
16/03/2024
*மன்னார்குடி பகுதியில் காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்*
மன்னார்குடி நெடுவாக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை
கைது செய்ய தனிப்படை🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள்* உத்தரவின் படி, அமைக்கப்பட்டது.
🚨மேற்படி, தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தும், அப்பகுதியில் இருந்த CCTV பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் அம்மன் தாலியை திருடிய - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோவிலூர் வள்ளி நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரகாஷ் (வயது-27) என்பவரை கைது செய்தனர்.
🚨 வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து மேற்படி நபர் திருடிய தாலி மற்றும் தாலி குண்டுகள் 06 கிராம் பறிமுதல் செய்தனர்.
🚨சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.ஸ்ரீநிதி மற்றும் மன்னார்குடி Crime Team காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டதில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் காவலர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
🚨பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள்* கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.