Kovilpatti News

Kovilpatti News கோவில்பட்டி செய்திகள் மற்றும் வானிலை நிலவரங்கள்

23/10/2025
*கோவில்பட்டி அருகே அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல் - ஒருவர் காயம்*தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவ...
19/09/2025

*கோவில்பட்டி அருகே அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல் - ஒருவர் காயம்*

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி இன்று மாலை வந்து கொண்டிருக்கிறது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த திடீரென அரசு பேருந்து நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றி, ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமின்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் காயமடைந்தார். அரசு பேருந்து பின்பகுதி சேதமடைந்து. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுந்தரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற மில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு*கோவில்பட்டி அருகே புதுஅப்பனேர...
02/06/2025

*கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற மில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு*

கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, இன்று இரவு ஊருக்குத் திரும்பி உள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நி்லையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் உள்ளே சென்று பார்த்த போது, ஒரு பீரோ உடைக்கப்பட்ட நிலையிலும், ஒரு பீரோ திறந்த நிலையிலும் இருந்துள்ளது. மேலும் அதிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை**பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை*கோவில்பட்டி கடலைய...
02/06/2025

*கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை*

*பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை*

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றள்ளாத என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

08/02/2025
28/01/2025

Address

Kovilpatti

Telephone

+918807688064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovilpatti News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share