தும்பி

தும்பி Thumbi is a humble initiative to bring children closer to nature; to being themselves. It's a bilingual Magazine meant for the young at heart.

Thumbi aspires to celebrate the infinite imaginative faculties abundant in children through ways more than one.

தும்பி இதழை அன்பளியுங்கள்"எல்லாக் காலத்திலும் முளைக்கும் தாவரம் போல் எப்போதும் ஊருக்குள்ளே இருந்தான். புதுமைகள் கரைந்து ...
13/12/2025

தும்பி இதழை அன்பளியுங்கள்

"எல்லாக் காலத்திலும் முளைக்கும் தாவரம் போல் எப்போதும் ஊருக்குள்ளே இருந்தான். புதுமைகள் கரைந்து உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருள்போல் எல்லோர் குரலுக்குள்ளும் ஒளிந்திருந்தான். அவனது உடல்நிலையை விசாரிக்கும் வீடுகளின் வாசல்களில் இருப்பிடத்தை வைத்துக்கொண்டு, சோற்றுப்பாத்திரங்களுடனும் பழந்துணிகளுடனும் காலத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.

உடல் உபாதைகளால் வேலைகளெல்லாம் கைநழுவிப் போய்விட்டபிறகு, சிறுபிள்ளைகள் தவறவிடும் கோலிக் குண்டுகளையும் கிட்டிப் புள்ளுகளையும் பந்துகளையும் தேடித் தூக்கிப்போடும் உபவேலைக்காரனாய் கூட பல சமயங்களில் ஆகிவிட்டிருந்தான். அப்போது குழந்தைகளின் சாயைகள் படர்ந்திருந்தது அவன் முகத்தில்..."

எழுத்தாளர் ஜே.பி.சாணக்யாவின் 'ஊருக்குச் செல்லும் வழி' எனும் சிறுகதையில் வருகிற சித்தரிப்பே மேற்கண்ட வரிகள். எல்லாம் இழந்த ஓர் வளர்ந்த மனிதனின் முகத்தில் படிவது குழந்தையின் சாயல் என்கிற உருவகம் முற்றுண்மையான ஒன்று. இன்னும் இழந்துவிடாத குழந்தைமைதான் ஒவ்வொரு மனிதனுக்குள் கருணையை சுரந்தெழச் செய்கிறது. குழந்தைகளோடு புழங்குவதில் அகம்கொள்கிற எடையின்மையை, வாழ்வுக்கு அர்த்தங்களோ வரையறைகளோ இட்டுக்கொள்ளாத அவர்களின் வெள்ளந்தியான பிடிவாதத்தைக் கண்டு வளர்ந்த மனிதன் தன்னுள் ஏங்குகிறான். குழந்தைகளின் குரலில் தொனிக்கும் உற்சாகத்தில் மனிதனின் நிரந்தரத் துன்பங்கள் யாவும் தற்காலிகமாக இருப்பிழக்கின்றன.தும்பி இதழ், ஒவ்வொரு முறையும் இத்தகு கனவினை செயல்விழைவாக ஏந்தியே பொதுவெளியடைகிறது. பிரக்ஞையில் உயிர் உச்சரிக்கும் பிரார்த்தனை என்பது மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் அப்பாற்பட்டது. அது காலமிலாத் தொலைவிலிருந்து கணத்திற்குக்கணம் நம்முள் நிறைகிறது. உலகின் ஒவ்வொரு கதையும் ஏதோவொருவகையில் தொல்குடியின் உயிரிருதயம் உச்சரித்த தனித்தனி இதிகாசம்தான்.

நீங்களறிந்தோ குழந்தைக்கோ நூலகத்திற்கோ தும்பி இதழை அன்பளியுங்கள். மழலையூறிய சின்னஞ்சிறு காளான்கனவுகள் இம்மண்ணில் நிறைவேறும் காலம் நமக்குண்டு.

தும்பி இதழ் பெற: https://thumbigal.com/annual-subscription/

தொடர்புக்கு : 9843870059

உலகின் சிறந்த கல்வி எது?நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து, எவ்வளவோ தேர்வுகளை எழுதி, கொஞ்சம் கொஞ்சமா...
12/12/2025

உலகின் சிறந்த கல்வி எது?

நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து, எவ்வளவோ தேர்வுகளை எழுதி, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் எது மறக்கடிக்கிறதோ அதுவே சிறந்த கல்வி என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.

இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா? வள்ளுவர், ஷேக்ஸ்பியர், மார்க்ஸ், சாக்ரடீஸ், கன்ஃபூஷியஸ், கபீர், தாகூர் என்று நான் விரும்பிப் படிக்கும் அனைவரையும் மறக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் அவர்கள் சொல்லிருப்பவை தவறு என்கிறீர்களா?
இப்படிக் கேட்டால் நம் கையைப் பிடித்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பூந்தொட்டி ஒன்றைக் காட்டுகிறார் ஜேகே. நீங்கள் நிறைய படிப்பவர் போலிருக்கிறது.

இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஓ, இது கூடவா தெரியாது எனக்கு? இந்த ரோஜாவை மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ வகை ரோஜாக்களை எல்லாம் கண்டிருக்கிறேனாக்கும். அயல் நாடுகளில் மட்டுமே பூக்கும் அரிய ரோஜாவைக்கூடப் பார்த்திருக்கிறேன். சட்டென்று ஷேக்ஸ்பியர் நினைவுக்கு வருகிறார்.

அது சரி, நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்கிறார் ஜேகே. இந்த எளிய ரோஜாவைப் பார்த்து ரசிக்கக்கூட உங்கள் கல்வி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த ரோஜா இன்று காலைதான் மலர்ந்திருக்கிறது. முதல் முறையாக இந்த மலர் நம் உலகுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

முதல் முறையாகக் காற்றை எதிர்கொண்டு மெல்ல மெல்ல அசைந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்த ரோஜாவை எப்படி இதற்கு முன்பு கண்டிருக்க முடியும்? எப்படி இதைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்க முடியும்? எப்படி இதை ஷேக்ஸ்பியரோ வேறு ஒருவரோ கண்டு எழுதியிருக்க முடியும்?
ஒரு மலரைப் பார்க்கும்போது இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஏற்கனெவே படித்திருக்கிறோம், ஏற்கெனவே ரசித்து முடித்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்றால் அதை உங்கள் கல்வியின் குறை என்பேன்.

உங்களுக்கான வழிகாட்டுதலை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்ஃபூஷியஸால் எப்படித் துல்லியமாக அளித்திருக்க முடியும்? என் மனிதர்கள் மதத்தின் பெயரால் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்னும் கபீரின் கேள்விதான் அவர் பாடலாக மாறியது. என் மனிதர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும் என்னும் மார்க்சின் சிந்தனைதான் அவர் எழுத்தாக விரிந்தது.

உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.

உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.

மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.

உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, ‘நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்’ என்று புன்னகை செய்யும்.

முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். ‘உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்’ என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.

முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.

ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி. உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.

நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.

-மாய உலகம், மாயா பஜார்

என் மகளுக்கு ஏழு வயது இருக்கும்போது,ஒரு நாள் நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டாள். நான் கல்லூரியில் வேலை செய்கிறேன்,...
11/12/2025

என் மகளுக்கு ஏழு வயது இருக்கும்போது,ஒரு நாள் நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டாள். நான் கல்லூரியில் வேலை செய்கிறேன்,என் வேலை மனிதர்களுக்கு எப்படி வரைய வேண்டும் எனக் கற்றுக்கொடுப்பதே என்று சொன்னேன்.

அவள் நம்பமுடியாதவளாக என்னைப் பார்த்தாள்,"அப்படியானால் அவர்கள் அதை மறந்துவிட்டார்களா என்ன?" என்று வியப்புடன் கேட்டாள்.

- ஹோவர்ட்இகெமோட்டோ
நன்றி. மோகனரங்கன்

அகிரா குரசோவா : உங்களது படங்களின் எளிமையும் யதார்த்தமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, நீங்கள் குழந்தைகளை நடி...
08/12/2025

அகிரா குரசோவா : உங்களது படங்களின் எளிமையும் யதார்த்தமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, நீங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். அது எப்படி உங்களால் முடிகிறது?

