PIXEL MEDIA

PIXEL MEDIA சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! மக்களுக்காக மக்களுடன்...!

15/10/2025

� LIVE : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் | Tamil Nadu Legislative Assembly Session - 2025

வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்...
15/10/2025

வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக விஜய் சேதுபதியின் Ace படம் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி தனுஷின் குபேரா காலை 11 மணிக்கு, விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி மாலை 6 மணிக்கு மற்றும் பறந்து போ மதியம் 3.30 மணிக்கு சிறப்பு தீபாவளி திரைப்படங்களாக ஒளிபரப்பாகிறது. சன் டிவி கண்ணப்பா தீபாவளி ஒரு நாள் முன்பே (அக்டோபர் 19ஆம் தேதி) சன் டிவியில் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலைஞர் டிவி தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற சூழல் வெப் தொடரை, கலைஞர் டிவியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பு செய்கின்றனர்.

வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன ....

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக...
14/10/2025

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.முன்னதாகம் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது....

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் த....

13/10/2025

சிவகங்கையில் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் | Nainar Nagendran |

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...
13/10/2025

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார். தனக்கு காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தபின், அனைவரையும் நேரில் வந்து சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் - சிபிஐ கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வலக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஆதவ் அர்ஜுனா. கரூர் துயர சம்பவம் குறித்தும், வழக்கை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட அவர், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை தவெக தலைவர் விஜய் அவர்கள் தத்தெடுக்கப்போவதாக கூறினார். அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் நாம் பயணிக்கப்போகிறோம் என்றும் விஜய் கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதி....

தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவ...
13/10/2025

தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் பெரிய மாற்றத்தை கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: இந்த விவகாரத்தில் விஜய் உடனடியாக கரூரை விட்டு கிளம்பியது, பாதிக்கப்பட்ட மக்களைத் தற்போது வரை நேரில் சந்திக்காதது, தவெக நிர்வாகிகள் யாரும் முறையாக பதில் அளிக்காதது என்று பெரும் பின்னடைவு தவெக-விற்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவெக-விற்கு புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா இந்த சம்பவம் தொடர்பாக முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்....

தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்....

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெ...
11/10/2025

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய நபர்களான திருவேங்கடம் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணித்துள்ள நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவே கூடாது என மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மல்லுக் கட்டியது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி காண்பித்து ஆளும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்துவிட்டது – சபாஷ்! மேலும், எம்பெருமான் முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் நிறத்தை மாற்றுவதற்கு முரண்டு பிடித்தவர்களைக் கண்டிக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்தது இந்த மதம் பிடித்த திமுக அரசு.

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நா.....

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது ...
11/10/2025

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்வது வழக்கம்.அந்த வகையில் வாட்ஸ்-அப் மெசஞ்சரில் பயனர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சம், வீடியோ அழைப்பில் பேசும்போது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதிலும் பேக்கிரவுண்டை மாற்றும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழ....

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி ப...
11/10/2025

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 11 வருடம் ஆன நிலையில் இப்போது, மறு எடிட் செய்து, மீண்டும் வெளியிட உள்ளதாகத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘பாட்ஷா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சச்சின்’, உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றதால், ‘அஞ்சான்’ படத்தையும் இப்போது வெளியிட உள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப...

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவ...
11/10/2025

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இ....

11/10/2025

�நேரலை 11-10-2025 | உரையாடல் அமர்வு | பன்னாட்டுத் தமிழ்த் கிருத்துவ பேராயம் - சமூக நீதி பேரவை

Address

Kumbakonam
612602

Alerts

Be the first to know and let us send you an email when PIXEL MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PIXEL MEDIA:

Share