TN 75 memes

TN 75 memes குமரி பக்கம்

எப்படி திட்டமிடப்படுகிறது ஐ.டி. ரெய்டு?💈💈💈திரைப்பட பிரபலங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிப...
23/01/2026

எப்படி திட்டமிடப்படுகிறது ஐ.டி. ரெய்டு?
💈💈💈
திரைப்பட பிரபலங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை என்ற, 'பிரேக்கிங் நியூஸ்' பார்த்திருக்கக்கூடும். கட்டுக்கட்டாக ஆவணங்கள், கத்தை, கத்தையாக கரன்சிகள், கிலோ கணக்கில் தங்கம் என, 'ஜேம்ஸ் பாண்ட்' கதைபோல அதன் பின்னணி விவரிக்கப்படும். ஆனால், 'ஐ.டி. ரெய்டு'களின்போது உண்மையில் என்ன நடக்கும்?

வரி ஏய்ப்பு சோதனை:

பொதுவாக, வரியை குறைக்க, வரி திட்டமிடல், வரி தவிர்த்தல், வரி ஏய்ப்பு என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இவற்றில் வரி திட்டமிடல் மற்றும் வரி தவிர்த்தல் ஆகியவை தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக, வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வரி ஏய்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த சோதனையின் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானமும், சொத்துக்களும் எப்படி சேர்ந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பார்கள். பிரபலங்களின் இடங்களில், வருமான வரி சோதனை நடக்கும்போதெல்லாம் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு எழும். மத்தியில் ஆள்பவர்கள் கை காட்டும் இடங்களில் சோதனை நடக்கிறது என்பார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், வெறும் புரளி தகவலை வைத்து ரெய்டு நடப்பதில்லை. உரிய ஆவணங்கள், பின்னணி விவரங்கள் பற்றி தீவிரமாக புலனாய்வு செய்த பின்னர்தான், வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

சினிமா ரெய்டு நிஜமா?

இந்தியாவில் எங்கும், எப்போது வேண்டுமானாலும் சோதனையில் ஈடுபட வருமான வரித்துறை அதிகாரம் படைத்தது. வரி செலுத்தப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த யாரையும் சோதனை செய்ய முடியும். வருமான வரித்துறை சோதனை என்றாலே திரைப்படங்களில் வருவது போல, வீடு, அலுவலக வாசலில், வரிசையாக கார்களில் வந்து இறங்குவது, அறைகளின் சுவற்றை சுத்தியலால் உடைப்பது, தரைக்கு அடியில் தோண்டி பார்ப்பது, பண்ணை வீட்டு பரணிலிருந்து, கட்டுக்கட்டாக பணம், நகை, பத்திரங்கள் எடுப்பது போன்ற ரகம் அல்ல. எந்த சோதனைக்கும் தகுந்த ஆவண தயாரிப்பு, வரி புலனாய்வு, இயக்குனர் முன் ஒப்புதல், சோதனை செய்யப்படும் இடங்களை முன்னரே பார்த்தல் ஆகிய பல நிலைகள் உண்டு. அதை கடந்த பின்னரே குறிப்பிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுகிறது.

எப்படி நடக்கும் ரெய்டு?

வரி அதிகாரிகள், சோதனைக்கு முன் தங்கள் அடையாள அட்டையை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து தங்களை அறிமுகம் செய்து கொள்வார்கள். வந்திருப்பவர்களிடம் சோதனைக்கான உரிய ஆவணம் (வாரண்ட்) உள்ளதா என்பதையும் சோதனைக்கு ஆளானவர்கள் உறுதி செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், வருமான வரி துறைக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க உரிமை உண்டு. சோதனைக்கு உட்பட்ட நபர்கள் தங்களுக்கான உணவு மற்றும் மருத்துவ சேவைகள் பெற உரிமை உண்டு. மேலும், சோதனை நடக்கும் இடத்தில் இருக்கவும், ஆவணங்கள் குறித்த விளக்கம் தரவும் அனுமதிப்படுவர். பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது பாடப்புத்தகங்கள் பைகளை சோதனைக்குப் பின் பள்ளிக்கு அனுப்ப உரிமை உள்ளது. பெண்களிடம், பெண் அதிகாரிகள்தான் சோதனை செய்வார்கள்.

உத்தரவிடுவது யார்?

வருமானவரித்துறை சட்டப்பிரிவு 132, உட்பிரிவு 1ன் படி, முதன்மை கமிஷனர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியின் உத்தரவின் பேரில், வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளுவார்கள். வீடு, அலுவலகம், வாகனம் போன்ற எதை வேண்டுமானாலும் சோதனையிட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. சோதனை முடியும் காலம் வரை தொலைபேசி, மொபைல் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் துண்டித்த பின்னரே சோதனையை தொடங்குவார்கள்.

