TN 75 memes

TN 75 memes குமரி பக்கம்
(1)

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் பிரதான தொழிலதிபர்களில் தலை சிறந்தவரும்,  இந்திய மக்களால் மிகவும் நேசிக...
09/10/2024

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் பிரதான தொழிலதிபர்களில் தலை சிறந்தவரும், இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப்படுகிறவருமான ரத்தன் நேவல் டாட்டா அவர்கள் காலமானார்...

அன்னார் அவர்கள் மனித நேயமும், மக்கள் மீது பேரன்பும், சமூக அக்கறையும், உதவும் பண்பும் கொண்டவர் ஆவார் ...

தனது வருமானத்தில் 65% சதவீதம் வரை எளியவர்களுக்கு உதவுவதிலும், சமூகப் பணிகளிலும் செலவிடுபவர்...

"மனிதருள் மாணிக்கம் டாட்டாவின் மரணம், அவரது குடும்பத்திற்கும், டாட்டா குழுமத்திற்கும் மட்டுமல்லாமல், அவரை நேசிக்கும் லட்சோப லட்ச மக்களுக்கும் பேரிழப்பாகும்"...

இந்தியாவின் பெருமையை வணிக உலகின் உயர்ந்த அரங்கிற்குக் கொண்டு சென்றவர், சாமானிய இந்தியாவைப் புரிந்து கொண்ட ஒரு தொலைநோக்கு...
09/10/2024

இந்தியாவின் பெருமையை வணிக உலகின் உயர்ந்த அரங்கிற்குக் கொண்டு சென்றவர்,

சாமானிய இந்தியாவைப் புரிந்து கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாளர்,

உண்மை, நேர்மை, துணிவுடமை கொண்ட தலைமைத்துவப் பண்பாளர்,

மரியாதைக்குரிய ஐயா ரத்தன் டாடா காலமானார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கடினமான காலங்களை இயக்கிய டைட்டான் கடிகாரம் இன்றோடு தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

"மத்மபூஷன்", "பத்மவிபூஷன்" டாடா அவர்களின் பணிவையும், பெருந்தன்மையையும், நம் மண்ணுக்கு ஆற்றிய மாண்புயர் சேவைகளையும் என்றென்றும் நாம் நினைவு கூறுவோம்..

இன்று 78ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முகாம் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தே...
15/08/2024

இன்று 78ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முகாம் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியபோது.

கனிம வளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு. . .__கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்   ஸ்ரீதர் அவர்களின் செய்திக்...
18/02/2024

கனிம வளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு. . .
__
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களின் செய்திக் குறிப்பில் இருந்து . . .


செவ்வாய்க்கிழமை 20.02.2024 காலை முதல்...

கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வள சரக்கு காலி வாகனங்கள் (Empty Vehicles) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் (Load vehicles) காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர பிற நேரங்களில் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

அதிவேகமாக மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர் மீதும் அவரை அனுமதிக்கும் உரிமையாளர் மீதும் மோட்டார் வாகன சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி தேவைப்படின் சிறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனிமவளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டை (Pass) முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- என அறிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகன ஓட்டுநர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.

நடப்பார்களா?

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் அன்பு அண்ணன்  ராக்கெட் ராஜா அவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இன்று அவர் சட்டரீதியாக...
25/01/2024

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இன்று அவர் சட்டரீதியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்று அவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்துள்ளதாக கூறப்படும் தகவலில் உள்ள உண்மைத்தன்மை சந்தேகத்தை உண்டாக்குகிறது சட்ட ரீதியாக ஒருவர் தனது வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படி சட்டத்துக்கு புறம்பாக ஆயுதங்களை வைத்துக் கொள்வார் மேலும் சில ஊடகங்கள் இந்த செய்திகளை போடும் பொழுது ரவுடி ராக்கெட் ராஜா என்ற அடைமொழியுடன் போடுகிறார்கள் இவர்களால் இன்று கைதாகி சிறையில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்பொழுது முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்றவர்களை சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த திருடர்கள் என்று சொல்ல முடியுமா அந்த தைரியம் இன்றைய ஊடகத்துறைக்கு இருக்கிறதா நாடார் சமுதாய இளைஞர்களால் போற்றப்படக்கூடிய அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களுக்கு ரவுடி என்ற முத்திரையை குத்தும் சமூக ஊடகங்களை செய்தி சேனல்களையும் பத்திரிகைகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அன்பு அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களை நேசிக்கும் கோடி சகோதரர்களில் நானும் ஒருவன்

