Mathura Calendar

Mathura Calendar Updates Daily -- Tamil Calendar Digital Version Updates Daily -- Tamil Calandar Digital Version

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!*'சிறுதுளி பெருவெள்ளம்' ...
20/07/2025

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!*
'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்கள், கோடிகளை சேர்க்க முடியும்.
அது எப்படி... அதற்கான 10 டிப்ஸ்களைப் பார்க்கலாம்...
1. எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அப்போது, நீங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியதாக இருக்காது.
2. சடன் லன்ச் பிளான்களை தவிருங்கள். ஒரு மாதத்திற்கு இவ்வளவு முறை தான் வெளியில் சாப்பிட வேண்டும் என்று எதாவது கணக்கு வைத்துகொள்ளுங்கள். அந்தக் கணக்கை தாண்டி வெளியில் உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு 'நோ... நோ'.
3. தினமும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை கணக்கு வையுங்கள். அப்போது தான், கொஞ்சம் செலவு கையை மீறினாலும், சட்டென நம்மை நாமே செலவு செய்வதில் இருந்து கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.
4. ஒரு நாளைக்கு இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒரு லிமிட்டை செட் செய்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒருவித கட்டுப்பாட்டை தரும்.
5. சமையல் பொருள்களை தனித்தனியாக வாங்குவதை விட, திட்டமிட்டு பல்க் ஆக வாங்கினால், காசு கொஞ்சம் சேமிக்கலாம்.
6. தேவையில்லாத போது, மின்சார சாதனங்களை அணைத்துவிடுங்கள்.
7. பெரும்பாலான பயணங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லலாம்.
8. ஆன்லைனில் ஒரு பொருளை பார்த்த உடன், ஆர்டர் போட்டுவிடாதீர்கள். கார்ட்டில் போட்டு கொஞ்சம் காலம் வைத்திருங்கள். இந்த இடைவெளியில், 'அந்தப் பொருள் உங்களுக்கு தேவையானதா... இல்லையா?' என்பது தெரிந்துவிடும்.
9. ஒரு நாளுக்கு ரூ.50 - 100 சேமிப்பாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ரூ.50 என்றாலும், ஒரு ஆண்டிற்கு ரூ.18,250 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
10. எதற்கெடுத்தாலும், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், கையில் இருந்து செலவு செய்யப் பாருங்கள். கையில் காசு இல்லாத சூழலில், கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், சலுகை கிடைக்கும் என்ற சூழலில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள்.
11. தேவையில்லாத சப்ஸ்கிரிப்ஷன்களை கேன்சல் செய்யுங்கள்.
12. தினமும் தூங்கப்போவதற்கு முன்பு 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த ஐந்து நிமிடங்களில், இன்று எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள், எது தேவையில்லாத செலவு என்று பாருங்கள். இதை வைத்து அடுத்த நாளை திட்டமிடுங்கள்.
'இதெல்லாம் செஞ்சா பணக்காரர் ஆகிடலாமா?' என்ற கேள்வி, உங்கள் மைண்ட் வாய்ஸ் ஆக எட்டிப்பார்க்கும்.
இவற்றை செய்வதால் மட்டும் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆகிவிட முடியாது. ஆனால், நீங்கள் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆக இதுவும் உதவும்.

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால...
19/07/2025

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்
36. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்:1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது2. yahoo Google ஐ நிராகரித்தது3. கோடாக் டிஜ...
18/07/2025

வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்:
1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது
2. yahoo Google ஐ நிராகரித்தது
3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது
வாழ்க்கை பாடங்கள்:
1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள்
2. மாற்றத்தைத் தழுவுங்கள்
3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள்
மேலும் இரண்டு கதைகள்:
1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது
2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது
மேலும் பாடங்கள்:
1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்
2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள்.
3. புதுமைகளைத் தொடருங்கள்
மேலும் இரண்டு கதைகள்:
1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார்
2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார்.
மேலும் பாடங்கள்:
1. வயது என்பது வெறும் எண்
2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்
இறுதியாக:
ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது.
பாடங்கள்:
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்!
✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்
✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்
✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வே...
17/07/2025

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..
தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்*..
அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..
இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்...
ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரை களையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ???
போர் புரிவதற்காக மட்டும்தான் !!!
யானைப்படை மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??
தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...
1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..
அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...
எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்...
உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!!
ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள "படை நிலை காடுவெட்டி" என்ற ஊரே சாட்சியம்...
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை... இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...
ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள், குதிரைகள், காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???
உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக் கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால், *கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை* அறிந்தவனா அவன்??
போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித் துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா???
தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன்..
தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...
நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..
முக்கியமாக, பல்வேறு பொழுது போக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை...
ஆம், சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன்...
தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே!
மாமன்னன் ராஜேந்திர சோழன்...
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...
தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு.

