Cine Maanga

Cine Maanga Tamil Cinema...
(1)

நன்றி கெட்ட உலகம்
09/05/2025

நன்றி கெட்ட உலகம்

‛கணவருக்கு 3வது திருமணம்’... கணவரின் அந்த ஆசைக்காக 3வது திருமணம் நடத்திய 2 மனைவிகள்! காரணத்தை கேட்டா அசந்து போவீங்க மக்...
08/05/2025

‛கணவருக்கு 3வது திருமணம்’... கணவரின் அந்த ஆசைக்காக 3வது திருமணம் நடத்திய 2 மனைவிகள்! காரணத்தை கேட்டா அசந்து போவீங்க மக்களே...

திருமணம்.. இன்றும் பல பெண்களுக்கும், கனவாகவே இருந்து வருகிறது. அதுபோல ஆண்களுக்கும் கூட குறிப்பாக 90s கிட்ஸ்களின் ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் இருப்பதாக பல மீம்ஸ்கள் உலா வருவதை நம்மால் பார்க்க முடியும்.

இப்படி முதல் திருமணமே பலருக்கும் குதிரை கொம்பாக உள்ள நிலையில் தான் ஆந்திராவில் ஒருவருக்கு அவரது 2 மனைவிகள் முன்நின்று இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்துவைத்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், முற்றிலும் இது உண்மை. இந்த சம்பவம் எங்கு நடந்தது? கணவருக்கு அவரது 2 மனைவிகள் ஏன் முன்நின்று இளம்பெண்ணை பார்த்து 3வது திருமணம் செய்து வைத்தனர்? என்பது பற்றிய தகவல் பின்வருமாறு:

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு அருகே உள்ள கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா.

இவருக்கு கடந்த 2000ல் திருமணம் ஆனது. அப்போது அவர் சாகேனி பர்வதம்மா என்பவரை கரம் பிடித்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர்.

ஆனாலும் கூட இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதையடுது்து பாண்டண்ணா 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி மனைவி சாகேனி பர்வதம்மாவிடம் தெரிவித்தார். அவரும் கணவரின் 2வது திருமண ஆசையை நிறைவேற்ற ஓகே சொன்னார்.

இதைத்தொடர்ந்து முதல் மனைவி சாகேனி பர்வதம்மாவின் சம்மதத்துடன் பாண்டண்ணா, சாகேனி அப்பளம்மா என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.

பாண்டண்ணா - சாகேனி அப்பளம்மா தம்பதிக்கு கடந்த 2007 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது பண்டண்ணா - சகேனி அப்பளம்ம்மா தம்பதியின் மகனுக்கு 17 வயது ஆகிறது.

தற்போது பாண்டண்ணா, தனது முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, 2வது மனைவி சாகேனி அப்பளம்மா மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் பாண்டண்ணாவுக்கு இன்னொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, சகோனி அப்பளம்மாவால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை.

இதையடுத்து பாண்டண்ணா 2வது குழந்தை பெற்றெடுக்க 3வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா மற்றும் 2வது மனைவி சாகேனி அப்பளம்மா ஆகியோரிடம் தெரிவித்தார்.

பொதுவாக இப்படி எந்த கணவராவது கூறினால் அவருடைய மனைவி கொதித்தெழுந்துவிடுவார். ஆனால் பாண்டண்ணாவின் மனைவிகள் 2 பேரும் அப்படி எதுவும் செய்யவில்லை.

மாறாக பாண்டண்ணாவின் விருப்பத்தை கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு கணவரின் 3வது திருமண ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர்.

அதுமட்டுமின்றி தங்களின் கணவர் பாண்டண்ணாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவர்கள் தொடங்கினர். இதையடுத்து உள்ளூரிலேயே வசிக்கும் இளம்பெண்ணை, பாண்டண்ணாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் பேசி முடித்தனர்.

அதன்பிறகு பாண்டண்ணா மற்றும் அந்த இளம்பெண்ணின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க மனைவிகள் சாகேனி பர்வதம்மா மற்றும் சாகேனி அப்பளம்மா ஆகியோர் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கணவரின் 3வது திருமணத்துக்கு பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கினர். அதுமட்டுமின்றி பேனரடித்து திருமண விழாவுக்கு வருவோரை வரவேற்றனர்.

