kovilpatti makkal

kovilpatti makkal all about kovilpatti
waiting for kovilpatti district

23/09/2025
  || நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் |   |   |   |
18/09/2025

|| நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | | | |

*கோவில்பட்டி அருகே அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல் - ஒருவர் காயம்*தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவ...
18/09/2025

*கோவில்பட்டி அருகே அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல் - ஒருவர் காயம்*

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருக்கிறது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த திடீரென அரசு பேருந்து நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றி, ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமின்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் காயமடைந்தார். அரசு பேருந்து பின்பகுதி சேதமடைந்து. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுந்தரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முக்கிய அறிவிப்பு :- தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நாளை கோவில்பட்டியில் நடக்க இருந்த ஆடிஷன்ஒத்துவைக்கப்படுகின்றது நா...
17/09/2025

முக்கிய அறிவிப்பு :- தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நாளை கோவில்பட்டியில் நடக்க இருந்த ஆடிஷன்
ஒத்துவைக்கப்படுகின்றது நாளை (வியாழன்) மாலை ஆடிசன் தேதி அறிவிக்கப்படும் கோவில்பட்டியில் அடுத்த வாரம் ஷூட் ஆரம்பம் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி நன்றி

கோவில்பட்டியில் பிரபல நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேவை நடிக்க வி...
17/09/2025

கோவில்பட்டியில் பிரபல நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேவை நடிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆடிசனில் நாளை தவறாமல் கலந்து கொள்ளவும் *தேதி*:-18/09/25, *கிழமை* :- வியாழக்கிழமை *நேரம்* : காலை10 முதல் மாலை5 மணி வரை
*இடம்* :- Fire service opposite Ango Plaza(லாட்ஜ்) கோவில்பட்டி *தொடர்புக்கு-
*TKT BALA 7904079865* *Ramji. :-9092296143*

*கோவில்பட்டியில்  தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி தீ பற்றி எரிந்ததால...
14/09/2025

*கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு - 2 தீயணைப்பு வண்டி மூலமாக தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்*

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் பஸ் நிலையம் அருகே சாலை ஓரத்தில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம், அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் கண்டெய்னர் நிறுவனத்தில் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வரும் கொலக்கட்டாங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், தூத்துக்குடியில் இருந்து சிவகாசிக்கு அட்டை ஏற்றிக்கொண்டு சென்று இறக்கிவிட்டு கூடுதல் பஸ் நிலையம் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் கூடுதல் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியின் முன் பகுதி மற்றும் டயர்கள் தீ பிடித்து பற்றி எரிந்து உள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து 2 வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நுரை கலந்த தண்ணீரை வைத்து தீ யை அணைத்தனர். லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வாக இருந்த மின்சார வயர் காற்றுக்கு கண்டெய்னர் லாரி மீது பட்டு உரசி தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் பட்டமளிப்பு விழா;கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அ...
14/09/2025

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் பட்டமளிப்பு விழா;

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது,. நாடார் உறவின்முறைச் சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கல்லூரி செயலாளர் கண்ணன்,நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு இளங்கலை பிரிவில் 161 மாணவர்களுக்கும்,முதுகலை பிரிவில் 20 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.அவர் பேசுகையில் கூறியதாவது

கோவில்பட்டியில் 26 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய பெரியோர்கள் உள்ள இக்கல்லூரியில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் படிப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பட்டம் பெற்ற பின்பு வேலை, பிசினஸ்,போன்றவற்றில் கவனம் செலுத்தி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.மாணவர்கள் அறம் சார்ந்து வாழ வேண்டும்,சிந்தனைகள் நல்வழியில் இருக்க வேண்டும்..

செல்போன் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.அறத்தை மீறினால் வாழ்க்கை திசை மாறிவிடும், கஷ்டமான சூழ்நிலை வந்தால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.மாணவர்கள் அறம் சார்ந்து நல்வழியில் ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

இவ்வாறு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பேசினார்.

நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வம்,பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,தங்கமணி,ராஜ்மோகன்,சரவணகுமார்,வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பாபு , கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,நாடார் உறவின்முறை சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*கோவில்பட்டியில் புற்களில் பற்றிய தீ காருக்கு பரவி எரிந்து சேதம்*கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கும...
14/09/2025

*கோவில்பட்டியில் புற்களில் பற்றிய தீ காருக்கு பரவி எரிந்து சேதம்*

கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் சாத்தூர் பிரதான சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுது நீக்கும் ஓர்க் ஷாப் வைத்துள்ளார். இவரது ஓர்க் ஷாப் அருகே உள்ள நிலங்களில் புற்களில் அடர்ந்து வளர்ந்திருந்தன. அவற்றில் நேற்று சிலர் தீ வைத்துள்ளனர். இந்த தீ மளமளவென பரவியது. இதில், ஓர்க் ஷாப்பில் வெளியே பழுது நீக்க நிறுத்தப்பட்டிருந்த காரும் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டது. தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், எரிந்த கார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிக்கி பழுது நீக்குவதற்காக குமாரின் ஓர்க் ஷாப்புக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு தின நிகழ்ச்சியில்  குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி  பார...
13/09/2025

எட்டயபுரத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு தின நிகழ்ச்சியில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி பாரதியார் வேடம் அணிந்த இளம் பாரதிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் நினைவு தினம் எட்டையாபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் கடைபிடிக்கப்பட்டது.இதில் தமிழ் பாப்திஸ்துபள்ளி,மாரியப்பன் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்து எட்டையாபுரம் பாரதியார் நினைவு மணிமண்டபத்தின் முன்பு பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும்,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சரியான உணவு பழக்கங்களை மேற்கொண்டு,புற்றுநோயை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சுற்றுச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும்,நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் கலந்து கொண்டு மகாகவி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இளம் பாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

இதில் பணி நிறைவு பெற்ற வருவாய் துறைஅலுவலர் பொன் பரமானந்தம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முத்துச்செல்வம்,கருப்பசாமி, பூல்பாண்டி, இளங்கோ, நடராஜன்,கிருஷ்ணசாமி, கண்ணன் வர்ஷன்,மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சேர்மத்தாய்,தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Follow for more updates:
& .city

🔥⚔️ ⚔️

Follow for more updates:& .city              🔥⚔️                            ⚔️             Copy right Disclaimer: The fo...
11/09/2025

Follow for more updates:
& .city

🔥⚔️ ⚔️


Copy right Disclaimer: The following image/audio/video is strictly meant for news purpose .All credits goes to respective owners . If you have any problem with this content being uploaded please contact for removal .will response immediately

கோவில்பட்டியில் காதல் தோல்வியால் விரக்தி அடைந்த சக்தி கணேஷ் என்ற இளைஞர், தனது நெருங்கிய நண்பனுக்கு வாட்ஸப்பில் வாய்ஸ் மெ...
11/09/2025

கோவில்பட்டியில் காதல் தோல்வியால் விரக்தி அடைந்த சக்தி கணேஷ் என்ற இளைஞர், தனது நெருங்கிய நண்பனுக்கு வாட்ஸப்பில் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்து த*கொ*😢

Rip da thambi😢

Address

Kovilpatti
628502

Website

Alerts

Be the first to know and let us send you an email when kovilpatti makkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share