FlashNews madurai

FlashNews madurai மதுரையின் முகவரி
FlashNews at Madurai"©2020
First news port in madurai from 2015

22/09/2025

மக்களை ஏமாற்றும் ஆவின் பால் முகவர் சங்கம்

தனியார் பால் நிறுவனங்கள் விலையை குறைத்த நிலையில் தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றும் ஆவின்: சங்கம்

விலை குறைக்காவிடில் ஆவின் நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்னுசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை ஆவின் நிறுவனம் மக்களுக்கு அளிக்காமல் ஏமாற்றுகிறது: பொன்னுசாமி

பால் மற்றும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பை ஆவின் அமல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப...
10/09/2025

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...

1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி..

பெரும் செல்வச் செழிப்பு - மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவை தான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து - வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது..

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது - ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை.

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது - அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது - ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்.

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்..

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது.

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை -மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச - யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது - தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு - விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் - தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி - கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் - என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர்.

அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் - எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது..

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.. மாமதுரை மக்கள்...

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் பக்கத்தில்.  #எம் ஆர் மாணிக்கம் நினைவஞ்சலி
26/08/2025

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் பக்கத்தில். #எம் ஆர் மாணிக்கம் நினைவஞ்சலி

19/08/2025

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும்

அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் குற்றத்தை செய்து விட்டன

விதண்டாவாதம் பேசாமல், தமிழக வேட்பாளருக்கு திமுக ஆதரவு *அளிக்க வேண்டும்

தமிழிசை சௌந்தர ராஜன், பாஜக மூத்த தலைவர்

19/08/2025

புகழ்பெற்ற மருத்துவரும், மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியுமான வேணி (71) மாரடைப்பால் உயிரிழந்தார்.

1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களைப் பார்த்துள்ள இவர், கணவர் பார்த்து வந்த 5 ரூபாய் சிகிச்சையைத் தொடர்ந்து வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழப்பு.

Su Venkatesan MP Madurai Temple city பதவிபறிக்கப்படுமா..?🔴மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக மேயர...
13/08/2025

Su Venkatesan MP
Madurai Temple city

பதவிபறிக்கப்படுமா..?
🔴மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன் வசந்த் கைதாகி உள்ள நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தை தாண்டி மதுரை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 #நாய் தொல்லை மதுரை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் உள்ளது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்
12/08/2025

#நாய் தொல்லை மதுரை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் உள்ளது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்

25/06/2025

செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்கள் *9 பேருக்கு பதவி உயர்வு*

* 1.மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம் நெல்லி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

2. தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பி.அஸ்வின் குமார் திருவள்ளுவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு பதவி உயர்வு.

3. சென்னை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

4. பெருநகர சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கு.கார்த்திகேயன் தமிழக சுற்றுலா கழக மேம்பாட்டு நிறுவன செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு

5. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுஜிதா தமிழக அரசு தகவல் ஆணைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு

6. கோயமுத்தூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கி.மோகன்ராஜ் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு

7. நாமக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல் தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு

8. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.மணிமேகலை தமிழரசு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதிவு உயர்வு

9. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாலாஜி பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

18/06/2025

மதுரை சொக்கிகுளம் பகுதியில்
மையோனஸ் பயன்படுத்தபடுகிறது.
தடை இல்லையோ..மதுரை

14/06/2025

மருத்துவமனை வாயிலில் இறுதிச்சடங்கு – பரபரப்பு ஏற்பட்டது!

மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்த தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மீதிகட்டணத்தை கோரியதால், அவரது உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் இறுதிச்சடங்கு நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஅண்ணாதுரை இதய நோய்க்காக மதுரையில் உள்ள தே #கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் கட்டணமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை உயிரிழந்தார். உடலை வழங்க மீதி ரூ.2 லட்சம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனை வாசலிலேயே இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு எஸ்.எஸ். காலனி போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், மருத்துவமனை நிர்வாகம் – “பாதிக்கபட்டவர் சிகிச்சை பெறும் நிலையிலேயே உயிரிழந்ததால், எந்தவித கட்டணமும் இன்றி உடலை வழங்கப்படும்” என அறிவித்தது.

இதனையடுத்து பரபரப்பு நிலைத் தணிந்தது.

14/06/2025

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிஷா என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 Follower-கள் குறைந்ததால் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்

கணவர் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதால் தான் ரீல்ஸ் எடுக்க நேரமில்லை என்றும், தனது 2 Follower-கள் குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்; இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் போலீசார்

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when FlashNews madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlashNews madurai:

Share

FlashnEwsமதுரை

online news 24 *7

அனைத்து செய்திகளும் தகவலும் ஒரே இடத்தில்....இணையத்தின் மூலம் இணைந்திருங்கள்