Niki Taughts

Niki Taughts Its pure about my taughts

இந்தத் திருத்தம் தொடங்கும்போது த.வெ.க.காரங்களுக்குப் படிவமே கொடுக்கமாட்டீன்றாங்க, எல்லாமே தி.மு.க வேலைன்னு இவனுகதான் உரு...
23/12/2025

இந்தத் திருத்தம் தொடங்கும்போது த.வெ.க.காரங்களுக்குப் படிவமே கொடுக்கமாட்டீன்றாங்க, எல்லாமே தி.மு.க வேலைன்னு இவனுகதான் உருண்டுட்டிருந்தானுங்க. இப்ப நீக்கின வாக்கெல்லாம் தி.மு.க வாக்குன்றானுங்க. ஏதாச்சும் ஒருபக்கம் நில்லுங்கடே!

ஐ.ஜி-க்கே இந்த நிலைமை..அமர் சிங் சாஹால். பஞ்சாப் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஐஜியாக ஓய்வு பெற்றவர்.நள்ளிரவில் பாதுகாவலரின் ...
23/12/2025

ஐ.ஜி-க்கே இந்த நிலைமை..

அமர் சிங் சாஹால். பஞ்சாப் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஐஜியாக ஓய்வு பெற்றவர்.

நள்ளிரவில் பாதுகாவலரின் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் இன்னும் கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறார்.

தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆன்லைன் முதலீடு என பத்து கோடி ரூபாய் வரை இழந்திருப்பதுதான்.

இதில் ஒரு கோடி ரூபாய் சொந்த பணம். மீதி ஒன்பது கோடி ரlவெளி ஆட்களிடம் கடனாக வாங்கியது.

மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போல் நடித்து முதலீட்டு அறிவுரைகளை வாரி வாரி வழங்கி எப்படி தன்னை வலைக்குள் இழுத்தார்கள் என்பதை பற்றி அமர்சிங் எழுதி வைத்திருக்கிறார்..

ஏகப்பட்ட வங்கி அக்கவுண்டுகளில் பணம் செலுத்திய விவரங்களையும் கடிதத்தில் சொல்லி வைத்திருக்கிறார்.

ஐஜி லெவலில் இருந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு உண்மையான நிதி மேலாண்மை நிபுணர் ஒருவர் கூடவா ஃபிரண்டாக இருந்திருக்க மாட்டார்?

S.I.R-க்கு பின்  நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளம் மூலம் அறிந்து ...
20/12/2025

S.I.R-க்கு பின் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்

| | | | | |

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்** *பள...
20/12/2025

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்*

* *பள்ளி ஆய்வக உதவியாளர் இறந்த வழக்கில் திருப்பம்*

* *உடந்தையாக இருந்த 4 பேர் உள்பட 6 பேர் கைது*

* *தனிப்படை போலீசருக்கு ஐ.ஜி. அஸ்ரா கார்க் பாராட்டு*

*✍️. சென்னை: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை கழுத்தில் கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.*

▪️. திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.

▪️. அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.

▪️. இதையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா, நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி ஜெயஸ்ரீ, இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இவ் வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்தனர். கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து, பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி,பிரசாந்த் உதவியுள்ளனர்.

*▪️. பாம்பு கடித்து தங்களது தந்தை இறந்து விட்டதாகவும் அவருக்கு முறையாக வர வேண்டிய ரூ.3 கோடி காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருபவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூ.3 கோடிக்கு 4 பாலிசிகள் எடுக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வடக்கு மண்டல ஐஜியிடம் இறப்பில் சந்தேகம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்கள் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் வெளிவந்தன.

▪️. மோகன்ராஜ் அவர் தம்பி ஹரிஹரன் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்து வந்ததால் உல்லாச வாழ்க்கை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு யாரும் கண்டுபிடிக்காத வகையில் நூதன முறையில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த மோகன் ராஜ் அவருடன் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலாஜி என்பவரின் உதவியை நாடி உள்ளார். பாலாஜி மற்றும் அவரது உறவினர் நவீன் குமார் ஆகியோர் இருளர் இனப் பெண்ணை திருமணம் செய்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை அனுப்பியுள்ளார்.

