Niki Taughts

Niki Taughts Its pure about my taughts

இதொன்றுக்காகவே பா.ஜ.க தூக்கி எறியப்பட வேண்டியது. அவர்களுடன் சேரும் எவரானாலும்.
23/07/2025

இதொன்றுக்காகவே பா.ஜ.க தூக்கி எறியப்பட வேண்டியது. அவர்களுடன் சேரும் எவரானாலும்.

பிச்சு பிச்சு தமிழக மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்.... *🖤❤️திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனு...
22/07/2025

பிச்சு பிச்சு தமிழக மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்....

*🖤❤️திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.*

1. 🖤❤️அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்🖤❤️

2. 🖤❤️பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்🖤❤️

3. 🖤❤️மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்🖤❤️

4. 🖤❤️1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்🖤❤️

5. 🖤❤️தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்🖤❤️

6. 🖤❤️குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்🖤❤️

7. 🖤❤️இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்🖤❤️

8. 🖤❤️பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்🖤❤️

9. 🖤❤️கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்🖤❤️

10. 🖤❤️இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்🖤❤️

11.🖤❤️குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்🖤❤️

12.🖤❤️இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்🖤❤️

13.🖤❤️பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்🖤❤️

14.🖤❤️அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்🖤❤️

15.🖤❤️அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்🖤❤️.

16.🖤❤️+2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்🖤❤️

17.🖤❤️மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்🖤❤️

18.🖤❤️வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்🖤❤️

19.🖤❤️முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்🖤❤️

20.🖤❤️அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

21.🖤❤️அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்🖤❤️

22.🖤❤️மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

23.🖤❤️கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்🖤❤️

24.🖤❤️சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்🖤❤️

25.🖤❤️நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்🖤❤️

26.🖤❤️இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்🖤❤️

27.🖤❤️பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்🖤❤️

28.🖤❤️SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்🖤❤️

29.🖤❤️SIPCOT உருவாக்கியது கலைஞர்,🖤❤️ தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30.🖤❤️உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்🖤❤️

31.🖤❤️பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்🖤❤️

32.🖤❤️மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33.🖤❤️பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34.🖤❤️பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

35.🖤❤️கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்🖤❤️

36.🖤❤️மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்🖤❤️

37.🖤❤️மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்🖤❤️

38.🖤❤️அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்🖤❤️

39.🖤❤️பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்🖤❤️

40.🖤❤️மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்🖤❤️

41.🖤❤️வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்🖤❤️

42.🖤❤️தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது🖤❤️

43.🖤❤️இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்🖤❤️

44.🖤❤️சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்🖤❤️

45.🖤❤️அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்🖤❤️

46.🖤❤️ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்🖤❤️

47.🖤❤️ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

48.🖤❤️விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

49.🖤❤️நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்🖤❤️

50.🖤❤️நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்🖤❤️

51.🖤❤️தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்🖤❤️

52.🖤❤️கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்🖤❤️

53.🖤❤️பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்🖤❤️

54.🖤❤️மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்🖤❤️

55.🖤❤️ பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்🖤❤️

56.🖤❤️டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்🖤❤️

57.🖤❤️காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்🖤❤️

58.🖤❤️உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்🖤❤️

59.🖤❤️உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.🖤❤️

60.🖤❤️இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்🖤❤️

61.🖤❤️மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்🖤❤️

62.🖤❤️முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்🖤❤️

63.🖤❤️தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்🖤❤️

64.🖤❤️முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்🖤❤️

65.🖤❤️கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்🖤❤️

66.🖤❤️தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்🖤❤️

67.🖤❤️ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்🖤❤️

68.🖤❤️தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்🖤❤️

69.🖤❤️செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்🖤❤️

70.🖤❤️சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்🖤❤️

71.🖤❤️பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்
கலைஞர்🖤❤️

72.🖤❤️விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011)
வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)🖤❤️

73.🖤❤️நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு,பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று
(இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)🖤❤️

74.🖤❤️ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.
நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே
தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் கொலைபழியை சுமந்தது கலைஞர்.🖤❤️

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின்
மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்🖤❤️

