தும்பி

தும்பி Thumbi is a humble initiative to bring children closer to nature; to being themselves. It's a bilingual Magazine meant for the young at heart.

Thumbi aspires to celebrate the infinite imaginative faculties abundant in children through ways more than one.

In the series of workshops happening at the Lakshman Iyer Memorial Students Hostel organised by Thumbi Children’s magazi...
23/10/2025

In the series of workshops happening at the Lakshman Iyer Memorial Students Hostel organised by Thumbi Children’s magazine and Cuckoo movement for children , this coming weekend we bring “In the Hands of the Earth” a Terracotta Workshop for Children.

Hosted by Radhakrishnan

October 25–26 at Gobichettipalayam.

"இரண்டு ஆந்தைகள் பார்த்தேன்.இரண்டு பூனைக்குட்டிகள் போல இருந்தன.கண்களில் அப்படி ஒரு இரவு.அப்படி ஒரு சிரிப்பு."- வண்ணதாசன்...
17/10/2025

"இரண்டு ஆந்தைகள் பார்த்தேன்.
இரண்டு பூனைக்குட்டிகள் போல இருந்தன.
கண்களில் அப்படி ஒரு இரவு.
அப்படி ஒரு சிரிப்பு."

- வண்ணதாசன்

தும்பி சிறார் இதழின் 86வது இதழ் அச்சில் மலர்ந்து கைவந்து சேர்ந்திருக்கிறது. இவ்விதழில் இறைத் தேடிப்போன தன் அம்மா கூடு திரும்ப வேண்டிக் காத்திருக்கும் மூன்று ஆந்தைக் குஞ்சுகளின் ஓவியக் கதை பிரசுரமாகியுள்ளது.

மேலும், ஓர் ஆந்தை ஜோடியின் வாழ்க்கை பயணமும், பல்லாயிரம் குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை விருப்பத்துடன் அறிமுகப்படுத்தும் சூழலியலாளர் ரவீந்திரன் அவர்களின் அனுபவப் பகிர்வும், ஒளிப்படங்களும் உள்ளடங்கியுள்ளது.

தொடர்ச்சியாக குழந்தைகள் விருப்பம் போல் வண்ணம் தீட்டி மகிழ தோழமை வித்யா பெனோவின் கோட்டோவியமும், இலைகளை வைத்து பொம்மைகள் செய்து பார்க்கும் பக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பச்சையம் மாறா பிஞ்சு மனங்களில் இக்கதைகளும், ஓவியங்களும், படங்களும் நேயத்தை துளிர்விக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறோம்.

கதைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இன்னும் ஒரு வாரத்திற்குள் இதழ் கைவந்தணைக்கும். தும்பியின் தொடர் பயணத்திற்கு உறுதுணையாய் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்...

இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச:
9843870059, [email protected]

"குறி தவறிய ஒரு அம்பு தந்த பசியைவிடவா, உங்கள் கடிவாளக்கல்வி அதிகமாக கற்றுத்தந்துவிடும்? துளியும் ஒலியெலுப்பாமல் இரையைநோக...
10/10/2025

"குறி தவறிய ஒரு அம்பு தந்த பசியைவிடவா, உங்கள் கடிவாளக்கல்வி அதிகமாக கற்றுத்தந்துவிடும்? துளியும் ஒலியெலுப்பாமல் இரையைநோக்கி தரைவிரையும் ஒரு ஆந்தை தருகிற புலனடக்கலை, புத்தகத்தின்வழி எப்படிக் கற்கும் எம் குழந்தைகள்? ஒரு தூண்டில் தக்கை தருகிற தியானிப்பை எப்படி நீங்கள் மொழியால் விளக்குவீர்கள்? அடிபட்டுத் துடிக்கும் சகவுடலின் வெட்டுக்காயத்தின் மீது எந்தப் பச்சிலையைப் பிழிய வேண்டுமென எம் பிள்ளைகள் அறியாமலிருப்பது அறிவாகுமா? ஆரண்யத்தின் மெளனத்துக்குள் ஆட்படாத ஆன்மா, எங்ஙனம் ஞானத்தை வசப்படுத்தும்?

