Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம்

  • Home
  • India
  • Kumbakonam
  • Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம்

Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம் temple information writing then..
(2)

கும்பகோணம் காவேரி ஆறு மற்றும் அரசலாறு இரண்டுக்கும் இடைப்பட்ட பசுமையான நகரம் கோவில்களின் நகரமாகும் சோழர்கள் கருவூலம் என்று அழைக்கப்படுகிறது..
காசிக்கு நிகரான கோவில்கள்
தோஷம் நிவர்த்தி ஸ்தலம்
நவகிரக ஸ்தலங்கள்
தென்காளகஸ்த்தி தென்னக திருப்பதி தென்அயோத்தி

இந்திய மருத்துவ துறையில் இயக்குனர் டாக்டர் அருண்தம்புராஜ் உடன் நேரடியாக களத்தில் மருத்துவ துறையில் ஊழியர்கள் குமுறல்கள் ...
14/08/2025

இந்திய மருத்துவ துறையில் இயக்குனர் டாக்டர் அருண்தம்புராஜ் உடன் நேரடியாக களத்தில் மருத்துவ துறையில் ஊழியர்கள் குமுறல்கள் கட்டுரையாக கூட விவரிக்கலாம் ..

ஊழல்கள் கொடி கட்டி பறக்கிறது
மிஷின் மெயின்டன்ஸ் வாகனங்கள் மெயின்டன்ஷ் கட்டிடங்கள் மெயின்டன்ஷ்

ஊழியர்கள் அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்யாமல் குறைந்த பட்சம் ஊதியம்

மருந்து மாத்திரை தீயிட்டு கொளுத்தி விடப்படுகிறது புதைக்கப்படுகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் நோயாளிகள் வருகை பதிவு மிக குறைவு தான்..

உயர் அதிகாரிகள் அட்டூழியம் அதிகளவில் தான் இருந்து வருகிறது டாக்டர்கள் பணி நேரம் மிக குறைவு

M. K. Stalin Udhayanidhi Stalin Nirmala Sitharaman Narendra Modi

தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் விவசாயிகள் கோரிக்கை..
14/08/2025

தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் விவசாயிகள் கோரிக்கை..

சுருட்டப்பள்ளி தாம்பத்திய தட்சணாமூர்த்தி!சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செ...
14/08/2025

சுருட்டப்பள்ளி தாம்பத்திய தட்சணாமூர்த்தி!சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்களுக்கு மனஅமைதி ஏற்படும் என்பது ஐதீகம்.

தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோதபஸ் மூர்திம் சிவம்! நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!! வால்மீகிஸ்வரனின் தெற்கு மாடத்தில் அமைந்துள்ள தாம்பத்திய தட்சணாமூர்த்தி திருவுருவம் எங்கும் பார்க்க முடியாதபடி அமைந்துள்ளது இக்கோவில் விசேஷம்.

எல்லா ஆலயங்களிலும் இருப்பது போல இங்கு தட்சணாமூர்த்தி சனகாதிகள் சூழ கல்லால் மரத்தில் அடியில் அமர்ந்து காட்சி தரவில்லை. அதற்கு மாறாக பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம் சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கவுரி சுருட்டப்பள்ளியில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்களுக்கு மனஅமைதி ஏற்படும் என்பது ஐதீகம்.சிவாயநம திருச்சிற்றம்பலம்!!

14/08/2025

TODAY FAN'S MOMENT Of HELTH 50YEAR COMPLETED CINEMA..

Super star Rajinikanth...

Cooli... Open it

வனதுர்காதேவி🙏
14/08/2025

வனதுர்காதேவி🙏

கும்பகோணம் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் ஊராட்சி ஒன்றியங்களில் செய்யபடும் துய்மை பணியாளர்கள் பாதுகாவலர்க...
14/08/2025

கும்பகோணம் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் ஊராட்சி ஒன்றியங்களில் செய்யபடும் துய்மை பணியாளர்கள் பாதுகாவலர்கள் எவ்விதமான உபகரணங்கள் கொடுப்பதில்லை சம்பளம் மாதம் குறைவு தான்..

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
14/08/2025

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெருமாண்டி மாதா கோயில் வடக்குத் தெரு குடிநீா் குழாய்களில் கழிவுநீா் கலந்து வந்ததாக தெரிகிறது.

