Mathura Calendar

Mathura Calendar Updates Daily -- Tamil Calendar Digital Version Updates Daily -- Tamil Calandar Digital Version
(4)

செல்வம் குறைவதின் அறிகுறிகள்...1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.2. வீட்டில் ...
30/11/2025

செல்வம் குறைவதின் அறிகுறிகள்...
1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
அவசியம் அனைவருக்கும் பகிருங்கள்...

இறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிக்கித் தவிக்கும் 12 உண்மை சம்பவங்கள்”வங்கி கணக்கு,FD,ஓய்வூதியம்,ச...
29/11/2025

இறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிக்கித் தவிக்கும் 12 உண்மை சம்பவங்கள்”
வங்கி கணக்கு,
FD,ஓய்வூதியம்,சொத்து,
LIC,,PF,Legal Heir,scholarship,
ration card delete,
government death benefit etc...
ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்காதது…
ஒரு காகிதம் இல்லாதது மாதிரி இல்லை.
👉 அது ஒரு குடும்பத்தின் முழு வாழ்க்கையை நின்றுவிடச் செய்யும் மிகப்பெரிய பிரச்சனை.
ஆனால் இந்த உண்மையை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம்.
இங்கே 12 இடங்களில் குடும்பங்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்:
1️⃣ வங்கி கணக்குகள் முழுமையாக முடக்கம்
மரணம் பதிவு செய்யாததால் கணக்கை ஓபன் செய்ய முடியாது.
FD / RD / Joint account release கூட முடியாது.
2️⃣ ஓய்வூதியம் உடனடியாக நிற்கும்
அதைக் தொடர்ந்து பெற முடியாமல், குடும்பம் வருமானமின்றி நிற்கின்றது.
3️⃣ LIC / Insurance claim முழுமையாக தடை
சான்றிதழ் இல்லாமல் எந்த காப்பீடும் release ஆகாது.
4️⃣ PF / Gratuity பெற முடியாது
இந்த ஒரு காகிதம் இல்லாததால் ஆயிரங்கள் – லட்சங்கள் pending.
5️⃣ சொத்து பெயர் மாற்றம் முழுமையாக நிற்கும்
பத்திரம் எதையும் தொடர முடியாது. Mutation impossible.
6️⃣ Ration card delete/update செய்ய முடியாது
இது காரணமாக future schemes அனைத்தும் தடைப்படும்.
7️⃣ Scholarship / கல்வி உதவி நிற்கும்
பிள்ளைகளுக்கும் பாதிப்பு.
8️⃣ Accident / death compensation கிடைக்காது
9️⃣ Bank locker access முடியாது
🔟 Court case documents process முடியாது
1️⃣1️⃣ Government death benefits release ஆகாது
1️⃣2️⃣ குடும்பம் months or years அலைச்சல் — காரணம் “ஒரே ஒரு சான்றிதழ்
⭐ மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு:
“21 நாட்களில் பதிவு செய்யலாம்… காலம் இருக்கே” என்று நினைத்துவிட்டு
6 மாதம் / 1 வருடம் கழித்து ஓடத் தொடங்குவது.
👉 அந்த நேரத்தில் தான் biggest problems ஆரம்பமாகிறது.
⭐ சரியான வழி:
✔️ மரணம் நடந்த 24 மணி நேரத்துக்குள் medical confirmation
✔️ 21 நாட்களுக்குள் ஆன்லைன் / corporation / panchayat entry
✔️ தாமதமானால் Delayed Registration Form
✔️ மறுக்கப்பட்டால் Revenue Divisional Officer (RDO) புகார்
⭐ முக்கியம்:
மரணம் பதிவு செய்யாவிட்டால்,
வாரிசு சான்றிதழ், சொத்து, ஓய்வூதியம்—எதுவும் முடியாது.
⭐ இன்றைய கருத்து:
இறப்பு சான்றிதழ் ஒரு காகிதம் இல்லை…
ஒரு குடும்பத்தை காப்பாற்றும் வாழ்க்கை ஆவணம்.
உங்கள் குடும்பத்திலும் இதுபோன்ற பிரச்சனை இருக்கிறதா?
இது தொடர்பான மேலும் விளக்கங்கள் தேவையா?
என்னை தொடர்பு கொள்ளலாம்.
S.K. முத்துராமன்
நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு
📞 9843438000