பழங்குடிப் பிள்ளைகளை அழைத்துச்சென்று சமவெளி நாகரீகத்தை கற்றுக்கொடுப்பது தான் நீங்கள் எங்களுக்களிக்கும் கல்வி என்றால், அதுவும் ஒருவகையில் இனப்படுகொலைதான். எம் முன்னோர்களின் ஆன்மா எம் பிள்ளைகளுக்குள் ஆன்மாகவுறைந்து அறிவாக வெளிப்படும் என்பது எங்கள் நீள்கால நம்பிக்கை. ஆனால், எங்கள் சந்ததிகளை சமவெளி மனிதர்களாக மாற்றுகிற உங்கள் சந்தைக்கல்வி அழித்தொழிப்பது எம் பிள்ளைகள் பிறப்பிலேயே கொண்டிருக்கும் பழமையான பாரம்பரியக் கொடையை. குழந்தைகளின் பண்பாட்டு மரபறிவை மங்கலாக்கும் எந்தவொரு போர்வைக்கல்வியும் எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையில்லை. கல்வியால் அவர்களின் களங்கமின்மையை களவுபோகச் செய்துவிடாதீர்கள்.

- இறுதித்தலைமுறை மலைப்பழங்குடிகள்

கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம் அடிப்படைக் கல்வியைப்பெறுவது எத்தகைய சமூகப்படியேற்றம் என்பதனை நாம் நன்கறிவோம். ஆனால், அதேசமயம் நாம் தொலைத்துவிட்ட மரபார்ந்த அறிவுகளையும் கல்விக்குள் கொண்டுவந்து, தொன்மையும் நவீனமும் சமனுறக்கலந்த ஒரு சமத்துவக்கல்வி அந்தந்த நிலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். இச்சமகாலத்தில் இதற்கான பிரக்ஞை சமூகத்திலிருந்து மேலெழுவது என்பது தவிர்க்கமுடியாத அறிவம்சம். ஞாபக அறிவாக நம் மூத்தோர்கள் கொண்டிருந்த சில அறிதல்களையும், இறையாக அவர்கள் தொழுத விழுமியங்களையும் சமகாலப் பிள்ளைகளுக்குக் கிடைக்கச்செய்வது நம் எல்லோரின் பொதுக்கடமை.

'கதைகள் வழியாக சொல்லப்படுகிற வரலாறு குழந்தைகளுக்கு என்றைக்குமே மறக்காது' என்றுரைத்த வார்த்தைகள், சித்தாந்தக்கருவியான கல்வியை ஞானப்பாதையில் அழைத்துச்செல்லும் ஒரு எளியவழியை நமக்குக் காட்டுகின்றன. கதைகள் வழியாக கல்விப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகையில் அதுவொரு சுதந்திரவுணர்வை நம் சிந்தனைக்களிக்கிறது. நூறுநூறு ஆண்டுகளாக செவ்விலக்கியங்களும் காப்பியங்களும் கதைப்பாடல்கள் வழியாகவும், கூத்துநாடகங்கள் மூலமாகவும் மீளமீள செவிநுகர் மற்றும் விழியுணர் அறிவாக நம்முள் பதியவைக்கப்படுகிறது. நீலத்திமிங்கலத்தை பற்றி கற்றறியும் குழந்தை, அதனை நிழற்பாவைக்கூத்தின் வழியாக இருள்மஞ்சள் சிற்றொளியில் காணநேர்ந்தால் அது எத்தகையதொரு தெளிவறிவாக நம்முள் தங்கிப்போகும்!

தும்பி சிறார் இதழ், பூமியிலுள்ள வெவ்வேறு உயிரினங்களுக்கும் குழந்தைகளுக்கு இடையே நிகழ்கிற அன்புமிக்க அகவுரையாடல்களை கதைமையமாக வைத்த ஓவியக்கதைகளை அச்சுசுமந்து மாதந்தோறும் வெளிவருகிறது. ஒரு உயிரினத்தின் அருகாமை குழந்தைக்குள் நிகழ்த்தும் வியப்பும் மகிழ்வும் மறக்கவியலாத அற்புதங்களாக நினைவேட்டில் தங்கிவிடுகிறது. 'ஒரு ஊர்ல ஒரு...' என்ற கதைத்துவக்கத்தை யார், எங்கே சொன்னாலும் நம் செவியும் மனமும் ஒருங்குவிந்து கவனமடைவதை எவ்வயதிலும் நம்மால் உணரமுடிகிறது. காரணம், கதையும் புனைவும் நம் அறிவின் வெற்றிடங்களில் விதைகளென விழுந்து பேராலமாக எழுகிறது.

