Niki Taughts

Niki Taughts Its pure about my taughts

கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று கொண்டாடவும், மிகக் கீழான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு எனும் குரல்கள் கிளம்பியுள்ளன. இந...
26/09/2025

கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று கொண்டாடவும், மிகக் கீழான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு எனும் குரல்கள் கிளம்பியுள்ளன. இந்த ஃபிப்ரவரியில் இட்ட பதிவு கீழே இருக்கிறது. அது இதற்கான விடையாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இதிலும் வந்து 200 ரூபாய், கொத்தடிமை, ஜால்ரா என்றெல்லாம் உளறுவார்கள் என்று தெரிந்தும் இப்பதிவை இடுகிறேன்.

'ASER அறிக்கையின்படி, தமிழகத்தில் 87 விழுக்காட்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் படிக்க இயலவில்லை. 68% ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், 34% எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோராலும் தமிழ் படிக்க இயலவில்லை. பாரீர் இருமொழிக்கொள்கையின் அவலம்' - அண்ணாமலை

எங்க வீட்டுல 33 விழுக்காட்டுப் பேரால தமிழ் படிக்க முடியாது. ஏன்னா இருக்கிறது மூனு பேரு. ஒருத்தருக்கு நாலு வயசு இன்னும் முடியல.
இதைக் கேக்கும்போது சும்மா நக்கல் பண்ற மாதிரி இருக்கும். ஆனா ஏசர் அறிக்கை அப்டித்தான் இருக்கு. தமிழ்நாட்டில் 2021 கணக்குப் படி 45,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. 82 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

ஏசர் கணக்கெடுப்பு, 3-16 அகவையுடைய 29,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று பள்ளிகளுக்கு இரண்டு மாணவர்கள் எனும் கணக்கில். தோராயமாக ஆயிரம் மாணவர்களில் 4 பேரிடம். ஏனப்படி என்றால் அது எடுக்கப்படும் முறை அப்படிப்பட்டது. பள்ளிக்குச் செல்லாமல் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதில் 20 வீடுகளைத் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்கப்படும். அப்படி 29,000 பேரிடம் கேட்டபோது கிடைக்கும் தரவுகளைக் கொண்டு 82 லட்சம் பேருக்கு என்ன அறிவிருக்கும் என்பது முடிவு செய்யப்படும்.
இப்போது அதே அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அண்ணாமலை சொல்லாத மூன்று தகவல்களைச் சொல்கிறேன்.

அ. நான்கு வயது முடிந்த குழந்தைகளில் தமிழ்நாட்டில் 95% பள்ளியில் சேர்கின்றனர். இது தேசிய சராசரியை விட கூடுதல்.

ஆ. 88 விழுக்காட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆந்திராவுக்கும் மிசோரமுக்கும் அடுத்து நாம் இருக்கிறோம்

இ. 2018 முதல் 2022 வரை தமிழகத்தில் குறைந்ததாக இருந்த படிக்கும் திறம், 2022 முதல் 2024 வரை கூடியிருக்கிறது.

நம்முடைய கல்விமுறை சிறந்த மாணவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை ஊக்குவி என்பதில்லை. பாதிக்குப் பாதி படிக்க இயலாவிட்டாலும் அடுத்தடுத்து நகர்த்தி ஊக்குவித்துப் பரந்துபட்ட சமத்துவத்தன்மையைக் கொண்டுசேர் என்பதுதான். அதை அடையத்தான் பள்ளியில் உணவு, கட்டணமில்லாப் போக்குவரத்து. தரம் என்பது இரண்டாம் கட்டம். முதற்கட்டம் அனைவருக்கும் அடிப்படை கிடைக்கச் செய்வது. அடிப்படை கிடைத்துவிட்டவர்கள் எப்படி அது கிடைத்தது என்பதை மறந்துவிட்டுத் தரமில்லை என்று கூவத்தான் செய்வார்கள். ஆனால் தரத்தை மட்டுமே பார்த்திருந்தால், அடிப்படைக்கே வழியில்லாது போயிருக்கும் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!--------------------------------------நேற்று தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய, ‘கல்வியில் சி...
26/09/2025

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!
--------------------------------------

நேற்று தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் நிகழ்ச்சியைப் பார்க்க மிகவும் நெகிழ்வாக இருந்தது.