76.🖤❤️சமத்துவபுரம் கண்டது கலைஞர்.🖤❤️

77.🖤❤️ உழவர் சந்தை தந்தது கலைஞர் .🖤❤️

78.🖤❤️டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !🖤❤️

79.🖤❤️தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர் !🖤❤️

80.🖤❤️தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !🖤❤️

81.🖤❤️சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !🖤❤️

82.🖤❤️இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு
மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !🖤❤️

83.🖤❤️ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது
கலைஞர்.🖤❤️

84.🖤❤️திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை
அழித்தவர் ஜெயலலிதா)🖤❤️

85.🖤❤️வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில்
தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியவர் கலைஞர் !🖤❤️

86.🖤❤️சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie
University)🖤❤️

87.🖤❤️திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)🖤❤️

88.🖤❤️கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.🖤❤️

89.🖤❤️திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)🖤❤️
90.🖤❤️ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்
ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.🖤❤️

91.🖤❤️சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)🖤❤️

92.🖤❤️திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)🖤❤️

93.🖤❤️தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.🖤❤️

94.🖤❤️ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனைமற்றும் ஆராய்ச்சி மையம்.🖤❤️

95.🖤❤️கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள்,
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்
போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின...🖤❤️

96.🖤❤️சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.🖤❤️

97.🖤❤️120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர்
ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.🖤❤️

98.🖤❤️கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில்
உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.🖤❤️

99.🖤❤️1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும்
சாலைக்கான துவக்கம். 🖤❤️

100. 🖤❤️2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்செய்தது கலைஞர்..🖤❤️.

101.🖤❤️ 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்செய்தது கலைஞர்..🖤❤️.

102.🖤❤️தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக
மாற்றிட அனுமதி கலைஞர்..🖤❤️.

103.🖤❤️1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி கலைஞர்..🖤❤️.

104.🖤❤️சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்செய்தது கலைஞர்..🖤❤️.

105.🖤❤️ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்செய்தது கலைஞர்..🖤❤️.

106. 🖤❤️சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.🖤❤️

107. 🖤❤️1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்செய்தது கலைஞர்..🖤❤️.

108. 🖤❤️கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச்செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள்,
நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..

109. 🖤❤️நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்செய்தது கலைஞர்..🖤❤️.

110.🖤❤️இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000
கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசு மூலம் தள்ளுபடிசெய்தது கலைஞர்..🖤❤️.

111. 🖤❤️இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.🖤❤️

112. 🖤❤️மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில்
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..🖤❤️

113. *🖤❤️திமுக ஆட்சியில் 32 அணைகள் கட்டப்பட்டன.. 🖤❤️*

114.🖤❤️கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி
செயல்படுத்தியது.. கலைஞர்🖤❤️

115.🖤❤️ அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்🖤❤️

116.🖤❤️ சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி,
சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம்,
நாமக்கல் கவிஞர் மாளிகை,
பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம்,
அண்ணா நூற்றாண்டு நூலகம்....
இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..🖤❤️

117.🖤❤️ செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா....
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...🖤❤️

118. 🖤❤️சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள்
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...🖤❤️

119🖤❤️. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம்,
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை
கொண்டுவந்ததும் திமுகதான்...🖤❤️

120.🖤❤️ பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல்
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..🖤❤️

121.🖤❤️ 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..🖤❤️

122.🖤❤️ தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்...
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக
ஆட்சி..🖤❤️ அதன் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு..
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு முன்னிலை வகிக்கிறது..🖤❤️

123.🖤❤️ தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது
திமுக ஆட்சியில்..🖤❤️

124.🖤❤️ 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..🖤❤️

125.🖤❤️ ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம்
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..🖤❤️

*இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...*

உதாரணத்துக்கு..
🖤❤️1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய்.🖤❤️

🖤❤️1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...🖤❤️

*🖤❤️திமுக ஆட்சியை ஆரிய பார்ப்பனீய சக்திகள் தொடர்ச்சியாக எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா, கலைஞரும் திமுகவும் தமிழ் & தமிழ் நாட்டின் வளர்ச்சிகாக பாடுபடுகிறார்கள் என்று. திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான் திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்வார்கள்.
தமிழகம் மீண்டும் வளர்சிப் பாதையில் செல்லும், தமிழ் நாடு முதன்மையான மாநிலமாக மாறிவிடும். தமிழும் தமிழர்களும் உயர்வு பெறுவார்கள். அதனை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும். என்பது மட்டுமே. அது ஒருபோதும் பலிக்காது !!!





