Colachel Media

Colachel Media குளச்சலின் செய்திகளை உடனுக்குடன் அறிய

28/02/2026

வாகன விபத்து ஒருவர் பலி!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை அருகே கார் மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
இவர் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இன்று வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

24/02/2026

நாகர்கோவில் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

23/02/2026

கன்னியாகுமரிக்கு

24/02/2026 அன்று

வருகிறார் முதல்வர்💐
நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிப்பு💐

23/02/2026

#கன்னியாகுமரி மாவட்டம்

மேல்மிடாலத்தில் கஞ்சா புகைத்த வாலிபர்களை கொடிமரத்தில் கட்டி வைத்த மக்கள்

22/02/2026

சென்டர்மீடியனில் மோதி மாணவன் பலி

மார்த்தாண்டம் அருகே +1 படிக்கும் மாணவர் அஜீஷ் (16) தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் நேற்று நட்டாலம் பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்ற போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அஜீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு.

15/02/2026

மனிதாபிமானமற்ற மனிதர்கள் ?

2.2.26 குளச்சல் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளுகிற வண்டி திருமண மண்டபத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த கபீர் என்பவர் மீது மோதி மனிதாபிமானம் இல்லாமல் குப்பையை மட்டும் ஏற்றிவிட்டு விபத்து ஏற்படுத்தி விபத்தில் காயம் ஏற்பட்ட கபீர் என்பவரை மருத்துவமனைக்கோ, அல்லது ஆம்புலன்ஸ்கோ தகவல் சொல்லாமல் சுயநலமாக செயல்படும் ஊழியர்கள் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கபிர் சில தினங்களுக்கு முன் இறந்தும் விட்டார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

14/02/2026
12/02/2026

விபத்தில் சிக்கியவரை பார்க்கச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) , விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே கார் மோதி விபத்துக்குள்ளானார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

07/02/2026

சற்றுமுன்:
இன்று (06.02.2026) இரவு 8.15 மணியளவில், வள்ளியூர் புறவழிச்சாலை (Bypass) பாலத்தில் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்திலிருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ*யி*ரி*ழந்தார்.😭😭😭

06/02/2026

07-02-2026 அன்று Colachel பகுதியில் 9:00-15:00 மணி வரை மின்தடை ஏற்படும் - TANGEDCO

Address

Kolachel
Kolachel
629251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colachel Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share