arukani members

arukani members இது தமிழகத்தின் எல்லை பகுதியான ஆறுகாணி முதல் குமரி வரை உள்ள தகவல் தொடர்பு ஊடகம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவது தொடக்கதையாகி உள்ளது!கடந்த 10 நாட்களாக ஆவின் பால்...
22/07/2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவது தொடக்கதையாகி உள்ளது!

கடந்த 10 நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு, மாலை நேரம் முதல் கிடைக்காமல் இருந்து வருகிறது, இதனால் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆவின் பால் தட்டுப்பாடானது அதிகரித்துள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு!

உடனடியாக அரசு தலையிட்டு ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் பாலின் விலை ஏற்றம் காரணமாக ஆவின் பால் வாங்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் AI தானியங்கி கேமர...
22/07/2026

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் AI தானியங்கி கேமராக்களை மாவட்ட எஸ்.பி. மருத்துவர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்...

கன்னியாகுமரி: பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு, மிரட்டல் – தவெக நிர்வாகி கைதுகன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரையைச் சேர்ந்த...
22/07/2026

கன்னியாகுமரி: பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு, மிரட்டல் – தவெக நிர்வாகி கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரையைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி அனிஷா (33)க்கு, அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி சங்கர், செல்போன் மூலமும் நேரிலும் தொடர்ந்து மிரட்டியும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் மனவேதனையடைந்த அனிஷா, தனது கணவருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, கடந்த 11-ஆம் தேதி வீட்டில் உயிரிழந்தார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சங்கரை சென்னையில் கைது செய்த போலீசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வீட்டின் மீது முட்டை வீசி, தட்டி கேட்ட நபர்கள்  மீது...
22/07/2026

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வீட்டின் மீது முட்டை வீசி, தட்டி கேட்ட நபர்கள் மீது தாக்குதல்!

இச்சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தவெக நிர்வாகி கொடுத்த அழுத்தத்தின் பேரில் 13 வயது சிறுமி உட்பட குடும்பத்தினர் மீது வழக்கு மேலும் த.வெ.க. நிர்வாகி தங்களை மிரட்டுவதாகவும், தங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய கேட்டும் பாதிக்கப்பட்டோர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

13 வயது சிறுமி மற்றும் 21 வயது கல்லூரி மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லமுடியாமல் தவித்து வருவதாக வேதனை பேட்டி அளித்துள்ளார்.

தனியாக வசித்த முதியவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு* நாகர்கோவில் :  WCC கல்லூரி அருகே ஞானை தெருவில் தனியாக வசித்து வந...
22/07/2026

தனியாக வசித்த முதியவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு

* நாகர்கோவில் : WCC கல்லூரி அருகே ஞானை தெருவில் தனியாக வசித்து வந்த 60 வயது முதியவர் செல்லத்துரை வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

* 2 நாட்களாக வீடு பூட்டியிருந்ததுடன், துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

* போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது முதியவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்தார்.

* பின்னர் திருவிதாங்கோடு SDPI ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நியாஸ் அகமது தலைமையிலான குழுவினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

* வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலுக்கு செல்ல இருந்த வடமாநில மீனவர் மாரடைப்பால் உயிரிழப்பு* சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவில் மீன்...
22/07/2026

கடலுக்கு செல்ல இருந்த வடமாநில மீனவர் மாரடைப்பால் உயிரிழப்பு

* சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவில் மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த விசைப்படகில், ஒரிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கோலப்பந்தாவைச் சேர்ந்த கோந்தி சன்னியாசி - 40 என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

* கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாய ஆண்டனி ஜானி தலைமையில் 13 பேர் மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில், தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்பியபோது கோந்தி சன்னியாசி அசைவற்று கிடந்தது தெரியவந்தது.

* உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

* கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தின் பின் பகுதியில் பைக் மோதி விபத்து!கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குஞ்சாலுவிளை முன் சந்திப்பில் பத்துகாணி ப...
22/07/2026

பேருந்தின் பின் பகுதியில் பைக் மோதி விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குஞ்சாலுவிளை முன் சந்திப்பில் பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற 86D பேருந்தின் பின்பகுதியில் பைக் மோதி விபத்து!

படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பருவமழைக் காலத்தில் தடையற்ற மின் விநியோகம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற...
22/07/2026

பருவமழைக் காலத்தில் தடையற்ற மின் விநியோகம்

அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பரிந்துரை: சபரிவர்மன் காவல் மரண வழக்கு CB-CIDக்கு மாற்றம் - DGP உத்தரவு * நாகர்கோவில...
22/07/2026

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பரிந்துரை: சபரிவர்மன் காவல் மரண வழக்கு CB-CIDக்கு மாற்றம் - DGP உத்தரவு

* நாகர்கோவில் மாவட்ட சிறையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், 35, காவலில் உயிரிழந்த வழக்கின் விசாரணையை தமிழ்நாடு DGP மகேஷ் குமார் அகர்வால் CB-CID-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

- ஜூலை 9: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை வழக்கில் சபரிவர்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

- ஜூலை 13: சிறையில் சபரிவர்மன் உயிரிழந்தார். அவர் கடைக்காரராகவும், மாற்றுத்திறனாளியாகவும் இருந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை:

* உடலில் 19 வெளிக்காயங்கள் இருந்ததாகவும், மூர்க்கமான தாக்குதல் மற்றும் வலது கை எலும்பு முறிவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தாக்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் - 11 பேர்:

1. சிறை அதிகாரிகள் - 3 பேர்: தலைமை தலைமை காவலர் என். சுரேஷ், காவலர்கள் என். ஜெகன், ஜே. சிபகுமார்

2. கைதிகள் - 8 பேர்: விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரிய பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த்

* கைது செய்யப்பட்ட 8 கைதிகளும் நாகர்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

போராட்டம் மற்றும் இழப்பீடு:

* இந்த மரணத்தை தொடர்ந்து சபரிவர்மனின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை மற்றும் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை அறிவித்ததை தொடர்ந்து உடலை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்த கட்டம் :

* CB-CID தற்போது இந்த காவல் மரணம் நடந்த சூழ்நிலை, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பங்கு, சிறை நிர்வாக குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணையை நடத்தும்.

பரிந்துரை :

* கன்னியாகுமரி மாவட்ட எஸ் பி ஸ்டாலின் அவர்கள் பரிந்துரையில், சபரிவர்மன் வழக்கு CBCID க்கு மாற்றம் செய்து காவல்துறை இயக்குனர் அவர்கள் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்...
22/07/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண், தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மனஅழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டில் தவெக பிரமுகர் சங்கரை குலசேகரம் போலீசார் கைது செய்தனர்.

Address

Arukani Junction Road
Marthandam
ARUKANI

Opening Hours

Monday 5am - 10:15pm
Tuesday 5am - 10:15pm
Wednesday 7am - 10:15pm
Thursday 7am - 10:15pm
Friday 7am - 10:15pm
Saturday 7am - 10:15pm
Sunday 7am - 10:15pm

Alerts

Be the first to know and let us send you an email when arukani members posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share