பொதுவாக நகைகள், ரொக்கம், பத்திரங்கள், விலையுயர்ந்த பெயிண்டிங் போன்றவை கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பார்கள். பின்னர் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் செய்யப்படும். காட்டப்படாத நகைகளில் 250 கிராம் திருமணமான பெண்ணுக்கும் 150 கிராம் திருமணமாகாத பெண்ணுக்கும், 100 கிராம் ஆணுக்கும் வைத்திருக்க அனுமதி உள்ளது. பாதுகாப்பு பெட்டகம் அல்லது அறையின் சாவி இல்லை என்று உறுதி செய்யாப்பட்டால் அதனை உடைக்கும் அதிகாரமும் வருமான வரி அதிகாரிகளுக்கு உண்டு. அசையாச் சொத்துக்கள், வியாபாரப் பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய முடியாது.

சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர், கணக்கில் காட்டப்படாத வரவு - செலவு அல்லது சொத்து விவரங்களை மூன்றாம் நபரின் பெயரில் கூறி இருந்தால் அதை உடனடியாக சரிபார்க்கும் உரிமை அதிகாரிகளுக்கு உள்ளது. சமீபத்தில், திரைப்படத்துறை பைனான்சியர் ஒருவரிடம் நடந்த சோதனையின் போது, ஒரு பிரபல நடிகரின் பெயரும் பேசப்பட்டது. அதனால்தான், நடிகரின் வருமானத்தை சரி பார்க்க அவரிடமும் சோதனை நடந்திருக்க வாய்ப்புண்டு. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இதுபோன்ற தொடர் சோதனை நடக்குமே தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

ரெய்டுக்கு உதவும் 360 டிகிரி:

வருமானவரி துறை, இப்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் விவரங்கள் சேகரிக்கிறது. உதாரணமாக, '360 டிகிரி விவரம் சேகரித்தல்' என்ற புதிய பாணியில், அனைத்து செலவுகள், முதலீடுகள் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. வரித் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் அவை ஒப்பிடப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அளவுக்குமீறி இருக்கும்போது, உடனுக்குடன் அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்குமுன், வருமான வரிச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் காரணமாக, 'வருமான வரி சோதனை ஏன் நடத்தபடுகிறது?' என்ற விவரத்தை கோர்ட்டுகளுக்குகூட சொல்ல வேண்டியதில்லை. சந்தேகத்திற்கு வாய்ப்பு இருந்தால், உடனடியாக சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள், அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். வருமான வரித்துறைக்கு வரும் தகவல்கள், பெரும்பாலும் வதந்திகள் மற்றும் மூன்றாம் நபர்கள் தரும் விவரங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. துல்லியமாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட தொகை வருமான வரித்துறையினரால் பரிசாகவும் வழங்கப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படுகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில், கணக்கில் காட்டப்படாத பணம், சொத்துக்கள் எப்போதும் ஆபத்துதான். தகவல் தெரியும் பட்சத்தில், வருமான வரித்துறை எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்போர், தற்போது அறிவித்திருக்கும் குறைந்த வரியை செலுத்தி, தங்களிடம் இருக்கும் சொத்து, ரொக்கம் போன்றவற்றை கணக்கில் காட்டிவிட்டால், இனி வரும் இரவும், பகலும் நிம்மதியே!

10 பவுன் நகை வாங்கினாலே பத்து லட்சம் வேண்டும் எனும் சூழ்நிலையில் கல்யாண செலவில் 70% நகைகளுக்கு செலவிட வேண்டி உள்ளது.தங்க...
16/09/2025

10 பவுன் நகை வாங்கினாலே பத்து லட்சம் வேண்டும் எனும் சூழ்நிலையில்

கல்யாண செலவில் 70% நகைகளுக்கு செலவிட வேண்டி உள்ளது.

தங்களின் குடும்ப மதிப்பை காப்பாற்ற நகை வாங்க எதையாவது விற்று அல்லது கடன் வாங்கி நகை செய்ய வேண்டி உள்ளது.

இப்படி இதை அவசியம் செய்யனுமா என சுப காரியங்களுக்கு தங்க நகைகளை செய்யும் பழக்கம் நடுத்தர வர்க்கத்தில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மிகமிகக் குறைந்த அளவில்தான் ... அதுவும் தாலி செய்ய மட்டுமே... நகை வாங்குகிறார்கள்.

இதனால் வியாபாரம் குறையக்கூடாது என 22 கேரட்டுக்கு பதிலாக 9 கேரட் நகைகள் புழக்கத்திற்கு வந்து விட்டது.

37.5 % தங்கம் + 62.50 செம்பு கலப்பு என்பதால் பகுதிக்கும் கீழ் விலை குறைவாக கிடைக்கும்.

இதன் தரத்தை உறுதி செய்ய
375 என ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனைக்கு வருகிறது.

பலன்கள்:
1.விலை ரொம்ப குறைவு.

2. நகைகள் தேய்ந்து போகாமல் உறுதியாக இருக்கும். வருடக்கணக்கில் உழைக்கும்.

ஆனால் செம்பு அதிகம் கலப்பதால் நாளாக நாளாக நிறம் மங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனா திருடனுக்கு இது தெரியுமா?

இவ்வளவு பிரச்சனைகளுடன் தங்க நகைகள் அணிந்தால்தான் இருமனங்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா?