கட்டப்பஞ்சாயத்து பண்ணுவோம் வங்க! தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் நடத்தும் அழகான நியாயமான சூப்பரான போராட்டம் !அமைச்சர்...
21/01/2024

கட்டப்பஞ்சாயத்து பண்ணுவோம் வங்க! தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் நடத்தும் அழகான நியாயமான சூப்பரான போராட்டம் !

அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளருக்கு வருவாய்துறைக்கும் என்ன பிரச்சனை?

பரபரப்பான முழு விவரம் இதோ!

ஒஹோ இதான் பிரச்சனையா ?

தமிழ்நாடு வருவாய் துறையினர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக இன்று மாலை நான்கு மணிக்கு மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. ஜஸ்டின் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அப்படி என்ன தான் பிரச்சனை என்று களத்தில் இறங்கி அலசி பார்க்க முடிவு செய்தோம், அப்படி அலசி பார்த்தபோது கிடைக்கப்பெற்ற செய்தி சற்று அதிர்ச்சிகரமாகவும் இருந்தது.

குமாரி மாவட்டத்தில் ESI மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் ESI மருத்துவமனை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முயற்ச்சிகளையும் எடுத்தார். இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தகுந்த இடத்தை கண்டுபிடிக்குமாறு தன்னுடைய நேர்முக உதவியாளர் ஜஸ்டின் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திரு. ஜஸ்டின் அவர்களும் அரசு அதிகாரிகளுடன் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இடம் கண்டுபிடிக்க களத்தில் இறங்கியுள்ளார். முதலில் கிள்ளியூர் தாலுகாவில் ஒரு இடம் கண்டறியப்பட்டது, பின்னர் அந்த இடம் மலை மற்றும் மேடும் பள்ளவுமாக இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் இடம் தேடும் பணி ஆரம்பமானது, இதற்காக அப்போதைய சார் ஆட்சியர் திரு கௌஷிக் அவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அதனை மாண்பு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களை அழைத்து நேரில் காண்பிக்கலாம் என்று ஜஸ்டின் அவர்களிடம் தெரிவிக்க, இதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர் சென்னையில் இருந்து துறை ரீதியான பணிகளை முடித்து விட்டு குமரி மாவட்டம் வந்த போது 23/0ct/2023 அன்று அழைத்து சென்று இடத்தை காண்பித்தனர். இந்த இடம் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட மணக்காவிளை என்னும் இடம் என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ESI மருத்துவமனை கட்டுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்து REGIONAL DIRECTOR ESI அவர்களுக்கு கடிதம் அனுப்ப மாவட்ட ஆட்சியரை கேட்டு கொண்டார், மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அலுவலர்களை கடிதம் எழுத ஆணையிட்டார். ஆய்வு செய்து ஆணையிட்ட பின்னர் ஒரு மாதம் கடந்தது இது குறித்து அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் திரு ஜஸ்டின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்களை அழைத்து கடிதம் எழுத அமைச்சர் கூறியிருந்தாரே, என்ன ஆனது என்று கேட்டபோது எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, இறுதியாக அந்த கடிதத்தை கையாண்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் M Section அதிகாரி திரு மகேஷ் மாரியப்பன் என்று தெரிய வர , திரு ஜஸ்டின் அவர்கள் மாரியப்பனை தொடர்பு கொண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மருத்துவமனை கடித்த விவகாரம் என்ன ஆனது என்று கேட்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்துள்ளார், உதவியாளர் ஜஸ்டின் குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ESI மருத்துவமனை வருவது தொடர்பாக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுக்கிறார்கள் அவர்களின் உத்தரவை உதாசீனப்படுத்தி தனக்கு தெரியாது என்று கூறுவது அரசு அதிகாரிக்கு ஒரு அழகா என்று வினவியுள்ளார், இதனை கேட்ட அந்த அதிகாரி என்னை கேள்வி கேட்க நீ யார் என்று முறைப்பான பதிலை கூறி இணைப்பை துண்டித்துள்ளார், இதனை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்தில் கொண்டு செல்லவே கடிதம் என்ன ஆனது என்று மீண்டும் கேட்க, கடிதம் அனுப்பிவிட்டேன் என்று மாரியப்பன் கூற, அந்த கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி ஜஸ்டின் ராஜ் கேட்க கடிதத்தை அனுப்பாமல் இழுத்தடித்துள்ளார் மாரியப்பன், மீண்டும் மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதத்தின் நகலை அமைச்சர் அலுவலகத்தில் அளிக்கும் படி கேட்டு கொண்டதன் விளைவாக கடிதத்தின் நகலை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார் மாரியப்பன், கடிதத்தை திறந்து படித்து பார்த்த ஜஸ்டின் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய மணக்காவிளை பகுதியை மாரியப்பன் நிராகரித்து விட்டு தனக்கு தோன்றிய இடமான அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள ஏற்கனவே ஒரு நிராகரிக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து எழுதி கடிதம் அனுப்பியது தெரியவந்துள்ளது, இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல் , மக்கள் பணியை ஏன் நீங்கள் ஒழுங்காக செய்யாமல் உங்களுக்கு தோன்றியவற்றை செய்கிறீர்கள் ? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறிய இடத்தை தேர்வு செய்யாமல் மாரியப்பன் தனக்கு தோன்றிய இடத்தை தேர்வு செய்தது ஏன் ? மாவட்ட ஆட்சியர் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றி கடிதத்தில் கையெழுத்து போட வைத்து அனுப்ப யார் அதிகாரம் கொடுத்தது ? மாரியப்பன் மாவட்ட ஆட்சியரா? மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே ஏமாற்றும் அளவிற்கு வல்லமை படைத்தவரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். மிகவும் அலட்சியமாக பேசிய மாரியப்பன் என்னை ஒன்றும் செய்ய முடியாது சங்கத்தை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உதவியாளர் ஜஸ்டின் அவர்களை தர குறைவாக பேசி மிரட்டியுள்ளார். ஜஸ்டின் என்பவர் பற்றி கூற வேண்டுமானால்! இயற்கை சமூகம் மீதான அக்கரை கொண்டவர். மரம் நடுதல், குளங்கள் சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருபவர், ஒரு துளி லஞ்சம் வாங்காதவர் இது அங்கு அமைச்சர் அலுவலகம் வரும் அனைவருக்கும் தெரியும். நிறைய மக்கள் கொண்டு வரும் நியாயமான பிரச்சனைகளுக்கு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு நியாயத்தை கேட்டு கண்டித்து ஏழைகளுக்கு நியாயத்தை செய்து கொடுத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான எந்த விஷயங்களிலும் தலை இட மாட்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே ! ஒரு அதிகாரி தனக்கென்று கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யாமல் அமைச்சர் அலுவலகத்தையே மிரட்டி சங்கத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பார் என்பதை பொதுமக்கள் சிந்தித்து பாருங்கள். இது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையோ, கட்ட பஞ்சாயத்து பிரச்சனையோ இல்லை வேறு ஏதோ ஒரு பிரச்சனையோ கிடையாது. முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த ஒரு பிரச்சனை, குமரி மக்கள் நீண்ட காலமாக கேட்டு கொண்டிருக்கும் ஒரு மகத்தான திட்டம், இதனை ஒரு அதிகாரி முழு மனதோடு மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறியபடி கேட்டு செய்யாமல் தான் தோன்றி தனமாக செய்ததன் விளைவாக ESI மருத்துவமனை திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டு திட்டம் தள்ளி போகியுள்ளது. இதனை தட்டி கேட்ட அமைச்சரின் உதவியாளருக்கு சங்கத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நேரடியாக மிரட்டல் அளித்துள்ளார் மாரியப்பன். ஒரு VAO அலுவலகத்தில் மக்கள் சென்றால் தெரியும், எவ்வளவு நேரம் வயதானவர்களை காக்க வைக்கிறார்கள் என்று, 100 ரூபாய்க்காக திருப்பி வீட்டிற்கு அனுப்புவது அவர்களை அலைய வைப்பது போன்ற பல வேலைகளில் ஈடுபடுவது தொடர்ந்து தொடர் கதையாகி வருகிறது, ஜாதி , பிறப்பு , இறப்பு , போன்ற சான்றிதழ்கள் கூட தராமல் அலைக்கழித்து அது அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் பார்வைக்கு வந்து அதனை சரி செய்து கொடுக்கும் படலம் தினம் தினம் நடைபெறுகிறது. ஒரு சான்றிதழ் வழங்க அமைச்சர் அலுவலகம் நேரடியாக தலையிட வேண்டிய நிலை இருக்கிறது என்றால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யும் அதிகாரிகள் என்ன லட்சணத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அமைச்சர் அலுவலகத்தையே சங்கத்தை வைத்து மிரட்டி பார்க்கும் துணிச்சல் உடைய மாரியப்பன் போன்ற அரசு அதிகாரிகள் பொதுமக்களை என்ன பாடு படுத்துவார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ? வருவாய் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து பல அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது மாரியப்பன் போன்றவர்களுக்கு நினைவில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மாரியப்பன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுகள் சமூதாயத்தில் பேச வைப்பதற்கு நேரம் ஆகாது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகம் தொடர்ந்து அநியாயங்களை தட்டி கேட்கும், சட்டத்திற்கு உட்பட்டு ஊழல் அதிகாரிகளிடம் சண்டையிட்டு பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்கும், தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு செல்லலாம், “Illegal” பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை என்று அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எத்தன்னை போராட்டம் செய்தாலும், எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும் சரி, பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 #குலசேகரம்_மூகாம்பிகா  #மருத்துவ_கல்லூரி_பேராசிரியர்  #பாலியல்_தொல்லை_கொடுத்ததால்  #அக்கல்லூரியில்_முதுகலை_மருத்துவம்  ...
07/10/2023

