FlashNews madurai

FlashNews madurai மதுரையின் முகவரி
FlashNews at Madurai"©2020
First news port in madurai from 2015

குழம்பிப்போன முன்னணி செய்தித்தாள்      #
11/01/2026

குழம்பிப்போன முன்னணி செய்தித்தாள் #

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 1435 ஆம் பசலி அஷ்டமி சப்பரம், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு பர...
11/01/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 1435 ஆம் பசலி அஷ்டமி சப்பரம், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாஸ்யை மேதகுராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரிவல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரமனூர் கட்டளை சார்பாக இன்று 11. 01. 2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் துவங்கி திருவீதி உலா சிறப்பாக நடை பெற்று வருகிறது
#ஆன்மீகம்

10/01/2026

மதுரை ஜல்லிக்கட்டு: 15,000 காளைகள் மற்றும் 5,000 வீரர்கள் முன்பதிவு!
​மதுரை:
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆன்லைன் மூலம் சுமார் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
​போட்டி நடைபெறும் தேதிகள்:
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பின்வரும் தேதிகளில் நடைபெறவுள்ளன:
​ஜனவரி 15: அவனியாபுரம்
​ஜனவரி 16: பாலமேடு
​ஜனவரி 17: அலங்காநல்லூர்
​முன்பதிவு விவரம்:
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு. பிரவீன்குமார் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த ஜனவரி 7-ம் தேதி மாலை 5 மணி முதல் ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
​குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர். இதன்படி, மொத்தம் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் செல்லும் பாதையில் கழிவு நீர் தேக்கம் -மணம் கமழும் நாற்றம்நவீன் பேக்கரி அருகில் உள்ள சாலையில்...
31/12/2025

மதுரை மீனாட்சியம்மன் கோவில் செல்லும் பாதையில் கழிவு நீர் தேக்கம் -மணம் கமழும் நாற்றம்

நவீன் பேக்கரி அருகில் உள்ள சாலையில் சாக்கடை
அருமையான துரு நாற்றம் + நோய் பரவும் நிலை அனைவரும் ரசிக்க பயணம் ♦

27/12/2025

தங்கம் ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு; வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.31,000 உயர்வு.

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ.800 உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,04,800க்கு விற்பனை; கிராம் ரூ.210 உயர்ந்து ரூ.13,100க்கு விற்பனை.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ.11 உயர்ந்துள்ளது.

வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.31,000 உயர்ந்து ரூ.2,85,000க்கு விற்பனை; கிராம் ரூ.31 உயர்ந்து ரூ.285க்கு விற்பனை.

27/12/2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி பேட்டி | கீழடி

27/12/2025
27/12/2025

27/12/2025

காலைவணக்கம்

25/12/2025

இன்றைய நிகழ்ச்சி: மதுரை
டிச 25, 2025

மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

சதயம் நட்சத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி,

தங்கமய முருகன் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால் குடம் எடுத்தல்: யோகா விநாயகர் கோயில் வளாகம், விளத்துார், பால் குடம் எடுத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:00 மணி.

நகரத்தார் பழமுதிர்சோலைப் பாதயாத்திரை சங்கம் 24 வது ஆண்டு விழா: அழகர் கோவில் அடிவாரம் நகரத்தார் மண்டபம், பால்குடங்கள் கட்டுதல், பூஜை, காலை 6:00 மணி, மலைக்கு புறப்படுதல், காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி முதல், மலையில் தங்கரதத்தில் சுவாமி புறப்படுதல், மாலை 6:00 மணி, மண்டபத்தில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்தல், இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: உமா, முன்னிலை: ஸ்ரீனிவாசன், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

மாணவர்களுக்கான 'சங்கத்தமிழ் மாலை' திருப்பாவை பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டிகள்: மதனகோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி, காலை 9:00 மணி முதல்.

தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - -வாசிநாதம் சுவாமி, சித்தாஸ்ரமம்,மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோகா தியான மையம், மாலை 5:00 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 1:00 மணி

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* மார்கழி சத்ஸங்கம், திருபள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, மார்கழி நோன்பு தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியர் சவுந்திரராஜன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

திருவடி: நிகழ்த்துபவர் - மல்லி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

பாரம்பரிய கோலாட்ட விழா, கிருஷ்ணர் ஜெயந்தி, நவராத்திரி கொலு போட்டிகள்: பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தெலுங்கு பிராமணர்கள் சங்கம், ஸ்ரீ சேவா மண்டலி, மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.

ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி: சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்குமாசி வீதி, மதுரை, நாகமலை ரமண நாட்டியாலயா குழுவினரின் 'பகவான் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள்' நாட்டிய நாடகம், பரிசு வழங்குபவர்: உதவித் தலைவர் சந்திரசேகர், ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி.

'தெளிவு அறிவு: நிறுவனர் நினைவு மலர்' நுால் வெளியீட்டு விழா: ராமன் இல்லம், திருநகர், மதுரை, தலைமை: மன்றத் தலைவர் சொக்கலிங்கம், நுால் வெளியிடுபவர்: முன்னாள் மெர்ச்சன்ட் நேவி கேப்டன் மங்கள முருகன், ஏற்பாடு: கண்ணதாசன் நற்பணி மன்றம், மாலை 6:50 மணி.