கோடாக் என்றொரு நிறுவனம் இருந்தது தெரியுமா? அந்த நிறுவனம் எப்படி திவால் ஆனது எனும் கதையை அச்சிட்டு மேஜை மீது தொங்கவிட்டு ...
17/07/2025

கோடாக் என்றொரு நிறுவனம் இருந்தது தெரியுமா? அந்த நிறுவனம் எப்படி திவால் ஆனது எனும் கதையை அச்சிட்டு மேஜை மீது தொங்கவிட்டு தினமும் படிக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஏன் தெரியுமா..?
கோடாக் நிறுவனம் 133 ஆண்டுகளாக கேமரா துறையின் உச்சத்தில் இருந்தது.
அமெரிக்காவின் 90%க்கும் அதிகமான கேமரா சந்தையை இந்த நிறுவனம்தான் 133 வருடங்களாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அவ்வாறெனில் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால் 2012-ஆம் ஆண்டு தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அது அறிவித்தது. காரணம் என்ன? டிஜிட்டல் துறையின் வருகை.
1975-ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராவின் யோசனையை அந்த நிறுவனத்துக்கு ஒரு பொறியாளர் வழங்கினார்.
ஆனால் அந்த நிறுவனமோ அவரை ஏளனம் செய்து புறக்கணித்தது. தமது உற்பத்தியைத் தவிர வேறெதையும் உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
விளைவு 2012-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் முழுமையாக திவாலானது. இன்று அப்படியொரு நிறுவனமே சந்தையில் இல்லை.
அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கிய ஒரு நிறுவனம் ஏன் ஓரங்கட்டப்பட்டது?
விடை எளிது. உங்களை நிலைநிறுத்த வேண்டும் எனில்; உங்கள் துறையில் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
இல்லையேல்... நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். ஓரங்கட்டப்படுவீர்கள். பரணில் கிடக்கும் பழைய பொருட்களைப் போன்று கவனிப்பாரற்று வீசப்படுவீர்கள்.
கோடாக் நிறுவனத்தைப் போன்று திவாலாகிவிடுவீர்கள்.
"யாருடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதோ அவர் தோல்வியடைந்தவர்'' என்று ஹஸனுல் பஸரி (ரஹ்) கூறுகின்றார்.
நூஹ் மஹ்ழரி
https://www.jaffnamuslim.com/2025/07/blog-post_999.html

மன அமைதிக்கு..தினமும் .படித்து நினைவு படுத்தி, கடைபிடிக்க வேண்டியது..உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டு...
16/07/2025

மன அமைதிக்கு..
தினமும் .படித்து நினைவு படுத்தி, கடைபிடிக்க வேண்டியது..
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்..
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.
அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும்.
அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால் தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும்,
கணவன், மனைவியாக இருந்தாலும்,
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
எந்த உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வது தானே அவர்களின் விதி.
இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்.
அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .
அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும் அதை சந்திக்க கற்றுக்கொள்.
துன்பம் வந்தால் அதை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.
இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்..

*பிரபஞ்ச சக்தியின் சத்தியமான வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை நெறி முறைகள்*💐🐯உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங...
15/07/2025

*பிரபஞ்ச சக்தியின் சத்தியமான வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை நெறி முறைகள்*
💐🐯உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டும் தேவை. நிறைய பொறுமை. வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை. தவறு செய்தவர்களை அழைத்து செல்லும் தனி உடமை.
💐🐯வறுமை என்பதும் வசதி என்பதும் வேறு வேறு வகையான மன நிலைகள் மட்டுமே. இதை உணர்ந்து கொண்டால் மாயை என்பது நீங்கி துன்பம் என்பது பொய் தான் என்பதை உணர்ந்து கொள்வோம்.
💐🐯துன்பமும் இன்பமும் இரு வேறு மன நிலைகள் மட்டும் தான். ஏற்றுக் கொள்ளும் போது துன்பமும் தன் வலிமையை இழக்கின்றது.
💐🐯வெற்றியை உங்கள் தலைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். தோல்வியை உங்களது இதயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.
💐🐯உங்கள் இலக்கை அடையும் வரை காத்திருக்க அவசியமில்லை. இலக்கை அடைவதற்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நினைத்து பெருமைப் பட வேண்டும்.
💐🐯 எல்லா பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி இப்போது நீங்கள் கண்டறிய அவசியமில்லை. மாறாக இந்த தருணத்தில் தன்னை சிறந்தவராக உணர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கண்டறியுங்கள்.
💐🐯ஏதேனும் சில விஷயங்கள் தவறாக நடந்தால் சற்று உங்கள் மன நிலையை நிதானப் படுத்துங்கள். பிறகு நன்றாக நடைபெறும்.
💐🐯நல்ல விஷயங்களுக்கு மனதார நன்றி கூறுங்கள். இதுவே சிறந்த வாழும் கலை ஆகும்.
💐🐯 நீங்கள் எதை அடைய விரும்புகின்றீர்களோ அதன் பிரதிபலிப்பாக இருங்கள்.
💐🐯 அன்பைப் பெற விரும்பினால் அன்பைக் கொடுங்கள். உண்மையை அடைய விரும்பினால் உண்மையாக இருங்கள். மரியாதை வேண்டுமானால் மரியாதை கொடுங்கள். நீங்கள் கொடுப்பதே உங்களிடம் வந்து சேரும். இதுவே என்றும் மாறாத நியதி ஆகும்.
💐🐯நாம் எதிர் கொள்ளும் உணர்வு பூர்வமான ஏமாற்றங்கள் தான் நமக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றது.
💐🐯வேதனைகளும் சோதனைகளும் நமக்கு வருவது மனிதர்களை நாம் அடையாளம் காணத் தான்.
💐🐯இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்தவர்கள் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்பதை அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
💐🐯கவலைகள் எங்கே இருந்தாலும் புன்னகைகள் நம்மிடம் தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
💐 கு பண்பரசு