▪️. அவர் அவரது மனைவியின் தந்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் என்பவருக்கு பண ஆசை காட்டி மணவூர் காட்டுப்பகுதிக்கு சென்று கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து 4 பேரும் காரில் பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு எடுத்து வந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணேசன் கழுத்தில் 3 முறை பாம்பை கடிக்க வைத்துள்ளனர். இதில் விஷம் தலைக்கேறி கணேசன் இறந்ததை உறுதி செய்த பின்னர் பாம்பை அதே இடத்தில் தினகரன் அடித்து போட்டுள்ளார். பிறகு 4 பேரும் காரில் சென்று விட்டனர்.

▪️. சிறிது நேரம் கடந்து தங்கள் தந்தை பாம்பு கடித்து விட்டதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து ஹரிஹரன் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கணேசனை அங்குள்ள அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பாம்பை வைத்து தந்தையை கடிக்க வைத்து மகன்களே கொன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*நாகப்பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த கணேசன்*

▪️. தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நாகப்பாம்பை கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சதி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்து பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

*தனிப்படைக்கு ஐஜி, எஸ்.பி பாராட்டு*

▪️. இந்த வழக்கில் டிஎஸ்பி ஜெய தலைமையிலான தனிப்படை போலீசார் 10 நாட்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்டதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்.பி விவேகானந்தா சுக்லா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கணேசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய அவரது இரண்டு மகன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், பைக் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

*தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்போது மோகன்ராஜுடன் பழக்கம்*

▪️. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் திருவாலங்காடு அருகே மணவூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசீலன் என்பவரின் மகன் பாலாஜி (28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவரது நண்பர் மணவூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகன் பிரசாந்த் (35) என்பவரின் மனைவியின் தந்தை ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (43) (பாம்பு பிடிப்பவர்) உதவியுடன் மணவூர் காட்டுப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடித்துக் கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர்.

*பாம்பை கடிக்க வைக்க கூலி ரூ.1.50 லட்சம்*

▪️. கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை காட்டில் பிடித்து கொண்டு வந்து கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்து கொலை செய்ய ரூ.1.50 லட்சம் கூலியை மோகன்ராஜ் கொடுத்துள்ளார். இதற்காக மோகன்ராஜ் செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் நவீன்குமார் என்பவருக்கு ரூ.90 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் கையில் அறுபதாயிரம் கொடுத்துள்ளார். இப்பணத்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் மற்றும் அவருடன் செயல்பட்ட 3 பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினும் - விஜய் சந்திரசேகரும்.விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவ...
19/12/2025

உதயநிதி ஸ்டாலினும் - விஜய் சந்திரசேகரும்.

விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை என்றாலும் கிடைக்கும் வாக்கு யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்றளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அவர் அல்லது அவரின் ரசிக தற்குறிகளை அவ்ருக்கு எதிராக நிறுத்துவது உதயநிதியை. ஸ்டாலின் அளவுக்கு எல்லாம் விஜய் வொர்த் இல்லை என்பது விஜய் கார் ஓட்டுநருக்கே தெரியும்.

இருவருக்குமே அப்பாவின் அடையாளம் பெரிய உதவி என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதற்காக இருவருக்கும் திறமை இல்லை என்றாகிவிடாது. இருவருமே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எழுந்து நின்றவர்கள். உதயநிதி எப்படி அரசியல்வாதிகள் சூழ வளர்ந்தாரோ விஜய் அப்படி சினிமா நடிகர்கள் சூழ வளர்ந்தார். அந்த வகையில் அவர்களின் தேர்வு ஒன்றும் வியக்க வைத்த ஒன்று இல்லை.