அதில் பிரச்சார நெடி இருந்ததாகச் சிலர் சொன்னார்கள். ஆம் இருந்தது. அது இன்றைய தேவையும் கூட.

1980 களுக்குப் பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் பெருகிவிட, தமிழ்நாட்டின் உயர் மத்திய வர்க்கம், அரசுப் பள்ளிகளை விட்டு, தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்து விட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக் கல்வி என்பது தமிழ்நாட்டின் கற்ற உயர்குடிகளின் கவனத்தில் இருந்து விலகிப் போனது. அரசின் கவனமும் குறைந்து போனது.

அடிப்படை வசதிகளைத் தாண்டிய மக்கள் அனைவருமே இன்று தனியார் பள்ளிகளில் பயில்வதுதான் கௌரவம் என்னும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.

இன்று அரசுப் பள்ளியை நாடி வருபவர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏழைகள்தாம். இவர்களில், பெரும்பாலானோர் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களுமே. இவர்கள்தாம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாணவர்கள்.

அரசுப் பள்ளிகளுக்குக் கல்வி பயில வரும் மாணவர்களின் வீடுகளில், கல்வி பயில்வதற்கான சூழலும், கல்வி தரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வழிகாட்டுதலும் இருப்பதில்லை. ஆனால், ஆசிரியர்கள், இன்று சமூகப் பொருளாதார அடுக்கில் உயர்தளத்தில் உள்ளவர்கள். எனவே, மாணவர்களின் சமூகச் சிக்கல்களை உள்ளார்ந்து அணுகி, அவர்களுக்கு முழுமையான வழிகாட்டியாக மாறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்னோக்கித் தள்ளியது நீட் போன்ற போட்டித் தேர்வுகள். இதை ஓரளவு சரி செய்தது, முந்தய அதிமுக அரசு, அளித்த மருத்துவக் கல்லூரிகளுக்கான 7.5% ஒதுக்கீடு. இதனால், அரசுப் பள்ளிகளினால் ஆதாயம் உண்டு என நம்பிய ஒரு சிறுபான்மை, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள். இது அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் முதல் படி.

கடந்த நான்காண்டுகளில், இன்றைய ஆளுங்கட்சியான திமுக, பல முக்கிய முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது.

1. நான் முதல்வன் திட்டம்: இது அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டம். இதன் வழியே மாணவர்களின் விருப்பம் மற்றும் திறன்கள் அடிப்படையில் அவர்களின் உயர் கல்விக்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் செய்து வருகிறது.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு, பயிற்சிக்காலம் வரை, நிதி உதவி அளிக்கப்படுகிறது. இது ஏழை மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் திட்டம்.

2. அரசுப் பள்ளிகளில், திறன் மிகுந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முன்மாதிரிப் பள்ளிகளில் (Model School), இந்தியாவின் பெருமை மிகு உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளை எழுதப் பயிற்சி தரப்படுகிறது. இது முன்பே இருந்த திட்டம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில், இது முடுக்கி விடப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 700 மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிலையங்களில் நுழைந்திருக்கிறார்கள்

3. 2022 ஆம் ஆண்டு முதல், நாட்டின் பெருமைமிகு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்.ஐ.டி, எய்ம்ஸ், தேசிய சட்டக் கல்லூரிகள், நிஃப்ட் (NIFT), மற்றும் மாநில அரசு மருத்துவ, பொறியியல் போன்ற கல்வி நிலையங்களில் பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் ஒரு திட்டம் இயங்கி வருகிறது.

4. அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒரு திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

5. பள்ளி முடித்து, கல்லூரி செல்லாமல் நின்றுவிடும் மாணவ மாணவியர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து, கல்லூரியில் சேர்த்துவிடும் பணியை இன்று மாவட்ட ஆட்சியர்கள் முதல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வரை நேரடியாகக் களத்தில் இறங்கி செய்து வருகிறார்கள்.

6. டாட்டா குழுமத்துடன் இணைந்து, 3000 கோடி செலவில், மாநிலமெங்கும் உள்ள 70 ஐடிஐ (தொழிற்பயிற்சிக் கூடங்கள்), தொழில்துறை 4.0 என்னும் தரத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.