தும்பி புத்தகம் பெற: https://thumbigal.com/annual-subscription/
தொடர்புக்கு : 9843870059

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை...
09/10/2025

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும்.

- ஹென்றி மில்லர்

26/09/2025
உங்கள் கைகளை நீட்டி, மழைத் தாரைகளை ஏந்துங்கள். ஒரு தலைவாழையின் பக்கக் கன்றுகள் போல, உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை ந...
24/09/2025

உங்கள் கைகளை நீட்டி, மழைத் தாரைகளை ஏந்துங்கள்.
ஒரு தலைவாழையின் பக்கக் கன்றுகள் போல, உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும். இதுவரையில் வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்பூக்களை விடவும் கூடுதலான அழகுடன், அந்தப் பிஞ்சு உள்ளங் கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.

மழை பாருங்கள்.
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

கல்யாண்ஜி

21/09/2025

சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் காலத்தில் உறைந்து நின்றுவிட்ட துளியையே நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாக பார்க்கும்போது அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின் நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது.

எந்த கும்பலிலும் அடையாளமின்றி தங்களை கரைத்துக்கொள்ளக்கூடியவர்கள் அவருடைய கதாபத்திரங்கள். ‘வெறும்‘ ஜனங்கள். யதார்த்தவாத இலக்கியத்தின் உதயத்துடன் உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்களில் வெறும் ஜனங்களின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் தன்மைகலில் அடிப்படையான மாறுதல்கள் உண்டு. தன் எளிமையை சரித்திரத்தின் முன் பிரகடனம் செய்வதற்காக கந்தலுடன் மேடையேறி வருபவன் தல்ஸ்தோயின் குடியானவன். ஏதோ தேவதையின் கரம்பட்டு எழுந்து மகத்தான மானுட தரிசனங்களின் விவாத அரங்காக மாறி ஜ்வலிக்கும் மனம் கொண்டவன் தஸ்தாயெவஸ்கியின் குற்றவாளி- எனவேதான் அது யதார்த்த வகைக்குள் அடங்காததாகவும் அவர்கள் சாமானியர்களாக இல்லாமலும் தோன்றுகிறார்கள் போலும்.

தீர்க்கதரிசிக்கு இணையான மனிதாபிமானத்துடனும், இரக்கத்துடனும் மேலிருந்து பார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டவன் சேகவ்வின் தொழிலாளி. புதுமைப்பித்தனின் கணக்குப்பிள்ளையின் சர்வசாதாரணத்தன்மை எபோதுமே இரண்டு முறை அடிக்கோடு போடப்பட்டு அசாதாரணமாக்கப்படுகிறது. ஜெயகாந்தனின் சாமானிய ஜனங்களுக்கு கருத்துப்பிரதிபலிப்புச் சுமை உண்டு. தமிழில் முதல்முறையாக சர்வசாதாரணமாக கறிகாய் கடைக்கு மஞ்சள்பையுடன் போகும் விதத்தில் சாமானிய முகங்கள் படைப்பில் வந்தது அசோகமித்திரனின் கதைகளில்தான். அவன் எதற்கும் குறியீடு அல்ல. அனுதாபத்துக்கு உரியவனோ, பிரியத்துக்கு உரியவனோ அல்ல.

எந்த இலட்சியத்துக்கும் வடிவம் அல்ல. ஆசிரியரில் அவனைப்பற்றி நெகிழ்வுகள் ஏதும் எங்கும் செயல்படுவது இல்லை. அவருடைய பழுத்த யதார்த்தவாதம் அவனை மிக நாசுக்காக கும்பலில் இருந்து சற்று முன்னகர்த்திக் காட்டுகிறது. தன் வரிசையெண்ணை சொல்லி வணங்கிவிட்டு அவன் மீண்டும் முகங்களின் கடலுக்குள் சென்று விடுகிறான். அவனுடைய ஒரு கணம் சரித்திரம் முழுக்க நிரம்பியிருப்பதும், சரித்திரத்தை படைத்து அழித்து சரித்திரமே ஆகி நிற்பதுமான, ஜனங்களின் முகமாக ஆகிறது. ஒரு துளி, அந்தத் துளியில்தான் அலைகளையும் கொந்தளிப்பையும் பிரவாகத்தையும் நாம் காண்கிறோம்.