 #இறைவன் ?????? ( கொஞ்சம் தனிமையில் , ஆழ்ந்து அமர்ந்து உணர்ந்து படியுங்கள் , உங்களுள் ஓர் புது உற்சாகம் தானே பிறக்கும் ....
28/11/2025

#இறைவன் ?????? ( கொஞ்சம் தனிமையில் , ஆழ்ந்து அமர்ந்து உணர்ந்து படியுங்கள் , உங்களுள் ஓர் புது உற்சாகம் தானே பிறக்கும் .. )
உங்களை விட்டு என்றும் நீங்கவே முடியாதவன் !!
உங்களுக்கு என்றும் அருளிக்கொண்டே இருப்பவன் !!
உங்களை தனித்துவமாக கவனித்து அருள்பவன் !!
உங்களை உங்களைவிட நேசித்து கொண்டே , தன்னுள் வைத்து கொண்டு ஆடுபவன் !!
உங்களின் தேவையை அறிந்துணர்ந்தவன் !!
உங்களுக்காதை எல்லாம் , உங்களுக்காக பேணி , காத்து கொண்டே இருப்பவன் !!
உங்களிடம் ஏதும் எதிர்பார்க்காதே !! உங்களுக்கு தன்னை கொடுத்துக்கொண்டே இருப்பவன் !!
உங்களின் அசிங்கம் முதல் அற்புதம் வரை பொறுத்து , என்றும் மாறாதே அருளியாள்பவன் !!
உங்களை , உங்களைவிட நன்று அறிந்து உணர்ந்தவன் !!
உங்களுக்கு என்றும் அவனே !!
உங்களுக்கு எப்படியும் அவனே !!
உங்களுக்கு எதுவாகவும் அவனே !!
உங்களுக்காக இப்பிரபஞ்சத்தையே படைத்தவன் !!
உங்களுக்காக இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் , உங்களுக்கு பணிசெய்யும்படி இணைத்தவன் !!
உங்கள் எண்ணத்தை சொல்லாதே புரிந்தவன் !!
உங்கள் எண்ணமே உங்கள் வேண்டுதலை உணர்பவன் !!
உங்கள் எண்ணப்படி , எண்ணியத்தையெல்லாம் , எண்ணாதே கூட , அருளிக்கொண்டே இருப்பவன் !!
உங்களை தெரிந்தவன் !!
உங்களுக்கு தெரியவேண்டியதை தெரிவிக்க , இந்த பிரபஞ்சத்தில் உள்ளதுக்கு எல்லாம் , உங்களுக்கு தெரியவேண்டியதை உங்களுக்காக தெரியும்படி செய்தவன் !!
உங்களுக்கு முன்னே பிறக்கவேண்டியது , உங்களுக்கு பின்னே பிறக்க வேண்டியது , உங்களுடன் பிறக்க வேண்டியது என்று உங்களுக்காகவே பார்த்துப்பார்த்து படைத்தவன் !!
உங்களின் தேவையை பூர்த்தி செய்ய , எது எப்போது எப்படி படைத்து வளரவேண்டுமோ அப்படி இடையறாது செய்துகொண்டே இருப்பவன் !!
உங்களுக்காக எதிலும் அவனே கலந்திருந்தது , உங்களுள்ளும் , உங்களுடனும் , உங்களுக்காகவும் வாழ்வதையெல்லாம் வாழ்வித்திருப்பவன் !!
உங்களை என்றும் , எதிலும் , வெறுக்காதவன் !! ஒதுக்காதவன் !!
உங்களை எப்படியும் , எப்போதும் ஏற்றுக்கொண்டவன் !!
உங்களுக்காக எதையும் செய்ய வல்லவன் !!
உங்களை , உங்களாக்கி , உங்களுக்கே , உங்களை அருளிக்கொண்டே இருப்பவன் !!
உங்கள் இருப்பில் உணராத இறைவன் எங்கும் , எப்போதும் இல்லை ..
வாழ்த்துகள்
இப்படியான உங்களுக்கான ஒருவனே இருக்கிறான் , என்றும் , எப்போதும் , எப்பிறவியிலும் , பிறவிகடந்தும் ...
திருச்சிற்றம்பலம்