பகிர்வு - AS Chandiran

காலைல காலண்டரில் தேதி தாளை கிழிக்கும்போது ஒரு மருத்துவக் குறிப்பு பார்த்தேன்.'பசுவின் கோமியம், மஞ்சள் தூள், வெல்லம் கலந்...
20/07/2025

காலைல காலண்டரில் தேதி தாளை கிழிக்கும்போது ஒரு மருத்துவக் குறிப்பு பார்த்தேன்.

'பசுவின் கோமியம், மஞ்சள் தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர யானைக்கால் நோய் வராது'

இதை படித்துவிட்டு சிரிப்பதா, வேதனைப் படுவதா எனத் தெரியவில்லை.

யானைக் கால் நோய்(Elephantiasis) எப்படி ஏற்படுகிறது என்கிற அடிப்படை அறிவுக் கூட இல்லாமல் இப்படி எழுதியுள்ளனர்.

யானைக் கால் நோய் எப்படி ஏற்படுகிறது?

1. இந்த நோய் பிலேரியா என்ற புழுக்களால் ஏற்படுகின்றன. இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட பாலூட்டி விலங்குகளை ஒரு கொசு கடித்தால், அதன் இரத்தத்தில் உள்ள புழுக்களின் லார்வா கொசுவின் உடலில் புகுந்து விடும்.

2. இந்த லார்வாக்களை எடுத்துக் கொண்டு அந்த கொசு ஒரு மனிதரை கடித்து அவரின் இரத்தத்தில் லார்வாக்களை கலந்து விடும். இப்போது, கடி வாங்கிய நபரின் இரத்ததில் பல மாதங்கள் அந்த லார்வாக்கள் பெரிதாக வளரும். ஆனால், இவருக்கு யானைக் கால் நோய் ஏற்படுவது மிக மிக அரிது.

3. இப்போது இன்னொரு கொசு இவருடைய உடலை கடித்து லார்வாக்கள் பெரிதான அந்த இரத்தத்தை உறியும். இந்த இரத்தத்துடன் பறந்து சென்று வேறொரு நபரை கடிக்கும்.

4. ஏற்கனவே நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான லார்வாக்கள் இந்த இரண்டாவது நபரின் இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரல் பகுதிக்கு சென்று லிம்பாட்டிக் குழாய்களில் தங்கி விடும்.

5. பல மாதங்களாக, ஆண்டுகளாக அவை அங்கே வளர்ந்து பெரிதாகும். பின்னர், இவை நீர்த்தேக்க சுரப்பிகளை அடைத்து விடும். இதற்கு பின்னர் தான் கால், கை, விதைப்பை உள்ளிட்ட உறுப்புகளில் நீர் வெளியேர முடியாமல் அங்கேயே தேங்கி விடும். இவை தான் வீங்கி பெரிதாகி யானைக் கால் போல் தோற்றம் அளிக்கும்.

யானைக் கால் நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

கொசுக்கடியால் இரண்டாவது நபருக்கு லார்வாக்கள் பெருக்கம் ஏற்பட்டு(அறிகுறிகள் தெரியாது) தீவிரமாக வீக்கம் உருவாகி விட்டால், அதனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. அவை ஏற்படுத்திய சேதத்தையும் சரி செய்ய இயலாது. ஆனால், சரியான சிகிச்சை மூலம் அவை மேலும் பல உறுப்புகளுக்கு பரவாமல் அவரை வாழ வைக்க முடியும்.

யானைக் கால் நோய் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியுமா..?

முடியும். இந்த பதிவை படிக்கும்போது உங்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்திருக்கும். இந்த நோய் 'பிலேரியா புழுக்கள் உறிஞ்சப்பட்ட கொசுக்களின் கடியால்' மட்டுமே ஏற்படுகிறது.

கோமியம், மஞ்சள் தூள், வெல்லம் சாப்பிட்டால் கொசுக்கடியை தடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

சோ, இந்நோய் வராமல் தடுக்க ஒரே வழி கொசுக்கடி இல்லாமல் பாதுகாப்பாக சுற்றுப்புறங்களை பராமரிப்பது மட்டுமே.

மேலும், இந்நோய் பரவ மேற்கூறிய சில படிநிலைகள் இருப்பதால், அவை முழுமையாக நிறைவு பெற்றால் மட்டுமே ஒருவருக்கு இந்நோய் தொற்று ஏற்படும். அதனால் தான் இந்நோய் அரிதாக ஏற்படுகிறது.

