Tamil News TV

Tamil News TV Latest Tamil TV News

அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..இந்த மாசம் கொஞ்சம்பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டுகூட வாங்கிக்கணும்..வேணாம்..அவங்க வரட...
24/04/2025

அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..

இந்த மாசம் கொஞ்சம்

பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டு

கூட வாங்கிக்கணும்..

வேணாம்..அவங்க வரட்டும்..

அப்புறம் வாங்கிக்கலாம்..

வந்தார்கள்..

ஒரு ரெண்டு மாசம்போல இருந்துவிட்டுப்போனார்கள்..

இவர்கள் வழக்கம்போல மாச செலவு பட்ஜட் போட உட்கார்ந்தார்கள்..

வழக்கத்தை விடவும் எந்த செலவுமே கூடியிருக்கவில்லை..

EB..பில் குறைந்திருந்தது..

மளிகை..பால்..காய்கறி எல்லாமே இவர்கள் இருவருக்காவதைவிட

நால்வருக்கும் சேர்த்து குறைவாகவே ஆகியிருந்தது..

சாயங்காலம் வழக்கமாகப்போகும் ஓட்டலுக்குப் போனார்கள்..

வாங்க சார் எங்க ரெண்டுமாசமா ஆளையே காணல..

இருவருக்குமே பொட்டிலடித்தது..

உண்மைதான்..

அம்மா..அப்பா இருந்த ரெண்டுமாசமும் அம்மா பாத்துப்பாத்து எல்லாருக்கும் பிடிச்சமாதிரி..சமைத்துக்கொடுத்தாள்

எதையும் அளவோடு செய்ததால்

எல்லாம் சாப்பிட்டபிறகும் எதுவும் மீந்துபோய் தொட்டியில் கொட்டவில்லை..

அப்பா பார்த்துப்பார்த்து ஆளில்லாத இடத்தில் லைட்டையும் பேனையும் டிவியையும் அணைத்துக்கொண்டே இருந்தார்..

பழங்கதை எங்களோடு பேச

குழந்தை உடன் கொஞ்சி விளையாட

என்று அவர்கள் இருந்ததில்

பொழுதை கழிக்க

சினிமா பூங்கா மால் போன்ற விசயங்கள் தேவைப்படாமல்

போனதில் பெரிய தொகை சேமிப்பு ஆனது

தக்காளி 140ஐத்தொட்டபோது

எலுமிச்சை ரசம் சாப்பிட்டார்கள்..

காய்கறிகளை அளவோடு தேவைக்கு அப்பா வாங்கியதில் அழுகல் வேஸ்ட் தவிர்க்க பட்டது

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர அலுவலகத்தில் இருந்து பைக்கில் வந்து போகும் வேலை இல்லாமல் பெட்ரோல்_நேரம் இரண்டும் மிச்சமானது

கூட்டிக்கழித்து பார்க்க கணக்கு சரியாக தான் வந்தது.....
படித்ததில் ரசித்தது

இதனை புரிந்தால் பல குடும்பம் சிறந்து விளங்கும்

வெயிலில் நின்றால் தான் நிழலின் அருமை தெரியுமா?புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவுக்காக பணம் செலுத்தி விருந்தினர்களாக வந்து...
22/04/2025

வெயிலில் நின்றால் தான் நிழலின் அருமை தெரியுமா?

புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவுக்காக பணம் செலுத்தி விருந்தினர்களாக வந்து தங்கி வசிக்கும் வீட்டை நிர்வகித்து வருகிறார். இந்த வீடு அவரது மூதாதையர் வீடாகும். இந்த வீட்டில் பன்னிரண்டு பெரிய அறைகள் உள்ளது.

ஒவ்வொரு அறையிலும் 3 படுக்கைகள் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் வகையில் சுவையான உணவு வழங்கப்படுகிறது. உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் என பலதரப்பட்ட வர்கள் இந்த வீட்டில் தங்கி வசித்து வரும் இவர்கள்

அனைவருக்கும் காலை உணவும், இரவு உணவும், தேவைப்படுபவர்களுக்கு முழு மதிய உணவு சாப்பாடும் கொடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த வீட்டை நிர்வகித்து வரும் அந்தப் பெண் ஒரு விசித்திரமான விதியை நடைமுறைப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறார். அதாவது ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள் மட்டுமே அங்கு உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படும். இதன் காரணமாக எஞ்சியுள்ள 2-3 நாட்களுக்கு அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியே சென்று தான் சாப்பிட வேண்டும். இந்த மூன்று நாட்களில் சமையலறையில் சமைக்க அனுமதி இல்லை.

சமையலறையும் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மீதமுள்ள நாட்கள் விடுமுறை!

