அகமுடையார் வரலாறு மீட்புகுழு

  • Home
  • India
  • Madurai
  • அகமுடையார் வரலாறு மீட்புகுழு

அகமுடையார் வரலாறு மீட்புகுழு வரலாறு படிப்போம்...!!!
வரலாறு படைப்போம்...!!!
போர்க்குடி அகமுடையார் 🔥👑🚩

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் விழாவான,சிவகங்கை இராஜா மருது பாண்ட...
29/04/2025

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் விழாவான,

சிவகங்கை இராஜா மருது பாண்டியர்களின் ஆவியூர் கட்டளையின் படி நிறுவிய சேர்வைகாரர் மண்டகப்படியின் 230 - ஆம் ஆண்டு உற்சவ விழா...!!!

இனமான இரத்த சொந்தங்கள் மற்றும் ஆண்மீக அன்பர்கள் அனைவரும் வருக வருக!

நாள் - 04.05.2025, ஞாயிற்றுக்கிழமை

"சைவ சமய வரலாற்று லீலை"

#சேர்வைக்காரர்_மண்டகப்படி

#மருதுபாண்டிய_மன்னர்கள்

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் இரும்புக் கரங்களில் வாளேந்தி போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு,முதல் இ...
24/10/2024

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் இரும்புக் கரங்களில் வாளேந்தி போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு,

முதல் இந்திய சுதந்திரப் படுகொலையான அக்டோபர் 24 1801 அன்று சிவகங்கை மண்ணில் #திருப்பத்தூர்_படுகொலையில் தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி வீரமரணம் அடைந்த,

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளான #மருதுநாடு என்ற சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து போராடி திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்...!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

#1801திருப்பத்தூர்படுகொலை
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#மருதரசர்கள்_குருபூஜை

மே 09 பழந்தமிழ்க்குடியான அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 83 ஆம் ஆண்டு நினைவு தினம...
09/05/2024

மே 09 பழந்தமிழ்க்குடியான அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 83 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!!!

---------------------------------------------------------------

* முதல், இடை, கடை தமிழ் சங்கங்களின் அழிவுக்கு பின்னர் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பால் அழியும் தருவாயில் இருந்த தமிழ் மொழியை தஞ்சை தரணியில் ஐந்தாம் தமிழ் சங்கமான #கரந்தை #தமிழ் #சங்கம் அமைத்து தமிழ் காத்த அகத்தமிழன்...!!!

* ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலே 1919 ஆம் ஆண்டு இவ்வுலக மொழிகளில் எம் #தமிழே #ஓர் #உயர்தனி #செம்மொழி என்று கூறி தமிழை செம்மொழியாக்க முதல் தீர்மானம் நிறைவேற்றிய வீரத்தமிழன்...!!!

* இன்று தமிழகமெங்கும் செயல்படும் ஆயிரக்கணக்கான அகமுடையார் சங்கங்கள் மற்றும் முக்குலத்தோர் சங்கங்களுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளியாக விளங்கும் 1926 ஆம் ஆண்டு அகமுடையார் சமுதாயத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட #சென்னை #மாகாண #அகமுடையார் #மகாஜன #சங்கம் உருவாக காரணமான உத்தம தலைவன்...!!!

இவ்வுலகில் தமிழ் மொழி உள்ள வரை உமது புகழ் நிலைத்து நிற்கும் எங்கள் அகத்தமிழனுக்கு புகழ் வணக்கம்...!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

எங்க ராசா இரணியன எந்த நாடும் பேசும்டா இந்த ஊரு புள்ளு பூண்டும் இவர் பேர சொல்லும்டா...!!! 🌾💪🏻ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட விவச...
05/05/2024

எங்க ராசா இரணியன எந்த நாடும் பேசும்டா இந்த ஊரு புள்ளு பூண்டும் இவர் பேர சொல்லும்டா...!!! 🌾💪🏻

ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி செங்குருதி சிந்திய எம்குல மாவீரனுக்கு 74 ஆம் ஆண்டு நினைவேந்தலில் வீரவணக்கம்! வீரவணக்கம்..!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு

சமரசம் இல்லா பொதுவுடைமை போராளி போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மலேயா கணபதி அவர்களின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று....
04/05/2024

சமரசம் இல்லா பொதுவுடைமை போராளி போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மலேயா கணபதி அவர்களின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!!!

-----------------------------------------------------------------

தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு பழந்தமிழ்க்குடியான அகமுடையார் பேரினத்தில் பிறந்தார் எஸ்.ஏ.கணபதி எனும் மலேயா கணபதி, இவருக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்...!!!

ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து INA எனும் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும், பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்...!!!

இந்தக் கால கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்...!!!

எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. மலேயா கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத்திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமை பொறுப்புக்கு கொண்டு சென்றது...!!!

1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன. சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள்...!!!

மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது...!!!

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். மலேயா கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது...!!!

கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன ஆனால் அது பயனளிக்கவில்லை...!!!

இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தூக்கிலிடப்பட்ட எம் மாவீரர் மலேயா கணபதி எனும் தம்பிக்கோட்டை கணபதி அவர்களின் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

வரலாற்றில் இன்று...!!!ஒருங்கிணைந்த தஞ்சை சோழ மண்டலத்தில் மணலி கந்தசாமி மற்றும் வாட்டாக்குடி இரணியன் போன்ற தியாகிகளுடன் இ...
03/05/2024

வரலாற்றில் இன்று...!!!

ஒருங்கிணைந்த தஞ்சை சோழ மண்டலத்தில் மணலி கந்தசாமி மற்றும் வாட்டாக்குடி இரணியன் போன்ற தியாகிகளுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் அயராது போராடி இறுதியில் சுட்டுக் கொள்ளப்பட்டு வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் பொதுவுடைமை போராளி ஜாம்பவான் ஓடை சிவராமன் அவர்களின் 74 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!!!

--------------------------------------------

மரணத்திற்குப் பயந்தவன் மாந்தர் குலத்திற்கு சேவை செய்ய இயலாது.நான் கோழையல்ல மாவீரன் என்பதை வருகின்ற தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்...!!!

----------------------------------------------
" உனக்கு என் உயிர்தானே வேண்டும். நெஞ்சிலே சுடு.
என்னை சுடுவதால் போராட்டம் நின்று விட போவதில்லை,
பாட்டாளி மக்கள் தலைநிமிர்கிற வரைக்கும் போராட ஆயிரம்
சிவராமன்கள் இந்த மண்ணில் தோன்றுவார்கள் ''
-மாவீரன் சிவராமன்

செங்குருதி சிந்திய எங்கள் மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்....!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

மே 3,4,5 முப்பெரும் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!! பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் பிறந்த,...
03/05/2024

மே 3,4,5 முப்பெரும் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!!

பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் பிறந்த, பொதுவுடைமை போராளிகள் சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, வாட்டகுடி இரணியன் ஆகிய மாவீரர்களின் நினைவு தினங்கள்
மே 3,4,5 தேதிகளில் தொடர்ந்து வருகிறது...!!!

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து, தன்னலமற்ற பொதுவுடைமை போராளியாக இறுதி வரை வாழ்ந்து, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக இறுதி வரை அயராது உழைத்து உயிர் நீத்த இந்த தியாகிகளின் நினைவு தினங்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்...!!!

வாட்டாக்குடி இரணியனின் வரலாற்றை மையமாக வைத்து மறைந்த நடிகர் முரளி நடிப்பில் #இரணியன் என்ற திரைப்படத்தை எடுத்தனர். அதே போன்று மலேயா கணபதி அவர்களின் வரலாற்றை மையமாக வைத்து ரஜினிகாந்த் நடிப்பில் #கபாலி என்ற திரைப்படத்தை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...!!!

செங்குருதி சிந்தி களத்தில் மாண்ட எங்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

29/02/2024

பரவட்டும் எட்டுதிக்கும் எம்
மன்னவர்களின் சிலை கோரிக்கை🙏👏

#மருதுபாண்டியமன்னர்கள்👑🔥

 #மருது என்ற மூன்றெழுத்து மந்திரம்!
11/08/2023

#மருது என்ற மூன்றெழுத்து மந்திரம்!

போர்க்குடி அகமுடையார் 🔥👑🚩
09/08/2023

போர்க்குடி அகமுடையார் 🔥👑🚩

08/08/2023

முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனமான, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மாமன்னர் சின்ன மருது பாண்டியர் வெளியிட்ட #ஜம்புத்தீவு_பிரகடனத்தை அரசியல் மேடைகளில் பதிவு செய்தமைக்கு தமிழக பாஜக தலைமைக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!

தமிழக பாஜக இந்த பெரும் வரலாற்றுக்கு உரிய மரியாதை செய்ய நினைத்தால், #திருச்சி திருவரங்கம் கோவில் பகுதியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுங்கள்!

மேலும், என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசிக்க கூடிய நமது அகமுடையார் உறவினர்கள் ''திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்'' என்ற கோரிக்கை மனுவை தொடர்ந்து தாருங்கள்!

#மருதுபாண்டிய_மன்னர்கள்
#1801ஜம்புத்தீவுபிரகடனம்
#திருச்சியில்_நினைவுச்சின்னம்

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when அகமுடையார் வரலாறு மீட்புகுழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share