8. வெளிநாட்டுக் கல்லூரிகளில் அனுமதி பெறும் தலித்
மாணவர்களுக்கான முழுக் கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் கிட்டத்தட்ட 120 தலித் மாணவர்கள் இதன் வழியே பயனடைந்து, வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.

இவையனைத்தும் இணைந்து, இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகள், சாதி, வர்க்க பேதமின்றி மிகவும் சுலபமாகக் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.
(இதில் 7.5% இட ஒதுக்கீடு, முதலாம் பட்டதாரிக்கு இலவசக் கல்வி, இலவச பாடநூல்கள், இலவச சீருடை போன்றவை முன்பே இருந்த திட்டங்கள்.)

இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் என்ன?

1. தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது

2. புதுமைப் பெண் திட்டத்தினால், அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது.

3. காலைச் சிற்றுண்டித் திட்டத்தினால், மாணவர் வருகை மேம்பட்டிருக்கிறது. இதன் மறைமுக விளைவுகள் நீண்ட கால நோக்கில்தான் தெரிய வரும்.

4. கிட்டத் தட்ட 700 மாணவர்கள் ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்டக் கல்லூரிகள், ஐஐஐடி, நிஃப்ட் போன்ற தேசிய அளவிலான கல்லூரிகளில், நுழைவுத் தேர்வுகளை அகில இந்திய அளவில் எழுதி உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

5. வருடம் 100 பேர் அளவில், தலித் மாணவர்கள் உலகளாவிய பல்கலைக்கழகங்களில், முழு கல்விச் செலவையும் இலவசமாகப் பெற்று படிக்கச் சென்றிருக்கிறார்கள்

இந்த திட்ட முன்னெடுப்புகளைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு செப்டெம்பர் 25 ஆம் தேதி ஒரு விழாவை முன்னெடுத்திருந்தது. விழாவில், கல்விப் பயனாளிகளுடன், விளையாட்டுத் துறைப் பயனாளிகளும் இணைந்து மேடையில் தோன்றி தாங்கள் பெற்ற பயனை விளக்கிச் சொன்னார்கள்.

மிகவும் ஏழமை நிலையில் இருந்தது, வைராக்கியத்துடன் முன்னேறிய அவர்கள் கதையும், அந்த முன்னேற்றத்தில் அரசின் பங்கையும் அவர்கள் விளக்கிச் சொன்னவிதம் பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. அரங்கிலிருந்த பெரும்பாலானவர்களின் கண்களில் நீர்.

பதவியேற்ற முதல் நாளில் இருந்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்கான தொடர் முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகள், பள்ளிக் கல்வித் துறையின் மீது, வெளிச்சத்தைப் பாய்ச்சி வருகிறது. விளையாட்டுத் துறையில், வெற்றியாளர்களுக்குத் தேவைப்படும் நிதி மற்றும் பயிற்சி உதவிகளை முனைப்போடு செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
பள்ளிக் கல்வியுடன் இணைந்து செயல்படும் அமைச்சர் கீதா ஜீவனின் செயல்பாடுகளும் பாராட்டுக்குரியவை.

நேற்றைய நிகழ்வில் பிரச்சாரம் இருந்ததா எனில் இருந்தது. ஆனால், அப்பிரச்சாரம் கடந்த 4 ஆண்டுகளில் கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்புகளின் அடிப்படையிலான பிரச்சாரம். இதை பத்திரிக்கையாளர் என்.இராம் மிகச்சரியாகக் கவனப்படுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. சராசரிக் கல்வி வெளிப்பாடுகள் ஒரு முக்கிய பலவீனம். ASER போன்ற கல்வியின் தரம் பற்றிய அறிக்கைகள், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியின் தரம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், ASER என்னும் நிறுவனத்தின் புள்ளிவிவர சேகரிப்பு முறைகள் தொடர்பாக விழியன் போன்ற கல்வியாளர்கள் விமரிசனங்களை வைத்துள்ளனர். விமரிசனங்களோடு நின்று விடாமல், ஒரு நம்பகமான ஆய்வைச் செய்து, அதைப் பொது வெளியில் முன்வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில், நாம் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அது நம்மால் முடியக் கூடிய ஒன்றுதான்.

