Kayal News

Kayal News காயல்பட்டிணம் நகரின் செய்திகளை உடனு?

ஐ.ஐ.டி. சென்னையில் இரட்டை பட்டம் பெற்ற காயலர்!காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவை சார்ந்த  24 வயது மாணவர்  B.S.முஹம்மத் அ...
22/07/2025

ஐ.ஐ.டி. சென்னையில் இரட்டை பட்டம் பெற்ற காயலர்!

காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவை சார்ந்த 24 வயது மாணவர் B.S.முஹம்மத் அஃப்தாப்.
இவரின் பெற்றோர் M.S.புகாரி சுலைமான் / M.S. பாத்திமா ஃபர்ஹானா ஆகியோர் ஆவர். இவர் கேரளாவில் RANI PUBLIC SCHOOL என்று பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டவர்.

உலக அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை INDIAN INSTITUTE OF TECHNOLOGY - IIT கல்லூரியில் இரட்டை பட்டப்படிப்பு (DUAL DEGREE) பயின்று தேர்வு பெற்றுள்ளார்.

அவர் பெற்ற பட்டங்கள் விவரம் வருமாறு:-

(1) B.Tech.(Naval Architecture and Ocean Engineering)
(2) M.Tech.(Cyber Physical Systems)

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

அம்மாணவர் மென்மேலும் சாதனைகள் புரிந்து, தன்னை ஈன்ற பெற்றோருக்கும், ஆசிரியர்கள், உற்றார் - உறவினர், தனது பூர்விக ஊருக்கும் நற்பெயர் பெற்றுத் தர வல்ல இறைவன் துணை புரிவானாக!

அஸ்ஸலாமு அலைக்கும்..மரண அறிவிப்பு தீவுத் தெருவை சேர்ந்த *ஹாஜி S.H. ஜிப்ரி கரீம்* அவர்கள் இன்று சென்னையில் காலை 10.05 மணி...
22/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும்..

மரண அறிவிப்பு

தீவுத் தெருவை சேர்ந்த *ஹாஜி S.H. ஜிப்ரி கரீம்* அவர்கள் இன்று சென்னையில் காலை 10.05 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும், தாருல் ஃபகா அளவில் சேர்ந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்

*காயல்பட்டினம் தீவுத் தெரு அரசினர் மேல்நிலை பள்ளி மற்றும் பாத்திமா மழலையர் & நடுநிலை பள்ளியின் நிறுவனர், காயல்பட்டினம் பெண்கள் கல்வியின் தந்தை*

மர்ஹூம் A.K. ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் மகனும்

மர்ஹூம் K.V. ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் மருமகனாரும்

J.K. ஷாஹுல் ஹமீது அவர்களின் தந்தையும்

W.M.S. உமர் ஹாலித் அவர்களின் மாமனாரும்

ஹாஜி S.H. முகமது முஸ்தபா, ஹாஜி S.H. நூருல் அமீன், ஹாஜி S.H. ழுத்பி, ஹாஜி S.H. ஹுமாயுன் கபீர் ஆகியோரின் சகோதரரும்

ஹாஜி S.A. அஹ்மத் முஸ்தபா,ஹாஜி Dr K.V.S ஹபீப் முகமது, ஹாஜி K.V.S முகமது அப்துல் காதிர், ஜனாப் S. ஜாஹிர் ஹுசைன் ஆகியோரின் மச்சானும்

ஹாஜி S. அக்பர் ஷா அவர்களின்
சகலையும் சம்பந்தியும்

ஹாஜி ஊண்டி மரைக்கார் சாஹிப் அவர்களின் சம்பந்தியும்

S.H. ஜாஹிட் ஜிப்ரி, U.H. ஜயான், S.H. முஆஸ் அக்பர், S.H. ஹுதயைபா ஆகியோரின் அப்பாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று *மதியம் 1:00* மணியளவில் சூளைமேடு இல்லத்தில் (📍JJK PLOT) பார்வைக்காக வைக்கப்படும்.

பின்னர் *மாலை 05:30* மணியளவில் MMDA காலனியில் உள்ள மஸ்ஜித் அல் முஸ்லிமீன் IGC (📍Masjid Al Muslimeen IGC) பள்ளிவாசலில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

*இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று _மஹ்ரிப் தொழுகைக்கு_ பின்னர் சென்னை ராயப்பேட்டை அமீருணிஷா பள்ளிவாசல் மையவாடியில்*(📍Ameerunisa Masjid & Burial Ground)
நல்லடக்கம் செய்யப்படும் என அன்னாரின் குடும்பத்தார் அறியத்தருகிறார்கள்.