தன் படைப்புகளில் எப்போதுமே அசோகமித்திரன் சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சர்வ சாதாரணமான சம்பவங்கள்தாம் – அனேகமாக அபூர்வமாக உத்வேகம் மிகுந்த சம்பவங்கள் நிகழும்போது கூட தன் சித்தரிப்பின் கச்சிதமான தொழில்நுட்பம் மூலம் அதை சாதாரண சம்பவங்களின் தளத்தில் சரியாக பொருந்த வைத்து விடுகிறார். மொத்தத்தில் அவர் படைப்புலகமே சாதாரணத்தன்மையை தன்னுடைய தனித்தன்மையாக கொண்டுள்ளது. அவருடைய படைபூலகில் எதுவுமே விசேஷமானதல்ல. ஒரு படைப்பாளி என்ற முறையில் வெகுஜனம் என்ற முகமின்மையின் உள்ளேயிருந்து அதன் குரலாகவே பேசுகிறார். மொத்தமாக அசோகமித்திரனின் கலையையே ‘சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு‘ என்றுகூட நாம் வகைப்படுத்திவிட முடியும்.

~ ஜெயமோகன்

ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.உங்களுடைய கையைத்தான் இப்போது நான் பற்றிக்கொண்டு இருக்கிறேன்.Vannadasan Sivasan...
21/09/2025

ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
உங்களுடைய கையைத்தான் இப்போது நான் பற்றிக்கொண்டு இருக்கிறேன்.

Vannadasan Sivasankaran S

மனிதர்கள் நம் கையைப்பற்றுகிற நேரம்எவ்வளவு உன்னதமானதுஅவர்களின் கண்களில்திரள்கிறதும், கசிகிறதும்எவ்வளவு ஒப்பற்றது.-வண்ணதாச...
20/09/2025

மனிதர்கள் நம் கையைப்
பற்றுகிற நேரம்
எவ்வளவு உன்னதமானது
அவர்களின் கண்களில்
திரள்கிறதும், கசிகிறதும்
எவ்வளவு ஒப்பற்றது.

-வண்ணதாசன்

உன் மனது எத்தனை பெரிய மலர்உன் மனது எத்தனை பெரிய அகல்-மகுடேசுவரன்
19/09/2025

உன் மனது எத்தனை பெரிய மலர்
உன் மனது எத்தனை பெரிய அகல்

-மகுடேசுவரன்

அமெரிக்க இராணுவ அதிகாரியான டுவைட்டி ஐசனோவரின் வார்த்தைகளை நினைவு கொள்வோம். அவர் நிச்சயமாக ஒரு சமாதானப் பிரியர் அல்லர். 1...
19/09/2025

அமெரிக்க இராணுவ அதிகாரியான டுவைட்டி ஐசனோவரின் வார்த்தைகளை நினைவு கொள்வோம். அவர் நிச்சயமாக ஒரு சமாதானப் பிரியர் அல்லர். 1953 ஆம் ஆண்டில், ஆயுதங்களுக்காக அதிகபட்சமாக செலவு செய்யும் நாட்டின் அதிபராக இருந்த அவர் இவ்வாறு ஒப்புதலளித்தார்...

"தயாரிக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், கடலில் விடப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், பற்றவைக்கப்படும் ஒவ்வொரு ஏவுகனையும் இறுதியாகச் சுட்டுவது, உணவு கொடுக்கப்படாமல் பசியில் வாடுவோரிடமிருந்தும், ஆடை வழங்கப்படாடாமல் குளிரில் நடுங்குவோரிடமிருந்தும் செய்யப்படும் திருட்டே ஆகும். உண்மையில், மக்கள் அமைதியை மிகவும் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நீண்ட காலத்திற்கு அமைதியை மேம்படுத்துவதற்காக, நம் அரசாங்கங்களை விட, அதன் 'மக்கள்' அதிகம் செயலாற்றப் போகிறார்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன். நீதியும் கருணையும்தான் இவ்வுலகில் நித்திய அமைதியைச் சாத்தியமாக்கும்."