#குலசேகரம்_மூகாம்பிகா
#மருத்துவ_கல்லூரி_பேராசிரியர்
#பாலியல்_தொல்லை_கொடுத்ததால் #அக்கல்லூரியில்_முதுகலை_மருத்துவம் #படித்து_வந்த_தூத்துக்குடி_மாவட்டத்தை #சேர்ந்த_சுகிர்தா_என்ற_மாணவி_கடிதம் #எழுதி_வைத்துவிட்டு_தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று (06.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் செல்லாதது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹாஸ்டலில் சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அறுவைச் சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவரது அறையில் தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஆங்கில கடிதம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகையில், "தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கல்லூரி நிர்வாகம் அரசியல் பின்பலத்துடனும் காவல்துறை துணையுடனும் தனது கல்லூரி பேராசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதவாறு இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தற்கொலைக்கு காரணமான கல்லூரி பேராசிரியர்களை கைது செய்து பேராசிரியர்களுக்கு துனை போகும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள்  கேரளாவிற்கு  ரயிலில் கொண்டு செல்லப்படுகிறதுஇடம் : இரணியல் இரயில் நிலையம்
06/06/2023

தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள் கேரளாவிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது

இடம் : இரணியல் இரயில் நிலையம்

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கேரள மாநிலம் பட்டணம் திட்டையில் இருந்து 14 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி , சிற...
31/05/2023

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கேரள மாநிலம் பட்டணம் திட்டையில் இருந்து 14 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி , சிறுமியை மார்த்தாண்டம் பகுதிக்கு அழைத்து வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ...
எனவே இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழே கொடுத்திருக்கும் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்

9961076756

03/04/2023

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ்!!
பாஜக-காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக தனக்குத்தானே உடம்பில் ஆசிட் ஊற்ற  வாலிபர்களை ஏற்பாடு செய...
03/04/2023

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கடன்காரர்களை ஏமாற்றுவதற்காக தனக்குத்தானே உடம்பில் ஆசிட் ஊற்ற வாலிபர்களை ஏற்பாடு செய்த பெண். 4 பேர் கைது.

Address

Marthandam
Marthandam
629165

Alerts

Be the first to know and let us send you an email when TN 75 memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category