இதையடுத்து இரு மனைவிகளின் முன்னிலையில் பாண்டண்ணா, இளம்பெண்ணை 3வது திருமணம் செய்தார்.

2வது குழந்தை பெற்றெடுக்க கணவர் விரும்பியதை தொடர்ந்து அவருக்கு 2 மனைவிகள் சேர்ந்து இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மகளுடன் திருமணம்... மாமியாருடன் ஓடிய மருமகன்...உத்தர பிரதேசம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவரத...
17/04/2025

மகளுடன் திருமணம்... மாமியாருடன் ஓடிய மருமகன்...

உத்தர பிரதேசம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து வரன் ஒன்றை முடிவு செய்து, 16-ந்தேதி மணமக்களுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர்.

பின் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில், திருமண வேலைக்காக மாப்பிள்ளை, பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதில் மாமியாருடன் நெருக்கமாகியுள்ளார் மாப்பிள்ளை...

தொடர்ந்து அவருக்கு ஒரு செல்போன் வாங்கிகொடுத்து இருவரும் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் மாமியார்-மருமகன் உறவு தனிமையில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கிளம்பிவிட்டனர்.

மேலும், மாமியார் மகளுக்காக கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பத்திரிகை வழங்குவதற்காக தாய் வெளியே சென்றிருப்பதாக நினைத்த உறவினர்கள், தேடி பார்த்ததில் நகையும் பணமும் காணாமல் போயுள்ளது.

கூடவே, மணமகனும் மாயமானது தெரியவந்துள்ளது. இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#தமிழ்

தொழிலதிபரை 2-ம் திருமணம் செய்த விஜய் டிவி ப்ரியங்காவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி VJ பிரியங்கா வசி என்பவரை திருமணம் ச...
17/04/2025

தொழிலதிபரை 2-ம் திருமணம் செய்த விஜய் டிவி ப்ரியங்கா

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி VJ பிரியங்கா வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது இவருக்கு 2-ம் திருமணம் ஆகும். வசி என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்று சொல்லப்படுகிறது.

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிகராகி வழக்கு எண்18/9, மாநகரம் என சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இண...
15/04/2025

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிகராகி வழக்கு எண்18/9, மாநகரம் என சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். Depression அதிகமாகி தவறான தொடர்புகளுக்கு அடிமையானதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

சீரியலில் மாமியார் - மருமகன்.. நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவி- யார் அந்த ஜோடி?சீரியலில் மாமியார் - மருமகனாக நடித்த ஜோடி ஒன...
07/04/2025

சீரியலில் மாமியார் - மருமகன்.. நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவி- யார் அந்த ஜோடி?

சீரியலில் மாமியார் - மருமகனாக நடித்த ஜோடி ஒன்று நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரியல் ஒரு காலத்தில் நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் மிகக் குறைவு. ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது.சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மோகமும், வருமானமும் சீரியல் நடிகர்களுக்கு உண்டு.

இந்தியாவில் சீரியல்களில் நடித்து தற்போது சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ஏராளம். பிரபலமான சிரியல்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளன. அதில் ஒன்றுதான் சக்கரவாக்கம்.

தெலுங்கு நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சில தொடர்களில் சக்கரவாக்கமும் ஒன்று. 2003 முதல் 2008 வரை ஜெமினி டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளைப் படைத்த இந்த தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் ப்ரீத்தி அமீன், இந்திரனில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் தனது கணவர் இந்திரனிலுக்கு மாமியாராக மேக்னா ராமி நடித்திருப்பார்.

ஆனால் அந்த சமயத்தில் சீரியலில் மாமியார் - மருமகனாக நடித்தவர்கள், மறு ஒளிபரப்பாகும் நேரத்தில், நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக மாறி ஆச்சரியப்படுத்தினர். 40 வயதை எட்டிய இந்த தம்பதியினருக்குக் குழந்தையில்லை. அண்மையில் 20வது திருமண நாளை இந்த தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.