பள்ளி, கல்லுாரி

தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் சிறப்புரை: தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, காலை 11:00 மணி, கிராம மேம்பாடு சிறப்புரை: மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம், போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி, மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், ஏற்பாடு:சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

மதுரைனாலே அறிவு வித்தியாசமான பார்வை       FlashNews madurai  Madurai Collector Madurai Corporation
24/12/2025

மதுரைனாலே அறிவு
வித்தியாசமான பார்வை FlashNews madurai Madurai Collector Madurai Corporation

நாட்டாங்குடி : ஒருவர் மட்டுமே வசித்துவந்த, கைவிடப்பட்ட சிவகங்கை கிராமம் - மீண்டெழுந்தது எப்படி?....     சிவகங்கை மாவட்டம...
22/12/2025

நாட்டாங்குடி : ஒருவர் மட்டுமே வசித்துவந்த, கைவிடப்பட்ட சிவகங்கை கிராமம் - மீண்டெழுந்தது எப்படி?....


சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வந்தனர்.

ஆனால் பாதுகாப்பின்மை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

ஆனால் தங்கராஜ் என்ற சாமியார் மட்டும் இந்தக் கிராமத்தில் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார்.

தங்கராஜ்
நாட்டாங்குடி கிராமம்

ஆனால் தற்போது திருச்செல்வம் என்ற சமூக ஆர்வலர், மாவட்ட நிர்வாகம், அந்த கிராம மக்கள், இளைஞர்களை இணைந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து நாட்டாங்குடி கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் மீண்டும் இந்தக் கிராமத்திற்கு மக்கள் குடிபெயர ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய சமூக ஆர்வலர் திருச்செல்வத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.

வழிகாட்டிய சமூக ஆர்வலர்

நம்மிடம் பேசிய அவர், " நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டீம்மாக செயல்படுகிறோம்.

ஐடி (தகவல் தொழில்நுட்பம்) துறையை நல்ல விதமாக விவசாயத்துக்கு பயன்படுத்திக்கொள்வது தான் எங்கள் நோக்கம்.

23 வருடங்களாக இந்தப் பணியை நாங்கள் செய்துவருகிறோம். தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை கிராம அளவில் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

வழிகாட்டிய சமூக ஆர்வலர்
முன்னேறிய வேப்பங்குளம் கிராமம்

கிராமங்களில் உள்ள விவசாயிகள், திட்டமிடுதலில் இருந்து பொருட்களை விற்பது வரை விவசாயம் தொடர்பான எல்லா வேலைகளையும் கிராமத்திலேயே செய்துகொள்ள முடியும் என்ற ஒரு கான்சப்ட்டை உருவாக்கி அதனை ஆந்திராவில் உள்ள சில கிராமங்களில் செயல்படுத்தினோம்.

ஒரு சில காரணங்களால் இதனை அங்கு தொடர முடியவில்லை. மனம் தளராமல் 2017-ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தின் வருவாயை இரட்டிபாக முயன்றோம்.

அந்த கிராம மக்களுக்கு சில விஷயங்களை எடுத்து சொல்லி வழிகாட்டினோம். அவர்களின் நிதி பங்களிப்புடனே அங்குள்ள நீர்நிலைகளை சரி செய்தோம்.

திருச்செல்வம்
உழவர் உதவி மையம்

அதன் விளைவாக இன்று விவசாயத்தில் அந்தக் கிராமம் தன்னை முழுவதுமாக மீட்டெடுத்திருக்கிறது. நீர் மேலாண்மை மட்டுமன்றி, விவசாய மேலாண்மை, பயிர் மேலாண்மை ஆகியவற்றோடு சந்தைப்படுத்துதலிலும் சிறந்து விளங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக அந்த கிராமத்திற்கு கடந்த 2021-23-ஆம் ஆண்டு உழவர் உதவி மையத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் மூலம் அந்த மண்ணில் விளையக்கூடிய மாம்பழம், நார்த்தம்பழம், எலுமிச்சம்பழம் போன்ற விளைபொருட்களை 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கூரியர் மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அந்தக் கிராமம் பெற்றது.

தடுமாறிய நாட்டாங்குடி கிராமம்
தடுமாறிய நாட்டாங்குடி கிராமம்

இப்படி தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை மீட்டெடுத்திருக்கிறோம். ஒரு நாள் இந்த நாட்டாங்குடி கிராமத்தை பற்றி கேள்விப்பட்டோம்.

என்னென்ன காரணங்களுக்காக அங்குள்ள மக்கள் குடிபெயர்ந்தார்கள் என்பதை முதலில் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

5 மாதங்களாக அந்தக் கிராமத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முயற்சி செய்தோம்.

மக்களிடம் கிராமத்தில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பேசினோம். ஆடு, மாடு, பன்றி தொந்தரவால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று சொன்னார்கள்.

அதனால் வேலி அமைத்துகொடுத்தோம்.

மீண்டெழுந்த நாட்டாங்குடி கிராமம்

பிறகு அங்கு நடந்த குற்றச் சம்பவங்களால் மக்கள் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறியதால் தற்போது சிசிடிவி அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

தவிர நீர் வசதிக்காக பாசன வாய்க்கால்களை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்தது.

மழை பெய்ததால் கண்மாய் முழுவதும் இப்போது தண்ணீர் இருக்கிறது. பூசணி, பரங்கி, தர்பூசணி உளுந்து எல்லாம் விதைத்திருக்கிறார்கள்.

நாட்டாங்குடி கிராம மக்கள்
100 ஏக்கரில் இந்த வருடம் 40 ஏக்கரிலாவது விவசாயம் நடக்கும். நாட்டாங்குடி கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் மீண்டும் குடிபெயர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு கிராமம் தடுமாறியது என்பது உண்மை. ஆனால் தடுமாறிய இந்த நாட்டாங்குடி கிராமம் பல கிராமங்கள் தடுமாறாமல் இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்" என்று நம்பிக்கையுடன் பேசினார்.!

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when FlashNews madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlashNews madurai:

Share