பேசாம நடுத்தர வர்க்கத்தினர் வெட்டிப் பெருமைக்கு இடம் விற்று, கடன் வாங்கி தங்கநகைளை கல்யாண சீராக போடுவதை தவிர்ப்பதே நல்லது என தோன்றுகிறது.

வசதி இருப்பவர்கள் ஆடி, பென்ஸ் கார்களில் மதிப்பா வந்திறங்கட்டும். அவங்க கூட நாம எதுக்கு போட்டி போடனும்? நாம பைக் ஸ்கூட்டரில் வந்திறங்கினாலே போதும்.😁

மலேசியாவில் நடைபெற்ற 2025 ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் K41 ஆண்கள்-U63 KG பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற க...
01/08/2025

மலேசியாவில் நடைபெற்ற 2025 ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் K41 ஆண்கள்-U63 KG பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற குமரி மண்ணின் மைந்தன் மேக்காமண்டபம் பகுதியைச் சார்ந்த கிறிஸ்டோ சஜூ அவர்களுக்கு TN 75 Memes சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 🎉 ‎

சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து ஒன்றில் ஏற்ப்பட்ட பாதிப்பால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில...
19/07/2025

சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து ஒன்றில் ஏற்ப்பட்ட பாதிப்பால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் இன்று காலமானார்.

"தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்படும் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 36 வயது பூர்த்தியான நிலையில் இன்று மரணித்தார்.

29/06/2025

ஏஏஏ ங்ங்ங்ககககக!!
எங்க குமரிக்கு வா ங்ங்ஙகககக!

நாங்க இயற்கையை வெட்டி வெட்டி வெளி மாநிலங்களுக்கு கடத்துவோங்ங்ங்ங்ககக!!

வந்து அள்ளிட்டு போ ங்க்ங்க்ங்க!!

Place: kaliyankadu to erachikulam road
#கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இரவிபுதூர்க்கடை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட தக்கலை, காட்டாத்துறை பகுதியை சே...
29/06/2025

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இரவிபுதூர்க்கடை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட தக்கலை, காட்டாத்துறை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (33), பள்ளியாடி, பணவிளை பகுதியை சேர்ந்த வினிஷ்(27), மணவாளக்குறிச்சி பெரியவிளை பகுதியை சேர்ந்த எபிஜான் (32), பள்ளியாடி சேர்ந்த பிரனிஷ் ஆகிய 4 வாலிபர் கைது. அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் 3 கிராம் மெத்தம் பேட்டமைன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

23/06/2025

Big Breaking News:

கத்தாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

முன்னதாக, கத்தார் தனது வான்வெளியை விமான சேவைகளுக்கு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் பிரதான தொழிலதிபர்களில் தலை சிறந்தவரும்,  இந்திய மக்களால் மிகவும் நேசிக...
09/10/2024

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் பிரதான தொழிலதிபர்களில் தலை சிறந்தவரும், இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப்படுகிறவருமான ரத்தன் நேவல் டாட்டா அவர்கள் காலமானார்...

அன்னார் அவர்கள் மனித நேயமும், மக்கள் மீது பேரன்பும், சமூக அக்கறையும், உதவும் பண்பும் கொண்டவர் ஆவார் ...

தனது வருமானத்தில் 65% சதவீதம் வரை எளியவர்களுக்கு உதவுவதிலும், சமூகப் பணிகளிலும் செலவிடுபவர்...

"மனிதருள் மாணிக்கம் டாட்டாவின் மரணம், அவரது குடும்பத்திற்கும், டாட்டா குழுமத்திற்கும் மட்டுமல்லாமல், அவரை நேசிக்கும் லட்சோப லட்ச மக்களுக்கும் பேரிழப்பாகும்"...

இந்தியாவின் பெருமையை வணிக உலகின் உயர்ந்த அரங்கிற்குக் கொண்டு சென்றவர், சாமானிய இந்தியாவைப் புரிந்து கொண்ட ஒரு தொலைநோக்கு...
09/10/2024

இந்தியாவின் பெருமையை வணிக உலகின் உயர்ந்த அரங்கிற்குக் கொண்டு சென்றவர்,

சாமானிய இந்தியாவைப் புரிந்து கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாளர்,

உண்மை, நேர்மை, துணிவுடமை கொண்ட தலைமைத்துவப் பண்பாளர்,

மரியாதைக்குரிய ஐயா ரத்தன் டாடா காலமானார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கடினமான காலங்களை இயக்கிய டைட்டான் கடிகாரம் இன்றோடு தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

"மத்மபூஷன்", "பத்மவிபூஷன்" டாடா அவர்களின் பணிவையும், பெருந்தன்மையையும், நம் மண்ணுக்கு ஆற்றிய மாண்புயர் சேவைகளையும் என்றென்றும் நாம் நினைவு கூறுவோம்..

இன்று 78ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முகாம் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தே...
15/08/2024

இன்று 78ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முகாம் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியபோது.

Address

Marthandam
Marthandam
629165

Alerts

Be the first to know and let us send you an email when TN 75 memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category