அல்லாஹும்மஹபிர்லஹு வர்ஹம்ஹு
(யா அல்லாஹ், அவரை மன்னித்து, அவர்மேல் இரக்கம் காட்டுவாயாக)

அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

*📞தொடர்புக்கு: 9841441424 / 9940628283 / 9003508283*

We cordially invite you to KMT Hospital for CT Scan opening ceremony on Monday 28.07.2025 @ 4.30 pm. We look forward to ...
22/07/2025

We cordially invite you to KMT Hospital for CT Scan opening ceremony on Monday 28.07.2025 @ 4.30 pm. We look forward to your valuable presence.
---
KMT HOSPITAL
KAYALPATNAM

காயல்பட்டினம் குடிநீர் திட்டம் - குடிநீர் சுத்திகரிப்பு படுகை அடிக்கல் நாட்டு விழா 16.6.2025
16/06/2025

காயல்பட்டினம் குடிநீர் திட்டம் - குடிநீர் சுத்திகரிப்பு படுகை அடிக்கல் நாட்டு விழா 16.6.2025

16/06/2025

ஜூன் 17 ஆம் தேதி காயல்பட்டினத்தில் அறிவிக்கப்பட்ட மாதாந்திர மின் தடை தள்ளிவைப்பு.

அன்புடையீர் வணக்கம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,
திருச்செந்தூர் கோட்டம்,

*மின் நிறுத்த அறிவிப்பு தள்ளிவைப்பு*

*110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் 17.06.2025 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் தள்ளி வைக்கப்படுகிறது*

அடுத்த மின் நிறுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பது அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

-----
உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / ஆறுமுகநேரி உப மின் நிலையம்

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவ...
12/06/2025

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவு செய்யது அப்துர் ரஹ்மான்.

காயல்பட்டணம் நகராட்சி குடிநீர் திட்ட வடிகால் படுகை (Filter Bed) அமைக்க சுமார் 62 சென்ட் நிலம் தானமாக வழங்கிய அல்ஹாஜ் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று 11.6.2025 பகல் 12.00 மணி அளவில் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டணம் நகராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

தொடராக இன்று 11.6.2025 மாலை சுமார் 5.30 மணியளவில் நிலம் தானமாக வழங்குவதற்கான பத்திரப் பதிவும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லால்!

இந்த நிகழ்வை காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பு செய்தது.

செய்தி வெளியீடு:

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை
நாள்: 11.6.2025
நேரம்: மாலை 5.35 மணி

30/05/2025

காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டணக் கொள்ளை - கண்டு கொள்ளுமா காயல்பட்டிணம் நகராட்சி

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும்...
16/02/2025

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் முகில் டிரஸ்ட்

ஆகிய அமைப்புகள் இணைந்து,

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை 👁️‍, காவேரி மருத்துவமனை 🏥, சென்னை பிஸியோ கேர் 🏋️‍♀️ , மற்றும் Dr.குப்தாஸ் பல் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் நடத்தும்

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

🗓️ தேதி: 23 பிப்ரவரி 2025 (ஞாயிற்றுக் கிழமை)

🕘 நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

📍 இடம்: யூனிட்டி பப்ளிக் ஸ்கூல், லேக் வியூ ரோடு (ரயில் நிலையம் அருகில்) கோட்டூர்புரம், சென்னை - 85.

முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்:

🩺 பொது மருத்துவ பரிசோதனை.

👁️ கண் பரிசோதனை.

📈 E.C.G.

🏥 கண் புரை அறுவை சிகிச்சை.

🏋️ பிஸியோதெரபி சிகிச்சை.

🧘‍♂️ பல் பரிசோதனைகள்.

🎯 சிறப்பு சேவைகள்:

💊 கட்டணமில்லா மருந்துகள்.

👓 கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சை.

மேலும் பல மருத்துவ சேவைகள்.

📌இந்த முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!

