
26/07/2025
இந்த ஆயிரம் ஆண்டுகளில் பாரத தேசமும் உலகமும் எவ்வளவோ மாறிற்று, இந்த ஆயிரமாண்டில் வாழ்ந்த பெரும் பணக்காரனை யாரும் தேடவில்லை, பெரிய பெரிய மாளிகை கட்டியவனை யாரும் தேடவில்லை, பெரும் அரசனின் செங்கோலை யாரும் தேடவில்லை
பெரும் வாழ்வு வாழ்ந்தவன் கல்லறை கூட இருக்குமிடம் அறிய யாரும் விரும்பவில்லை, எதையெல்லாமோ கட்டி கம்பீரமாய் நின்றவனையும் வரலாறு திரும்பிபார்க்கவில்லை அவர்களும் புதைந்தே போனார்கள்
மாட மாளிகைகள், மாபெரும் சேனைகள், கற்றோர் அவைகள் , வாத மண்டபங்கள், வாள்முனையில் அடக்கிய வல்லரசுகள் என எல்லாம் மறைந்தன, அசைக்கமுடியாதவை என சொல்லபட்ட எல்லாம் மறைந்தன
எவன் சிவனுக்காய் வாழ்ந்தானோ, யார் சிவனுக்காய் அரசு செலுத்தினானோ, யார் சிவனை கொண்டாடி ஆலயம் கட்டிவைத்தானோ அவனைத்தான் உலகம் தேடுகின்றது
ஜெயங்கொண்டம் அருகே தேசமே கூடி போற்றி கொண்டிருப்பது அவனைத்தான், சிவனுக்காய் வாழ்ந்தவர் சின்னமற்று போவதில்லை, தன் அடியார்களை பல்லாயிரம் தலைமுறை கடந்தும் சிவன் கைவிடுவதுமில்லை
ஆலயம் கட்டியவன் சாலவும் நிலைப்பான், ராஜேந்திரனும் ராஜரானும் அப்படி நிலைத்தார்கள்
கங்கை கரையினையினையும் காவேரி கரையினையும் இணைத்தவன் ராஜேந்திரன், அவனைபோல இந்த தேசத்தை முழுக்க இணைத்து கொண்டிருப்பவர் மோடி
அவருக்கும் தமிழகத்துக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு அதிகம், அந்த தொடர்பில் ராஜேந்திர சோழனின் பெருவிழாவுக்கு அவரின் ஜென்மாந்திர தொடர்பு அவரை அழைத்து வருகின்றது
பெருவாழ்வு வாழ்ந்த சிவனடியார் இனம், சிவனடிமை இனம், சிவனுக்காய் வாழ்ந்த இந்த தமிழினம் சார்பாக அவரை வரவேற்பதில் ஒவ்வொரு தமிழ் இந்துவும் பெருமைபடுகின்றான்
ராஜேந்திரனின் மெய்கீர்த்தியினை நம்மோடு சேர்ந்து மோடி பாடட்டும்
ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
துடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தொல் பெருங்காவல் பல்பழந் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு
ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிர்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமணைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுணித் தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சூரனை முறணுறத் தாக்கித்
திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு"
பாரதம் மட்டுமல்ல லங்காபுரி, கிழக்காசியா என எல்லா இடமும் அவன் இந்து மன்னனாக ஆட்சி செய்த வரலாற்றை இந்த மெய்கீர்த்தி பாடுகின்றது
இன்று இந்த நாடுகள் மேலெல்லாம் ஆதிக்கம் செலுத்தும் மோடி அவன் சாயல், அந்த இந்து மன்னனின் பெரும் சாயல், அவர் அங்கு வந்து நிற்பது சால சிறந்தது
நாங்கள் சூரிய குல ராமனின் வம்சம் என மார்தட்டி கோசலை நாட்டையும் ஆண்டு சிவனுக்கோர் மகனாய் நின்ற அந்த உத்தம பக்தனுக்கு ராமனுக்கு ஆலயம் கண்ட மோடி வாழ்த்தி நிற்பது முக்காலத்திலும் சிறந்த தருணம்
நெற்றியெல்லாம் நீறு பூசி , ருத்திராட்சம் சூடி சிவனடியாராய் நின்று மோடியோடு அந்த சிவகொழுந்தின் பெரும் புகழை பாடுவோம்
அவன் கண்ட இந்துராஜ்ஜியம் மீண்டும் எழும்பட்டும், அவனின் சிவராஜ்ஜியம் பெரிதாய் ஒளிவிட்டு ஜொலிக்கட்டும்
"ஹர ஹர மகாதேவா.."
சிந்தையும் மூலமும் பிரம்ம ரிஷியார் 🙏