பள்ளிக் கல்வி வெளிப்பாடுகள் மேம்படும் சாத்தியங்கள் உள்ளன என்னும் நம்பிக்கையை தனது முன்னெடுப்புகள் வழியே, திமுக அரசு உருவாக்கியுள்ளது. இதை முன்னின்று நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம் வணக்கத்துக்குரியவர் ஆகிறார்.

26/09/2025

சுஜாதா எனும் ரங்கராஜன் விதைத்த விஷ விதையை தமிழரசன் களை எடுத்து இருக்கிறார்

இது சூர்யா நிகழ்ச்சிய பார்த்து copy அடிச்சிருக்காங்கனு ஒரு பக்கம் நக்கலடிக்கிறானுங்க.ஆனால் திமுக எப்ப அரியணை ஏறுச்சோ அன்...
26/09/2025

இது சூர்யா நிகழ்ச்சிய பார்த்து copy அடிச்சிருக்காங்கனு ஒரு பக்கம் நக்கலடிக்கிறானுங்க.

ஆனால் திமுக எப்ப அரியணை ஏறுச்சோ அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் அவர்கள் னு இன்னைக்கு வரைக்கும் அதை தொடர்ந்து செஞ்சிட்டு வராங்க..

கடன் வாங்கி தான் படிக்க வைக்கனுமா இந்த வார்த்தைய தாண்டி வராதா மிடில் கிளாஸ் மக்கள் யாரும் இருக்க முடியாது..

எனக்கு காலேஜ்ல முதல் செமஸ்டர் பீஸ் 7000 ரூபாய். ஆனால் கலைஞர் கொண்டு வந்த முதல் பட்டதாரி ஸ்காலர்ஷிப் னு கட்டுன காசுல 4000 திரும்பி வந்தது.. அதை திரும்பி வீட்டுல கொண்டு வந்து கொடுக்கும் போதே அவ்வளவு சந்தோசம்.. ஆனால் மத்த செமஸ்டருக்கு எல்லாம் காலேஜ் பீஸ் வெறும் 700 ரூபாய் செமஸ்டருக்கு.. என்னோட மொத்த 3 வருச படிப்பு செலவே அப்படி இப்படினு பார்த்தா வெறும் 19 ஆயிரத்துக்குள்ள முடிஞ்சது. அது மட்டும் தான் முதலீடு.

இன்னைக்கு ஒரு பெரிய ஐரோப்பிய வங்கியின் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தின் AVP. யா பணிபுரிகிறேன்.

மேல ஏறி வந்துட்டே தான் இருப்போம். நேத்து மேடையில நின்ற மாணவர்களை போல அங்கே நிக்காத கோடிக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருத்தன்.

இந்த ஒண்ணு போதாது திமுக மேல காலம் முழுக்க நன்றி‌ விசுவாசமா இருக்க..

This girl and Mom ❤️❤️❤️

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம், இன்னும் பலர் செய்ததைத்தான் ஸ்டாலின் அரசும் செய்திருக்கிறது.  ஆனால் ஓர் அரசே இறங்கி அ...
26/09/2025

இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம், இன்னும் பலர் செய்ததைத்தான் ஸ்டாலின் அரசும் செய்திருக்கிறது. ஆனால் ஓர் அரசே இறங்கி அதைத் துல்லியமாகச் செய்தால் சமூகத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதைக் காட்டிய விழாதான் நேற்று மாலையில் நிகழ்ந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா !

அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது. எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு. விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.

என் மூளையில் உதித்த திட்டமிது என்று ஸ்டாலின் அரசு எங்கும் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.

இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டும். பலனடைஞ்ச பசங்க அவங்க இஷ்டத்துக்கு என்ன பேச ஆசைப்படுறாங்களோ பேச விடுங்க, நான் நிகழ்ச்சி முழுமைக்கும் இருப்பேன் என விழாவுக்கான முன்னேற்பாடுகளின்போது முதலமைச்சர் பெருமுனைப்போடு இருந்திருக்கிறார் !

அதனால்தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரும் முன்பே விழா தொடங்கிவிட்டது. அரசுப்பள்ளி மாணவர்களில் பலர் புகழ்பெற்ற டிவி ஷோ பாடகர்களாக உள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைபவர்கள், அந்தச் செயலாக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் முதலில் வந்தனர்.