விஜய் சினிமாவில் தொட்ட உச்சம் என்பதில் ( கடைசி எட்டு ஆண்டுகள் நீங்கலாக ) அவரின் மெனக்கெடல் அதிகம். அவரின் எல்லா படங்களும் அப்பா எஸ் ஏ சி கேட்டு ஒகே சொன்ன பிறகு கேட்ட கதைகள் தான். சில சமயம் அப்பாவின் நம்பிக்கைகாக மட்டுமே சில படங்களில் நடித்திருக்கிறார். விஜயை இந்தளவு உயர்த்தியதில் அவரின் அப்பாவின் பங்கு பெரியது. விஜயின் கடைசி பதினைந்து படங்களுக்கு அவரின் தலையீடு இல்லாமல் இருந்திருக்கலாம். மத்த படி விஜயின் பாதையை உருவாக்கியவர் சந்திரசேகர்.

இந்த பக்கம் நேரதிர். உதயநிதிக்கு என ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. காரணம் அவரே கட்சிக்குள் பல்டி அடித்துதான் வந்தார். அப்போதைய பல பெருந்தலைவர்கள் கட்சிக்குள் பெரிய பொறுப்பு என்பதையோ, அமைச்சரவையில் பெரிய பொறுப்பு என்பதையே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் காத்திருக்க வேண்டிய நிலையில் தான். அன்புமணி, துரைவைகோ பொல தட்டில் வைத்து எல்லாம் எந்த பதவியும் அவருக்கு வரவில்லை. அடுத்து உதயநிதியை வளர்த்தேன் என சொல்ல அவரால் முடியாது. அது முழுக்க முழுக்க அம்மாவை சார்ந்தது. உதயநிதியின் நண்பர்கள் எல்லாரும் கட்சியை சார்ந்தவர்களாகவும் சினிமாவை சார்ந்தவர்களாகவும் அமைந்து போனது அவரின் இயல்பான சூழல்.

விஜயும் உதயநிதியும் சினிமா நட்பு கிடையாது. சென்னையில் உதயநிதி தொடங்கிய ஸ்னோ புவுலிங் கேமில் தொடங்கியது அது. விஜய் ரசிகரான உதயநிதியை படம் தயாரிக்க அழைத்தது வந்தது விஜய் தான். தயாரித்தால் கில்லி பட அமைப்பில் தான் தயாரிப்பேன் என நுழைந்தார். முதல் படம் பப்படம் ஆனது வேறு கதை. பிறகு அவர் படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தன் பயணத்தை தொடங்கினார். இன்றளவும் கண்ணியமான விநியோகஸ்தர் என்ற பெயர் அவருக்கு உண்டு. பண விவகாரங்கள் எல்லாமே மிக தெளிவாக நடந்த நிகழ்வும் உண்டு. ஆனால் விஜயால் தன் பயணத்தை தொடங்கியவர் ஒரு கட்டத்தில் விஜய் படங்கள் வாங்கி வெளியிடுவதை தவிர்க்க தொடங்கினார். தமிழ்நாடு முழுக்க நேரிடையாக தொடர்பு உள்ள ஒரு நிறுவனம் தன்னை தவிர்ப்பதை விஜயால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உதயநிதி தவிர மற்ற நிறுவனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க நேரிடையாக என்ற அழுத்தம் கிடையாது. உதயநிதிக்கு முன்பாக அந்த வேலையை தொடங்கியவர் பாஸ்கரன் என்பவர். வசீகரா படத்தை அப்படித்தான் வெளியிட்டார்கள். பாஸ்கரன் யார் என்பதை தினகரன் குழுவிடம் கேட்டால் சொல்லுவார்கள்.

சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது. அதனை அப்படியே காப்பாற்றி கொண்டார். அவரின் முதல் இளைஞர் மாநாடு பற்றி ஒரு நியாயமான ஊடகவியலாளரிடம் கேட்டால் சொல்லுவார் அவரின் திட்டமிடலை. உதயநிதிக்கு ரசிகர்கள் கிடையாது என்பது ஒரு வரம். அவருக்கு நண்பர்கள் அதிகம் என்பது இன்னொரு வரம். விஜய்க்கு ரசிகர்களுக்கு மட்டுமே என்பது சாபம். நண்பர்கள் கிடையாது என்பது இன்னொரு சாபம். இதனாலே அரசியலில் தெளிவில் ஒரு படி முன்னே நிற்கிறார் உதயநிதி. இயல்பாகவே பணக்கார வீட்டு செல்ல பிள்ளை, அரசியல் அடக்குமுறை எல்லாம் பார்த்து செய்து வளர்ந்த பிள்ளை என்பதால் கொஞ்சம் பேசவும் செய்கிறார். இந்த பக்கம் அப்படி இல்லை. வந்த ஒரு பிரச்சினைக்கு கைகட்டி நின்ற வரலாறே இருக்கிறது. அதுவும் எடப்பாடிக்கு எல்லாம் பயந்த கதை என்பது வரலாற்றில் காமெடி சோகம். கூடுதலாக பிரச்சினை எல்லாம் வேண்டாம் நா வரேன் பேசுரேன் மத்த எல்லாம் நீங்க பார்த்துகோங்க என்ற மனப்பாங்கே விஜயிடம் இருக்கிறது. திருப்பரங்குன்றம், திட்டங்கள் பெயர் மாற்றம் என எதற்குமே வாய்திறக்காத விஜய் மறைமுகமாக தான் யாரின் ஏவல் என்பதை சொல்லிவிடுகிறார். ஆனால் ஸநாதானம் குறித்த தன் பேச்சை அழுத்தமாகவே பதிய வைத்தார் உதயநிதி.

உதயநிதி இதுதான் நம் வாழ்வு என்ற புரிதலோடு வந்து அதற்காக நேரம் ஒதுக்கி கற்றுகொண்டே வருகிறார். இவரின் மேடைப்பேச்சுகள் திராவிட மரபில் ஆஹோ ஒஹோ இல்லை என்றாலும் சொதப்பவில்லை. தனக்கு முன்னால் தன்னைவிட பெரிய பேச்சாளர்கள் என்ற அறிவு அவருக்கு தெளிவாகவே இருக்கிறது. கிடைக்கிர கேப்பில் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற மெனக்கெடலும் இருக்கிறது. தன் அரசியல் பொறுப்பை ஓரளவு செய்தே நகர்ந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

விஜய் யாரோ விரட்டிவிட்டது போல அரசியல் வந்து அதற்காக நேரம் ஒதுக்காமல் கற்றுக்கொள்ளவும் முயலாமல் முடங்கியே இருக்கிறார். சினிமா வசனம் போலவே கத்தி கத்தி பேசிவிட்டு புகைப்படம் எடுக்க அந்த ஆக்‌ஷனை அப்படியே நிறுத்தி வைக்கிறார். சினிமாவில் இயக்குநர் கட் சொன்ன பிறகு அந்த மொமெண்டில் நிற்பார்கள். அது போலவே மேடையில் நிற்கிறார். தன் முன்னால் இருக்கும் கூட்டம் பேச்சை ரசிக்காது தன்னைதான் ரசிக்கும் என்ற அறிவு அவருக்கு தெளிவாக இருக்கிறது. அதனையே முதலீடாக மாற்றவும் செய்கிறார். அந்த கூட்டம் ரசிக்கவும் செய்கிறது.

ஸ்டாலின் - விஜய் என களம் உருவாக்க விஜய் நினைக்கிறார். ஆனால் நிஜம் என்னவோ திமுக மாவட்ட செயலர் - விஜய் அளவுக்கு கூட இன்னும் வரவில்லை.

விஜய் அரசியல் கோடாரி. உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு.

இன்னும் காலம் இருக்கிறது விஜய்க்கு. விடுபட்டு வெளியே வந்து சுயமாய் அரசியலை கற்றுக்கொள்வாரா என பார்க்கலாம்.

பா. சரவணகாந்த்.

என்னடா உங்க வாயால அவார்டுகளையா அள்ளி அள்ளித் தர்றீங்க ?திமுக வேற, தமிழ்நாடு வேற இல்லைன்னும் சொல்லிட்டீங்க.ஒட்டுமொத்த மாந...
17/12/2025

என்னடா உங்க வாயால அவார்டுகளையா அள்ளி அள்ளித் தர்றீங்க ?

திமுக வேற, தமிழ்நாடு வேற இல்லைன்னும் சொல்லிட்டீங்க.