---

'போர்களற்ற பூமி' என்ற ஒற்றைமுழக்கம் தான் மானுடத்திரளின் பெருங்குரலென ஒவ்வொரு காலத்தும் இங்கு எதிரொலிக்கிறது. கலைவடிவிலும் கருத்துவடிவிலும் அது மீளமீள இங்கு தன் எதிர்வினையை நிகழ்த்துகிறது. 'அரசியலின் சூழ்ச்சிக்கு ஆன்மா பலியாகிவிடக் கூடாது' என்கிற வார்த்தைகளின் சத்தியம் தற்போது அச்சமூட்டுகிறது. அப்பாவி மக்களை அனாதைகளாக ஆக்குவதைத்தான் எல்லா போர்களும் இறுதியில் நிகழ்த்துகின்றன. உலகத் தலைவர்களே, கண்ணீர்மல்கி உங்களை இறைஞ்சிக் கேட்கிறோம், "போரைக் கைவிடுங்கள், குழந்தைகளின் மன்றாட்டுக்கு செவிசாயுங்கள். எதை நம்பி இப்பூமியில் வாழ்வது? என்று நாளை ஓர் குழந்தை கேட்கையில், நாம் தலைகவிழாது நிற்பதற்கு ஒருசில காரணங்களாவது மானுடத்தின் தன்மைகளாக எஞ்சட்டும்."

"சூரியனும், விண்மீன்களும், நிலவும்,நீ தேடிக்கொண்டிருந்த வெளிச்சமும்உன் உள்ளிருந்தே சுடர்கிறது."- ஹெர்மன் ஹெஸ்ஸேதும்பி சி...
08/09/2025

"சூரியனும், விண்மீன்களும், நிலவும்,
நீ தேடிக்கொண்டிருந்த வெளிச்சமும்
உன் உள்ளிருந்தே சுடர்கிறது."

- ஹெர்மன் ஹெஸ்ஸே

தும்பி சிறார் மாத இதழின் 85வது இதழ் அச்சில் மலர்ந்து கைவந்து சேர்ந்திருக்கிறது. ஒரு சிறு குழந்தை தன் இதயத்தின் தன்மைகளைப் பற்றி எளிமையான வரிகளில் மென்மையாகச் சொல்லும் சித்திரக் கவிதையை உள்ளேந்தி வந்துள்ளது. மனித மனத்தின் ஆழமான உணர்வுகளை கறுப்பு-வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களுக்குள் அழகாய் விரிய வைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இதழை வாசிக்கும் ஒவ்வொரு குழந்தை மனதினுள்ளும் நேயத்தை விதைக்கும் என்று உளமார நம்புகிறோம்.

மேலும், இவ்விதழில் குழந்தைகள் வண்ணம் தீட்டி மகிழ தோழமை வித்யா பெனோவின் கோட்டோவியமும், பின்னட்டைப் பாடலாக நண்பர் ஆனந்த விநாயகத்தின் சிறார் பாடலும், அட்டைப்படமாக மோகன் தனிஷ்க்கின் ஒளிப்படமும் இடம்பெற்றுள்ளது பெரும் நிறைவைத் தருகிறது.

ஒரு சிறு முயற்சியாக குழந்தைகளின் கற்பனைகள் கிறுக்கல்களாக மாற, திறந்தவெளிப் பக்கங்களும் அமைந்துள்ளன. குழந்தைகளின் எச்சிறு கனவுப்படைப்பையும் பகிர்ந்தளித்து தும்பியின் சிறகுகள் வழி பறந்திட நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறோம்.

வடிவமைப்பு: தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச:

தும்பி சிறார் மாத இதழ்,
அலமேலு விஜயன் இல்லம்,
சிங்காரவேலன் நகர்,
குருங்கபட்டி,
சிங்காரப்பேட்டை,
கிருஷ்ணகிரி - 635307
9843870059, [email protected]

நன்றியுடன்,
தும்பி

Address

Madura

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919843870059

Alerts

Be the first to know and let us send you an email when தும்பி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தும்பி:

Share

Category