அந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் எனப் பார்த்தபோது சிலிர்த்தது. எங்களுடைய ராயபுரம் மண்டலத்திலிருந்து தினமும் 1000 குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அத்தனை துல்லியம். முதலமைச்சர்தான் அதற்கு தலைமை. அவருக்கு கீழ் கல்வி அமைச்சர், செயலர், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் என கண்காணிப்பு குழு. உணவின் தரம், ருசிக்கான சோதனையை பெரிய அதிகாரி செய்து அதை மேலிடங்களுக்குச் சொல்ல வேண்டும். பின்னரே அது விநியோகிக்கப் படுகிறது !

அதற்கான வேலை முன்னதிகாலை 4 மணிக்கு துவங்கிவிடுகிறது. ஆறு - ஆறரைக்குள் அத்தனையும் தயாராகி ஹாட்பேக்குகளில் வைக்கப்படுகிறது. மேலே சொன்ன சோதனை முறைகள் முடிந்ததும் ஏழு மணிக்கு வாகனங்களில் ஏற்றப்படுகிறது. எட்டு மணிக்குள் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்குள் அதை இறக்கி வைத்துவிடுகின்றன. இடையில் யாரும் அந்த உணவைப் பார்க்கவோ, தொடவோ, மாற்றவோ, கெடுக்கவோ முடியாது. அந்தளவு சீல் வைக்கப்பட்டு, முழுமையான கண்காணிப்புடன் அது செயல்படுத்தப்படுகிறது !

சரியாக 8:15 முதல் மாணவர்களின் வருகை ஆரம்பமாகிறது. அவர்களுக்கு சுடச்சுட காலை உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன் அதைப் பரிமாறுபவரும், பொறுப்பாசிரியரும் சுவை பார்க்க வேண்டும். அதைக் காட்சிகளாகப் பதிந்து வாட்ஸ்அப் குழுக்களில் ஏற்ற வேண்டும். அதைத்தான் முதலமைச்சர் வரை கண்காணிக்கிறார்கள். இப்படி இந்தத் திட்டம் ஒரு முழுமையானச் செயல்பாட்டுனான உலகத்தரமான ஒரு திட்டம்.

எனக்கென்னமோ ஸ்டாலின் அடுத்தமுறை இந்த விழாவிற்கு இலங்கை, பர்மா, ஆஃப்ரிக்க நாட்டு அதிபர்களை விருந்தினர்களாக அழைப்பார் என நினைக்கிறேன். தான் மட்டும் செஞ்சுட்டு தனக்கான பெயரை மட்டும் தக்க வச்சிப்போம்ன்னு மனுஷனுக்கு குறுகிய எண்ணம் 1% கூட இல்லை. பஞ்சாப், தெலங்கனா என அதைப் பரவச் செய்தவர் இதை உலகமயமாக்கிவிடுவார்.

37000 ப்ளஸ் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் இந்தக் காலை உணவு, இருபது இலட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்.

பாரதி பாஸ்கரின் தந்தை பள்ளியின் தலைமை ஆசிரியர். தினமும் காலையில் பள்ளிக்கு கிளம்பும்போது நாலு டிபன்கேரியர்களை உடன் எடுத்துச் செல்வாராம்.

ஏம்பா உங்களுக்கு மட்டும் நாலு கேரியர் சாப்பாடா ?

பிரேயர்ல எப்படியும் நாலு பசங்களாவது மயங்கி விழுவாங்க. வெறும் வயித்துல வருவாங்க். அதுக்கு பல காரணங்கள் அவன் வீட்ல இருக்கும். அதுக்காகத்தாம்மா என்று சொல்வாராம்.

பெரியவங்க பசில இருந்தா நம்ம உடம்புல இருக்கிற கொழுப்பு கரைஞ்சி கொஞ்சம் அதைத் தாக்குப்பிடிக்கச் செய்யும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி இல்லை. முறையான காலை உணவு இல்லாவிட்டால் மயக்கம், கல்வித்திறன் குறைபாடு, உடல் வலிமையின்மை, ரத்தசோகைன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். அது அப்படியே இப்ப தடுக்கப்பட்டிருக்கு. இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துதான் சொல்கிறோம். இந்தத் திட்டத்தால் மூளையால் மட்டுமல்ல உடலாலும் வலுவான மாணவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகுமென டாக்டர் அருண்குமார் விளக்கினார் !