இதை அறிந்த அந்த வீட்டில் தங்கி இருக்கும் ஒருவர் இது என்ன ஒரு விசித்திரமான விதி! உங்கள் சமையலறை ஏன் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கிறது என வினவினார்.

அதற்கு நிர்வாகம் செய்யும் அந்த பெண்மணியும் நாங்கள் 28 நாட்களுக்குத்தான் உணவுக்கான தொகையை மட்டுமே வசூலிக்கிறோம் என்கிறார்.

மீண்டும் அதே நபர் நீங்கள் ஏன் இந்த விதியை மாற்றக்கூடாது என்று கூறுகிறார்.

அதற்கு அந்த பெண்ணும் அதெல்லாம் மாற்றம் செய்ய முடியாது. விதி என்றால் விதி தான்... அதில் மாற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை என்று உறுதி பட தெரிவிக்கிறார்.

இந்த நிலைமையை அறிந்து கொண்ட அந்த நபர் நடைமுறையில் இருக்கும் 28 நாட்களின் விதியை நினைத்து எரிச்சலடைகிறார்.

அப்பொழுது தான் அந்த பெண் ஏன் இந்த 28 நாட்கள் விதி அமுல்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை கூறுகிறார்.

"உனக்கு தெரியாது தம்பி, ஆரம்பத்துல இது போன்ற எந்த ஒரு விதியும் இல்லை. இங்கே தங்கி இருப்பவர்களுக்கு அன்பாக சமைத்து உணவு கொடுத்து வந்தேன். ஆனால் அவர்கள் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை...ஒவ்வொன்றிலும் குறைபட்டுக் கொண்டார்கள். சில சமயம் இந்தக் குறைபாடு, சில சமயம் அந்தக் குறைபாடு என எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.அவர்கள் திருப்தி அடையவில்லை.

அதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் தான், 28 நாட்கள் என்ற இந்த விதியை உருவாக்கினேன். 28 நாட்கள் இங்கே சாப்பிட்டுவிட்டு, மீதி 2-3 நாட்கள் வெளியே சாப்பிடும்போது தான் இதன் அருமையை அவர்கள் உணர்வார்கள் என்று கருதினேன். தரமான உணவு எது என்ற வித்தியாசத்தையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும் இல்லையா.

அது மட்டுமல்ல...இந்த 3 நாட்களுக்கு அவர்கள் உணவுக்காக செலவழிக்கும் தொகையையும் கண்டறிய முடியும். எவ்வளவு தொகை கூடுதலாக செலவாகிறது என்பதையும் தெரிந்து

கொள்ள முடியும் என்று கூறி முடித்தார்.

விதி தொடர்கிறது...

ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திரு...
21/04/2025

ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திருப்தி. அவள் இது மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு விஷயம். நீங்கள் என் கழுத்தை சுற்றி டைமண்ட் நெக்லஸ், விரலில் மிகப்பெரிய வைர மோதிரம், கைகளில் டைமண்ட் பிரஸ்லெட் ஆகியவற்றை வரைய மறந்து விட்டீர்கள். என்றாள்.

பிகாஸோ, ஆனால் நீங்கள் போட்டிருக்கவில்லையே என்று கேட்டார்.

அவள், அது விஷயமல்ல, எனக்கு கேன்சர், இன்னும் ஆறு மாதத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறந்தவுடன் என் கணவர் மறுமணம் செய்து கொள்வார் என்று எனக்குத் தெரியும். அவர், நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்று கூறினாலும்கூட அவர் நான் இறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். பெண் இல்லாமல் அவரால் ஒரு கணம்கூட வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், ஆகவே உடனடியாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்றாள்.

பிகாஸோ, நீ இப்போது கூறியதற்க்கும் டைமண்ட் நகைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

அவள், உங்களுக்கு பெண் மனது புரியாது. நான் இறந்தபின் எனது கணவர் மணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்னுடைய சித்திரத்தை பார்ப்பாள். பின் அவள் அவரை எங்கே அந்த வைரங்கள் என்று வதைப்பாள். நான் இறந்தபின்னும் கூட என்னால் அவரை விட்டு இருக்க முடியாது. அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்றாள்.

செத்தாலும் விட மாட்டோம்ல ! 😂

கடுகு டப்பாவில் பணம்நான் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை""  எனக்கு பாக்கெட் மணியாக 25 பைசா மட்டும்தான்.. ஆறா...
20/04/2025

கடுகு டப்பாவில் பணம்

நான் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை"" எனக்கு பாக்கெட் மணியாக 25 பைசா மட்டும்தான்..
ஆறாம் வகுப்பு போன பிறகு பாக்கெட் மணியாக 50 பைசா..