இப்ப சொல்லுங்க, இந்த காலண்டரில் மருத்துவக் குறிப்பு எழுதனவன் மேல் கேஸ் போடலாமா? வேனாமா?

- Prakasam P Palani

ரீல் ஹீரோக்கள் வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்களாக நடந்து கொள்ள வேண்டும், இந்த நடிகர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழலுக்க...
20/07/2025

ரீல் ஹீரோக்கள் வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்களாக நடந்து கொள்ள வேண்டும், இந்த நடிகர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழலுக்கு எதிரானவை. ஆனால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொள்கின்றனர் - நீதிபதி S.M. சுப்ரமணியம்.

(தீர்ப்பு, விஜய் மீது 2021 ஜூலை 8ஆம் தேதி Rolls Royce காருக்கான வரி தவிர்ப்பு வழக்கு)

18/07/2025

UDAY திட்டம் தமிழ்நாடு மக்களுக்கு நன்மையை தராது, அது வங்கி, தனியார் மின் உற்பத்தியாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கு மட்...
12/07/2025

UDAY திட்டம் தமிழ்நாடு மக்களுக்கு நன்மையை தராது, அது வங்கி, தனியார் மின் உற்பத்தியாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கு மட்டுமே பயன் தரும்.

திட்டத்தில் அடங்கிய மின் கட்டணத்தை காலாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தும் விதி மக்களுக்கு பெரும் சுமையாக அமையும் - செல்வி ஜெ.ஜெயலலிதா

அப்பேற்பட்ட ஜெயலலிதாவ-யே லெப்ட் ஹேண்டுல டீல் பண்ணி உதய் மின் திட்டத்துல கையயெழுத்து போட்டு கும்பிடு போட்டவரு நம்ம எடப்பாடியார் 🔥🔥🔥

1.76லட்சம் கோடி ஊகத்தின் அடிப்படையிலான நட்டம் என்ற CAG-யின் அறிக்கையை அன்றைய சங்-பரிவார் இயக்கங்களையும், ஊடகத்தையும், அன...
12/07/2025

1.76லட்சம் கோடி ஊகத்தின் அடிப்படையிலான நட்டம் என்ற CAG-யின் அறிக்கையை அன்றைய சங்-பரிவார் இயக்கங்களையும், ஊடகத்தையும், அன்னா ஹசாரே என்ற அஜண்டா வேலையாளையும் வைத்து ஊழல் என்று கட்டமைத்து நாடு முழுவதும் பரப்பி, 2014-ல் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது பாஜக.

அதன் பின்னர் CAG அறிக்கைகள் என்னானது?

பாஜக 2014-ல் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் அதாவது 2014 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 260 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது CAG... அவை அனைத்தும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.. கடந்த 10 வருடங்களில் வந்த 260 அறிக்கைகளிலும் என்னை உலுக்கிப் போட்டது 2023 ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "பாரத்மாலா பரியோஜனையின் முதல் கட்டத்தைப் பற்றி செய்த முதல் குறியீட்டு அறிக்கை" தான் விவாதம் முடிந்து July 26 2023-ல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை பின்னர் கிணற்றில் போட்ட கல் தான்.

சரி நான் ஏன் இவ்வளவு நாள் கழித்து இதை பேசுகிறேன் என்றால்? அனைத்து CAG அறிக்கைகளையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து படிக்க முடியும் ஆனால் இந்த பாரத்மாலா அறிக்கையை பதிவிறக்கம் செய்ய எடுத்துக் கொண்ட காலளவு என்பது சுமார் 1.5 வருடத்திற்கும் மேல் காரணம் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக அந்த அறிக்கையின் பதிவிறக்க பக்கம் "Error" என்றே பதிலளித்து வந்தது கடந்து மார்ச் மாதம் பல போராட்டங்களுக்கு பிறகு அந்த 264 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஒரு வழியாய் பதிவிறக்கம் செய்தாகி விட்டது வெறும் 15 பக்கங்கள் தான் அந்த அறிக்கையின் மிக முக்கிய பக்கங்கள்.

2010-ல் CAGயின் அறிக்கையை வைத்து 2G என்று ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி ஆட்சியை பிடித்த பாஜக-வின் ஆட்சியில் அதே CAG வெளியிட்ட பாரத்மாலா திட்டத்தின் அறிக்கையில் புதைந்திருப்பது சுமார் 3லட்சம் கோடிக்கும் மேல்.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது, மொத்தம் 34,800 கிமீ நெடுஞ்சாலைகள் கட்டுவதற்காக திட்டம். திட்டம் நிறைவடைய வேண்டிய காலமானது செப்டம்பர் 2022.

