12/07/2015
இது சிம்பு என்ற கலைஞனுக்காக .(நான் சிம்பு ரசிகன் இல்லை)
மக்களின் சிறந்த பொழுது போக்கு படம் பார்ப்பது.அப்படி பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு.திறமை மிகுந்த கலைஞன்.சிறு வயதில் நடிக்க ஆரம்பித்த இவர் ஆடும் திறமை பாடும் திறமை தயாரிப்பு மற்றும் படம் இயக்கும் அளவுக்கு திறமை உள்ளவர்.இந்த சிறுவயதிலேயே பல திறமைகளை வளர்த்து கொண்டவர்.பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதை மட்டும் கற்கவில்லை.அதன் விளைவு கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவரின் படம் எதும் வெளிவரவில்லை.வாலு இப்போது வரும் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் வந்தபடில்லை.நீங்கள் கேட்கலாம் ஒரு கூத்தாடிக்கு என் நி ஆதரவு தாருகிறாய் என்று.அவரை கூத்தாடி என்று பாரமால் உங்களை ஒரு நேரத்தில் மகிழ்வித்த கலைஞன் என்பதை நினைவில் வையுங்கள்.பிறரின் சந்தோஷபடுத்தி இவர்கள் சந்தோஷம் கண்டவர்கள்.அவர் பெண்களுடன் கிசுகிசு மேலும் பல காதல் என்றும் நீங்கள் கேட்கலாம்.அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை.அடுத்தவரின் அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு.இந்த நிலை நீடித்தால் இன்று கிராம புரங்களில் எப்படி விவசாயம் அழிந்துக் கொண்டு இருக்கிறதோ அதை போல் சிம்பு மட்டும் இல்லை ஒரு நாள் இந்த சினிமா கலையும் அழியலாம்.இதில் கூட பல குடும்பங்கள் வாழ்கின்றன.ஒரு கலைஞனை பார்க்கமால் பல குடும்ப நிலையை எண்ணி பாருங்கள்.இவர்கள் பயன் பெற நினைத்தால் இந்த செய்தியை பகிருங்கள்