காயல்பட்டினம் வார்டுகள் எண்ணிக்கையை 30ஆக அதிகரிக்க வேண்டும் : ஆட்சியருக்கு MEGA அமைப்பு கோரிக்கை!காயல்பட்டினம் நகராட்சி...
16/12/2024

காயல்பட்டினம் வார்டுகள் எண்ணிக்கையை 30ஆக அதிகரிக்க வேண்டும் : ஆட்சியருக்கு MEGA அமைப்பு கோரிக்கை!

காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியின் தற்போதைய வார்டுகள் எண்ணிக்கை 18. மக்கள் தொகை 50,000+ மட்டுமே. இதுவே பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிமுறைகள்படி50-60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் வார்டுகள் எண்ணிக்கை 30 என இருக்கவேண்டும்.

கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, தேர்தலுக்கு பிறகு வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற உறுதி மொழி அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 3 ஆண்டுகள் நிறைவுற்றும் அப்பணிகள் இதுவரை துவங்கவில்லை. இது சம்பந்தமாக எமது அமைப்பு - டிசம்பர் 15 அன்று நகரின் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 30 என அதிகரித்து, வார்டுகள் மறுவரையறை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகர மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

02/12/2024

காயல்பட்டினம் - இந்து மயானம் இடிப்பு - நகராட்சியை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள...
02/12/2024

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா
திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :*சட்ட...
24/11/2024

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-

இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :

*சட்டவிரோத அநீதிக்கு துணைப் போகாதீர்கள்!*

*அல்லாஹ்விற்கே அஞ்சி நடங்கள்!!*

▶️ காயல்பட்டினம் நகராட்சி கூட்டத் தொடர்களில் எனது வார்டுக்கும், ஊருக்கும், தேவையான நியாயமான எனது கோரிக்கைகளை தொடர்ந்து புறந்தள்ளிக் கொண்டு இருந்தது நகராட்சி நிர்வாகம்.

▶️ கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை காயல்பட்டினம் பேரூந்து நிலையத்திற்கு சூட்ட தீர்மானம் நிறைவேற்ற நான் கோரியபோது, நகராட்சியின் தலைவர் முத்து முஹம்மது, 10வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் (எ) சுகு ஆகியோர் என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தால் நகர்மன்றத்திலேயே என்னை தாக்குவதற்கு முற்பட்டனர்.

▶️ இப்போது என்மீது உண்மைக்குப் புறம்பான பல பழிகளை சுமத்தி, அடுத்த 2 நகராட்சி கூட்டத் தொடர்களில் பங்கெடுக்கச் செய்ய முடியாமல் என்னை தற்காலிக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளார்கள்.

▶️ இதற்கு உறுதுணையாகவும், அறியாமலும் சில உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். என் பக்கம் நீதி உள்ளதை நேரடி சாட்சியாகக் கண்ட கவுன்சிலர்கள், மேலிட அழுத்தத்திற்கு(!) ஆட்பட்டு எனக்கு எதிராக கையெழுத்து போட்டிருந்தால், அவர்கள் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்.

▶️ பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த எனக்கே, தளபதியாரின் திராவிட மாடல் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இன்று எனக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம் எச்சரிக்கை!!

▶️ எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஏதாவது ஒரு குறை இருந்தாலே ஐக்கியப் பேரவையை கேட்கலாம் என்று சொன்ன ஐக்கியப் பேரவை நிர்வாகமே! இன்று உங்களின் நட்சத்திர வேட்பாளர் & கவுன்சிலரான எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசிடமும், நீதிமன்ற பரிகாரமும் அல்லாது நான் யாரிடம் போய் முறையிடுவது?

▶️ ஐக்கியப் பேரவை நிர்வாகமே! எனக்குத் துணைத் தலைவர் பதவி தருவதாக நீங்கள்தானே வாக்குறுதி கொடுத்தீர்கள்! அதை நீங்களே மீறி விட்டீர்களே! இன்று காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நகராட்சி உறுப்பினராகிய என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதற்கும் ஐக்கிய பேரவைதான் பின்னின்று தூண்டுகிறதா? அதனால்தான் எனக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறதா? இது நியாயம்தானா?

------
மக்களால் நான்!
மக்களுக்காகவே நான்!!

என்றும் மக்களின் தொண்டனாய்...

A.A.அபூபக்கர் அஜ்வாத்.
6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்,
காயல்பட்டினம் நகராட்சி.

23/11/2024

Address

Kayalpatnam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayal News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share