20/06/2022
பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு
இடம்:மன்னார்குடி
நாள்:20.06.2022
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிய, நிர்வாகிகள் அவசரக் கூட்டம்.மன்னார்குடியில்தலைவர் எல் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்குறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் இணைப்பு குழுத் தலைவர்
பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு 2018ல் ஆணையம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மத்திய அரசு தண்ணிச்சை போக்கோடு வழங்கப்பட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டு தனி அலுவலகத்தில் தன்னாட்சி அதிகாரத்தோடு, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.அதனை முடக்கும் வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கோடு தன் அரசியல் லாபத்திற்காக விருப்பத்திற்கு ஆணையத்தை அடிமைப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத அனுமதியின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஜல்சக்தி துறையின் மூலம் மறைமுக சதி செயலில் ஈடுபடுவது வெளிப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம
தமிழக அரசு அனைத்துக்கட்சி குழு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தில்லி செல்ல உள்ளதாகவும், மத்திய ஜனசக்தி துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் வரைவு திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக வெளியிட்டுள்ள முதலமைச்சரின் அறிவிப்பு ஏற்க இயலாது. காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடரப்பட்ட வழக்கை ஏற்று சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உரிய வாக்கெடுப்புடன் கூடிய அங்கீகாரத்துடன் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே தான் ஆணையம் முடிவு எடுக்க முடியும்,மத்திய அரசின் பிரதிநிதியாக இடம்பெறுவர் பார்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும்.அவ்வாறு கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் ஆணையம் மத்திய அரசிடம் உதவி கோரினால் உதவிட வேண்டும்.மத்திய அரசும் மறுக்கும் பட்சத்தில் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெளிவாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கர்நாடகம் முதலமைச்சர் தன் மாநில அரசியல் லாபத்திற்காக மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டவிரோதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையின் மூலமாக ஜல் சக்தி துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்து வலியுறுத்துவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமின்றி.
ஆணையத்தை முடக்கும் சதி செயலுமாகும்.
இந்நிலையில் தமிழக அரசும் ஜல் சக்தி துறை அமைச்சர் மூலமாக ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த போவது ஏற்கத்தக்கதல்ல.இது கர்நாடகாவின் ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடும்.
எனவே இதனை மறுபரிசீலினை செய்து மத்திய அரசே கர்நாடகாவில் அரசியல் லாப நோக்கத்திற்காக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு செயல்படுவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அண்டை மாநில உறவுகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கு எதிரானது. எனவே ஆணையத்தை அச்சுறுத்தும் மேகதாது அணை கட்டுவதற்காண சட்ட விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும்.இச்செயலால் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அத்தீர்மானத்தை அனைத்துக்கட்சி குழு மத்திய அரசிடம் வழங்கி வலியுறுத்த முன்வர வேண்டும்.
ஆணையத்தில் பெரும்பான்மை கருத்தை மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உருவாக்க தமிழக முயற்சிக்க வேண்டும்
மேகதாது அணை கட்ட சட்டவிரோதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தில்
கொண்டுவரப்படவுள்ள கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை கேரள மாநிலத்தின் ஆதரவை பெற்று பெரும்பான்மை மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் நிராகரித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் தூண்டுதலால் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட அனுமதிக்கும் நோக்கோடு வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும்,மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தும் விதமாக வரும் ஜூன் 23ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூரில் நடத்துவது. அன்று காலையில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.
விவசாயிகள் நலன்தான் வணிகர்களின் நலனாக இருக்க முடியும் எனவே இதுவரையிலும் இல்லாத வகையில் சட்டவிரோதமான நடவடிக்கை மூலம் மீட்ட காவிரி உரிமையை அபகரிக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் தங்களே முன்வந்து கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கடந்தாண்டு குறுவை பயறுக்கு காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் விவசாயிகளால் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அறுவடை காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த ஆண்டும் இதுவரையிலும் குருவை காப்பீடு செய்ய எந்த நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்ய தமிழக வேளாண்துறை முன்வரவில்லை. இதனால் இந்த ஆண்டும் விவசாயிக்கு காப்பீடு திட்டம் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு தமிழ்நாட்டிற்கென தனி காப்பீட்டு திட்டத்தை தொடங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார்,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன், செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன்,தஞ்சாவூர் மாவட்ட கௌரவ தலைவர் திருப்பதிவாண்டையார்,தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி, திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் எம் கமல் ராமன், துணை செயலாளர் திருமருகள் சேகர்,உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.
இவன்,
என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர்.