இதை இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தியதால் இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவா்களை பரிசோதனை செய்தபோது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவா்களில் 6 போ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு சோ்ந்தனா். திங்கள்கிழமை 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். ஒருவா் மட்டும் சிகிச்சையில் உள்ளாா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த நா்கீஸ் என்பவா் கூறியது : பாதிக்கப்பட்டோரில் 20-க்கும் மேற்பட்டோா் நாகப்பட்டினத்தில் நாட்டு மருந்து சிகிச்சைக்கு சென்றுள்ளனா்.

இப்பகுதியில் பல மாதங்களாக குடிநீா் கலங்கலாக வருகிறது. இதுகுறித்து மாநகராட்சியில் புகாா் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா் என்றார்.

மருத்துவ முகாம்: தற்போது இப்பகுதியில் மேலக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மருத்துவப் பணியாளா்கள் வீடு வீடாக சோதனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன் கூறியதாவது: குடிநீா் கலங்கலாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். ஆய்வுக்கு அதை எடுத்துள்ளோம். 6 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டு ஒருவா் சிகிச்சையில் உள்ளாா். மற்ற 5 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். தொடா்ந்து முகாம் அமைத்து கண்காணித்து வருகிறோம் என்றாா். மாநகராட்சி குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க குடிநீா் பிரிவு அதிகாரிகள் குடிநீா் இணைப்புகளை சரி செய்து வருகின்றனா்.

திருவிடைகழி முருகன் கோவில் வடக்கு திருச்செந்தூர் என்று கருதப்படுகிறது. முருகன் சூரபத்மனை வதம் செய்து திருச்செந்தூரில் என...
14/08/2025

திருவிடைகழி முருகன் கோவில் வடக்கு திருச்செந்தூர் என்று கருதப்படுகிறது. முருகன் சூரபத்மனை வதம் செய்து திருச்செந்தூரில் என்றால் அவன் தம்பி ரணியாசுரன் மீனாக உருவெடுத்து பக்கத்தில் உள்ள கடலில் குடி கொண்டான். அவனை வேல் கொண்டு வீழ்த்தினார் முருகப்பெருமான்! சிவ பக்தனான ராணியாசூரணை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்பெற்றார் முருகன். பின்னர் இங்குள்ள குரா மரத்தடியில் தவம் செய்து தோஷம் நீங்கபெற்றார்! ராகுவும் அவர் தம் தோஷம் நீங்க இங்கு தவம் இருந்ததாக வரலாறு..
கருவறையில் முருகன் அவரின் பின்புறம் சிவன் லிங்க உருவில் இருப்பார். இடது பக்கம் தெய்வானை அம்மன் மட்டுமே இங்கு இருக்கிறார்!
தரங்கம்பாடிக்கு 9 km தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூர் இருந்து ஒரு 7km பயணித்தும் இந்த கோவிலை அடையலாம்!
முருகனின் அருள் பெற படைவீடுகள் மட்டுமல்லாது இத்தலங்களுக்கும் சென்று தரிசிக்கலாம்!
அந்த குரா மரத்தடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து வருவது நல்லது🙏

14/08/2025

கும்பகோணம் மாநகராட்சி ஊழல் சொல்லுறாங்க...
கும்பகோணம் என்றாலே சும்மாவா..

கோடிக்கு மேலே வரி வசூல் மற்றும் ஒப்பந்தம் வேலை வடிகால் புணர அமைப்பு வருவாய் வருதா...

கருவூரும் ஈழமும் மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியும் சோழதேசத்தை  ஸ்ரீ குலோத்துங்கச் சோழன் " சோழர்களின் வீழ்ச...
13/08/2025

கருவூரும் ஈழமும் மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியும் சோழதேசத்தை ஸ்ரீ குலோத்துங்கச் சோழன் " சோழர்களின் வீழ்ச்சிக்கும் சுந்தர பாண்டியன் எழுச்சிக்கும் விதை போட்டவர்" - மூன்றாம் குலோத்துங்க சோழன்...
பழையாறை மாநகரில் எவ்விதமான கத்தியும் ரத்தமும் இல்லாமல் மூடி சூடியதை தலையில் இறக்கி வைத்து மண்டியிட்ட..

கிபி600 முதல் கிபி12 நுற்றாண்டுகள் வரை சோழ தேசத்தின் தலைநிமிர்ந்து நின்றதை சுந்தர பாண்டியர் எழுச்சி மீண்டும் தலைநிமிர நின்றது.

கூனஞ்சேரி முதல் படம்
திருவாலங்காடு இரண்டாம் படம்..

கரிகாலன் கல்லணையைக் கட்டியதற்கும், கரிகாலனது இமயப்படையெடுப்பிற்கும் நேரடியான கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்கள் உண்டா.?இக்கேள...
13/08/2025

கரிகாலன் கல்லணையைக் கட்டியதற்கும்,
கரிகாலனது இமயப்படையெடுப்பிற்கும் நேரடியான கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்கள் உண்டா.?