மாமியார்-மருமகன் திருமணம் கடந்த உறவு. வீடியோ படம் எடுத்த பொதுஜனம்செங்கல்பட்டை  சேர்ந்த இந்திரா. இவருக்கு வயது 40. இவரது ...
27/03/2025

மாமியார்-மருமகன் திருமணம் கடந்த உறவு. வீடியோ படம் எடுத்த பொதுஜனம்

செங்கல்பட்டை சேர்ந்த இந்திரா. இவருக்கு வயது 40. இவரது கணவர் மணி. 5 ஆண்டுகளுக்குமுன்பே இறந்து விட்டார். 18 வயது மகள் இந்திராவுக்கு உள்ளார்.

அவரை குன்றத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற 26 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார் இந்திரா. கங்காதரன் டெய்லராக உள்ளார். அத்தோடு அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டி சம்பாதித்து வந்தார்.

கல்யாணத்திற்குப் பிறகு மனைவியிடம் காதலாக இருப்பதை விட்டு விட்டு, மாமியார் இந்திரா மீது கண்ணைத் திருப்பிய கங்காதரன்,அவருடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

அடிக்கடி செங்கல்பட்டுக்கு வந்து மாமியாரை தனிமையில் சந்தித்து வந்தார். இதனால் அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து இந்திராவின் வீட்டு உரிமையாளர் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார். ஆனால் அதை இந்திரா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி இவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

அப்போது இவர்கள் இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பதிவு செய்து, ஊர் முழுக்கக் காட்டுவோம். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என அப்பகுதியினர் ஆலோசனை கூறினர்.

இதையடுத்து மறுமுறை கங்காதரனும், இந்திராவும் ஜாலியாக இருப்பதை ஜன்னல் வழியாக வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் இந்திராவின் மகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதேபோல, கங்காதரனின் சகோதரர்களை வரவழைத்தனர்.

அவர்களிடம் இனிமேலும் இவர்களை குடி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி பிரச்சினை பெரிதாகி விட்டது.

ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம்...அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்ற...
18/03/2025

ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம்...

அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன் டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம்.

21 வயதான குட்டுதான் ரஜோ வர்மாவின் முதல் கணவர். நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்து திருமண முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் சில வருடங்களில் அவர்களின் சகோதரர்களான பாஜ்ஜூ வயது 32, சாந்த் ராம் வயது 28, கோபால் வயது 26, தினேஷ் வயது 26 ஆகியோரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ரஜோ வர்மா 18 மாதமான குழந்தையுடன் 5 கணவர்களுக்கும் சமையல் செய்து இல்லத்தரசியாக குடும்பம் நடத்தி வருகிறாராம். ஆனால் 5 பேரில் யார் அந்த குழந்தையில் அப்பா என்று தெரியாதாம்.

இது பழங்காலமுறை என்றும் கூறும் ரஜோ, தனது தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

எங்களுடைய ஒரே அறை கொண்ட வீடுதான். பெட் கிடையாது, தரையில்தான் படுத்து உறங்குவோம். எங்களுக்குள் எந்த வித பொறாமையோ போட்டியோ கிடையாது என்கிறார் அந்தப் பெண்.

அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தேசாமாகவே வாழ்க்கிறோம் என்றும் கூறுகிறார் இந்த நவீன திரௌபதி.

வெளிநாட்டு வினோதங்கள்...
04/03/2025

வெளிநாட்டு வினோதங்கள்...

14/02/2025

10 varieties of dosa | indian street food

ஒடியா ஆல்பம் பாடலான ச்சீசி சீரணுனி இந்த பாடல் பதிவு செய்தே 33 வருடங்கள் ஆகிறதுஇதில் நடித்த நடிகரின் தற்மசய வயது 55 .. நே...
10/02/2025

ஒடியா ஆல்பம் பாடலான
ச்சீசி சீரணுனி இந்த பாடல் பதிவு செய்தே 33 வருடங்கள் ஆகிறது
இதில் நடித்த நடிகரின் தற்மசய வயது 55 .. நேரம் நன்றாக இருந்தால் எந்த நேரத்திலும் புகழை தரும் என்பதற்க்கு உதாரணம்.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cine Maanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share