பசிதான் திருட்டைத் தூண்டும். அந்தப் பசியைப் போக்கிவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சமூகமும் ஆரோக்கியமாக இயங்கும். நான் பசியால்தான் வாழைப்பழம் திருடினேன். அதைப் படத்திலும் காட்டினேன் என்றார் மாரி செல்வராஜ்.

தமிழரசன்(லப்பர் பந்து) பேசியதுதான் சிறப்பு.

இளையராஜா படிக்கல, ரஹ்மான் படிக்கலைம்பானுக, அவர்களெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை என்றுமே சான்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளைத் தாண்டி கல்வியால் சாதித்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். அதனாலத்தான் படிங்க படிங்க படிங்க என்று முதலமைச்சர் சொல்கிறார். நான் இன்னொரு முறை அதைச் சேர்த்து சொல்றேன், படிங்க, படிங்க, படிங்க, படிங்க !!!

(அடுத்தடுத்து எழுதுவேன்)

இந்த விழாவை நான் பார்க்க அழைப்பிதழ் தந்து அழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏

#காலைஉணவு
#கல்வியில்சிறந்ததமிழ்நாடு

படிக்குற புள்ளைகளுக்கு 1000 ரூபா கொடுக்குறாங்க அத வச்சு மொபைலுக்கு ரீசார்ஜ்தான் பண்ணுவாங்கபுதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப...
25/09/2025

படிக்குற புள்ளைகளுக்கு 1000 ரூபா கொடுக்குறாங்க அத வச்சு மொபைலுக்கு ரீசார்ஜ்தான் பண்ணுவாங்க

புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, கேலியாக வந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று.

ரீசார்ஜ் பண்ணட்டும், அந்தக் காச வச்சு கேண்டின்ல சமோசா சாப்டட்டும். All are part of their routine.

அந்தக் காசுலதான் ஒரு புள்ள அவங்க அம்மாவுக்கு hearing aid வாங்கிக் கொடுத்துருக்கு. அந்த தைரியம்தான் அடுத்தகட்டத்துக்கு கனவு காண வச்சுருக்கு.

உங்களுக்கு அது வெறும் ரீசார்ஜ் காசு எங்களுக்கு அது கனவு.

நீ படி, என்ன செஞ்சாவது நான் படிக்க வைக்கிறேன்னு குடும்பங்கள்ள ஒலிச்ச குரலை இன்னிக்கு ஒரு மாநிலம் எதிரொலிக்குது.

எவ்வளவு கேலி, கிண்டல் செய்ய வேண்டுமோ செய்யுங்கள். எங்க புள்ளைங்க மேல ஏறி வருது.

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய த...
25/09/2025

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.

1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண்டுமுருகன்

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.😄

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு.

" சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....
இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

சிரித்தது போதும்.. 😄😄😄

படித்து சிரித்தது... 😄😄😄

🐿️~ கதறு.. கதறு.. வருமான வரித்துறையே நல்லா கதறு.💥💥💥
23/09/2025

🐿️~ கதறு.. கதறு.. வருமான வரித்துறையே நல்லா கதறு.💥💥💥

ஒண்ண விடாம எல்லாப் பதிவுலயும் போய் ரூ.200 க்கு கூட்டிட்டு வர்ற கூட்டமில்லடா எங்களுது, தானா சேர்ந்தக் கூட்டம்ன்னு  எழுதின...
22/09/2025

ஒண்ண விடாம எல்லாப் பதிவுலயும் போய் ரூ.200 க்கு கூட்டிட்டு வர்ற கூட்டமில்லடா எங்களுது, தானா சேர்ந்தக் கூட்டம்ன்னு எழுதினானுங்க. அவ்வளவுதான் எழுதத் தெரியும், அதுக்கப்புறம் ங்கொம்மா, இன்பா, ஓம்புன்னுதான் வரும். கடைசில பார்த்தா தலைக்கு 300 ன்னு சொல்லி ஆன்ட்டி, அக்கா, பாட்டிகள்ன்னு அள்ளிட்டு வந்தது யார்ன்னு பாத்தீகன்னா சாட்சாத் அணில் குஞ்சுகள் 🐿🐿🐿

சரி, பேசினாப்படி அந்த 300 ஐயாவது சரியா கொடுக்கோணுமில்ல, அதையும் தரல. தர்ணா பண்ணி வாங்க வேண்டியதாயிருக்கு.