இத்திட்டத்திற்காய் ஒப்புதல் பெற்ற மொத்த செலவு சுமார் 5.35 லட்சம் கோடி ஆனால் உண்மையில் செய்யப்பட்ட செலவு 8.46லட்சம் கோடிகள். அதாவது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒப்புதல் பெற்ற செலவு ரூபாய் 15.37 கோடி ஆனால் ஒரு கிமீ சாலையிட இவர்கள் செலவழித்திருப்பது 32கோடி . இந்த அறிக்கையில் தூக்கி வாரிப் போடும் ஒரு பக்கம் இருக்கிறது அதாவது திட்டத்தின் 75% மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளது, ஆனால் மொத்த செலவுக்கான 158% பணம் மொத்தமாக அரசு கஜானாவிலிருந்து வெளியேறியுள்ளது என்பது தான்.

இது ஒருபுறம் என்றால் , நிலம் கைப்பற்றப்படாத நிலையிலும் திட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.
நிலம், காட்டுப்பகுதி அனுமதி இல்லாமல் ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.

இத்திட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் முதலில் 24,800 கிமீ என்றே இருந்தது பின்னர் 64,942 கிமீ என மாற்றப்பட்டது. ஏற்கனவே பகுதி பணி முடிந்த சாலைகளும் இதில் சேர்க்கப்ட்டன , கொடுமையிலும் கொடுமை இத்திட்டத்திற்கு முன்பே அனுமதி பெற்ற 828கிமீ தொலைவு கொண்ட டெல்லி-வடோதரா எக்ஸ்பிரஸ் சாலை இதில் சேர்க்கப்பட்டதே.

இதில் BOT முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது அதாவது தனியார் முறையை அகற்றி 100% அரசு திட்டமாக இதை செயல்படுத்தியது (அப்ப தான வசதியா இருக்கும்)

இந்த திட்டத்திற்கு 2லட்சம் கோடி கடன் வாங்குவதென்ற அனுமதியே இருந்தது ஆனால் கூடுதலாக 1லட்சம் கோடி அனுமதியில்லாமல் பெறப்பட்டிருந்தது, போலியான ஆவணங்களை வைத்தே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. திட்ட அறிக்கைகள் (DPR) சரியாக இல்லாமல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் வேலை நடுவில் மாற்றம், செலவுகளும் போலியாய் உயர்த்தப்பட்டது.

இதை எல்லாவற்றையும் மன்னித்துவிடலாம் ஆனால் PPP திட்டங்களுக்காக வைத்திருந்த 3600 கோடி ரூபாய் பணம் ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டது அது யார்? எப்போது? என்ற ஒரு தகவலும் காட்டப்படவில்லை.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திட்டத்திற்கான பார்வை குழு கூட்டங்களோ , தொழில்நுட்ப சுயாதீன ஆய்வுகளோ நடத்தப்படாமல் செய்யப்பட்ட சாலைத்திட்ட பணிகள் இந்த பாராத்மாலா தான்.

2010-ல் 2G அறிக்கையில் இருந்த 1.76லட்சம் கோடி யூகத்தின் அடிப்டையிலான நட்டம் மட்டும் அதை கருவியாக்கி அண்ணன் ஆ.ராசா பந்தாடப்பட்டார், தனி ஆளாய் போராடி அதே பாஜக ஆட்சியில் நிரபராதி என விடுதலையும் பெற்றார் ஆனால்... இந்த பாரத்மாலயா அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 3லட்சம் கோடி என்பது யூகத்தின் அடிப்படையிலான நட்டமல்ல கணக்குகள் காட்டப்படாத பண வர்த்தனைகள் மூலம் யாரோ பலரின் பாக்கெட்டுகள் நிரம்பி வழிந்திருக்கின்றன.

சங்கிகள் வாய் திறக்க மாட்டார்கள், அதன் அடிவருடிகள் அதிமுக-வும் வாய் திறக்காது, அன்னா ஹசாரே இப்பொழுது தன் ஓய்வு நாட்களில் உள்ளார்... நாமும் அமைதி காப்போம்.