ஒட்டுமொத்த மாநிலமும் சனாதனத்துக்கு எதிரா நிக்குதுன்னா, நிக்காம இருக்கிற ஒண்ணு இரண்டு சனியன்களையும் பீகாருக்கோ, டெல்லிக்கோ இழுத்துட்டுப் போயிடுங்க. தமிழ்நாடு சுத்தமாகிவிடும் !

திமுக வந்தபின், பார்ப்பனர்களும் சராசரி மனிதர்கள்தான், அவர்கள் ஒன்றும் தலை வழியாகப் பிறக்கவில்லை. உலகில் அனைவரும் பிறக்கும் அதேவழியாகப் பிறந்தவர்கள்தான்னு புரிய வச்சோம். மக்கள் தெளிஞ்சிருக்கலாம் !

இந்தக் கேனக்கூவாவது 1967 ல், ஆர் எஸ் எஸ்ல போய்ச் சேர்ந்தான். இன்னொரு பாப்பான் பேன்ட் போடறதையே விட்டுட்டு அண்டராயரோடச் சுத்திக்கிட்டுக் கெடந்தேன்னான் 🤣

சூத்திராஸ்னு கேவலப்பட்டம் கொடுத்து நசுக்கி வச்சவா எல்லாம் நிமிர்ந்துட்டா..படிச்சிட்டா..எங்களுக்கு equal ஆ வேலைக்கு போய்ட...
17/12/2025

சூத்திராஸ்னு கேவலப்பட்டம் கொடுத்து நசுக்கி வச்சவா எல்லாம் நிமிர்ந்துட்டா..
படிச்சிட்டா..எங்களுக்கு equal ஆ வேலைக்கு போய்ட்டா..முழுக்க அவா ஆட்சிலயே இருக்குறா..

தலையை வெட்ட முடியல,ஈயத்தை காய்ச்சி ஊத்த முடியல..கட்டைவிரலை கேட்க முடியல.

சனாதனம் போச்சி..எங்கவா சந்தோஷமெல்லாம் போச்சி..கருவறை வரை அவா வந்துட்டே இருக்கா...நீதிபதியாகனும்ன்றா...

அபச்சாரம்...அபச்சாரம்...😄😄

வருடா வருடம்‌ 13-Dec கோவாக்கு ஜோடியா போறாங்க. ஏதாவது அனிவர்சரியா ... சே... சே...
15/12/2025

வருடா வருடம்‌ 13-Dec கோவாக்கு ஜோடியா போறாங்க. ஏதாவது அனிவர்சரியா ... சே... சே...

பிகு: இங்கு முதல் மூன்று வர்ணத்தவர்களுக்கு மட்டுமே சர்வீஸ் செய்யப்படும். பிராமணர்களுக்கு என தனி ஏசி செக்சன் உண்டு! சூத்த...
15/12/2025

பிகு: இங்கு முதல் மூன்று வர்ணத்தவர்களுக்கு மட்டுமே சர்வீஸ் செய்யப்படும். பிராமணர்களுக்கு என தனி ஏசி செக்சன் உண்டு! சூத்திரர்கள் நுழைந்தால், கடை ஒரு நாள் மூடப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும்.

அருமையான 'சாத்வீக' உணவை ருசிக்க உங்கள் சாதிப் பெயருடன் ஆன்லைன் புக்கிங் செய்யவும்.

சாமி சார்ட்டடு பிளைட்ல பத்திரமா பனையூர் போயிடும்... பக்தர்கள் தான் மிதிபட்டு சாகுறாங்க... அவங்கள காப்பாத்துங்கடா....
15/12/2025

சாமி சார்ட்டடு பிளைட்ல பத்திரமா பனையூர் போயிடும்...

பக்தர்கள் தான் மிதிபட்டு சாகுறாங்க... அவங்கள காப்பாத்துங்கடா....

👌🏾👌🏾👌🏾
15/12/2025

👌🏾👌🏾👌🏾

10 வருஷமா கூப்புல இருந்தது தமிழ்நாடு தான் 🤧🤧🤧
14/12/2025

10 வருஷமா கூப்புல இருந்தது தமிழ்நாடு தான் 🤧🤧🤧

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niki Taughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share