குழந்தைகள் உங்கள் படங்களில் மிக இயல்பாக வீட்டில் இருப்பது போல இருக்கிறார்கள். என் படங்களில் அப்படியிருப்பதில்லை. ஒளிந்துகொண்டு யாரோ தம்மை பார்ப்பதைப் போல உணர்கிறார்கள். இந்த இயல்பான நடிப்பை எப்படிச் சாத்தியமாக்குகிறீர்கள்?

அபாஸ் கிராஸ்தமி: அது உங்களைப் போன்ற திரை ஆளுமைகளிடமிருந்து கற்றுக்கொண்டதே. எந்த விசேஷ முறையையும் பயன்படுத்தி நாங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதில்லை. அவர்கள் இயல்பிலே இருக்க அனுமதிக்கிறோம். அதேநேரம் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதைப் புரிய வைக்கிறேன். குழந்தைகள் நடிக்கையில் இயல்பான, யதார்த்தமான விஷயங்கள் நிகழக்கூடும். நடிப்பு புனிதப்படுத்தப்பட வேண்டியதில்லை.

உங்கள் படத்தில் நடிக்கும் குழந்தைகள், நீங்கள் 'குரசோவா' என்பதை உணர்ந்திருப்பது தான் அவர்களின் அச்சத்திற்கு முதல் காரணம். நான் குழந்தைகளோடு படப்பிடிப்பிற்கு முன்பாகப் பழகுகிறேன். ஒன்றாக விளையாடுகிறேன். அவர்கள் என்னைக் கண்டு ஒருபோதும் பயம் கொள்வதில்லை. விமர்சகர்களுக்குத்தான் கலை என்பது புனிதவெளி, குழந்தைகளுக்கு அல்ல.

**

உலகின் மிகவுயர்ந்த கதை இயக்குநர்கள் இருவரின் உளமார்ந்த உரையாடல் இது. எல்லா தேசத்தின் பெருங்கலைஞர்களும் குழந்தைகளின் உளநிலைகளைப்பற்றி உரையாடுகிறார்கள், விவாதிக்கிறார்கள், அதை கலைவடிவமாக மாற்றி மெல்லமெல்ல சமூகத்தில் அதனை தங்களுடைய கருத்துவடிவமாக நிலைநிறுத்துகிறார்கள்.

தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும் தருணங்களைப் போலவே, உடனிருந்து வழிநடத்த வேண்டிய பொறுப்புணர்வும் மூத்த குழந்தைகளாகிய பெரியவர்களுக்கு இருக்கிறது. எளியதொரு கதைசொல்லலோ, புத்தகம் வாசிக்கச் செய்தலோ, ஓவியம் வரையக் கற்றுத்தருதலோ, இசை, நடனம், விளையாட்டு என எதையாவது ஒன்றை நிகழ்த்தி குழந்தைகளை மகிழ்வித்தாக வேண்டும்.

தும்பி சிறார் மாதஇதழ், அவ்வரிசையின் நீட்சியாகவே புத்தகமாகிறது. உலகார்ந்த ஒரு ஓவியக்கதை ஒரு குழந்தையின் மனதுள் மலர்த்தும் ஒரு பேருலகை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. காரணம், கதைகள் இன்றளவும் சில சத்தியங்களைக் காப்பாற்றி வருகிறது; கரம்மாற்றி வருகிறது.

இதழ்பெற:
https://thumbigal.com/annual-subscription/
9843870059

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கிபிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்உன் உள்ளத்தை உருக்...
02/12/2025

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

-தாகூர்

ரொட்டி மனிதனைப் போலவே வலிமையானது.அது வானத்தைப்போல விரிவானது; சூரியனைப்போல பிரகாசமானது.உண்மையில் பசி மனிதனைவிடப் பெரியது;...
01/12/2025

ரொட்டி மனிதனைப் போலவே வலிமையானது.அது வானத்தைப்போல விரிவானது; சூரியனைப்போல பிரகாசமானது.உண்மையில் பசி மனிதனைவிடப் பெரியது;நரகத்தின் ஏழு மண்டலங்களைவிடப் பெரியது.பசி மனிதனைவிடச் சக்தி வாய்ந்தது.ஒரு வயிறே பூமியைப்போன்று பெரியது.பசி நமது உள்ளங்கையைவிடப் பெரியதல்ல என்று தோன்றுகிறது.

