண் புரை அறுவை சிகிச்சை.

🏋️ பிஸியோதெரபி சிகிச்சை.

🧘‍♂️ பல் பரிசோதனைகள்.

🎯 சிறப்பு சேவைகள்:

💊 கட்டணமில்லா மருந்துகள்.

👓 கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சை.

மேலும் பல மருத்துவ சேவைகள்.

📌இந்த முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!

காயல்பட்டினம் வார்டுகள் எண்ணிக்கையை 30ஆக அதிகரிக்க வேண்டும் : ஆட்சியருக்கு MEGA அமைப்பு கோரிக்கை!காயல்பட்டினம் நகராட்சி...
16/12/2024

காயல்பட்டினம் வார்டுகள் எண்ணிக்கையை 30ஆக அதிகரிக்க வேண்டும் : ஆட்சியருக்கு MEGA அமைப்பு கோரிக்கை!

காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியின் தற்போதைய வார்டுகள் எண்ணிக்கை 18. மக்கள் தொகை 50,000+ மட்டுமே. இதுவே பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிமுறைகள்படி50-60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் வார்டுகள் எண்ணிக்கை 30 என இருக்கவேண்டும்.

கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, தேர்தலுக்கு பிறகு வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற உறுதி மொழி அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 3 ஆண்டுகள் நிறைவுற்றும் அப்பணிகள் இதுவரை துவங்கவில்லை. இது சம்பந்தமாக எமது அமைப்பு - டிசம்பர் 15 அன்று நகரின் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 30 என அதிகரித்து, வார்டுகள் மறுவரையறை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகர மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

02/12/2024

காயல்பட்டினம் - இந்து மயானம் இடிப்பு - நகராட்சியை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள...
02/12/2024

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா
திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :*சட்ட...
24/11/2024

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-

இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :

*சட்டவிரோத அநீதிக்கு துணைப் போகாதீர்கள்!*

*அல்லாஹ்விற்கே அஞ்சி நடங்கள்!!*

▶️ காயல்பட்டினம் நகராட்சி கூட்டத் தொடர்களில் எனது வார்டுக்கும், ஊருக்கும், தேவையான நியாயமான எனது கோரிக்கைகளை தொடர்ந்து புறந்தள்ளிக் கொண்டு இருந்தது நகராட்சி நிர்வாகம்.

▶️ கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை காயல்பட்டினம் பேரூந்து நிலையத்திற்கு சூட்ட தீர்மானம் நிறைவேற்ற நான் கோரியபோது, நகராட்சியின் தலைவர் முத்து முஹம்மது, 10வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் (எ) சுகு ஆகியோர் என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தால் நகர்மன்றத்திலேயே என்னை தாக்குவதற்கு முற்பட்டனர்.

▶️ இப்போது என்மீது உண்மைக்குப் புறம்பான பல பழிகளை சுமத்தி, அடுத்த 2 நகராட்சி கூட்டத் தொடர்களில் பங்கெடுக்கச் செய்ய முடியாமல் என்னை தற்காலிக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளார்கள்.

▶️ இதற்கு உறுதுணையாகவும், அறியாமலும் சில உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். என் பக்கம் நீதி உள்ளதை நேரடி சாட்சியாகக் கண்ட கவுன்சிலர்கள், மேலிட அழுத்தத்திற்கு(!) ஆட்பட்டு எனக்கு எதிராக கையெழுத்து போட்டிருந்தால், அவர்கள் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்.

▶️ பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த எனக்கே, தளபதியாரின் திராவிட மாடல் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இன்று எனக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம் எச்சரிக்கை!!

▶️ எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஏதாவது ஒரு குறை இருந்தாலே ஐக்கியப் பேரவையை கேட்கலாம் என்று சொன்ன ஐக்கியப் பேரவை நிர்வாகமே! இன்று உங்களின் நட்சத்திர வேட்பாளர் & கவுன்சிலரான எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசிடமும், நீதிமன்ற பரிகாரமும் அல்லாது நான் யாரிடம் போய் முறையிடுவது?

▶️ ஐக்கியப் பேரவை நிர்வாகமே! எனக்குத் துணைத் தலைவர் பதவி தருவதாக நீங்கள்தானே வாக்குறுதி கொடுத்தீர்கள்! அதை நீங்களே மீறி விட்டீர்களே! இன்று காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நகராட்சி உறுப்பினராகிய என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதற்கும் ஐக்கிய பேரவைதான் பின்னின்று தூண்டுகிறதா? அதனால்தான் எனக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறதா? இது நியாயம்தானா?

------
மக்களால் நான்!
மக்களுக்காகவே நான்!!

என்றும் மக்களின் தொண்டனாய்...

A.A.அபூபக்கர் அஜ்வாத்.
6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்,
காயல்பட்டினம் நகராட்சி.

23/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகளின் விபரம்:இன்று 24.11.24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மா...
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகளின் விபரம்:

இன்று 24.11.24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தேர்தல் காயல்பட்டினம் KMT ஹாஸ்பிடல் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி பேரவையின் 61 செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை kMT diamond ஹாலில் வைத்து நடைபெற்றது. முடிவில் கீழ்கண்ட 11 நபர்கள் 2024-27 பருவ காலத்திற்கான பேரவையின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க பட்டனர்.

தலைவர் :
M.K. முஹ்யத்தீன் தம்பி (துரை) அவர்கள்

துணைத்தலைவர்கள் :

M.A.துணி முஹம்மது உமர் அவர்கள்

S.I.முஹம்மது ஷாபி அவர்கள்

வாவு M.M.முஹம்மது சம்சுத்தீன் அவர்கள்

M.S.முஹம்மது நூஹ் அவர்கள்

V.D.சதக் தம்பி அவர்கள்

பொதுச்செயலாளர்:

A.A.C.நவாஸ் அஹ்மது அவர்கள்

இணைச் செயலாளர்கள்:

M.A.S.செய்யிது அபூதாஹிர் (அபு) அவர்கள்

A.J.சொளுக்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் அவர்கள்

M.K.ஜாஹிர் ஹூசைன் அவர்கள்

பொருளாளர்:

S.M.முஹம்மது தாஜூத்தீன் அவர்கள்

ஆகியோர் செயல்படுவர். தேர்தல் அதிகாரிகளாக நகரின் பிரதான கல்வி கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டனர். தேர்தல் ஏற்பாட் டை சகோதரர்கள் MOS அன்சாரி, மஹ்மூத் சுல்தான், பொறியாளர் மொகிதீன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தல் இன்று(24-11-24)  காலை KMT மருத்துவமனையில் நடைபெற்றது.
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தல் இன்று(24-11-24) காலை KMT மருத்துவமனையில் நடைபெற்றது.

Address

Kayalpatnam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayal News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share