Kovilpatti City

Kovilpatti City Local Service
(1)

திருநெல்வேலி மேலத்திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.15 மாணவர்கள் பாதிக்கப்பட்...
11/10/2025

திருநெல்வேலி மேலத்திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.

15 மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது.

இதே இடத்தில் வங்கி பணியாளர் தேர்வுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்தது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொற்று நிலை தொடரும் நிலையில் தேர்வு நடத்தும் முடிவு சர்ச்சை எழுப்பியுள்ளது.


நீதி வேணும் 😔
11/10/2025

நீதி வேணும் 😔


உயிர் வாழவா வேணாமா ?
11/10/2025

உயிர் வாழவா வேணாமா ?


நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவியிலுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.உண்டியல் உடைக்கப்...
11/10/2025

நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவியிலுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்ட வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த திரேந்தர் சிங் என்பவரை போலீசார் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அன்றைய தினம் அழைத்து வந்திருக்கிறார்கள். அன்று பிற்பகல் 1 மணிக்கு கைதி திரேந்தர் சிங்கின் வழக்கை விசாரணைக்காக எடுத்த நீதிபதி அருண்சங்கர் வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த திரேந்தர் சிங் திடீரென தனது காலில் அணிந்திருந்த காலணியைக் கழட்டி நீதிபதியை நோக்கி வீசி இருக்கிறார். ஆனால் அந்த காலணி நீதிபதியின் முன்புள்ள சேம்பரில் பட்டு பின் கணினியில் தட்டிக் கீழே விழுந்திருக்கிறது. இந்தத் திடீர் சம்பவத்தை சற்றும் எதிர் பாராத ஒட்டு மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. பின் சுதாரித்த வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் காலணியை வீசிவிட்டு தப்ப முயன்ற திரேந்தர் சிங்கை விரட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு வந்த சேரன்மகாதேவி போலீசார் கோர்ட் வளாகத்தில் உள்ள செல்லில் அடைக்கப்பட்டிருந்த திரேந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். கைதான திரேந்தர் சிங் மீது கன்னியாகுமரி கடையம் பாவூர்சத்திரம் பாளை உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டு மற்றும் உண்டியல் உடைப்பு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சேரன்மகாதேவியின் உண்டியல் திருட்டு வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் இருந்திருக்கிறார் இந்த வழக்கு தொடர்பாக அவர்மீதான குற்றப்பத்திரிக்கை அன்றைய தினம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதின் காரணமாக ஆத்திரம். மேலும் தன் மீதான வழக்கிலிருந்து விடுபட முடியாமல் ஜெயிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் ஊர் திரும்ப முடியாத சூழல். இந்த ஆத்திரத்தின் காரணமாகத்தான் நீதிபதியை நோக்கி காலணி வீசியதாக கைதி திரேந்தர் சிங் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

கரூர் சம்பவத்தில் கண்ணெதிரே நடந்த அநீதியைச் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்த நீதியரசரின் மீது அவதூறு கருத்துக்களை வீசுவது, அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்றது, அடுத்து சேரன்மகாதேவி கோர்ட் உள்ளிட்ட சம்பவங்கள் வியாதி போன்று தொடர்வதை அத்தனை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. இதுபோன்ற கொடிய சம்பவங்கள் மீண்டும் தலையெடுக்க முடியாதவாறு சட்ட விதிவகைகளை கடுமையாக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்த வினோத் குமார் (38) என்பவருக்கு ந...
11/10/2025

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்த வினோத் குமார் (38) என்பவருக்கு நித்யா(35) என்ற மனைவியும், ஓவியா (11), கீர்த்தி(8) என்ற இரண்டு மகள்களும் ஈஸ்வர் என்ற ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இப்படியான நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நித்யா கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார்.

தற்போது வினோத் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனோடு மதுக்கூரில் உள்ள ஒரு காலணி வீட்டில் வசித்து வருகின்றார். மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மது போதைக்கு அடிமையான வினோத் குழந்தைகளை வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த வினோத் தனது மகள் ஓவியா மற்றும் கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே விளையாடவும் தண்ணீர் எடுத்து வரவும் கூறியுள்ளார்.

பிறகு மகனை கொஞ்சுவது போல தூக்கி வைத்து அறிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து இரண்டு மகளையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டியில் பெண் குழந்தைகள் தின விழாகோவில்பட்டி பார்க் ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சர...
11/10/2025

கோவில்பட்டியில் பெண் குழந்தைகள் தின விழா

கோவில்பட்டி பார்க் ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது. இதில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், அங்கன்வாடி மைய ஆசிரியர் விஜயலட்சுமி, சூப்பர்வைசர் பாலம்மாள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், விநாயகர் ரமேஷ், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜைகோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச ...
11/10/2025

கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜை இன்று (அக். 11) நடைப்பெற்றது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜா.இவரது மாமனார் சண்முகவேல், சங்கரன்கோவில் அரு...
11/10/2025

கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜா.

இவரது மாமனார் சண்முகவேல், சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனிப்பட்டா பெற முயற்சித்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் (விஏஓ) ராஜ்குமார் லஞ்சமாக ரூ.20000 கேட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த தொகை ரூ.10000ஆக குறைக்கப்பட்டது.

லஞ்சம் தர விரும்பாத தங்கராஜா, தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி, விஏஓ ராஜ்குமார் செப்டம்பர் 29ம் தேதி ரூ.10000 பெறும் தருணத்தில், ரசாயன பூச்சு தடவப்பட்ட பணத்தை வாங்கினார். அத்துடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேவேளை, தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் விழிப்புணர்வுடன் புகார் அளிக்கலாம் . புகார் கொடுப்பவரின் தகவல் முழுமையாக ரகசியமாக காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Address

Kovilpatti
628501

Alerts

Be the first to know and let us send you an email when Kovilpatti City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kovilpatti City:

Share