ஒரு நாள் ஒரு தகப்பன் தன் மகனுக்கு ஆணிகள் நிறைந்த ஒரு பையைக் கொடுத்து அவனிடம் கூறினார்: மகனே, நீ ஒருவரை அவமானப்படுத்தும் ...
14/07/2025

ஒரு நாள் ஒரு தகப்பன் தன் மகனுக்கு ஆணிகள் நிறைந்த ஒரு பையைக் கொடுத்து அவனிடம் கூறினார்: மகனே, நீ ஒருவரை அவமானப்படுத்தும் போதோ அல்லது ஒருவரை அடித்தோ அல்லது யாரையாவது புண்படுத்தும்போதோ, தோட்டத்தின் சுவருக்கு சென்று அதில் ஒரு ஆணியை அடி!
அப்பா ஏன் அப்படிச் சொன்னார் என்று சிறுவனுக்குப் புரியவில்லை! ஆனால் அவர் தனது தநதையின் கட்டளைக்கு இணங்கி, ஒவ்வொரு முறையும் அவர் ஒருவருக்கு அநீதி இழைக்கும்போது, ​​​​யாருக்காவது ஏசும் போது அல்லது ஒருவரை காயப்படுத்தும்போது, ​​அவர் அந்த சுவரில் ஒரு ஆணியை அடித்தார்!
நாட்கள் செல்லச் செல்ல, சிறுவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான், வேலியில் எந்த ஆணியையும் அடிக்காத ஒரு நாளை அடையும் வரை அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைகிறது!
அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவன் தனது தந்தையிடம் சென்று அதைப் பற்றி அவரிடம் கூறினார், எனவே அவர் அவரிடம் கூறினார்: நல்லது, மகனே! நீங்கள் இப்போது தன்னையும் தன் உள்ளத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு நபர்!! ஆனால் உங்கள் பணி இன்னும் முடியவில்லை!
உடனே சிறுவன் ஆச்சரியப்பட்டு சொன்னான்: இதற்கு பிறகு நான் என்ன செய்வது அப்பா?? தந்தை கூறினார்: ஒவ்வொரு நாளும் நீங்கள் யாரையும் தொந்தரவு செய்யவோ, காயப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ செய்யாமல், அந்தச் சுவரில் இருந்து ஒரு ஆணியைப் பிடுங்குங்கள்!
உண்மையாகவே, நாட்கள் கடந்தன, அந்தச் சிறுவன் அந்தச் சுவரில் இருந்த கடைசி ஆணியை அகற்றும் நாளை அடையும் வரை, யாருக்கும் தீங்கு செய்யாமல், ஒவ்வொரு நாளும் ஆணிகளை அகற்றிக்கொண்டே இருந்தான்!! அவன் மகிழ்ச்சியில் இருந்து பறந்து தந்தையிடம் சென்று ஒரு ஆணி மாத்திரம்தான் உள்ளது என்று சொன்னான்!
இதோ.. தகப்பன் தன் மகனை சுவரருகே அழைத்துச் சென்று கூறினார்: நல்லது, மகனே! நீங்கள் மனதை கட்டுப்படுத்தும் நபராக மாறவில்லை ! ஆனால் யாருக்கும் தீங்கு செய்யாத நல்லவனாக மாறிவிட்டாய்!!
ஆனால்... வேலியில் அந்த ஆணிகள் விட்ட ஓட்டைகளைப் பாருங்கள்!!!
என் மகனே, நீ அடித்து விட்ட ஆணிகளை உன்னால் அகற்ற முடிந்தது, ஆனால் அதன் மூலம் ஏற்பட்ட துளைகளை உன்னால் அழிக்க முடியாது, ஒரு போதும் அழிக்க முடியாது!
மனிதர்களும் அப்படித்தான் மகனே!! நீங்கள் ஒருவரை காயப்படுத்தும்போது, ​​அவர்களின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆணி அடிக்கிறீர்கள்! மன்னிப்பு கேட்டு அந்த ஆணியை கழற்றினாலும் அதன் சுவடு நீங்காது!! மாறாக, அந்த நபர் உயிருடன் இருக்கும் வரை அது ஒரு வலிமிகுந்த நினைவாகவே இருக்கும்.💖

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே 1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...நின்று போ...
13/07/2025

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

12/07/2025

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.*🥺
📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...
📷 எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...
📷 நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்...
📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
📷 அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...
📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...
📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...
📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...
📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...
📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...
📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
📷 மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே! என்னை மன்னித்து விடு...
📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...
📷 எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.
*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்*🤗

Address

Aundipatti

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 2pm

Telephone

9944274992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathura Calendar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathura Calendar:

Share