எம்மா அவன்தா ஆறு கோடிக்கு காரை இம்போர்ட் பண்ணுவான், ஆனா அதுக்கு ஒரு இலட்சம் ரோட் டேக்ஸ் கட்டுடான்னா கோர்ட் கேஸ்சுன்னு போவானேகாண்டி கடைசி வரைலயும் டேக்ஸ் கட்ட மாட்டான். தன்னோட பட ஆடியோ ரிலீஸ்க்கு வர்ற தன்னோட ரசிகர்கள்கிட்டயே 2000 - 3000 டிக்கெட் போட்டு விக்கிற அல்பக்கூ.

அவன நம்பியா இப்படி கூட்டத்துல சிக்கி சின்னாபின்னமாவறது ?

#தற்குறிவெட்டிக்கழகம்

21/09/2025

நேற்று மயிலாப்பூர் மந்தைவெளியில் நேரடியாக விழுந்த H1 பி ஸ்பெஷல் குண்டில் ஒரு புது அப்டேட், டிரம்ப் அறிவித்த அந்த கூடுதல் கட்டணம் புதிதாக அப்ளை செய்பவர்களுக்கு என்று இப்போது சொல்லி இருக்கிறார்கள்.. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரெனிவல் செய்யப் போவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் இப்போது அமெரிக்காவில் தேசபக்தியோடு உட்கார்ந்து இருப்பவர்களுக்கு ஓரிரண்டு ஆண்டு அவகாசம் கிடைத்திருக்கிறது அவ்வளவுதான், ட்ரம்பின் அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் இதையும் உறுதியாக நம்ப முடியாது. எப்படி இருந்தாலும் இந்த அறிவிப்பு நேரடியாக இந்தியாவின் மீதான இன்னும் துல்லியமாக பார்ப்பன கம்யூனிட்டி மீதான அமெரிக்காவின் நேரடி நெருக்கடி என்பதை சொல்ல முடியும். சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை டிரேட் அட்வைசர் பீட்டர் இந்தியாவில் பிராமணர்கள் மட்டும் லாபம் அடைகிறார்கள் என்று நேரடியாக குறிப்பிட்டு இருந்தார், தொடர்ந்து இப்போது இந்த விசா அறிவிப்பு. ஏனென்றால் இந்த விசா வைத்திருப்பவர்கள் 71% இந்தியர்கள், எண்ணிக்கையில் 3.2 லட்சம் இந்தியர்கள் இந்த விசாவில் இருக்கிறார்கள் அவர்களுடைய டிபண்ட்டென்ட்கள் எச் 4 விசா வைத்திருப்பவர்கள் அவர்களுடைய குடும்பங்கள் குழந்தைகள் என்று எண்ணிக்கை 12 லட்சம் என்று தோராயமாக ஒரு கணக்கு சொல்கிறது. அவர்களின் பெரும்பாலானவர்கள் ஐடி துறைகளில் உள்ளவர்கள் இந்திய பார்ப்பன உயர் சாதி வர்க்கங்களை சேர்ந்தவர்கள், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யாவிடம் மலிவு விலையில் இந்தியா எண்ணெய் வாங்குகிறது, ஆனால் இதன் லாபம் எதுவும் இந்திய மக்களுக்கு கிடையாது இரண்டே இரண்டு குஜராத்தி முதலாளிகளுக்கு மட்டும் தான், அப்படி வாங்க கூடாது மீறி வாங்கினால் வரியை உயர்த்துவேன் என்று அமெரிக்கா வரியை கடுமையாக உயர்த்தி விட்டது, ஆனால் இதன் பாதிப்புகள் ரசிய எண்ணெயில் லாபம் அடைந்த அந்த முதலாளிகளுக்கா என்றால் இல்லை அங்கேயும் பாதிக்கப்படுவது திருப்பூர் போன்ற தொழில் நகரங்களின் சிறு முதலாளிகள்தான், இப்போது வரை அவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று நேற்று வரைக்கும் திருப்பூர் முதலாளிகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், டிரம்பின் அடுத்த தாக்குதலாக இந்த விசா அறிவிப்பு வந்திருக்கிறது, இதிலும் நேரடியாக பாதிக்கப்பட போவது குஜராத்தி முதலாளிகள் அல்ல பார்ப்பன உயர்சாதி மக்கள்தான். 20 நாட்களாக இந்திய சிறு உற்பத்தியாளர்கள் கதறிக் கொண்டிருக்கும்போதும் மோடியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த கூட்டம் இப்போது என்ன செய்யப் போகிறது? ஆனால் ஒன்று மோடியும் பாஜகவும் அவர்களின் ஒரிஜினல் குஜராத்தி முதலாளிகளுக்காக மொத்த இந்திய மக்களையும் தொழிலாளர்களையும் உற்பத்தியாளர்களையும் கைவிட்டதை போல இப்போது அமெரிக்க என் ஆர் ஐ களையும் கைவிட்டு விடுவார்கள் என்பது வரைக்கும் இப்போது புரூவ் ஆகியிருக்கிறது..l