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உட...
27/11/2025

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
இஞ்சி
இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
குறிப்பு
இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

 #கவலைப்படுவதால்  #என்ன  #நிகழ்கின்றது என்று  #உணர்ந்தால் !!??  #கவலைப்படுவதை  #நீங்களே  #தவிர்த்துவிடுவீர்கள் !!உங்கள் ...
26/11/2025

#கவலைப்படுவதால் #என்ன #நிகழ்கின்றது என்று #உணர்ந்தால் !!?? #கவலைப்படுவதை #நீங்களே #தவிர்த்துவிடுவீர்கள் !!
உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பே நீங்கள் வாழும் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றது !!
அதாவது உங்கள் எண்ணத்தின் அதிர்வலைகளை சாத்தியப்படுத்திக்கொண்டே இருக்கின்றது இறைப்பேராற்றல் ..
அதாவது உங்கள் எண்ண அலைகள் உங்களிடம் இருந்து வெளிப்பட்டு, அதிலும் அந்த எண்ணத்தை எவ்வளவு ஆழ்ந்து நினைக்கிறீர்களோ, அவ்வளவு வீரியத்துடன் அது பிரபஞ்சபேராற்றலோடு கலந்து அந்த எண்ணத்திற்கு தொடர்புடையதை எல்லாம் உங்கள் எண்ணம் போல மாற்றி அதை உங்களிடம் ஈர்த்து வந்து சேர்த்துவிடும் !!
இப்போது கவலை என்ற உணர்வை கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள்..
இது இப்போதே இப்படி இருக்கே !! இது இன்னும் இப்படி ஆகிவிட்டால் இன்னும் பாதிக்குமே என்பதே உங்கள் கவலையின் அடிப்படையான காரணமாக இருக்கும் ..
இப்படியே கவலையை குறித்து நீங்கள் இன்னும் இன்னும் ஆழ்ந்து ஆழ்ந்து நினைத்து,
அது எப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் தாக்கத்தை விளைவிக்க போகிறது என்ற உங்கள் எண்ணமாகிய ஏக்கமாகிய எதிர்பார்ப்பை இறையாற்றலிடம் விதைத்து ..
அதற்கான பலனை அனுபவிக்கிறீர்கள் என்பதே உண்மை ..
இப்போது கவலைப்படுகிறேன் என்ற உணர்வு மேலும் உங்கள் விருப்பமான கவலை என்ற உணர்வை நீங்கள் மேலும் அனுபவிக்க வழிசெய்கிறது ..
எப்படியும் உங்களை கடந்து போவதை தான் நீங்கள் எப்போதும் எதிர்கொள்கிறீர்கள் என்பதே நிஜம் !!
அப்படி கடந்து போவதை கவலை படுகிறேன் என்ற பெயரில் இழுத்து வந்து சிந்தித்து எண்ணமாக்கி அதை நீங்களே பிரதிபலிக்க செய்து அதன் தாக்கத்தை அனுபவித்து !!
நான் நினைத்ததுபோலவே நடந்து விட்டது என்றும் புலம்புவதும் நீங்கள் தான் ..
முடிந்ததை எண்ணி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை !!
இனி இப்படி கவலைப்படுவதால் நீங்கள் மேலும் கவலையை வரவேற்கிறீர்கள் !!
இந்த கவலை என்ற எண்ணத்தை மாற்றவே இறைவழிபாடு என்ற ஒன்று நமக்கு வழிகாட்டுகிறது ..
எப்படியும் இறைவன் இருக்கிறான், அவன் நாமத்தை சொல்வோம், பாடுவோம், கொண்டாடுவோம் !!
எவ்வளவோ பிரச்சனையில் இருந்து எல்லாம் நம்மை காப்பாற்றிவிட்டு இருக்கிறான் தானே !!
அவனே இதையும் சரிசெய்வான் என்ற திடம் உங்களுள் பெறுக ..
அதுவும் உங்கள் எண்ண அலைகள் வழியே பிரதிபலித்து ..
முடியாது என்ற ஒன்றை கூட எப்படி முடிந்தது என்று நீங்களே ஆச்சரியப்படும்படி முடிந்து கடந்து வந்து விடுவோம் !!
எண்ணத்தின் ஆளுமைக்கு நீங்கள் அடிமையாகாது !!
எண்ணத்தை நீங்கள் உங்கள் ஆளுமைக்கு கொண்டுவர தெரிந்துவிட்டால் !!
இன்பமே எந்நாளும் ................
திருச்சிற்றம்பலம்