இந்த 50 பைசாவுக்கு என்ன வாங்க முடியும் என்று கேட்டால்? ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் அந்த வெள்ளரிக்கையில் உப்பு வைத்து மிளகாய் பொடி போட்டு தருவார்கள் அதை வாங்கி சாப்பிட்டு கொண்டு போவோம்...

ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சீக்கிரமாக போய்விட்டார்கள் எனக்கு 50 பைசா கொடுக்கவில்லை.
அம்மா கடுகு டப்பாவில் ஒளித்து வைத்திருந்த ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டு போனேன்...

ஆனால் இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கு பாக்கெட் மணியாக...

நமக்கு ஸ்கூல் பேக் எல்லாம் கிடையாது'' துணி கடையில் கொடுக்கும் மஞ்சள் பைய்தான் நமக்கு...

இப்ப என்னடான்னா பேக் லேசா கிழிஞ்சா போதும் உடனே எப்பா எனக்கு பேக் வேணும் அப்படின்னு கேட்கிறது குழந்தை..

நமக்கு மதிய உணவு பள்ளிக்கூடத்தில் தான்.. காலையில போகும்போது வீட்டில் இருந்து பிளேட் எடுத்துட்டு போயிடுவோம்... அதுவும் அந்த மஞ்சப்பை குள்ள வைத்துக் கொண்டு போவோம் .... இல்லையென்றால் முதுவுக்கு பின்னால் சட்டைக்குள் பிளேட்டை போட்டு போவோம்'' இப்ப உள்ள குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் லஞ்ச் பாக்ஸ் தனியா...

ஒரு நாளைக்கு வீட்டில் இருந்து பிளேட் எடுத்துப் போகவில்லை என்றால்
பள்ளிக்கூடத்தில் அண்டா மூடியில் வைத்து ஐந்து பேர் ஆறு பேர் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம்.. சாப்பிடும் போது அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருக்கும்....

படிப்பும் கம்மி தான் செலவும் கம்மி தான் ஆனால் அந்த வாழ்க்கையில சந்தோஷமாக இருந்தது...

20/04/2025
20/04/2025

ஒரு ஊடகவியலாளர் படம் எடுக்க சென்றுள்ளார், அவர் பசியுடன் இருப்பதாக நினைத்து, தன்னிடமுள்ள மிகச்சொற்ப உணவை, ஊடகவியலாளருக்கு...
20/04/2025

ஒரு ஊடகவியலாளர் படம் எடுக்க சென்றுள்ளார், அவர் பசியுடன் இருப்பதாக நினைத்து, தன்னிடமுள்ள மிகச்சொற்ப உணவை, ஊடகவியலாளருக்கு நீட்டுகிறது இந்தக் குழந்தை. மனிதநேயத்தின் பெறுமதியை விளக்கும் மிக அழகான புகைப்படம் இது.

20/04/2025

🌷1960🌷எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட, விகடன், கல்கி, அப்புறம் இந்த கருமம...
20/04/2025

🌷1960🌷
எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட, விகடன், கல்கி, அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம். இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்..

🌷1970🌷
புத்தகத்தை விட்டாச்சு, எப்ப பாரு transistor radio அதுல இந்த Radio Ceylon 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம். இளையராஜாவா MSV யேன்னு சண்ட வேற.. ஜானகியா, லதா மங்கேஷ்கர், யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு...

🌷1980🌷
புதுசா வந்திருக்கிற இந்த TVயை போட்டு உடைக்கணும். மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால்ல தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க.

🌷1990🌷
எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டு பிடிச்சவன்? 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வச்சுருக்கீங்க... Evil Dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா? ஓடி போயிடு வெளியில..

🌷2000🌷
கேபிள் TV போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்கார்ந்துக்கிறான்... சாப்பாடு டிபன் எல்லாமே ஹாலில்லேயே பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே, அது தான் பாக்கற மாதிரி இருக்கு. புதன்கிழமை வர்ற விடாது, கருப்பு செமயா இருக்கு. என்ன இருந்தாலும் ரூப வாஹினி மாதிரி வருமா?

🌷2010🌷
24 மணி நேரமும் இந்த இண்டர்நெட டிலே என்ன பாக்கிறான்னோ.. படிக்கிறானா இல்லையானே தெரியல.. இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்.?..

🌷2020🌷
Netflix, Amazon , WebTV இந்த கர்மங்கள் வந்த பிறகு முகத்தை பத்து பேசறதேயில்லை சாப்பிடும்போது கூட, மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க...

இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே...