மன்னரிடம் காசு வாங்கி பெரியார் சாகனும்னு கேரளாவில் யாகம் நடத்துனானுங்க.. கடைசியில் மன்னர் செத்துப் போனார்..இப்போ ட்ரம்ப்...
21/09/2025

மன்னரிடம் காசு வாங்கி பெரியார் சாகனும்னு கேரளாவில் யாகம் நடத்துனானுங்க.. கடைசியில் மன்னர் செத்துப் போனார்..

இப்போ ட்ரம்ப்புக்கு ஆதரவா யாகம் நடத்துனானுங்க.. அவரு நாள்தோறும் ரூம் போட்டு யோசித்து இந்தியாவை டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு..

இவனுவ வளர்க்கிற யாகம் எல்லாம் இவனுங்களையே போட்டு வெளுக்கிறது..

அந்த பக்கம் சீமான் இவரை வசைபாடுவார்..! அந்த பக்கம் விஜய் இவரை வசைபாடுவார்..!அந்த பக்கம் அன்புமணி இவரை வசைபாடுவார்..! அந்...
21/09/2025

அந்த பக்கம் சீமான் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் விஜய் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் அன்புமணி இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் ராமதாஸ் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் கிருஷ்ணசாமி இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் ஆம்ஸ்ட்ராங் குரூப் இவரை வசைபாடும்..!

அந்த பக்கம் ரஞ்சித் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் ஜான் பாண்டியன் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் பூவை மூர்த்தி இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் அண்ணாமலை இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் நயினார் நாகேந்திரன் இவரை வசைபாடுவார்..!

அந்த பக்கம் ஒட்டுமொத்த மீடியாவும் இவரை வசைபாடும்..!

அந்த பக்கம் சில சாதி தலைவர்கள் எல்லாம் வசைபாடிக் கொண்டிருப்பார்கள்..!

அந்த பக்கம் ஜி.கே.வாசன் இவரை வசைபாடிக் கொண்டிருப்பார்கள்..!

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல தான் இருக்கின்றது இவ்வளவு பேருக்கும் பதில் சொல்லாமல் இருந்து எடுத்துக் கொண்ட செயலை செய்து முடித்து அதில் வெற்றி என்னும் விதையை தூவும் வரை இவருடைய பணி என்பது எப்போதும் உயிர்த்துடிப்போடு இயங்குகின்றது..!

நிதானத்தை மட்டுமே கொண்டு எல்லா திசைகளிலிருந்து வரும் வசைமொழிகளை கண்டு களிக்கும் முதல்வரே ..! களம் நமக்கானது தான்..!

எதிரிகளை ஈட்டி கொண்டு வெல்ல முடியாது.! ஆனால், முக்கால் நூற்றாண்டு வரலாற்றை செதுக்கிய கலைஞரின் ஈட்டிய வரிகளை கொண்டு தான் எறிய வேண்டும்..!

2026 களத்தினை வென்றெடுப்போம்..! 💥💥💥

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niki Taughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share