12000 சாவுகளைப் பார்த்தவரின் 12 கட்டளைகள்.----------------------------------------------------------வாரணாசியில் “காசி லா...
25/11/2025

12000 சாவுகளைப் பார்த்தவரின் 12 கட்டளைகள்.
----------------------------------------------------------
வாரணாசியில் “காசி லாப் முக்தி பவன்” என்ற விடுதி உள்ளது. மரணம் இன்னும் ஒரு வாரத்துக்குள் நிகழ்ந்து விடும் என்று ஊர்ஜிதமாய்த் தெரிந்து விட்டவர்கள் இங்கேஇறுதியாகச் சென்று தங்கி விடுவார்கள். இங்கு 40 ஆண்டுகளாக பைரவ்னாத் ஷுக்ளா என்ற ஒரு மானேஜர் இருந்து வருகிறார். 12000 சாவுகளைப் பார்த்தவர்.
இவரது 11கட்டளைகளைக் கொஞ்சம் பாருங்கள்.
1 சாவதற்கு முன் எல்லாவிரோதங்களையும் மறந்து விடு.
2 எளிமையான திருப்திகரமான வாழ்க்கையைக் கைக்கொள்.
3 சக மனிதர்களின் கெட்ட குணங்களை விட்டு நற்குணங்களை எடுத்துக்கொள்.
4 உதவிகளைப் பெறவும் உதவிகளைச் செய்யவும் தயங்காதே..
5 ஒவ்வொரு சிறு விஷயத்திலும் இருக்கும் அழகை ரசிக்கத் தொடங்கு.
6 துன்பங்களை ஏற்றுக் கொண்டு அதனை எப்படி தீர்ப்பது என்று வழி தேடு.
7 சாதி, மதம் , இனம் கடந்து எல்லோரையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்.
8 நீ இவ்வுலகில் இருப்பதின் நோக்கத்தைச் செயலாக மாற்று.
9 அன்றாட ஆரோக்கியத்துக்கான நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்.
10 கருத்து முரண்பாடுகளால் மனிதர்களை வெறுக்காதே.
11 வருமானத்தில் 10 சதவீதத்தை மற்றவர்களுக்காகச் செலவிடு.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது... ‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கம...
24/11/2025

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது... ‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான்...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டு தான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்’’ என்று சொல்கிறார்கள் பெண்கள். பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.
‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன். அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்...’’ என்கிறார்கள். தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்... அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை. சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது.
‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை, ஒருசில பர்சன்டேஜ்தான்...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்’ என்ற நம்பிக்கை இல்லை. நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது. தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது. இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள ஒரு தீராத உடல் வலி, இடுப்பு வலி. தரையில் அமர்ந்தால் எழ முடியாது, சற்று நேரம்...
23/11/2025

பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள ஒரு தீராத உடல் வலி, இடுப்பு வலி. தரையில் அமர்ந்தால் எழ முடியாது, சற்று நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால், இடுப்பு வலி வந்து, வேதனை தந்துவிடும். இடுப்பு வலி தரும் துன்பம், அத்தகையது.
பொதுவாக இக்காலப் பெண்கள், அதிக உயரம் கொண்ட மிதியடிகளை அணிகிறார்கள், இதன் காரணமாக, பின்னங்கால்கள் உயர்ந்தும், கால் விரல்கள் தாழ்ந்தும் இருப்பதால், நடக்கும்போது, பாதங்களில் மிக அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, அதனால், காலில் ஏற்படும் வலி, இடுப்பில் வந்து முடிகிறது.
இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்ய, நல்லெண்ணையில் ஒன்றிரண்டு மிளகுகள் இட்டு காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி பாதிப்புகள் விலகும்
கொள்ளு குதிரைக்கு தீவனம் மட்டுமல்ல, மனிதருக்கு சிறந்த உடல் நல மருந்தும் கூட. இடுப்பு வலியை குணமாக்குவதில், சிறந்த பங்கு வகிக்கிறது, கொள்ளு.
அதிக உடல் எடையும் இடுப்பு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, அதிகமாக மது அருந்துவது போன்ற காரணங்களால், உடல் எடை சிலருக்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து மிகுந்து அது வெளியேற முடியாமல், உடலை வீங்கச்செய்யும். இதனால்கூட, சிலருக்கு இடுப்பு வலி வரலாம்.
அதிக எடை கொண்டவர்கள், உணவில் "கொள்"ளை அவ்வப்போது சேர்த்துவர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்கள் கரைந்து வெளியேறி, உடல் பருமன் வற்றி, உடல் உறுதியாகும். இடுப்பு வலியும் விலகும்.
வாரமிருமுறை உணவில் கொள்ளு இரசம் செய்து சாப்பிட்டு வர, இடுப்பு வலியைப் போக்கலாம்.
இடுப்பு வலியைப் போக்க மேலும் சில வழிமுறைகள்:
வெகு சுலபமான ஒரு வழி, பச்சைக் கற்பூரத்தை புதினா இலைச் சாற்றில் கலந்து அந்த கலவையை, இடுப்பைச்சுற்றி தடவி வர, இடுப்பு வலி குறையும்.
ஓமத்தன்ணீரை சிறிது தேங்காயெண்ணையில் கலந்து சூடாக்கி, அதில் பச்சைக் கர்ப்பூரத்தை சேர்த்து, வலியுள்ள இடங்களில் தேய்த்து வர, இடுப்பு வலி விலகிவிடும்.
தழுதாழைக் குளியல்:
தழுதாழை என்பது சிறு செடி வகை, இவை வயல்வெளிகளில் புதர்களில் மண்டி இருக்கும், உடல் வலிகளுக்கு சிறந்த நிவாரணம் தருபவை, இந்த தழுதாழை இலைகள்.
இவற்றைக் கொதிக்கும் நீரில் ஊற வைத்து, அந்த நீரில் தினமும் குளித்து வர, இடுப்பு வலி மட்டுமன்றி, உடல் வலி அனைத்தும் தீர்ந்து விடும்.
மேலும்,

நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…”  என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்குருநாதர் இட்ட கட்டளைப்படி ...
22/11/2025

நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்
குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது… ஒருவர் எம்மைச் சந்தித்து… நான் ஒரு விவசாயி… இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை. என்ன நோய் என்று தெரியவில்லை…? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை…! என்ன செய்வது…? என்றும் தெரியவில்லை என்று கூறினார்.
சாமி… நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்…” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.
யாம் இங்கு தியானத்திலிருந்து விட்டு அதன் பிறகுதான் எங்கும் வரமுடியும் என்றோம்.
தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.
விவசாயியைக் கூட்டிக் கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டுக் குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன். யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.
யாம் தியானத்தில் இருந்த நான்கு நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும் குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு, நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.
நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விவசாயின் மனைவி வாத நோயால் கை, கால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார்.
அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அந்த சமயம் காட்சியாக… விவசாயியின் தாயார் வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் மனைவியை) கூப்பிட்டார்கள்.
அப்பொழுது மருமகள்… “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே…” என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.
“ஒரு பக்கமாக எனக்குக் கை கால்கள் வலிக்கின்றது… என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு…!” என்றார்கள்.
மருமகளோ… “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.
இதைக் கண்டு மாமியார் வேதனையுடன்… “இப்படியெல்லாம் ஏசுகிறாயே முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.
மருமகளுக்குக் கோபம் வந்து… என்ன…? இப்படியெல்லாம் பேசுகிறாய்…!” என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.
1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள் மாமியாரின் இரத்தத்தில் கலப்பது, காட்சியாகத் தெரிந்தது.
2.மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகள் உணர்வுகளில் உந்தப்பட்டு அவர் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.
மேற்கூறியவாறு… ஒருவருக்கொருவர் பல மாதங்களாக “நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள்…” அதாவது,
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள் மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
2.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள் மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.
கடைசியில்… வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.
மாமியார் எப்பொழுது இறக்குமோ…? என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் “மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன்…” மாமியாரின் உயிராத்மா மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று இரத்தத்தில் கலந்து விடுகின்றது…!
சில நாட்களில்
1.மருமகளின் உடலில், மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை, மருமகளும் அனுபவிக்கத் தொடங்குகிறார்.
இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருக்கும் சமயம். குருதேவர் காட்சி கொடுத்து… இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி, உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.
விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா…? என்று கேட்டேன்.
ஆம்…! என்று ஒப்புக் கொண்டார்கள்.
யாம் சொல்கிறபடிச் செய்தால் நோய் தீரும் என்றதும் தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.
விவசாயின் குடும்பத்தில் உள்ள, அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்., தியானமிருந்து, கண்களைத் திறந்தவுடன்…
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி…
2.அந்த உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில் சொல்ல வைத்தோம்.
இவ்வாறு, பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.
1.விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
2.விவசாயின் மனைவி “இனி நான் யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…!” என்று வேண்டிக் கொண்டார்.
தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம், குரோதம், பயம், நீங்கி… உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

ஞானத்தை யாரிடம் கற்பது ?”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தி...
21/11/2025

ஞானத்தை யாரிடம் கற்பது ?
”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.
தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.
நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

வாழ்க்கைக்கு எல்லாம் தெரியும்.நிச்சயம் உங்களைவிட அதிகமாக தெரியும்வாழ்க்கையைவிட சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும் என்று ந...
20/11/2025

வாழ்க்கைக்கு எல்லாம் தெரியும்.
நிச்சயம் உங்களைவிட அதிகமாக தெரியும்
வாழ்க்கையைவிட சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
தன் தந்தையை பின்தொடர்ந்து செல்லும் பிள்ளையைப் போல...
வாழ்க்கையை பின்தொடர்ந்து செல்லுங்கள்
அந்த குழந்தைக்கு தான் எங்கே செல்கிறோம் என்று தெரியாது.
அந்த குழந்தைக்கு தன் தந்தை இருக்கிறார் என்ற தைரியம் மட்டுமே இருக்கிறது.
வழியில் ஏதாவது ஆபத்து வந்தால்
தனது தந்தை காப்பாற்றுவார் என்ற தைரியம் மட்டுமே இருக்கிறது.
அக்குழந்தை நம்பிக்கையோடு செல்கிறது
அதுபோல நாம் வாழ்க்கையை பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
ஓஷோ

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை கால...
19/11/2025

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.
6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.
7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.
8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.
9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.
11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*
இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்...

Address

12/1, Ahimshapuram 2nd Street Extension, SELLUR
Madurai
625002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 2pm

Telephone

9944274992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathura Calendar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathura Calendar:

Share