உங்க வீட்டில எப்படி?....
👍🌹🌹🌹🌹🌹🌹

50 வயதைக் கடந்தவள்..அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி...பேரதிர்ச்சி எங...
20/04/2025

50 வயதைக் கடந்தவள்..அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி...

பேரதிர்ச்சி எங்களுக்கு..

அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்..

அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..

பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது,

நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...

ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்தது..

அவள் இறந்து 1 மாதமாயிற்று...

பாவம் அவள் கணவர்...

இப்போது எப்படி சமாளிக்கிறாரோ??

பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்..

பதிலில்லை.

அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்..

எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..

தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

"பிள்ளைகள் நலம்..

நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

என் கண்கள் குளமாகியது.

என் தோழி நினைவிற்கு வந்தாள்.

பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை.

அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது,

எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..

நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற திரைப்படத்திற்கு அவள் வரவில்லை,

காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..

அவளுக்காக அவள் வாழவே இல்லை..

மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறாள்..

இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன்,

இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்..

தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும்,

அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,

நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...

அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..

ஆனால் இதையெல்லாம் சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

தோழிகளே...

எத்தனை பொறுப்புகள் இருந்தாலும்,

எத்தனை பணிகள் இருந்தாலும்

உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்..

அது உங்கள் நேரம்..

உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...

ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள்

பள்ளி கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,

பகிருங்கள், சிரியுங்கள்..

வாழ்க்கையை அனுபவியுங்கள்..

இது உங்கள் வாழ்க்கை..

உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்..

உங்களுக்கான இன்பத்தை மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..
படித்ததில் பிடித்தது.

Ten Unknown Facts About  1. The first film made in 1888 was "Rounday Garden Scene" directed by French inventor Louis Le ...
20/04/2025

Ten Unknown Facts About

1. The first film made in 1888 was "Rounday Garden Scene" directed by French inventor Louis Le Prince.

2. "The Squ Man" was the first Hollywood movie in 1911 directed by Oscar Epfel and Cecil B. DeMille.

3. The first 3D film was "The Power of Love" in 1922 directed by Nat G. DeVrich and Harry K. Fairl.

4. The first film with sound was "The Jazz Singer" in 1927 directed by Alan Crossland.

5. "Ambion" was the longest movie made in 2016, directed by Anders Weberg, with 720 hours of runtime.

6. "Avengers: Endgame" is the highest grossing movie ever in 2019 directed by Anthony and Joe Russo.

7. 11 of the highest academy awards won by a single film, received by "Ben-Hoor" in 1959, "Titanic" in 1997 and "The Lord of the Rings: The Return of the King" in 2003.

8. The first film featuring computer-generated image (CGI) was "Westworld" directed by Michael Crichton in 1973.

9. The first film using speed capture technology was "The Lord of the Rings: The Fellowship of the Ring" directed by Peter Jackson in 2001.

10. Keanu Reeves is the highest-paid actor ever with $250 million salary for "The Matrix" trilogy. Ten Unknown Facts About

1. The first film made in 1888 was "Rounday Garden Scene" directed by French inventor Louis Le Prince.

2. "The Squ Man" was the first Hollywood movie in 1911 directed by Oscar Epfel and Cecil B. DeMille.

3. The first 3D film was "The Power of Love" in 1922 directed by Nat G. DeVrich and Harry K. Fairl.

4. The first film with sound was "The Jazz Singer" in 1927 directed by Alan Crossland.

5. "Ambion" was the longest movie made in 2016, directed by Anders Weberg, with 720 hours of runtime.

6. "Avengers: Endgame" is the highest grossing movie ever in 2019 directed by Anthony and Joe Russo.

7. 11 of the highest academy awards won by a single film, received by "Ben-Hoor" in 1959, "Titanic" in 1997 and "The Lord of the Rings: The Return of the King" in 2003.

8. The first film featuring computer-generated image (CGI) was "Westworld" directed by Michael Crichton in 1973.

9. The first film using speed capture technology was "The Lord of the Rings: The Fellowship of the Ring" directed by Peter Jackson in 2001.

10. Keanu Reeves is the highest-paid actor ever with $250 million salary for "The Matrix" trilogy. Comedy video 😆
Funny video.































🤣🤣



@ Gopal Ramswaroop Rinwa Gopal Ram Ramkishor Chotiya Jagdish Hindu Patel Ramlal Run Sikandar Moriya Laburam Laburam Boss Prdeep Gotam Dewasi Narsingh Nath Sachin Dholiya Govind Saini Asop Gop Gopal Ram Good thought





















today






Today's best photo
Beautiful





















today






Today's best pic ❤️❤️❤️















.






Challengeio











Challengeio










🇮🇳 Today's best photo



























Address

Tallakulam
Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category