இக்கேள்விகளுக்கானப் பதிலை பலமுறை விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துரைத்த போதும் மீண்டும் ஒருமுறை சுருக்கமாகப் பார்ப்போம்..

சோழர்கள் செப்பேடுகள் அனைத்தும் கரிகாலனை காவிரி ஆற்றுடன் தொடர்புபபடுத்தியே பதிவுசெய்கின்றன.

காவிரியின் கரைகளை உயர்த்திய கரிகாலன். காவிரியின் கரைகளை உயர்த்தி வேளாண்மையைப் பெருக்கிய கரிகாலன். இந்த செய்திகள் திரும்ப திரும்ப அனைத்துச் செப்பேடுகளிலும் இடம் பெறும்.

சோழர்காலக் கல்வெட்டுகள் காவிரியை கரிகால்ச்சோழப் பேராறு என்று அழைக்கின்றன. அந்த காவிரி ஆற்றின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை கரிகாலக்கரை என்றழைக்கின்றன.

செப்பேடுகள் சொல்லும் கரிகாலன் செய்த கரையை, கல்வெட்டுகள் கரிகாலக் கரை என்று பெயர் சூட்டுகிறது.

இங்குதான் ஐயம் ஏற்பட்டது.

காவிரியாற்றின் இருபக்கக் கரைகள்தானே உயர்த்தப்பட்டது. ஆற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பு கட்டிய செய்தி எங்கே உள்ளது.?

இதற்கானப் பதில் செப்பேடுகளிலேயே உள்ளது.

அதிவேகமாக பாய்ந்து செல்லும் காவிரியை தடுத்து நிறுத்தி அதை கட்டுப்படுத்தினால்தானே பாசனத்திற்குப் பயன்படுத்தமுடியும். இருபக்க கரைகளை உயர்த்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு ஒன்றை அமைத்தால்தானே அதிவேக நீரைக் கட்டுப்படுத்தமுடியும்.? அந்தத் தடுப்புதான் கல்வெட்டுகள் கூறும் கரிகாலக்கரை. இன்றைய கல்லணை.

இதை எவ்வாறு உறுதி செய்யலாம்.?

முதலாம் பராந்தகனின் வேளஞ்சேரி செப்பேடு. வடமொழிப் பகுதியின்8ஆவது சுலோகம். கரிகாலனைப்பற்றிக் கூறும் போது..

"காவேரி தட யுக்மா ருத்தே ஸலிலா ஜாதா சாரஜ்ஞா "

இந்த வரிகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை சோழர் செப்பேடுகள் நூல் எழுதிய பேராசிரியர் சங்கரநாரயணன் அவர்கள் அழகாக எடுத்துரைக்கிறார்.

" காவிரியை இருகரைகளுக்குள் அடங்கிய நீருள்ளனவாய் செய்த கரிகாலன் "

இச்செப்பேட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார் தொல்லியல் அறிஞர் நாகசாமி. நூலின் பெயர்

Tiruttani and velachery copper plates "

இவர் இந்த சுலோகத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறார்.

"In that family took place the birth of Karikala Cholendra - the water-course of the river Kaveri, was controlled by the embankments on either side "

என்று பதிவு செய்கிறார்.

Controlled by embankments

என்று உறுதி செய்கிறார்.

Embankment என்றால்
கட்டுக்கரை, அணைக்கரை, தடுப்பணை என்று பொருள்கொள்ளமுடியும்.

ஆகவே.. செப்பேடு சொல்லும் செய்தி- காவிரி நீரை கரைகட்டி கட்டுப்படுத்தினான் கரிகாலன். இந்தக் கரைதான் கல்லணை.

இரண்டாவது கேள்வி.

கரிகாலனின் இமயப் படையெடுப்பிற்கு சான்று உண்டா.?

இதே செப்பேடு அந்த சான்றைத் தருகிறது.

முதல் வரி இவ்வாறு ஆரம்பிக்கிறது.

" ப்ராலேயாத்ரி தடேஷூ "

பனிமலையில் தனது தடத்தைப் பதித்த கரிகாலன்.

ஆகவே ---
கரிகாலன் கட்டியக் கல்லணைக்கும் அவரது வடபுல இமயப் படையெடுப்பிற்கும் நேரடியான தொல்லியல் சான்று உள்ளது.

=========================

அன்புடன்..
மா.மாரிராஜன்.

Address

Kumbakonam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share