ஆனால் அது முழு உலகத்தையும் விழுங்கி ஏப்பம் போட்டுவிடும்.பசி இல்லாவிட்டால் போர்களே இருக்காது.பசி இல்லாவிட்டால் திருட்டும் சண்டையும் இருக்க முடியுமா? பசி இல்லாவிட்டால் பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் போன்ற சிருஷ்டிகளைக்கு என்ன நேரிடும்?

பசி இல்லாவிட்டால் நாடு,அதன் எல்லைகள்,குடிமக்கள்,நாடாளுமன்றம்,அரசியலமைப்புச்சட்டம், போன்றவையெல்லாம் எப்படி தோன்றியிருக்க முடியும்? உலகமே வயிற்றிலிருந்துதான் பிறந்தது...

-சரண்குமார் லிம்பாலே.
தமிழில் : அனார்யா -. Selvan Natesan

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறைய...
26/11/2025

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.
ஆகவே செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!

- ஜெ -

25/11/2025

எல்லா பெரியவர்களுக்கும் காலம் வேகமானது. குழந்தைகளுக்கு அவ்வாறன்று. தவழக்கூடிய குழந்தை காலமும் தன்னுடன் தவழ்ந்துவருவதாக நம்புகிறது. தர்க்கமில்லாத எளிய நம்பிக்கைகளும் சின்னஞ்சிறிய பிரமிப்புகளும் குழந்தைகளின் உலகத்தை உலராமல் வைத்திருக்கின்றன. கண்களை அகலவிரித்து நாம் சொல்லும் ஒரு 'அப்படியா!' அவர்களின் சொற்சிறகுகளை விரித்துப் பறக்கவைக்கிறது.

அருள் தந்தையரே,ஆசான்களே உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த இந்த விடயங்களை ஒரு சின்னப் பிள்ளை போல உங்களிடம் சொல்வதற்கு முதலில...
22/11/2025

அருள் தந்தையரே,ஆசான்களே உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த இந்த விடயங்களை ஒரு சின்னப் பிள்ளை போல உங்களிடம் சொல்வதற்கு முதலில் என்னை மன்னிக்கவும். என்னைவிட நூறு மடங்கு திறமையாக அவற்றை உங்களால் சொல்ல முடியும். இருந்தாலும் சொல்கிறேன்.

குழந்தைகளிடம் நல்ல கதைகளைப் படித்து காட்டுங்கள். ஞானோபதேசம் எல்லாம் தேவையில்லை.தன்னை மேதையாக காட்டிக்கொள்ள கூடாது .உணர்ச்சியோடும், இரக்கத்தோடும் படிக்க வேண்டும், நீங்கள் படித்துக் காட்டுவதை குழந்தைகள் கேட்பார்கள் என்றால் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். படிக்கும் போது ரசித்துப் படிக்க வேண்டும்,அனுபவித்துப் படிக்க வேண்டும்.அங்கங்கே நிறுத்தி சிறு சிறு விளக்கங்கள் தரலாம்,சில சொற்களின் பொருட்கள் விளங்காமல் போய்விடலாம்,அவர்களுக்கு விளங்கியதா இல்லையா என்று கவலைப்பட வேண்டியதே இல்லை,குழந்தைகளின் இதயம் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொள்ளும். அந்த கள்ளங்கபடமற்ற பிள்ளைகளின் மனதில் அந்தக் கதைகள் ஆழமாக பதிந்து விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் மீது அன்பு செலுத்துங்கள்,அவை பாவக்கறை படியாதவை, அவை தேவதைகள் .நம் இதயங்களை மென்மைபடுத்தவும் ,மேன்மைப்படுத்தவும் ,தூய்மைப்படுத்தவும் நமக்கு நல்வழி காட்டவுமே அவை வாழ்ந்து வருகின்றன.

-தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’
தமிழில் கவிஞர் புவியரசு Sakthi Vel

லட்சுமண ஐயர் விடுதியில் நடைப்பெற்ற களிமண் பொம்மைகள் பயில் முகாம் புகைப்படங்கள்...
21/11/2025

லட்சுமண ஐயர் விடுதியில் நடைப்பெற்ற களிமண் பொம்மைகள் பயில் முகாம் புகைப்படங்கள்...

19/11/2025

Address

Madura

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919843870059

Alerts

Be the first to know and let us send you an email when தும்பி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தும்பி:

Share

Category