பாரத் மாதா கி ஜே ❤

ஏன்டா டே இதயெல்லாம் சும்மாவே சப்போர்ட் செய்ய மாட்டோம்.,. இதுல இத்தன ஆயிரம் கொடுத்து இது வயிறு நிரைய வைக்க சப்போர்ட் செய்...
11/07/2025

ஏன்டா டே இதயெல்லாம் சும்மாவே சப்போர்ட் செய்ய மாட்டோம்.,. இதுல இத்தன ஆயிரம் கொடுத்து இது வயிறு நிரைய வைக்க சப்போர்ட் செய்யனுமாக்கும்.,.

குறஞ்சதே 2140தாடா.,!!??

ஆனா நல்ல தொழில்யா.,.

அதுல ஒருத்தன் கமெண்ட் போட்டு இருக்கான்

வீடியோ கால் க்கே 500 தானடா ன்னு 😬😬

🎯 அடி இடி மாதிரி … பழனிசாமிக்கு  திராவிடம் என்றால் என்னனு தெரியாது அண்ணா யார் னு தெரியாது இத்தனைக்கும் பழனிசாமி அதிமுகவி...
09/07/2025

🎯
அடி இடி மாதிரி …
பழனிசாமிக்கு திராவிடம் என்றால் என்னனு தெரியாது
அண்ணா யார் னு தெரியாது
இத்தனைக்கும் பழனிசாமி அதிமுகவின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கல்லூரிகள் இந்து சம அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது.அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட...
09/07/2025

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கல்லூரிகள் இந்து சம அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது.

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் - ஆரம்ப ஆண்டு - 1963

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் - 1970(ஆரம்ப ஆண்டு)

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம் -1964(ஆரம்ப ஆண்டு)

ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம் -1963(ஆரம்ப ஆண்டு)

பூம்புகார் கல்லூரி, மேலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் -1964(ஆரம்ப ஆண்டு)

இவற்றில் 4 கல்லூரிகள் காமராஜர் காலத்திலும் மற்றும் 1 கல்லூரி கலைஞர் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டவை.

பின்னர் பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரி - 1980 இல் MGR ஆரம்பித்து வைத்தார்.

60 வருடங்களாக பல்வேறு மக்களுக்கு படிக்கும் வாய்ப்பினை கொடுத்த கல்லூரிகள் இவை.

பின்னர் 2021இல் அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரி திறக்கப்பட்டது, முழுக்க முழுக்க கபாலீஸ்வரர் கோவில் நிதி மற்றும் அறநிலையத்துறை நிதி கீழ் செயல்படுகிறது.

அதற்குள்ளாகவே இப்படி ஒரு கருத்தை, அதுவும் காமராஜர் காலத்திலேயே இதெல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் உளறுவது மிக மோசமான மனநிலை.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஆந்திரா திருப்பதியில் கூட திருப்பதி தேவஸ்தானம் மூலம் கல்லூரிகள் நடத்தப்படுகிறது.

09/07/2025

முழு சங்கியாக மாறிய தருணம்....

பச்சோந்தி பழனிசாமி

இரண்டு வருசத்துக்கு முன்னே உயர்சாதி கொடூரன் தன் மீது சிறுநீர் கழித்ததை துடைத்துக் கொண்டு, 'அவரு பெரிய பண்டிதரு.. அவரை வி...
08/07/2025

இரண்டு வருசத்துக்கு முன்னே உயர்சாதி கொடூரன் தன் மீது சிறுநீர் கழித்ததை துடைத்துக் கொண்டு, 'அவரு பெரிய பண்டிதரு.. அவரை விட்டுடுங்க' ன்னு மத்திய பிரதேச அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்ததை அரசே பெரிய அளவில் விளம்பரப்படுத்தி சாதிய மேலாதிக்கத்தை அரசின் கொள்கையாக உறுதி படுத்திக் கொண்டது குறித்து யாரும் ஒண்ணும் பெருசா அலட்டிக் கொள்ளவில்லை.

இப்ப கொடூர காவல்துறை ஒரு ஏதிலியை அடித்தே கொன்று போட்டதற்கு அரசே மன்னிப்பு கேட்கிறது. ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புக்கு வழக்கை மாற்றுகிறது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது (அது போதவில்லை என்பது வேறு @விசயம்). பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கிறது. அதில் வந்து நொட்டை நொள்ளை என்று கூடி நிற்கும் எல்லோரும் கும்மியெடுக்க முடிகிறது.

Yet another reason to support Dravidian Model!

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niki Taughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share